உயர்கல்விக்கான விரிவுபடுத்தல் நாட்டில் பாரியதொரு சவால் மாற்றுவழி அவசியம் -விஷ்வ வர்ணபால

உயர் கல்வி கற்று ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பல்கலைக்கழக தகுதியைப் பெற்றுக்கொள்கின்றபோதும் மிகக் குறைவானோருக்கே பல்கலைக்கழக அனுமதி கிடைக்கின்றது. இதற்கான மாற்று வழிகள் அவசியமென உயர் கல்வியமைச்சர் பேராசிரியர் விஷ்வ வர்ணபால தெரிவித்தார்.

சார்க் நாடுகளின் உயர் கல்வியமைச்சர்கள் மாநாடு கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றபோது மாநாட்டில் ஆரம்ப உரை நிகழ்த்தும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

பூகோளமயமாக்கலின் கீழ் புதிய உயர் கல்வி வாய்ப்புகள் சாத்தியமற்றதாகிவரும் நிலையில் சார்க் நாடுகள் தமது சொந்த வளங்களையும் மூலோபாயங்களையும் ஆற்றல்களையும் பயன்படுத்தி இத்தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவின் தலைமையில் நடைபெற்ற மேற்படி மாநாட்டில் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் வர்ணபால, உயர் கல்விக்கான வசதிகளை விரிவுபடுத்துவது ஒரு சவாலான விடயமாகவே எம்முன் உள்ளது எனவும் தெரிவித்தார்.

மேற்படி மாநாட்டில் உரையாற்றிய சார்க் அமைப்பின் செயலாளர் நாயகம் டாக்டர் iல் காந்த் சர்மா, உயர் கல்வித்துறையில் அபிவிருத்தியின் தேவை இன்றியமையாதது என்பதுடன், சார்க் பிராந்திய நாடுகள் ஒரேவிதமான உயர் கல்விக் கொள்கையைப் பற்றி ஆராய்வதும் சிறந்தது எனத் தெரிவித்தார்.

இம் மாநாட்டில் இந்தியாவின் சார்பில் உயர் கல்வித் திணைக்களத்தின் செயலாளர் ஸ்ரீ ஆர். பி. அகர்வால், பாகிஸ்தானின் சார்பில் உயர் கல்வி ஆணைக்குழு உறுக்பினர் பேராசிரியர் ரியாஸ் அல்ஹக் தாரிக், ஆப்கானிஸ்தானின் சார்பில் உயர் கல்வியமைச்சர் கலாநிதி மொகமட் அஸாம் டட்பார், பங்களாதேஷ் சார்பில் கல்வியமைச்சர் நூருல் இஸ்லாம் நஹீட், பூட்டான் சார்பில் கல்வியமைச்சர் லியோன்போ தாஹீர் எஸ். யெளடியல், மாலைதீவின் சார்பில் கல்வியமைச்சர் அஹமட் அலி மனிக்கு, நேபாளம் சார்பில் கல்வியமைச்சர் ரேணுகுமாரி யாதவ், இலங்கையின் சார்பில் பிரதிக் கல்வியமைச்சர் மயோன் முஸ்தபா உட்பட அமைச்சின் அதிகாரிகள், முக்கியஸ் தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *