அக்கரைப்பற்று, அளிக்கம்பை பிரதேசத்தில் மறை த்து வைக்கப்பட்டிருந்த 40 கிலோ கிறாம் எடை கொண்ட கிளேமோர் குண்டொன் றைப் பாதுகாப்பு படையி னர் நேற்று பிற்பகல் மீட் டெடுத்ததாக இராணுவப் பேச்சாளர் அலுவலக அதிகாரியொருவர் தெரிவித்தார்.
குண்டு செயலிழக்கச் செய்யும் படையினரின் உதவியோடு பொலிஸார் இக்குண்டை செயலிழக்கச் செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதேநேரம் 15 மிதி வெடிகளையும், ரி 56 ரக துப்பாக்கிக்குரிய 1456 ரவைகளையும், மிதிவெடி களுக்குப் பயன்படுத்தப்படும் 204 பியூஸ்களையும் பாதுகாப்பு படையினர் இந்த இடத்திலிருந்து மீட்டெடுத்திருப்பதாக வும் அவர் கூறினார்.