கொவிட் -19
கொவிட் -19
நாட்டில் மேலும் ஐவர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, கொழும்பு-13 பகுதியில் 54 மற்றும் 88 வயதுடைய இருவர் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பினார் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், கொழும்பு-12 பகுதியில் 88 வயதுடைய ஒருவரும் கொழும்பு-15 பகுதியில் 39 வயதுடைய ஒருவரும் உயிரிழந்துள்ளனர். மேலும், பொரள்ள பகுதியைச் சேர்ந்த 79 வயதுடைய ஒருவரும் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளார்.
இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்றினால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது.
இதே நேரம் நாட்டில் மேலும் 544 பேருக்கு தற்போது வரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி நாட்டில் இதுவரை தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 17 ஆயிரத்து 127 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை கொரோனா தொற்றில் இருந்து கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 171 பேர் குணமடைந்துள்ள நிலையில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 495 ஆக காணப்படுகின்றது.
இலங்கையில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 3402 ஆக அதிகரித்துள்ளது.
இது தவிற நேற்றைய தினம் மேலும் ஐவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.உக்ரைன் நாட்டைச் சேர்ந்த கடலோடி ஒருவருக்கும் சவுதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பிய ஒருவருக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வருகை தந்த கடலோடி ஒருவருக்கும் நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.
அத்துடன், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பிய இரண்டு இலங்கையர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியானதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.இதேவேளை திவுலபிட்டியவில் நேற்று பெண்ணொருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதோடு, அவரது 16 வயது மகளுக்கும் தொற்று உறுதியானது.இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 3402 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்று உறுதியான 3258 பேர் இதுவரையில் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.அதேநேரம் தொற்றுக்கு உள்ளான 131 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.இதேநேரம் இந்த வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் இதுவரையில் 13 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒக்ஸ்போர்ட், அஸ்ட்ராஜென்கா நிறுவனத்தின் கொரோனாவைரஸ் தடுப்பு மருந்தின் 3-ம் கட்ட பரிசோதனை நிறுத்தப்பட்ட சூழலில், மீண்டும் தொடங்குவதற்கு பிரிட்டனின் மருத்துவ சுகாதார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதியளித்துள்ளது.
3-ம் கட்ட பரிசோதனை பாதுகாப்பானதுதான், அந்தப்பரிசோதனையைத் தொடரலாம் என்று பிரிட்டனின் மருத்துவ சுகாதார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஜென்னர் இன்ஸ்ட்டியூட், அஸ்ட்ராஜென்கா நிறுவனம் இணைந்து உருவாக்கிய கோவிஷீல்ட் கொரோனாவைரஸ் தடுப்பு மருந்தின் 3-ம் கட்ட கிளினிக்கல் பரிசோதனை நடந்து வருகிறது.
கோவிஷீல்ட் தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட தன்னார்வலர் ஒருவருக்குக் கடுமையான பக்கவிளைவுகள் கடந்த வாரம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த மருந்தின் கிளினிக்கல் பரிசோதனை உடனடியாக பல்வேறு நாடுகளிலும் முன்னெச்சரிக்கையாக நிறுத்தப்பட்டது.
இந்தியாவில் கோவிஷீல்ட் மருந்தின் 2-வது கட்டம் மற்றும் 3-வது கட்ட கிளினிக்கல் பரிசோதனையை சீரம் மருந்து நிறுவனம் நடத்தி வந்தது.
இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு சீரம் இன்ஸ்ட்டியூட் ஆப் இந்தியா நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியததைத் தொடர்ந்து கிளினிக்கல் பரிசோதனை நிறுத்தப்பட்டதாக அந்நிறுவனம் அறிவித்தது.
