சஜித் பிரேமதாச

சஜித் பிரேமதாச

பயங்கரவாத தடுப்புச் சட்டமூலத்தை அன்றி ஊழல் ஒழிப்பு சட்டமூலமே நாட்டுக்கு அவசியமானது – சஜித் பிரேமதாச

பயங்கரவாத தடுப்புச் சட்டமூலத்தை அன்றி ஊழல் ஒழிப்பு சட்டமூலத்தையே அரசாங்கம் துரிதமாக கொண்டு வர வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இதன் ஊடாக பன்டோரா பத்திரங்கள் ஊடாக அம்பலப்படுத்தப்பட்ட ஊழல்வாதிகள் மற்றும் கடந்த காலங்களில் பல்வேறு ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்த முடியும் என தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், இவ்வாறு குறித்த சட்டமூலத்தைக் கொண்டுவருதன் மூலம் ஊழல்வாதிகளை உரிய முறையில் தண்டிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஆனால் தற்போது அரசாங்கம் ஊழல்வாதிகளை பாதுகாக்கும் சட்டமூலத்தையே கொண்டுவர முனைவதாகவும் அதன் ஊடாக தமது உற்ற ஊழல்வாதி கூட்டாளிகளை அரசாங்கம் பாதுகாப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் கைச்சாத்திட்ட எந்த உடன்படிக்கையையும் நான் மதிக்க மாட்டேன்.” – சஜித் பிரேமதாச

மக்களின் ஆணையைப் பெறாத ஜனாதிபதி தலைமையிலான தற்போதைய அரசாங்கம் செய்துள்ள எந்தவொரு உடன்படிக்கையையும் நிறைவேற்றுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி கட்டுப்படவில்லை என தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பொது பேரணியில் உரையாற்றிய சஜித் பிரேமதாச இதனை தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) உடன்படிக்கையில் கைச்சாத்திட வேண்டியது அவசியம். ஆனால் ஒப்பந்தங்கள் நேராக இருக்க வேண்டும். அத்தகைய ஒப்பந்தங்கள் மாத்திரமே தேசத்திற்கு நன்மை பயக்கும்.

எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் மற்றும் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கமும் சர்வதேச நாணய நிதியத்தை திருப்திப்படுத்துவதற்கு அனைத்தையும் செய்து வருகின்றது.  எந்தவொரு நிபந்தனைகளுக்கும் இணங்கவும் அவர்கள் தயாராகவுள்ளனர்.

தேசத்தின் குடிமக்களின் ஆணையைப் பெறாத ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்துடன் கைச்சாத்திடப்பட்ட எந்தவொரு உடன்படிக்கையையும் மதிக்க எனது  கட்சி கடமைப்பட்டிருக்காது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் பரவலை கட்டுப்படுத்த சிங்கப்பூர் சட்டங்களை உடன் அமுல்படுத்துங்கள் – சஜித் பிரேமதாச

போதைப்பொருள் பரவலை ஒழிப்பதற்கு சிங்கப்பூரில் அமுல்படுத்தப்படும் சட்டங்கள் இலங்கையிலும் உடனடியாக அமுல்படுத்தப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இன்று நாவுலவில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாடும் பாடசாலை முறையும் போதைப்பொருளால் நிரம்பியுள்ளதாகவும், நாட்டின் சட்ட முறைமைகள் திருத்தப்பட்டு நீதித்துறை உடனடியாக பலப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

டிஜிட்டல் தொழில்நுட்ப முறைகளை நோக்கி கல்வி முறையை மாற்றியமைத்து புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும்.

பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்வதற்குப் பதிலாக அதிகாரிகள் பாடசாலை மாணவர்களின் பைகளை சோதனையிடும் அதேவேளை இலங்கை போதைப்பொருள் மையமாக மாறி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலைகளுக்குள் இருந்து போதைப்பொருள் கடத்தல் இடம்பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் உள்ள புகையிலை நிறுவனங்களிடமிருந்து அரசாங்க அதிகாரிகள் பல்வேறு சலுகைகளை பெற்று வருவதாகவும், எனவே சிகரெட்களுக்கு வரி விதிக்காமல் பொதுமக்களுக்கு வரி விதிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“தமிழ் தேசியக் கூட்டமைப்பை அரசியலமைப்புப் பேரவைக்கு அழையுங்கள்.”- சஜித் பிரேமதாச

தமிழ் தேசியக் கூட்டமைப்பை அரசியலமைப்புப் பேரவைக்கு அழையுங்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நேற்று முன்தினம் இடம்பெற்ற சர்வ கட்சி கலந்துரையாடலின் போது அதிபர் மற்றும் கட்சித் தலைவர்கள் முன்னிலையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“அரசியலமைப்பு பேரவைக்கு நியமிக்கப்பட வேண்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதித்துவத்தை உடனடியாக வழங்க வேண்டும்.

வடக்கு – கிழக்கு சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்குத் தேவையான சந்தர்ப்பங்களை வழங்க வேண்டும்.

பன்முகத்தன்மையின் அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்துவதற்கு ஒருபோதும் வாய்ப்பளிக்கக் கூடாது” – எனத் தெரிவித்துள்ளார்.

“எமது அரசாங்கத்தில் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும்.”- சஜித் பிரேமதாச

“ஒற்றையாட்சிக்குள் அனைத்து இன மக்களும் ஒன்றாக வாழக்கூடிய அதிகார பகிர்வை ஏற்படுத்துவோம்.”  என எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் இரண்டாவது  கட்சி சம்மேளனம் கொழும்பு – கெம்பல் மைதானத்தில் இன்று 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

கோட்டா கோஹோம், பசில் கோஹோம் என்கிற பெரிய புரட்சியை ஐக்கிய மக்கள் சக்தி செய்தது. குறுகிய காலத்துக்குள் பதிவு செய்யப்பட்டுக் கடந்த பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு பாரிய வெற்றி கிடைத்தது.

இவ்வாறான நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியை அழிக்க கோழைகள் சதி செய்கிறார்கள். ரணசிங்க பிரேமதாஸவின் மகனான சஜித் பிரேமதாஸ இருக்கும் வரையில் ஐக்கிய மக்கள் சக்தி மீது கைவைக்க எவருக்கும் இடமளிக்கமாட்டேன்.  எங்களை அழிக்க நினைப்பவர்கள் மக்களோடு இணைந்து எங்களை அழித்து தோற்கடித்துக்காட்டுங்கள்.

அரசாங்கத்துக்குள்ள தீர்வு மின், நீர் கட்டணங்களை அதிகரிப்பதல்ல. நாட்டின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கத்திடம் எந்தவிதமான தீர்வுகளும் இல்லை. நட்டமடையும் அரச நிறுவனங்கள் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பது உண்மை.

அதற்காக அரச நிறுவனங்களின் ஊழியர்களைக் கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ள முடியாது. அவர்களின் தொழில் உரிமை பாதுகாக்கப்படவேண்டும் . அரச, ,  தனியார் கூட்டுமுயற்சிகளின் ஊடாக நட்டமடையும் அரச நிறுவனங்களை இலாபமடையச் செய்யலாம் .

மேலும் இனப் பிரச்சினைக்கு தீர்வாக ஒற்றையாட்சிக்குள் பிளவுபடாத இலங்கைக்குள்,  அதிகாரங்களைப் பகிர நடவடிக்கை எடுப்போம். அதேபோல் இளைஞர்கள், பெண்கள், சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அரசியலமைப்பில் அடைப்படை உரிமைக்குள் சேர்ப்போம்.  மக்களுக்கு எதிரான தீர்மானங்களுக்காக மக்களோடு ஒன்றிணைந்து வீதிக்கு இறங்குவதற்கு இந்த அரசாங்கத்திடம் ஒருபோதும் அனுமதி கேட்டுக்கொண்டிருக்கப்போவதில்லை.

மேலும் எமது அரசாங்கத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட்டு தேசியப் பாதுகாப்பை உறுதி செய்யக்கூடியப் புதியச் சட்டம் கொண்டுவருவோம். லசந்த விக்ரமதுங்க, பிரகீத் எக்னெலிகொடவை தாராளவாதிகள் மறந்துவிட்டனர். ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியில் அவர்களுக்கு நீதி கிடைக்கும்.

