மோசடி குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் நீதிவான் ஒருவருக்கு வழக்கு விசாரணை முடிவில் குற்றவாளியாகக்கண்ட கொழும்பு மேலதிக நீதிவான் ரவிந்திர பிரேமரட்ன 1,500 ரூபா அபராதம் விதித்தார்.
அத்துடன் மூன்று வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட கால சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.
இளைஞர் ஒருவரை பிரிட்டனுக்கு அனுப்ப 6 இலட்சம் ரூபாவை கட்டணமாக அறவிட்ட இவர் பின்னர் அவரை அனுப்ப முடியாமல் பணத்தை காசோலையாகக் கொடுத்துள்ளார்.
6 இலட்சம் ரூபாவையும் இவர் மூன்று தடவைகள் பகுதி பகுதியாக காசோலைகளைக் கொடுத்துள்ளார். அந்த இளைஞரின் தாயார் அக்காசோலைகளை வங்கியில் பணமாக மாற்றக்கொடுத்தபோது அக்காசோலை கணக்கிற்கு பணம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து அப்பெண் அவருக்கு எதிராக வழங்குத் தொடர்ந்திருந்தார்.