புதுக் குடியிருப்பில் மோதல்களில் காயமடைந்தவர்களை அழைத்துச்செல்ல வந்த இரண்டு பெல் 212 ரக ஹெலிகொப்டர்கள் மீது விடுதலை புலிகள் விமான எதிர்ப்பு ஏவுகணைத் தாக்குதல் மேற்கொண்டதாகத் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
இன்று முற்பகல் 11.00 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலின்போது, காயமடைந்த வீரர்களை ஏற்றிக்கொண்டு ஹெலிகொப்டர்கள் விமானிகளினதும் பொறியிலாளர்களின் உதவியுடன் பாதுகாப்பாக தரையிறக்கப் பட்டதாகவும் இதன்போது ஹெலிகொப்டர்களுக்கு எதுவித சேதமும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
விடுதலைப் புலிகள் இவ்விமான எதிர்ப்பு ஏவுகணைத் தாக்குதலைப் பாதுகாப்பு வலயத்தில் இருந்தே மேற்கொண்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது