கிராம அபிவிருத்திச் சங்கங்களின் அபிவிருத்தியை நோக்கமாகக் கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கிராம அபிவிருத்திச் சங்கங்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய மாநாடு நேற்று மட்டக்களப்பு சென்மைக்கல் தேசிய பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.
கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட இம்மாநாட்டை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துறை சந்திரகாந்தன் வைபவரீதியாக ஆரம்பித்து வைத்தார்.
கிழக்கின் பேண்தகு அபிவிருத்தியினை நோக்கி கிராமிய அபிவிருத்தியின் தந்திரோபாயங்களை ஆராயும் இலக்குடன் இம்மாநாடு நடைபெற்றது.
இம்மாநாட்டில், கிழக்கு மாகாண அமைச்சர்களான துரையப்பா நவரத்தினராஜா, எம். எஸ். உதுமாலெ வ்வை, கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் திருமதி ராமச்சந்திரன் பலரும் கலந்து கொண்டனர்.
இம்மாநாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 577 கிராம அபிவிருத்திச் சங்கங்கள் மற்றும் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்களின் பிரதிநிதிகள் ஆயிரம் பேர் கலந்துகொண்டனர்.