புளொட்

புளொட்

பாகம் 21: சந்ததியார் தீப்பொறி உறுப்பினரா? ஏன் தீப்பொறியினர் சந்ததியாரை பலிக்கடாவாக்கினர்?

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! : தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 21 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 10.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

பாகம் 21:

தேசம்: நாங்கள் இப்போது 84, 85 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் தோழர் சந்ததியர் வெளியேறினது சம்பந்தமாக கதைத்துக் கொண்டிருக்கிறோம். இந்த முரண்பாடுகளை நாங்கள் பார்க்கும் போது இவர்கள் வெளியேறும்போது வைத்த காரணங்கள் முதலே அது சம்பந்தமாக மற்றவர்களுடன் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக வெளியேறுகின்ற தன்மைகள், உட்கட்சிப் போராட்டம் நடக்காதது சம்பந்தமாக எல்லாம் கதைத்திருக்கிறோம்.சந்ததியார் வெளியேறுவதற்கு முதல் நடந்த மத்திய குழு கூட்டத்தில் சில மத்திய குழு உறுப்பினர்கள் தாங்கள் வெளியேறுவதாக அறிவிக்கிறார்கள்.
அவர்கள் வெளியேறிய பிறகுதான் சந்ததியார் கடத்தப்படுகிறார்.

அசோக்: ஓம். தோழர்கள் ரகுமான் கேசவன் வெளியேறி கொஞ்ச நாட்களிலேயே தோழர் சந்ததியார் கடத்தப்படுகிறார்…

தேசம்: கூட்டத்தை தொடர்ந்து தான் கடத்தப்படுகிறார்?

அசோக்: ஓம். இந்த மத்திய குழு கூட்டத்திற்கு பின் வெளியேறிய தோழர்கள் ரகுமான் ஜான், கேசவன், கண்ணாடி சந்திரன் என்னுமொரு தோழர் பெயர் ஞாபகம் இல்லை. அவரும் சேர்ந்து மான மதுரை என நினைக்கிறேன் அங்கு தலைமறைவாக போய் இருந்தாங்க. இதன் பிற்பாடுதான் தோழர் சந்ததியார் கடத்தப்படுகிறார்.

தேசம்: இதில தெளிவில்லாமல் இருக்கு என்ன என்றால் சந்ததியார் ரெண்டு மூன்று கூட்டங்களுக்கு கலந்துகொள்ளவில்லை. இவர்கள் சந்ததியர் வராமைக்கான காரணத்தை கேட்கிறார்கள். அதை தொடர்ந்து சில குற்றச்சாட்டுகள் வைக்கிறார்கள் படுகொலைகள் சம்பந்தமாக. ஆனால் அதற்கான ஆதாரங்கள் பெருசாக சொல்லப்படவில்லை. இப்ப இந்த வெளியேற முற்பட்ட உறுப்பினர்களுக்கும் சந்ததியாருக்கும் எந்தத் தொடர்பும் இல்லையா? இந்த வெளியேற்றம் அவர்களுடன் இணைந்த கூட்டான வெளியேற்றம் இல்லையா?

அசோக்: உண்மையில் நடந்தது என்ன என்று கேட்டால் தோழர் சந்ததியார் இந்த மத்திய குழுக் கூட்டம் நடப்பதற்கு நான்கைந்து மாதங்களுக்கு முன்னரே அவர் வெளியேறிவிட்டார். அவர், டேவிட் ஐயா, சரோஜினிதேவி, சண்முகலிங்கம் எல்லோரும் வெளியேறி அண்ணாநகரிலேயே இருக்கிறார்கள். தோழர் சந்ததியாருக்கும் டேவிட் அய்யாவுக்கும் மிக நெருக்கமான உறவு இருந்தது. இது காந்திய அமைப்பு காலத்திலிருந்து தொடர்வது. அண்ணாநகரில் டேவிட் ஐயாவும், சந்ததியாரும் ஒன்றாகத்தான் இருந்தவர்கள். தோழர் ரகுமான் ஜான் ஆட்கள் வெளியேறி மானாமதுரைக்கு போய்விட்டார்கள்.

உண்மையிலேயே நீங்கள் கேட்ட கேள்வி நியாயமானது. இவர்கள் வெளியேறி போனதற்கு பிற்பாடு சந்ததியாருடன் உறவு இருந்ததோ தெரியாது. ஆனால் உறவு இருந்திருந்தால் இவர்கள் வெளியேறும்போது சந்ததியாரையும் கூட்டிக் கொண்டு போய் இருப்பாங்க. ஏனென்றால் இவங்கள் வெளியேறினது முகுந்தனுக்கு தெரியவர நிச்சயமாக சந்ததியார் மீது சந்தேகம் வரும்.

உண்மையிலேயே அப்படி உறவு இருந்திருந்தால் இவர்கள் கூட்டிக்கொண்டு போய் இருக்க வேண்டும். அல்லது அவரின் பாதுகாப்பு விடயத்தில் கவனம் செலுத்தி இருக்கவேண்டும். இவங்கள் மத்திய குழுக் கூட்டம் நடந்து இரண்டு மூன்று நாட்களுக்கு நாளைக்குப் பிறகுதான் வெளியேறுறாங்கள். அதற்குப் பிறகுதான் எங்கள் மேல சந்தேகம் வந்து எங்களை தளத்துக்கு அனுப்பாம வைத்திருந்து… அதைப் பற்றி முதலே கதைத்திருக்கிறேன். ஒரு மாதத்துக்கு பிறகுதான் தளத்துக்கு அனுப்பினார்கள். அப்ப சந்ததியார் விடயத்தில் பாதுபாப்பில் இவர்கள் கவனம் செலுத்தி இருக்கவேண்டும்.

தேசம்: இந்த வெளியேற்றத்தில் கூட சந்ததியார், சரோஜினி, சண்முகலிங்கம் மூன்று பேரும் வெளியேறிட்டினம். ஆனால் அவைக்கு எதிரான எந்த ஒரு துன்புறுத்தலும் இந்தக் கூட்டம் நடக்கும் வரைக்கும் நடக்கேல.

அசோக்: நடக்கேல. ஆனால் அவங்களுக்கு எதிரான பிரச்சாரங்கள் நடந்தது.

தேசம்: சந்ததியார் வேறு அமைப்புகளோடு சேரவோ அல்லது தான் புதிய அமைப்பை உருவாக்குவதற்கோ ஏதாவது முயற்சி எடுத்த மாதிரி நீங்கள் அறிந்திருக்கிறீர்களா?

அசோக்: இல்லை இல்லை. அவங்க மிக அமைதியாக தான் அண்ணாநகரில் இருந்தவங்க. டேவிட் ஐயா, சந்ததியார், சரோஜினிதேவி, சண்முகலிங்கம் அவங்க பூரணமாக புளொட்டிலிருந்து ஒதுங்கிட்டார்கள். அவர்களுக்கு புளொட்டில் எந்த அரசியல் ஈடுபாடும் இருக்கவில்லை. புளொட்டிக்கு எதிராக இந்த நடவடிக்கைகளிலும் அவங்க ஈடுபடவில்லை. அவர்கள் ஒதுங்கி அமைதியாகத்தான் இருந்தாங்க.

தேசம்: அதற்கு பிறகு இவர்கள் வெளியேறுகிறார்கள் ஆனால் சந்ததியாரை அழைத்துக் கொண்டு செல்லேல. இவர்களுக்கும் உறவு இருந்தது தொடர்பாக தெரியாது. அவர்கள் எங்கேயாவது பதிவு செய்திருக்கிறார்களா தீப்பொறி அல்லது…

அசோக்: தங்களோட தீப்பொறியில் சந்ததியார் இருந்தது என்று நிறைய இடத்தில் பதிவு செய்திருக்கிறார்கள். தீப்பொறி தங்களுடைய உறுப்பினராக சந்ததியாரை அடையாளப்படுத்துகிறார்கள்.

தேசம்: ஆனால் அதற்குள் ஒரு முரண்பாடு வருது எல்லோ. சந்ததியார் தீப்பொறி யோடு இருந்திருந்தால் அவர்கள் ஒன்றாக தானே போயிருக்க வேண்டும்.

அசோக்: இதுல தான் பெரிய சிக்கல் என்ன என்று கேட்டால் உண்மையிலேயே இவங்கள் சந்ததியார் தீப்பொறியில் இருந்தார் என்று அடையாளப்படுத்துகிறார்கள். எந்த அடிப்படையில் சொல்கிறார்களோ தெரியவில்லை. அப்படி இருந்திருந்தால் இவங்கள் வெளியேறும்போது சந்ததியாரையும் கூட்டிக்கொண்டு போயிருக்கவேண்டும். ஏனென்றால் இந்த வெளியேற்றத்துக்குப் பிறகு அவங்களுக்கு தெரியும் சந்ததியாருக்கு பிரச்சனை வரும் என்று. ஆனால் இவங்கள் கூட்டிக்கொண்டு போகவே இல்லை. சந்ததியர் அங்க சுதந்திரமாக திரியுறார். ஆனால் அவருக்கு எதிரான பிரச்சாரங்கள் முகுந்தன் தரப்பினாரால் வைக்கப்படுகின்றது. பிறகு நாங்கள் நாட்டுக்கு போனதற்குப் பிறகு தான்…

தேசம்: அந்த விடயத்துக்கு பிறகு வாரேன். இது ஒரு சிக்கலான விடயம். மேலும் தெளிவுபடுத்திக் கொள்ளுவோம். டேவிட் ஐயா, சரோஜினி ஒரு இடத்தில் இருக்கிறீனம் என்றால் டேவிட் ஐயாவின் ஒரு நேர்காணலில் அவர் சொல்லுறார் உமாமகேஸ்வரன் தலைமையிலான புளொட் அமைப்பு வந்து ஒரு சர்வாதிகார போக்கை கொண்டிருக்கிறது என்று சொல்லுகிறார். தான் அதை உமாமகேஸ்வரனுக்கும் சொன்னதாகவும் இது சம்பந்தமாக மற்ற உறுப்பினர்களுக்கு தெரியாமல் இருந்ததா? சந்ததியார் இருக்கிறார், டேவிட் ஐயா இருக்கிறார் முக்கியமான ஆட்கள் இருக்கினம். தோழர் ரகுமான் ஜான், தோழர் நேசன் நீங்கள் .. எனக்கு இன்னும் அதற்கான… எனக்கும் விளங்கவில்லை ஒரு பலமான முற்போக்கு சக்திகள் இருந்தும் எப்படி ஒரு பலவீனமான உமாமகேஸ்வரன் அந்த அதிகாரத்தை கைப்பற்றுகிறார்

அசோக்: டேவிட் ஐயா முரண்பட்டுக் கொண்டு போகும்போது அந்த முரண்பாட்டுக்கான காரணங்களை அவர் நிச்சயமாக சந்ததியாருக்கு சொல்லியிருப்பார். பேட்டியிலும் அதைத்தான் சொல்லுறார். நான் சொல்வது என்ன என்று கேட்டால் ஆரம்பத்துல டேவிட் ஐயா வெளியே போகும்போது ஒரு சில குற்றச்சாட்டுகளை வைக்கிறார். டேவிட் ஐயா வைத்த குற்றச்சாட்டுக்கள் பற்றி பின் தளத்தில் இருந்த முக்கிய தோழர்கள் எல்லோருக்கும் நிச்சயம் தெரிந்திருக்கும் என்றே நினைக்கிறேன். ஆனால் யாரும் அதைப் பற்றி அக்கறை கொள்ளாதது மிக மிக கவலைக்குரியதுதான். அந்தக் காலகட்டத்திலேயே நாங்கள் எல்லோரும் தீர்க்கமான முடிவெடுத்து இவ்வாறான பிரச்சனைகளுக்கு முடிவு கண்டிருக்கவேண்டும்.

ஆனால் டேவிட் ஐயா முன்வைத்த குற்றச்சாட்டுகளை புளொட் அமைப்பின் பிரச்சனையாக பார்க்காமல் டேவிட் ஐயாவின் பிரச்சனையாக குறுக்கி பார்த்ததின் விளைவுதான் அது என நினைக்கிறேன். இது புளொட்டில் தொடர்ச்சியாக நான் அவதானித்த விடயம்தான். மற்றவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் முரண்பாடுகள் பற்றி யாரும் அக்கறை கொள்ள மாட்டார்கள். தனி நபர் சார்ந்த விடயமாக, அவருடைய பிரச்சனையாக, அதற்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லாத மாதிரிகடந்து சென்றுவிடும் பழக்கம் எல்லோரிடமும் இருந்தது. அது இயக்கத்தை பாதிக்கும் சீர்குழைக்கும் என நாங்க நினைப்பதில்லை. எங்களின் இருப்பும் தனிநபர் சார்ந்த எங்களின் அபிலாசைகளும்தான் இதற்கு காரணம்.

தேசம்: சந்ததியாருக்கு முதலே டேவிட் ஐயா வெளியேறிவிட்டாரா?

அசோக்: ஓம் டேவிட் ஐயா முதலே வெளியேறிவிட்டார்.

தேசம்: எவ்வளவு காலத்துக்கு முதல்?

அசோக்: நீண்டகாலத்துக்கு முதலே முகுந்தனோடு முரண்பட்டு வேலை செய்ய முடியாது என்று டேவிட் ஐயா போயிட்டார்.

தேசம்: டேவிட் ஐயாவின் உடைய குறிப்பின்படி எண்பத்தி மூன்றாம் ஆண்டு தாங்கள் மட்டக்களப்பு சிறை உடைப்பு எல்லாரும் தமிழ்நாட்டுக்கு போன பிறகு அவர் ஒரு ஆறு மாதம் செய்கிறார். அப்ப கிட்டத்தட்ட எண்பத்தி நான்கு தொடக்கத்திலேயே அல்லது 83 கடைசியிலேயோ போயிட்டார்.

அசோக்: நான் நினைக்கிறேன் டேவிட் ஐயா 84 கடைசியில்தான் வெளியேறிப் போய் இருப்பார் என. அதுக்குப் பிறகு புளொட்டோட தொடர்பு இருந்தது அவருக்கு. உத்தியோக பூர்வமாக எந்த வேலையும் செய்யவில்லை. காலப்போக்கில் முற்றாக புளொட்டினுடைய தொடர்பை விட்டுவிட்டார்.

தேசம்: உங்களுக்கு அவர் வெளியேறினது தெரியுமா?

அசோக்: டேவிட் ஐயா வெளியேறினது தெரியும்.

தேசம்: அப்போ நீங்கள் தோழர் ரகுமான் ஜான் ஆட்களுடன் அல்லது மற்ற தோழர்களுடன் கதைக்கவில்லையா இதைப்பற்றி…?

அசோக்: பெருசா இதைப்பற்றி கதைக்கவில்லை. உண்மையிலேயே அது பெரிய பிழைதான். இன்னொரு சிக்கல் என்னவென்றால் கம்யூனிகேஷன் பிரச்சினையாக இருந்தது அந்த நேரம். நாங்கள் நாட்டிலிருந்து போற ஆட்கள் தானே. நிறைய விடயங்கள் தளத்தில் இருந்த எங்களுக்கு காலம் கடந்துதான் தெரியவரும். பின்தளம் செல்லும் போதும் இப்பிரச்சனைகள், முரண்பாடுகள் பற்றி யாரும் எங்களோடு கதைப்பதில்லை. இதுபற்றி முன்னரே நிறைய கதைத்துள்ளேன். உண்மையிலேயே நாங்க நிறைய தவறுகள் விட்டிருக்கிறம். ஆரம்ப காலத்தில் இந்த தவறுகளை பற்றி நாங்க கவனம் கொள்ள தவறிட்டம்.

தேசம்: அந்த நேரம் இப்போ உள்ள தொலைத்தொடர்பு வசதிகள் இல்லை என்பது உண்மைதான். நீங்கள் அங்கே இருந்து சில மத்தியகுழு கூட்டங்களுக்கு வரேக்க மத்திய குழுக் கூட்டத்துக்கு வெளியிலேயும் சில கருத்தாடல்கள் நடந்திருக்கும் தானே… அதுகளிலும் இது சம்பந்தமாக எதுவும் முக்கியத்துவம் பெற இல்லையா? தோழர் ரகுமான் ஜான் யாரும் இதைப் பற்றி உங்களுடன் கலந்துரையாடவில்லையா.

அசோக்: டேவிட் ஐயாவின் வெளியேற்றம் எங்களுக்குப் பெரிய பாதிப்பை தரவில்லை. நான் முன்னர் சொன்ன மாதிரி டேவிட் ஐயாவின் பிரச்சனையை வெளியேற்றத்தை அவரின் தனிப்பட்ட பிரச்சனையான நாங்க பார்த்ததன் விளைவுதான் அது. அத்தோடபுளாட்டின் முக்கிய ஆளாக இல்லை என்ற நினைப்பும் எங்களிடம் இருந்தது. டேவிட் ஐயாவின் குற்றச்சாட்டுக்களையும், விமர்சனங்களையும் இயக்கத்தின் ஒட்டு மொத்த பிரச்சனையாக நாங்க காணத் தவறிட்டம். இப்ப யோசிக்கும் போது மற்றவர்களை குற்றம் சுமத்துவதில் பிரயோசனம் இல்லைப் போல் தெரிகிறது. எங்களிடம் நிறைய பிரச்சனைகள் தவறுகள் இருந்திருக்கு.

தேசம்: காந்தியத்தில் முக்கியமான ஆள். ஆனால் அவர் வைக்கும் குற்றச்சாட்டு மிகப் பயங்கரமானது. அந்த நேரமே அதற்கு எதிரான ஒரு நடவடிக்கை எடுத்திருந்தால் இது நிச்சயமாக தடுக்கப்பட்டு இருக்கலாம். டேவிட் ஐயாவை கடத்தினவர்களுக்கு டேவிட் ஐயா சந்ததியார முழு பேரையும் தெரியுமா.

அசோக்: தெரிந்திருக்க வில்லையா அல்லது முகுந்தனின் கட்டளையை தவறாக புரிந்து கொண்டார்களா தெரியல்ல. டேவிட் ஐயா அந்த நேர்காணலில் ஒரு இடத்தில் சொல்லுகிறார் தன்னை வாகனத்தில் கடத்திக்கொண்டு போகிறார்கள். போகும்போது இடையில அந்த வாகன சாரதிதான் டேவிட் ஐயாவின் குரலை அடையாளம் காண்கிறார் இவர் டேவிட் ஐயா என்று. ஆனால் இவர்கள் உண்மையாக கடத்த வந்தது சந்ததியாரை. கடத்திக் கொண்டு போன உறுப்பினர்களுக்கு சந்ததியார் யாரென்று தெரியாமல் கடத்தினார்களா அது தெரியல்ல. சங்கிலி கந்தசாமி போகவில்லை. அவரின்ர உளவுப்படைதான் போனது. அந்த ட்ரைவர் இருந்தபடியால் தான் விட்டுட்டு போனவர்கள் இல்லாவிட்டால் அவரையும் மேடர் பண்ணி இருப்பார்கள்.

தேசம்: சந்ததியார் வெளியேறி எவ்வளவு காலத்திற்கு பிறகு அவர் கொலை செய்யப்படுகிறார்? அவர் கொலை செய்யப்பட்ட விடயம் எப்போது தெரிய வருகிறது?

அசோக்: நான் நினைக்கிறேன் 85 கடைசிப் பகுதியில் கொலை செய்யப்படுகிறார் என்று. மத்திய குழுக் கூட்டம் முடிந்து இரண்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு கொலை செய்யப்படுகிறார் என நினைக்கிறேன்.

தேசம்: கடத்தப்பட்ட இரண்டு மூன்று மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டு இருக்குறார்?

அசோக்: இல்லை. மத்திய குழுக் கூட்டம் நடந்த பிற்பாடு அவர் சுதந்திரமாக அண்ணாநகரில் தான் இருக்கிறார். அதுக்குப் பிறகுதான் கடத்தப்படுகிறார்.

தேசம்: மத்திய குழுக் கூட்டத்திற்கு பிறகு தானே கடத்தப்படுகிறார்?

அசோக்: மத்தியகுழு கூட்டத்திற்கும் அவர் கடத்தப்படுவதற்கு இடையில் நான் நினைக்கிறேன் 2, 3 மாதம் இடைவெளி இருக்கும். சரியாக காலத்தை என்னால் நினைவு படுத்தமுடியாமல் உள்ளது. கடத்தப்பட்டு ஒரு வாரத்துக்குள்குள்ளேயே கொலை செய்யப்பட்டு விட்டார் என நினைக்கிறேன். இதனோடு சம்பந்தப்பட்ட பலர் இன்னும் இருக்கிறார்கள். கடத்தப்பட்டு என்ன நடந்தது என்றே தெரியாது. எப்ப கொலை செய்தார்கள் என்ன நடந்தது ஒன்றுமே தெரியாது தானே.

தோழர் சந்ததியார் கடத்தப்பட்ட உடனேயே டேவிட் ஐயா பொலிசில் என்ரி போட்டுட்டார், சந்ததியாரை காணேல என்று . காணேல என்று சொன்னதுமே விளங்கிவிட்டது புளொட் தான் கடத்தி விட்டது என்று சொல்லி. பிறகு அப்படியே போனது தான் போலீசாரும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.

தேசம்: அந்த நேர்காணலில் டேவிட்டையா சொல்லுகிறார் தன்னைக் கடத்த வந்தவர்கள் தன்னை கடத்தவில்லை உன்னைத்தான் கடத்த வந்தார்கள் ஆகவே நீ பாதுகாப்பாக இரு என்று சந்ததியாரிடம் சொல்லுறார். அப்படி இருந்தும் அந்த எச்சரிக்கையை மீறி இவர் திரிகிறார். அது எப்படி புளொட்டில் படுகொலைகள் நடக்கிறதை நீங்கள் முழுமையாக நம்பி இருந்தால் டேவிட் ஐயாவை கடத்தி போட்டு விடுவித்திருக்கிறார்கள் அதைத் தொடர்ந்து அவர் கவனம் இல்லாமல் வெளியில் திரிந்து.

அசோக்: டேவிட் ஐயா சந்ததியாரை கவனமாக பாதுகாப்பாக இருக்கும் படி சொல்லியுள்ளார். அதுல கொஞ்சம் கவனம் இல்லாமல் தான் இருந்திருக்கிறார் என நினைக்கிறேன். அதற்குப் பிறகு தோழர் சந்ததியாருக்கு வேண்டிய ஒருவர் கஷ்டத்தில் இருப்பதாக தெரிவித்து தான் சந்ததியாரை வர வைக்கிறார்கள். திட்டமிட்டுத்தான் வர வைக்கிறார்கள். டெலிபோன் பண்ணினதும் நம்பிட்டார் என்று நினைக்கிறேன். நான் கேள்விப்பட்டது அப்படித்தான் நம்பிக்கையான ஒரு ஆளை கொண்டு டெலிபோன் பண்ணி வெளியில வரவழைத்து தான் கடத்தினார்கள் என்று சொல்லி.

தேசம்: நான் நினைக்கிறேன் இந்த தகவல்கள் கூடுதலாக சரோஜினி அக்காவுக்கு தெரிந்து இருக்க வாய்ப்பு இருக்கு.

அசோக்: சரோஜினி அக்காவுக்கு தெரியும். சண்முகலிங்கத்துக்கும் தெரியும் அவர் இறந்து போய் விட்டார். ஒரே ஒரு ஆள் சரோஜினி அக்கா தான். ஏனென்றால் சரோஜினி அக்கா தான் அந்த காலகட்டத்தில் டேவிட் ஐயா, தோழர் சந்ததியார் ஆட்களோடு நெருக்கமாக இருந்தவங்க. ஆனால் தோழர் சந்ததியாரின் கடத்தலோடும், கொலையோடும் சம்பந்தப்பட்ட, இந்த விடயம் தெரிந்த பலர் இப்போதும் உயிருடன் இருக்காங்க. அவங்களின்ற மனச்சாட்சி அவங்களை உறுத்தாது என நினைக்கிறன். அவங்க வாய் திறக்க மாட்டாங்க.

தேசம்: தீப்பொறி உடனான தொடர்புகளையும் அவா தான் சொல்ல முடியும் என்று நினைக்கிறேன். இப்ப மத்திய குழுக் கூட்டம் நடந்து முரண்பாடுகள் ஏற்பட்டு அவர்கள் வெளியேறுகிறார்கள் தீப்பொறி சார்ந்த நபர்கள். அப்ப தீப்பொறி என்று பெயர் வைக்கவில்லை என்று நினைக்கிறேன். அதற்குப் பிறகு ஒன்றரை மாதங்களுக்கு பிறகு நீங்கள் தாயகத்திற்கு திரும்புகிறீர்கள். இந்தக் காலகட்டத்தில் உங்களுக்கு பாதுகாப்பு நீங்கள் தாயகத்தில் இருந்து இங்கு வந்த உடனேயே உங்களை கண்காணிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததா?

அசோக்: எங்களுக்கு படகு ஒழுங்கு செய்து தரப்படவில்லை.

தேசம்: அது திரும்பிப் போவதற்கு. மத்திய குழுக் கூட்டத்துக்கு பின் தளத்துக்கு வரும்போது நீங்கள் கண்காணிக்கப்பட்டீர்களா?

அசோக்: அதுல எந்த கண்காணிப்பும் இருக்கவில்லை. நோர்மலா தான் இருந்தது. அதற்குப் பிற்பாடு நடந்த விடயங்க ள்தானே எல்லாம். மத்தியகுழு கூட்டம் பிரச்சனை வெளியேற்றம் இவை எல்லாம்.. அதன்பின்தான் எங்களுக்கு நெருக்கடி தொடங்குகிறது.

தேசம்: அதற்குப் பிறகு ஒன்றரை மாதங்கள் ஏற்பாடு செய்து தரேல.

அசோக்: ஒன்றரை மாதங்கள் இருக்காது என நினைக்கிறேன் ஒரு மாதம் இருக்கும். கரையில் நிற்கும் போதுதான் கண்காணிப்பு போடப்பட்டது. பிறகு அவர்கள் ஒழுங்கு பண்ணிக் தந்துதான் நாட் டிக்கு தளத்திற்கு போன நாங்கள். இது பற்றி முன்னர் கதைத்துள்ளோம்.

தேசம்: அப்போ உங்களுக்கு அச்ச உணர்வு வரேல்லையா. கடலுக்குள்ளே ஏதாவது? உங்களை அனுப்பி போட்டு இலங்கை ராணுவத்துக்கு தகவல் கொடுத்து இருந்தால்…

அசோக்: அப்படி எங்களுக்கு அச்சம் இருக்கல. எங்களோடு வந்த ஓட்டி மிக நம்பிக்கையான ஆள். ஓட்டி மாதகலைச் சேர்ந்தவர். . குமரனுக்கு மிக நெருக்கமான ஒரு ஆள்.

தேசம்: யார் யாரெல்லாம் போனது.

அசோக்: நான், ஈஸ்வரன், முரளி, குமரன்.

தேசம்: இப்ப வந்து எண்பத்தி ஆறு முற்பகுதி இலங்கைக்கு போகிறீர்கள். 85 கடைசிப் பகுதியில் தான் போறோம்.

பாகம் 20: புளொட்டின் உடைவு – தீப்பொறி வெளியேற்றம்!!!

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! : தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 20 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 10.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

பாகம் 20:

தேசம்: நாங்கள் ஏற்கனவே கதைத்த மாதிரி 84, 85 காலகட்டங்களில் அரசியல் மிக வேகமாக நகர்ந்துகொண்டிருந்தது. எப்படி நடந்ததோ தெரியல. புற அரசியலில் ஞாயமான மாற்றங்கள் நடந்து கொண்டிருந்தது. ஏனென்றால் 85 ஆம் ஆண்டு ரெலோ ட்ரைனை அடித்து புரட்டியது. நான் நினைக்கிறேன் அது அந்தக் காலகட்டத்தில் நிகழ்ந்த மிகப்பெரிய தாக்குதல் என்று. அதுல 45 தொடக்கம் 50 வரையிலான ராணுவ வீரர்கள் கொல்லப்படுகிறார்கள். சாவகச்சேரி பொலீஸ் ஸ்டேஷன் அடிபடுது. அதுக்குப்பிறகு அனுராதபுரத்தில் புலிகள் போய் பொதுமக்களை கொல்கிறார்கள். கிட்டத்தட்ட 140 பேர் அதில் சாகினம்.

பிறகு குமுதினிப் படுகொலை அதுவும் அந்த காலகட்டத்தில் நடந்த மிக முக்கியமான தாக்குதலாக இருக்குது. அதோட ஈழ தேசிய விடுதலை முன்னணியின் இயக்கங்களின் இணைவுக்கான நடவடிக்கைகள் நடந்து கொண்டிருக்கு. திம்புப் பேச்சுவார்த்தை இப்படி அந்த காலகட்டம் அரசியல் ரீதியாக மிக வேகமாக துரிதமாக நகர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் இது அவ்வளவு தூரம் உணரப்படவில்லை என்று நினைக்கிறேன். அதுக்குள்ள உட் பிரச்சனை மிக தலைதூக்குற கால கட்டமாக இருக்குது. அந்தக் காலகட்டத்தில்தான் சந்ததியார் கடத்தப்படுகிறார்.

அசோக்: புளொட்டைப் பொறுத்தவரையில் ஒரு பார்வை இருந்தது முதலில் அதைப்பற்றி கதைத்து இருக்கிறோம் என்று நினைக்கிறேன். மக்கள் மயப்படுத்தலுக்கு பிற்பாடுதான் ஆயுதப் போராட்டம் என்று. மக்கள் இராணுவம், மக்கள் யுத்தம், வெகுஜன அரசியல், மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள நலன் சார்ந்த வேலைத் திட்டங்களுக்கே புளொட் முன்னுரிமை கொடுத்தது. அதன் கோட்பாடும் அதாகத்தான் இருந்தது. ஏனென்றால் வெறுமனமே இராணுவத்தின் மீதான இப்படியான தாக்குதல்கள் மக்களுக்கு பெரிய தீங்கை கொடுக்கும். ராணுவத்தைப் பலப்படுத்தவும், எமது மக்களை இராணுவம் கொன்று குவிக்கவும் இவ்வாறான தாக்குதல்கள் வழிசமைத்து விடும் என்ற அச்சம் எங்களுக்கு இருந்தது. அதுதான் நடந்தது. மக்கள் யுத்தத்துக்கான முதல் தயார்படுத்தல் என்பது மக்களை அரசியல் மயப்படுத்தல் மக்கள் மத்தியிலிருந்து மக்கள் ராணுவத்தை கட்டி எழுப்புதல். மரபுரீதியான ராணுவத்தை எழுப்புவது அல்ல ஒரு போராட்டம்.

தேசம்: குறிப்பாக தளத்தில் நீங்கள் அரசியல் வேலைகளில் ஈடுபட்டு இருந்தபடியால் இதுவும் ஒரு பெரிய அழுத்தமாக இருந்திருக்கும் என. மற்ற அமைப்புகள் ராணுவ நடவடிக்கையை முன்னெடுக்கும் போது நீங்கள் அப்படி முன்னெடுக்காமல் இருக்கிறது என்பது பெரிய அழுத்தங்களை கொடுத்து இருக்கும் என்று நினைக்கிறேன்.

அசோக்: மக்கள் மத்தியில் போய் வேலை செய்யும் போது அப்படியான எதிர்பார்ப்புகள் வரும். ஆனால் அந்த தாக்குதல்களால் ஏற்படுகின்ற எதிர் நடவடிக்கைகள் மக்களை பார்க்கும்போது அவர்கள் உணர்கிறார்கள். இந்த நடவடிக்கைகள் தீங்கானது என்று சொல்லி. அப்போ நாங்கள் விளங்கப்படுத்துகிறோம். பூரணமான விடுதலை என்பது இது அல்ல. இது பல்வேறு பிரச்சினைகளை கொண்டுவரும். நிறைய முரண்பாடுகள் ஏற்படுத்தும். பலமான சக்தியாக ராணுவம் பலம் பெறும் என்றெல்லாம் சொல்கிறோம். அக்காலங்களில் புலிகளின் சுத்த இராணுவவாதத்தை, அரசியல் அற்ற போக்கை பெரும்பான்மை மக்கள் ஆதரிக்கவில்லை என்றே நினைக்கிறேன். கடைசி காலங்களில் எல்லா இயக்கங்களும் அவர்களால் அழிக்கப்பட்ட பின்பு மக்கள் நிலை கையறு நிலைக்கு வந்த பின் மக்களால் என்ன செய்யமுடியும். புலிகளை ஆதரிப்பதை தவிர வேறு வழி இல்லைத்தானே. புலிகள் திட்டமிட்டே இவ்வாறு செய்தார்கள்.

அடுத்தது நீங்கள் கேட்டது சந்ததியார் வெளியேற்றம். சந்ததியார் வெளியேற்றம் 85 நடுப்பகுதியில் தான் நடந்தது. காலங்களை சரியாக என்னால் ஞாபகம் கொள்ள முடியாதுள்ளது. 85 நடுப்பகுதியில் மத்தியகுழு கூட்டம் ஒன்று நடைபெறுகின்றது. இதில் தோழர் சந்ததியார் வெளியேற்றம் தொடர்பாக கதைக்கப்படுகின்றது. எனவே நான் நினைக்கிறேன் 85 நடுப்பகுதியில் சந்ததியார் வெளியேறி இருப்பார் என.

தேசம்: சந்ததியார் எப்போது கடத்தப்படுகிறார்…

அசோக்: இந்த மத்தியகுழு கூட்டத்திற்கு பிற்பாடு தான் சந்ததியார் கடத்தபட்டு கொலை செய்யப்படுகிறார். இந்த மத்தியகுழு கூட்டம் நடந்த பின்புதான் ரகுமான் ஜான் தோழர், கேசவன், கண்ணாடிச் சந்திரன் வெளியேறுகின்றார்கள்.

தேசம்: பாலஸ்தீன பயிற்சி முடித்து தோழர் ரகுமான் ஜான் வந்துவிட்டாரா?

அசோக்: தோழர் ரகுமான் ஜான் பாலஸ்தீன பயிற்சி முடித்துவந்த பின் நாங்கள் ஒன்றாக கூடிய மத்தியகுழுகூட்டம் இதுதான். இந்த மத்திய குழு கூட்டம் முடிந்து வரும்போது தான் சொல்கிறார்கள் தாங்கள் வெளியேறப்போவதாக.

தேசம்: அதாவது நீங்கள் சொல்லுற மத்திய குழுக் கூட்டம் சந்ததியார் கடத்தப்பட்ட நேரம் நடக்கிற மத்தியகுழு கூட்டமா அல்லது அதற்கு முதலா…

அசோக்: இந்த மத்திய குழுக் கூட்டம் தோழர் சந்ததியார் வெளியேறிய பின்னர் நடந்த மத்தியகுழு கூட்டம். இக் கூட்டம் நடைபெறும் போது தோழர் சந்ததியார் வெளியேறி இருந்தாரே ஒழிய அந்த நேரம் கடத்தப்படவில்லை. இந்த கூட்டம் நடை பெற்ற பின்னர்தான் தோழர் சந்ததியார் கடத்தப்பட்டு கொலை செய்யப்படுகின்றார். காலங்கள் சொல்ல முடியாதுள்ளது. சரி பார்க்க வேண்டும். இந்தக் கூட்டத்தில் சந்ததியார் தொடர்பான விவாதம் நடந்தது. சந்ததியார் வெளியேற்றம் தொடர்பாக கேட்டபோது முகுந்தன் சந்ததியார் என்ன காரணத்திற்காக வெளியேறினார் என தனக்கு தெரியாது என்றும் அதற்கான காரணத்தை அவரிடமே கேட்க வேண்டும் என்கின்றார்.

தேசம்: யார் இந்த கேள்விகளை எழுப்பியது ?

அசோக்: தோழர் ரகுமான் ஜான் தான் சந்ததியார் தொடர்பான பிரச்சனை அங்கு வைத்தவர். தோழர் ரகுமான் ஜானின் கேள்விகளுக்கும், விமர்சனங்களுக்கும் முகுந்தனால் பதில் அளிக்கமுடியவில்லை. முகுந்தனுக்கும், அவரின் விசுவாசிகளுக்கும் பெரும் டென்சன். கூட்டத்தில் கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டன. சந்ததியார் தொடர்பாக பயங்கர விவாதம். முகுந்தனோட பெரிய முரண்பாடு. முகுந்தன் தனக்கும் சந்ததியார் வெளியேற்றத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று நியாயப் படுத்திக் கொண்டே இருந்தார். கூட்டம்முடிந்து வெளியே வந்த பின், தோழர் ரகுமான் ஜான், தோழர் கேசவன், கண்ணாடி சந்திரன் சொல்கிறார்கள் இயக்கத்தை விட்டு வெளியேறப்போறாம், உங்களின் நிலைப்பாடு என்ன என்று எங்களிடம் கேட்கிறார்கள். எங்களுக்கு பெரிய அதிர்ச்சி. இதை நாங்கள் எதிர்பார்க்க வில்லை. என்ன நடந்தது என்றால் கூட்டத்திற்கு வருவதற்கு முன்னரே அவங்க தீர்மானித்துவிட்டாங்க தாங்க வெளியேறுவது என்று. முதலே முடிவு பண்ணிட்டாங்க. ஆனா எங்க கிட்ட சொல்ல வில்லை. நாங்கள் தளத்திலிருந்து அந்த மத்திய குழு கூட்டத்துக்கு போறோம். இவர்களின் நோக்கம் எதுவுமே எங்களுக்கு தெரியாது.

தேசம்: இந்த மத்திய குழுக் கூட்டத்துக்கு முற்பாடு இதைப்பற்றி எதுவும் கதைக்கல…

அசோக்: எதுவும் கதைக்கேல, நாங்கள் பின் தளத்தில் இருக்கவில்லை தானே. நாங்கள் இரண்டு மூன்று நாளுக்கு முதல் தான் மத்திய குழுக் கூட்டத்துக்கு போறோம். எங்களை சந்தித்தவர்கள் இதைப் பற்றி கதைக்கவும் இல்லை.

தேசம்: அப்போ இந்த மத்திய குழுவில் இருந்து வெளியேறும் ஆட்கள் யார்?

அசோக்: தோழர் ரகுமான் ஜான், கேசவன், கண்ணாடி சந்திரன்

தேசம்: சலீம்?

அசோக்: சலீம் தோழர் இந்த காலத்தில் இலங்கையில் சிறையில் இருந்தவர். அப்போ வெளியேறுவது என்று சொல்லி முடிவெடுத்து அவர்கள், கூட்டம் முடிந்து வெளியில் வந்த சொன்னவுடன் எங்களுக்கு பெரிய அதிர்ச்சியாக போய்விட்டது. எங்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. இவர்கள் வெளியேறினால் எங்களையும் முகுந்தன் ஆட்கள் சந்தேகிப்பார்கள் பெரும் ஆபத்து என்பது எங்களுக்கு தெரியும். தோழர் குமரன் குழம்பி விட்டார். குமரனுக்கு இவர்களோடு வெளியேறும் எண்ணம் இருந்தது. நான் குமரனுக்கு சொன்னேன். நாங்கள் நாலு பேரும் நாட்டில் இருந்து வந்திருக்கிறோம். நாட்டுக்கு போறோம். நாட்டுக்குப் போய் பின்தள பிரச்சினையை சொல்லுறோம். அங்கு போய் நாம் முடிவு பண்ணுவோம் என்று. கூட்டத்தில் பல்வேறு கொலைகள் தொடர்பாக எல்லாம் கதைக்கப்பட்டது. எல்லாத்தையும் முகுந்தன் மறுத்துக் கொண்டிருந்தார். மத்திய குழுக் கூட்டத்தில் கடைசியும் முதலுமாக உட் கொலை பற்றி கதைக்கப்பட்டது அன்றைக்குத்தான்.

தேசம்: அதுதான் முதல் தடவையும் கடைசித் தடவையும்…

அசோக்: கதைத்து பிரச்சனைப்பட்டு அவங்கள் வெளியேறிவிட்டாங்க. நாங்களும் அவங்களோட சேர்ந்து கதைத்து பிரச்சனைபட்டு விட்டோம். என்ன செய்வது என்று தெரியவில்லை. நான் நினைக்கிறேன் . 2 ,3 நாட்களுக்கு பிறகு அவங்க வெளியேறிவிட்டாங்க. எங்களை நம்பி, எங்க கதைகளை நம்பி போராட்டத்திற்கு வந்த ஆயிரக்கணக்கான மக்களும், தோழர்களும் நாட்டில இருக்காங்க. அத்தோட நாங்க பயிற்சிக்காக பின் தளம் அனுப்பிய தோழர்களின் நிலை என்னவாகும். நாங்க வெளியேறிய பின் அவர்களின் நிலை மிக மோசமாகி சந்தேகப்பட்டு அவர்களின் நிலமை கொடுமையாகிவிடும் . அதனால தளத்திற்கு போய் நிலமையை சொல்வோம் என்று நாங்க முடிவு பண்ணினோம். இவங்க வெளியேறிய பின்பு எங்களின் நிலை ஆபத்தாகி விட்டது.

தேசம்: நாங்க என்று சொல்லி யாரை சொல்லுகின்றீர்கள்?

அசோக்: நான், ஈஸ்வரன், குமரன், முரளி. நாங்கள் அதற்கு பிறகு ஒரு வாரம் அங்கேயே நின்றோம். நாட்டுக்கு போவதற்கான நடவடிக்கைகளை எடுத்து எங்களுக்கான போக்குவரத்து boat வசதி எதையும் முகுந்தன் ஆட்கள் செய்து தரவில்லை.

தேசம்: நெருக்கடி தரேலயா…

அசோக்: நெருக்கடி தரேல. ஆனால் கண்காணிக்கப்பட்டோம். மத்திய குழுக் கூட்டம் நடந் து சுமார் ஒரு மாதம் நாங்க அலைக்கழிக்கப்பட்டோம்.

தேசம்: மத்திய குழுக் கூட்டம் நடந்து ஒரு மாதம் வரை நீங்கள் பின் தளத்தில் தான் இருக்கீங்க?

அசோக்: எங்களை நாட்டிக்கு போவதற்காக கோடியாக்கரைக்கு போக சொன்னாங்க. கரைக்கு நாங்கள் வந்துவிட்டோம். எங்களுக்கான எந்த வசதியும் செய்து தரப்பட இல்லை. பிறகு பார்த்தால் புதிதாக இரண்டு பேர் எங்கள் பாதுகாப்புக்கு என்று நாங்க தங்கி இருந்த இடத்திற்கு அனுப்பப்பட்டாங்க. பிறகு காலப்போக்கில் அவங்களில் ஒருவர் சொல்லி விட்டார் எங்களை உளவு பார்க்கத்தான் முகுந்தன் தங்களை அனுப்பியதாக.

தேசம்: யார் ஆள் அது…

அசோக்: அந்தத் தோழர் குமரனுக்கு தெரிந்தவர். பெயர் ஞாபகம் இல்லை. குமரனிட்ட எல்லாம் சொல்லிட்டார் உங்களை உளவு பார்க்க தான் தங்களை அனுப்பினது என்று. அப்போ எங்களுக்கு தெரிந்தது நெருக்கடியான கட்டத்தில் தான் நாங்கள் இருக்கிறோம் என்று. பிறகு நாங்களாகவே வோட் ஒழுங்கு பண்ணி நாட்டிக்கு போகலாம் என்று சொல்லி இருக்கும் போதுதான் முகுந்தன் boat ஒழுங்கு பண்ணி போறதுக்கு ஏற்பாடு செய்தவர்.

தேசம்: அதற்கு பிறகு நீங்கள் அவர்களை சந்திக்கவில்லையா?

அசோக்: அதன் பிறகு தோழர் ரகுமான் ஜான், கேசவன், கண்ணாடிச் சந்திரன் யாரையுமே நாங்க சந்திக்க முடியவில்லை. அவர்களும் எங்களை சந்திக்க முயலவில்லை. அதன்பின் பல காலங்களின் பின் நான் இங்கு வந்த பின்தான் தொடர்பு கிடைத்தது.

தேசம்: நீங்கள் அவர்களை கேட்கவில்லையா உங்களுக்கு பெரிய பொறுப்பு இருக்கு…

அசோக்: இதை பற்றி உரையாடல் நடந்தது. நாட்டிக்கு வரும்படி கேட்டோம். அவர்கள் வெளியேறி அப்படியே தளத்திற்கு வந்திருக்க முடியும். வந்திருந்தால் தளத்தில் இருந்த தோழர்களோடு இணைந்து உட்கட்சிப்போராட்டத்தை நடாத்தி புளொட்டில் ஒரு மாற்றத்தை கொண்டு வரமுடிந்திருக்கும். அதற்கான திறமையும் ஆற்றலும் ரகுமான் ஜான் தோழரிடம் இருந்தது. புளொட்டில் அரசியல் ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் மிகவும் ஆற்றல் கொண்டவராக இருந்த ஒரே ஒரு ஆள் என்றால் அது ரகுமான் ஜான் தோழர்தான். ஆனா அவங்க முயற்சிக்கவில்லை.

தேசம்: பொறுங்கோ வாரேன். நீங்கள் சொல்லுற இந்த உரையாடல் மத்திய குழுவில் நடந்ததா மத்திய குழுக்கு வெளியில் நடந்ததா?

அசோக்: வெளியில் நடந்தது. காந்தன் இங்க பிரான்சிக்கு வந்தபோது நான் இந்த கேள்வியை கேட்டேன். ஏன் நீங்கள் எங்களோட தளத்திற்கு வரல. வந்திருந்தால் எப்படியாவது ஒருமாற்றத்தை கொண்டு வந்திருக்கமுடியும் என்று.

தேசம்: காந்தன் என்று சொல்லுறது?

அசோக்: ரகுமான் ஜான் தோழரை. அப்பவே நாங்கள் கேட்டோம் நீங்கள் வாங்கோ எங்களோடு. நாங்கள் போவோம். நாட்டுக்குப் போய் சகல பிரச்சினைகளையும் கதைப்போம். ஏனென்றால் எங்களை நம்பி நிறைய தோழர்கள் முகாமில் இருக்கிறார்கள். தளத்திலும் இருக்கிறார்கள். விட்டுட்டு நாங்கள் வெளியேற இயலாது. ஏனென்றால் நாளைக்கு அவங்களுக்கு ஆபத்து. நாங்கள் சொன்னோம், நாங்கள் போய் உட்கட்சிப் போராட்டம் ஒன்றை நடத்துவோம் இங்கேதான் நடத்த முடியாதே.

தேசம்: அதற்கு அவர்களுடைய பதில் எப்படி இருந்தது?

அசோக்: இதை இனி திருத்துவதற்கான சாத்தியங்கள் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். பிரயோசனமில்லை. நீங்கள் போறது என்றால் போங்கள் என்று சொல்லி. உண்மையிலேயே இவங்கள் வந்திருந்தா ஃபைட் பண்ணி இருக்கலாம்.

தேசம்: திருத்துவதற்கு வாய்ப்பில்லை என்றால் இதற்கு முதலும் இதைப்பற்றி கதைக்கவே இல்லை தானே. ஒரே கூட்டத்தில் நீங்கள் திருத்த ஏலாது தானே அமைப்பை.

அசோக்: இதை வரலாற்று ரீதியாக பார்த்தோம் என்றால் எல்லாரிலையும் பிழை இருக்கு. அதை யாரும் உணர்ந்ததாக இல்லை. இயக்கத்தின் அடிப்படை பிரச்சனையே உட்கட்சி ஜனநாயகம் இல்லாமல் போனதுதான். அதனை நாங்க உறுதியாக நிலை நிறுத்தி இருக்கவேண்டும். அத்தோடு அரசியல் கல்வி மேல்மட்ட தோழர்களுக்கு, நிர்வாகிகளுக்கு இல்லாமை. இது பற்றி முன்னமே கதைத்திருகிறோம்.

புளொட்டின் ஆரம்ப உருவாக்கமே தனிநபர்களின் விருப்பங்களில் தன்னிச்சையான போக்குகளினால்தான் கட்டமைப்படுகின்றது. எல்லா அதிகாரங்களையும் முகுந்தன் வைத்துக் கொண்டது. தனிநபர் அதிகாரங்களை நாங்க இல்லாமல் செய்திருக்கவேண்டும். கூட்டுமனநிலை கூட்டுசெயற்பாடுகளுக்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்கப்படவில்லை. கடைசியாக நடந்த அந்த மத்தியகுழு கூட்டத்தில் ஆளுக்கு ஆள் குற்றம் சுமத்திக் கொண்டதே மிச்சம். நாங்க முகுந்தன் ஆட்களை குற்றம்சாட்ட அவர்கள் எங்களை குற்றம்சாட்ட எந்தவித நியாங்களும் தீர்வுகளும் இன்றி அந்த கூட்டம் முடிஞ்சி போய் விடடது குறைந்தபட்சம் பரஸ்பரம் சுயபரிசீலனை செய்ய யாரும் தயார் இல்லை நான் உட்பட. இதுல முகுந்தன் உட்பட எல்லாரும் குற்றவாளிகள். புளொட் உடைவில எல்லாருக்கும் பாத்திரம் இருக்கு. புளொட் ஆரோக்கியமான அமைப்பாக கட்டி அமைக்கப்பட வேண்டிய அமைப்பு. ஆரோக்கியமான திசை நோக்கி போகவேண்டிய அமைப்பை இந்த அளவுக்கு பாழ்படுத்தியதற்கு எல்லாருக்கும் பங்கு இருக்கு.

தேசம்: குறிப்பாக நான் நினைக்கிறேன் மத்திய குழுவிலும் கட்டுப்பாட்டு குழுவிலும் இருந்தவைக்கு பெரும் பொறுப்பு இருக்கு. ஏனென்றால் முகுந்தன் இவ்வளவு அதிகாரத்தோடு ஆரம்பத்திலிருந்தே இருக்கவில்லை தானே.

அசோக்: அதிகாரத்தை முகுந்தன் குவித்ததற்குக் காரணம் எங்களுடைய பலவீனம். நாங்கள் மத்திய குழுவில் தவறுகளை சுட்டிக்காட்டி ஆரம்ப காலத்திலேயே ஃபைட் பண்ணி இருந்தால். ஏனென்றால் நீங்களும் முகுந்தனுக்கு விசுவாசமாக இருக்கும் வரைக்கும் மௌனமாக இருக்கிறீர்கள். பிறகு உங்களுக்கு உள்ள முரண்பாடு வரும் போது தான் சிக்கல் வருகிறது.

தேசம்: மற்றது இந்த காலகட்டம் வரைக்கும் குறிப்பிட்டு சொல்லக்கூடிய படுகொலைகளைப் பற்றி ஏதாவது வைக்கப்பட்டதா?

அசோக்: முன்னர் கதைக்கப்படவில்லை. ஒரு தடவை நான் கதைத்து முகுந்தன் என்னிடம் ஆதாரம் கேட்டு டென்சன் ஆனதுபற்றி முன்னர் சொல்லி உள்ளேன். யாரும் கதைத்ததில்லை. ஆனால் இந்த மத்தியகுழு கூட்டத்தில் கதைக்கபட்டது. கதைத்த எங்களிடம் உறுதியான எந்த ஆதாரமும் இல்லை. இந்தக் கொலைகள் தொடர்பாக எந்த ஆதாரத்தோடையும் யாரும் கதைக்கவில்லை. எவிடன்ஸ் ஒருத்தருட்டையும் இல்ல. பொதுவாகவே பி கேம்ப் (B – Basic Camp) பில் ரோச்சர் நடக்குது கொலை என்று சொல்லப்பட்டது. அப்போ முகுந்தனுக்கு ஒரு சாதகமாக போயிட்டு. முகுந்தன் எப்பவுமே ஆதாரம் கேட்பார்.

தேசம்: எத்தனை பேரின் பெயர்கள் வைக்கப்பட்டது?

அசோக்: பெயர் எதுவும் சொல்லவில்லை. படுகொலைகள் நடக்குது கேம்பில் ரோச்சர் நடக்குது என்ற அடிப்படையில்தான் பிரச்சனை விவாதம் நடந்தது. அது ஆரோக்கியமான உரையாடலுக்கான நியாமான சூழலாக இருக்கல்ல. ஒரே டென்சனாகவே இருந்தது.

தேசம்: அப்போ அதுவும் ஒரு வதந்தியாக தான் வைக்கப்பட்டது.

அசோக்: வதந்தியாக தான் கதைக்கபட்டது. எல்லாத்தையும் முகுந்தன் மறுத்துக் கொண்டிருந்தார்.

தேசம்: அப்போ ஆதாரங்கள் ஒன்றும் இருக்கல.

அசோக்: ஆதாரங்கள் ஒன்றுமில்லை.

தேசம்: இன்றைக்கு வரைக்கும் கொல்லப்பட்டவர்களது பெயர்கள் ஏதாவது பேசப்பட்டதா?

அசோக்: பிற்காலத்தில் நிறைய பெயர்கள் வந்திருக்கு. குறைந்தது 25 பெயராவது வெளியில வந்து இருக்கும் என்று நினைக்கிறேன். எனக்கு பெயர்களை ஞாபகம் இல்லை. ஆனால் தோழர்கள் சொல்லியிருக்கிறார்கள். டார்ச்சர், படுகொலைகள் பின் தளத்தில் நடந்திருக்கு அதை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

தேசம்: எப்ப இருந்து எப்ப வரைக்கும்?

அசோக்: 84இல் இருந்து 85 வரைக்கும் நடந்திருக்கு.

தேசம்: 84 முடிவு பகுதியில் இருந்தா?

அசோக்: B camp போட்டதிலிருந்து. B camp என்றால் basic camp. அந்த கேம்பில தான் சித்திரவதைகள் , கொலைகள் நடந்ததாக சொல்லப்படுகிறது. காலங்களை சரியாக சொல்லமுடியாதுள்ளது.

தேசம்: நானறிந்த வரைக்கும் சொல்லப்பட்ட விஷயம் என்னவென்றால் புளொட்டில் ஆட்கள் கதைத்து அளவுக்கு அல்ல ஒரு கொலை என்றாலும் கொலைதான். ஒரு கொலை என்றாலும் அது மனித உரிமை மீறல் தான். ஆனால் வெளியில் கதைக்கப்பட்டது அப்படி என்றால் 20 – 25 பேருக்குள்ள அல்லது ஆகக் கூடியது 50 பேர் வரை கொலைகள் நடந்து இருக்கு என்று. அதற்கான சாட்சியங்களை ஏன் அதை எடுத்தவர்கள் வைக்க இயலாமல் போனது. சாட்சியங்கள் இருக்கலாம் மத்திய குழுவில் நீங்கள் வைத்து தானே இருக்க வேண்டும். மத்திய குழுவில் 20 பேரில் உமா மகேஸ்வரன் சங்கிலி வேற யார் அந்தப் பக்கம் இருந்தார்கள்

அசோக்: மாணிக்கதாசன் போன்ற ஆட்கள்தான். ஆனால் எல்லாவற்றிக்கும் முகுந்தனே பதில் அளிப்பார். இவங்க அவரோடு சேர்ந்து ஆமா போடுவார்கள். மத்தியகுழுவில் நாங்க சமநிலை கொண்டிருந்தம். ஆனால் எங்களிட்ட எந்த அதிகாரமும் பலமும் இல்லைத்தானே. முகுந்தன் நினைத்திருந்தால் அன்றைக்கு எங்களை கொலை செய்திருக்க முடியும். அந்த அளவிற்கு திமிர்த்தனமும் ஆணவமும் அவங்களிடம் இருந்தது. நாங்க வெறும் எண்ணிக்கைதானே ஒழிய எங்களிடம் எந்த பவரும் இல்லை.

தேசம்: மற்றது உங்கட பக்கத்துலயும் …. ட்ரைனிங் எடுத்த ஆட்கள் இருந்திருக்கிறீர்கள். ஆரம்பகால உறுப்பினர்கள் இருந்திருக்கிறீர்கள். அடுத்தது தளம் முழுமையாக உங்கட கட்டுப்பாட்டில்தான் இருந்தது.

அசோக்: தளத்தின் நிலமை வேறு. பின்தளம் அப்படியல்ல. அதிகாரமும் ஆயுதமும் யாரிடம் இருக்கிறதோ அவர்களே அனைத்தையும் தீர்மானிக்கும் சக்திகள். பின்தளத்தில் நாங்கள் எல்லோரும்வெறும் நபர்கள்தான். உண்மையில் ரகுமான் ஜான், கேசவன் எல்லாரும் எஙகளோடு தளம் வந்து உட்கட்சிப்போரட்டம் நடாத்தி இருந்தால் முகுந்தன் ஆட்களால் எதுவுமே செய்திருக்க முடியாது. ஆரம்ப காலத்திலேயே இந்த தவறுகளுக்கு எதிராக உட்கட்சிப்போராட்டத்தை இவர்கள் பின்தளத்தில் நடாத்தி இருந்தால், ஃபைட் பண்ணி இருந்தால் அதனுடைய தாக்கம் தளத்திலும் இருந்திருக்கும். தளத்தில் நாங்கள் சப்போர்ட் பண்ணி இருப்போம். முகாமில் தோழர்களும் சப்போர்ட் பண்ணி இருப்பாங்க. இவர்கள் யாரும் ஃபைட் பண்ணவில்லை. நான் கலந்து கொண்ட மத்திய குழு அதாவது 84 ஜனவரியிலிருந்து இவங்கள் வெளியேறும் வரைக்கும் மத்திய குழுக் கூட்டங்கள் எதிலேயும் வந்து உட் கொலைகள், இயக்க பிரச்சனைகள் தொடர்பாக கேட்டு ஃபைட் பண்ணினது இல்லை. வெளியேற்றத்திற்கு அன்றைக்கு நடந்த ஃபைட் தான் கடைசியும் முதலுமான பைட்.

தேசம் : நீங்கள் ஒரு குற்றச்சாட்டை வைக்கும் போது அதை ஆதாரபூர்வமாக வைக்க வேண்டும். அந்த குற்றச்சாட்டை மக்கள் முன்னிலையிலும் கொண்டுபோய் இருக்கலாம் தானே. மக்கள் அமைப்பு தானே. மற்றது தளம் முழுதாக உங்களுக்கு விசுவாசமாக இருக்கிற அல்லது உங்கட பக்கம் நிக்குது. அப்படி இல்லா விட்டாலும் அதை உங்கட பக்கம் எடுத்திருக்க வேண்டும்.

அசோக்: இப்ப யோசித்தால் நாங்கள் ஆதாரபூர்வமாக நாங்கள் முதலில் ஃபைட் பண்ணி இருந்தால் புளொட்டை சரியான திசைவழியில் எடுத்துக் கொண்டு போயிருக்கலாம். இல்லாட்டி இவங்கள் எங்களோடு வந்து இருந்தாலும் கூட, குறிப்பிட்ட ஆட்களை வெளியேற்றி போட்டு நாங்களே புளொட் என்று சொல்லி உரிமை கோரி புளொட்டை வழிநடாத்தி இருக்கமுடியும். ஏனென்றால் நாங்கள் கடைசியில் தளத்தில் உட்கட்சிப் போராட்டம் ஒன்று நடத்தி தானே வெளியேறினோம்.

தேசம்: புளொட்டில் உமாமகேஸ்வரனில் குற்றம்சாட்டி வெளியேறின ஆட்களும் கறைபடிந்த கைகள் தான். நான் உங்களை குறிப்பிட்டு சொல்ல வரவில்லை. கண்ணாடி சந்திரன் சில கொலைகளுக்கு பொறுப்பாக இருந்திருக்கிறார். அந்தக் கொலைகளை மேற்கொண்ட மல்லாவி சந்திரன் இன்னும் உயிரோடு இருக்கிறார். அமெரிக்காவில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இதுல என்ன தார்மீகம் இருக்கு எவ்வாறானதொரு நியாயம் இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை.

அசோக்: விமர்சனத்திற்கு உரிய விடயம் தான். நிறைய தோழர்களுடன் கதைக்க வேண்டும். சந்ததியார் இறந்துட்டார். கேசவன் இறந்துட்டார். இப்ப இருக்கிறது நான், முரளி தோழர் இருக்கிறார். குமரன் இறந்துட்டார். மத்திய குழுவில் இருந்த சரோஜினி இருக்கிறார். கண்ணாடி சந்திரன் இருக்கிறார். ரகுமான் ஜான் இருக்கிறார். அடுத்தது பாபுஜி, ராஜன் இருக்கிறார்கள். இவர்கள் கதைக்க வேணும் இந்த பிரச்சினைகள் தொடர்பாக. உண்மைகளை கதைக்க வேண்டும்.

தேசம்: இது ஒரு சில நபர்கள் சம்பந்தப்பட்டது இல்லை. கிட்டத்தட்ட மிகப் பெரிய உறுப்பினர்களைக் கொண்ட ஒரு பெரிய அமைப்பு. சில நூறு, சில ஆயிரம் உறுப்பினர்கள். இவர்களுடைய செயற்பாடுகளால் அல்லது இவர்களுடைய முடிவுகளால் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் யுவதிகள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதை அவ்வளவு தூரம் பொறுப்பு கூறாமல் போக இயலாது.

அசோக்: சரியான திசையை நோக்கி போயிருந்தால் பிற்காலத்தில் புளொட். இடதுசாரி இயக்கம் என்ற ஒன்றிக்கு முன்மாதிரியாக இருந்திருக்க முடியும். அது இல்லாமல் போய்விட்டது.

தேசம்: நான் நினைக்கிறேன் இந்த பிரிவுக்கு பிறகு அங்க பெருசா செய்ய ஒன்றுமில்லை. பிறகு எப்போ சந்ததியார் மத்திய குழுவுக்கு வராமல் விடுகிறார். பிறகு கடத்தப்பட்டதாக சொல்லப்படுது.

அசோக்: நான் நினைக்கிறேன் 85 செப்டம்பரில் கடத்தப்படுகிறார். சரியாக ஞாபகம் இல்லை.

தேசம்: கடத்தப்பட்ட சில நாட்களிலேயே ….

அசோக்: ஓம். கடத்தப்பட்ட சில நாட்களிலேயே கொல்லப்படுகிறார். அதுக்குப் பிறகு ஒரு மத்திய குழுக் கூட்டம் நடக்கிறது.

தேசம்: சந்ததியார் கொல்லப்பட்டதற்கு பிறகு…

அசோக்: ஆம். அந்த மத்திய குழுக் கூட்டம் எப்படி என்றால் நாங்கள் நாட்டில் போய் தள மாநாடு நடத்தி, அதில் தீர்மானங்கள் எடுத்து பின் தளத்தில் பிரச்சனைகளை கதைப்பதற்கான தள கமிட்டி தெரிவு செய்யப்பட்டு அந்த தோழர்களோடு பின்தளம் வந்த பின் நடந்த மத்திய குழு கூட்டம் அது .

தேசம்: அதைப்பற்றி பிறகு கதைப்போம்.

அசோக்: அதுதான் இறுதியாக நாங்கள் கலந்து கொண்ட கூட்டம்.

(படங்கள்: சீலனின் தொடரில் இருந்து.)

பாகம் 19: தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் நிலை – கழகத்தில் பெண்களின் பாத்திரம்!

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! : தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 19 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 10.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

பாகம் 19

தேசம்: தோழர் நாங்கள் இவ்வளவு நேரம் கதைத்துக் கொண்டு இருக்கிறோம் இது ஒரு முற்றுமுழுதான ஆண்களுடைய அமைப்பு மாதிரி. ஆனால் நிறைய பெண்கள் பங்கு பெற்றிருக்கிறார்கள். கூடுதலாக பாசறைகளில் நிறைய பேர் கலந்து கொண்டிருக்கிறார்கள். அதேபோல நீங்கள் முதல் ஒரு தடவை குறிப்பிட்டது போல மத்திய குழுவிலும் சரோஜினி இருந்திருக்கிறார்.

அசோக்: சரோஜினிதேவி இருந்தவர்.

தேசம்: அப்போ இந்த பெண்களுடைய பாத்திரம் எப்படி இருந்தது. உண்மையிலேயே மத்திய குழுவில் 20 பெயரில் ஒரே ஒருவர்தான் இருந்திருக்கிறார். ஆனால் அந்த சூழலும் அப்படித்தான் இருந்திருக்கு. பெண்கள் அரசியலுக்கு வருவது மிக குறைவாக இருந்த காலகட்டம். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் பெண்களின் பங்களிப்பு எப்படி இருந்தது?

அசோக்: நான் அதை பற்றி பெரிதாக கதைக்கவே இல்லை . எல்லாம் ஆண் ஆதிக்க சிந்தனைதான் நமக்கு. உண்மையில் பெண்கள் அமைப்பு பற்றி கதைக்காமைக்கு காரணம், இதுபற்றி தனியாக கதைக்கலாம் என்றிருந்தேன். அத்தோடு பெயர்கள் குறிப்பிட்டு உரையாடுவதில் எனக்கு தயக்கம் இருந்தது.

புளொட்டின் பெண்கள் அமைப்பு யாழ்ப்பாணத்திலும் ஏனைய மாவட்டங்ளிலும் மிகவும் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்தது.

யாழ்ப்பாண மாவட்டத்துக்கு பொறுப்பாக செல்வி, யசோ, நந்தா இருந்தவங்க. அப்படி ஒவ்வொரு மாவட்டங்களிலும் பொறுப்பாளர்கள் இருந்தார்கள். அவங்களுக்கும் அரசியல் பாசறைகள், வகுப்புக்கள் நடாத்தப்பட்டன. பெண்ணியம் தொடர்பாகவும் தேசிய விடுதலைப்போராட்டம் வர்க்க விடுதலை இதன் இணைவு, முரண்பாடு, போதாமை தொடர்பான விமர்சனங்ளோடு கூடிய அரசியல் அறிவை பெண்கள் அமைப்பின் தோழர்கள் பலர் பெற்றிருந்தனர். அந்தளவிற்கு அரசியல் சிந்தனை இருந்தது. ஏனென்றால் மாணவர் அமைப்புகளில் இருப்பவர்கள் பெண்கள் அமைப்புகளில் இருப்பார்கள். கூடுதலாக பெண்கள் அமைப்புகளில் கல்வி ஊட்டல்கள் நடந்தது.

அந்த நேரத்தில் தோழி என்றொரு பெண்ணிய அரசியல் சஞ்சிகை வெளியிடப்பட்டது. செல்வி அதற்கு பொறுப்பாக இருந்தார். அரசியல்பார்வை கொண்ட கலை, இலக்கிய சஞ்சிகையாக அது இருந்தது. அதைப் பார்த்தீர்கள் என்றால் பெண்கள் எதிர் நோக்கும் பல்வேறு பிரச்சனைகள் பற்றிய ஆக்கங்கள் அதில் வெளிவந்துள்ளது.

மத்திய குழுவில் ஒரு பெண் இருந்தது தொடர்பாக கேட்டீர்கள் தானே. மத்திய குழுவில் பெண் பிரநிதித்துவம் மிக மிக குறைவு. தோழர் சரோஜினிதேவி மாத்திரம் தான் இடம் பெற்றிருந்தார். உண்மையிலேயே அதை கூட்டியிருக்கலாம். நிறைய பெண்கள் இருந்தவர்கள். திறமை வாய்ந்த அரசியல் வளர்ச்சி கொண்ட பெண் தோழர்கள் தளத்தில் இருந்தார்கள். உண்மையிலேயே 20 பேர் கொண்ட மத்திய குழுவில் குறைந்தபட்சம் நான்கு பேராவது பெண்கள் இருந்திருக்க வேண்டும். அதற்கான தகுதியும், ஆற்றலும் வாய்ந்தவர்கள் தளத்திலிருந்தார்கள். ஆனால், அதற்கான எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. அதைப் பற்றி யாரும் கதைக்கவும் இல்லை. நான் உட்பட எல்லார்கிட்டயும் அந்தத் தவறு இருக்கு. கட்டுப்பாட்டு குழுவில் இருந்தவர்கள் அதைப்பற்றி யோசித்திருக்க வேண்டும். ஆரம்ப காலத்தில் மத்திய குழுவில் இருந்தவர்கள் அதைப்பற்றி யோசித்திருக்க வேண்டும். அது நடக்கல்ல.

தேசம்: அது மட்டும் இல்லை. இருந்த அந்தப் பெண் தோழருக்கும் பெரிய பாத்திரம் கொடுக்கப்படவில்லை. சம்பிரதாயத்துக்கு அவர்களை வைத்திருந்த போல. சரோஜினிதேவி பற்றி ஒரு குறிப்பான அறிமுகத்தை வைக்கிறது நல்லம் என்று நினைக்கிறேன்.

அசோக்: அவர் ஆரம்பகால உறுப்பினர். காந்தியத்துக்கூடாக வந்தவர். தோழர் சண்முகலிங்கம் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். மலையகத்தில் வேலை செய்த ஒரு இடதுசாரி தோழர். காந்திய குடியேற்றங்களில் முன்னணியில் இருந்த தோழர் அவர். அவர் சரோஜினிதேவியினுடைய தம்பி. தோழர் சண்முகலிங்கம் கனடாவில் இறந்திட்டார். சரோஜினிதேவி இப்ப கனடாவில் தான் இருக்கிறார்கள்.

தேசம்: அதைவிட நான் நினைக்கிறேன் பார்த்தனுடைய ஜென்னியும் முக்கியமான ஆளாக இருந்தவா.

அசோக்: குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு ஜென்னி இந்தியாவில் கம்யூனிகேஷன் பயிற்சி முடித்து தளத்துக்கு வாராங்க. ஒரு கட்டத்தில் தளத்துக்கான பெண்கள் அமைப்பை அவர்தான் பொறுப்பெடுக்கிறார்.

தேசம்: இதில உண்மையா பெண்களின் பங்களிப்பை பொறுத்தவரைக்கும் ஆக பெண்கள் அமைப்புக்கு மட்டும்தான் பெண்கள் பொறுப்பாக போடப்படுதா? விடுதலைப் புலிகளிலும் இதே பிரச்சனை தானே இருந்தது. விடுதலைப்புலிகள் பெண்களும் சரிசமமாக யுத்தகளத்தில் ஈடுபட்டிருந்தாலும் கூட பதவிகள் பொறுப்புகள் என்று வரும்போது பெண்கள் அமைப்புக்கு மட்டும்தான் அவர்கள் பொறுப்பாக இருந்திருக்கிறார்கள். அரசியல் பிரிவுகளில் அவர்களுடைய பாத்திரம் பெருசா…

அசோக்: ஒரு காலகட்டத்தில் புளொட்டில் முரண்பாடுகள் வந்த பிற்பாடு மாநாட்டுக்கு முன்னர் என்று நினைக்கிறேன் நேசன் ஆட்கள் வெளியில போனபிறகு நேசனின் இடத்துக்கு பெண் தோழர் தான் நியமிக்கபட்டவர். வனிதா என்று நினைக்கிறேன்.

தேசம்: யாழ் மாவட்ட பொறுப்பாளராக

அசோக்: ஓம். யாழ்ப்பாண மாவட்ட பொறுப்பாளராக இருந்த வங்க.

தேசம்: இதில 85 ஆம் ஆண்டு கால கட்டங்களில் என்று நினைக்கிறேன் மணியம் தோட்டத்தில் மூன்று பெண்கள் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாகவும் அது புளொட் என்று சொல்லியும் ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியத்தில் புஷ்பராஜா கூட பதிவு செய்திருக்கிறார். அது சம்பந்தமாக நீங்கள் என்ன அறிந்திருக்கிறீர்கள்.

அசோக்: மணியம் தோட்டத்திலிருந்து பெண்களுடைய சடலம் எடுக்கப்பட்டதாக கதை ஒன்று வந்தது. ஆனால் அதற்கும் புளொட்டுக்கும் சம்பந்தமில்லை.

தேசம்: அப்படி உடலங்கள் உண்மையில் எடுக்கப்பட்டதா?

அசோக்: எடுக்கப்பட்டதாக ஒரு செய்தி. எந்த அளவுக்கு உண்மை என்று தெரியாது. ஆனால் புளொட் என்று சொல்லி வதந்தி உருவாக்கப்பட்டது. ஆனால் உண்மையில் அதற்கும் புளொட்டுக்கும் தொடர்பில்லை என்று நினைக்கிறேன். அதற்கான சாத்தியம் இல்லை.

தேசம்: மாவட்ட பொறுப்பாளர்களாக இருந்த நேரம் அரசியல் பிரச்சார வேலைகளில் ஈடுபட்டு இருப்பார்கள் என்று நினைக்கிறேன். அவர்களுடைய பாத்திரம் எவ்வாறு மதிக்கப்பட்டது? அது அங்கீகரிக்கப்பட்டதா? அதற்கான அங்கீகாரம் இருந்ததா?

அசோக்: எல்லா மாவட்டங்களிலும் விடுதலைக்கான உத்வேகம் இருந்தது தானே. அந்த அடிப்படையில் பெண்களின் பாத்திரம் மதிக்கப்பட்டது. பெண்கள் தொடர்பாக ஒரு வித்தியாசமான, இரண்டாம் பட்சமான பார்வை இருக்கவில்லை. சமநிலையான போக்கு, கண்ணோட்டம் இருந்தது என்று நான் நினைக்கிறேன்.

தேசம்: எல்லா இயக்கங்களுக்குள்ளையும் நடந்த பல்வேறு முரண்பாடுகள் சகோதர படுகொலையாக இருக்கட்டும் எல்லாம் முரண்பாடுகளிலும் பெண்கள் மீது தாக்குதல் நடத்தப்படாவிட்டாலும் கூடுதலாக அவர்களுடைய வாழ்க்கையும் எதிர்காலமும் பாதிக்கப்பட்டிருக்கு.

அசோக்: பிற்காலத்தில் பாதிக்கப்பட்டிருக்கு. இயக்கங்கள் உடைவடைந்து பெண்கள் வெளியேறின பிற்பாடு இந்த சமூகம் பார்த்த பார்வை ஒரு சிக்கலான பார்வை. அது ஆய்வு செய்யப்பட வேண்டியது. அவர்களுக்கு குடும்ப பாதுகாப்போ சமுகப் பாதுகாப்போ எதுவுமே கிடைக்கவில்லை. உடல் ரீதிலும் உள ரீதிலும் இப் பெண்கள் மிக மிக பாதிக்கப்பட்டடார்கள். நாங்கள் இந்த சமூகம் கௌரவமான வாழ்வுக்காக போராடும் இந்த பெண்களுக்கு எந்த நீதியையும் வழங்கவில்லை. இது மிகவும் கவலைக்குரியது.

தேசம்: 2010ஆம் ஆண்டுக்குப் பிற்பாடு விடுதலை புலிகள் இருந்த பெண்கள் கூட மிக மோசமாக நடத்தப்பட்ட சம்பவங்கள் இருக்கு. அந்த வகையில் புளொட் போன்ற அமைப்பில் நிறைய பெண்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால் இந்த அமைப்புகள் வெற்றிகரமாக செயற்படாமல் தோல்வியுற்ற போது இந்தப் பெண்கள் எப்படி வீடுகளுக்குப் போய் … அதைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?

அசோக்: நிறைய சம்பவங்கள் நடந்திருக்கு. போராட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட பல பெண்களுக்கு எல்லா இயக்கங்களிலும் இது நடந்துள்ளது .வீடுகளுக்கு போனபோது வீட்டுக்கார ஆட்கள் விரும்பினாலும் கூட சுற்றியிருந்த சமூகம் அந்தப் பெண்கள் மீது ஒரு வித அபிப்பிராயம் கொண்டு இருந்ததால அவர்களை ஏற்றுக் கொள்ளாமல் இருந்தது. புளொட்டை பொறுத்தவரை இவ்வாறான நிகழ்வுகள் மிகக்துறைவு. நாங்கள் பெண்கள் அமைப்பினை உருவாக்கம் செய்தபோது தளத்தில்மிக கவனமாக இருந்தோம். முதலில் அவர்கள் முழுமையாக எங்களைப் போன்று விட்டை விட்டு வெளியேறி இயக்கதிற்கு வரும் மனநிலையை மாற்றினோம். வெளியேற்றத்தை எப்போதும் நாங்கள் ஊக்கப்படுத்தவில்லை. அப்படி வெறியேறி வந்த ஒருசிலரை அவர்களை தொடர்ச்சியான அவர்களின் கல்வியை தொடர எல்லா முயற்சிகளையும் நாங்க செய்தம். இவர்கள் மாணவர் அமைப்பிலும் இருந்தபடியால் இது எங்களுக்கு சாத்தியமானது.

இதில் தோழர் குமரனின் ஒத்துழைப்புமிக மிக பெரியது. கடைசி காலங்களில் சில தோழிகளை எங்களுடைய தோழர்களே பரஸ்பரம் புரிந்துணர்வின் அடிப்படையில் திருமணம் செய்த சம்பவங்கள் எல்லாம் இருக்கு. ஒரு ஆணாதிக்க நிலவுடமை சமுக கொடுர மனநிலையை இன்னும் விடாப்பிடியாக தக்க வைத்திருக்கும் சமூகம் எங்களுடையது. இது பற்றி நிறைய கதைக்கலாம். ஆனால் அது என் மன உளச்சலை இன்னும் கூட்டுவதாக போய் விடும். இது ஒரு அரசியல் சமூக ரீதியாக ஆய்வு செய்யப்பட வேண்டிய விடயம். ஏன் இந்தப் பெண்கள் புறக்கணிக்கப்பட்டார்கள் என்று. ஏனென்றால் எங்களுக்கு சமூகத்துக்கான மனோபாவம் ஒன்று இருக்குதானே. அந்த கோணத்தில் ஆராயவேண்டும் நிச்சயமாக.

தேசம்: திருமணம் செய்து போயிருந்தாலும் பிற்காலத்தில் கூட, அண்மையில் ஒரு பெண் தற்கொலை செய்திருந்த சம்பவங்கள் எல்லாம் நடந்திருக்கு. இந்தப் போராட்ட சூழலா அல்லது சூழல் ஏற்படுத்திய தாக்கமா அதைப்பற்றி நீங்கள் ஏதாவது அறிந்திருக்கிறீர்களா?

அசோக்: நான் முதலில் சொன்னதுதான். புளொட் ஒரு இடதுசாரி இயக்கம் என்று நாங்கள் கருதுகிறோம். ஆனால் புளொட்டில் இருந்த தோழர்கள் எல்லாம் முற்போக்காக இருப்பார்கள் என்று நாங்கள் கருதினால் அது தவறு. இருந்த தோழர் ஒரு பெண்ணையோ தோழியையோ திருமணம் செய்த போது அந்தக் குடும்பங்களில் முற்போக்காக இருப்பார் என்று நாங்கள் எதிர்பார்க்க ஏலாது. ஏனென்றால் நான் சொன்னேன் தானே முற்போக்காக வாழ்வது என்பது ஒரு கோட்பாடு சார்ந்த வாழ்க்கை முறைமை. அது எமது அகநிலையோடும் புற வாழ்வோடும் இணைந்தது. நாங்கள் அரசியல் சமூக தளங்களில் முற்போக்கு என்ற முகமூடியை தரிப்பது என்பது மிகச் சுலபம்… ஆனால் தனிப்பட்ட குடும்பவாழ்வில் முற்போக்கு முகமுடியை நீண்ட காலத்திற்கு அணிந்து ஏமாற்ற முடியாது. எப்படியும் எங்க உண்மை முகம் தெரிந்துவிடும். நாங்க மிக விரைவில அம்பலபட்டு போவம்.

இங்க எங்களுக்கு நடந்த சூழல் துரதிஷ்டவசமானது. நாங்கள்தான் முற்போக்கு முகமூடிகளை தரித்துக் கொண்டமேயொழிய உண்மையான இடதுசாரிகளாகவோ மாக்சிச ஐடியோலொயி கொண்டவர்களாகவோ அதை எங்கள் வாழ்வில் கடைப்பிடிப்பவர்களாகவோ நாங்க இருக்கல்ல. அனேகமான குடும்பங்களில் வெறும் ஆணாதிக்கவாதிகளாகத்தான் இருந்திருக்கிறோம். குடும்பத்தில் சமநிலையைப் பேணாமை. பெண்களுக்கான உரிமையை கொடுக்காமை. சினேகிதியாக தோழியாக பார்க்கிற தன்மை மிகக் குறைவாகத்தான் இருந்தது.

தேசம்: மற்றது அண்மையில் நீங்கள் எழுதி இருந்தீர்கள் அது ஏற்கனவே ஜென்னி அவர்களும் எழுதி இருந்தார்கள். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் இருந்த பெண் உறுப்பினர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு மனநிலை பாதிக்கப்பட்ட சம்பவம் பற்றி. அது சம்பந்தமாக சுருக்கமாக சொல்ல முடியுமா. அந்த சம்பவம் பற்றி. பெயரைக் குறிப்பிடாமல் சொல்லலாம்.

அசோக்: தீப்பொறி பற்றிய உரையாடலுக்குப் பிறகு கதைக்கலாம் என்று நினைக்கிறேன்.

பாகம் 18: அரசியல் அற்றவர்கள் பொறுப்பான பதவிகளில் – புளொட்டின் மற்றுமொரு முரண்பாடு!

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை

ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!
அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! : தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 18 (ஒளிப்பதிவு செய்யப்பட்ட திகதி 10.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

பாகம் 18

தேசம்: நாங்கள் எண்பத்தி நான்காம் ஆண்டு காலப்பகுதி வரைக்கும் கதைத்து இருக்கிறோம். இந்த காலப்பகுதியில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்திற்கு பாரிய அளவில் ஆயுதங்கள் எவையும் பெருசாக கிடைக்கவில்லை. ஆனால், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் இருந்த அமைப்புகளில் அரசியல் கல்வியூட்டும் விடயங்களை மேற்கொண்டு இருந்தது என்று நினைக்கிறேன். சமூக விஞ்ஞான கல்வியினுடைய உருவாக்கம் அது பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன். அது என்ன நடந்தது, அதில யார் யார் தொடர்புபட்டவை. உமா மகேஸ்வரனுக்கு தொடர்பு இல்லாமல் இருந்ததா அல்லது அவர் அதை மறுத்து அப்படியான கல்விவூட்டல்களை நிராகரித்தாரா? அதுகளைப் பற்றி கதையுங்கள் என்ன நடந்தது?

அசோக்: T3S என்று சொல்லப்பட்ட தமிழ் ஈழ சமூக விஞ்ஞான பாடசாலை 1984 யில் சென்னை கே. கே. நகரில் தொடங்கப்பட்டது. மார்ச்சிய அரசியல் கல்வி மற்றும் சமூகவியல், பொருளாதாரம், விஞ்ஞானம், தொழில் நுட்பம் சர்வதேச உறவுகள், அபிவிருத்தி திட்டமிடல் இப்படி எதிர்காலத்தை முன் வைத்து இந்த பாடசாலை தொடங்கப்பட்டது. இதற்கு பயிற்சி முகாங்களிலிருந்து தோழர்கள் தெரிவு செய்யப்பட்டாங்க. இந்தியாவில் உள்ள இடதுசாரி கட்சியை சேர்ந்தவர்கள், பேராசிரியர்கள் நிறைய பேர் அந்த வகுப்புக்களை எடுத்தாங்க. அது ஒரு தரமான அரசியல் கல்வி ஏனென்றால், அவர்கள்தான் காலப்போக்கில் தளத்திற்கு வந்து வகுப்புகள் எடுக்கிற தோழர்களாகவும், முகாம்களில் வகுப்புகள் எடுக்கிற தோழர்களாகவும் தான் உருவாக்குவதற்காக தான் அது ஏற்பாடு செய்யப்பட்டது. அதை உருவாக்குவதில் பலருடைய ஆர்வம் இருந்தது. உமாமகேஸ்வரன், சந்ததியார், யோதீஸ்வரன், வாசுதேவா, ரகுமான் ஜான் எல்லா பேரும் சேர்ந்து தான் அதை உருவாக்கியவர்கள்.

தேசம்: அப்படி ஒரு கல்லூரியின் தேவையை எல்லோரும் உணர்ந்து இருந்தவை?

அசோக்: ஓம் எல்லாரும் சேர்ந்துதான் உருவாக்கினது.

தேசம்: அது கடமைக்காக ஆரம்பிக்கப்படவில்லை. உணர்வுபூர்வமாக தான் ஆரம்பிக்கப்பட்டது.

அசோக்: உண்மையில் நல்ல நோக்கத்தோடு நம்பிக்கையோடுதான் ஆரம்பிக்கப்பட்டது. முகுந்தனுக்கு அந்த நம்பிக்கை இருந்ததா என்பது இப்ப யோசிக்கும் போது சந்தேகம்தான். ஏன் என்றால், குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அது இயங்கல்ல. அதில படித்த தோழர்களை பார்த்தீர்களென்றால் அரசியல் ரீதியாக மிக வளர்ச்சி பெற்ற தோழர்களாக தான் இருக்கிறார்கள். லண்டனில் பணிக்ஸ் என்ற தோழர் இப்ப இருக்கிறார். இதில் படித்தவர். அவரோடு அடிக்கடி உரையாடுவேன். அரசியல் மற்ற பல விசியங்களை அவரிடம் அறிய முடியும். சீனு, அரசிளங்கோ, கணன், சாமி இப்படி பல தோழர்கள். அஜீவன் சுவிஸில் இருக்கிறார் அவரும் T3S இல் படித்தவர்தான்.

தேசம்: என்னுடைய சகோதரரும் T3Sல் படித்தவர்தான். அதோட நேதாஜி என்ற பிரேம்சங்கர் என்று அறியப்பட்டவர் அவரும் சமூக விஞ்ஞான கல்லூரியில் படித்தவர்.

அசோக்: இந்த அரசியல் வகுப்பு 40 பேர் கொண்ட வகுப்புக்களாக நான்கு பிரிவுகள் நடத்தப்பட்டது. சுமார் 160 தோழர்கள் அதில் படித்திருப்பார்கள் என நினைக்கிறன். அதன்பிறகு புளொட்டில் ஏற்பட்ட குளப்பங்களும் முரண்பாடுகளும் தொடர்ந்து நடத்த முடியாமல் செய்துவிட்டன. லண்டனில் இருந்து வந்த தோழர் ராஜா நித்தியன் அதற்கு பொறுப்பாக இருந்தவர். அதே நேரம் முகாம்களிலும் அரசியல் கல்வி நிறைய ஊட்டப்பட்டது. ஆரம்ப காலங்கள் ஆரோக்கியமாகத்தான் இருந்தது. உதாரணமாக பார்த்தீர்களென்றால் பல்வேறு முகாம்களில் இருந்து அரசியல், கலை, இலக்கிய கையெழுத்துப் பிரதிகள் வந்திருக்கு அந்த நேரத்தில். தினக்குரல் ஆசிரியர் பீடத்தில் இருந்தவர் ரவி வர்மன் என்று சொல்லி. சில காலங்களுக்கு முன்னர் இறந்திட்டார். அப்ப நாங்கள் அவரை தோழர் மது என்று அழைப்போம். அவரும் பயிற்சி முகாம்மில் இருக்கும் போது தரமான சஞ்சிகை ஒன்றை கொண்டுவந்தார். இப்படி பல சஞ்சிகைகள். தோழர்கள் இப்படி பல ஆக்கபூர்வமான வேலைககளில் ஈடுபட்டார்கள். தெளிவான அரசியலை கொண்டிருந்தார்கள்.

என்ன பிரச்சனை என்று கேட்டால், இந்த முகாம்களில் இருக்கின்ற தோழர்களை நிர்வகிக்கின்ற பொறுப்பாளர்கள் அதற்கேற்ற தகுதி வாய்ந்தவர்களாக அரசியல் அறிவு கொண்டவர்களாக இருக்கவில்லை. அவர்கள் முகுந்தனின் விசுவாசிகளாக மட்டுமே இருந்தார்கள். எந்த சமூக அக்கறையும் அவர்களிடம் இருக்கல்ல. முதலில் அரசியல் கல்வி ஊட்டி இருக்க வேண்டும். அது இருக்கல்ல. முகுந்தன் விசுவாசி என்ற ஒரு தகுதி இருந்தாலே போதும் பொறுப்புக்களுக்கு வந்து விடலாம் என்ற நிலைதான் இருந்தது. அந்த மன நிலையை மாற்றி இருக்க வேண்டும். கட்டுப்பாட்டுக்குழுவோ அல்லது மத்திய குழுவோ எந்த அக்கறையும் இதில் கொள்ளவில்லை.

முகாங்களில் இருந்த தோழர்கள் அரசியல் ரீதியாக வளர்ச்சி கொண்டவர்கள். அப்ப என்ன நடக்கும் என்றால் அவர்கள் நீண்ட காலமாக முகாம்களில் இருக்கும் போது ஏற்படும் சிக்கல் இருக்குதானே, முரண்பாடு வரும். அவங்கள் கேள்வி கேட்பார்கள். அரசியல் சார்ந்த உரையாடலுக்கு இவர்கள் பொறுப்பாளர்கள் தயாரில்லை. இவர்கள் வெறும் சுத்த இராணுவ கண்ணோட்டம் கொண்டவர்கள்.

தேசம்: முகாமில் இருக்கிற உறுப்பினர்கள் அரசியல் ரீதியாக வளர்ந்து இருப்பார்கள். அவர்களை வழிநடத்துற தோழர்களுக்கு அரசியல் கல்வி போதாமை இருக்கு.

அசோக்: ஓம். அவங்கள் நீண்டகாலமாக முகாமில் இருந்தவர்கள் தானே, நாட்டிக்கு போவது தொடர்பாக, யுத்தம் தொடர்பாக, போராட்டங்கள் தொடர்பாக அரசியல் கேள்விகள் கேட்டால் இவங்களுக்கு பதில் தெரியாது. அப்போ முரண்பாடு வரும். காலப்போக்கில் இந்த முரண்பாடு அரசியல் கதைக்கிறவன் எல்லாம் சந்ததியார் ஆள் என்று குற்றம் சுமத்தும் நிலைக்கு போய்விட்டது.

தேசம்: இந்தக் காலகட்டத்தில் இந்த முகாம் பொறுப்பாளர்களை யார் நியமித்தது. ஏனென்றால் அனைத்து முகாம் பொறுப்பாளர்கள் தோழர் ஜான் இருந்திருக்கிறார்.

அசோக்: அவர் இராணுவ ஆலோசகர் என்று நினைக்கிறேன்.

தேசம்: கட்டுப்பாட்டு குழுவுக்கு முகாம் பொறுப்பாளர்களை நியமிக்கின்றது தொடர்பா அல்லது அவர்களுக்கு இருக்கின்ற தகுதி தொடர்பா விளக்கம் ஏதும் இருக்கேலயா?

அசோக்: கட்டுப்பாட்டு குழுவுக்கு ஜெயில் பிரேக் நடந்த உடனேயே குறிப்பிட்ட ஆட்களுக்கு பதவி கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. அந்நேரம் தங்களை சுற்றியுள்ள ஆட்களுக்கு ஏதாவது பதவிகளை கொடுத்து அவர்களை திருப்திப்படுத்த வேண்டும் என்ற நிலை இவங்களுக்கு. குறிப்பாக, முகுந்தனுக்கு இருந்தது. எல்லாருக்கும் ஏதாவது ஒரு அதிகாரமிக்க பதவி கொடுக்க வேண்டும். மக்கள் மத்தியில் வேலை செய்வதற்கோ அரசியல் கல்வி பெறுவதற்கோ இவங்கள் தயாரில்லை. சிறையில் அடைக்கப்பட்டு வந்த அவ்வளவு பேருக்கும் மற்ற சுற்றியுள்ள பேர்வழிகளுக்கும் நீங்கள் ஏதோ ஒரு வகையில் பதவி கொடுக்க வேண்டும். அப்போ அவர்கள்தான் அனைத்து முகாம் பொறுப்பாளர்கள் உட்பட எல்லா பதவிகளுக்கும் நியமிக்கப்படுகிறார்கள்.

தேசம்: அவர்களுக்கு தகுதி இருந்ததோ இல்லையோ சிறையிலிருந்து அதுதான் அவர்களுடைய தகுதியாக..

அசோக்: புளொட்டில் ஆரம்பகால உறுப்பினர்களாக இருந்து இருப்பார்கள். இதுதான் இவர்களின் ஒரே தகமை. அரசியல் கல்வி அவர்களிடம் இல்லை. புளொட்டின் அரசியல் யாப்பை பார்த்தீர்களென்றால் அது தரமானதொரு அரசியல் கோட்பாடு கொண்டது. அனைத்து அடக்குமுறைகளையும் உடை த்தெறிவோம் என்ற கோஷமே உங்களுக்கு விளங்கும். அரசியல் மட்டங்களில், சமூக மட்டங்களில், கலாச்சார மட்டங்களில் இருக்கிற அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான ஒரு கோஷமாக கொள்கையாக தான் அது இருக்குது.

தேசம்: இந்த அரசியல் யாப்பு எல்லா போராளிகளுக்கும் வழங்கப்பட்டதா.

அசோக்: அரசியல் வகுப்புகள் எடுக்கப்பட்டிருக்கு. அந்தநேரம் பார்த்தீர்கள் என்றால் நிர்மாணம் என்று ஒரு பத்திரிகை வந்தது. அது இலங்கையினுடைய சாதிய ஒடுக்குமுறை தொடர்பாக, சாதியம், பெண்ணியம் தொடர்பான கட்டுரைகளை எண்பத்தி மூன்று கடைசியிலேயே வெளியிட்டிருக்கு இருக்கு. எண்பத்தி நாலிலும் வந்தது. நாலு ஐந்து சஞ்சிகைகள் வந்திருக்கு. அதில சிவசேகரம், கௌரிகாந்தன் எல்லாரும் எழுதி இருக்கிறார்கள். பெரிய விவாதமே நடந்திருக்கு. அத்தோட spark என்று ஆங்கிலத்தில் அரசியல் சஞ்சிகை வெளி வந்தது.

தேசம்: நீங்கள் சொல்வதைப் பார்க்கும்போது ஆரம்ப கட்டத்தில் எல்லாமே ஒரு சரியான பாதையில் தான் பயணித்துக் கொண்டிருந்திருக்கு.

அசோக்: அந்த ஆரம்ப பாதையை மிக நிதானமாகவும் ஆரோக்கியமாகவும் முன்னெடுத்திருந்தால் வேறு ஒரு திசைக்கு கொண்டு போயிருக்கலாம். ஏனென்றால் ஆரம்ப காலங்களில் அரசியல் சார்ந்து ஆழ்ந்து எழுதுகிற பத்திரிகைகள், சஞ்சிகைகள் எல்லாம் புளொட்டில் வெளிவந்திருக்கு. புளொட்டின் ஆரம்பகால துண்டு பிரசுரங்களையும், எழுத்துக்களையும், புத்தகங்களையும் பார்த்தீர்களென்றால் மிக அரசியல் சார்ந்த பிரதிகளாகத்தான் அவை இருந்தது. முரண்பாடுகள் வந்ததும் எல்லாம் சிக்கலாக போய்விட்டது.

தேசம்: இதுல ஒரு முக்கியம் என்ன என்று கேட்டால் தங்களுடைய இயக்கத்துக்கு வாற தோழர்களை, உறுப்பினர்களை கல்வி ஊட்டுவது என்பது முக்கியமான விடயம். அந்தக் கல்வியை ஊட்ட வேண்டும் என்ற உணர்வு எல்லார்கிட்டயும் இருந்திருக்கு. ஆனால் அதால வரக்கூடிய பிரச்சனைகளை அடுத்த கட்டத்துக்கு அவர்களைக் கொண்டு போவதற்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.

அசோக்: உண்மையில் என்ன செய்திருக்க வேண்டும் என்றால் சகல மட்டங்களுக்கும் அரசியல் கல்வி ஊட்டப்பட்டிருக்க வேண்டும். முதலில் மத்திய குழுவிலிருந்த முழுப்பேருக்கும் அரசியல் கல்வி ஊட்டப்பட்டு இருக்க வேண்டும். அரசியல் கல்வி சமூக அக்கறை ஜனநாயக பண்பாடு கொண்ட தோழர்களை பொறுப்புக்களுக்கு நியமித்திருக்க வேண்டும்.

தேசம்: நீங்கள் சொல்வதன் படி சங்கிலியன் எல்லோரும் மத்திய குழுவில் இருந்து இருக்கிறார்கள்.

அசோக்: சங்கிலி கந்தசாமி மாத்திரம் அல்ல. பலர் இப்படி. நாங்கள் மூன்று மாதத்திற்கு ஒருக்கா மத்திய குழுவுக்கு போவோம். ஒரு கட்டத்துக்குப் பிறகு முரண்பாடுகள் வந்த உடனே நாங்கள் போகாமல் விட்டுட்டோம்.

தேசம்: ஏன் நீங்கள் போகாமல் விட்டீர்கள்…

அசோக்: விரக்தியாக போய் விட்டது. ஏனென்றால் அங்க போய் ஒரு பிரயோசனமும் இல்லை.

தேசம்: உண்மையிலேயே இந்த பயணம் உயிரை பணயம் வைத்து போற பயணம். இலங்கையிலிருந்து அடுத்த கரைக்கு போய்ச் சேர வேண்டும். எவ்வளவு நேர பயணம் அது ?

அசோக்: ஒரு மணித்தியாலம் இரண்டு மணித்தியாலத்தில் போகலாம். அது நேவிய பொறுத்து இருக்கு. நேவி துரத்தி பிரச்சனைப்பட்டால் சிக்கல் தான்.

தேசம்: அப்படி போய் வரேக்க உங்களுக்கு நெருக்கடிகள் இருந்ததா…

அசோக்: ஓம் ஒரு தடவை பயங்கர நெருக்கடி. நான் ஈஸ்வரன், முரளி, தோழர் கேசவன் இரவு 11 மணிக்கு மாதகலிலிருந்து கிளம்பினாங்கள். நாங்கள் போகும் போது நேவி கண்டு விட்டது. அவர்கள் துரத்த தொடங்கி விட்டார்கள். கோடியாக் கரைக்கு போகவேண்டிய நாங்கள் ஓடி ஓடி கடைசியில் பெற்றோலும் முடிந்த நிலையில், அதிகாலை 4மணியளவில் மல்லிப் பட்டணத்தில் கரை ஒதுங்கினோம். இப்படி இந்த கடல் பயணங்களில் பல அனுபவங்கள்.

தேசம்: இலங்கை கடற் பிராந்தியத்தை தாண்டி நேவி கலைத்து அடிக்கிறது.

அசோக்: அவர்கள் துரத்த தொடங்கினால், இந்திய எல்லைக்குள் எல்லாம் வருவாங்க. அது அவங்களுக்கு பிரச்சனை இல்லை. வோட்டில் பின் தளம் போகும் போது பெரிய பயம் தேவையில்லை. இலங்கை நேவி துரத்தி சுட்டாலும், எப்படியோ தப்பித்து இந்தியா கரைக்கு போய்விடமுடியும். ஆனால் அங்கிருந்து கரையை நோக்கி வரேக்க பெரிய ஆபத்துகள். நேவி கண்டால் சிக்கல்தான்.

தேசம்: வரேக்க உங்களுக்கு கரையில் தகவல் தருவதற்கு ஆட்கள் இருந்தவையா?

அசோக்: அப்படி ஒன்றும் இல்லை. ஓட்டி தான் கடற்பரப்பை கண்காணித்துக் கொண்டு வரவேணும்.

தேசம்: வெறும் கண்ணால பார்த்து

அசோக்: கண்ணால தான் பார்க்க வேண்டும். அப்ப எங்களிடம் பெரிய ஆயுதங்கள் எதுவும் இல்லை.

தேசம்: அந்த நேரம் பயணங்களில் நிறைய பேர் உயிரிழந்து இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

அசோக்: ஓம் எல்லா இயக்கங்களிலும் நடந்திருக்கு.

தேசம்: பாக்கு நீரினை கடலில் விடுதலை போராளிகள் காவியமே படைத்திருக்கிறீனம்.

அசோக்: மிகவும் பரிதாபத்துக்குரிய மரணங்கள் அவை.

தேசம்: இவ்வாறான பயணங்கள் எப்படி நடக்கிறது? கிழமையில் 1, 2 நடக்குமா…

அசோக்: அந்த நேரத்தில் பின்தளத்திற்கு பயிற்சி பெற செல்லும் தோழர்களின் எண்ணிக்கையை பொறுத்து இப்பயணங்கள் நடக்கும்.

தேசம்: அப்போ நீங்கள் இவ்வளவு உயிரை பணயம் வைத்து அங்கே போகும்போது அது மதிக்கப்படுதா?

அசோக்: அதுதான் பிரச்சனை. ஆரம்ப காலத்தில் எங்களுக்கு பெரிய நம்பிக்கை தானே இருந்தது. தோழர் ரகுமான் ஜான், தோழர் கேசவன், தோழர் சந்ததியார் போன்றவங்க ஒரு அரசியல் சார்ந்து இருக்கேக்க பெரிய நம்பிக்கை எங்களுக்கு இருந்தது. ஒருகட்டத்தில் அவங்களுக்குள்ள முரண்பாடு தோற்றம் பெறுவது எங்களுக்கு தெரிந்துவிட்டது. பிரச்சனை என்னவென்றால் நாங்கள் சந்ததியாரின் ஆளும் இல்லை முகுந்தனின் ஆளும் இல்லை. தளத்திலே பொறுப்பு நாங்கள் அவ்வளவுதான்.

தேசம்: உங்களுக்கு இவர்களுடைய தொடர்பு …

அசோக்: மிகக் குறைவு எங்களுக்கு. பின்தளம் போனால் மாத்திரம் சந்திப்போம். உரையாடுவோம்.

தேசம்: உங்களுக்கு ஆரம்பத்திலேயே… நீங்கள் கிழக்கு மாகாணம் என்றபடியால் ரகுமான் ஜானுடன் ஏற்கனவே தொடர்புகள் இருக்கு.

அசோக்: எனக்கு ஆரம்பத்தில் தெரிந்த தோழர்கள் ரகுமான் ஜான், சந்ததியார், பார்த்தன், சலீம், வாசுதேவா போன்றவர்கள்தான். உமா மகேஸ்வரனை எல்லாம் பின் தளத்தில் வைத்து தான் நான் சந்திக்கிறேன். அரைவாசிப் பேரை சென்ட்ரல் கமிட்டியில் தான் சந்திக்கிறேன்.

தேசம்: அப்ப நீங்க பின் தளத்துல போயிருக்கிற நேரம் ரகுமான் ஜான், சந்ததியார், சலீம் இவர்கள அங்க சந்தித்து உரையாடுறனீங்களா? உரையாடக்கூடியதா இருந்ததா?

அசோக்: ஒரு காலகட்டத்தில் சலீம் பிடிபட்டு சிறைக்கு போயிட்டார். அவர் சென்ட்ரல் கமிட்டிக்கு வாறது இல்லை. ரகுமான் ஜான், சந்ததியர் எல்லாரையும் சென்றல் கமிட்டியில் சந்திப்பன்.

தேசம்: அங்கதானே நீங்கள் ஒன்றும் கதைக்கிறதில்லை.

அசோக்: தனிப்பட்ட வகையில் உரையாடுவோம் …

தேசம்: அந்த உரையாடல்கள் ஆரோக்கியமாக இருந்ததா? அந்த உரையாடல்களில் நீங்கள் இயக்க பிரச்சனைகள் பற்றி கதைப்பீர்களா? பொதுவாகப் பார்த்தீர்கள் என்றால் கூட்டத்துக்கு வெளியில இன்னொரு கூட்டம் நடக்கும். அந்தக் கூட்டத்தில் தான் கூடுதலாக முக்கியமான விடயங்கள் பேசப்படும். மனம்விட்டு நிறைய பேசக் கூடியதாக இருக்கும். அவர்கள் பிரிந்து போவது சம்பந்தமாக அல்லது நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்ளேக்க அதற்கான ரெக்ரூட்மெண்ட்ஸ் வேறயாட்களை உள்வாங்குவதற்கான நடவடிக்கைகள். அப்படி அந்த வகையில உங்களுடைய உரையாடல்கள் அமைந்திருந்ததா?

அசோக்: எண்பத்தி நான்கு நடுப்பகுதி வரைக்கும் அவர்கள் எங்களிடம் முரண்பாடுகள் பிரச்சனைகள் பற்றி கதைத்தது குறைவு . தோழர் ரகுமான் ஜான் பாலஸ்தீன பயிற்சிக்கு போனதால் மத்தியகுழு கூட்டங்களுக்கு வந்தது குறைவு. அவரை அக்காலங்களில் சந்தித்ததும் குறைவு. ஆரம்பகாலங்களிலும் கடைசி காலங்களிலுதான் அவரை சந்திக்க முடிந்தது.

முரண்பாடுகள் வரேக்க தானே இது பற்றிய உரையாடல்கள் வரும். அதிருப்திகளை சொல்லுவாங்க. ஆனா 84இல் நடுப்பகுதியில் அந்த முரண்பாடு வந்துட்டுது. கொலைகள், சித்திரவதைகள் பற்றிய வதந்திகள் நிறைய வரத் தொடங்கி விட்டது. ஆனால் கமிட்டியில் கதைக்க மாட்டாங்க. அடுத்தது நாங்களும் கதைக்க இயலாது. கதைத்தால் முகுந்தன் கேட்கும் எப்படி உங்களுக்கு தெரியும் என்று. பிறகு ஆதாரம் கேட்பார். ஒருதடவை நான் கேட்டு முகுந்தன் டென்சன் ஆகி. இதைப்பற்றி போன உரையாடலில் கதைத்திருக்கிறன்.

தேசம்: முகுந்தனுக்கு இருக்கிற அதே அதிகாரம் தானே சந்ததியருக்கோ, ரகுமான் ஜானுக்கோ, சலீமுக்கோ உங்களுக்கோ இருந்தது.

அசோக்: ஆரம்ப காலங்களில் இவங்களுக்கு கட்டுப்பாட்டுக் குழுக்கு அதிகாரம் இருந்தது. அதை இவங்க ஆரோக்கியமாக பயன்படுத்த தவறிட்டாங்க. என்னைப் பொறுத்தவரை நான் வைக்கிற விமர்சனம் என்ன என்று கேட்டால் முகுந்தன் உடைய அதிகாரம் வளர்வதற்கான காரணம் நாங்கள் தான். இது தொடர்பா முன்னமே கதைத்திருக்கிறன்.

தேசம்: சொன்ன விஷயம் எல்லாம் வைத்து பார்க்கும்போது அந்தப் பலத்தை முகுந்தன் தக்க வைத்துக் கொண்டதற்கு முதல் எல்லோரும் கிட்டத்தட்ட சம பலத்தில் தான் இருந்திருக்கிறீர்கள். அப்போ எங்கேயோ ஒரு இடத்தில் தளர்வு ஒன்று நடக்குது. முகுந்தனிட்ட இந்த அதிகாரங்கள் எல்லாம் கை மாறுது. அதற்கு இவர்களும் துணையாக இருந்து இருக்கிறார்களா என்ற ஒரு கேள்வி எழுகின்றதல்லவா?

அசோக்: ஆரம்ப காலத்தில் இந்த முரண்பாடு வரேக்க ஒரு உரையாடலை செய்திருக்கலாம். எல்லாரும் வளர்ந்த தோழர்கள். காலப்போக்கில் இந்த முரண்பாடு கொஞ்சம் கொஞ்சமாக கூர்மையடைந்த படியால் முரண்பாட்டுக்கான காரணங்கள் ஆராய்ப்படவும் இல்லை களையப்படவும் இல்லை. அது கூர்மை அடைந்ததுதான் மிச்சம்.

தேசம்: குறிப்பா மத்திய குழுவுக்கு ஒரு முக்கிய பங்கு இருக்கு என்னவென்றால். கிட்டத்தட்ட 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகள் அமைப்பில் உள்வாங்கப் பட்டிருக்கிறார்கள். மிகப்பெரிய அமைப்பு. அவர்களுக்கு பொறுப்புக்கூற வேண்டிய கடமை இந்த மத்திய குழு உறுப்பினர்களுக்கு இருக்கு.

அசோக்: நாங்கள் எங்களுக்குள் பிரச்சனைகள் இந்த அதிகாரத்தனம், தன்னிச்சையான போக்குகள் பற்றி கதைப்பம். தீர்வு காணக் கூடிய எந்த வல்லமையும் அதிகாரமும் தளத்தில் இருந்த எங்களுக்கு இருக்கல்ல. அத்தோட பின் தளத்தை பொறுத்தவரை நாங்க அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. பின் தளத்தில் நாங்க மனம் விட்டு கதைக்கக் கூடிய தோழராக தங்கராஜா தோழர் ஒருவர்தான் எங்களுக்கு இருந்தார். மற்றவர்களோடு கதைக்க பயம் இருந்தது. எல்லோரும் முகுந்தன் விசுவாசிகளாகத்தானே இருந்தாங்க.

தேசம்: ஆனால் அவர் மத்திய குழுவில் இருக்கிறாரோ.

அசோக்: மத்திய குழுவில் இல்லை. அவர் தோழர்களுக்கு அரசியல் வகுப்பெடுக்கும் பொறுப்பில் இருந்தவர். அவர் சொல்லுவார். இவங்கள் எல்லோரும் சேர்ந்து இயக்கத்தை அழிக்கப் போறாங்கள் என்று. எங்கட கௌரவத்துக்காக நாங்கள் மத்தியகுழு என்று சொல்லிக் கொண்டோமே ஒழிய எந்த பிரயோசனமும் பின் தளத்திலும் இல்லை. தளத்திலும் இல்லை.

தேசம்: அது நேரடியாக உமாமகேஸ்வரன் என் கட்டுப்பாட்டுக்குள் தான் இருந்தது.

அசோக்: உமா மகேஸ்வரனின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது.

தேசம்: மற்றவர்கள் கதைக்க முற்படவில்லை

அசோக்: முடியாது. உதாரணமாக யாழ்ப்பாணத்தில் ஒரு தவறு நடந்தால் நாங்கள் கட்டுப்படுத்த இயலாது. ஒரு கட்டத்துல நாங்கள் யாழ்ப்பாணத்திலேயே இருக்கிறதில்லை. ஈஸ்வரன் கிழக்கு போயிருப்பார். முரளி வன்னிக்கு போயிருப்பார். நான் நான் தொழிற்சங்க, மாணவர் அமைப்பு வேலைக்காக கிளிநொச்சி, வவுனியா, மன்னார், முல்லைத்தீவுக்கு போயிட்டே இருப்பேன். ஏனென்றால் நின்று பிரயோசனம் இல்லை. நின்றால் உங்களுக்கு மண்டை வெடிக்கும். தன்னிச்சையான போக்கு ஆரம்பத்தில் இருந்தே. இதைப் பற்றி போன உரையாடல் ஒன்றில விரிவாக கதைத்திருக்கிறன் என நினைக்கிறன்.

தேசம்: இதை யாழ்ப்பாணத்துக்கு உரிய குணாம்சமா? அல்லது வடக்கின் ஏனைய மாவட்டங்களில் இதை காணக்கூடியதாக இருந்ததா

அசோக்: நான் ஆரம்பத்திலேயே சொன்னதுதான். நில உடமைக் குணாம்சங்களோடு இணைந்த மத்திய தரவர்க்க மனோபாவம் என்பது, இலங்கையில் எல்லா இடங்களிலும் இப்படித்தான் இருக்கும். யாழ்ப்பாணத்தை பொறுத்தவரை சாதிய, மத மேலாதிக்க மனநிலையும் அதன் அடையாளங்களும் சேர்ந்து தொழிற்படும் போது இதன் வெளிப்பாடும் தாக்கமும் அதிகமாக இருக்கப் பார்க்கும். இது சமூகத்தில் இயல்பானது. இவற்றை மாற்றி அமைக்கத்தானே நாம் போராட வேண்டும். நீண்ட நெடுங்காலமாக எங்களிட்ட ஊறிப்போன இவ்வாறான குணாம்சம் குறிப்பிட்ட காலத்தினுள் எங்களிட்ட இருந்து மாறிப்போகும் என்று நாம் எதிரபார்க்க முடியாதுதானே.

ஆனா அதற்கெதிரான போராட்டம் முயற்சி அவசியம். அதற்கு மார்க்கிய அரசியல் கல்வி அவசியம். அரசியல் பண்பாட்டுத்தளத்தில் மாற்றங்கள் அவசியம். இல்லாட்டி நாங்க அதிகார ஆசை கொண்ட ஆட்களாக, ஒரு அதிகார வர்க்கமாக தான் இருப்பம். ஒரு ஏ.ஜி.ஏ டிவிசனில் இருப்பவர் ஏஜி ஆக அதிகார மனநிலை இருப்பர். மாவட்ட அமைப்பாளர் மாவட்ட ஜி ஏ மாதிரிதான் நடப்பார். மக்கள் மத்தியில் அதிகாரம் காட்டப்படும். மக்கள் எங்களுக்கு அன்னியமாக தெரிவாங்க. அதிகார இருத்தலுக்கு ஆயுதம், வாகனங்கள் தேவைப்படும். நடத்தல், சாதாரண சைக்கிள் பயணம் எங்களுக்கு தேவைப்படாது.

தங்களை அர்ப்பணித்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடி மக்களுக்குரிய விடுதலையை பெறுவதற்கான உணர்வு இவ்வாறான ஆட்களிடம் இருந்ததே இல்லை.

தேசம்: மற்றது யாழ்ப்பாண இந்துக் கல்லூரியில் கல்வி கற்று அதற்குள் இருந்து வாரவர்களுக்கான ஒரு தெனாவட்டு இருக்கு என்று சொல்லுவார்கள் தானே.

அசோக்: அந்த கல்லூரி என்று இல்லை, பொதுவாகவே மத்திய தர வர்க்கத்துக்கான குணாம்சம் இப்படித்தான் இருக்கும். ஆனால் நீங்கள் சொல்வதில் சில உண்மைகள் உண்டு. இது யாழ்ப்பாண இந்துக் கல்லூரிக்கு மாத்திரம் அல்ல, இந்து மத அடிப்படைகளை, சாதிய உணர்வுகளை கொண்ட பல பாடசாலைகளுக்கு இது பொருந்தும். இயக்கங்களில் மிக மோசமான நடத்தை கொண்டவர்கள் அதிகார மனநிலை கொண்டவர்கள் இந்த பிண்ணனியைக் கொண்டவர்களாக ஒரு சிலர் இருந்திருக்கிறார்கள்.ஆனால் இவற்றை பொதுமைப்படுத்தக் கூடாது.

யாழ்ப்பாண சமூகத்தின் மனநிலை எப்படி இருக்கும் என்று கேட்டால் ஒன்று படித்தால் உங்களுக்கான பதவி உத்தியோகம் வேண்டும். அது இயக்கங்களுக்கு வரும்போது அந்த எதிர்பார்ப்பு இருக்கு அவர்களிடம். ஒரு ஆள் மொரட்டுவ யுனிவர்சிட்டியில் ஆர்க்கிடெக்ட் படித்துக்கொண்டு இடையில் வந்தால் அவர் வந்து கீழ் மட்டங்களில் வேலை செய்ய மாட்டார்.

தேசம்: பார்க்கிற மாதிரிக்கு இன்றைக்கு இருக்கிற பாராளுமன்ற அரசியலை தான் அன்றைக்கு இயக்கங்களும் பிரதிபலித்த மாதிரிதான் எனக்கு தெரியுது. மிதவாத கட்சிகளில் சேர்ந்து எங்கள் என்றால் உங்களுக்கு பாராளுமன்ற பதவி கொடுக்கப்பட வேண்டும். ஆசனங்களுக்காக ஃபைட் பண்ணுவினம். ஆசனங்கள் வழங்கப்படாட்டி கட்சியை விட்டு வெளியேறுவது இப்படியான நடைமுறைகள் இருக்கும். கிட்டத்தட்ட இதுவும் அப்படித்தான்…

அசோக்: அப்படித்தான். இதுபற்றி முன்னர் உரையாடி இருக்கிறம்.

தேசம்: பார்க்கிற மாதிரிக்கு இப்ப நாங்கள் குறிப்பாக பேச வேண்டியது அதிகாரம் எங்க இருக்கோ அதைப் பற்றித்தான் பேச வேண்டும். அதிகாரம் மத்திய குழுவிலும் கட்டுப்பாட்டு குழுவிலும் தான் குவிக்கப்பட்டிருக்கு. இவ்வளவு காலமும் என்னுடைய பார்வை அதற்குள் குறிப்பிட்ட ஆட்கள் முற்போக்காளர்கள் இடதுசாரி பார்வை கொண்டவர்களாக தான் நான் பார்த்தேன். உங்களோடு இவ்வளவு நேரம் நடந்த உரையாடலில் எனக்கு அந்த வித்தியாசம் இருக்கிற மாதிரி தெரியவில்லை. சில வேளை அவர்கள் இடதுசாரிக் கருத்துக்களை வைத்து இருந்திருக்கலாம். ஆனால் நடைமுறையில் அப்படி இருந்த மாதிரி தெரியவில்லை.

அசோக்: இடதுசாரி என்பது வெறும் கருத்தியல் சார்ந்த வெறும் அறிவாக இருக்காது. அது ஒரு வாழ்க்கை முறை. வட இலங்கைக் கம்யூனிஸ்ட் பாட்டிகளை பார்த்தீர்களென்றால், சாதியத்துக்கு எதிரான போராட்டங்களை செய்தவர்கள் இடதுசாரிகள். அவர்கள் மக்களோடு மக்களாக வேலை செய்தார்கள். சித்தாந்த ரீதியாக வளர்ந்தார்கள். அவர்கள் இடதுசாரிகள். இவர்கள் தங்களை இடதுசாரியாக சொல்லுகின்ற நபர்களேயொழிய இடதுசாரியத்தை வாழ்க்கையாக ஏற்றுக்கொண்டவர்கள் அல்ல. அது நான் உட்பட எல்லாருக்கும் இது பொருந்தும். ஏனென்றால் நாங்கள் மிக நேர்மையாக, மார்ச்சிய உணர்வு கொண்டவர்களாக இருந்திருந்தால், புளொட் இந்த அளவுக்கு போயிருக்காது. புளொட்டின் அழிவுக்கு எல்லோரும் பொறுப்பேக்க வேண்டும். அது சந்ததியாராக இருந்தால் என்ன, உமாமகேஸ்வரனாக இருந்தால் என்ன, நானாக இருந்தாலும், யாராக இருந்தாலும், பொறுப்புக்கூற வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கு. நாங்கள் இன்னொருவரை குற்றம்சாட்டி போக இயலாது.

பாகம் 17: புளொட் கட்டுப்பாட்டுக்குழுவினுள் முளைவிட்ட குழுவாதமும் அதிகாரத்தின் மீதான மோகமும்

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! : தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 17 (ஒளிப்பதிவு செய்யப்பட்ட திகதி 09.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

பாகம் 17

தேசம்: உமா மகேஸ்வரன் வந்ததை ஒட்டித்தான் இந்த சுழிபுரம் மாணவர் படுகொலைகள் நடந்தது. உமாமகேஸ்வரன் என்ன காரணத்துக்காக திடீரென இந்த தளத்துக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தார் என தெரியுமா?

அசோக்: பின் தளத்துக்கு நிறைய தோழர்கள் போகமுடியாத சூழல் இருந்தபடியால், எல்லா அமைப்புகளையும் சந்தித்து ஒரு சுமுகமான உரையாடல் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் வந்ததாக சொல்லப்பட்டது. ஆனால் இந்த சந்திப்புக்களுக்கும், உரையாடலுக்குமாகத்தான் வந்தாரா என்பது சந்தேகம்தான்.

தேசம்: அந்தக் காலகட்டத்தில் ஏனைய இயக்கத் தலைவர்கள் யாரும் தளத்தில் இருக்கேல.

அசோக்: யாருமே வரவே இல்லை.

தேசம்: உமாமகேஸ்வரன் தான் முதன்முதலில் வாரார்.

அசோக்: முக்கியமான தலைவர் உமாமகேஸ்வரன் தான் வருகின்றார். உமா மகேஸ்வரன் இப்படி ரிஸ்க் எடுத்து இப்படியான உரையாடலுக்கு வந்து இருப்பாரா என்பதில் சந்தேகம் இருந்தது. பிறகுதான் கேள்விப்பட்டோம், கிளிநொச்சி வங்கிக் கொள்ளை நகை தொடர்பாகத்தான் தளம் வந்தவர் என்று. நகைகள் ஒரு பகுதி யாழ்ப்பாணத்தில் புதைக்கப்பட்டு வைக்கப்பட்டதாகவும், அது உமா மகேஸ்வரனுக்கு மட்டும்தான் தெரியும் என்றும், அதை எடுக்கத்தான் உமாமகேஸ்வரன் வந்ததாகவும் அறிய முடிந்தது.

தேசம்: ஆனால் அதை அவர் வேறு யாரிடமும் சொல்லியும் எடுத்திருக்கலாம் தானே…

அசோக்: இவருக்கு தானே தெரியும், இவர் புதைத்த இடம்…

தேசம்: இந்த விஜயத்தின் போது உமா மகேஸ்வரனை நீங்களும் சந்தித்து இருக்கிறீர்கள். உங்களுடைய உரையாடல்கள் எப்படி இருந்தது ?

அசோக்: முகுந்தன் தளம் வந்த காலகட்டம் ஒரு முக்கியமான காலம் . புளொட் வட கிழக்கில் மக்கள் மத்தியில் தீவிரமாக மக்கள் அமைப்புக்களை, தொழில் முறைசார்ந்த பல்வேறு தொழிற் சங்கங்களை, மாணவர் அமைப்புக்களை, பெண்கள் அமைப்புக்களை ஏற்படுத்தி மக்கள் மத்தியில் பெருநம்பிக்கைகளை ஏற்படுத்தி இருந்தது. அந்த நேரத்தில் முகுந்தனின் வருகை நம்பிக்கையை எங்களுக்கு தந்தது. நானும் கேசவனும் இரண்டு தடவை சந்திருப்போம் என நினைக்கிறன். சந்தித்து இங்க இருந்த நிர்வாகங்கள், நிர்வாக சிக்கல்கள் எப்படி போகுது என்று ஒரு நிர்வாக உரையாடலாக தான் இருந்தது.

நிறைய பேர் சந்தித்தவர்கள். மக்கள் அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள், மாணவர் அமைப்பு க்களை ச் சேர்ந்த தோழர்கள் ஆழமான அரசியல் கருத்துக்களை உரையாடி இருக்கிறார்கள். சந்தேகங்கள் முரண்பாடுகள் பல்வேறு உரையாடல்கள் எல்லாம் நடந்திருக்கு. முகுந்தன் இவ்வாறான ஒரு தளத்தை எதிர்பார்க்கவில்லை. முகுந்தனின தள வருகை தந்த நம்பிக்கையை பிறகு சுழிபுரம் படுகொலைகள் இல்லாமல் செய்து விட்டது. உண்மையில் அதன் பின் நாங்கள் எல்லாம் கடுமையாக மன ரீதியாக பாதிக்கப்பட்டோம். மிக சோர்வும், எங்கள் நம்பிக்கைகள் மீது சந்தேகம் வரத் தொடங்கிய காலம் என்று அதை சொல்லலாம்.

தேசம்: ஃப்ரெண்ட்லியா இருந்ததா அல்லது முரண்பாடா…

அசோக்: நோர்மலா இந்த உரையாடல்கள் பிரெண்ட்லியாகத்தான் இருந்தது. பெருசா அதுக்குள்ள கருத்து முரண்பாடு வரேல்ல.

நாங்கள் எல்லா பேரும் சந்தித்த பிறகு தான் இந்த படுகொலை நடக்கிறது.

தேசம்: இது எத்தனையாவது சந்திப்பு உமாமகேஸ்வரனுடன் உங்களுக்கு நேரடியாக சந்தித்தது?

அசோக்: இந்த சந்திப்புக்கு முதல் இரண்டு மூன்று தரம் சென்றல் கமிட்டி மீட்டிங் கில் சந்தித்திருக்கிறன்.

தேசம்: இந்த மூன்று நான்கு சந்திப்பையும் வைத்துக்கொண்டு உமா மகேஸ்வரனை நீங்கள் எப்படி மதிப்பீடு செய்திருந்தீர்கள்?

அசோக்: உமாமகேஸ்வரனுடன் நீங்கள் கதைக்கலாம். உமா மகேஸ்வரன் உரையாடலுக்கான ஒருவர். எதுவும் கதைக்கலாம் நீங்கள்.

தேசம்: முரண்படுறதுலயும் பிரச்சினை இல்லை.

அசோக்: ஆரம்ப காலங்களில் பெரிதாக முரண்பாடுகள் வந்ததாக நான் காண வில்லை. முரண்பாடுகள் , பிரச்சனைகள் பற்றி யாரும் கதைப்பதில்லைத்தானே. உண்மையில் முகுந்தன் அரசியல்வாதியாக மாற வேண்டிய ஒரு ஆள். ஒரு தேர்ந்த அரசியல்வாதிக்குரிய எல்லா இயல்புகளும் கொண்ட ஒரு மனுசன். எந்த ரொபிக்கிலயும் கதைக்கலாம் நீங்கள். அவர் மார்க்சிஸ்ட் இல்லாட்டியும், மார்க்சிஸ்ட் மாதிரியா மற்றவர்களை நம்பவைக்கக்கூடிய ஒருத்தர். மாக்சிசம் கதைப்பார். பெண்ணியம் கதைப்பார். பெரியாரியம் கதைப்பார். எல்லாம் கதைக்கக் கூடிய ஒரு ஆள். ஆனால் ஆழமான அரசியல் சித்தாந்த புரிதல் அவரிடம் இல்லை. ஒரு மேடைப் பேச்சுக்குரிய கதாபிரசங்கித்தனம் அவரிடம் இருந்தது. முகுந்தனை சரியான தலைமைக்குரியவராக வளர்த்தெடுக்க கட்டுப்பாட்டுக்குழுவில் இருந்த தோழர்கள் தவறிட்டாங்க. முகுந்தன் முற்போக்கான இயக்கம் ஒன்றிக்கு தலைமை தாங்கக் கூடிய நபர் அல்ல.

ஒரு காலகட்டத்தில் பார்த்தீர்கள் என்றால் புளொட்டுக்குள்ள 84 வரையும் கட்டுப்பாட்டு குழு தான் பெரிய அதிகார மையமாக இருந்தது. அது முகுந்தன், சந்ததியார், கண்ணன், ரகுமான் ஜான், சலீம்.

அந்த அதிகாரத்தில் ஒரு ஒரு அங்கமாகத்தான் உமா மகேஸ்வரன் இருந்தாரே ஒழிய, உமாமகேஸ்வரன் பெரிய அதிகாரம் மிக்கவராக இருக்கல. எப்ப உமாமகேஸ்வரன் தனியானதொரு அதிகார மையமாக வாரார் என்றால் இவர்களுக்குள் முரண்பாட்டுக்கு பிற்பாடுதான்.

தேசம்: உமா மகேஸ்வரனை வென்றெடுக்க மற்ற மூன்று உறுப்பினர்களும் பிற்காலத்தில் தீப்பொறியில் போன அந்த மூன்று உறுப்பினர்களும் ஏதாவது முயற்சி எடுத்திருந்தார்களா… ?

அசோக்: வரலாற்றை பின் நோக்கி பார்த்தோமென்றால், கட்டுப்பாட்டுக் குழு, அரசியல் கல்வி என்பது ஒரு அமைப்பின் தலைமை வழிகாட்டிகளுக்கு மிக அவசியம் என்பதை உணர்ந்திருக்கவில்லை. மத்திய குழுவைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கும் மார்ச்சிய அரசியல் சித்தாந்தம், புளொட்டின் அரசியல் தளம், அதன் கோட்பாடு, நடை முறை பற்றிய வகுப்புக்களை தெளிவை ஏற்படுத்தி இருக்கவேண்டும். இவை எதுவுமே இல்லை. மத்திய குழுவில் இருந்த பலருக்கு அடிப்படை அரசியல் அறிவு கூட கிடையாது.

உண்மையிலேயே பார்க்கப்போனால், சொல்லுறம் தானே பிற்காலத்தில் உமாமகேஸ்வரன் ஒரு அதிகார மையமாக படுகொலைகளுக்கு உடந்தையாக போனார் என்று. அதற்கான காரணங்களை நாங்கள் முதலே தடுத்திருக்கலாம். ஏனென்றால் நாங்கள் தானே அந்த அதிகார மையமாக இருந்தம்.

எல்லாத் தவறுகளுக்கும் காரணமாகவும் உடந்தையாகவும் இருந்து விட்டு கடைசியில் தனி நபர் முகுந்தன் மீது நாங்க எப்படி குற்றம் சுமத்த முடியும். எனக்குபுரியல்ல. கட்டுப்பாட்டு குழுவில் பார்த்தீர்கள் என்றால் முகுந்தனும் கண்ணனும் தான் பழைய புலிகளின் அரசியல் கொண்டவர்கள். ஆனல் மற்றவர்கள் அப்படி இல்லையே; கண்ணன் கூட…

தேசம்: கண்ணன் என்பது …

அசோக்: யோதீஸ்வரன்.

தேசம்: அவரும் ஒரு இடதுசாரி பாரம்பரியத்தில் இருந்து வந்தவரா?

அசோக்: இடதுசாரி பாரம்பரியம். ஆனால் கொஞ்சம் முகுந்தனின் விசுவாசி. கண்ணனின் அரசியல் முகுந்தனோடு உடன் பட்டதல்ல. கண்ணன் தளத்தில் நின்ற சமயம் நான் நிறைய நேரம் கண்ணனோடு உரையாடி இருக்கிறன். இடதுசாரிய அரசியல் ஆர்வம் கொண்டவர். இதை விட முக்கியம் கற்றுக் கொள்ள அறிந்து கொள்ள, உரையாடக் கூடிய மனநிலை அவரிடம் இருந்தது. நியாயமாக உரையாடக்கூடிய ஒரு ஆள். அப்ப கட்டுப்பாட்டு குழுவில் இருந்தது சந்ததியார், ரகுமான் ஜான், சலீம், உமா மகேஸ்வரன், யோதீஸ்வரன் கண்ணன் இவங்க தான். இவங்க நினைத்திருந்தால் இயக்கத்தை சரியான திசை வழி நோக்கி கொண்டு போய்இருக்கமுடியும். முகுந்தனை கட்டுபடுத்தி இருக்கமுடியும்.

தேசம்: மூன்றில் இரண்டு பெரும்பான்மையாக இவர்கள் இருந்துள்ளார்கள்…

அசோக்: உண்மைதான். ஆனால் இதனால் எந்த பிரயோசனமும் இல்லை, எந்த மாற்றங்களையும் இவர்கள் ஏற்படுத்தவில்லை. பல பிரச்சனைகளை தீர்த்து இருக்கலாம். ஆனால் இது பற்றிய எந்த அக்கறையும் இருகல்ல. அமைப்பின் அரசியல் முன்னேற்றத்தை விட நாங்க ஒவ்வொருவரும் எங்களின் தனிப்பட்ட நலன் சார்ந்த அதிகாரம் சார்ந்த விடயங்களில்தான் கவனம் செலுத்தினம். எங்கட அதிகார நலன்களினால்தானே முகுந்தன், சந்ததியார் முரண்பாடு உருவாகிறது. குழுவாதம் ஆரம்பமாகிறது. இப்ப பார்க்கப் போனால் அதிகாரப் போட்டியாகத் தான் பார்க்கிறேன் அதை. அதிகார போட்டியின் நிமித்தமாக உருவான முரண்பாடுதான் இதை இரண்டு குழுக்களாக உருவாக்குது. சந்ததியார் குழுவாகவும் முகுந்தன் குழுவாகவும். இடையில அகப்பட்டது தளத்தில் இருந்த நாங்கள்தான். நாங்க சந்ததியாரும் இல்லை முகுந்தனும் இல்லை.

தேசம்: நீங்கள் மட்டும் இல்லை இந்த அமைப்பை நம்பி சேர்ந்த ஆயிரக்கணக்கான போராளிகளும் தான்

அசோக்: உண்மைதான். உதாரணமாக எனக்குத் தெரியும் தோழர் கேசவனுக்கு அரசியல்துறைப் பொறுப்பாளராக வரவேண்டும் என்ற எண்ணம் இருந்தது. உண்மையில் அந்த அரசியல் தகமை கேசவனுக்கு இருந்தது. வாசுதேவா அரசியல் துறை பொறுப்பாளருக்கு தகுதி அற்றவர். ஆனால் அதை முகுந்தன் வாசுதேவாவுக்குக்கு கொடுத்து விட்டார். கட்டுப்பாட்டுக் குழுவில் இருந்தவர்கள் இந்த நியமனத்தை தடுத்து இருக்கவேண்டும். ஆனால் இவங்க வாயே திறக்கல்ல.

தோழர் ரகுமான் ஜான் பாலஸ்தீன பயிற்சி முடித்து வரும் போது அவருக்கு இராணுவதுறைச் செயலர் பதவி கொடுக்கப்படும் என்ற எதிரபார்ப்பு பலரிடம் இருந்தது. இதற்கு முழு தகமையும் கொண்டவர் அவர். அவருக்குத்தான் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் என்ன நடந்தது, தொடர்ந்து இராணுவப் பொறுப்பாளாராக கண்ணனே இருக்கிறார். மாற்றங்கள் நடந்திருக்க வேண்டும். அதை ஏற்றுக் கொள்ளும் ஜனநாயக மனநிலையை, பண்பை உட் கட்சி ஜனநாயகத்தை நாங்க தலைமை மட்டத்தில் ஏற்படுத்தி இருக்க வேண்டும். முகுந்தனின் தன்னிச்சையான போக்குகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்க வேண்டும். அதிகாரம் பரவலாக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நாங்க என்ன செய்தம். முகுந்தன் சர்வாதிகாரியாக வளர்வதற்கு நாம் ஆரம்பத்தில் துணை போனோம். முகுந்தன் பயன்படுத்திக் கொண்டார்.

அடுத்தது குழுவாதம் இருக்குதானே, இரண்டு சமனான நபர்கள் இருக்கும் போது அவங்களுக்குள் புரிந்துணர்வு இல்லையென்றால் இயல்பாகவே குழு வாதங்கள் உருவாகும். அவங்களுக்குள்ள ஆரோக்கியமான தலைமைத்துவ ஜனநாயக பண்பு இல்லை என்று சொன்னால் குழு வாதம் உருவாகும். அது இயல்பாகவே உருவாகிவிட்டது. முகுந்தன் – சந்ததியார் என்ற முரண்பாட்டு உருவாக்கம் வந்தவுடனே அவர்களைச் சுற்றி குழுக்கள் உருவாகும் போது, முரண்பாடுகளும், பகைகளும் உருவாகும். அது வளரும். இது இயல்வுதானே.

தேசம்: இந்த அதிகாரத்துக்கான போட்டிதான் இந்தப் பிரிவினையை கொண்டு வருதேயொழிய ஒரு ஜனநாயக கோரலா இருக்கல என்று நினைக்கிறீர்கள்.

அசோக்: புளொட்டுக்குள்ள பின் தளத்தில் உயர் மட்டங்களில் உட்கட்சி ஜனநாயகம், தோழமை என்றதே இருக்கல எப்பவும். பதவிகளை அரசியல் ஆளுமை, தகமை, தேர்ச்சி கொண்டவர்களுக்கு வழங்கும் நிலை இருந்ததே இல்லை. இவ்வாறான அரசியல் கலாச்சார அடித்தளத்தை ஆரம்பத்திலேயே உருவாக்க நாங்க தவறிவிட்டோம்.

தேசம்: பிரிய வெளிக்கிட்டவர்களுக்கு கூட அந்த ஜனநாயகம் இருக்கேல என்று சொல்லுறீங்களா?

அசோக்: ஜனநாயக மத்தியத்துவம் இருந்தால், நீங்கள் எப்படி தன்னிச்சையான மத்திய குழுவை உருவாக்க இயலும். ஆரம்பத்தில். குறைந்தபட்சம் ஜனநாயக ரீதியிலான மத்திய குழுவை உருவாக்கி இருந்ததால், தளத்தில் நிறைய தோழர்கள் வேலை செய்தவர்கள்.

அவர்களை உள்வாங்கி இருக்க வேண்டும். இந்த மத்தியகுழு உருவாக்கம் பற்றி முன்னரே கதைத்திருக்கிறம். சிறையில் இருந்து வந்த ஆட்களையும், உங்களுக்கு வேண்டப்பட்டவர்களையும்தானே தானே நீங்கள் மத்திய குழுவுக்கு எடுத்தனீங்கள். அரசியல் ரீதியாக எந்த வளர்ச்சியும் இல்லாத இராணுவக் கண்ணோட்டம் உள்ள பல்வேறு பிரச்சனைகளால் சிறைக்குப் போன ஆட்கள் சிறை உடைப்பின் பின்னர் வாறாங்கள்.

மத்திய குழு உருவாக்கும் போது அரசியல் ரீதியாக வளர்ந்த ரகுமான்ஜான், சந்ததியர், கேசவன் ,சலீம், பார்த்தன் இவங்களெல்லாம் அரசியல் ரீதியாக மார்க்சிய ஐடியாலஜி கொண்ட தோழர்கள்… இவங்கள் மறுத்திருக்க வேண்டும், இவ்வாறானவர்களை கொண்டு வரக்கூடாது என்று சொல்லி. ஆரோக்கியமான ஒரு மத்திய குழுவை உருவாக்கி இருக்க வேண்டும் இவர்கள். ஆனால் என்ன நடந்தது, இவர்களும் சேர்ந்து தங்கள் தங்களுக்குரிய வேண்டியவர்களை நியமித்து ஆரம்பத்திலேயே குழு வாத மனநிலையை உருவாக்கி விட்டாங்க. பிறகு எப்படி இவங்களிட்ட ஜனநாயக பண்புகள் இருக்கமுடியும்.

தேசம்: மற்றது ஒன்று சொல்லுவார்கள் புளொட்டின் எழுச்சியும் வீழ்ச்சியும் சுழிபுரம் தான் என்று. அப்படி பாக்கேட்க சந்ததியார், சுந்தரத்தால் கொண்டுவரப்பட்டவர்கள்தான் பெரும்பாலான புளொட் உறுப்பினர்கள். அவர்களை எப்படி உமாமகேஸ்வரன் வென்றெடுக்கக் கூடியதாக இருந்தது… ?

அசோக்: உமாமகேஸ்வரன் ஒரு அரசியல் சாணக்கியன். சந்ததியார் என்ன செய்வார் என்று கேட்டால் எல்லாவற்றிலும் கட்டுப்பாடாக இருப்பார், ஒழுங்கை எதிர்பார்ப்பார். பல விடயங்களில் கடுமையானவர். குறிப்பாக பண விடயங்களில் சிக்கனமாக, எளிமையாக வாழ வேண்டும் என்ற நியாயமான கொள்கை கொண்டவர்.

ஒரு காலகட்டத்தில் பார்த்தீர்களென்றால், படுகொலையுடன் சம்பந்தப்பட்ட, சந்ததியாருக்கு எதிராக மாறின தோழர்கள் எல்லோரும், சுழிபுர தோழர்கள் தான். முழுப்பேரும் சந்ததியாரால் கொண்டுவரப்பட்ட ஆட்கள்தான். சந்ததியாருடைய உறவினர்களும் கூட. முரண்பாடுகள் எப்படி ஏற்படுகிறதென்றால், சந்ததியார் சிக்கனமும் எளிமையும் வேண்டும் என நினைப்பவர். இதில் கடுமையாக இருப்பார். கணக்கு வழக்குகள் எல்லாம் பாப்பார். ஆனால் பின் தளத்தில் இருந்த பலரும் இதற்கு எதிர்மாறானவர்கள்.

சங்கிலியன் தலைமையில் இருந்த உளவுப்பிரிவு எந்த அரசியலும் அற்ற வெறும் வன்முறை மனநிலை கொண்ட கூட்டம். இவங்களின்ற செலவுகள் எதற்கும் வரையறை கணக்கு வழக்கு எதுவும் இல்லை. தன்னிச்சையான போக்கு. உண்மையிலேயே புளொட்டின் உளவுத்துறைக்கு எக்கச்சக்கமான பணம் செலவழிக்க பட்டிருக்கு. எதற்கும் கணக்கு வழக்கு இல்லை. கந்தசாமி தலைமையிலான உளவுத்துறை என்ன செய்கிறதென்றே யாருக்கும் தெரியாது. ஒரு அரசியல் இராணுவ இயக்கத்தின் உளவுத்துறை என்பது எப்படியான கட்டமைப்பு கொண்டு இருக்க வேண்டுமோ, அதற்கு எதிர்மாறாகத்தான் புளொட்டின் உளவுத்துறை இருந்தது.

அரசியல் அற்ற வெறும் சண்டியர்கள் கூட்டம் அது. இது தோழர் சந்ததியாருக்கு பிடிப்பதே இல்லை. இந்த முரண்பாட்டை முகுந்தன் சாணக்கியமாக தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார். இவங்களுக்கு பணம், பூரண சுதந்திரம், அதிகாரம், ஆசிர்வாதம் எல்லாம் முகுந்தன் பக்கத்திலிருந்து தாராளமாக கிடைத்தது. அப்ப என்ன நடக்கும். சந்ததியாரோடு முரண்பாடு பகை வரும். குழுவாதம் உருவாகும். முகுந்தன் விசுவாசம் உருவாகும். இதுதான் நடந்தது. முகுந்தன் விசுவாசி என்றால் யாரும் அவர்களை கட்டுப்படுத்த முடியாது. இந்தப் போக்கை முகுந்தன் ஊக்கப்படுத்திக் கொண்டே இருந்தார். விசுவாசிகளும் நன்றாக பயன்படுத்தினாங்க. இது உளவுத் துறையில் மாத்திரம் அல்ல, எல்லா மட்டங்களிலும் இருந்தது. புளொட்டில் பின் தளத்தில் எதற்கும் எந்தவித கணக்கு வழக்கும் இல்லை. முகுந்தன் விசுவாசியாக இருந்தால் எந்த கணக்கு வழக்கும் காட்டத்தேவையில்லை என்ற நிலைதான் இருந்தது.

தேசம்: உளவுத்துறையை உருவாக்கினது யார் ?

அசோக்: உளவுத்துறையை உருவாக்கியது கட்டுப்பாட்டுக் குழுதான். மத்திய குழுவுக்கும் அதற்கும் தொடர்பில்லை. உளவுத்துறை உமா மகேஸ்வரனுக்கு கீழ தான் இருந்தது. ஆரம்ப காலத்தில் உறவு துறை வந்து விட்டது. இந்தக் கட்டுப்பாட்டு குழு என்ன செய்திருக்க வேண்டும் ஆரோக்கியமான உளவுத்துறையை உளவுத்துறைக்கான தேர்ச்சி அறிவு கொண்டவர்களை கொண்டு உருவாக்கி இருக்கவேண்டும். தங்களுடைய கட்டுப்பாட்டிக்குள் வைத்திருக்க வேண்டும். புளொட் உளவுத்துறைக்கு தெரிந்த விடயம் கொலை செய்யவும், சித்திரவதை செய்யவும்தானே.

ஒரு தடவை தளத்தில் இருந்து மத்திய குழுகூட்டத்திற்கு போன நான், கேசவன், முரளி, ஈஸ்வரன் அப்ப குமரனும் வந்திருந்தவர். எங்களிடம் சந்ததியார் இந்த பிரச்சனைகளை பற்றி சொல்லி, புளாட்டின் கணக்கு வழக்கு, வரவு செலவு பற்றிய விபரங்களை மத்திய குழுவில் எங்களை கேட்கும்படி சொன்னார். எனென்றால், தளத்தில் எங்களிடம் ஒழுங்கான வரவு செலவு அறிக்கை இருந்தது. பின் தளத்தில் அது இல்லை. தளத்தில் நாங்கள் கணக்கு வழக்கு எல்லாம் ஒழுங்காக வைத்திருக்கிறோம். நீங்க கேளுங்க என்று சொன்னார். அப்ப மத்திய குழுக் கூட்டம் நடக்கேக்கை நாங்க கேட்க எண்ணி இருந்தம். தோழர் குமரன் கேட்பதாக சொன்னார்.

தேசம்: இது எத்தனையாவது மத்திய குழுக் கூட்டம்?

அசோக்: இது 84 நடுவுக்க இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

தேசம்: அப்ப இது ஒரு நாலாவது ஐந்தாவது மத்திய குழுக் கூட்டம் ஆக இருந்திருக்கலாம்.

அசோக்: அனேகமாக மூன்றாவது கூட்டமாக இருக்கலாம். நிர்வாகம் எல்லாம் ஒழுங்கமைக்கப்பட்டதுக்கு பிறகுதான் இது வருது. தளத்தில் கணக்கு வழக்கு எல்லாம் ஒழுங்காக வைத்திருக்கிறோம். அப்ப மத்திய குழு கூட்டத்தில் குமரன் கேட்பார் என்று பார்க்க குமரன் கேட்கேல.

தேசம்: இது உமாமகேஸ்வரன் தளம் வந்துட்டு போனதற்கு முதலா? பிற்பாடா இந்த கூட்டம் நடக்குது.

அசோக்: அதுக்கு முதல் நடந்தது. கடைசியில் நான்தான் கேட்டேன். அப்ப உடனே முகுந்தன் சொன்னார் மணியம் நாங்கள், மணியம் என்றால் சந்ததியார். மணியம் நாங்கள் கட்டுப்பாட்டு குழுவில் இதை தீர்மானித்து போட்டு, மத்திய குழுவுக்கு அறிவிப்பம் என்று. அப்ப நான் சொன்னேன் மத்தியகுழுவில் இங்க அதைப்பற்றி இப்ப கதைக்கலாம்தானே என்று. உடனே முகுந்தன் கட்டுப்பாட்டுக்குழுவில்தான் இதுபற்றி முதலில் கதைக்க வேண்டும். என்ன மணியம் என்றார். உடனே சந்ததியார் சொன்னார் ஓமோம் அப்படி செய்யலாம் என்று. ஆனால் கேட்கச் சொன்னதே இவர்தான். அதோட கதை முடிந்து விட்டது. இந்த கணக்கு வழக்கு பற்றி சொஞ்சமாவது அன்றைக்கு உரையாடி இருக்வேண்டும். உரையாடி இருந்தால் சில தீர்மானங்களை கட்டுப்பாடுகளை கொண்டு வந்திருக்க முடியும்.

தேசம்: சந்ததியார் அப்படி செய்யல்ல.

அசோக்: ஓம். அப்ப என்ன சொல்லி இருக்க வேண்டும் அவர். இல்லை இல்லை மத்திய குழுவிலேயே கதைப்போம் என்று சொல்லி இருக்க வேண்டும். பிறகு அந்தக் கதை அதோடயே போயிட்டுது. அப்ப என்ன பிரச்சினை என்று கேட்டால் ஸ்ட்ராங்கா ஃபைட் பண்ணக்கூடிய நபரா சந்ததியார் இருக்கல. சந்ததியார் என்ன செய்தவர் என்று கேட்டாள், நீங்க கேளுங்க, அவங்க கேளுங்க என்று சொல்வார். அவங்க ஓமோம் என்று சொல்லி விட்டு முகுந்தனிடம் இவர் சொன்னதை முரண்பாடாக்கி சொல்லி விடுவார்கள். முரண்பாடுகளைத் தூண்டி விடுவார்கள். சந்ததியார் ஆளுமையான அரசியல் தளம் ஒன்றை பின் தளத்தில் உருவாக்கி இருக்க முடியும். அதற்கான காலம் ஆரம்பத்தில் இருந்தது. அவருக்கு பின்னால ஒரு உறுதியான அரசியல் அணியை திரட்டி இருக்கலாம். அது அவரால் முடியாமல் போய் விட்டது. முகுந்தனின் தன்னிச்சையான போக்குகளும் அதிகாரமும் உச்ச நிலையை அடைந்த பின் கடைசி காலங்களில் அவரால் எதுவும் செய்யமுடியவில்லை.

தேசம்: அவரை நம்பி போவதற்கான சூழல் இருக்கல.

அசோக்: அந்த நேரம் முகுந்தனின் அதிகாரம் எல்லா இடங்களிலும் நிலைபெற்றுவிட்டது. சந்ததியார் அதை எதிர்க்க கூடிய உறுதியுள்ளவராக இருக்கல்ல. காலம் கடந்துவிட்டது. அவருடைய சுழிபுரத் தோழர்களை ஒழுங்காக அரசியல்மயப்படுத்தி ஜனநாயக பண்பு கொண்ட மனிதர்களாக, அதிகாரங்களுக்கு எதிரானவங்களாக வளர்த்தெடுத்து இருந்தாலே, புளாட் இந்த அழிவை சந்தித்திருக்க முடியாது. சந்ததியாருடைய மிக விசுவாசிகள் தானே முகுந்தன் பக்கம் போனது. அவர் பிரச்சனைகளை அரசியல் ரீதியாகவும், சிநேக பூர்வமாகவும் கையாண்டிருந்தால் குழுவாதத்தை தவிர்த்திருக்க முடியும். முகுந்தனின் அதிகாரத்தை இல்லாமல் செய்திருக்க முடியும்.

முகுந்தன் என்ன செய்தார் என்றால் தவறான நபர்களுக்கு மிகவும் தாராளவாதத்தை, அதிகாரத்தை கொடுத்தார். உண்மையில் புளொட்டின் அழிவு என்பது முகுந்தனோடு எங்களையும் விமர்சனங்களுக்கு உள்ளாக்கி பார்க்க வேண்டிய ஒன்று.

தேசம்: உங்களுடைய கருத்துப்படி தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் பிரகடனப்படுத்தப்பட்டு 84 டிசம்பர் காலப்பகுதி வரைக்கும் உட் படுகொலைகள் என்று சொல்லுமளவுக்கு எதுவும் நடக்கலை

அசோக்: அப்படி சொல்ல முடியாது. இது பற்றிமுன்னமே கதைத்திருக்கிறம். உட் படுகொலைகள் தொடர்பாக சந்தேகம் வந்திருக்கு. உள்ளுக்குள்ள கொலைகள் நடக்குது என்று சொல்லி கொஞ்சம் கொஞ்சமாக கதைகள் வர தொடங்கிட்டுது 84 க்கு பிற்பாடு.

தேசம்: 84 டிசம்பருக்கு முதலா? பிறகா?

அசோக்: 84 கடைசியில் இந்தக் கதைகள் வந்துவிட்டது. எங்களை நோக்கி இந்தக் கேள்விகள் வர தொடங்கிவிட்டது.

தேசம்: குறிப்பாக அப்படி யாருடைய படுகொலைகள் உங்களுக்கு ஞாபகம் இருக்கா?

அசோக்: கொலைகள் நடக்குது என்று தெரியுமே ஒழிய விபரங்கள் தெரிநதிருக்கவில்லை.

தேசம்: யார் என்றது அது உண்மையா பொய்யா என்பது தெரியாது உங்களுக்கு…

அசோக்: தெரியாது. கேம்பில் படுகொலைகள் சித்திரவதைகள் நடக்குது என்று சொல்லி கதைகள் எல்லாம் வரத் தொடங்கி இருந்தது. நான் நினைக்கிறேன், ஒரு சென்ட்ரல் கமிட்டி மீட்டிங்க்கு பின்தளம் போன நாங்க பயிற்சி முகாம்களுக்கு போய் இருந்தம். எங்களை சந்தித்த தோழர் ஒருவர் சித்திரவதைகள், கொலைகள் நடப்பதாக தோழர்கள் சந்தேகப்படுவதாக சொல்கிறார். ஆனா எந்த ஆதாரமும் இல்லை. மத்திய குழுவில் இதைக் கேட்க வேண்டும் என்று யோசிக்கிறம். அங்க மத்திய குழு கூட்டத்திற்கு போனா யாருமே கேட்கவில்லை.

தேசம்: இது சம்பந்தமா நீங்கள்…

அசோக்: அப்ப அந்தக் கூட்டத்தில் நான் கேட்கிறேன். முகுந்தன் கோபத்தோடு கேட்டார் எங்க கேள்விப் பட்டீங்க என்று. அப்ப நான் சொன்னேன் தளத்தில் என்று. ஏனென்றால் கேம்பில கேள்விப்பட்ட து என்று சொன்னால் யார் சொன்னது என்று அடுத்த கேள்வி வரும் என்று எனக்கு தெரியும். முகுந்தன் உடனே உணர்ச்சிவசப்பட்டு கடும் கோபத்தில் சொன்னார் ஆதாரம் இல்லாமல் எதுவும் கதைக்கக் கூடாது என்று சொல்லி. எல்லாரும் கப்சிப். யாருமே அந்த கூட்டத்துல கதைக்கேல. அந்தக் கூட்டத்தில் ரகுமான்ஜான் இல்ல. ரகுமான்ஜான் இருந்திருந்தால் கதைத்திருக்ககூடும்.

தேசம்: அந்த கூட்டத்தில் சந்ததியார் இருக்கிறார்.

அசோக்: ஓம். எல்லாரும் இருக்கினம்.

தேசம்: அதற்கு பிறகு நீங்கள் அந்த கேள்விய விட்டுட்டீங்க…

அசோக்: யாருமே சப்போர்ட் பண்ணல. அதனோடு அந்த உரையாடல் முடிந்து விட்டது.

தேசம்: சந்ததியார் உங்களுக்கு காந்தியத்தின் மூலமாகவும் தெரியும் தானே. அவரோட உங்களுக்கு நெருக்கம் இருக்கும் தானே. கூட்டத்துக்கு வெளியிலயும் அவர் இதை பத்தி உங்களோட கதைக்கவில்லையா?

அசோக்: வெளியில கதைப்பார். கூட்டத்தில நாங்கள்தான் முரண்படுவமேயொழிய யாருமே கதைக்க மாட்டாங்க.

தேசம்: இதைப்பற்றி கேட்டிருக்கிறீர்களா சந்ததியாரிட்ட நீங்கள்?

அசோக்: இல்லை இல்லை. தோழர் சந்ததியாரும் சிலவேளைகளில் அதிகாரம் கொண்டவராகவும் நடப்பார். அது எங்களிட்ட மாத்திரம்தான்.

ஒருதடவை அவரோடு முரண்பட வேண்டி வந்தது. தமிழீழ மாணவர் பேரவை டெசோ பொங்கும் தமிழமுது என்ற சஞ்சிகையை வெளியிட்டது. இதன்ற ஆசிரியராக இருந்தவர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர். அதன் பொறுப்பு மெட்ராஸில் இருந்தது. மெட்ராஸில் தோழர் கேசவன் பொறுப்பில் இருந்தவர். பேராசிரியர் வித்தியானந்தனின் மருமகன் என்று நினைக்கிறேன்.

தேசம்: தமிழகத்தை சேர்ந்தவரா சஞ்சிகை ஆசிரியர்…

அசோக்: ஓம். தமிழகத்தைச் சேர்ந்த இலக்கிய ஆர்வம் கொண்ட தோழர் அவர். ஆனால் அவர் கண்ணதாசனுடைய ரசிகர். ஒரு தடவை பொங்கும் தமிழமுது கண்ணதாசன் சிறப்பிதழாக வெளி வந்தது. அது தளத்துக்கு வந்தது. தளத்துக்கு வந்தவுடனே எங்களுக்கு பெரிய சிக்கலாக இருந்தது. மாக்சிசம் கதைக்கிறம், முற்போக்கு கதைக்கிறம் கண்ணதாசன் சிறப்பிதழ் சஞ்சிகையை எப்படி வினியோகிப்பது என்று. அப்ப டெசோ கமிட்டி கூடி முடிவெடுத்தது, நான் மட்டும் முடிவெடுக்கவில்லை. குருபரன் , தீபநேசன், தனஞ்சயன், ஜப்பார் சிவகுமார், அர்ச்சுனா, மகிழ்ச்சி, தமிழ், தம்பா, சுகந்தன் விமலேஸ்வரன் என்று மிகத்தீவிரமாக இயங்குகின்ற மாணவர் அமைப்பு அது. அரசியல் தத்துவார்த்த ரீதியிலும் அவங்கள் பெரிய வளர்ச்சி. தளத்தில் மாணவர் அமைப்பினை வளர்த்து கட்டி அமைப்பதில் இவர்களின் பங்களிப்புதான் அதிகம். அவங்கள் கூடி முடிவு எடுத்துட்டு சொன்னார்கள் இதை விநியோகிக்க இயலாது என்று சொல்லி. சரி என்று சொல்லி விநியோகம் செய்கிறது இல்லை என்று முடிவெடுத்து அதை முடக்கியாச்சு.

நான் பின்தளம் போனபிறகு சந்ததியார் அதைப் பற்றி விசாரித்தவர். அதை எப்படி நீங்கள் முடக்க முடியும் என்று சொல்லி. கண்ணதாசன் பற்றிய சிறப்பிதழ் என்று என்று சொல்லி அரசியல் சார்ந்து என் உரையாடல் இருக்க, அதை தடுத்து, இல்லை இல்லை நீங்கள் முடிவு பண்ண முடியாது என்று சொல்லி என்னோடு முரண்பாடு.

அதிகாரம் கிடைத்தால் சந்ததியாரும், முகுந்தனும் ஒன்றுதான். அதிகாரம், அதன் கவர்ச்சி மிகமிக ஆபத்தானது. எனக்கும் அதிகாரம் கிடைத்திருந்தால் அந்த நிலைக்கு தான் போய் இருப்பேனோ தெரியாது. ஏனென்றால் அதிகாரம் என்பது ஒரு கொடுமையான போதை. அரசியல் கல்வி சார்ந்து கோட்பாடு சார்ந்து நீங்கள் வளர்க்கப்படாது விட்டால் அதிகாரம் எல்லாரையும் அப்படித்தான் கொண்டு செல்லும்.

தேசம்: நீங்கள் ஒரு தடவை போகேக்க உங்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுது என்று சொன்னது அது இந்த மத்திய குழுவுக்கா அல்லது …

அசோக்: அது அதற்குப் பிற்பாடு. அது பாதுகாப்பல்ல. பாதுகாப்பு என்ற பெயரில் எங்களை கண்காணிக்க செய்யப்பட்ட ஏற்பாடு அது.

தேசம்: நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல 84 டிசம்பர் வரைக்கும் பெரிய பெயர் குறிப்பிட்டு சொல்வது மாதிரியான படுகொலைகள் ஒன்றும் கதைக்கப்படேல.

அசோக்: படுகொலைகள் நடந்திருக்கு..

தேசம்: தெரிய வரேல்ல.

தேசம்: நான் நினைக்கிறேன் 84 இல் தான் மனோ மாஸ்டர் விடுதலைப்புலிகளால் கொல்லப்படுகிறார் என்று நினைக்கிறேன்.

அசோக்: ஓம்

தேசம்: இவ்வாறான குழப்பமான காலகட்டத்தில் 84 காலப்பகுதி முடியுது.

பாகம் 16: சுழிபுரம் படுகொலையும் அதன் பின்னணியும்!!!

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! : தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 14 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 09.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

பாகம் 16:

தேசம்: 83 க்குப் பிறகான காலகட்டம், ஈழவிடுதலை அரசியலைப் பொறுத்தவரைக்கும் கடுகதி வேகத்தில் பயணித்துக் கொண்டிருந்த அரசியல் தானே. அரசியல் நகர்வுகள் அல்லது அந்த அரசியல் சூழல் வேகமாக மாறிக் கொண்டிருந்தது. 84 இந்திராகாந்தி மரணம் அடைந்தார். அதற்குப் பிறகு இலங்கை ராணுவம் திட்டமிட்ட படுகொலைகளை மேற்கொண்டது. 15 பேர் கொல்லப்படுகிறார்கள். ஒதிய மலையில் கொல்லப்படுகிறார்கள். அதேபோல தமிழீழ விடுதலை இயக்கங்கள் குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் மக்கள் மீது தாக்குதல் நடத்தி இருக்கினம். இன உணர்வு என்பது மிகக் கொதிநிலையில் இருந்த காலங்கள். இந்த காலப்பகுதியில் சகோதரப் படுகொலைகளும் இடம்பெற்றிருக்கிறது. அதிலும் குறிப்பாக, மிகவும் உக்கிரமாக பேசப்பட்ட படுகொலை, சுழிபுரம் 6 பேரின் படுகொலை. விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் அல்லது அனுதாபிகள் ஆறு பேர் கொல்லப்பட்டது. எந்தவிதமான விடயங்கள் இந்த படுகொலைகளை நோக்கி நகர்த்தி இருக்குது. அந்த நேரம் நீங்கள் யாழ்ப்பாணத்தில் இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். யார் அந்த நேரம் புளொட்டுக்குப் பொறுப்பாக இருந்தது?

அசோக்: அந்த காலகட்டத்தில் தோழர் கேசவன் தளப் பொறுப்பாளராக இருந்தார். மாவட்ட பொறுப்பாளராக தோழர் நேசன் இருந்தவர். இராணுவப் பொறுப்பாளராக சின்ன மென்டிஸ் இருக்கிறார். அந்தக் காலகட்டத்தில் பின் தளத்திலிருந்து படைத்துறைச் செயலர் கண்ணன் யோதீஸ்வரனும் வந்து நின்றவர். 84 டிசம்பர் காலகட்டம் என்று நினைக்கிறேன், இந்த காலத்தில் சுழிபுரத்தில் உமாமகேஸ்வரனும் வந்து தங்கி இருந்தார்.

தேசம்: அதால தான் படைத்துறைச் செயலர் உட்பட முக்கியமான ஆட்கள் எல்லாம் வந்து நின்றவை…

அசோக்: அதற்கு முதலே படைத்துறைச் செயலர் கண்ணன் வந்துட்டார். வந்து தளத்தில் சந்திப்புகள் எல்லாம் செய்து கொண்டிருந்தவர். அதற்குப் பிறகுதான் உமாமகேஸ்வரன் வாறார். வந்து சுழிபுரத்தில் தான் தங்கி இருக்கிறார். அது ஒரு ரகசியப் பயணம் தான். யாருக்குமே சொல்லப்படாமல் வந்த ரகசியப் பயணம். கிளிநொச்சி வங்கி கொள்ளை நகையின் ஒரு பகுதியை உமாமகேஸ்வரன் தன் பாதுகாப்பில் யாழ்ப்பாணத்தில் புதைத்து வைத்திருந்தார். அதை எடுக்கவே இந்த ரகசிய பயணம். வந்த உமாமகேஸ்வரனுக்கான பாதுகாப்பை புளொட்டின் ராணுவப் பிரிவு சங்கிலி – கந்தசாமி தலைமையில் சுழிபுரத்தைச் சேர்ந்த ஆட்கள்தான் கொடுக்குறாங்க.

தேசம்: சுழிபுரம் அந்த நேரம் புளொட்டின் ஒரு கோட்டையாகவும் இருந்தது?

அசோக்: பூரண பாதுகாப்பாகவும் அந்த இடம்தான் இருந்தது. அந்த நேரம் புலிகளின் மாணவர் அமைப்பைச் சேர்ந்த 6 பையன்கள் சுவரொட்டி ஒட்ட போயிருக்கிறார்கள். அந்தப் பையன்களை இவங்கள் உளவு பார்க்க வந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் கைது செய்து படுகொலை செய்து புதைசிட்டாங்க. யாருக்குமே தெரியாது. இந்தப் படுகொலை நடந்து இரண்டு மூன்று நாட்களில், தங்களின் மாணவர் அமைப்பைச் சேர்ந்த இந்த மாணவர்களை காணவில்லை என்று சொல்லி புலிகள் தேட தொடங்கிட்டாங்க. அந்த நேரம் புலிகளின் மாணவர் அமைப்புக்கு பொறுப்பாக இருந்தது திலீபன்.

தேசம்: திலீபன் அப்ப உங்கட பேனா நண்பர்…

அசோக்: திலீபன் பேனா நண்பர் இல்லை. புலிகளில் இருந்த என் பேனா நண்பியின் மூலம் ஏற்பட்ட உறவு. இது பற்றி முன்னர் கதைத்திருக்கிறன். எங்களிட்ட தனிப்பட்ட உறவு இருந்தது, கதைப்பம் பேசுவோம். தனிப்பட்ட பிரச்சனை எல்லாம் கதைக்கக் கூடிய உறவு ஒன்று இருந்தது. திலீபனின் மூத்த அண்ணன் ஒருவர் புளொட்டில் பின் தளத்தில் இருந்தவர். பிற்காலத்தில் திலீபன் பற்றி விமர்சனங்கள் வரும்போது, எனக்கு அதிர்ச்சியாக இருந்தது, இவனா என்று சொல்லி. அந்தக் காலகட்டத்தில் திலீபனிடம் வித்தியாசமான குணாதிசயங்கள் இருந்தது. திலீபன் அந்த நேரம் புலிகளின் மாணவர் அமைப்பிற்கும் பொறுப்பாக இருந்தவர்.

சுழிபுரம் பக்கம் போன இந்த மாணவர்களை காணவில்லை என்றவுடன், இவங்களுக்கு சுழிபுரம் புளொட் ஆட்கள் மீது சந்தேகம் வந்துவிட்டது. அவங்க கைது செய்திருப்பாங்க என்ற சந்தேகம் இவங்களுக்கு வந்து விட்டது. அந்த நேரம் உமாமகேஸ்வரன் அங்க வந்து நிற்கிறது இவங்களுக்கு தெரியாது.

தேசம்: திலீபன் ஆட்களுக்கு…

அசோக்: ஒம். உண்மையிலேயே அவர்கள் உளவு பார்க்க போக வில்லை. சுழிபுரத்தை அண்டியுள்ள கிராமங்களைச் சேர்ந்த சேர்ந்த பையன்கள் அவர்கள். விக்டோரியா கொலேஜ்சில் படித்துக் கொண்டிருந்தவர்கள். சுவரொட்டி ஒட்டுவதற்காகத்தான் போய் இருக்கிறார்கள். அவங்களுக்கு உமாமகேஸ்வரன் வந்து நிற்கும் விடயம் எதுவுமே தெரியாது.

பிறகு யாழ்ப்பாண யுனிவர்சிட்டியில் மாணவர்கள் மத்தியில் இப்பிரச்சனை வருகின்றது. யுனிவர்சிட்டியைச் சேர்ந்த மாணவர் அமைப்புகளில் ஒன்று இருந்தது என்ன என்றால், பிரச்சனை என்றால் கதைக்கலாம். உரையாடல் தளம் ஒன்று இருந்தது எல்லோர் மத்தியிலும். அப்போ திலீபன் ஆட்கள் வந்து கதைக்கிறார்கள், சுழிபுரம் பகுதிகளுக்கு சுவரொட்டி ஒட்ட போன மாணவர்களைக் காணவில்லை என்று சொல்லி. முகுந்தன் வந்து நிற்பதை இந்த நேரத்தில அவர்கள் அறிந்து விட்டனர். அப்ப அவங்களுக்கு சந்தேகம் வந்துவிட்டது. புளொட்தான் கைது செய்திருக்கும் என்று.

சுழிபுரம் புளொட் ஏரியா. அதற்குள் இவர்கள் சென்று விசாரிக்க முடியாது. என்னைத்தான் சென்று விசாரிக்க திலீபனும், கிட்டுவும் கூப்பிடுகிறார்கள். நான், சுழிபுரம் போய் விசாரித்து விட்டு வாரன் என்று இவர்களிடம் சொன்னேன். தாங்களும் வருவதாக சொன்னாங்க. நானும், திலீபனும், கிட்டுவும் அங்கு போகின்றோம். புளொட் ராணுவம் வளைத்து நிற்கிறது. சித்தன்கேணி கோயிலடியில் சந்தியில சென்ரி நின்ற ஆட்களை கேட்டதும், அப்படி யாரும் வரவில்லை என்று சொல்லிப் போட்டாங்க. ரெண்டு பக்கமும் பெரிய வாய்த்தர்க்கம். புளொட் காரங்க மிக மோசமாக நடந்து கொண்டாங்க. இவங்களை கூட்டி வந்ததற்கு என்னையும் பேசினாங்க. நான் இடையில நின்று சமாதானப்படுத்தி திலீபனையும், கிட்டுவையும் கூட்டிட்டு வந்துட்டேன். வரும்போது அவங்க சொன்னாங்க, அவர்களுடைய கதைகள் பேச்சிலிருந்து புளொட் தான் ஏதோ செய்திருக்கு என்று தாங்க நம்புவதாக. அவங்கள் ஒரு முடிவுக்கு வந்துட்டார்கள் புளொட் தான் ஏதோ செய்து விட்டது என்று…

தேசம்: திலீபனும், கிட்டுவும் ஒரு முடிவுக்கு வந்துட்டாங்க

அசோக்: ஓம். பிறகு தோழர் கேசவனிடம் நான் போய் நடந்த முழு கதையும் சொன்னேன். அந்த நேரம் கேசவன் சொன்னார், புளொட் கைது செய்திருக்காது, எதுக்கும் நான் சுழிபுரம் போய் விசாரித்து கொண்டு வாரேன் என்று சொல்லி, சுழிபுரம் போனவர். போயிட்டு வந்து சொன்னார், புளொட் கைது செய்யல என்றுதான் சொல்லுறாங்கள் என்று. அந்த நேரம் படைத்துறைச் செயலர் கண்ணனும் சுழிபுரம் போய் விசாரிக்கின்றார். அவரும் வந்து, கேசவன் தோழர் சொன்ன மாதிரியே சொல்கிறார். அப்ப கொந்தளிப்பான காலகட்டம். மக்களுக்கு, எங்க தோழர்களுக்கு இச் சம்பவம் தொடர்பாக தெளிவுபடுத்த துண்டுப்பிரசுரம் ஒன்று வெளியிட வேண்டும் என்று சொல்லி கண்ணன், நேசன் எல்லாருடைய முடிவோடையும் துண்டு பிரசுரம் ஒன்று அடிக்கப்படுது, ஒன்றுபட்டு செயற்படுவோம் என்ற தலைப்பில.

தோழர் கேசவன்தான் அந்த துண்டுப் பிரசுரத்தை எழுதுகின்றார். அதன்ற உள்ளடக்கம் இப்போது எனக்கு ஞாபகம் இல்லை. காணாமல் போன மாணவர்கள் தொடர்பான விடயத்தில், புளொட்டிக்கு எந்த சம்பந்தமும், தொடர்புகளும் இல்லை என்றும், இயக்கங்களின் ஒற்றுமையை வலியுறுத்தியும் எழுதப்பட்டதாக நினைக்கிறன்.

தேசம்: அந்த துண்டுப் பிரசுரம் வரேக்க அவர்களுடைய உடல் எடுக்கப்பட்டுட்டுதா?

அசோக்: இல்லை இல்லை. அந்த நேரம் எதுவுமே தெரியாது. என்ன நடந்தது என்றே தெரியாது. அந்த காலகட்டத்தில் தான் இந்த துண்டுப் பிரசுரம் வருகிறது. நாங்களும் உண்மையாவே நம்புறோம் புளொட் செய்ய வில்லை என்று.

பிறகு உடல் தோண்டி எடுக்கப்படுது. உமாமகேஸ்வரன் பின் தளம் போனதற்குப் பிறகு, அந்த இடங்களெல்லாம் கட்டுப்பாடு இல்லாமல் போகுது. பிறகு நாய்கள் கடற்கரையில் மோப்பம் பிடித்து தோண்டிய இடத்தில் உடல்கள் காணப்படுது. ஈபிஆர்எல்எஃப் தோழர்களும் பார்த்திருக்கிறாங்க அவங்கதான் படங்கள் எடுத்தார்கள் என்று சொன்னார்கள்.

தேசம்: நான் நினைக்கிறேன் அந்த நேரம் ஈபிஆர்எல்எஃப் இல் இருந்த கொன்ஸ்ரன்ரைன் இப்ப லண்டனில் இருக்கிறார். அவர் அந்த காலகட்டத்தில் நான் நினைக்கிறேன் ஈழமுரசில் பணியாற்றிக் கொண்டிருந்தவர். அந்தப் படத்தை அவர்தான் எடுத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

அசோக்: எனக்கு நல்ல ஞாபகம், இந்த சம்பவம் நடந்ததற்கு பிறகு, நான் நீர்வேலி என்ற கிராமத்தில் இருந்தன். திலீபன் என்னை தேடி வந்தவர். அதுக்கு முதல் திலீபன் கிட்ட நான் சொல்லிட்டேன் மாணவர்கள் காணாமல் போனதுக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என்று. ஆனால் அவங்களுக்கு சந்தேகம் இருந்தது. அப்ப திலீபன் என்னை கண்டதும் அழத் தொடங்கிட்டார். படத்தை காட்டி சொன்னார், இப்ப என்ன சொல்லுறீங்க? நீங்கள்தான் செய்திருக்கிறீர்கள். சுழிபுரத்தில் தான் தோண்டி எடுக்கப்பட்டு இருக்கு என்று சொல்லி. எதுவுமே கதைக்கல நான். என்ன கதைக்க முடியும்? கதைக்க வார்த்தையும் வரல. ரெண்டு பேருக்குமான உறவு அதோட முடிந்து போயிட்டது. இறந்து போன மாணவர்களை புலிகளின் மாணவர் அமைப்பினுள் கொண்டு வந்தது திலீபன்தான். இவங்களோடு நெருக்கமாகவும் இருந்துள்ளார்.

தேசம்: இந்த திலீபன் தான் பின்னாட்களில் உண்ணாவிரதம் இருந்தவர்?

அசோக்: உண்ணாவிரத திலீபன். பிற்காலத்தில் திலீபனுடைய வாழ்க்கை முறையும் வேறயா போயிட்டுது. டெலோ அழிப்பில் முன்னுக்கு நின்றவர் என்டு சொல்லி பயங்கர குற்றச்சாட்டுகள்.

தேசம்: அப்போ எப்ப உங்களுக்கு தெரியும் இதில் புளொட் ஈடுபட்டது என்று சொல்லி?

அசோக்: சுழிபுரத்துக்குள்ள தானே இது நடந்திருக்கு. எனக்கு டவுட் வந்துட்டுது இவர்கள் தான் செய்திருப்பார்கள் என்று சொல்லி. அன்றைக்கு கிட்டு, திலீபனுடன் நடந்த உரையாடல் ஆரோக்கியமாக இருக்கல. இவங்கள் நிதானமாக கதைத்தவங்கள். புளொட் ஆட்கள் அதுல நடந்துகொண்ட முறை சரியான பிழை. அப்பவே கொஞ்சம் சந்தேகம் இருந்தது.

தேசம்: யார் யார் அதில் சார்பாக உரையாடலில் ஈடுபட்டது.

அசோக்: அதுல சங்கிலி உட்பட பெரிய குழு. அவங்களோட பெயர் ஞாபகம் இல்லை இப்போது. எப்படி நீ இவங்கள கூட்டிட்டு வருவாய், எங்க ஏரியாக்குள்ள புலிகளை எப்படி கூட்டிட்டு வருவாய் என்று சொல்லி என் மீது படு கோபம். மிக மோசமாக நடந்துகொண்டனர். அப்ப அவங்களை பொறுத்தவரை புளொட்டின்ட ஏரியா, இவங்களை எப்படி கூட்டிட்டு வரலாம் என்றுதான். மிக ஆக்ரோஷமாக நடந்து கொண்டார்கள்.

தேசம்: அந்தக் காலகட்டத்தில் மீரான் மாஸ்டர் எல்லாம் அங்கு முன்னணியில் இருந்த உறுப்பினர்கள் என்று நினைக்கிறேன். இது சம்பந்தமாக நீங்கள் யாருடனாவது கதைத்தீர்களா?

அசோக்: பிற்காலத்தில் மீரான் மாஸ்டரை நான் இங்க பாரிசில் சந்தித்தேன். அப்ப அவர் நோர்வேயில் இருந்தவர். எனக்கு மீரான் மாஸ்டரும் அதில் சம்பந்தப்பட்டவர் என்று படுகோபம் இருந்தது. அவரை சந்திக்கவே நான் விரும்பவில்லை. பிறகு பிரண்ட்ஷிப்பா சந்திக்கலாம் என்றுதான் சந்தித்தேன்.சந்தித்த இடத்தில் சுழிபுரம் தொடர்பான கதை வந்தது. மிக மறுத்தார் அவர். சம்பவம் நடந்த இடத்தில் அவர் இருந்திருக்கிறார். சங்கிலி கந்தசாமி ஆட்களோடு சண்டை பிடித்திருக்கிறார்.

தேசம்: சம்பவம் நடந்த நேரத்திலா?

அசோக்: ஓம். அவருக்கு அவர்கள் அப்பாவி பையன்கள் என்று தெரியும்.

தேசம்: அவருடைய மாணவர்களா?

அசோக்: நான் நினைக்கிறேன் அவருக்கு தெரிந்த மாணவர்களாக இருக்கலாம். இவர் பயங்கரமாக சண்டை பிடித்து இருக்கிறார், செய்யக்கூடாது என்று சொல்லி. அப்ப சங்கிலி மற்ற ஆட்கள் எல்லாம் இவரை சுட வெளிக்கிட்டு இருக்கிறார்கள். இந்த இடத்தை விட்டுப் போ, இல்லாவிட்டால் உன்னையும் சுட வேண்டி வரும் என்று சொல்லி இருக்காங்க. இவரை வெளியேற்றிப் போட்டுத்தான் இந்த சம்பவங்கள் நடந்திருக்கு. மீரான் மாஸ்டர் இந்த சம்பவத்தைப் பற்றி சொல்லும்போது நான் நம்பவில்லை. ஆனால், பிற்காலத்தில் வேற ஆட்கள் இந்த சம்பவம் பற்றி கதைக்கும் போது, இப்படி மீரான் மாஸ்டர் சண்டை பிடித்தவர் என்று சொல்லியும், அதில் மீரான் மாஸ்டருக்கு தொடர்பில்லை என்றும் சொன்னார்கள். ஆனால் மீரான் மாஸ்டர் அதில் தொடர்பு என்று சொல்லித்தான் வதந்தி. மீரான் மாஸ்டருக்கு பிடிக்காதவர்கள் அந்த குற்றச்சாட்டை பரப்பிவிட்டுட்டாங்கள்.

தேசம்: இந்தப் படுகொலை விஷயத்தில் உமா மகேஸ்வரன் அந்த பகுதியில் இருந்ததால்தான் இது நடந்தது என்று சொல்லப்படுது. அவர்கள் விசாரிக்கப்பட்டு சுடப்பட்டு, மிக மோசமாக துன்புறுத்தப்பட்டு, அவர்களது உடல்களும் வெட்டப்பட்டு இருந்திருக்கு. அது இலங்கை ராணுவம் செய்கின்ற கொடுமையிலும் பார்க்க மிக மோசமான கொடுமை.

அசோக்: பயங்கரமாக சித்திரவதை செய்து தான் கொலை செய்திருக்கிறார்கள். இந்த சித்திரவதை மனோபாவம் ஒரு விடுதலை இயக்கத்தில் இருக்கிறது என்பதே பெரிய அதிர்ச்சியான விஷயம்தான். இதுதான் காலப்போக்கில் பயிற்சி முகாம்களில் சித்திரவதை செய்வதற்கு காரணமாக இருந்திருக்கு. உண்மையிலேயே இந்த நபர்களை பார்த்தீர்களென்றால், இவங்கள் எப்படி புளொட்டுக்குள்ள வந்தார்கள் என்றே தெரியாது. சங்கிலியை கொண்டு வந்தது சந்ததியார். வவுனியாவில் கடையில வேலை செய்து கொண்டிருந்தவர். இவங்கள் சண்டியர்கள் ஆக இருந்தார்களேயொழிய…

தேசம்: கொண்டு வாறத்துல பிரச்சினை இல்லை. ஆனால் அவர்களுக்கு எந்த ஒரு அரசியல் விழிப்புணர்வும் கொடுக்கல.

அசோக்: என்னதான் அவங்கள் பிழையான திசையிலிருந்து வந்தாலும் கூட, அவங்களை அரசியல் கல்வி ஊட்டி, நல்வழிப்படுத்தி இருக்கலாம். புளொட்டினுள் கொலைகளையும், சித்திரவதைகளையும் செய்த நபர்கள் பலர் தோழர் சந்ததியாரினால் இயக்கத்தினுள் கொண்டு வரப்பட்டவங்க. இதைப்பற்றி முன்னமே சொல்லி உள்ளேன். இவர்கள் தனிநபர் விசுவாசிகள் ஆக்கப்பட்டு, பிற்காலத்தில் முகுந்தனால் பயன்படுத்தப்பட்டார்கள். சங்கிலி கந்தசாமியோட பழகின ஆட்களை காலப்போக்கில் சந்திக்கும்போது தனிப்பட்ட வகையில் மிக நல்லவர் என்று தானே சொல்கிறார்கள். ஆனால் அவர் மிகக்கொடூரமான கொலை கார மனுஷனாக இருந்திருக்கார் . உளவியல் சார்ந்த நோயாகவே போயிட்டுது இந்த கொலைகள்.

வரலாற்றில் பார்த்தோமானால் இப்படிப்பட்டவர்கள் தனிப்பட்ட வகையில் தங்களைச் சார்ந்தவர்களுக்கு நல்லவர்களாக பண்பானவர்களாகத்தான் இருந்திருக்காங்க. இது ஒருஉளவியல் சார்ந்த பிரச்சனை. புளொட்டில் பலர் கொடுர சாடிஸ்டுகளா இருந்திருக்காங்க. உண்மையில இதை அமைப்பு சார்ந்த பிரச்சனையாகத்தான் பார்க்க வேணும். ஆயுத இயக்கங்கள் அரசியல் சித்தாந்த மார்ச்சிய வழிகாட்டல் இல்லாமல், அரசியல் கல்வி இல்லாமல், ஒடுக்கப்பட்ட மக்கள் பற்றிய அக்கறையில்லாமல், இயக்கம் நடாத்த வெளிக்கிட்டால் இப்படி பிரச்சனைகள் வரத்தான் செய்யும்.

தேசம்: இந்தப் படுகொலை தொடர்பாக மத்திய குழுவில் பேசப்பட்டிருக்கா?

அசோக்: விவாதம் எல்லாம் நடந்தது. சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க என்று சொல்லி. ஏனென்றால் சங்கிலி கந்தசாமி மத்திய குழுவில் இருக்கிறார் தானே.

தேசம்: வேற யார் இந்த கொலையில் சம்பந்தப்பட்ட ஆட்கள்.

அசோக்: வெங்கட் என்று நினைக்கிறேன். மத்திய குழுவில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்லப்பட்டது ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கல.

பாகம் 15: இன்று ஜனநாயகம் பேசுபவர்களும் புளொட் படுகொலைகளுக்கு உடந்தையாக இருந்தனர்!!!

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! : தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 15 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 09.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

பாகம் 15

தேசம் : கண்ணாடிச் சந்திரன், நேசன் காலத்தில் யாழ்ப்பாணத்திலும் கொலைகள் நடந்தனவா?

அசோக்: ஓம். பல விடயங்கள் மர்மமானவை. ஒரு சிலதான் எங்களுக்கு தெரியவந்தன.

கொட்டடிப் பகுதியில், இவர்கள் ஒரு கொலை செய்தார்கள். அந்தப் பகுதியில் சண்டித்தனம் செய்கிறார் என்று சொல்லி, ஒருவரை எச்சரிக்கை பண்ணுதற்காக, கண்ணாடிச் சந்திரனும், நேசனும் போய் இருக்காங்க. அவர் அந் நேரத்தில் கண்ணாடிச் சந்திரனை அடித்து விட்டார். அந்தக் கோபத்தில் அவரை, பிறகு கொலை செய்துவிட்டாங்கள். புளாட் என்று யாருக்கும் தெரியாது.

தேசம்: கண்ணாடிச் சந்திரன் இராணுவப் பொறுப்பாளராக வந்த பிறகு, நீங்கள் ஒரு மூன்று நாலு படுகொலைகள் சொல்லியிருக்கிறீர்கள். அதைவிடவும் சம்பவங்கள் நடந்ததா?

அசோக்: நிறைய கொள்ளைகள் நடந்திருக்கு. உதாரணமாக யாழ்ப்பாண டவுனில் ஒரு பாட்டா சப்பாத்து கம்பெனி இருந்தது. அவர்கள் நிறைய எங்களுக்கு ஹெல்ப் பண்ணினார்கள். டெசோவுக்கு எல்லாம் ஹெல்ப் பண்ணினார்கள். அதுவும் கொள்ளையடிக்கப்பட்டது. அதுவும் புளொட் என்று தெரியாது.

தேசம்: அரசியல் பிரிவுக்கும் ராணுவ பிரிவுக்கும் தொடர்பில்லாத செயற்பாடுகளால் நடந்ததா அல்லது?

