புலிகளின் பிடியிலிருந்து தப்பிவந்த மேலும் 1694 பொது மக்கள் பாதுகாப்புப் படையினரிடம் தஞ்சமடைந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் நிலைகொண்டுள்ள இராணுவத்தின் 58வது படைப்பிரிவினரிடம் 1694 சிவிலியன்களும் தஞ்சமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதற்கமைய புலிகளின் பிடியிலிருந்து தப்பி வந்து பாதுகாப்புப் படையினரிடம் தஞ்சமடைந்தவர்களின் எண்ணிக்கை 61,467 ஆக அதிகரித்துள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டார்.