நாட்டிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணங்களை மீள நாட்டுக்குக் கொண்டுவருவேன். அத்துடன் சட்டம் ஒழுங்கை ஏற்படுத்தவும் ஊழல் மோசடிகளை இல்லாதொழிக்கவும்  பீல்ட்மார்ஷல் சரத்பொன்சேகா தலைமையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

போராட்டத்தால் கைதுசெய்யப்பட்ட போராட்டக்காரர்கள் பக்கமாக ஐக்கிய மக்கள் சக்தி நிற்பது மாத்திரமன்றி, போராட்டக்காரர்களால் முன்னெடுத்தப் புரட்சியை கையில் எடுத்து எதிர்காலத்தை நோக்கி பயணிப்போம்

எனவே வங்குரோத்து அடைந்துள்ள நாட்டை கட்டியெழுப்ப முடியுமான நாட்டுக்கு உள்ள ஒரே தீர்வு, ஒரே மாற்றம் ஐக்கிய மக்கள் சக்தி மாத்திரமாகும். அதனால் புதிய அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்த மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவேண்டும். அதற்காக அரசாங்கம் ஆரம்பமாக உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்தவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

சட்டவிரோதமாக கட்சியின் தலைமையை சஜித் பிரேமதாச பெற்றுள்ளார் – அமைச்சர் டயானா கமகே மனுத்தாக்கல்!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்புரிமை மற்றும் பதவிகளை வகித்து வருவது கட்சியின் அரசியலமைப்புக்கு எதிரானது என இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மனு தாக்கல் செய்துள்ளார்.

இதன்படி, சஜித் பிரேமதாச மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகிய இருவரையும் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, ஜனாதிபதி சட்டத்தரணி உதித்த இகலஹேவா ஊடாக கொழும்பு மாவட்ட நீதிமன்றில் இந்த மனுவை தாக்கல் செய்திருந்ததுடன், சஜித் பிரேமதாச மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் தொடர்ந்தும் ஐக்கிய தேசியக் கட்சியின் அங்கத்தவர்களாக நீடிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு ஆதாரமாக டயானா கமகே, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரிடமிருந்து சத்தியக் கடதாசியையும், ஐக்கிய தேசியக் கட்சியின் ஒழுக்காற்று நடவடிக்கையை சவால் செய்ய ரஞ்சித் மத்தும பண்டார மேற்கொண்ட நீதித்துறை நடவடிக்கையையும் தனது மனுவில் ஆதாரமாக முன்வைத்துள்ளார்.

, ஒரு கட்சி உறுப்பினர் மற்றொரு கட்சியின் உறுப்பினராக இருந்தால், அவர் அல்லது அவள் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்புரிமையை இழக்க நேரிடும் என ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியலமைப்பின் அத்தியாயம் 3 இன் பிரிவு 3 (3) குறிப்பிடுகிறது

சஜித் பிரேமதாச மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகிய இருவருமே ஐக்கிய மக்கள் சக்தியின் அங்கத்துவத்தை வைத்திருப்பதும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் பதவிகளை வகிப்பதும் சட்டவிரோதமானது என்ற தீர்ப்பை வழங்குமாறு டயானா கமகே நீதிமன்றத்தை கோரியுள்ளார்.

மனுவை பரிசீலித்ததன் மூலம் மேற்படி பதவிகளில் இருப்பவர்களை இடைநிறுத்த உத்தரவிடுமாறும் டயானா கமகே கோரிக்கை விடுத்துள்ளார்.

தேசிய கொள்கைகளை தொடர்ந்து முன்னெடுக்கவே பிரதமர் தலைமையில் தேசிய சபை – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

“இந்த நாட்டில் கட்டுமானத் துறையில் தேசிய கொள்கை ஒன்று இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன்  தற்போதைய ஜனாதிபதி செயற்படுகிறார்.” என  நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நேற்று (29) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது தேசிய கொள்கையொன்று தயாரிக்கப்பட இருந்தது ஆனால் அது நிறைவேற்றப்படவில்லை, அது நிறைவேறும் போது தற்போதைய அரசாங்கம் ஆதரிக்கும் என்றும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளைகள் 27 (2) இன் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பதிலளிக்கும் போதே அவர் நேற்று (29) இதனைத் தெரிவித்தார்.

அங்கு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் கூறியதாவது:

“தற்போதைய பொருளாதார நெருக்கடியில் கட்டுமானத் துறைக்கு இறக்குமதி கட்டுப்பாடு காரணமாக தேவையான பொருட்கள் தட்டுப்பாடு மற்றும் செயற்கை விலை உயர்வு போன்ற காரணங்களால் அதற்கு தீர்வாக வரையறுக்கப்பட்ட கட்டிடப் பொருட்கள் கூட்டுத்தாபனம் மூலம் அமைச்சரவை மற்றும் நிதி அமைச்சின் ஒப்புதலுடன் தனிப்பட்ட இறக்குமதியாளர்கள் மூலம் கட்டுமானத் துறைக்கான சிமெண்ட் மற்றும் தரை ஓடுகள் இறக்குமதி செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, கட்டிடப் பொருள்கள் கூட்டுத்தாபனத்தினால் இறக்குமதியாளர்களைப் பதிவுசெய்து, சீமெந்து மற்றும் தரை ஓடுகளை இறக்குமதி செய்தது. இதை இந்த ஆண்டு இறுதி வரை அமுல்படுத்த அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்டது மற்றும் அடுத்த ஆண்டு (2023) டிசம்பர் வரை அது நீட்டிக்கப்பட அமைச்சரவையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பண விரயம் ஏற்படாத வகையில் செய்யக்கூடிய ஏற்கனவே உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட செயற்திட்டங்களை செயல்படுத்துவதற்காக நிதி வரையரைகளுக்கு ஏற்ப அவற்றைப் பயன்படத்துவதற்காக முகாமை செய்யப்பட்டது.

அதற்கான நிதியைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்புக்கேற்ப சேவை வழங்குனர்கள் குறித்த அமைச்சின் அனுமதியைப் பெற்று திறைசேரியில் உடன் பேச்சுவார்த்தை நடத்தி தற்போதைய சந்தை விலை மற்றும் கட்டம் கட்டமாக வேலைகளை முடித்து துரிதமாக வேலைத்திட்டங்களை முடிப்பதற்கு முயற்சி எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.இது தொடர்பாக அமைச்சரவையின் முடிவு (22/0789/540/002) அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது.

ஒப்பந்ததாரர்கள் மற்றும் அந்தத் துறையைச் சார்ந்த கட்டுமானப் பணியாளர்களைப் பாதுகாப்பதற்காக சலுகைகளை வழங்குவதற்கு கட்டளையிடப்பட்டுள்ளது. விலை ஏற்ற இறக்கத்தின் போது ஒப்பந்தக்காரர்களின் பாதுகாப்புக் கருதி குறித்த கட்டணங்களைப் பெற்றுக் கொள்வதற்குத் தேவையான வழிகாட்டல்கள் ஒப்பந்தக்காரர்கள் மற்றும் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு (CIDA) அரசின் ஒழுங்கமைப்பு அதிகார சபையின் மூலம் வழங்கப்பட்டிருக்கின்ற போதிலும் அந்த விலைகள் மேம்படுத்தப்பட்டு குறித்த முறையில் கொடுப்பனவுகளைச் செய்வதற்காக marketing bulletin ஒப்பந்தக்காரர்களின் திருப்தியைப் பெற்றுக் கொள்ளுமளவில் இருக்க வேண்டும் என்று தயாரிக்கப்பட்டு மாதாந்தம் மேம்படுத்தப்பட்டு வெளியிடப்படுகின்றது.

ஒப்பந்தக்காரர்கள் மற்றும் சேவை வழங்குனர்களின் உடன்படக்கூடிய கொடுப்பனவுகளை செய்வதற்காக சுற்றறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டு அமைச்சரவை மட்டத்தில் முன்வைக்கப்பட்டது, கட்டுமானங்களை முடிவுக்கு கொண்டுவரும் போது விலையில் உள்ள ஏற்ற இறக்கங்களில் ஏற்பட்ட நஷ்டங்களைத் தவிர்த்துக் கொள்வதற்காக அதற்கு உள்ளடக்கப்பட்டிருந்த வரையறைகளை நீக்குவதற்கு மற்றும் ஒப்பந்த காலம், ஒப்பந்தத்தின் வகை மற்றும் நிச்சயமற்ற செலவுகள் என்பவற்றுக்காக ஒதுக்கப்பட்ட தொகைகளை கருத்திற் கொள்ளாமல் ஒப்பந்தங்களை முடிவுக்கு கொண்டு வருவதற்காக CIDA சூத்திரத்தின் மீது அமைந்த சகல செயற்திட்டங்களையும் உண்மையான விலைகளை ஏற்ற இறங்களுக்கு ஏற்ப கொடுப்பதற்கு CIDA கட்டளைகளின் கீழ் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.

ஒப்பந்ததாரர்கள் மற்றும் அவர்களின் நிதிக்கு முன் முடிக்க வேண்டிய வேலையின் அளவு சிரமங்களை கவனத்தில் கொண்டு தயாரிக்கப்பட்ட முன்னுரிமை ஆவணங்கள் திறைசேரிப் பணத்திலும் கையில் பில்களாக வழங்கப்பட்டது. தற்போது பணம் செலுத்தும் அடிப்படையில் பணம் செலுத்தப்படுகிறது. அரசாங்கம் மாறும் போது நாட்டின் அபிவிருத்தித் திட்டங்களை மாற்றுவது பொருத்தமற்றது என்பதை நாமும் ஏற்றுக் கொள்கிறோம். இதற்கு ஒரு குறிப்பிட்ட வழிமுறை மற்றும் தேசிய கொள்கை தேவை அதை ஏற்றுக்கொள்வதும், அதில் திருப்தி அடையாமல் இருப்பதும், நாம் செய்யக்கூடியது இன்னும் அதிகம் அதற்கான வழிமுறைகளில் நமது அமைச்சு செயல்பட்டு வருகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இத்திட்டங்களை பாதியில் நிறுத்துவதில் பொதுமக்களுக்கு இதோ ஒப்பந்ததாரர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அநீதி இழைக்கப்படுவது வெறுக்கத்தக்கது.

நிச்சயமாக முடிக்க ஒப்பந்தங்களை வலுப்படுத்துதல் மற்றும் அவற்றிலிருந்து எழும் பிரச்சினைகளை விரைவாகத் தீர்ப்பதற்கான வழிமுறைகளை நடைமுறைப்படுத்துதல் மற்றும் புதுப்பிப்பை நாங்கள் புரிந்துகொள்கிறோம். இதற்கான நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபையால் சட்டத்தை வலுப்படுத்துவதை நாங்கள் ஏற்கனவே செய்து வருகிறோம். நடுவர் மன்றம், இதில் மத்தியஸ்தம், சமரசம் ஆகியவை உள்ளன. செயல்பாடுகளுக்காக வர்த்தமானிகள் மற்றும் பங்குதாரர்களுடன் இணைந்து பணியாற்றினர். அடுத்த ஆண்டு முதல் பாதியில் அந்த நடவடிக்கைகள் முடிக்க வேண்டும். இங்கே இந்த சர்ச்சைகளுக்கு தீர்வு காண்பதே எங்கள் நோக்கம் அதற்கு முன், கட்டுமானத் தொழிலை அதிகப்படியான தீர்வுக்கு உட்படுத்தாமல் இது சட்டத்துடன் தொடர்புடைய பங்குதாரர்கள் ஒப்புக் கொள்ளும் முறையைக் குறிக்கிறது. அது ஏற்கனவே கட்டுமானச் சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள நடுவர் செயல்முறைக்கு அதிகாரம் அளிக்கிறது. எமது அமைச்சு மிகவும் சம்பிரதாயமான தொலைநோக்கு பார்வையுடன் செயற்பட்டு வருகின்றது. அரசின் முடிவுகளால் அரசின் அபிவிருத்தித் திட்டங்களை மெதுவாகச் செய்து வருகிறோம். நாட்டின் தற்போதைய பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு நாம் அனைவரும் இந்தப் பிரச்சினையைப் புரிந்து கொள்வோம்.

