இராஜாங்க அமைச்சர் டொக்டர் சீதா அரம்பேபொல

இராஜாங்க அமைச்சர் டொக்டர் சீதா அரம்பேபொல

“மக்களின் பிரச்சினைகளை நாம் தீர்த்து விட்டால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல்வாதிகளுக்கு அரசியல் எதிர்காலம் இல்லாமற் போய் விடும்” – இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல

“மக்களின் பிரச்சினைகளை நாம் தீர்த்து விட்டால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல்வாதிகளுக்கு அரசியல் எதிர்காலம் இல்லாமற் போய் விடும்” என திறன் அபிவிருத்தி, தொழிற் கல்வி, ஆய்வு மற்றும் புத்தாக்கத்துக்கான இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல தெரிவித்துள்ளார்.

தமிழ் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலின் போது “தமிழ் தேசியக் கூட்டமைப்பும் வடக்கில் உள்ள ஏனைய கட்சிகளும் தமது மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்ற உண்மையான அக்கறையுடன் இருக்குமானால் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?” என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதற்கு பதிலளித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் குறிப்பிட்டதாவது ,

இதற்கு பதிலளித்த அவர்,

அரசியலில் நிலைத்திருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் பிரிவினைவாத நிகழ்ச்சி நிரலையே பின்பற்றி வருகிறது. சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பொறுத்தே இவ்வாறான அரசியல்வாதிகளின் நிலைநிறுத்தல் அமையும்.

வறுமை குறைந்தால், பொருளாதார நிலை ஸ்திரமடைந்தால், சுகாதார நிலை நன்றாக மாறினால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள் பாதிப்புக்குள்ளாகும்.

கடந்த தேர்தல் காலத்தில் இவ்வாறான மக்கள் பிரச்சினைகளை அவர்கள் விற்றுப் பிழைத்தார்கள். மக்கள் வறுமையில் இருந்தால் அது பற்றி அரசியல்வாதிகள் பேசுவார்கள்.

வடக்கில் மட்டுமல்ல நாட்டின் மற்றைய இடங்களிலும் இதே நிலைதான். இதற்கும் இன மத பேதங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மக்களின் பிரச்சினைகளை நாம் தீர்த்து விட்டால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல்வாதிகளுக்கு அரசியல் எதிர்காலம் இல்லாமற் போய் விடும்.” என்றார்.