முல்லைத் தீவு கரையோரப் பாதுகாப்புப் பகுதியில் படையினர் நேரடித் தாக்குதல்கள் எதனையும் மேற்கொள்ளவில்லையென வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்துள்ளார். பாதுகாப்பு வலயப் பகுதியிலிருந்து விடுதலைப் புலிகளே படையினரை நோக்கி தொடர்ச்சியான ஆட்டிலறித் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
டென்மார்க் வெளிவிவகார அமைச்சர் பெக்ப்ரிக் வோல்டருடன் தொலைபேசி மூலம் நடத்திய கலந்துரையாடலின் போதே அமைச்சர் போகொல்லாகம இதனைத் தெரிவித்துள்ளார். காயமடைந்த படையினர் விடுதலைப்புலிகள் வசம் உள்ள பொதுமக்களுக்குப் பாதிப்புகளைத் தவிர்க்குமுகமாக பதில் தாக்குதல்கள் எதனையும் மேற்கொள்ளவில்லையென்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.