இரக்கண்டி பாலத்தின் அமைப்புப் பணிகள் இறுதிக்கட்டத்தில்

bridge.jpg
திருகோணமலையிலிருந்து புல்மோட்டைக்குச் செல்லும் வீதியில் அமைந்தள்ள இரக்கண்டி பாலத்தின் அமைப்புப் பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பானிய அரசின் உதவியில் அமைக்கப்பட்டுவரும் இப்பாலத்துக்கு  1800 மில்லியன் ரூபா செலவிடப்படுகின்றது.

சுனாமியால் பாதிக்கப்பட்ட இந்த வீதியை விசாலமாக்கும் பணியில் அமைக்கப்படும் மூன்று முக்கிய பாலங்களில் இதுவும் ஒன்றாகும். புதுவைக்கட்டு மற்றும் யான் ஓயா பாலங்கள் ஏனைய இரு பாலங்களாகும்.

இந்தப் பாலத்தை அமைப்பதற்கான அடிக்கல்லை கடந்த 2007 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16 ஆம் திகதி அப்போதைய பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சராகவிருந்து ஜெயராஜ் பொனாண்டோ புள்ளே நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *