வரிகுறைப்பினால் அரசாங்கத்துக்கு ஆயிரம் கோடி ரூபா நஷ்டம் – அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா

axman-yappa.jpg உலகளாவிய ரீதியில் பொருளாதார நெருக்கடி நிலவிய போதிலும் மக்கள் நலன் கருதி அத்தியவசிய உணவுப்பொருட்களுக்கான வரிகளை குறைத்ததால் அரசாங்கத்தக்கு ஆயிரம் கோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

தகவல் ஊடகத்துறை அமைச்சில் இன்று முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து கூறுகையில்:

மக்களுக்கு ஏற்படும் சுமையைத் தவிர்ப்பதற்கு பொருட்களின் விலை அதிகரிக்காமல் இருக்கச்செய்ய 13 வகையான அத்தியவசிய உணவுப்பொருட்களுக்கான வரியை அரசாங்கம் குறைத்தது. பால்மா ஒரு கிலோவுக்கு அறவிடப்பட்டு வந்த 96 ரூபா வரி ஐந்து ரூபாவாக குறைக்கப்பட்டது. பருப்பு ஒரு கிலோவுக்கு அறவிடப்பட்ட 36 ரூபா ஆறு ரூபாவாக குறைக்கப்பட்டது. இவ்வாறான வரி குறைப்பினால் அரசாங்கத்துக்கு ஆயிரம் கோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டது.

உலகளாவிய ரீதியில் பொருளாதார நெருக்கடி நிலவும் வேளையிலேயே அரசாங்கம் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தேயிலை உரம், உரமானியம் மற்றும் சமுர்தி போன்ற நிவாரண உதவிகளையும் தொடர்ந்து வழங்கியும் வருகின்றோம். இதனால் இலங்கை நடுத்தர நிலையிலான ஒரு நாடாகத் திகழ்கின்றது.

பணம் இருந்தாலும் தேவையானபோது தேவையான பொருளை கொள்வனவு செய்யமுடியாது  என்ற நிலையை உணர்ந்ததால் விவசாய உற்பத்தியில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது. அதன் பயனாக தற்போது நாட்டுக்கு எட்டு மாதங்களுக்குத் தேவையான அரிசி கையிறுப்பில் உள்ளது.

இவ்வாறான நிலையில் எதிர்க் கட்சிகள் பொருட்களின் விலை அதிகரிக்கப் போவதாக பொய்யான பிரசாரத்தை செய்து வருகின்றன. சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 3.2 பில்லியனை கடனாகப்பெற உரிமை இருக்கின்றுது. கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக அந்த நிதியத்திடமிருந்து கடன் எதுவும் பெறப்படவில்லை. உலக நாடுகள் மத்தியில் நிலவும் பொருளாதார நெறுக்கடியை கவனத்தில் கொண்டே இந்தக்கடனை எடுக்க முற்படுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *