கட்டட நிர்மாணங்களுக்கென ஆற்று மணலுக்கு பதிலாக கடல் மணலை உபயோகப்படுத்துவதற்கு ஏதுவாக ஹங்கேரி அரசு 2850 மில்லியன் ரூபா செலவில் புதிய மணல் சுத்திகரிப்பு நிலையமொன்றை இலங்கையில் ஆரம்பிக்கவுள்ளது. கடல் மணலை சுத்திகரிப்பு செய்து கட்டட நிர்மாணப் பணிகளுக்கு பயன்படுத்தக் கூடிய பாரிய வேலைத்திட்டம் களுத்துறையில் அமையவுள்ளது என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.
ஆற்றுமணல் அகழ்வினால் சூழல் மாசடைகிறது என்ற காரணத்தினால் ஆற்றுமணல் அகழ்வு தடை செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மணலின் விலை அதிகரித்துள்ளது. எனினும் தொடர்ந்தும் கட்டட நிர்மாணப் பணிகளுக்கான மணலின் கேள்வியும் அதிகரித்துள்ளது.
இதனை போக்கும் வகையிலேயே ஹங்கேரி அரசின் உதவியுடன் கடல் மணல் சுத்திகரிப்புக்கான பாரிய தொழிற்சாலை அமையவுள்ளது. இதற்கான ஆரம்பகட்ட வேலைகளும் முடிவடைந்துள்ளதாகவும் அமைச்சர் ராஜித சேனாரட்ண தெரிவித்துள்ளார்.