திருமலையில் உணவு நஞ்சானதால் ஒருவர் மரணம்; 107 பேர் வைத்தியசாலையில் அனுமதி

foods.jpg
திருகோணமலையில் உணவு நஞ்சானதன் காரணமாக 62 வயதான ஒருவர் மரணமடைந்துள்ளார். எனினும் இவரது மரணம் தொடர்பில் ஊர்ஜித தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. பிரேத பரிசோதனையின் பின்பே இது பற்றி கூறமுடியும் எனத் திருகோணமலை வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் அனுஸ்யா ராஜ்மோகன் தெரிவித்தார் .

80 பாடசாலை மாணவர்கள் உட்பட சுமார் 107 பேர் வரை திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை திருகோணமலை வைத்தியசாலை தரப்பு உறுதிசெய்துள்ளது.

திருகோணமலையிலுள்ள பேக்கரி ஒன்றில் விற்பனை செய்யப்பட்ட பணிஸ் வகையே இவ்வாறு நஞ்சானதாகக் கூறப்படுகின்றது. மேற்படி பேக்கரியைப் பொலிஸார் சீல் வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *