நாடாளுமன்ற தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனது கட்சி சார்பில் தேசியப்பட்டியலின் ஊடாக நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களின் பெயர் விபரங்களை தேர்தல் ஆணைக்குழுவிற்கு இன்று கையளித்துள்ளது. இந்த பெயர்ப்பட்டியலில் முன்னாள் வடக்கு மாகாண ஆளுனர் சுரேன்ராகவன் அவர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன்படி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் விபரம் வருமாறு,
முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்
சாகர காரியவசம்
அஜித் நிவாட் கப்ரால்
ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி
ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த வீரசிங்க
மஞ்சுள திஸாநாயக்க
பேராசிரியர் ரஞ்சித் பண்டார
பேராசிரியர் சரித ஹேரத்
கெவிந்து குமாரதுங்க
மொஹமட் முசாமில்
பேராசிரியர் திஸ்ஸ விதாரன
பொறியியலாளர் யாமினி குணவர்தன
கலாநிதி சுரேன் ராகவன்
டிரான் அல்விஸ்
வைத்திய நிபுணர் சீதா ஹரம்பேபொல
ஜயந்த கெடுகொட
மார்ஜன் பலீல்
ஆகியோரே ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் உறுப்பினர்களாக பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.