இந்நிலையில், கோவிஷீல்ட் மருந்தின் கிளினிக்கல் பரிசோதனை குறி்த்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்த மருந்து பாதுகாப்பானது எனத் தெரியவந்ததையடுத்து, மீண்டும் கிளினிக்கல் பரிசோதனையைத் தொடங்க பிரிட்டன் மருந்து கட்டுப்பாட்டு ஒழுங்குமுறை ஆணையம் அனுமதியளித்துள்ளது
இதுகுறித்து ஒக்ஸ்போர்ட், அஸ்ட்ராஜென்கா நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது
“ஆக்ஸ்போர்ட், அஸ்ட்ராஜென்கா நிறுவனத்தின் கோவிஷீல்ட் கொரோனாவைரஸ் தடுப்பு மருந்தின் 3-ம் கட்ட கிளினிக்கல் பரிசோதனையை மீண்டும் தொடங்க பிரிட்டனின் மருந்து கட்டுப்பாட்டு ஒழுங்குமுறை ஆணையம் அனுமதியளித்துள்ளது .
எங்கள் மருந்து தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் பாதுகாப்பானது எனத் தெரிவித்துள்ளது. இதற்கு மேல் வேறு எந்த தகவலையும் பரிமாற முடியாது.
கொரோனாவைரஸ் தடுப்பு மருந்தின் கிளினிக்கல் பரிசோதனையில் பங்கேற்றவர்களின் உடல்நலத்தில் அஸ்ட்ராஜென்கா தீவிரமான அக்கறை கொண்டு, உயர்ந்த தரத்தில் பரிசோதனை நடத்தப்படுகிறது.
உலகளவில் உள்ள மருத்துவ வல்லுநர்களுடனும், அதிகாரிகளுடன் தொடர்ந்து இனி சேர்ந்து பணியாற்றி, கிளினிக்கல் பரிசோதனையை நடத்துவது குறித்து வழிகாட்டுதல்களை தெரிவித்து, மீண்டும் பரிசோதனையை தொடங்கக் கூறுவோம்.
கொரோனாவைரஸ் பரவல் சூழலில் எந்த லாபநோக்கமின்றி செயல்படுகிறோம் . கிளினிக்கல் பரிசோதனையில் பங்கேற்றவர்களின் விவரங்கள் படிப்படியாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக முழுவதும் கொரோனாவைரஸ் தொற்றுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 8,80,000 -ஐ கடந்துள்ளது.
இதுகுறித்து வேர்ல்டோ மீட்டர் இணையதளம் வெளியிட்ட தகவலில், “ உலகம் முழுவதும் கொரோனாவைரஸால் பலியானவர்கள் எண்ணிக்கை 8,80,779 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 2, 72, 90,137 பேர் கொரோனாவைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளது.
உலக அளவில் கொரோனாவைரஸ் பாதிப்பு மற்றும் இறப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. 62, 62,989 பேர் கொரோனாவைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,88,535 பேர் கொரோனாவைரஸால் பலியாகி உள்ளனர். அமெரிக்காவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் இந்தியா 42, 02,562 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 71,687 பேர் கொரோனாவைரஸால் பலியாகி உள்ளனர்.
மூன்றாவது இடத்தில் பிரேஸில் உள்ளது. பிரேசிலில் .41, 37,606 பேர் கொரோனாவைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.126,686 பேர்கொரோனாவைரஸால் பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவைரஸ்க்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன. கொரோனாவைரஸ் தடுப்பூசி கண்டுபிடிப்பதில் லண்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மட்டுமே உலக நாடுகளின் நன்மதிப்பைப் பெற்றுள்ளது.
இதற்கிடையில், கொரோனாவைரஸ்க்கான தடுப்பு மருந்தை தற்போதைக்கு எதிர்பார்க்கவில்லை. அடுத்த ஆண்டின் இடைப்பகுதியில்தான் எதிர்பார்க்கிறோம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் கொரோனாவைரஸ் பொது முடக்கத்தால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன.
பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர்.
கடந்த ஆகஸ்ட் 7-ம்தேதி 20 லட்சத்தையும், 23-ம் தேதி 30 லட்சத்தையும், செப்டம்பர் 5-ம் தேதி 40 லட்சத்தையும் கொரோனா பாதிப்பு எட்டியுள்ளது. ஏறக்குறைய 13 நாட்களில் 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 41 லட்சத்து 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது. உயிரிழப்பு 70 ஆயிரத்தை கடந்துள்ளது. குறிப்பாக கடந்த ஒருநாளில் 90,000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டமையானது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் கொரோனா பரவல் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாட்டிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிராவில் மேலும் 20 ஆயிரத்து 489 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்து 83 ஆயிரத்தை தாண்டியதோடு, பலியானோர் எண்ணிக்கையும் 26 ஆயிரத்து 276 ஆக அதிகரித்துள்ளது.
ஆந்திர மாநிலத்தில் ஒரே நாளில் மேலும் 10 ஆயிரத்து 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு 4 லட்சத்து 87 ஆயிரத்தை கடந்துள்ளது.
டெல்லியில் ஒரே நாளில் 2,973 பேருக்கும், ராஜஸ்தான் மாநிலத்தில் 1,566 பேருக்கும், மேற்கு வங்காளத்தில் 3,042 பேருக்கும், கேரளாவில் 2,655 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 41 லட்சத்து 10 ஆயிரத்தை கடந்துள்ளது. உயிரிழப்பும் 70 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 31 லட்சத்து 77 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.
அர்ஜெண்டினாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,717 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் அர்ஜெண்டினாவில் கொரோனா பாதிப்பு 4 லட்சத்தைத் நெருங்குகிறது.
இதுகுறித்து அர்ஜெண்டினாவின் தேசிய சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “கடந்த 24 மணி நேரத்தில் 11, 717 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அர்ஜெண்டினாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,92,009 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் ஒருப்பக்கம் கொரோனா தொற்று அதிகரிக்க கொரோனா இறப்பு எண்ணிக்கை 8,000-ஐ கடந்துள்ளது. 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அர்ஜெண்டினாவில் சமீபத்தில் ஊரடங்கில் தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டதால்தான் கொரோனா மீண்டும் அதிகரித்துள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
தென் அமெரிக்க நாடுகளில் பிரேசில் மற்றும் அர்ஜெண்டினா ஆகிய நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் சுமார் 2 .2 கோடிக்கும் அதிகமான நபர்கள் கரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 7லட்சத்துக்கும் அதிகமான நபர்கள் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கொரோனாவைரஸ், 8 மாதங்களுக்கு மேலாக உலக நாடுகளை முடக்கியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பில் முதல் நான்கு இடங்களில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா ஆகிய நாடுகள் உள்ளன.
சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளில் கட்டுப்பாடற்ற வகையில் மிக வேகமாக பரவி வருகின்றது.. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரேசில், ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட நாடுகளையும் கண்ணுக்கு தெரியாத எதிரியான கொரோனா வைரஸ் தொற்று, ஆட்டிப்படைத்து வருகிறது.
இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து இதுவரை 1,65,99,377 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 2,40,50,333 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் வைரஸ் 6தாக்குதலுக்கு இதுவரை 8,23,278 பேர் உயிரிழந்துள்ளனர்.வைரஸ் பரவியவர்களில் 66,27,678 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 61,795 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-
-
- அமெரிக்கா – பாதிப்பு -5,955,728, உயிரிழப்பு – 182,404 , குணமடைந்தோர் – 3,254,282
- பிரேசில் – பாதிப்பு – 3,674,176, உயிரிழப்பு – 116,666 , குணமடைந்தோர் – 2,848,395
- இந்தியா – பாதிப்பு – 3,231,754, உயிரிழப்பு – 59,612, குணமடைந்தோர் -2,467,252
- ரஷியா – பாதிப்பு – 966,189 , உயிரிழப்பு – 16,568 , குணமடைந்தோர் – 779,747
- தென்ஆப்பிரிக்கா – பாதிப்பு – 613,017 , உயிரிழப்பு – 13,308 , குணமடைந்தோர் – 520,381
- பெரு – பாதிப்பு – 600,438, உயிரிழப்பு – 27,813 , குணமடைந்தோர் – 407,301
- மெக்சிகோ – பாதிப்பு – 568,621, உயிரிழப்பு – 61,450, குணமடைந்தோர் – 393,101
- கொலம்பியா – பாதிப்பு – 562,128 , உயிரிழப்பு -17,889 , குணமடைந்தோர் – 395,470