அன்னமலை சு.க அலுவலக தாக்குதலில் இருவர் பலி

சவளக்கடை அன்னமலை பிரதேசத்திலிருந்த சு. கட்சி அலுவலகம் மீது கடந்த வியாழன் இரவு இனந் தெரியாத ஆயுதக் குழுவினரால் நடத்தப்பட்ட தாக்குதலில் அலுவலகத்திலிருந்த இருவர் உயிரிழந்துள்ளதாக சவளக்கடை பொலிஸார் தெரிவித்தனர். முகுந்தன் (சதீஸ்), ஜீவராஜ் ஆகிய இருவருமே உயிரிழந்த உறுப்பினர்களாவர்.

இரவு 7.45 மணியளவில் திடீரென கைக்குண்டுத் தாக்குதல்களும், துப்பாக்கி வேட்டுச் சத்தங்களும் சரமாரியாகக் கேட்டுள்ளது. உடன் ஸ்தலத்திற்கு விரைந்த விசேட அதிரடிப்படையினரும், சவளக்கடை பொலிஸாரும் அலுவலகத்திலிருந்து இரு சடலங்களை மீட்டுள்ளனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *