பிரபாகரன்

பிரபாகரன்

“பிரபாகரன் உயிரோடு இருந்தால் முஸ்லீம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கேட்பேன்.” மௌலவி அப்துல் மஜீத் !

“ஒழிந்து தான் பிரபாகரன் வாழ்ந்திருந்தால், அது  அவருக்கு தான் அவமானம்.” என ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் தமிழக மூத்த அரசியல் தலைவர் பழ நெடுமாறன் தெரிவித்த கருத்துத் தொடர்பில் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

“தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருப்பதாக இந்தியாவில் உள்ள தமிழக தலைவர்கள் சிலர் கூறுவதை மறுப்பதற்கில்லை. அவர் உயிருடன் இருந்தால் நல்லது தான். அதாவது இதுவரை காலமும் நன்றாக அனுபவங்களை அனுபவித்திருப்பார்.

போராட்டம் என்பது தற்போது சாத்தியப்படாது என ஒழிந்து இருந்திருப்பார். இப்படி ஒழிந்து தான் பிரபாகரன் வாழ்ந்திருந்தால், அது  அவருக்கு தான் அவமானம். அவர் அவ்வாறு திரும்பி வந்தால் ஜனநாயகத்திற்கு வந்து தேர்தல்கேட்டு நாடாளுமன்றத்திற்கு வாருங்கள் என கேட்பேன்.

அவ்வாறு நாடாளுமன்றம் அவர் வருகின்ற சந்தரப்பத்தில் அநீதி இழைக்கப்பட்ட முஸ்லிம்களுக்கான நீதியை முஸ்லிம் கட்சிகள் உட்பட நானும் அவரிடம் கேட்பேன். பிரபாகரனோ அல்லது தமிழ்த்தேசிய கூட்டமைப்போ முஸ்லிம்களுக்கு எந்தவொரு தீர்வினையும் இனியும் பெற்று தரமாட்டார்கள் என்பதும் எமக்கு தெரியும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட இதர கட்சிகள் நாடாளுமன்றத்தில் இருந்தும் கூட முஸ்லிம் மக்களுக்கான தீர்வுகள் எதுவும் கிடைக்கவில்லை. பிரபாகரன் இனி வந்து என்ன தர போகின்றார். அவராலும் அது முடியாது.

நேதாஜி, அஸ்ரப் போன்றோர் இறந்த போதிலும் இவ்வாறு அவர்கள் உயிருடன் திரும்பி வருவார்கள் என மக்கள் மத்தியில் கதைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன.

அது போன்று தான் பிரபாகரனின் விடயமும் கதையாக வெளிவந்துள்ளது. ஆனால் பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் என்றால் அவர் ஒழித்து கொண்டிருக்கின்றார் என்பதில் எனக்கு எவ்வித நம்பிக்கையும் இல்லை என குறிப்பிட விரும்புகின்றேன்”  எனவும் தெரிவித்துள்ளார்.

“புலிகளின் தலைவர் பிரபாகரன் ஐரோப்பா சென்றுவிட்டார்!” அறிவிக்க தஞ்சாவூர் முள்ளிவாய்கால் முற்றத்தில் கூட்டம்!! இந்தியாவின் இரட்டை வேடம் யாழ்ப்பாணத்தில் கலாச்சார மையம் தமிழகத்தில் புலிக்கு மீண்டும் ஆயுதப் பயிற்சி? !!!

இச்செய்தி எழுதப்பட்டுக்கொண்டிருக்கும் போது, நல்ல சேதி வருகுது.. நல்ல சேதி வருகுது.. என்று அறிவித்தபடி தமிழக புலித்தேசியவாதத் தலைவர்கள் தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் முற்றத்தை நோக்கி விரைந்து கொண்டுள்ளனர் என தேசம்நெற்க்கு கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. பழ நெடுமாறன், குளத்தூர் மணி, வைக்கோ, கோவை ராமேஸ் என புலித்தேசிய ஆதரவாளர்கள் பலரும் இந்த ஊடகச் சந்திப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இன்னம் சில மணி நேரங்களில் இடம்பெறவுள்ள இச்சந்திப்பில் பழ நெடுமாறன் “புலிகளின் தலைவர் பிரபாகரன் ஐரோப்பா சென்றுவிட்டார்!” என்றும் “போராட்டம் மீண்டும் ஆரம்பிக்க உள்ளது” என்றும் தஞ்சாவூர் முள்ளிவாய்கால் முற்றத்தில் அறிவிக்க உள்ளார். இக்கூட்டத்தில் கலந்துகொள்ள காசி ஆனந்தன் நேற்று காலையே பயணமாகி விட்டதாகவும் தேசம்நெற்க்கு தெரியவருகிறது. இந்த மாநாட்டின் பின்னணியில் 2009 இற்குப் பின் புலிகள் பலவாகச் சிதறுண்டதில் ஒரு பிரிவினரான ஐரோப்பாவில் செயற்படும் ரிசிசி அமைப்பிலிருந்த சிலரே இதனைத் தூண்டிவருவதாகத் தெரியவருகிறது.

இது தொடர்பாக கேப்பிரிட்ஜில் உள்ள வரலாற்று மையத்தைச் சேர்ந்த வி ஜெயாத்தன் விடுத்துள்ள அறிக்கையில் இதுவொரு புனைவு மோசடி என்றும் இதற்கு யாரும் ஒத்துழைக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர். இது பற்றி ரிசிசி உறுப்பினர் தகவல் தருகையில் தம்மோடு இருந்த சிலரே இச்செயலில் ஈடுபட்டு இருப்பதாகவும் இந்நபர்கள் 1990 களுக்கு முன் இந்திய இராணுவத்துடனான தமது இயக்கத்திற்கு ஏற்பட்ட மோதலின் பின்னர் வந்தவர்கள் என்றும் சுவிஸ்நாட்டில் தற்போது வதியும் அப்துல்லா என்ற இயக்கப் பெயரைக் கொண்ட ஒருவருமாக நால்வர் இவ்விடயத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இன்னும் சில மணிநேரங்களில் நடைபெறவுள்ள இக்கூட்டத்திற்கு புலிகளின் ஆலோசகராக இருந்து இறுதியுத்தத்தில் தமிழகம் வந்து சேர்ந்த பிரபாகரனின் அரசியல் ஆலோசகர் மு திருநாவுக்கரசு கலந்துகொள்ளமாட்டார் என்று அவருடைடய அணியில் நிற்கும் தியாகராஜா திபாகரன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். மு திருநாவுக்கரசுவின் கருத்தியலுடன் அதாவது, இந்திய உளவுத்துறையாடு இணைந்து செயற்பட்டு; இந்தியாவின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த உதவுவதன் மூலம், இலங்கைத் தமிழர்களுக்கு சாதகமான ஒரு தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும் என இத்தரப்பில் உள்ள விரல்விட்டு எண்ணக் கூடிய நபர்கள் நம்புகின்றனர். இவர்கள் இந்திய உளவுத்துறையோடு வெளிப்படையாக தங்களை அடையாளம் காட்டி வருகின்றனர்.

இந்த இந்திய ரோ சார்பு அணியின் முன்னணிச் செயற்பாட்டாளர்களாக மு திருநாவுக்கரசுடன் லண்டனைச் சேர்ந்த நிலா தற்போது சிலகலமாக இந்தியாவில் தங்கியுள்ளார், லண்டன் வரலாற்று மையத்தின் ஆயூட்கால உறுப்பினர் திபாகரன் மற்றும் மயூரன் ஆகியோர் உள்ளனர். நிலா தற்போது தமிழக்தில் இருந்தாலும் அவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொள்ளப் போவதில்லை எனத் தெரியவருகின்றது.

முள்ளிவாய்க்கால் முற்றத்தை ஏற்படு செய்யும் பழ நெடுமாறன் தலைமையிலான குழவினரும் இந்திய உளவுத்துறையுடன் செயற்படுபவர்களாக இருந்த போதும், முன்னைய குழவினரைப் போல வெளிப்படையாக தங்களை இந்திய உளவுத்துறையினருடன் அடையாளப்படுத்துவதில்லை.

“பிரபாகரன் ஐரோப்பாவிற்கு வந்துவிட்டார், அவர் நிதி நெருக்கடியில் இருக்கின்றார், அவர் போராட்டத்திற்கு ஆதரவு கேட்கின்றார்” என்ற கதைகள் சில வாரங்களாகவே ஐரோப்பாவில் உலா வந்துகொண்டுள்ளது. இதன் உச்ச கட்டமாக பிரபாகரன் சுவிஸில் சிலரின் வீடுகளுக்கு சென்று விருந்துபசாரத்தில் கலந்துகொண்டதாகச் செய்திகள் பரப்பப்பட்டது. அதற்கும் மேலாக முஸ்லீம் பெண்களைப் போன்று பர்தா அணிந்த பெண்ணை சிலர் வீடுகளுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பாதுகாப்புச் சிக்கல்கள் காரணமாக தன்னை அடையாளப்படுத் முடியாது என மதிவதனி என் போர்வையில் வந்தவர் தெரிவித்தாகவும் தேசம்நெற்றுக்கு தெரியவருகிறது.

இந்தச் சந்திப்புகளின் மூலம் வர்த்தகப் புள்ளிகள் 150,000 பவுண்கள் வரை அன்பளிப்புச் செய்ததாகவும் அவர்கள் ஒரு மில்லியன் பவுண் வரை சேர்க்கத் திட்டமிட்டு இருப்பதாகவும் தேசம்நெற்க்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்பின்னணியில் சற்று பெரிய தொகையை வழங்க விருப்பம் தெரிவித்த லண்டன் வர்த்தகர் துவாரகாவை தான் சந்திக்க வேண்டும் என்று கோரி இருக்கின்றார். அதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டு இருந்தது. துவாரகாவைத் தெரிந்திராத அந்த வர்த்தகரும் துவாரகாவைச் சந்தித்த போது துவாரகாவை அழைத்து வந்தவரைப் பார்த்து “துவாரகாவிற்கு வாகனம் ஓட்டக் கற்றுக்கொடுத்தது யார்?” என்று கேட்க துவாரகாவை அழைத்துவந்தவர் ஒரு தளபதியாகவிருந்த ஆண் போராளியின் பெயரைச் சொல்லியுள்ளார்.

சற்று விசயம் அறிந்த இந்த வர்த்தகர் துவாரகாவைச் சந்திக்க வருவதற்கு முன்னரேயே பேர்மிங்ஹாமில் உள்ள ஒரு மூத்த பெண் போராளியுடன் தொடர்பு கொண்டு தான் எப்படி அவர் துவாரகா என்பதை உறுதிப்படுத்த முடியும் என்று கேட்டுள்ளார். ஏனெனில் மதிவதனி போல் அவரும் முக்காடு போட்டுக்கொண்டு வருவார் என்றே அவர் எண்ணினார். அவ்வாறே நடந்தது. அப்பெண் போராளி தான் அந்தக் கேள்வியைக் கேட்குமாறு இந்த வர்த்தகருக்கு கூறியிருந்தார். ஏனெனில் இப்பெண் போராளித் தளபதியே துவாரகாவுக்கு வாகனம் ஓட்டக் கற்றுக் கொடுத்தவர். துவாரகா விடயத்தில் அவர்கள் ஏமாற்றியதை உணர்ந்த அந்த வர்த்தகர் வந்தவர்களுக்கு பணம் கொடுக்கவில்லை.

இந்த நிதி சேகரிப்பை முடுக்கி விடவே முள்ளிவாய்க்கால் முற்றம் கூட்டப்படுகிறது. இதில் “ உலகத் தமிழர்களுக்கு இன்பச் செய்தி, இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே காத்திருந்ஙகள்… !” என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி குறும்செய்தி அனுப்பி வைக்கின்றது.

பெப்ரவரி 11இல் யாழ்ப்பாணத்தில் கலாச்சார மண்டபத்தைத் திறந்து வைத்த இந்தியா 48 மணி நேரத்திற்குள்ளாக “புலிகளின் தலைவர் பிரபாகரன் ஐரோப்பா சென்றுவிட்டார்!” என்று தெரிவிக்க உள்ளனர். இந்த அறிவிப்பு ஒன்றும் எழுந்தமானதாக நடைபெறவில்லை. இதற்கு பணம் புரட்டுவது மக்களை ஏமாற்றுவது தான் என்ற காரணமும் இருக்க முடியாது. இது இந்திய உளவுத்தறையான ரோ இன் ஆசீர்வாதம் இல்லாமல் சாத்தியமில்லை. தேசம்நெற்க்கு கிடைக்கும் மற்றுமொரு தகவல் இந்திய உளவுத்துறையினர் தமிழீழ விடுதலைப் புலிகளின் சிலருக்கு ஆயதப் பயிற்சிகள் வழங்கி வருவதாகத் தெரிவிக்கின்றது. புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழர்களிடம் சேர்க்கப்படும் இந்நிதி இலங்கையில் தேவைப்படும் போது வன்முறையைத் தூண்டி இந்திய அரசின் ஆளுமையை மேலும் ஸ்தீரணப்படுத்த பயன்படும் எனத் தெரியவருகின்றது. ஈஸ்ரர் குண்டுவெடிப்புக் கூட பயிற்சிகள் தொடர்புகள் எல்லாமே இந்திய மண்ணிலேயே நடந்துள்ளது. எங்கு எப்போது வெடிக்கும் என்பதனைக்கூட இந்தியா தெரிந்துவைத்திருந்தது.

எண்பதுக்களின் நடுப்பகுதியில் யாழ்ப்பாணத் தமிழ் இளைஞர்களை உசுப்பேற்றிய தமிழரசுக் கட்சி தனக்கேற்பட்ட தோல்வியில் இருந்து மீள தன் வாக்கு வங்கியைப் பலப்படுத்த தமிழீழக் கோரிக்கையை ஒரு துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தியது. ஆனால் அந்தச் சீட்டை அதன் பின் இந்தியாவே மிகத் திட்டமிட்ட முறையில் பயன்படுத்தி சிங்களவர்களைப் படுகொலை செய்ய (அனுராதபுரம், கொக்கிளாய், நாயாறு படுகொலைகள்) புலிகளைத் தூண்டி இனமுரண்பாட்டை திட்டமிட்டுத் தூண்டியது. ஆயத அமைப்புகளுக்கு பயிற்சி அளித்து போராட்ட களத்தில் இறக்கியது ஒன்றும் தமிழர்களின் மீதான கரிசனையினால் அல்ல என்பதை காலமும் நிரூபித்துவிட்டது.

அன்றையைக்காட்டிலும் இன்று இலங்கையின் அமைவிடம் உலக வர்த்தகப் போக்குவரத்தில் முக்கியத்துவமானதாக உள்ளது. அதனால் சீனாவும் இந்தியாவும் இலங்கையை ஆளுமை செலுத்துவதில் கங்கணம் கட்டி உள்ளனர். இந்தப் போட்டியில் இந்தியா கலாச்சார மையத்தையும் கட்டித்தரும், தேவைப்பட்டால் அதனைக் குண்டு வைத்தும் தகர்க்கும். இந்தியாவுக்கு செம்பு தூக்குவதற்கு நான் முந்தி நீ முந்தி என்று அரசியல் தலைவர்கள் போட்டி போட்டு களமிறங்கிவிட்டனர். இப்போது இவர்களோடு ஆறுதிருமுருகன், கம்பவாருதி ஜெயராஜ் என்று ஒரு பெரும் கூட்டமே அள்ளுப்படுகின்றது.

அடுத்த முறை அண்ணாமலை மோடியின் சிறுநீரைக் கொண்டு வந்து கோமயம் என்று தெளித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அன்று இலங்கையில் இன வன்முறையைத் தூண்டிவிட்ட இந்தியா இன்று மத வன்முறையையும் தூண்டிவருகின்றது. சமூக வலைத்தளங்களிலும் வாய்வார்த்தைகளிலும் என்றுமிலாத அளவுக்கு மதவாத நாற்றம் மோடியின் கோமயத்தின் நாற்றத்தையும் மிஞ்சி நிற்கின்றது.

விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை தேசியத்தலைவர் என குறிப்பிடதால் குழம்பியடித்த சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர் !

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை தேசிய தலைவர் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், குறிப்பிட்டதை அடுத்து  நாடாளுமன்றத்தில் குழப்ப நிலை ஏற்பட்டது.

இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

இலங்கை நாடாளுமன்றத்தில் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான குழு நிலை விவாதத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா, தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் போதைவஸ்து கடத்தலில் ஈடுபட்ட ஒருவர் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதனை மறுக்கும் வகையில் இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், ”தேசிய தலைவர்” என்ற பதத்தை பயன்படுத்தினார்.

இதன்போது பெண் ராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல எழுந்து, பயங்கரவாத தலைவர் ஒருவரை இலங்கையின் நாடாளுமன்றத்தில் தேசிய தலைவர் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று குறிப்பிட்டார்.

அத்துடன் நாடாளுமன்ற குறிப்பேட்டில் இருந்து செல்வராஜா கஜேந்திரனின் கருத்துக்களை நீக்குமாறும் சீத அரம்பேபொல கோரிக்கை விடுத்தார்.

இதன்போது சபைக்கு தலைமை தாங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் கருத்துரைத்த போது,

அது நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரனின் உரிமை என்று குறிப்பிட்டார். எனினும் கஜேந்திரனின் கருத்தை நாடாளுமன்ற குறிப்பேட்டில் இருந்து நீக்குவது தொடர்பில் தாம் சபாநாயகருக்கு தெரியப்படுத்துவதாகவும் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து ஏனைய ஆளும் கட்சி உறுப்பினர்களும் தேசிய தலைவர் என்ற பதத்தை நாடாளுமன்ற குறிப்பேட்டில் இருந்து நீக்கவேண்டும் என்று சபைக்கு தலைமை தாங்கிய உறுப்பினரிடம் கோரிக்கை விடுத்தனர்.

எனினும் அதனை சபைக்கு தலைமை தாங்கிய உறுப்பினரான வேலுக்குமார்  ஏற்றுக்கொள்ள மறுத்ததுடன், தமக்கிருக்கும் அதிகாரத்தின் அடிப்படையில், இந்த விடயத்தை சபாநாயகருக்கு அறிவிக்க மாத்திரமே முடியும் என்று குறிப்பிட்டார்.

இதற்கு மத்தியில் உரையாற்றிய, நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பல்வேறு கருத்துக்கள் இருக்கமுடியும். எனினும் அந்த கருத்துக்களை ஏனைய உறுப்பினர்களால் பலவந்தமாக மௌனிக்கச் செய்யமுடியாது என்று குறிப்பிட்டார்.

பிரபாகரன் போதைப்பொருள் கடத்தினார் என கூறிய அமைச்சர் டக்ளசுக்கு சிறீதரன் கொடுத்த பதில் !

நான் அரசுக்கு வக்காளத்து வாங்கும் கையாள் அல்ல. பதவிக்காக ஆளுந்தரப்பின் கால்களைக் கழுவி பிழைக்கவும் வரவில்லை. எனவே, தயவுசெய்து என்னைப் பேவிடுங்கள்.” என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு சபையில் வைத்து பதிலளித்துள்ளார்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன்.

பாராளுமன்றத்தில் இன்று சிறிதரன்  உரையாற்றும்போது அவருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையில் அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் சிறிதரன் பேசிக்கொண்டிருந்த உரையை குறுக்கீடுஅமைச்சர் செய்த டக்ளஸ்தேவானந்தா, ”மஹிந்த ராஜபக்ச காலத்தில் வடக்கு, கிழக்கில் அபிவிருத்திகள் இடம்பெற்றுள்ளன என்பதை நீங்கள் ஏற்றுக்கொண்டுள்ளீர்கள். அதற்கு முன்னரும் நாம் செய்திருப்போம். ஆனால், நீங்கள் செய்யவிடவில்லை. பிரபாகரன் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டார். இது உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். அல்லது நீங்கள் மறைக்கலாம்” என்று குறிப்பிட்டார்.

இதற்குப் பதிலளிக்கையிலேயே பதவிகளுக்காகக் கால் கழுவிப் பிழைப்பதற்காகத் தான் அரசியல் நடத்தவில்லை என சிறிதரன் அவ்வாறு குறிப்பிட்டார்.

“பிரபாகரன் சாகவேண்டிய நிலைக்கு அவனே தனக்குதானே குழி தோண்டிவிட்டான்.” – கிளிநொச்சியில் அமைச்சர் டக்ளஸ் !

என்னிடம் பழிவாங்கும் நடவடிக்கைகள் இல்லை. நான் பிரபாகரனையே பழிவாங்கவில்லை.  மாறாக அவரது மரணத்தில் பரிதாபம் ஏற்பட்டது என அமைச்சர் டக்ளஸ் தேவனந்தா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற சமூர்த்தி உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அழிவுகள், இழப்புக்கள், இடம்பெயர்வுகள் எமக்கு வந்திருக்காது. மேலும் பல மடங்கு முன்னுற்றகரமான வாழ்க்கையில் நாங்கள் இருந்திருப்போம். கெடுகுடி சொற்கேளாது என்பது போல அது அப்படியே போய்விட்டது.
கடந்த பாராளுமன்ற தேர்தலிலும்கூட சந்திரகுமார் எம்மோடு சேர்ந்து கேட்டிருந்தால் கட்சிக்கு 3 ஆசனங்கள் கிடைத்திருக்கும். ஆனால் அவருடன் சேர்ந்து கேட்டால் இங்கு வாக்கு விழாது என யாரோ கூறியிருந்த நிலையில் அவர் அதற்கு எடுபட்டு போய்விட்டார். அது அவருடைய விதி. அந்த விதியை மதியால் வெல்ல முடியும் என்று நான் நம்புகின்றேன். ஆனால் அவருக்கு அது முடியாமல் போய்விட்டது.

கிளிநொச்சி மாவட்டத்தில் கடல் தொழிலோடு சம்மந்தப்பட்டது மாத்திரமல்லாது, சமுர்த்தி உள்ளடங்கிய சகல வேலைகளையும் மேற்பார்வை செய்யவும், அதனை கண்காணிக்கவும் வழிநடத்தவும் விரும்புகின்றேன். அது எனக்குரிய சட்ட கடமைகளாகவும் இருக்கலாம். எனக்குரிய அரசியல் கடமைகளாகவும் இருக்கலாம்.

உங்களுடைய வாழ்வாதாரமும், வாழ்க்கையும் முன்னேறியது போல, தொடர்ச்சியாக மக்கள் இந்த சமுர்த்தி உதவி திட்டங்களில் தங்கியிருக்காமல், யாரையும் எதிர்பார்க்காமல் தங்களுடைய கால்களில் தங்கியிருக்க வேண்டும். பிரதமரின் பிறந்தநாள், ஜனாதிபதியின் பதவியேற்பு உள்ளிட்ட நிகழ்வுகளில் இடம்பெற்ற மத நிகழ்வுகளை மக்கள் சிறப்பாக செய்திருந்தார்கள்.

துரதிஸ்டவசமாக எங்களுடைய தமிழ் அரசியல் எங்களுடைய பிரதேசங்கள் எல்லாவற்றையும் சூனியமாக்கப்பட்டுள்ளது. எனக்கும் அரசுக்கும் உள்ள புரிந்துணர்வுக்கூடாகதான் இவ்வாறான வாய்ப்புக்களை உங்களிற்கு பெற்றுக்கொடுக்கக்கூடியதாக இருந்தது. அந்த வகையில் இவ்வாறான மக்கள் கடமைகளை முன்னெடுப்பதற்கு, நீங்கள் எனக்கு பக்க பலமாகவும், ஒத்துழைப்பாகவும் இருக்க வேண்டும்.

என்னிடம் பழிவாங்கும் நடவடிக்கைகள் இல்லை. நான் பிரபாகரனையே பழிவாங்கவில்லை. என்னை எத்தனையோ தடவை கொலை செய்ய முற்பட்டவன். என்னுடன் இருந்தவர்களை கொன்றவன். என்னுடன் இருந்தவர்களை காயப்படுத்தியதுடன், துரத்தியவன், கடத்தியவன். அவன் இறந்த முறை சம்மந்தமாக எனக்கு பரிதாபம்தான் ஏற்பட்டது. இவ்வாறு அவர் சாகவேண்டிய நிலைக்கு அவனே தனக்குதானே குழிதோண்டிவிட்டான் என பரிதாபம் ஏற்பட்டது.

நான் உங்களிடம் எதிர்பார்ப்பது சட்ட கடமைகள், மக்கள் கடமைகளை மாத்திரமே. நீங்கள் எல்லோரும் பெரும்பாலும் இந்த பகுதியை சேர்ந்தவர்கள். இந்த பகுதி மக்களுடைய வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும். குறிப்பாக சமுர்த்தி வேலைத்திட்டத்தின் ஊடாக.மாத்திரமல்ல, ஏனைய அமைச்சர்களுடைய வேலைத்திட்டங்களுடன் சேர்த்து நான் அதை மேற்கொள்ள விரும்புகின்றேன்.

இன்றைய கலந்துரையாடலிற்கு சில உத்தியோகத்தர்கள் வருகை தரவில்லை. அவர்கள் வருகை தராமைக்கான காரணத்தை விளக்கமாக பெற்று தர வேண்டும். எனக்கு பழிவாங்கும் எண்ணம் இல்லை. இருந்தாலும் வீம்பு பண்ணினால் நான் அவர்களை இடம் மாற்ற வேண்டி வரும். இது எனது சட்டபூர்வமான மக்கள் கடமை.

பிரபாகரனையே பழிவாங்காத எனக்கு பழிவாங்கும் எண்ணம் கிடையாது. கோபத்தில் சும்மா கதைப்பதேயன்றி மற்றபடி எனக்கு அந்த நோக்கம் இல்லை. நீங்கள் எந்தளவுக்கு எந்தளவு முன்வந்து பங்களிக்கின்றீர்களோ, அந்தளவு தூரம் இந்த சமூகத்தை முன்னோக்கி கொண்டு வரலாம் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

பிரபாகரன் மீண்டு வந்து குண்டு தாக்குதல் நடத்த உள்ளாரா? – நாடாளுமன்றில் நளின் பண்டார கேள்வி !

நாட்டில் திடீரென ஏன் இத்தனை சோதனை சாவடிகள். பிரபாகரன் மீண்டு வந்து குண்டு தாக்குதல் நடத்த உள்ளாரா? என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார கேள்வி எழுப்பியுள்ளார்.

பாராளுமன்றத்தின் இன்றைய (16) அமர்வில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய போதே அவர் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார். இது தொடர்பில் மேலும் பேசிய அவர்,

நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எதுவும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதா? பிங்கிரிகமயிலிருந்து நான் பாராளுமன்றத்துக்கு வரும் வழியில் 21 பொலிஸ் சோதனை சாவடிகளை கடந்து வர வேண்டியிருந்தது. இதில் 10 இடங்களில் எனது வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தார்கள்.

பிங்கிரியவிலிருந்து பாராளுமன்றத்துக்கு வரும்வரையில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர ஏன் இத்தனை சோதனை சாவடிகளை அமைத்துள்ளார்? பாராளுமன்றம் மீது எவரும் குண்டுத்தாக்குதல்கள் நடத்த உள்ளார்களா? இல்லை என்றால் பிரபாகரன் மீண்டு வந்து குண்டு தாக்குதல் நடத்த உள்ளாரா? எதற்காக இத்தனை சோதனை சாவடிகள்? எனவும் அவர் இதன்போது கேள்வி எழுப்பினார்.

பிரபாகரனுக்கு மலையக மக்கள் ஆதரவளிக்கவில்லை,ஆதரவளித்திருந்தால் பெருந்தோட்ட மக்கள் இன்று பல துன்பங்களை அனுபவிக்க மாட்டார்கள் என சஹ்ரான் கூறினார். – ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்பு தேரர் .

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தமிழ் மக்களுக்காக போராடிய போதிலும் அவருக்கு பெருந்தோட்ட துறை மக்கள் ஆதரவளிக்காமையினாலேயே துன்பத்தை அனுபவிக்கின்றனர் என சஹ்ரான் கூறியதாக கண்டி நெல்லிகல பௌத்த சர்வதேச மத்திய நிலையத்தின் நிறுவனர் வத்துருகும்புரே தம்மரத்தன தேரர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைணக்குழுவில் நேற்று (22) கண்டி நெல்லிகல பௌத்த சர்வதேச மத்திய நிலையத்தின் நிறுவனர் வத்துருகும்புரே தம்மரத்தன தேரர் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியிருந்தார்.

கண்டி முருத்தலாவ நகருக்கு அருகிலுள்ள அரசுக்கு சொந்தமான நிலத்தில் 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் திகதி நில ஆணையராளர் நாயக திணைக்களத்தின் அனுமதியுடன் நெல்லிகல பௌத்த சர்வதேச மத்திய நிலையத்தின் கட்டுமாண பணிகள் கடந்த 2014 நவம்பர் 9 ஆம் திகதி ஆரம்பித்ததாக தெரிவித்தார்.

இருப்பினும், அந்த நிலையத்தை சுற்றியுள்ள காணிகள் முஸ்லிம்களுக்கு சொந்தமானது என்றும், எனவே அங்குள்ள ஏனைய காணிகளுக்கு பணம் செலுத்தியதாகவும், அதன் பின்னரே விஹாரையின் அபிவிருத்தி நடவடிக்கைகளை ஆரம்பித்தாகவும் தேரர் தெரிவித்தார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிரதேச இளைஞர்களுடன் இணைந்து விஹாரையின் தாது கோபுரம் அமைக்கும் பணிகளை முன்னெடுக்கும் போது ஐந்து முஸ்லிம் இளைஞர்கள் அங்குள்ள காணியொன்றில் நடமாடியதை கண்டதாகவும், அவர் கூறினார்.

அது தொடர்பான புகைப்படத்தை விஹாரையின் சிறிய தேரர் ஒருவர் தனது கைப்பேசியில் புகைப்படம் எடுத்ததாகவும், அவர்கள் சஹ்ரான் ஹாஷிம் அணிந்திருந்த ஆடையை ஒத்த ஆடையை அணிந்திருந்தாகவும் தேரர் ஆணைக்குழுவில் தெரிவித்தார்.

சிறிது நேரத்திற்குப் பிறகு, தேரர்கள் அருகே இருந்த குழுவுடன் பேச்சு தொடுத்தாகவும் அதற்கமைய சஹ்ரான் ஹாசிம், தான் காத்தான்குடியில் இருந்து வந்ததாக கூறியதாகவும் அவர்கள் சிங்களத்தை நன்றாக பேசியதாகவும் கூறினார்.

அப்போது சஹ்ரான் ´காணியை வாங்குவதை நீங்கள் எதிர்க்கிறீர்களா?´ என தேர்களிடம் வினவியதாகவும் கூறினார்.

ஆம், அதற்கு எதிரானவர் என்று கூறியபோது, சஹ்ரான் தான் ஒருபோதும் அங்கு ஒரு பள்ளியை கட்ட மாட்டேன் என்றும் மாறாக அங்கு ஒரு ´மையத்தை´ கட்டவுள்ளதாகவும் கூறியதாக தேரர் குறிப்பிட்டர்.

அந்த காணியில் ஒரு சமூக சேவை மையம் கட்டப்பட வேண்டும் என்று அப்போது தான் உணர்ந்ததாக தம்மரதன தேரர் கூறினார். இருப்பினும், அவர்கள் சென்ற பிறகு, சஹ்ரானும் அவரது குழுவும் அந்த காணியின் முஸ்லீம் உரிமையாளரைக் கவனித்தனர், ´இதை விற்கிறீர்களா?´ என்று அவர் கேட்டபோது, அந்த நிலத்தை விற்கும் எண்ணம் தனக்கு இல்லை என்று அவர் கூறியதாக தேரர் தெரிவித்தார்.

அதன் பின்னர் சஹ்ரான் 2017 மார்ச்சில் இரண்டாவது முறையாகவும், ஒகஸ்ட் 2017 இல் மூன்றாவது முறையாகவும் நெல்லிகல பௌத்த சர்வதேச மத்திய நிலையத்திற்கு வந்தாகவும் தேரர் குறிப்பிட்டார்.

அப்போது சஹ்ரான் கிறிஸ்தவம் மற்றும் பௌத்த மதம் குறித்தும் அதிலுள்ள விசேட கலாசார விழுமியங்கள் தொடர்பில் விவாதித்தார் எனவும் அதன் பின்னர் அவர் பாரம்பரிய முஸ்லிம்களுக்கு தலைவர்கள் இல்லை என்று குற்றம் சாட்டியதாகவும் தேரர் தெரிவித்தார்.

விடுதலை புலிகளின் தலைவர் தமிழ் மக்களுக்காக போராடிய போதிலும் அவருக்கு பெருந்தோட்ட துறை ஆதரவளிக்க வில்லை எனவும் அவ்வாறு அவ்வாறு அவர்கள் ஆதரவளித்திருந்தால் பெருந்தோட்ட மக்கள் இன்று பல துன்பங்களை அனுபவிக்க மாட்டார்கள் எனவும் கூறியதாக வத்துருகும்புரே தம்மரத்தன தேரர் தெரிவித்தார்.