ஏப்ரல் குண்டுத்தாக்குதல்

ஏப்ரல் குண்டுத்தாக்குதல்

“கிழக்கில் சஹ்ரானுக்கு சிலை வைக்க வேண்டும் என்றும் கூறுவார்கள்.” – இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன்

“இன்னும் சில தினங்களில் சஹ்ரானுக்கு சிலை வைக்க வேண்டும் என்று கூறுவார்கள்.” என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

இன்று (பெப் 10) மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

கடந்த ஏப்ரல் 21 சஹரான் தலைமையிலான ஈஸ்டர் குண்டு தாக்குதலில் மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் உட்பட பல தேவாலயங்கள் மீது மிலேச்சத்தனமான குண்டு தாக்குதல் நடத்தப்பட்டு பலர் உயிரிழந்தனர்.

சஹ்ரான் கைவசம் இருந்த பள்ளிவாசலை பாதுகாப்பு தரப்பினர் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். ஆனால் அந்தப் பள்ளிவாசலை மீளவும் மக்களிடம் ஒப்படைக்க கோரி காத்தான்குடியில் ஒரு சில சிவில் சமூக அமைப்பும், அரசியல் தலைவர்கள் சேர்ந்து கடை அடைப்புடன் போராட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

ஆனால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட போது காத்தான்குடியில் உள்ள சிவில் அமைப்புகள், சில அரசியல் தலைவர்கள் கூறினார்கள் சஹ்ரான் அவமான சின்னமான பள்ளிவாசலை இடித்து தரைமட்டமாக்க வேண்டும் என்று, தாக்குதல் நடந்து இன்று மூன்று வருடம்கூட ஆகவில்லை தற்போது பள்ளிவாசலை விடுவிக்க கோரி போராட்டம் நடத்துகின்றனர்.

இவ்வாறு செயல்படுபவர்கள் இன்னும் சில தினங்களில் சஹ்ரானுக்கு சிலை வைக்க வேண்டும் என்றும் கூறுவார்கள் இதுதான் யதார்த்த உண்மை.

ஓட்டமாவடியிலே வடக்கு, கிழக்கு இணையக்கூடாது ஒரு சிங்கள அரசாங்க அதிபரை நியமிக்க வேண்டும் என்று ஒரு பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் இனவாதத்தை கக்கிக் கொண்டு வருகின்றார்.

இன்று பல பகுதிகளில் தமிழர்களின் காணிகள் அபகரிக்கப்பட்டிருக்கின்றது. பல ஆலயங்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டிருக்கின்றது. இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் மாறி மாறி கருத்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.

13வது திருத்தச் சட்டம் எரிக்கப்பட்டது. ஒரு மோசமான செயற்பாடு இந்த ஆட்சியாளர்கள் ஒரு இனவாத போக்கு உடனே நடந்து கொண்டிருக்கின்றார்கள் .

ஏதாவது திருத்த சட்ட நகல் சட்டம் நிறைவேற்றப்படும் போது நாடகமாடும் நிலையே காணப்படுகின்றது. கடந்த கால வரலாறுகளை எடுத்துக் கொண்டால் மாறி மாறி வந்த ஆட்சியாளர்கள் சந்திரிக்கா அம்மையார் தொடக்கம் இன்று உள்ள ரணில் விக்ரமசிங்க வரைக்கும் தமிழர்களுடைய தீர்வு விடயத்தில் ஏமாற்றிக் கொண்டே வருகின்றார்கள்.

இவர்களது கபட நாடகங்கள் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதில் இரண்டு தரப்பிலும் எதிர்ப்பு இருக்கின்றது. சிங்கள பேரினவாத அரசியல்வாதிகளும், இனவாத பிக்குகள் மற்றும் முஸ்லிம் மதவாத தரப்பினரும் இந்த வடகிழக்கு இணைப்பினை எதிர்க்கின்றார்கள்.

 

 

 

ஈஸ்டர் தாக்குதலுக்கு பாதுகாப்புப் படையினர் மறைமுக பொறுப்பாளிகள்..? – ரவூப் ஹக்கீம்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அரசாங்கம் உடனடியாக இரத்துச் செய்ய வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் வலியுறுத்தியுள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சில விடயங்களை மூடி மறைப்பதற்காகவே அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தின் மீது அவசரமாக செயற்படுகிறது. மேலும்  கர்தினால் மெல்கம் ரஞ்சித்தின் அண்மைய வெளிநாட்டு விஜயத்தை தொடர்ந்து அரசாங்கம் பாரிய அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது.

ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரையும் போப் பிரான்சிஸையும் சந்தித்து ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்து கர்தினால் விவாதித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலுக்கு பாதுகாப்புப் படையினர் மறைமுக பொறுப்பாளிகளா என்பதைத் கண்டறிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.

“ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணைகளில் அரசியல் தலையீடு எதுவுமில்லை.” – நீதி அமைச்சர் அலி சப்ரி

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணைகள், எவ்வித அரசியல் தலையீடுகளும் இன்றி சுயாதீனமாக இடம்பெற்று வருவதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அங்கு மேலும் பேசிய அவர்,

தாக்குதல் நடந்த காலகட்டத்தில் ஆட்சியில் இருந்தவர்கள் தற்போது எதிர்க்கட்சியில் இருக்கின்றனர்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக முன்கூட்டியே கிடைத்த புலனாய்வுத் தகவல்களை கவனத்தில் எடுத்திருந்தால், இந்தத் தாக்குதலை தடுத்திருக்கலாம். தற்போது இது தொடர்பாக எதிர்க்கட்சியினர் அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்துவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. இதேநேரம் தாக்குதல் தொடர்பாக ஒருவர் மீது வழக்கு தாக்கல் செய்வது விடுதலை செய்வது உள்ளிட்டவை தொடர்பாக சட்டமா அதிபரே தீர்மானிக்கின்றார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் – ஐ.நாவுக்கு செல்ல தயாராகும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை !

ஈஸ்டர் தாக்குதல் வழக்கை சர்வதேச அளவில் எடுத்துச் செல்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராந்துவருவதாக கொழும்பு பேராயர், கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு நீதி கிடைக்க தங்களால் முடிந்தவரை முயற்சித்ததாவும் இந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்துவிட்டன என்றும் அவர் கூறினார். எனவே சர்வதேசத்திற்குச் செல்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதாகவும் அதற்கும் அர்த்தம் ஐக்கிய நாடுகள் சபைக்கு செல்வது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் இந்த வழக்கை முன்னெடுத்துச் செல்வதற்காக இலங்கையுடன் தொடர்பு வைத்திருக்கும் சக்தி வாய்ந்த நாடுகளையும் தாம் அணுகவுள்ளதாக கொழும்பு பேராயர் குறிப்பிட்டார்.

இவ்வளவு நாட்களாக உள்நாட்டில் நீதி கிடைக்கும் என நமபியமை காரணமாக மேற்கூறிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும் கொழும்பு பேராயர் குறிப்பிட்டார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் திரை மறைவில் வெளிச்சத்துக்கு வராத பல விடயங்கள் !

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் வெளிப்புற தோற்றத்தில் காண்பதை விட அதன் உட்புற தோற்றத்தில் அதிக வேலைப்பாடு இருப்பதாக நாங்கள் தற்போது உணர்ந்து வருகிறோம்  என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் குண்டுத்தாக்குதல் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

நாடகத்தில் நடிக்கும் நடிகர்களைப் போன்று கிரீடத்தை அணிந்து கொண்டு செயற்படாது மக்களின் துயரங்களுக்காகக் குரல் கொடுக்க முன்வர வேண்டும் என்றும் அதனைச் செய்ய முடியாவிட்டால் அதனைக் கழற்றிவிட்டு வெளியேற வேண்டும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தத் தாக்குதலின் வெளிப்புற தோற்றத்தில் காண்பதை விட அதன் உட்புற தோற்றத்தில் அதிக வேலைப்பாடு இருப்பதாக நாங்கள் தற்போது உணர்ந்து வருகிறோம்.

நாம் யாரையும் பழிவாங்க விரும்பவில்லை. ஆனால் உண்மையை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்தத் தாக்குதலை அறிந்த உயர் பதவியில் இருப்போர் மற்றும் வாக் குறுதிகளை வழங்கியோர் இப்போது எதுவும் தெரியாதது போல் இருக்கிறார்கள்.  அதுதான் எம்மால் தாங்க முடியாத விடயம் என்றும் இதற்கு அவர்களின் பங்கு இருக்குமோ..? என்ற சந்தேகம்  எழுந்துள்ளது.

எனவே இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வரை அனைத்து கத்தோலிக்கர்களும் ஒன்றிணைந்து நிற்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.

“நாட்டில் மீண்டும் இன்னொரு மோதலை தூண்ட முயன்றவர்கள் யார் என்பதை வெளிப்படுத்தவேண்டும்” – கர்தினால் மல்கம் ரஞ்சித் வேண்டுகோள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை மூடிமறைப்பதற்கு முயலவேண்டாம் கர்தினால் மல்கம் ரஞ்சித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

73 வது சுதந்திரதினத்தை குறிக்கும் வகையில் இடம்பெற்ற ஆராதனையின் போதே  கர்தினால் மல்கம் ரஞ்சித் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட ஆணைக்குழுவின் அறிக்கையை அரசாங்கம் பகிரங்கப்படுத்தும் என நம்பிக்கை வெளியிட்டுள்ள கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

30வருட கால யுத்தத்திலிருந்து மீண்ட இலங்கை நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் அபிவிருத்தி செய்துவருகின்றது என தெரிவித்துள்ள அவர் நாட்டில் மீண்டும் இன்னொரு மோதலை தூண்ட முயன்றவர்கள் யார் என்பதை வெளிப்படுத்தவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ளது என குறிப்பிட்டுள்ள மல்கம் ரஞ்சித் கடந்த காலத்தில் தலைவர்கள் ஆணைக்குழுக்களின் அறிக்கையை மறைத்தது போல இதனையும் மறைக்கவேண்டாம் என கோரியுள்ளார்.