பொட்டு அம்மானின் பாதுகாப்பு வீடு படையினர்வசம்

pottu_amman-house.pngஎல்.ரீ.ரீ.ஈ. உளவுப்பிரிவின் தலைவர் பொட்டு அம்மான் பயன்படுத்திய பாதுகாப்பு வீடு படையினரால்  நேற்றுக் கைபற்றப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

பயங்கரவாதக் குற்றச் செயல்களுக்காக இலங்கை அரசாங்கத்தினால் தேடப்பட்டுவருபவர்களான  பொட்டுஅம்மான் மற்றும் கபில் அம்மான் ஆகிய இருவரும் இந்த வீட்டை பயங்கரவாத திட்டங்கள் தீட்ட பயன்படுத்தியுள்ளனர் என படையினர் தெரிவிக்கின்றனர்.

பொட்டு அம்மானினால் பாவிக்கப்பட்டதாக நம்பப் படும் ஜீப்வன்டி ஒன்று மற்றும் பெருந் தொகையான மிதிவெடிகள் என்பனவற்றை படையினர் இப்பிரதேசத்தில் மேற்கொண்ட  தேடுதலின்போது  கண்டுபிடித்துள்ளனர் எனவும் பாதுகாப்பு அமைச்சு மேலும் அறிவித்துள்ளது. 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 Comments

  • பார்த்திபன்
    பார்த்திபன்

    அம்மான் மாரெண்டாலே பிரைச்சினையானவர்கள் தான் போல. பொட்டருக்கு பாதுகாப்புக்கு அடுக்கப்பட்ட மண் மூட்டைகனை வைச்சு ஒரு நகரையே கட்டி எழுப்பலாம் போலுள்ளது. வீட்டிற்கு வெளியிலை தான் ஆயிரக் கணக்கான மண் மூட்டைகள் என்றால் வீட்டுக்குள்ளேயும் ஆயிரக் கணக்காக மண் மூட்டைகள்.

    Reply
  • வள்ளுவன்
    வள்ளுவன்

    பார்த்தீபன் உண்ணானைக் கேட்கிறேன் உந்த மண்மமூடைகள் எல்லாம் இப்ப இராணுவத்திடம் இருந்து பாதுகாத்துக் கொள்ள அடிக்கினவையோ அல்லது …. எனக்கு விளங்கவில்லை உங்களுக்கு ஏதாவது விளங்கிச்சுதோ?

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    வள்ளுவன், பொட்டரோடு உள்ளுக்கையும் பலர் பனிப்போர் நடத்துகினமாம். அதாலை அவர் ஒளிச்சு விளையாட இப்படி தொகை தொகையாய் மூட்டைகள் தேவைப்படுதோ என்னவோ??

    Reply
  • பல்லி
    பல்லி

    அத்தனை மூட்டைகளிலும் இரத்த கறை உண்டு.

    Reply