இந்தத் திட்டங்கள் இந்த அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படுகின்றன. குறைந்தபட்ச எண்ணிக்கையிலான திட்டங்கள் மிக உயர்ந்த தரத்தில், குறைந்தபட்ச விரயம் நிறைவேற்றுவதே நமது அமைச்சு முன்னுரிமை அளித்துள்ள முக்கிய பிரச்சினைகளாகும். இதற்காக எங்கள் அமைச்சின் கீழ் CIDA நிறுவனத்தைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளர்கள் திறன்களை தரப்படுத்துதல் மற்றும் கட்டுமானத்தின் தரத்தை மேம்படுத்துதல், தற்போதுள்ள கட்டுமானத் தொழில்கள் பொருத்தமான கைவினைஞர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அபிவிருத்திச் சட்டம் இயற்றப்பட்டு அதில் சேர்க்கப்பட்டது, ஆனால் இதுவரை காலதாமதமானது பில்டர்கள் மற்றும் திறமையான பில்டர்கள் (கைவினைஞர் & மாஸ்டர் கைவினைஞர்) எனது தலைமையில் இரண்டு வாரங்களுக்கு முன்பு வரிசைப்படுத்தப்பட்டது.

இவைவகையினால் வேலை இழக்கும் கைவினைஞர்களுக்கு வாழ்வாதாரம் ஒருங்கிணைப்புக்கு மதிப்பு கூட்டல் மற்றும் நடப்பது குறைவாக உள்ளது. கட்டுமானங்களும் அதிக மதிப்பைச் சேர்க்கின்றன. இந்த வகையில் கட்டுமான தொழிலில் ஈடுபடுபவர்களின் திறன்கள் சிறப்பாக மதிப்பிடப்படுகின்றன எனவே, துறையில் பணிபுரியும் பணியாளர்கள் தங்கள் திறமைகளை உயர்த்தி காட்டியுள்ளனர். அவர்கள் இலங்கைத் துறையில் அல்லது வெளிநாட்டில் இருக்கிறார்கள். அதனால் ஒரு புறம் மக்களுக்காக அரசாங்கத்தால் கட்டப்பட்ட கட்டமைப்புகள் உயர் தரம் மற்றும் குறைந்த நாசித் தன்மை கொண்டவை. அதனால் ​​இலங்கை பணியாளர்கள் தொடர்ந்து பலப்படுத்தப்பட வேண்டும். தொழில்நுட்ப அடையாள அட்டைகள் வழங்கும் பணி நவம்பர் 10ஆம் திகதி தொடங்கப்பட்டது. இந்த பலன்களை அது ஏற்கனவே அறுவடை செய்யத் தொடங்கிவிட்டது. இவை செயலுக்கான வழிமுறைகளை உருவாக்குதல் தனியார் பொது நிறுவனங்களை அடையாளம் காணுதல் அடுத்த மாதம் அரசு மற்றும் தனியார் ஒன்றிணைந்து தொடங்கும்நடவடிக்கைகள் முடிந்த பிறகு வர்த்தமானியில் வெளியிடப்படும்.

வெளிநாடுகளில் கட்டுமானத் துறையில் தொழில்வாய்ப்புகளுக்காக Trade Certificate என்ற சொற் பிரயோகம் பயன்படுத்தப்பட்டிருக்கின்ற போதும் இங்கு எங்களுடைய நாட்டின் கட்டுமானத் துறை அபிவிருத்தி சட்ட மூலத்தின் கட்டுமானத்துறை திறமைசாலிகளை பதிவுசெய்யப்பட்ட அடையாள அட்டை வழங்கப்படும் முறை நடைமுறையில் இருக்கின்றது. இங்கு Trade Certificate என்பது அடையாள அட்டையின் உள்ளடக்கமாகும். CIDA நிறுவனத்தால் மிக இறுக்கமான சட்ட திட்டங்களின் கீழ் Skill Test மற்றும் அதற்கு சமனான CIDA யினால் வழங்கப்பட்டிருக்கும் Certificate & Merit Certificate ஊடாக Trade Certificate யை விட தரமான அங்கீகாரமுள்ள முறைக்கேற்ப எமது அமைச்சினால் ஏற்கனவே அடையாள அட்டை வழங்கப்படுவது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

கௌரவ சபாநாயகர் அவர்களே, இந்த நாட்டிற்கு ஒரு தேசிய கொள்கை உள்ளது என்பதை நான் கூற விரும்புகின்றேன். இப்போது நாம் ஒரு தேசிய கொள்கையை உருவாக்க முன்வந்துள்ளோம். ஜனாதிபதி அதற்காக வேலை செய்கிறார். அதற்கு பாராளுமன்றம் பிரதமர் தலைமையில் தேசிய சட்டமன்றம் நிறுவப்பட்டுள்ளது. தேசிய சபையின் கீழ் இரண்டு குழுக்கள் செயல்படுகின்றன. ஒருவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க எம்.பி. தலைமையிலான பொருளாதார ஸ்திரப்படுத்தல் குழு. இரண்டாவது குழு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் தேசிய கொள்கை குழு. ஆனால், காலத்துக்குக் காலம் அரசுகள் மாறும் என்பதை அவருக்கு நினைவூட்ட விரும்புகிறேன் நாட்டின் கொள்கைகள் மட்டுமன்றி அபிவிருத்தித் திட்டங்களும் இடைநிறுத்தப்பட்டன.

முன்பு ஒரு காலத்தில். உதாரணமாக போர்ட் சிட்டி திட்டம்/ மத்திய அதிவேக நெடுஞ்சாலை வீதி / கட்டுநாயக்க விமான நிலைய விரிவாக்கத்தின் இரண்டாம் கட்டம் / மஹிந்தோதய பள்ளி திட்டங்களை நினைவூட்ட விரும்புகிறேன். எதிர்க்கட்சித் தலைவர் பல ஆண்டுகளாக பாராளுமன்றத்தில் இருக்கிறார். உங்களுடைய அப்பாவும் பல வருடங்கள் பாராளுமன்றத்தில் இருந்தார். உங்களின் தேசிய அரசாங்கம் இருந்தது. இவற்றை அந்தக் காலத்திலேயே செய்திருக்கலாம். நீங்கள் மைத்திரிபால ஜனாதிபதியின் சிறந்த சிறப்பு சீடர். உங்கள் எல்லா நல்ல விஷயங்களிலும் நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம். அந்த சவாலை நீங்கள் ஏற்கவில்லை. நானும் உங்களிடம் வந்து ஏற்றுக் கொள்ளுமாறு அழைத்தேன். மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவரை பாதுகாப்புக் குழுவுக்கு வரச் சொல்லவில்லை. ஆனால் நீங்கள் எல்லாவற்றிற்கும் கொண்டு வந்தது. அப்போது இந்த விஷயங்களைப் பரிந்துரைத்திருக்கலாம். இப்போது இன்று அந்த விஷயங்கள் செய்யப்படுமானால், அதற்கு உதவ வேண்டும் என்று நான் நம்புகிறேன்.” என்றும் கூறினார்.

“மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவேன்.”- சஜித் பிரேமதாச

மலையக மக்களுக்கு ரணசிங்க பிரேமதாச, குடியுரிமையை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்தார். அது ஒரு திருப்பு முனையாக அமைந்தது. அதேபோல மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் சிறுதோட்ட உடமையாளர்களாக்கப்படுவார்கள். அதன்மூலம் ஏற்றுமதி பொருளாதாரமும் மேம்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்தார்.

எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் “பிரபஞ்சம்” எனும் திட்டத்தின் கீழ் கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் அமைந்துள்ள கேம்பிரிட்ஜ் கல்லூரிக்கு இன்று (29) காலை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பாடசாலை பஸ் ஒன்றினை வழங்கி வைத்தார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் வேண்டுகோளுக்கு இணங்க, இந்த பஸ் கையளிக்கப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்கும் திட்டம் தொடர்பில் சிலர் விமர்சனங்களை முன்வைத்தனர். சாத்தியமில்லை எனவும் கதை கட்டினர். அது தவறு, எமது ஆட்சியில் நிச்சயம் சிறுதோட்ட உரிமையாளர்கள் உருவாக்கப்படுவார்கள். ஏற்றுமதி துறையில் புரட்சி இடம்பெறும். தேயிலை பயிரிடக்கூடிய இடங்களை திரிசு நிலங்களாக வைப்பதில் பயன் கிட்டாது.

