கோவிட்-19

கோவிட்-19

அமெரிக்க – பிரித்தானிய கூட்டு வக்சீன் உற்பத்தியை தடுக்கின்றது!!!

பிரித்தானியாவில் சுதந்திர நாள்! வறுமைப்பட்ட நாடுகளில் மரண ஓலம்!
அமெரிக்க – பிரித்தானிய கூட்டு வக்சீன் உற்பத்தியை தடுக்கின்றது!!!

தனது நாட்டு மக்களுக்கு வக்சீனை வழங்கி கோவிட்-19 தாக்கத்தை கட்டுப்படுத்தி உள்ள அமெரிக்க – பிரித்தானியா அரசுகள் வக்சீனை ஏனைய நாடுகள் உற்பத்தி செய்வதற்கான உரிமத்தை சிறிது காலத்திற்கு விட்டுக்கொடுப்பதற்கு மறுத்து வருகின்றது. அதனால் உலகில் பல்லாயிரம் கோவிட் மரணங்கள் சம்பவிக்க உள்ளது. இன்று முற்றிலும் களியாட்டங்களுக்கு நாட்டைத் திறந்துவிட்டுள்ள பிரித்தானிய அரசு உலகின் பல்வேறு பாகங்களிலும் பல்லாயிரக்கணக்கானவர்கள் மரணமாவதைப் பற்றி எவ்வித கரிசனையும் கொள்ளவில்லை.

நுனிநாக்கில் மனித உரிமை பேசி தங்களை மனித உரிமைகளின் ஜனநாயகத்தின் காவலர்களாகக் காட்டிக்கொள்ளும் அமெரிக்க – பிரித்தானிய நாடுகள் கோவிட் வக்சீன் உரிமத்தை முற்றிலும் லாபநோக்கத்திற்காக தனியார் நிறுவனங்களிடம் கையளித்து உற்பத்தியை தடுப்பதன் மூலம் பல்லாயிரக்கணக்கான மரணங்களுக்கு வழிகோலுகின்றனர். எவ்வித மனிநேயமும் அற்று செயற்படுகின்ற அமெரிக்க – பிரித்தானிய கூட்டு எதிர்காலத்தில் உலக நாடுகளுக்கு வழிகாட்டவோ தலைமையேற்கவோ தகுதயற்றவையாகி வருகின்றன.

பிரித்தானியா ப்ரீடம்டே – சுதந்திரநாள் என்று அறிவிப்பதற்கு 48 மணிநேரங்களிற்கு முன்னரே சுகாதார அமைச்சர், நிதி அமைச்சர், பிரதம மந்திரி மூவருமே தனிமைப்படுத்தலுக்கு செல்ல வேண்டியேற்பட்டு விட்டது. தற்போதைய டெல்டா வேரியன் மிகவேகமாகப் பரவி வருகின்றது. ஆனால் நாட்டில் வயது வந்தவர்களுக்கு பெரும்பாலும் வக்சீன் போடப்பட்டு இருப்பதால் பாதிப்பு வீதம் மிக மிகக் குறைவான நிலையிலேயே காணப்படுகிறது. மேலும் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் வரும் இரு மாதங்களுக்குள் வக்சீன் போடப்பட்டு விடும் என பிரதமர் பொறிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். இந்த வக்சீன் காரணமாக கோவிட் பாதிப்பும் மரணங்களும் பெரும்பாலும் முற்றாக தடுக்கப்படுகின்ற நிலைக்கு மேற்கு நாடுகள் வந்துகொண்டிருக்கின்றன. ஆனால் சனத்தொகை அதிகமான வறிய மற்றும் வளர்ந்துவரும் நாடுகளில் கோவிட் பாதிப்பும் மரணமும் அதிகரித்து வருகின்றது.

இதனைத் தடுப்பதற்கு தேவையான வக்சீனை உற்பத்தி செய்வதற்கு வக்சீன் உற்பத்தி உரிமத்தை அமெரிக்க – பிரித்தானிய அரசுகள் தற்காலிகமாகவேனும் வழங்கினால் உற்பத்தியயை வேறுநாடுகளிலும் வக்சீன் உற்பத்தி செய்து கோவிட் பாதிப்பையும் மரணத்தையும் கட்டுப்படுத்தலாம். வறிய நாடுகளில் ஒரு வீதமான சன்தொகைக்கு கூட வக்சீன் போடப்படவில்லை. அமெரிக்க – பிரித்தானிய அரசுகளின் சுயநலமிக்க முற்றிலும் லாபத்தையீட்டும் நிறுவனங்களுக்கு சாதகமாகச் செயற்படுவது மனித குலத்தை பெரும் அவலத்திற்குள் தள்ளவுள்ளது.

பிரித்தானியாவில் ஒரு நாளுக்கு 4 000 மரணங்கள் சம்பவிக்கலாம்!!! பொறிஸ் ஜோன்சனின் வினைத்திறனற்ற முடிவுகளின் விளைவு!

பிரித்தானிய பிரதமரின் அசமந்த போக்கு மேலும் பல்லாயிரக் கணக்கான உயிர்களைக் கொல்ல இருக்கின்றது. கோவிட்-19 ஒரு நாளைக்கு நாலாயிரம் உயிர்களை பலி எடுக்கும் அபாயம் இருப்பதாக அரசின் விஞ்ஞான மருத்துவக்குழு எச்சரித்து உள்ளது. அவர்களின் மதிப்பீட்டின் படி நவம்பர் மாதத்தில் மரண எண்ணிக்கை நாளொன்றுக்கு 2000 முதல் 4000 வரை சம்பவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வழமைக்கு மாறாக 20 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்ட பெண்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர்.

மேலும் பிரித்தானியாவைப் பொறுத்தவரை இன்னமும் வெப்பநிலை கணிசமான அளவில் வீழ்ச்சி அடையவில்லை. வழமைக்கு மாறாக நாடு இன்னமும் கடுமையான குளிருக்குச் செல்லவில்லை. வெப்பநிலை வீழ்ச்சி அடைந்து கடும் குளிர் ஏற்படும் போது நோயின் பரம்பல் மிகத்தீவிரமாகும். வழமையான காய்ச்சல் தடிமன் என்பன இக்காலகட்டத்திலேயே அதிகமாக பரவுவது வழமை. அதுவும் பாடசாலைகளே இந்நோய் பரம்பலின் மையமாக திகழ்ந்து வருகின்றன.

நவம்பர் 5ம் திகதி முதல் இங்கிலாந்தில் மிக இறுக்கமான லொக்டவுன் கொண்டுவரப்பட உள்ளது. ஒரு மாதகாலத்திற்கும் நீடிக்கும் இந்த லொக்டவுன் டிசம்பர் 2 வரை நீடிக்க உள்ளது. இவ்வாறான இறுக்கமான லொக்டவுன் காலத்திலும் பாடசாலைகள் பல்கலைக்கழகங்களை திறந்து வைப்பதற்கு அரசு முயற்சிக்கின்றது. ஆனால் இது தேவையான அளவு தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு மிகக்குறைவாகவே உள்ளது.

பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் தலைமையும் கொன்சவேடிவ் கட்சியின் பழமைவாத தனிநபர்வாத சிந்தனை முறையும் இதுவரை எண்பதிணாயிரத்துக்கும் அதிகமான உயிர்களைப் பலியெடுத்து உள்ளது. ‘சமூகம்’ என்ற ஒன்றில்லை என்ற சிந்தனை முறையோடு வாழ்கின்ற இந்த முதலாளித்துவ ஆட்சியாளர்கள் தனிநபர் சார்ந்து மட்டுமே சிந்திக்கின்றனர். பிரதமர் பொறிஸ் ஜோன்சனுக்கு கோவிட்-19 தொற்று ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் இருந்து வெளியேறிய போது ‘சமூகம்’ என்ற ஒன்று இருப்பதாகத் தெரிவித்தார். ஆனால் அவரோ அவருடைய கட்சியின் கொள்கைகளோ அதனை ஒரு போதும் பிரதிபலிக்கவில்லை.

இந்தப் புதிய பிரித்தானிய அரசு கோவிட்-19 யை கையாண்ட முறை மிக மிக மோசமானது. தனது அரசின் விஞ்ஞான மருத்துவக் குழுக்களின் அலோசணைகளை புறம்தள்ளிவிட்டு குறுக்கு வழியில் தேர்தலை வெறிற்கொள்ள திட்டம் வகுத்த டொமினிக் கம்மிங்ஸ் போன்ற மண்டையன் குழுக்களின் அலோசனையின் படியே பொறிஸ் ஜோன்சன் ஆட்சி செய்கின்றார். அவருடைய நிதியமைச்சர் சான்ஸ்லர் ஒப் எக்செக்கர் ரிசி சுநாக் கூட புதிதான எந்த பொருளாதாரக் கொள்கை வகுப்பையும் மேற்கொள்ளவில்லை. ஜேர்மன் அரசு அறிவித்த உதவிநலத்திட்டங்களை தாங்களும் மறுநாள் அறிவித்தனர். அல்லது பல வாரங்கள் கழித்து அறிவித்தனர்.

ஐரோப்பிய நாடுகள் மார்ச்சில் லொக்டவுனுக்குச் சென்ற போது பிரித்தானிய அரசையும் லொக்டவுன் அறிவிக்க அழுத்தம் வழங்கப்பட்டது. ஆனால் அதற்கு பிரதமர் மறுத்துவிட்டார். அதனால் லொக்டவுன் அறிவிக்க ஏற்பட்ட தாமதத்தால் பிரித்தானியாவின் கோவிட்-19 பரவலும் மரணமும் உலக எண்ணிக்கையில் உச்சத்தைத் தொட்டது. பிரதமர் பொறிஸ் ஜோன்சன் இருவாரங்கள் முன்னதாக லொக்டவுனை அறிவித்து இருந்தால், கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 வீதத்தால் குறைந்திருக்கும் என்று மதிப்பிடப்பட்டது.

முதற்தடவை கோவிட்-19 பற்றி பெரிதாக தெரிந்திருக்கவில்லை; தவறு இழைக்கப்பட்டுவிட்டது என்றால். ஆனால் இரண்டாவது அலை பாராதூரமான தாக்கத்தை ஏற்படுத்தாலாம் என்ற எச்சரிக்கை ஆரம்பம் முதலே கூறப்பட்டு வந்தது. அரசின் விஞ்ஞான மருத்துவக் குழு தொடர்ச்சியாக அரசை எச்சரித்து வந்துள்ளது. பிரித்தானியாவில் வேல்ஸ், நொர்தன் ஐலன்ட்ஸ் அரசுகள் ஏற்கனவே ஒரு மாத லொக்டவுனை அறிவித்து பல நாட்கள் ஆகிவிட்டது. அப்படி இருந்தும் பொறிஸ் ஜோன்சன் ‘தனக்குத்தான் தெரியும் தான் தான் படைப்பன்’ என்று சன்னதம் ஆடிக்கொண்டு திரிகின்றார். ஒரு மனிதனுக்கு சுயபுத்தி இருக்க வேண்டும். இல்லாவிட்டால் புத்தி சொல்லக் கூடியவர்களின் புத்திமதியயையாவது கேட்கவேணும். இந்த இரண்டும் இல்லாத ஒன்று பிரித்தானிய வல்லரசுக்கு பிரதமர் ஆனால் மக்கள் வகை தொகையின்றி கொல்லப்படுவது தவிர்க்க முடியாதது.

கடந்த ஆறு மாதகாலத்திற்கு மேலாக கொரோனா தொற்று இல்லாத நாடாக தாய்வான் இருக்கின்றது. தங்களைப் பற்றிய பெரிய விம்பங்களைக் கட்டிக்கொண்டு திரிகின்ற இந்த காலனித்துவ சிந்தனையில் இருந்து பிரித்தானிய ஆட்சியாளர்கள் விடுபட வேண்டும். கொரோணாவுக்கு பிளீச் குடிக்க கொடுக்கும் அளவுக்கு – அமெரிக்க வல்லரசின் ஏஜென்டாக இருந்தாலும்; அவ்வளவு முட்டாள்கள் என்று சொல்லாவிட்டாலும், கிட்டத்தட்ட அந்த நிலைக்குத் தான் பிரித்தானிய வல்லரசின் நிலை வந்து கொண்டிருக்கிறது.

இன்றைய அமெரிக்க பிரித்தானிய வல்லரசுகள் வெளியிடுகின்ற அறிக்கைகள் ‘குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு’ என்றளவிற்கு கேவலமாகிவிட்டது. போதை ஏறியவுடன் வருகின்ற உசாரில் ‘வெட்டுவோம் பிடுங்குவாம்’ என்ற கணக்கில் தான் பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சனும், அவருடைய கிட்டத்தட் அண்ணன் மாதிரியான டொனால்ட் ட்ரம்மும் விடுகின்ற ரீல்கள் உள்ளது. கோவிட்-19 க்கு வக்சீன் கோடிக்குள் இருக்கின்றது, ‘தைப்பொங்கலுக்கு தமிழீழம்’ என்ற கணக்கில் தான் ‘புதுவருசத்தில் கோவிட்-19 க்கு கோவிந்தா’ என்றெல்லாம் பிலா விடுகின்றார்கள்.

உண்மை நிலவரம் அதுவல்ல. கோவிட்-19 வக்சின் அண்மைக்காலத்தில் வருவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. அவ்வாறு வந்தாலும் அதனை முழு மக்கள் தொகைக்கும் வழங்குவதற்கான வசதி வாய்ப்புகள் இல்லை. அது அரசுடைய நோக்கமும் கிடையாது. இந்த கோவிட்-19 ஒட்டுமொத்த மக்கள்கொகைக்கும் பரவி இயற்கையான நிர்ப்பீடண சக்தி ஒவ்வொருவரது உடலிலும் ஏற்படுவதன் மூலமே இந்நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும். மக்கள் தொகைக்குள் இந்நோய் பரவுகின்ற போது அதனை ஒரே நேரத்தில் பரவ அனுமதித்தால் நாட்டில் உள்ள சுகாதார சேவைகளால் அதனை தாக்குப் பிடிக்க முடியாது. கட்டுப்பாடின்றி பரவ அனுமதித்தால் காட்டாற்று வெள்ளத்தில் மக்கள் மரணிப்பது போல் தகுந்த சிகிச்சை இல்லாமல் பல்லாயிரம் மக்கள் மரணிக்க வேண்டி இருக்கும்.

அதனால் கோவிட்-19 மக்கள் தொகைக்குள் பரவுவதை மட்டுப்படுத்ப்பட்ட வீதத்தில் மேற்கொள்ள வேண்டும். இந்த மட்டுப்படுத்தல் என்பது நாட்டின் சுகாதார சேவையால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கக் கூடிய எண்ணிக்கையயை வைத்து தீர்மானிக்கப்படும்.

பிரித்தானியாவில் இந்நோய்க் கிருமியானது இதுவரை 15 வீதமான மக்களுக்கு பரவி இருக்கலாம் என்று மதிப்பிடப்படுகின்றது. உலகில் ஈரானிலேயே கூடுதல் மக்கள் தொகைக்கு – 28வீதம் – இந்நோய் பரவி உள்ளது. கீழுள்ள வரைபு வெவ்வேறு நாடுகளில் எவ்வளவு வீதமான மக்களுக்கு இந்நோய் பரவியுள்ளது என்பதைக் காட்டுகின்றது. ஒரு நாட்டின் எழுபது வீதமான மக்களுக்கு இந்நோய் தொற்று ஏற்பட்டு இருந்தாலேயே அந்நாட்டில் மக்கள் குழும நீர்ப்பீடனம் ஏற்பட்டதாகக் கொள்ள முடியும். அப்படிப் பார்க்கின்ற போது எல்லா நாடுகளுமே முழு நாட்டுக்குமான நீர்ப்பீடனத்தை எட்டுவதற்கு மிகத் தொலைவிலேயே உள்ளனர். பிரித்தானியா அவ்வாறான ஒரு நீர்ப்பீடனத்தை பெறுவதற்கு இன்னும் ஓராண்டுக்கு மோலாகலாம். இப்பொழுதுள்ள நிலையில் ஈரான் மிகவிரைவில் ழுழுநாட்டுக்குமான குழும நீர்ப்பீடணத்தை விரைவில் எட்டும் என எதிர்பார்க்கலாம்.

இந்த கோவிட்-19 ஏற்படுத்துகின்ற அடுத்த பெரும் பிரச்சினை பொருளாதார தாக்கம். தற்போது வரை கோவிட்-19க்காக செலவிடப்பட்ட நிதியயை மீளப் பெறுவதற்கு 50 பில்லியன் பவுண் வரியயை அரசு விதிக்க வேண்டியேற்படும். கோவிட்-19 க்கு முன்னதாகவே பிரித்தானிய சுகாதாரசேவைகள் உட்பட பொதுச்சேவைகளுக்கான நிதிவழங்கலை கடந்த பத்து ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் கொன்சவேடிவ் அரசு குறைத்துக் குறைத்து வந்தது. பொதுச்சேவைகள் அனைத்தும் கோவிட்-19 க்கு முன்னதாகவே ரிம்மில் தான் ஓடிக்கொண்டிருந்தன. சில உதாரணங்களையும் அதன் விளைவுகளையும் மட்டும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

பிரித்தானிய சுகாதார சேவைகளில் 50,000 வெற்றிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தது. ஏனெனில் அவர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு சுகாதார சேவைகளிடத்தில் போதுமான நிதி இருக்கவில்லை. பாடசாலைகளில் 10,000க்கும் அதிகமான ஆசிரியர் வெற்றிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. அதற்கான நிதி பாடசாலைகளில் இல்லலை. பாடசாலைகளில் வகுப்பறைகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த ஆண்டில் வெளியானா ஆய்வின்படி கோவிட்-19 காலத்திற்கு முந்தைய நிலையில் பிற்படுத்தப்பட்ட சமூகங்களில் இருந்து வரும் மாணவர்களின் கல்வி மட்டத்திற்கும் சாதாரண மட்டத்தில் இருந்து வருகின்ற மாணவர்களின் கல்வி மட்டத்திற்குமான இடைவெளி இரண்டு ஆண்டுகளாக இருந்தது. கோவிட்-19 க்குப் பின் இவ்விடைவெளி ஐந்து மடங்காக அதிகரித்து இருப்பதாக மதிப்பிடப்படுகிறது. இதன்படி ஆண்டு 13இல் கல்வி கற்கின்ற பிற்படுத்தப்பட்ட சமூகமட்டத்தில் உள்ள ஒரு மாணவனின் கல்விமட்டமும் 9ம் ஆண்டில் கல்விகற்கின்ற ஒரு சாதாரண தரத்தில் உள்ள மாணவனின் கல்விமட்டமும் கிட்டத்தட்ட சமமாக இருக்கும் எனக் கொள்ளலாம்.

அரசு ஏற்கனவே பல உள்ளுராட்சி நூலகங்களை மூடிவருகின்றது. பெரும்பாலான அரச பாடசாலைகளில் நூலகங்கள் இல்லை அல்லது பெயரளவிலேயே இயங்கி வருகின்றன. பிறக்கின்ற குழந்தையின் அடிப்படைத் தேவைகளில் அதன் வளர்ச்சியில் ஏற்படுத்தப்படுகின்ற போதாமைகள் அதன் எதிர்காலத்தை பாரதூரமாக பாதிக்கின்றன. இதன் காரணத்தினால் கோவிட்-19க்கு முன்னதாக பிரித்தானிய சிறைகளை நிரப்புகின்ற குற்றவாளிகளில் 80 வீதத்தினர் பாடசாலைகளில் இருந்து கலைக்கப்பட்ட மாணவர்களாக பாடசாலைக் கல்வியயை விட்டு ஒதுங்கியவர்களாக இருக்கின்றனர்.

பொதுச் சேவைகளில் முதலீடுகள் செய்யப்படாத போது வீட்டுத் திட்டங்கள் போக்குவரத்துக்கள் கல்வி என்று சகலவிடயங்களிலும் பிற்படுத்தப்பட்ட தரப்பினர் மிக மோசமாக பாதிக்கப்படுவர். சமூக ஏற்றத்தாழ்வின் இடைவெளி கோவிட்-19 க்கு பின் மிகமோசமடையும். சமூகப் பதட்டம் தவிர்க்க முடியாததாகும். இது பொருளாதாரத்தை மிக மோசமாகப் பாதிக்கும்.

2007இல் அமெரிக்காவின் வீட்டுச் சந்தையில் இலாபமீட்டும் வெறியர்களால் ஏற்படுத்தப்பட்ட பொருளாதார வீழ்ச்சியானது பிரித்தானியாவை மிக மோசமாகத் தாக்கியது. இந்த பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீண்டு மீண்டும் இப்பொருளாதார வீழ்ச்சிக்கு முன்னைய நிலைக்கு பிரித்தானியாவால் செல்ல முடியவில்லை. முன்னைய பொருளாதார நிலையயை எட்ட 12 ஆண்டுகள் எடுத்தது. அதனைத் தொடர்ந்து இந்த கோவிட்-19 ஏற்பட்டது. கோவிட்-19 ஏற்படுத்திய பொருளாதார வீழ்ச்சியானது 2007 இல் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியயைக் காட்டிலும் மோசமானது. அத்தோடு கோவிட்-19க்கு முன்னதாகவே உலக பொருளாதாரம் தொழில்நுட்பத்தில் அதீதமாக தங்கி இருக்கும் நிலையயை நோக்கிச் செல்ல ஆரம்பித்துவிட்டது.

அதன்படி மனித உழைப்பு அதன் முக்கியத்துவத்தை இழந்துவருகின்றது. இந்த மனித உழைப்பின் அவசியத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியானது இந்த கோவிட்-19 தாக்கத்தினால் மேலும் கீழ்நிலைக்குச் சென்று விட்டது. அதன்படி இன்று உள்ள 60 வீதமான வேலைகள் இன்னும் 5 முதல் 10 ஆண்டுகளில் இல்லாமல் போய்விடும். சுப்பர்மார்க்கற், வங்கிகள், தபாலகங்கள், ஊபர் ரைவர்கள் ரக்ஸிகள் கணக்காளர்கள் பெற்றோல் நிலையங்கள் என்பன எமது வீதிகளில் இருந்து காணாமல் போய்விடும். வேலையின்மையும் வறுமையும் மலிந்திருக்கும் எதிர்காலம் என்பது பலருக்கு இருளாகவும் ஒரு சிலருக்கு மட்டுமே ஒளிமயமானதாகவும் இருக்கும். அதனால் அதற்கான திட்டமிடல்கள் ஒவ்வொருவருக்கும் அவசியமாகின்றது. அரசு எவ்வாறான சூழலானாலும் வர்த்தக நிறுவனங்களின் நலனையே முன்நிறுத்தும்.

இன்றும் இந்த கொரோனா காலத்திலும் ரெஸ்ற் அன் ரேர்ஸ் திட்டத்தை அரசிடம் உள்ள அனுபவம் மிக்க 40க்கும் அதிகமான வைரோலொஜி ஆய்வுகூடங்களுக்கு வழங்காமால் தனியார்களிடமே கையளித்துள்ளது. பிரிக்ஸிறின் போது ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அரசு தனியார் நிறுவனங்களிடம் கடற்பாதைப் போக்குவரத்தை கையளித்தது. அவ்வாறு செய்யப்பட்ட ஒப்பந்தங்களில் ஒரு நிறுவனம் தான் சீப்புரோன் அதனிடம் ஒரு பெரிகூட இருக்கவில்லை. அதனிடம் அது பற்றிய திட்டமும் இருக்கவில்லை. ஆனால் அரசு பல மில்லியன் ஒப்பந்தத்தை அந்நிறுவனத்துடன் கடந்த ஆண்டு மேற்கொண்டது.

மேலும் இந்த ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்ட போது ஈரோரணல்க்கு அதில் கலந்துகொள்வதற்கு சந்தர்ப்பம் அளிக்காததால் 33 மில்லியன் பவுண்கள் நஸ்ட்டஈட்டை அரசு வழங்கியது. ஆனால் பாடசாலைகளில் உள்ள பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு விடுமுறை காலத்திலும் உணவு வழங்குவதற்கான வவுச்சரை வழங்க அரசு மறுத்துவிட்டது. அதற்கான செலவு 5 மில்லயன் பவுண் மட்டுமே. இவ்வாறு தான் அரசு வினைத்திறன் அற்று செயற்படுகின்றது.

கோவிட்-19 தாக்கத்தனால் ஏனைய நோயாளிகள் வைத்திய சேவைகளைப் பெறுவதை தவிர்த்து வருகின்றனர். அதனால் எதிர்காலத்தில் அவர்களது உடல்நிலை மோசமடையவும் விரைவில் மரணத்தை எட்டவும் வாய்ப்பு உள்ளது. மேலும் கோவிட்-19 அபாயநிலை பற்றி மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பிரித்தானியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் பொருளாதார வீழ்ச்சியின் பக்கக விளைவுகளால் 700,000 பேர்களின் ஆயுட்காலம் குறைவடையும் அதாவது அவர்கள் விரைந்து மரணத்தை தழுவுவார்கள் என மதிப்பிட்டுள்ளது.

நீண்டகால தனிமைப்படுத்தல்களும் கை கழுவுதல் மற்றும் சுகாதார நடைமுறைகளும் கூட எதிர்காலத்தில் எமது உடலின் நோய் எதிர்ப்புத் தன்மையயை வலுவிழக்கச் செய்யும். ஏனைய வைரஸ் மற்றும் பக்ரீரியா போன்ற நுண் கிருமிகளின் தாக்கத்திற்கு நாம் ஆளாக வாய்ப்பளிக்கும். எமது உடலானது நுண் கிருமிகளைப் பற்றிக்கொள்ளும் போதே தனது நோய் எதிர்ப்பு சக்தியயை வளர்த்துக்கொள்கின்றது. இதுவொரு இயற்கை வக்சின் போன்றது. மேலும் மனநலம் சார்ந்த பிரச்சினைகளையும் இந்தத் தனிமைப்படுத்தல்கள் ஊக்குவிக்கின்றது.

இதுவொரு மிகுந்த நெருக்கடியான கால கட்டம். இதனை கையாள்வதற்கு ஒவ்வொருவரும் பழகிக்கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தங்களது நடைமுறைசார்ந்த பிரச்சினைகளைக் கையாள்வதற்கு தங்களை இசைவாக்கிக் கொள்ள வேண்டும். தங்களை இசைவாக்கிக் கொள்ள முடியாதவர்களே பெரும்பாலும் கூடுதல் பிரச்சினைக்கு ஆளாகின்றனர். முடிவெடுக்கும் ஆற்றல் என்பது ஒவ்வொருவருடைய நுண் திறன்சார்ந்தது. அதனை வளர்த்துக்கொண்டு சமயோசிதமாக முடிவெடுக்க வேண்டும்.

ஒவ்வொருவருக்கும் ஏற்படும் பிரச்சினைகளையும் பல வழிகளில் தீர்க்க முடியும். ஆனால் அந்ததந்த் தீர்வுகளை ஏற்றுக்கொள்ள அவர்கள் தயாராக இருப்பதில்லை. அதனால் அவர்கள் தவறான முடிவுகளை எடுக்கின்றனர். அதன் விளைவால் கூடுதல் துன்பத்திற்கு ஆளாகின்றனர். நாங்கள் ஒவ்வொரு முடிவையும் எடுக்கின்ற போது நாங்கள் தவிர்கக்கின்ற முடிவுகளால் ஏற்டுகின்ற நன்மை தீமைகளையும் ஆராய்ந்து உணர்ச்சித் தூண்டலா முடிவெடுக்காமல் அறிவுபூர்வமாக முடிவெடுத்தால் நாம் எமது முடிவுகளில் வெற்றி பெறுவதங்கான வாய்ப்புகள் அதிகம்.

பாடசாலைகளும் பல்கலைக்கழகங்களும் கொரோனாவின் சமூகப் பரம்பலின் முக்கிய இடங்களாகும். அங்கு சமூக இடைவெளியயை ஏற்படுத்துவது அசாத்தியமான ஒன்று. பல்கலைக்கழகங்களைப் பொறுத்தவரை அவர்கள் பெரும்பாலும் வீட்டில் இருந்து கற்கும் தொலைதூர கல்விக்குச் சென்றதால் பல்கலைக்கழகங்களில் நோய் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. ஆனால் பாடசாலைகளைப் பொறுத்தவரை மாணவர்கள் பாடசாலைக்கு வந்தே கல்வியயைத் தொடருகின்றனர். இந்நோய் பரம்பலை கட்டுப்படுத்துவதாக இருந்தால், அரசு தற்போது வந்த அரைத்தவணை விடுமுறையோடு பாடசாலைகளை நான்கு வாரங்களுக்கு மூடி, இதனைக் கட்டுப்படுத்தி இருக்க முடியும்.

இப்போது அரைத்தவணை முடிந்து, பெரும்பாலான பாடசாலைகள் திங்கட்கிழமை மீள ஆரம்பிக்கும். ஆகையால் நோய்பரம்பலை அரசு எதிர்பார்க்கின்ற அளவுக்கு கட்டுபாட்டுக்குள் கொண்டுவர முடியாது. தொழிற்கட்சி உட்பட அரசுக்கு பலர் எடுத்துக்கூறியும்; ஏனைய அதிகாரப்பகிர்வு செய்யப்பட்ட அரசுகள் விரைந்து செயற்பட்ட போதும்; பொறிஸ் ஜோன்சன் அரைத்தவணைக் காலத்தை வீணடித்துக்கொண்டார். இனி மரணங்கள் எகிறி மருத்துவமனைகள் நிரம்பிவழிய ஆரம்பிக்கவே அவர் பாடசாலைகள் மூடுவது பற்றி சிந்திப்பார். இது நோய்க்கிருமி பரவலை அதிகரிப்பதுடன், அதனை கட்டுப்படுத்துவதற்கான காலத்தையும் அதிகரிக்கும். விரைந்து செயற்படாததால் கூடுதலான கற்பித்தல் காலங்கள் வீணடிக்கப்படும்.

இன்றுள்ள இந்த பிரித்தானிய பிரதமரையும் அமெரிக்க ஜனாதிபதியயையும் அன்று தெரிவு செய்கின்ற போது மக்கள் சிந்தித்து ஆராய்ந்து உணர்ச்சிகளுக்கு இடம்கொடாமல் அறிவுபூர்வமாக சிந்தித்து முடிவெடுத்து இருந்தால் இந்தப் பேரழிவு இவ்வளவு மோசமானதாக அமைந்திருக்காது.

பிரித்தானிய பிரதமரின் அசமந்த போக்கு மேலும் பல்லாயிரக் கணக்கான உயிர்களைக் கொல்ல இருக்கின்றது. கோவிட்-19 ஒரு நாளைக்கு நாலாயிரம் உயிர்களை பலி எடுக்கும் அபாயம் இருப்பதாக அரசின் விஞ்ஞான மருத்துவக்குழு எச்சரித்து உள்ளது. இன்னும் சில நாட்களில் இங்கிலாந்தில் மிக இறுக்கமான லொக்டவுன் கொண்டுவரப்பட உள்ளது. இவ்வாறான இறுக்கமான லொக்டவுன் காலத்திலும் பாடசாலைகள் பல்கலைக்கழகங்களை திறந்து வைப்பதற்கு அரசு முயற்சிக்கின்றது. ஆனால் இது தேவையான அளவு தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு மிகக்குறைவாகவே உள்ளது.

பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் தலைமையும் கொன்சவேடிவ் கட்சியின் பழமைவாத தனிநபர்வாத சிந்தனை முறையும் இதுவரை எண்பதிணா யிரத்துக்கும் அதிகமான உயிர்களைப் பலியெடுத்து உள்ளது. ‘சமூகம்’ என்ற ஒன்றில்லை என்ற சிந்தனை முறையோடு வாழ்கின்ற இந்த முதலாளித்துவ ஆட்சியாளர்கள் தனிநபர் சார்ந்து மட்டுமே சிந்திக்கின்றனர். பிரதமர் பொறிஸ் ஜோன்சனுக்கு கோவிட்-19 தொற்று ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் இருந்து வெளியேறிய போது ‘சமூகம்’ என்ற ஒன்று இருப்பதாகத் தெரிவித்தார். ஆனால் அவரோ அவருடைய கட்சியின் கொள்கைகளோ அதனை ஒரு போதும் பிரதிபலிக்கவில்லை.

இந்தப் புதிய பிரித்தானிய அரசு கோவிட்-19 யை கையாண்ட முறை மிக மிக மோசமானது. தனது அரசின் விஞ்ஞான மருத்துவக் குழுக்களின் அலோசணைகளை புறம்தள்ளிவிட்டு குறுக்கு வழியில் தேர்தலை வெறிற்கொள்ள திட்டம் வகுத்த டொமினிக் கம்மிங்ஸ் போன்ற மண்டையன் குழுக்களின் அலோசனையின் படியே பொறிஸ் ஜோன்சன் ஆட்சி செய்கின்றார். அவருடைய நிதியமைச்சர் சான்ஸ்லர் ஒப் எக்செக்கர் ரிசி சுநாக் கூட புதிதான எந்த பொருளாதாரக் கொள்கை வகுப்பையும் மேற்கொள்ளவில்லை. ஜேர்மன் அரசு அறிவித்த உதவிநலத்திட்டங்களை தாங்களும் மறுநாள் அறிவித்தனர். அல்லது பல வாரங்கள் கழித்து அறிவித்தனர்.

ஐரோப்பிய நாடுகள் மார்ச்சில் லொக்டவுனுக்குச் சென்ற போது பிரித்தானிய அரசையும் லொக்டவுன் அறிவிக்க அழுத்தம் வழங்கப்பட்டது. ஆனால் அதற்கு பிரதமர் மறுத்துவிட்டார். அதனால் லொக்டவுன் அறிவிக்க ஏற்பட்ட தாமதத்தால் பிரித்தானியாவின் கோவிட்-19 பரவலும் மரணமும் உலக எண்ணிக்கையில் உச்சத்தைத் தொட்டது. பிரதமர் பொறிஸ் ஜோன்சன் இருவாரங்கள் முன்னதாக லொக்டவுனை அறிவித்து இருந்தால்,கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 வீதத்தால் குறைந்திருக்கும் என்று மதிப்பிடப்பட்டது.

முதற்தடவை கோவிட்-19 பற்றி பெரிதாக தெரிந்திருக்கவில்லை; தவறு இழைக்கப்பட்டுவிட்டது என்றால். ஆனால் இரண்டாவது அலை பாராதூரமான தாக்கத்தை ஏற்படுத்தாலாம் என்ற எச்சரிக்கை ஆரம்பம் முதலே கூறப்பட்டு வந்தது. அரசின் விஞ்ஞான மருத்துவக் குழு தொடர்ச்சியாக அரசை எச்சரித்து வந்துள்ளது. பிரித்தானியாவில் வேல்ஸ், நொர்தன் ஐலன்ட்ஸ் அரசுகள் ஏற்கனவே ஒரு மாத லொக்டவுனை அறிவித்து பல நாட்கள் ஆகிவிட்டது. அப்படி இருந்தும் பொறிஸ் ஜோன்சன் ‘தனக்குத்தான் தெரியும் தான் தான் படைப்பன்’ என்று சன்னதம் ஆடிக்கொண்டு திரிகின்றார். ஒரு மனிதனுக்கு சுயபுத்தி இருக்க வேண்டும். இல்லாவிட்டால் புத்தி சொல்லக் கூடியவர்களின் புத்திமதியயையாவது கேட்கவேணும். இந்த இரண்டும் இல்லாத ஒன்று பிரித்தானிய வல்லரசுக்கு பிரதமர் ஆனால் மக்கள் வகை தொகையின்றி கொல்லப்படுவது தவிர்க்க முடியாதது.

கடந்த ஆறு மாதகாலத்திற்கு மேலாக கொரோனா தொற்று இல்லாத நாடாக தாய்வான் இருக்கின்றது. தங்களைப் பற்றிய பெரிய விம்பங்களைக் கட்டிக்கொண்டு திரிகின்ற இந்த காலனித்துவ சிந்தனையில் இருந்து பிரித்தானிய ஆட்சியாளர்கள் விடுபட வேண்டும். கொரோணாவுக்கு பிளீச் குடிக்க கொடுக்கும் அளவுக்கு – அமெரிக்க வல்லரசின் ஏஜென்டாக இருந்தாலும்; அவ்வளவு முட்டாள்கள் என்று சொல்லாவிட்டாலும், கிட்டத்தட்ட அந்த நிலைக்குத் தான் பிரித்தானிய வல்லரசின் நிலை வந்து கொண்டிருக்கிறது.

இன்றைய அமெரிக்க பிரித்தானிய வல்லரசுகள் வெளியிடுகின்ற அறிக்கைகள் ‘குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு’ என்றளவிற்கு கேவலமாகிவிட்டது. போதை ஏறியவுடன் வருகின்ற உசாரில் ‘வெட்டுவோம் பிடுங்குவாம்’ என்ற கணக்கில் தான் பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சனும், அவருடைய கிட்டத்தட் அண்ணன் மாதிரியான டொனால்ட் ட்ரம்மும் விடுகின்ற ரீல்கள் உள்ளது. கோவிட்-19 க்கு வக்சீன் கோடிக்குள் இருக்கின்றது, ‘தைப்பொங்கலுக்கு தமிழீழம்’ என்ற கணக்கில் தான் ‘புதுவருசத்தில் கோவிட்-19 க்கு கோவிந்தா’ என்றெல்லாம் பிலா விடுகின்றார்கள்.

உண்மை நிலவரம் அதுவல்ல. கோவிட்-19 வக்சின் அண்மைக்காலத்தில் வருவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. அவ்வாறு வந்தாலும் அதனை முழு மக்கள் தொகைக்கும் வழங்குவதற்கான வசதி வாய்ப்புகள் இல்லை. அது அரசுடைய நோக்கமும் கிடையாது. இந்த கோவிட்-19 ஒட்டுமொத்த மக்கள்கொகைக்கும் பரவி இயற்கையான நிர்ப்பீடண சக்தி ஒவ்வொருவரது உடலிலும் ஏற்படுவதன் மூலமே இந்நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும். மக்கள் தொகைக்குள் இந்நோய் பரவுகின்ற போது அதனை ஒரே நேரத்தில் பரவ அனுமதித்தால் நாட்டில் உள்ள சுகாதார சேவைகளால் அதனை தாக்குப் பிடிக்க முடியாது. கட்டுப்பாடின்றி பரவ அனுமதித்தால் காட்டாற்று வெள்ளத்தில் மக்கள் மரணிப்பது போல் தகுந்த சிகிச்சை இல்லாமல் பல்லாயிரம் மக்கள் மரணிக்க வேண்டி இருக்கும்.

அதனால் கோவிட்-19 மக்கள் தொகைக்குள் பரவுவதை மட்டுப்படுத்ப்பட்ட வீதத்தில் மேற்கொள்ள வேண்டும். இந்த மட்டுப்படுத்தல் என்பது நாட்டின் சுகாதார சேவையால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கக் கூடிய எண்ணிக்கையயை வைத்து தீர்மானிக்கப்படும்.

பிரித்தானியாவில் இந்நோய்க் கிருமியானது இதுவரை 15 வீதமான மக்களுக்கு பரவி இருக்கலாம் என்று நியூ சயன்றிஸ்ட் மதிப்பிடப்படுகின்றது. உலகில் ஈரானிலேயே கூடுதல் மக்கள் தொகைக்கு – 28 வீதம் – இந்நோய் பரவி உள்ளது. கீழுள்ள வரைபு வெவ்வேறு நாடுகளில் எவ்வளவு வீதமான மக்களுக்கு இந்நோய் பரவியுள்ளது என்பதைக் காட்டுகின்றது. ஒரு நாட்டின் எழுபது வீதமான மக்களுக்கு இந்நோய் தொற்று ஏற்பட்டு இருந்தாலேயே அந்நாட்டில் மக்கள் குழும நீர்ப்பீடணம் ஏற்பட்டதாகக் கொள்ள முடியும். அப்படிப் பார்க்கின்ற போது எல்லா நாடுகளுமே முழு நாட்டுக்குமான நீர்ப்பீடணத்தை எட்டுவதற்கு மிகத் தொலைவிலேயே உள்ளனர். பிரித்தானியா அவ்வாறான ஒரு நீர்ப்பீடணத்தை பெறுவதற்கு இன்னும் ஓராண்டுக்கு மோலாகலாம். இப்பொழுதுள்ள நிலையில் ஈரான் மிகவிரைவில் ழுழுநாட்டுக்குமான குழும நீர்ப்பீடணத்தை விரைவில் எட்டும் என எதிர்பார்க்கலாம்.

இந்த கோவிட்-19 ஏற்படுத்துகின்ற அடுத்த பெரும் பிரச்சினை பொருளாதார தாக்கம். தற்போது வரை கோவிட்-19க்காக செலவிடப்பட்ட நிதியயை மீளப் பெறுவதற்கு 50 பில்லியன் பவுண் வரியயை அரசு விதிக்க வேண்டியேற்படும். கோவிட்-19 க்கு முன்னதாகவே பிரித்தானிய சுகாதாரசேவைகள் உட்பட பொதுச்சேவைகளுக்கான நிதிவழங்கலை கடந்த பத்து ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் கொன்சவேடிவ் அரசு குறைத்துக் குறைத்து வந்தது. பொதுச்சேவைகள் அனைத்தும் கோவிட்-19 க்கு முன்னதாகவே ‘ரிம்’மில் தான் ஓடிக்கொண்டிருந்தன.

பிரித்தானிய சுகாதார சேவைகளில் 50,000 வெற்றிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தது. ஏனெனில் அவர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு சுகாதார சேவைகளிடத்தில் போதுமான நிதி இருக்கவில்லை. பாடசாலைகளில் 10,000க்கும் அதிகமான ஆசிரியர் வெற்றிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. அதற்கான நிதி பாடசாலைகளில் இல்லலை. பாடசாலைகளில் வகுப்பறைகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த ஆண்டில் வெளியான ஆய்வின்படி கோவிட்-19 காலத்திற்கு முந்தைய நிலையில் பிற்படுத்தப்பட்ட சமூகங்களில் இருந்து வரும் மாணவர்களின் கல்வி மட்டத்திற்கும் சாதாரண மட்டத்தில் இருந்து வருகின்ற மாணவர்களின் கல்வி மட்டத்திற்குமான இடைவெளி இரண்டு ஆண்டுகளாக இருந்தது. கோவிட்-19 க்குப் பின் இவ்விடைவெளி ஐந்து மடங்காக அதிகரித்து இருப்பதாக மதிப்பிடப்படுகிறது. இதன்படி ஆண்டு 13இல் கல்வி கற்கின்ற பிற்படுத்தப்பட்ட சமூகமட்டத்தில் உள்ள ஒரு மாணவனின் கல்விமட்டமும் 9ம் ஆண்டில் கல்விகற்கின்ற ஒரு சாதாரண சமூகமட்டத்தில் உள்ள மாணவனின் கல்விமட்டமும் கிட்டத்தட்ட சமமாக இருக்கும் எனக் கொள்ளலாம்.

அரசு ஏற்கனவே பல உள்ளுராட்சி நூலகங்களை மூடிவருகின்றது. பெரும்பாலான அரச பாடசாலைகளில் நூலகங்கள் இல்லை அல்லது பெயரளவிலேயே இயங்கி வருகின்றன. பிறக்கின்ற குழந்தையின் அடிப்படைத் தேவைகளில், அதன் வளர்ச்சியில், ஏற்படுத்தப்படுகின்ற போதாமைகள் அதன் எதிர்காலத்தை பாரதூரமாக பாதிக்கின்றன. இதன் காரணத்தினால் கோவிட்-19க்கு முன்னதாக பிரித்தானிய சிறைகளை நிரப்புகின்ற குற்றவாளிகளில் 80 வீதத்தினர் பாடசாலைகளில் இருந்து கலைக்கப்பட்ட மாணவர்களாக; பாடசாலைக் கல்வியயை விட்டு ஒதுங்கியவர்களாக இருக்கின்றனர்.

பொதுச் சேவைகளில் முதலீடுகள் செய்யப்படாத போது வீட்டுத் திட்டங்கள், போக்குவரத்துக்கள், கல்வி என்று சகல விடயங்களிலும் பிற்படுத்தப்பட்ட தரப்பினர் மிக மோசமாக பாதிக்கப்படுவர். சமூக ஏற்றத்தாழ்வின் இடைவெளி கோவிட்-19 க்கு பின் மிகமோசமடையும். சமூகப் பதட்டம் தவிர்க்க முடியாததாகும். இது பொருளாதாரத்தை மிக மோசமாகப் பாதிக்கும்.

2007இல் அமெரிக்காவின் வீட்டுச் சந்தையில் இலாபமீட்டும் வெறியர்களால் ஏற்படுத்தப்பட்ட பொருளாதார வீழ்ச்சியானது பிரித்தானியாவை மிக மோசமாகத் தாக்கியது. இந்த பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீண்டு, இப்பொருளாதார வீழ்ச்சிக்கு முன்னைய நிலைக்கு பிரித்தானியாவால் செல்ல முடியவில்லை. முன்னைய பொருளாதார நிலையயை எட்ட 12 ஆண்டுகள் எடுத்தது. அதனைத் தொடர்ந்து இந்த கோவிட்-19 ஏற்பட்டது. கோவிட்-19 ஏற்படுத்திய பொருளாதார வீழ்ச்சியானது 2007 இல் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியயைக் காட்டிலும் மோசமானது.

அத்தோடு கோவிட்-19க்கு முன்னதாகவே உலக பொருளாதாரம் தொழில்நுட்பத்தில் அதீதமாக தங்கி இருக்கும் நிலையயை நோக்கிச் செல்ல ஆரம்பித்துவிட்டது. அதன்படி மனித உழைப்பு அதன் முக்கியத்துவத்தை இழந்துவருகின்றது. இந்த மனித உழைப்பின் அவசியத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியானது இந்த கோவிட்-19 தாக்கத்தினால் மேலும் கீழ்நிலைக்குச் சென்று விட்டது. அதன்படி இன்று உள்ள 60 வீதமான வேலைகள் இன்னும் 5 முதல் 10 ஆண்டுகளில் இல்லாமல் போய்விடும். சுப்பர்மார்க்கற்கள் போன்ற கடைத்தெரு வியாபார நிலையங்கள் (உணவகங்கள், மருந்தகங்கள், புடவைக்கடைகள் சில்லறைக் கடைகள்), வங்கிகள், தபாலகங்கள், ஊபர்கள் – ரக்ஸிகள், கணக்காளர்கள் பெற்றோல் நிலையங்கள் என்பன எமது வீதிகளில் இருந்து காணாமல் போய்விடும். வேலையின்மையும் வறுமையும் மலிந்திருக்கும். எதிர்காலம் என்பது பலருக்கு இருளாகவும் ஒரு சிலருக்கு மட்டுமே ஒளிமயமானதாகவும் இருக்கும். அதனால் அதற்கான திட்டமிடல்கள் ஒவ்வொருவருக்கும் அவசியமாகின்றது.

அரசு எவ்வாறான சூழலானாலும் வர்த்தக நிறுவனங்களின் நலனையே முன்நிறுத்தும். இன்றும் இந்த கொரோனா காலத்திலும் ரெஸ்ற் அன் ரேர்ஸ் திட்டத்தை அரசிடம் உள்ள அனுபவம் மிக்க 40க்கும் அதிகமான வைரோலொஜி ஆய்வுகூடங்களுக்கு வழங்காமால் தனியார்களிடமே கையளித்துள்ளது. பிரிக்ஸிறின் போது ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அரசு தனியார் நிறுவனங்களிடம் கடற்பாதைப் போக்குவரத்தை கையளித்தது. அவ்வாறு செய்யப்பட்ட ஒப்பந்தங்களில் ஒன்றுதான் ‘சீப்புரோன்’ நிறுவனத்துடன் செய்யப்பட்ட ஒப்பந்தமும். ஆனால் ‘சீப்புரோன்’ னிடம் ஒரு பெரி – ferry கூட இருக்கவில்லை. அதனிடம் அது பற்றிய திட்டமும் இருக்கவில்லை. ஆனால் அரசு பல மில்லியன் ஒப்பந்தத்தை அந்நிறுவனத்துடன் கடந்த ஆண்டு மேற்கொண்டது.

மேலும் இந்த ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்ட போது ஈரோ ரணல்க்கு அதில் கலந்துகொள்வதற்கு சந்தர்ப்பம் அளிக்காததால் 33 மில்லியன் பவுண்கள் நஸ்ட்டஈட்டை அரசு வழங்கியது. ஆனால் பாடசாலைகளில் உள்ள பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு விடுமுறை காலத்திலும் உணவு வழங்குவதற்கான வவுச்சரை வழங்க அரசு மறுத்துவிட்டது. அதற்கான செலவு 5 மில்லயன் பவுண் மட்டுமே. இவ்வாறு தான் அரசு வினைத்திறன் அற்று செயற்படுகின்றது.

கோவிட்-19 தாக்கத்தனால் ஏனைய நோயாளிகள் வைத்திய சேவைகளைப் பெறுவதை தவிர்த்து வருகின்றனர். அதனால் எதிர்காலத்தில் அவர்களது உடல்நிலை மோசமடையவும் விரைவில் மரணத்தை எட்டவும் வாய்ப்பு உள்ளது. மேலும் கோவிட்-19 அபாயநிலை பற்றி மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பிரித்தானியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் பொருளாதார வீழ்ச்சியின் பக்கக விளைவுகளால் 700,000 பேர்களின் ஆயுட்காலம் குறைவடையும் அதாவது அவர்கள் விரைந்து மரணத்தை தழுவுவார்கள் என மதிப்பிட்டுள்ளது.

நீண்டகால தனிமைப்படுத்தல்களும் கை கழுவுதல் மற்றும் சுகாதார நடைமுறைகளும் கூட எதிர்காலத்தில் எமது உடலின் நோய் எதிர்ப்புத் தன்மையயை வலுவிழக்கச் செய்யும். ஏனைய வைரஸ் மற்றும் பக்ரீரியா போன்ற நுண் கிருமிகளின் தாக்கத்திற்கு நாம் ஆளாக வாய்ப்பளிக்கும். எமது உடலானது நுண் கிருமிகளைப் பற்றிக்கொள்ளும் போதே தனது நோய் எதிர்ப்பு சக்தியயை வளர்த்துக்கொள்கின்றது. இதுவொரு இயற்கை வக்சின் போன்றது. நீண்டகால தனிமைப்படுத்தலும் அதீத சுகாதாரப் பழக்கங்களும் நாங்கள் நோய்கிருமிகளுக்கு முகம் கொடுப்பதைத் தவிர்க்கும். அவ்வாறு நீண்ட காலத்திற்கு நோய்க்கிருமிகளில் இருந்து எமது உடலைப் பாதுகாத்து வந்தால் எமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி வலுவிழக்கும். மேலும் மனநலம் சார்ந்த பிரச்சினைகளையும் இந்தத் தனிமைப்படுத்தல்கள் ஊக்குவிக்கின்றது.

இதுவொரு மிகுந்த நெருக்கடியான கால கட்டம். இதனை கையாள்வதற்கு ஒவ்வொருவரும் பழகிக்கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தங்களது நடைமுறைசார்ந்த பிரச்சினைகளைக் கையாள்வதற்கு தங்களை இசைவாக்கிக் கொள்ள வேண்டும். தங்களை இசைவாக்கிக் கொள்ள முடியாதவர்களே பெரும்பாலும் கூடுதல் பிரச்சினைக்கு ஆளாகின்றனர். முடிவெடுக்கும் ஆற்றல் என்பது ஒவ்வொருவருடைய நுண் திறன்சார்ந்தது. அதனை வளர்த்துக்கொண்டு சமயோசிதமாக முடிவெடுக்க வேண்டும்.

ஒவ்வொருவருக்கும் ஏற்படும் பிரச்சினைகளையும் பல வழிகளில் தீர்க்க முடியும். ஆனால் அந்ததந்த் தீர்வுகளை ஏற்றுக்கொள்ள அவர்கள் தயாராக இருப்பதில்லை. அதனால் அவர்கள் தவறான முடிவுகளை எடுக்கின்றனர். அதன் விளைவால் கூடுதல் துன்பத்திற்கு ஆளாகின்றனர். நாங்கள் ஒவ்வொரு முடிவையும் எடுக்கின்ற போது, நாங்கள் தவிர்கக்கின்ற முடிவுகளால் ஏற்டுகின்ற நன்மை தீமைகளையும் ஆராய்ந்து; உணர்ச்சித் தூண்டலால் முடிவெடுக்காமல் அறிவுபூர்வமாக முடிவெடுத்தால், நாம் எமது முடிவுகளில் வெற்றி பெறுவதங்கான வாய்ப்புகள் அதிகம்.

பாடசாலைகளும் பல்கலைக்கழகங்களும் கொரோனாவின் சமூகப் பரம்பலின் முக்கிய இடங்களாகும். அங்கு சமூக இடைவெளியயை ஏற்படுத்துவது அசாத்தியமான ஒன்று. பல்கலைக்கழகங்களைப் பொறுத்தவரை அவர்கள் பெரும்பாலும் வீட்டில் இருந்து கற்கும் ஒன்லைன் கல்விக்குச் சென்றதால் பல்கலைக்கழகங்களில் நோய் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. ஆனால் பாடசாலைகளைப் பொறுத்தவரை மாணவர்கள் பாடசாலைக்கு வந்தே கல்வியயைத் தொடருகின்றனர். இந்நோய் பரம்பலை கட்டுப்படுத்துவதாக இருந்தால், அரசு தற்போது வந்த அரைத்தவணை விடுமுறையோடு பாடசாலைகளை நான்கு வாரங்களுக்கு மூடி, இதனைக் கட்டுப்படுத்தி இருக்க முடியும். இப்போது அரைத்தவணை முடிந்து, பெரும்பாலான பாடசாலைகள் திங்கட்கிழமை மீள ஆரம்பிக்கும். ஆகையால் நோய்பரம்பலை அரசு எதிர்பார்க்கின்ற அளவுக்கு கட்டுபாட்டுக்குள் கொண்டுவர முடியாது. தொழிற்கட்சி உட்பட அரசுக்கு பலர் எடுத்துக்கூறியும்; ஏனைய அதிகாரப்பகிர்வு செய்யப்பட்ட அரசுகள் விரைந்து செயற்பட்ட போதும்; பொறிஸ் ஜோன்சன் அரைத்தவணைக் காலத்தை வீணடித்துக்கொண்டார். இனி மரணங்கள் எகிறி மருத்துவமனைகள் நிரம்பிவழிய ஆரம்பிக்கவே அவர் பாடசாலைகள் மூடுவது பற்றி சிந்திப்பார். இது நோய்க்கிருமி பரவலை அதிகரிப்பதுடன், அதனை கட்டுப்படுத்துவதற்கான காலத்தையும் அதிகரிக்கும். விரைந்து செயற்படாததால் கூடுதலான கற்பித்தல் காலங்கள் வீணடிக்கப்படும்.

இன்றுள்ள இந்த பிரித்தானிய பிரதமரையும் அமெரிக்க ஜனாதிபதியயையும் அன்று தெரிவு செய்கின்ற போது மக்கள் சிந்தித்து ஆராய்ந்து உணர்ச்சிகளுக்கு இடம்கொடாமல் அறிவுபூர்வமாக முடிவெடுத்து இருந்தால் இந்தப் பேரழிவு இவ்வளவு மோசமானதாக அமைந்திருக்காது. மக்கள் எடுத்த அரசியல் முடிவுக்கு அவர்கள் தற்போது கொடுத்துக்கொண்டிருக்கின்ற இந்த விலை மிக அதிகமானதே. அதற்கு அவர்கள் இனிவரும் காலங்களில் கொடுக்கப் போகின்ற விலை இன்னும் அதிகமாக இருக்கும். போது கொடுத்துக் கொண்டிருக்கின்ற இந்த விலை மிக அதிகமானதே. அதற்கு அவர்கள் கொடுக்கப் போகின்ற விலை இன்னும் அதிகமாக இருக்கும்.

ரஷ்யாவின் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு குறித்து நாங்கள் ஆலோசித்து வருகிறோம் – இஸ்ரேல்

ரஷ்யா கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பு மருந்து  கொரோனாவுக்கு உண்மையில் தீர்வாக இருக்குமென்றால் பேச்சுவார்த்தைக்கு நுழைய தயார் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

ரஷ்யா கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பு மருந்து  பாதுகாப்பற்றது என்ற குற்றச்சாட்டை ரஷ்ய ஜனாதிபதி புடினும்,அவரது சுகாதாரத் துரை அமைச்சகமும் இன்று மறுத்தது. இந்த நிலையில் ரஷ்யாவின்  கொரோனா தடுப்பு மருந்து தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு தயார் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இஸ்ரேல் சுகாதாரத் துறை அமைச்சர் கூறும்போது, “ கொரோனா தடுப்பு மருந்து  தொடர்பாக அனைத்து அறிக்கைகளையும் கண்காணித்து வருகிறோம். கொரோனா தடுப்பு மருந்து  தொடர்பாக ரஷ்யாவின் கண்டுபிடிப்பு குறித்து நாங்கள் ஆலோசித்து வருகிறோம். இது கரோனாவுக்கு உண்மையில் தீர்வாக இருக்கும் என்று நாங்கள் நம்பினால், பேச்சுவார்த்தைகளிலும் நுழைய முயற்சிப்போம். ஆனால் நாங்கள்யாரையும் ஏமாற்ற விரும்பவில்லை. எங்கள் பணியாளர்கள் இது குறித்து தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸுக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு பல்வேறு நிலையை எட்டியுள்ளன. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், அமெரிக்காவின் கேய்சர் போன்ற நிறுவனங்கள்தான் கொரோனா  தடுப்பு மருந்தின் 3-வது கட்டத்தில் நுழைந்து மனிதர்களுக்கான கிளினிக்கல் பரிசோதனையை தீவிரப்படுத்தியுள்ளன.

இந்த சூழலில் கொரோனா  வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக ரஷ்யா நேற்று அறிவித்தது. உகிலேயே முதல்நாடாக கரோனாவுக்கு தடுப்பு மருந்தை ரஷ்யா கண்டுபிடித்துள்ளதாக அந்நாட்டின் அதிபர் விளாதிமிர் புடின் அறிவித்தார்.

ரஷ்யாவின் கமலேயா தேசிய ஆய்வு மையம் மற்றும் தொற்றுநோய் தடுப்பு மற்றும் நுண்ணுயிரியல் பிரிவு ஸ்புட்னிக்-5 எனும் கொரோனா தடுப்பு மருந்தை தயாரித்துள்ளது.

வெளிநாடுகளில் சிக்கியிருந்த ஒரு தொகை இலங்கையர்கள் நாடு திரும்பினர்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இரண்டு நாடுகளில் சிக்கியிருந்த 373 பேர் இன்றையதினம் நாடு திரும்பியுள்ளனர்.

இவர்களுள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் தொழிலுக்காக சென்று நாடு திரும்ப முடியாமல் இருந்த 332 பேர் இன்று (02) அதிகாலை இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.

அதேபோல் உயர் கல்விக்காக இங்கிலாந்துக்கு சென்று நாடு திரும்ப முடியாமல் இருந்த 41 இலங்கை மாணவர்களும் நாடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள வணிகக் கப்பலில் பணிப்புரிவதற்காக 13 வெளிநாட்டு மாலுமிகளும் இன்று நாட்டுக்கு வருகைத்தந்துள்ளனர். அவர்கள் கட்டாரில் இருந்து இலங்கையை  வந்தடைந்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவமனைகளில் சிறுபான்மையின பணியாளர்களுக்கு பாதுகாப்பு அங்கிகளைப் பெறுவதில் சிரமம்!

பிரித்தானிய மருத்துவமனைகளில் பணியாற்றிய ஆசிய ஆபிரிக்க இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு பாதுகாப்பு அங்கிகளைப் பெறுவதில் பெரும்பான்மை யினத்தவர்களைக் காட்டிலும் சிக்கல்கள் இருந்ததாக குற்றச்சாட்டுகள் வெளிவந்துள்ளது. மருத்துவமனைகளில் கோவிட்-19 தாக்கத்தினால் இறந்தவர்களில் ஆசிய ஆபிரிக்க சிறுபான்மையினரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதை அடுத்தே அதனை அறிவதற்கான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டு இருந்தது. இன்று வெளிவநதுள்ள அறிக்கையில் ஆசிய ஆபிரிக்க சிறுபான்மையின பணியாளர்கள் பாதுகாப்பு அங்கிகளைப் பெறுவதில் கூடுதல் தடைகள் காணப்பட்டமை சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.

இங்கிலாந்து மருத்துவமனைகளில் 44 விதமான மருத்துவர்களும் 22 வீதமான மருத்துவ தாதிகளும் ஆசிய ஆபிரிக்க இனத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்த சனத்தொகையில் இவர்கள் 14 வீதத்தினரே.

மேலும் கோவிட்-19 தாக்கத்தில் ஆசிய ஆபிரிக்க இனத்தோர் கூடுதலாக மரணமடைவதற்கு ஆவர்கள் மத்தியில் கூடுதலாகக் காணப்படும் ஏனைய நோய்க்காரணங்களும் காரணமாக உள்ளது. அதைவிடவும் அவர்களுடைய பொருளாதார நிலை, ஒரே வீட்டில் மூன்று தலைமுறையினர் வரை ஒன்றாக வாழ்வது, பொருளாதார நிலைகாரணமாக வீடுகளில் கூடுதலான எண்ணிக்கையானோர் வாழ்வது போன்றனவும் ஆசிய ஆபிரிக்க சிறுபான்மைச் சமூகங்களில் கோவிட்-19 தாக்கம் அதிகமாகக் காணப்படுவதற்கு காரணமாக உள்ளது.

பிரித்தானியாவில் கொரோனா வைரஸிற்கு பலியானவர்கள் 50,000 யை தாண்டிவிட்டது!

– பழம் பிடுங்கவும் ஆட்களில்லை வைத்தியம் பார்க்கவும் ஆட்களில்லை. சேர்ந்து வாழவும் தயாரில்லை –

பிரித்தானியாவில் கொரோனா வைரஸிற்குப் பலியானவர்கள் அரசு இன்று வெளியிட்டுள்ள எண்ணிக்கையைக் காட்டிலும் இரட்டிப்பானது என்பதே மிகக் கசப்பான உண்மை. இதுவரை அரசு மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் என்று அடையாளம் காணப்பட்டவர்கள் இறக்கின்ற போதே கொரோனா வைரஸினால் இறந்தவர்கள் எனப் பதிவு செய்கின்றனர். வயோதிபர் இல்லங்களில் மரணமடைந்தவர்கள் நேற்றுவரை இப்பட்டியலில் சேர்க்கப்படவில்லை. ஆனால் இன்று முதல் வயோதிபர் இல்லங்களில் கொரோனா வைரஸ் காரணமாக மரணமடைபவர்களும் இப்பட்டியலில் சேர்க்கப்படுகின்றனர். கொரோனா வைரஸ் காரணமாக நேற்றுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 26,097 என்றே அரசு அறிவித்து உள்ளது.

அப்படியானால் 50,000 பேர் என்ற கணிப்பு எப்படி வந்தது என்பது முக்கியம். பதிவு செய்யப்படும் ஒவ்வொரு மரணமும் ஓஎன்எஸ் – Office for National Statistics புள்ளிவிபரத்திற்கு வந்தடையும். அதன்படி கடந்த ஆண்டுகளில் மார்ச் ஏப்ரல் மாதங்களில் ஏற்பட்ட மரணங்களுக்கும் இந்த ஆண்டு மார்ச் ஏப்ரல் மாதங்களில் ஏற்பட்ட மரணங்களுக்கும் இடையே உள்ள எண்ணிக்கை வேறுபாடே 50,000 பேர் கோவெட்-19 காரணமாக நிகழ்ந்துள்ளது என்பதை உறுதிப்படுத்துகின்றது.

அப்படியானால் அரச புள்ளி விபரம் எப்படி இந்த இருட்டடிப்பைச் செய்தது என்ற மற்றுமொரு கேள்வி எழுவது தவிர்க்க முடியாதது. அரசு ஏற்கனவே வீடுகளிலும் வயோதிபர் பராமரிப்பு இல்லங்களிலும் நிகழும் மரணங்களை கோவிட்-19 எனப் பதிவு செய்வதை தவிர்க்கின்ற வகையில் கடுமையான பதிவுமுறைகளை மேற்கொண்டுள்ளது. அதனால் பொதுமருத்துவர்கள் வயோதிபர்களின் மரணத்தைப் பதிவு செய்கின்ற போது கோவெட்-19 அல்லாத காரணங்களால் (chronic conditions such as heart disease, cancer, stroke, diabetes, and Alzheimer’s disease) மரணம் சம்பவித்ததாக பதிவு செய்கின்றனர். மேலும் கோவெட்-19 ரெஸ்ட் மேற்கொள்ளப்படாத நிலையில் இந்த மரணங்கள் கோவெட்-19 அல்லாத காரணங்களால் நிகழ்ந்ததாகவே பதிவு செய்யப்படுகின்றது.

மற்றுமொரு தொகை மரணங்கள் கோவெட்-19 அல்லாத காரணங்களினால் தூண்டப்படுகின்றது. குறிப்பாக புற்றுநோய், மாரடைப்பு, மற்றும் உயிராபத்து ஏற்படுத்தும் நோய்களைக் கொண்டவர்கள் மருத்துவமனைக்கு செல்வதைத் தவிர்த்து வருகின்றனர். மேலும் மருத்துவ வளங்கள் மனிதவளம் உட்பட கோவெட்-19க்கு திசை திருப்பப்பட்டு உள்ள நிலையில் பல அவசர சத்திர சிகிச்சைகள் கூட பிற்போடப்பட்டு உள்ளது. இவைகளும் கூட மரண எண்ணிக்கையை அதிகரிக்கின்றது. அரச அறிவிப்புகளிலேயே 25 வீதமான கூடுதலான மரணங்கள் நிகழ்வதை உறுதிப்படுத்தி உள்ளது.

பத்து ஆண்டுகள் கொன்சவேடிவ் ஆட்சியில் பிரித்தானிய மருத்துவத்துறை மிகப்பலவீனமான நிலையில் இருந்த போதே கோவெட்-19 ஆபாயத்திற்கு முகம் கொடுத்தது. அப்போது 50.000 வெற்றிடங்கள் நிரப்பப்படாத நிலையிலேயே பிரித்தானிய சுகாதார சேவைகள் கோவிட்-19 உடனான தனது போரை ஆரம்பித்தது. தற்போது உலகின் வறிய நாடுகளில் இருந்து மருத்துவ தாதிகளை வரவழைப்பதற்கான கட்டுப்பாடுகளை உள்துறை அமைச்சர் பிரித்தி பட்டேல் தளர்த்தி உள்ளார். அவ்வாறான மருத்துவ தாதிகளையும் மருத்துவர்களையும் வரவழைக்க முயற்சிக்கும் உள்துறை அமைச்சர் அவர்களின் குடும்பங்களை அழைத்து வருவதற்கான கட்டுப்பாடுகளை தொடர்ந்தும் இறுக்கமாகவே வைத்துள்ளார்.

பழம் பிடுங்கவும் ஆட்களில்லை வைத்தியம் பார்க்கவும் ஆட்களில்லை. ஆனால் மற்றையவர்களோடு சேர்ந்து வாழவும் தயாரில்லை என்ற நிலையில் பிரித்தானிய கொன்வேட்டிவ்கள் செயற்பட்டு வருகின்றனர். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வீம்போடு வெளியேறியவர்கள் இப்போது எல்லாவற்றுக்கும் மற்றவர் கைகளை எதிர்பார்க்கின்றனர்.

பிரித்தானியாவில் கோவிட்-19 தமிழர்களுக்கான உதவிச் சேவை

தமிழர்களுக்கான உதவிச்சேவை ஒன்று அண்மையயில் ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. கோவிட்-19 நெருக்கடியான இக்காலகட்டத்தில் வீட்டில் இருந்தவாறே தொலைபேசி மூலமாக உங்களுக்கு வேண்டிய ஆலோசனைகளை தங்களால் வழங்க முடியும் என இவ்வமைப்பினர் தங்கள் இணையத் தளத்தில் குறிப்பிட்டு உள்ளனர். குறிப்பாக மருத்துவ ஆலோசணைகள் மனநலம் சார்ந்த மருத்துவ ஆலோசணைகள் இன்று குறிப்பாகத் தேவைப்படுகின்ற அரச உதவித் திட்டங்கள் பற்றிய ஆலோசணைகள், சட்ட ஆலோசணைகள், கல்வி தொடர்பான ஆலோசணைகள் சுகாதார சேவைகள் பற்றிய ஆலோசணைகளையும் இவர்கள் தமிழிலேயே உரையாடி வழங்கக் காத்திருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

எமது நினைவுவெளிகளுக்கு அப்பால் நடந்துதுகொண்டிருக்கும் மிகப்பெரும் நெருக்கடியான நிலையில் இவ்வாறான ஆலோசணைகளும் உதவிகளும் வழிகாட்டல்களும் நிச்சயம் பலருக்கும் உதவியாக அமையலாம்.

இவ்வமைப்பை மருத்துவர் புவிநாதன் முன்னெடுத்துள்ளார். ஆலோசணைகளை வழங்குபவர்கள்: கணக்கியல் பால முரளி, ஆனந்தன் ஆர்நோல்ட், மருத்துவம் – மருத்துவர்கள் புவிநாதன், கவன், செல்வராணி பத்மபாஸ்கரன், தாரணி சிறிசற்குணம், ஹிமா புவிநாதன், சமூக சுசாதாரசேவை – ராஜேஸ்வரி சுப்பிரமணியம், அரச உதவித் திட்டங்கள்: கௌரி பரா

அவர்களுடைய தொடர்பு விபரங்கள்:

http://tamilshelpline.org/

United Kingdom
02035001573
07525050010

Medical@tamilshelpline.org
immigration@tamilshelpline.org
lawyer@tamilshelpline.org
business@tamilshelpline.org
finance@tamilshelpline.org
benefits@tamilshelpline.org
youth@tamilshelpline.org
community@tamilshelpline.org
housing@tamilshelpline.org

Opening Hours
Monday – Friday
09:00 – 18:00

Saturday
09:00 – 18:00

Sunday
10:00 – 16:00

சிறுவர்கள் மத்தியில் புதிய நோய்த் தாக்கம் கவனத்தில் கொள்வதற்காக: தேவையேற்படின் மருத்துவ உதவியை நாடவும்!

அண்மைய நாட்களாக சிறுவர்கள் மத்தியில் புதிய நோய்த்தாக்கம் ஒன்று ஏற்ப்ட்டு வருவதாகவும் அதனால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் ஐசியு இல் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் என்எச்எஸ் அறிவித்து உள்ளது. சிறார்களின் உடலில் வித்தியாசமான தாக்கம் தென்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாடுமாறு என்எச்எஸ் அறிவித்துள்ளது.

இது கோவிட்-19இன் தாக்கமா இல்லையா என்பதனை உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் பாதிக்கபட்ட சிறார்களில் கோவிட்-19 வைரஸ் இருந்துள்ளதாகவும் அச்செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது. உடலில் புள்ளி புள்ளி வீக்கங்கள் அவதானிக்கப்பட்டு உள்ளது.

நாட்டு மக்களுடைய நலனை முன்நிறுத்தியே லொக்டவுன் தளர்வு! பொருளாதாரத்தை வைத்தல்ல!

காச்சலும் கொரோனாவும் அவனவனுக்கு வந்தால் தான் தெரியும் அதன் வலி. இது இப்போது பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சனுக்கு நல்லாகவே உறைத்திருக்கிறது. காலம் கடந்த ஞானம் என்றாலும் இப்பவாவது ஞானம் பிறந்தது நல்லதே. நாட்டு மக்களுடைய நலனை முன்நிறுத்தியே ‘லொக்டவுன்’யைத் தளர்த்துவது பற்றிய முடிவுகள் எடுக்கப்பட்டும் என்றும் பொருளாதாரத்தையும் மக்கள் நலனையும் ஒப்பிட்டு முடிவு எடுக்கப்பது தவறானது என்றும் தற்போது கருத்து தெரிவித்து உள்ளார். இதனை முன்னரே உணர்ந்து இருந்தால் எத்தினையாயிரம் உயிர்களைக் காப்பாற்றி இருக்கலாம்

நாட்டின் அரசியலில் எவ்வித அக்கறையும் இல்லாமல் இராமன் ஆண்டால் என்ன இராவணன் ஆண்டாலென்ன எதுவும் மாறாது என்று பீற்றிக்கொண்டிருக்கும் ஜென்மங்களுக்கு இப்போதாவது ஏதாவது உறைத்திருக்குமா?

கொரோனா வைரஸ் ஆய்வுக்கான அழைப்பு உங்களுக்கும் வரலாம்

பிரித்தானியாவில் உள்ள சிலருக்கு இந்த கொரோணா வைரஸ் தொடர்பான ஆய்வை மேற்கொள்வதற்கான கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட உள்ளதாக ஓஎன்எஸ் – ONS Office for National Statistics தெரிவித்துள்ளது. இதுவொரு கருத்துக் கணிப்பு அல்ல. இந்தக் கடிதம் வந்தால் அக்கடிதத்தை உதாசீனம் செய்ய வேண்டாம். முதற்கட்டமாக பிரித்தானியாவில் உள்ள 20,000 பேருக்கு இக்கடிதம் அனுப்பி வைக்கப்பட இருக்கிறது. அதன்படி கொரோனா வைரஸ் சுவப் ரெஸ்ற்றும் அன்ரிபொடி ரெஸ்ற்றும் மேற்கொள்ளப்படும். இந்த ரெஸ்ற்றும் அரசினால் அறிவிக்கப்பட்டுள்ள பிரதான பணியாளர்களுக்கான ரெஸ்ற்றும் ஒன்றல்ல. இந்த ரெஸ்ற்றும் கேள்விக்கொத்தும் கொரோணா வைரஸ் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் எவ்வாறு பரவி இருக்கிறது, நடைமுறைப்படுத்தப்பட்ட வீட்டிலே இருக்கப் பணித்த கட்டுப்பாடுகள் என்ன தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது போன்ற தகவலை அச்சொட்டாக அறிவதற்கு இவ்வாய்வு மேற்கொள்ளப்படுகிறது.

மேலும் ஓஎன்எஸ் இல் இருந்து கடிதம் பெற்றுக்கொண்டவர்கள் சம்மதிக்கும் பட்சத்தில் அவர்களை வாரா வாரமும் மாதத்திற்கு ஒரு தடவையும் அடுத்த வருடம்வரையும் தொடர்ச்சியாக ரெஸ்ற் செய்து கொரோனா வைரஸ் தாக்கத்தின் பின் அது மீண்டும் தொற்றுமா, தொற்றுக்குப் பின் ஏற்படும் நோய் எதிர்ப்பு எவ்வளவு காலத்திற்கு வலுவானதாக இருக்கும் என்பனவற்றையும் இந்த ஆய்வு உறுதிப்படுத்தும் என எதிர்பார்க்கின்றது. அதனால் படிப்படியாக கூடுதலானவர்கள் ரெஸ்ற்றுக்கும் வினாக்கொத்தை நிரப்பவும் மாதம் மாதம் அழைக்கப்படலாம். ஆகவே இக்கடிதங்கள் தொடர்பில் சிரத்தை கொள்ளவும்.