பாகிஸ்தானில் பொலிஸ் பயிற்சிக்கல்லூரி மீது துப்பாக்கிச்சூடு – 11 பேர் உயிரிழப்பு 40 க்கும் மேற்பட்டோர் காயம்

pakistan_attack.jpg பாகிஸ்தானின் கிழக்குப் பகுதியில் லாகூர் நகருக்கு அண்மித்த பிரதேசத்திலுள்ள பொலிஸ் பயிற்சிக் கல்லூரி ஒன்றின் மீது இனம் தெரியாத ஆயுதம் ஏந்திய குழுவினர் மேற்கொண்ட தாக்குதலில் 11 பேர் உயிரிழந்ததுடன் 40 க்கும்  மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

இன்று காலை இடம்பெற்ற இந்தத் தாக்குதலின் போது துப்பாக்கிப் பிரயோகம் சுமார் மூன்று மணி நேரம் நீடித்ததாக பாகிஸ்தான் பாதுகாப்புப் பிரிவினர் தெரிவித்தனர். பயிற்சியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிலரை துப்பாக்கி நபர்கள் பணயக் கைதிகளாக எடுத்துச்சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்திய எல்லைப்புரத்துக்கு அருகிலுள்ள இந்த மனாவான் பொலிஸ் பயிற்சி நிலையத்தை நோக்கி நாலா புரத்திலிருந்தும் அந்தக்குழுவினர் முதலில் கைக்குண்டுத்  தாக்குதல் நடத்திய பின்னரே துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *