அம்பாறையில் சொக்லேட் உண்ட 13 மாணவர்கள் திடீர் சுகவீனம்

t-mala-stu.pngஅம்பாறை காமினி வித்தியாலயத்தில் ஆறாம் ஆண்டு மாணவிகள் 13 பேர் சொக்லேட் உண்டதன் காரணமாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மேற்படி வித்தியாலயத்தின் 6 ஆம் ஆண்டு கல்வி கற்கும் மாணவி தனது பிறந்த தினத்தை முன்னிட்டு சக மாணவிகளுக்கு சொக்லேட் பகிர்த்துள்ளார். சொக்லேட் உண்ட சிறுது நேரத்தில் மாணவிகள் மயக்கமடைந்ததுடன் நோய்வாய்ப்பட்ட நிலையில் காணப்பட்டனர். பாடசாலை அதிபர், மாணவர்களை உடனடியாக அம்பாறை வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்தார்.

பிறந்த தினத்தை முன்னிட்டு எனக்கு தந்த சொக்லேட்டை நான் உண்டேன். சவர்க்கார மணம் வீசியதுடன் சவர்க்கார சுவையாகவும் இருந்தது. எனக்கு வாந்தி வருவதுபோல் இருந்தது. அவசர அவசரமாக வெளியே ஓடினேன்.

அப்போது ஏனைய மாணவர்களும் வாந்தி எடுத்துக்கொண்டு இருந்தனர் என மாணவன் ஒருவன் தெரிவித்தார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்கள் சிகிச்சை பெற்று வெளியேறினர். சுகாதார பரிசோதகர்கள் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *