திருகோணமலையில் உள்ள பேக்கரி ஒன்றில் தயாரிக்கப்பட்ட பனிஸ் நஞ்சானதன் காரணமாக தேடப்பட்டுவரும் பேக்கரி உரிமையாளர் தலைமறைவாகியுள்ளதாக திருகோணமலைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த பேக்கரியில் தயாரிக்கப்பட்ட பனிஸை உட்கொண்ட 62 வயது நபரொருவர் மரணமடைந்துள்ளார் எனவும் 80 மாணவர்கள் உட்பட 107 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளர் எனவும் ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனையடுத்து குறிப்பிட்ட பேக்கரியை பொலிஸார் உடனடியாக சீல் வைத்து மூடியுள்ளனர்.