மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பது என்று இன்று நடந்த பா.ம.க. பொதுக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சந்திக்கிறார். அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 மக்களவைத் தொகுதிகளும் ஒரு ராஜ்யசபா சீட்டும் வழங்கப்படவுள்ளது. பாமகவை கூட்டணிக்குள் கொண்டு வர காங்கிரஸ் மேற்கொண்ட இறுதி முயற்சியும் தோல்வியில் முடிந்து விட்டதையடுத்து பாமக இன்று இந்த முடிவை அறிவித்தது.
பார்த்திபன்
அடடா நீங்கள் இப்படித் தான் முடிவெடுப்பீர்களென உங்களுக்கு முந்தியே மற்றவர்கள் கூறி விட்டார்களே. அது உங்களுக்குத் தெரியாதோ ?? அதிமுக எத்தனை இடங்கள் ஒதுக்கியதென்பதல்ல பிரைச்சினை அதில் எத்தனை உங்களால் வெல்ல முடியும் என்பதே பிரைச்சினை. அத்தோடை எனி நீங்கள் கேட்கும் தொகுதிகளையும் அதிமுக ஒதுக்குமா ?? மற்றவரை குறை சொல்லும் நீங்கள், வைகோ உட்பட இருவருக்கும் இலங்கைத் தமிழரின் பிரைச்சினை என்பது அப்பப்போ ஊறுகாய் போல தொட்டுக் கொள்ள உதவுமேயொழிய, மற்றவர்கள் போல் உங்களுக்கும் பதவியும், வருமானமும் தான் முக்கியம். அதற்காக யார் காலிலும் எப்பவும் விழத் தயங்காத அரசியல்வாதிகள் வரிசையில் முதல் இரண்டு இடங்களை நீங்களும், வைகோவும் எப்பவோ பிடித்து விட்டீர்கள்.
பல்லி
இனி பேசாமல் இருப்பதுதான் டாக்குத்தருக்கு நல்லது இந்த கூட்டனியில் அப்பன். ஆளும் கட்ச்சியில் சுகாதார அமைச்சர் மகன். என்ன பிழைப்படா இது. இதனால் தான் டெல்லி தமிழரை கோமாளிகளாக பார்க்கிறது.