ஏழு விண்வெளி வீரர்களுடன் “டிஸ்கவரி’ விண்ணுக்குப் பயணம்!

discovery.jpgஅமெரிக் காவின் புளோரிடாவிலுள்ள கென்னடி விண்வெளி நிலையத்திலிருந்து நாசாவின் “டிஸ்கவரி’ விண்கலம் ஞாயிற்றுக்கிழமை வெற்றிகரமாக விண்ணுக்கு ஏவப்பட்டது.

ஏழு விண்வெளி வீரர்கள் சகிதம் 14 நாள் பயணத்தை மேற்கொண்டு சர்வதேச விண்வெளிநிலையத்திற்கு செல்லும் இந்த விண்கலமானது அவ்விண்வெளி நிலையத்துக்கான நான்காவது இறுதித் தொகுதி சு10ரியசக்தி பிறப்பாக்கி அலகுகளை ஸ்தாபிப்பதை இலக்காகக் கொண்டு அனுப்பப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த விண்கலத்தில் பயணிக்கும் விண்வெளிவீரர்களில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் நீண்ட காலம் தங்கி பணியாற்றும் முதலாவது ஜப்பானிய விண்வெளி வீரர் என்ற பெருமையைப் பெறவுள்ள கொய்சி வகாடாவும் உள்ளடங்குகிறார்.

இந்த விண்கலத்தை கடந்த மாதம் விண்ணுக்கு அனுப்புவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக பிற்போடப்பட்டது. இதனையடுத்து ஒரு மாத கால தாமதத்தின் பின் இந்த விண்கலம் வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஸ்தாபிக்கப்படவுள்ள புதிய சக்திப் பிறப்பாக்க அலகுகளானது,  அந்நிலையத்துக்கு கிடைப்பனவாகும் மின் சக்தியின் அளவை அதிகரிப்பதுடன் அந்நிலையத்துடன் விஞ்ஞான ஆய்வு கூடங்களை பொருத்துவதற்கு தேவையான சக்தியையும் வழங்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருப்பவர்களின் தொகையை மூவரிலிருந்து அறுவராக அதிகரிக்க இந்த மேலதிக சக்தி விநியோகம் உதவும் என நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலைய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் அங்குள்ள சிறுநீரை குடிநீராக மாற்றும் உபகரணமொன்று பழுதடைந்துள்ள நிலையில்,  அதற்கு பதிலாக புதிய உபகரணமொன்றை பொருத்தும் நடவடிக்கையிலும் விண்வெளிவீரர்கள் ஈடுபடவுள்ளனர். இதுவரை விண்வெளிக்கு 36 பயணங்களை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ள டிஸ்கவரி விண்கலம் சர்வதேச விண்கலத்துக்கு பயணம் மேற்கொள்வது இது 28 ஆவது தடவையாகும்.

இந்நிலையில் இந்த விண்வெளி நிலையம் சு10ரியன் மறைந்த பின் பிரகாசமான நட்சத்திரம்போன்று விண்ணில் ஒளிரவுள்ளது. மேற்படி சு10ரிய சக்தி பிறப்பாக்க அலகுகள் அனைத்தும் இணைந்து 120 கிலோ வோட்ஸ் மின் சக்தியை பிறப்பிக்கும் என நாசா தெரிவிக்கிறது. 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *