சுப்பர் மார்க்கட்டுகளில் பக்கற் பன்னப்பட்டு விற் பனை செய்யப்படும், சீனி, பருப்பு என்பன நுகர்வோர் பாதுகாப்பு சபை அறிவித்துள்ள கட்டுப்பாட்டு விலைக்கு அல்லது அதற்கு குறைவாகவோ விற்பனை செய்யா தோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் பிரகாரம் வெள்ளைச் சீனி ஒரு கிலோ 73 ரூபாவுக்கும், பருப்பு ஒரு கிலோ 175 ரூபாவுக்கும் குறைவாகவே விற்பனை செய்ய வேண்டும் என அமைச்சு அறிவித்துள்ளது. எனினும் சில வர்த்தக நிலையங்களிலும், சுப்பர் மார்க்கட்டுகளிலும் பக்கட் பன்னப்பட்ட சீனி, பருப்பு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
கட்டுப்பாட்டு விலை அறிவிக்கப்படுவதற்கு முன்னர் சீனி ஒரு கிலோ 95 ரூபாவுக்கும் பருப்பு 220 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தன. கட்டுப்பாட்டு விலை அறிவிக்கப்பட்டதன் பின்னர் லக் சதொசவில் பருப்பு ஒரு கிலோ 154 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
பக்கற் பன்னப்பட்டதற்காக அதிக விலைக்கு விற்பனை செய்ய முடியாது. எந்தவொரு பொருளுக்கும் பொதியிடும் செலவை பாவனையாளர்களிடமிருந்து அறவிட முடியாது என்று உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பும் உள்ளது எனவும் தெரிவித்தார்.