பெருந்தோட்ட மக்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவேன் என நான் கூறியபோது, எனக்கு எதிராக மொட்டு கட்சியினர் சேறுபூசினர். ஏளனம் செய்தனர் இவர்கள்தான் உரத்துக்கு தடை விதித்து, பெருந்தோட்டத்துறைக்கு பெரும் தீங்கு விளைவித்தனர். பெருந்தோட்ட மக்களை இருளுக்குள் தள்ளிய இவர்கள்தான், இனவாதத்தை கையில் எடுத்தனர். பெருந்தோட்ட மக்களை மட்டுமல்ல ஒட்டு மொத்த நாட்டு மக்களையுமே இவர்கள் குழிக்குள் தள்ளினர்.

இவ்வாறு நாட்டு மக்களை துன்பத்துக்குள் தள்ளிவிட்டு, சாம்பல் மேட்டியில் இருந்து மீண்டெழுவோம் என தற்போது சூளுரைத்து வருகின்றனர். நாட்டை சாம்பலாக்கிவிட்டுதான் அவர்கள் மீண்டெழ பார்க்கின்றனர். அவர்களின் மீள் எழுச்சி மக்களின் கைகளில்தான் உள்ளது என்பதை மறந்துவிடக்கூடாது.

நாட்டு வளங்களை சூறையாடிய, நாட்டை வங்குரோத்து அடைய செய்து, தமது குடும்பத்தை செல்வந்தர்களாக்கியவர்களுக்கு மீண்டெழும் வாய்ப்பை மக்கள் வழங்குவார்களா?

நாட்டில் தற்போது உள்ள அரசாங்கமும் வங்குரோத்து அரசாங்கம்தான். அதனால்தான் மக்கள்மீது வரிசுமை திணிக்கப்படுகின்றது. எமது நாட்டில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம் எமது ஆட்சியில் மீளப்பெறப்படும். களவாடப்பட்ட சொத்துகள் நாட்டுக்கு கொண்டுவரப்படும். இதற்கு தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

பண்டோராவில் கூறப்பட்ட வெளிநாடுகளில் உள்ள டொலர்களை இலங்கைக்கு கொண்டு வாருங்கள் – எதிர்க்கட்சித் தலைவர்

மோசடி தொடர்பாக பண்டோராவில் வெளியான தகவலின் அடிப்படையில் வெளிநாடுகளில் உள்ள டொலர்களை இலங்கைக்கு கொண்டுவருமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அவ்வாறு நாடு இழந்த பில்லியன் கணக்கான டொலர்களை கொண்டுவருவதன் மூலம் டொலர் தட்டுப்பாட்டை சரி செய்யலாம் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இதன் மூலம் மருந்துப்பொருட்கள் தட்டுப்பாடும், டொலர் நெருக்கடியும் தீர்க்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு செய்யாமல் சீனா, இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடம் கடன் வாங்குவது பிரச்னைக்கு தீர்வாகாது என்றும் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.

அரச வளங்களும் அரச சொத்துக்களும் மீட்கப்பட வேண்டும் என்றாலும் தற்போதைய அரசாங்கம் அதற்காக செயற்படும் என்ற நம்பிக்கை இல்லை என எதிர்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

உலகம் முன்னோக்கிச் சென்றாலும் இலங்கை ஓரிடத்தில் அசையாமல் நிற்கிறது – சஜித் பிரேமதாச

உலகம் முன்னோக்கிச் சென்றாலும் எமது நாடு ஓரிடத்தில் அசையாமல்  நிறுத்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

வெல்லவாய தனமல்வில சபைக் கூட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தற்போதைய ஜனாதிபதியும், அரசாங்கமும் ஒரே இடத்தில் சுழன்று கொண்டிருக்க, உலகம் முன்னோக்கிச் செல்கிறதென அவர் தெரிவித்துள்ளார்.

நாடு ஓரிடத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் நாட்டின் எதிர்காலம் குறித்த புரிதல் அவர்களுக்கு இல்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையிலும் எதிர்க்கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி மக்களுக்காக பல பணிகளை செய்துள்ளதாகவும் அதற்கு சக்வாலா மற்றும் காஸா திட்டங்கள் சிறந்த எடுத்துக்காட்டு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.