முகக்கவசம்

முகக்கவசம்

முகக் கவசமும் பிரித்தானிய அரசியலும்!

பிரித்தானியாவில் முகக்கவசம் மற்றும் மருத்துவர்களுக்கான பாதுகாப்பு ஆடைகளுக்கான பற்றாக்குறை சுகாதார சேவையில் உள்ளவர்களின் உயிர்களை பறிப்பதுடன் வைரஸ் கிருமிகளைப் பரப்பவும் காரணமாகிறது. இந்நிலையில் பல நாடுகளும் மக்களைப் முகக்கவசங்களை அணிய அறிவுறுத்திய போதும் பிரித்தானியா இவ்விடயத்தில் விஞ்ஞான ரீதியாக அது பெரும் பலனளிக்காது என்று காரணம் சொல்கிறிது. அது எப்படி.

முகக்கவசம் பற்றி விஞ்ஞானம் அப்படி என்னதான் சொல்கிறது: 1. முகக் கவசத்தை நோய்த் தொற்றுள்ளவர்கள் கட்டாயமாக அணிவது அவசியம், ஏனெனில் அது கிருமி பரவுவதை தடுக்கும். ஆனால் 2. நோய்த் தொற்று இல்லாதவர்கள் அதை அணிவதால் பெரும் நன்மை இல்லை.

இதன் படி முதலாவது கூற்று முகக்கவசம் அணிவதை வரவேற்கின்றது. இரண்டாவது கூற்று குழப்பகரமானது அதனை வைத்துத்தான் அரசு அரசியல் செய்கின்றது. ஒரு வருக்கு நோய்த் தொற்று இருக்கா இல்லையா என்பது யாருக்கும் தெரியாது. அப்படியாயின் அனைவரும் முகக்கவசத்தை அணிவது பாதுகாப்பானதா? அல்லது யாரும் முகக் கவசத்தை அணியாமல் விடுவது பாதுகாப்பானதா? மேலும் ஏன் கைகளை கழுவச்சொல்கிறார்கள். நாங்கள் கிருமி தொற்றிய கைகளால் கண் மூக்கு ஆகியவற்றை தொட்டால் வைரஸ் பரவிவிடும் என்பதால். அதே போல் முகக்கவசம் அணிந்தால் அது வைரஸ் மூக்கினுள் நுழைவதை சிறிய அளவிலேனும் தடுக்ககாது.

அரசுக்கும் இதெல்லாம் தெரியும். ஆனால் முகக்கவசத்தை அணியும் படி சொன்னால் நாட்டில் சுகாதார சேவையாளர்களுக்கே அணிவதற்கு முகக்கவசங்கள் பற்றாக்குறையாக இருக்கும் போது பொது மக்களையும் அதனை அணியச் சொன்னால் அதனால் ஏற்படும் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த முடியாது. அரசு ஏற்கனவே மெத்தனப் போக்கை கடைப்பிடித்தாலேயே இவ்வளவு இழப்புகள் ஏற்படுகின்றது. இது அரசுக்கு மேலும் நெருக்கடியை வழங்கும். தங்கள் பொறுப்பற்ற தன்மையை மறைக்க அரசு விஞ்ஞானத்தை புரட்டிப் போடுகின்றது. வீட்டில் உள்ள கைக் குட்டையை யாவது கட்டிக்கொண்டு வெளியே செல்வதும் தான் பாதுகாப்பானது. அதனை நாளாந்தம் சோப்போட்டு தோய்த்து அணியுங்கள்.

ஏப்ரல் 20இல் 10 டவுனிங் ஸ்ரிற்க்கு முன்னால் தனித்துப் போராடிய இளம் மருத்துவப் பெண் மீனாள் விஸ் பிரதமர் பொறிஸ் ஜோன்சனினதும் அரசினதும் பொறுப்பற்ற தன்மையை வன்மையாகக் கண்டித்ததுடன் பிரதமர் சுகாதார சேவையாளர்களிடமும் மரணிக்ககும் ஒவ்வொருவரிடமும் மன்னிப்புக் கோர வேண்டும் என்று கேட்டிருக்கிறார். சுகாதார சேவையாளர்களுக்கு கை தட்டுவது போன்ற கதைகளைச் சொல்லி உண்மையான பிரச்சினையை திசை திருப்ப வேண்டாம் என்றும் எச்சரித்தார். இவருடைய நேர்காணல் பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.