இலங்கை தமிழ் மக்களின் இன்னல் தீர தமிழக இந்துத் துறவியர் பேரவையின் சார்பாக சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகைக்கு எதிரே நேற்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
பல்வேறு தமிழ் அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் போராடி பலனில்லாததால் தடைகளை களைந்து விடை காண தமிழக துறவியர் பேரவியின் சார்பில் இந்த அடையாள உண்ணா நிலை அறப்போராட்டம் நடைபெற்று வருவதாக இந்த போராட்டத்திற்கு தலைமை தாங்கி நடத்தி வரும் தமிழக இந்து துறவியர் பேரவையின் அமைப்பாளர் சுவாமி ஸ்தாசிவானந்தா தெரிவித்தார். இந்த போராட்டத்தில் திரளான இந்து துறவிகள் பங்கேற்றனர். உண்ணாவிரதத்தின் முடிவில் இலங்கைக்கு செல்லும் தூதுக்குழுவில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து தீர்மானம் இயற்றப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.