ருபெல்லா தடுப்பூசி மருந்து ஏற்றப்பட்ட யாழ்ப்பாணப் பகுதி மாணவி ஒருவரும் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுழிபுரம் விக்ரோறியா கல்லூரியில் தரம் 8 இல் கல்வி பயிலும் மனோகரன் நிரோஜினி என்ற 13 வயது மாணவியே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த வியாழக்கிழமை இக்கல்லூரி மாணவிகளுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டது. மாலையில் இந்த மாணவிக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்டதையடுத்து சங்கானை அரசினர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இரண்டு நாட்களாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற பின்னர் இம்மாணவி குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இந்த மருந்தை இனிமேல் மாணவிகளுக்கு ஏற்றவேண்டாம் என சுகாதார அமைச்சும், கல்வியமைச்சும் அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.