ஐரோப்பிய ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் குழுவொன்று நேற்றைய தினம் வவுனியாவில் உள்ள அகதி முகாம்களுக்கு விஜயம் மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருக்கும் இடம்பெயர் மக்களையும், அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள வசதிகளையும் குறித்த குழுவினர் நேரில் பார்வையிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஐரோப்பிய ஆணைக்குழு உறுப்பினர்கள் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம். சார்ள்ஸை சந்தித்து இடம்பெயர் மக்களது நிலைமை குறித்து கலந்துரையாடியதாகவும் கூறப்படுகின்றது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பு ஆகியவற்றின் ஊடாக ஐரோப்பிய ஆணைக்குழு இடம்பெயர் மக்களுக்கு உதவிகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.