ஒன்றரை வயது நிரம்பிய ஆண் குழந்தையொன்றை பாழடைந்த இடம் ஒன்றில் இருந்து பொதுமக்கள் தெரிவித்த தகவலின் பேரில் அலவத்துகொட பெலிஸார் கண்டெடுத்தனர். கடந்த முதலாம் திகதி புதன்கிழமை (நேற்று முன்தினம்) இரவு சுமார் 11.00 மணியளவில் பொலிஸார் இந்த சிறுவனை மீட்டனர். இந்தப் பாலகன் இவ்விடத்திற்கு எவரால் கொண்டுவரப்பட்டான் என்ற விபரங்களையும் சிறுவனது தாய் தந்தையர் யார் என்ற தகவலையும் பொலிஸார் தேடுவதில் ஈடுபட்டுள்ளனர்.
அலவத்துகொடை பொலிஸ் வட்டாரத்தைச் சேர்ந்த தெல்கஸ்தென்னை என்ற இடத்திலேயே சிறுவன் இவ்வாறு நட்டாற்றில் விடப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சிறுவன் பாழடைந்த பிரதேசத்தில் இருந்து தனிமையில் பல மணி நேரம் அழுவதைக் கேட்ட அப்பிரதேச பொதுமக்கள் பலரும் திரண்டு சம்பவம்பற்றி பொலிஸாருக்குத் தகவல் கொடுத்தனர். இந்த முஸ்லிம் சிறுவன் இப்பொழுது கண்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதுடன் குறித்த சிறுவனை தத்தெடுத்து வளர்க்க தாம் தயாரென ஒரு நபர் முன்வந்தபோதிலும் பொலிஸார் இது தொடர்பாக நீதிமன்ற உத்தரவின் பேரிலேயே அதற்கான முடிவைப் பெறவேண்டி யிருப்பதாகவும் அந்த நபரிடம் பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சிறுவனின் தாய், தந்தையார் என்பது பற்றி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
பல்லி
கவனம் கரும் புலியென முடிவு செய்து விடுவார்கள்.