அசோக்: அரசியல் பிரிவுக்கும் இராணுவப் பிரிவுக்கும் எந்த தொடர்பும் இருக்கல்ல. குறிப்பாக தொழிற்சங்கங்கள், மாணவர் அமைப்புகள் இததெல்லாம் தேவையற்றது, இராணுவப் பிரிவு ஒன்று இருந்தாலே போதும் என்ற சுத்த இராணுவ வாதக் கண்ணோட்டம்தான் இவர்களைப் போன்ற பலரிடம் இருந்தது. மக்கள் அமைப்பின் பிரதேச பொறுப்பாளர்களாக இருந்த பலர், தங்களை இராணுவ நடவடிக்கைகளில், சாகசங்களில் ஈடுபடும் நபர்களாக காட்டடிக் கொள்ளவே ஆசைப்பட்டனர். எந்த இராணுவப் பயிற்சியும் இவர்களுக்கு இருக்கல்ல. அரசியல் அறிவும் இருக்கல்ல. சின்ன சின்ன பிரச்சனைகளுக்கு துப்பாக்கி கொண்டு விசாரிப்பது, அடிப்பது. இதற்காகவே பிரச்சனைகளை தேடி அலையும் நபர்களாக பலர் மாறிப் போயிற்றாங்க.

ஜீவன் என்றொரு தோழர். ஆரம்பத்தில் தொழிற் சஙகத்தில் வேலை செய்தார். அது அவருக்கு போகப் போக பிடிக்கவில்லை. கிராமங்களில் இறங்கி வேலை செய்ய வேண்டும். மத்திய தர வர்க்ககுணாம்சம் இதற்கு இடம் தராது. அத்தோடு தொழிற்சங்க அமைப்புக்களில் வேலை செய்வது, மக்கள் பணி ஆற்றுவது அதிகாரத்தனங்களை வழங்காது. அப்ப மக்கள் மத்தியில் அதிகாரம் கொண்ட மனிதராக காட்ட வேண்டும் என்றால், இப்படியான அமைப்புக்களில் வேலைசெய்ய முடியாது. நேசனிடம் சொல்லி மக்கள் அமைப்பிற்கு மாறி விட்டார். துப்பாக்கியோடு சென்று விசாரனை செயயும் ஆளாக மாறி விட்டார். இதுதான் இவர்களின் விருப்பமாக இருந்தது. தங்களை சுற்றி அதிகார விம்பங்களை உருவாக்கும் இந்தச் செயல் பலரிடமும் இருந்தது.

பிறகு இவர் ஒருதடவை, தீவுப் பகுதியில் நடந்த குடும்ப பிரச்சனை ஒன்றிக்கு, துப்பாக்கியோடு இன்னொரு தோழரோடு மோட்டார் சைக்கிளில் போய் இருக்கார். போகும் போது, ஆமியைக் கண்டு விட்டார்கள். இவர், பயத்தில் துப்பாக்கியை பண்ணைப் பாலத்தினுள் எறிந்து விட்டார். எங்களிடம் அப்போது இருந்ததே இரண்டு முன்று துப்பாக்கிகள்தான். இப்படித்தான் எல்லாம். இப்போது கனடாவில் பிரபல ரியல் ஸ்டேட் புரோக்கராக இருக்கிறார் .

தேசம்: இதுல இன்னொன்று பார்த்தீர்களென்றால், நேசன் மாவட்ட பொறுப்பாளராக இருக்கிறார். கண்ணாடிச் சந்திரன் இராணுவப் பொறுப்பாளராக இருக்கிறார். இவர்கள் இரண்டு பேருமே பிற்காலத்தில் தீப்பொறியில் வேலை செய்திருக்கினம். ஏன் இவர்கள் மற்றவர்களோடு இவை பற்றி உரையாடுவதில்லை.

அசோக்: நான் முதலே சொன்னேன் தானே. ஒரு ஜனநாயக பூர்வமான உரையாடல் தளம், அதற்கான மன நிலை, அரசியல் கல்வி எப்போதும் அவர்களிடம் இருந்ததில்லை. அத்தோடு, அரசியல் வளர்ச்சியற்ற சாகச மனநிலை கொண்ட நபர்களாகத்தான் இவர்கள் இருந்தார்கள். உண்மையில் இவர்கள் லும்பத்தனம் கொண்டவர்கள்.

தேசம்: இதுல அரசியல் வார்த்தைகளை விடுங்கள். இது ஒரு சாதாரண மனிதாபிமானம் சம்பந்தமான விடயங்கள் தானே? ஒருவரை கொலை செய்வது அல்லது ஒருவரை துன்புறுத்துவது என்பது அதுவும் ஒரு விடுதலைப் போராட்டத்திற்கு போன போராளிகள் செய்வது என்பது எந்த ஒரு வகையில்?

அசோக்: ஒரு காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தில் பார்த்தீர்களென்றால் பல்வேறு இயக்கங்கள் பல்வேறு கொலைகளில், மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். அது ஒரு சாகச நிகழ்ச்சியாக, அதிகார மேலாண்மையை நிறுவும் எத்தனங்களாக போய்விட்டது. ரெலோ செய்யும், டைகர் செய்யும். இயக்கங்கள் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடும் போது, இவங்களுக்கும் தேவைப்படுது. ஏனென்றால், வேறு வேலைத்திட்டங்கள் இவங்களுக்கு இல்லை. நாங்கள் மக்கள் மத்தியில் வேலை செய்வோம், தொழிற்சங்கங்கள் வேலை செய்யும், மாணவர் அமைப்புகள் வேலை செய்யும், மக்கள் அமைப்பு வேலை செய்யும். இப்படி பல்வேறு வேலைத் திட்டங்கள் எங்களிடம் இருந்தது. இராணுவப் பிரிவுக்கு ஒரு வேலையும் இல்லை. ராணுவப் பிரிவில் ஈடுபட்ட இவர்கள் யாருமே இராணுவப் பயிற்சி பெற்ற ஆட்கள் இல்லை. கண்ணாடிச் சந்திரனுக்கும், மல்லாவிச்சந்திரனுக்கும் எந்த வித இராணுவக் கல்வியும், பயிற்சியும், அரசியலும் அற்றவர்கள். கொலை என்பதுதானே எங்கள் போராட்டமாக இருந்தது. இயக்கங்கள் செய்த கொலைகளை எப்படி செய்தார்கள் என்பதை அறிந்தால், எங்கட மனநிலை பாதிக்க பட்டுவிடும். அவ்வளவு கொடுரமானவர்கள் போராளிகள் என்று சொல்லிக் கொண்ட நாங்கள்…

தேசம்: மற்ற இயக்கங்கள் குறைந்தபட்சம் பொலீஸ் அல்லது ராணுவம் என்ற பொது எதிரிக்காக செய்யேக்க நீங்கள் சொந்த மக்களுக்கு எதிராக செயற்பட்டா? தோழர் கேசவனின் நிலை என்ன?

அசோக்: தோழர் கேசவன் நல்ல தோழர், ஆனால் அவர் சுயமாக செயற்படக்கூடிய ஆள் இல்லை…

தேசம்: அவர் என்ன பொறுப்பில் இருக்கிறார்?

அசோக்: அவர்தான் தளப் பொறுப்பாளர்.

தேசம்: நேசன்…

அசோக்: யாழ்ப்பாண நேசன் மாவட்ட பொறுப்பாளர். தோழர் கேசவன் சித்தாந்த ரீதியாக வளர்ச்சி பெற்ற தோழர். யாழ்ப்பாண சூழலுக்கு நானும், கேசவனும் புது ஆட்கள். யாழ்ப்பாண புவியியல் அமைப்பு, போக்குவரத்து, ஒழிந்து வாழ்வதற்கான சூழல், களநிலை எங்களுக்கு தெரியாது. நிலம் சார்ந்த எதுவும் தெரியாது. பாதுகாப்பு சூழலை நாங்கள் ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். புது ஆட்கள் நாங்கள். இவங்க கிட்ட தான் தங்கி நிற்க வேண்டும். அப்போ முரண்பட ஏலாது இவங்களோட. தோழர் கேசவன் முழுக்க இவர்களையே தங்கி இருக்க வேண்டிய நிலையில்தான் இருந்தார். நேசனும், கண்ணடிக் சந்திரனும் அவரை தங்களிடம் தங்கியிருக்கும் ஒரு ஆளாக, அதற்கான சூழலை ஏற்படுத்திக் கொண்டே இருந்தார்கள்.

நான் யாழ்ப்பாணம் போய் ஒரு சில மாதங்களிலே இவர்களை தங்கி இருக்கும் நிலையை மாற்றிக் கொண்டேன். என் பாதுகாப்பு, தங்குமிடம் எவற்றுக்குமே நான் இவர்களை சார்ந்திருக்க வில்லை. அத்தோடு இவர்கள் மேல் நம்பிக்கையும் எனக்கு இருக்கல்ல. டெசோவோடையும், தொழிற்சங்கங்களோடையும் என்னை நான் இணைத்துக்கொண்டேன். அப்போ இவங்களோட நான் தங்கியிருக்க வேண்டிய அவசியம் வரவில்லை.

தொழிற்சங்கங்களையும், மாணவர் அமைப்பையும் தனித்துமான சுதந்திர அமைப்பாக உருவாக்க வேண்டும் என்பதே என் நோக்கமாக இருந்தது. அந்நேரத்தில், யாழ்ப்பாண மாவட்டத்தில் கிராமிய மட்டங்களில் வேலை செய்து கொண்டிருந்த, கிராமிய உழைப்பாளர் சங்கத்தின் தொடர்பு எனக்கு கிடைத்தது, பெரிய உதவியாகவும், ஒத்துழைப்பாகவும் இருந்தது. இதற் கூடாகத்தான், தோழர்கள் கௌரி காந்தன், முத்து போன்றவர்களின் அறிமுகம் கிடைத்தது. பிறகு எமது தொழிற் சங்க அமைப்புக்களை உருவாக்குவதில் பெரும்பங்கு வகித்தவர்கள் கௌரி காந்தனும், முத்துவும்தான்.

தேசம்: உங்களுக்கும் கேசவனுக்குமான உறவு எப்படி?

அசோக்: கேசவனுக்கும் எனக்கும் நல்ல உறவு இருந்தது. கேசவன் தோழர் சொல்லுவார் என்ன செய்றது, பிரச்சினை என்றால் முகுந்தனிட்டையும் இவங்களை பற்றி ரிப்போர்ட் பண்ண ஏலாது. அந்த நேரம் முகுந்தனுக்கும் கண்ணாடி சந்திரனுக்கும் உறவு மிக நெருக்கமானது.

தேசம்: கண்ணாடிக்கு சந்திரன் பின் தளத்துக்கு போயிருக்கிறாரா?

அசோக்: ஓம். பின் தளத்துக்கு போயிருக்கிறார். இரண்டு மூன்று தரம் போயிட்டு வந்திருக்கிறார். முகுந்தனை சந்தித்து வருவார். வந்தவுடன் இங்கு நேசனோடு சேர்ந்து ஏதாவது குளறுபடி செய்வார். உதாரணமாக, மண்டை தீவில் உப வானொலி ஒலிபரப்பு அஞ்சல் நிலையம் இயங்கிக் கொண்டிருந்தது. அதனை கொள்ளை அடித்து, பின் தளம் அனுப்பினார். கேட்டபோது, தமிழ் ஈழத்தின் குரல் வானொலி நடத்துவதற்கு முகுந்தன் கேட்டதாக சொன்னர். இவற்றால் எந்தவித பிரயோசனமும் இருக்க வில்லை. இது பற்றி நான் முகுந்தனிடம் கேட்டபோது, தன்னிடம் இது எங்களுக்கு பிரயோசனப்படும், பவர் புள்ளானது என்று சொன்னபடியால், தேவையான கருவிகளை மாத்திரம் எடுக்கும்படி சொன்னதாக கூறினார். ஆனால், இவர்கள் முழுமையாக கொள்ளையடித்து, அதனைச் சேதப்படுத்தி விட்டு வந்துவிட்டார்கள். அதன் பின் அந்த வானெலி நிலையம் இயங்கவில்லை. அந்த சாமான்கள் எங்களுக்கும் பிரயோசனப்பட வில்லை.

தேசம்: மத்திய குழு உருவாக்கப்படுவதற்கு முன்னரே போய் வந்துவிட்டாரா?

அசோக்: மத்திய குழு கூடுவதற்கு முதலே இந்தியாவுக்கு போயிட்டு வந்து இருக்கிறார். முகுந்தன் ஆட்களை எல்லாம் சந்தித்துவிட்டு வந்துட்டார். அவர்களின் நம்பிக்கைகளையும் பெற்றுவிட்டார்.

நாங்கள் தோழர் என்று கதைப்போம் அவர் பெரியய்யா என்று கதைப்பார். பெரியய்யாவுக்கு அதை அனுப்ப வேணும், பெரியய்யாவுக்கு இதை அனுப்ப வேண்டும். அன்று பெரியையாவின் ஆசைகளை நிறைவேற்றுகின்ற நபராக தான் இவர் இருந்தார். ஒரு தடவை விவசாய காரியாலத்தில் இருந்த ஜீப் ஒன்றை பின் தள உபயோகத்திற்கு என்று கடத்தி, அதை பாகங்களாக கழட்டி அனுப்பினார். இப்படி இவரின் தன்னிச்சையாக காரியங்கள் ஏராளம். வெளியில் யாருக்கும் தெரியாது. எல்லாச் செயற்பாடுகளுக்கும் துணை நேசன்தான்.

தேசம் : நீங்கள் மத்திய குழு போகும்போது இந்த இந்த தன்னிச்சையான போக்குகள் முரண்பாடுகள் சம்பந்தமா நீங்கள் பேசினீர்களா

அசோக்: நான் சந்ததியாருடன் பேசியிருக்கிறேன். இதைப்பற்றி. சென்ட்ரல் கமிட்டியில் கதைக்கல நான்.

தேசம்: தளத்தில் மத்தியகுழு உறுப்பினர்களாக உங்களோடு இருந்த மற்றவர்கள் இங்கே நடந்து கொண்டிருந்த அராஜகங்கள் படுகொலைகள் பற்றி எந்தப் பேச்சும் எடுக்கலையா?

அசோக்: சொல்லவேண்டியது கேசவன் தான். ஆனால் ஏன் சொல்லவில்லை என்றால் கேசவன் தோழருக்கு தெரியும் முகுந்தன் தோழரின் அனுசரணையுடன் தான் நடக்குது என்று சொல்லி. அப்போ முகுந்தனுக்கு எதிராக ஒன்றும் வைக்க இயலாது தானே.

தேசம்: அப்படி ஒரு முடிவுக்கு வர ஏலாது தானே? மத்திய குழு ஒன்று இருந்தால் அது ஒரு குறிப்பிட்ட நபரின் நடவடிக்கைகள் பிழை என்று சொன்னால் மற்ற மத்திய குழு உறுப்பினர்கள்…

அசோக்: இதை நான் தான் கதைத்திருக்க வேண்டும். ஏனென்றால், தோழர் கேசவன் இவர்களின் நடவடிக்கைகளை ஏற்றுக்கொண்டிருக்கிறார் தானே. கேசவன் அதை பெரிய பிழையாக பார்க்கவில்லை. அத்தோடு முக்கிய காரணம் இவங்களோடு அவர் முரண்பட விரும்பவில்லை.

தேசம்: ஒட்டுமொத்த இயக்கமுமே படுகொலைகள் எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளுதா?

அசோக்: அப்படி சொல்லி விட முடியாது. விமர்சனங்கள் இருந்தன. ஆனால் வெளிப்படையாக யாரும் கதைக்கவில்லை. மத்தியகுழுவில், கட்டுப்பாட்டுக்குழுவில் இருந்தவர்கள் எவரும் இவற்றையெல்லாம் அக்காலங்களில் கண்டிக்கவில்லை என்பது உண்மைதான். கண்டித்திருந்தால், விமர்சனங்களுக்கு உள்ளாக்கி இருந்தால், புளாட்டின் தவறான போக்கை தடுத்திருக்கமுடியும். ஆரம்பத்திலேயே ஏற்றுக்கொண்டுதான் இருந்திருக்கிறது.

தேசம்: மத்திய குழுவிலிருந்த எல்லாரும்?

அசோக்: யாரும் இது பற்றி கதைக்கவில்லை. குறிப்பாக தளத்தில் நடந்த படுகொலைகளை பற்றி சொல்லி இருக்க வேண்டியது நானும், கேசவனும் தான்.

தேசம்: யாரும் சொல்லி இருக்கலாம் தானே?

அசோக்: அவங்களுக்கு தெரியாது தானே.

தேசம்: ஏன் பத்திரிகைகளில் வெளியில வந்து இருக்கும் தானே?

அசோக்: பெருசா வரேல்ல. புளொட் என்றே தெரியாது. 3 கொலையும் புளொட் என்றே தெரியாது.

தேசம்: அப்போ நீங்கள் தனிப்பட்ட முறையிலேனும் ரகுமான் ஜானுடனோ, கேசவனுடனோ பேசவில்லையா இதைப்பற்றி?

அசோக்: தோழர் கேசவனுடன் இவர்களின் தன்னிச்சையான போக்குகள் படுகொலைகள பற்றி கதைத்திருக்கிறேன். தோழர் கேசவனுடன் முரண்பட்டிருக்கிறேன். தோழர் ரகுமான் ஜான் இக் காலங்களில் பாலஸ்தீன பயிற்சிக்காக சென்றுவிட்டார்.

தேசம்: மற்ற உறுப்பினர்கள்…

அசோக்: தளத்தில் இருந்த ஏனைய மத்தியகுழு உறுப்பினர் ஈஸ்வரன், முரளி, குமரன் ஆட்களோடு எல்லாம் இதைப்பற்றி கதைத்து இருக்கிறேன்.

தேசம்: அது நீங்கள் தளத்தில் இருந்த ஆட்கள். நான் கேட்கிறது பின் தளத்தில் இருக்கிற ஆட்களுடன்

அசோக்: பின் தளத்தில் யாருடனும் கதைக்கேல.

தேசம்: உங்களுக்கு அச்ச உணர்வு இருந்தது அவர்கள் தொடர்பாக அல்லது..

அசோக்: அந்த கால கட்டத்தில் நான் கலந்து கொண்ட முதலாவது இரண்டாவது மத்தியகுழு கூட்டங்கள் அவை. அதனால் அங்கு இவை எதனையும் என்னால் கதைக்க முடியாது போய் விட்டது. ஆனால் தோழர் சந்ததியாரோடு இவை பற்றி கதைத்திருக்கிறேன். கட்டுப்பாட்டு குழுவில் கதைப்பதாக சொல்வார். கதைத்திருப்பாரோ தெரியல்ல. காலப்போக்கில் நிறைய சம்பவங்கள் நடந்தது. அதைப்பற்றி மத்தியகுழுவில் கதைத்திருக்கிறேன். அதைப்பற்றி பிறகு கதைக்கலாம். ஆனால் அக்காலங்களில் சென்றல் கமிட்டியில் இதைப்பற்றி நான் கதைக்கவில்லை. தோழர் கேசவன் தளப் பொறுப்பாளாராக இருந்தவர். அவர்தான் கதைக்க வேணும். ஆனால் அவர் இவை பற்றி கதைத்ததே இல்லை. இப்போது உணர்கின்றேன். நான் கதைத்திருக்க வேண்டும் என்று. திரும்பி பார்க்கையில் நிறைய தவறுகள் செய்திருக்கின்றோம். கடந்து செல்லல், மௌனமாக இருத்தல் என்பதுவும் ஒரு வகை தப்பித்தல்தான். புளாட்டின் தவறுகளுக்கு இவ்வகையில் நானும் காரணம்தான்.

தேசம்: கேசவன் அவரும் தீப்பொறிக்கு போனவர்..

அசோக்: ஓம் தீப்பொறி உருவாக்கத்தில் முக்கியமானவர்.

தேசம்: எனக்கு ஒரு கேள்வி வருது என்னென்றால் உமா மகேஸ்வரன் தவறான முடிவுகளை எடுத்தார் என்று சொல்லி தீப்பொறி ஒருகட்டத்தில் பிரிய வெளிக்கிடுது. ஆனால் தீப்பொறியில் இருந்த நபர்களே உமாமகேஸ்வரனுக்காக சில விஷயங்களை செய்திருக்கினம்.

அசோக்: ஓம் நீங்கள் புளொட்டின் வரலாற்றை எடுத்து பார்த்தீர்களென்றால், எந்த காலகட்டத்தில் இந்த நபர்களுக்கும் முகுந்தனுக்கும் இடையில் முரண்பாடு வரும் காலகட்டத்தை நீங்கள் பார்க்கவேண்டும்.

தேசம்: எப்ப வருது அந்த முரண்பாடு.

அசோக்: அது ஒரு அதிகாரப் போட்டியில்தான் உருவாகிறது. தளத்தில் இராணுவப் பொறுப்பாளராக கண்ணாடிச் சந்திரன் இருக்கும் போது, பின்தளத்திலிருந்து இராணுவப் பயிற்சி பெற்ற தோழர் ரமணன் தள இராணுவ பொறுப்பாளராக பொறுப்பெடுக்கிறார். இதனை கண்ணாடிச் சந்திரன் எதிர்பார்க்கவிலலை. ரமணனோடு இராணுவ பயிற்சி பெற்ற தோழர்களும் வருகின்றார்கள். இவர்கள் தளம் வந்தவுடன் கண்ணாடிச் சந்திரனின் அதிகாரம் இல்லாமல் போய் விடுகிறது. தன்னுடைய பதவி பறிபோகேக்கத் தான் அந்த முரண்பாட்டின் தொடக்கம் வருது. எப்ப தங்களின் அதிகாரம் பறிக்கப்படுதோ அப்பதான் முரண்பாடு வருது.

தேசம்: ரமணனைப் பற்றி சொல்லுங்கள் பார்ப்போம்.

அசோக்: ரமணன் அருமையான தோழர்.

தேசம்: அவர் எந்த மாவட்டம்

அசோக்: அவர் எந்த மாவட்டம் என்று தெரியல. கடைசியா மட்டக்களப்புக்கு போய் ராணுவ சுற்றிவளைப்பில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

தேசம்: எத்தனையாம் ஆண்டு?

அசோக்: 85 ஆக இருக்கலாம் என்று நினைக்கிறேன். நாலு ஐந்து தோழர்கள் சுற்றிவளைக்கப்பட்டு படுகொலை செய்யப்படுகிறார்கள்.

தேசம்: அந்த காலகட்டத்தில் பின் தளத்தில் படுகொலைகள் ஏதாவது நடந்தது பற்றி நீங்கள் அறிந்திருக்கிறீர்களா

அசோக்: அந்தக் காலகட்டத்தில் நடைபெற்ற சந்தர்ப்பம் இல்லை ஆரம்பகாலம் தானே அது. படுகொலைகள் எப்ப நடக்குது என்று கேட்டால் ஒரு அதிகார மையம் உருவாகின பிறகுதான். சந்தேகங்களின் அடிப்படையில் தான் உட்கட்சி கொலைகள் நடக்குது. 84 க்கு முன்னர் சில படுகொலைகள் நடந்ததென பின்னர் அறிந்திருக்கிறேன். சிவநேசன், ராஜ் மோகன் கொலைகள் என. 84 கடைசி காலங்களிலிருந்துதான் நிறைய தவறுகளும், இயக்க உள் கொலைகளும் தொடங்கி இருக்குமென நினைக்கிறேன். இக்கொலைகளோடு சம்பந்தப்பட்டவர்கள் பலர் இன்னும் உள்ளனர். அவர்கள் உண்மை சொல்ல வேண்டும். குறிப்பிட்ட காலம் வரை புளொட் ஆரோக்கியமான ஒரு அமைப்பாக தான் இருந்தது. முகுந்தனுடைய விசுவாசிகளாக தான் எல்லாரும் இருந்தார்கள். ஏனென்றால் முகுந்தன், சந்ததியாருக்கு இடையில் ஒரு ஒருங்கிணைந்த ஒருமைப்பாடு இருந்தது. கட்டுப்பாட்டுகுழுவை அவதானித்தால் இது விளங்கும்.

தேசம்: அப்போ அந்த நேரத்தில் நடந்த அத்தனை ஜனநாயக விரோத அராஜக போக்குகளையும் எல்லா ஜனநாயக சக்திகளும் ஏற்றுக்கொண்டிருக்கு.

அசோக்: நான் உட்பட, எல்லாரும் ஏற்றுக் கொண்டுதான் இருந்திருக்கிறோம். தளத்தில் இருந்த எங்களுக்கு, பின் தளத்தில் நடந்த படுகொலைகள் தொடர்பாக தெரிந்திருக்கவில்லை. குறிப்பட்ட காலம் வரையும் சந்ததியாரோ, கேசவனோ, ரகுமான் ஜானோ எவருமோ எங்களோடு இவை பற்றி கதைக்கவில்லை. முரண்பாடு தொடங்கிய பின்தான் எங்களோடு இது பற்றி கதைக்கிறார்கள். நாங்கள் கொலைகள் தொடர்பாக விமர்சனங்கள் வைத்தாலும், கொலைகளுக்கு தவறுகளுக்கு நாங்களும் தான் பொறுப்பு. ஏனென்றால் புளொட் தானே செய்தது.

தேசம்: அந்த சந்தர்ப்பத்தில் மத்திய குழுவில் கதைக்கப்படவில்லை.

அசோக்: பின் தளத்தில் சந்ததியார், முகுந்தன் முரண்பாடுகள் தொடங்க முதல், ஆரம்ப காலங்களில் கொலைகள், தவறுகள் தொடங்கிய காலத்திலேயே கதைத்திருந்தால் இவற்றிக்கு முற்றுப் புள்ளி வைத்திருக்க முடியும். கதைக்கப்படவில்லை. அதற்கான சூ ழல் அப்போது இருந்தது. கதைத்திருக்க வேண்டும். பிற்காலத்தில் கதைக்கக் கூடிய சூழல் இல்லை.

தேசம்: நான் குற்றச்சாட்டை உங்கள்மீது வைக்கவில்லை. நீங்கள் உட்பட மத்தியகுழு உறுப்பினர்கள் எல்லாருக்கும் அந்தப் பொறுப்பு இருக்குது தானே. மிக மோசமானது ஏனென்றால், தளத்தில் கொலைகள் நடந்திருக்கு. அதே போன்று ஆரம்ப காலங்களில் பின்தளத்தில் நாலு ஐந்து கொலைகள் நடந்து இருக்கு. அந்த கொலைகள் தொடர்பாக எந்த ஒரு கேள்வியும் கேட்கப்படவில்லை.

அசோக்: கேட்கப்படவில்லை.

தேசம்: மிகத் துரதிர்ஷ்டவசமான விஷயமாகத்தான் பார்க்க வேண்டியிருக்கு. அந்தக் கமிட்டி மீட்டிங் எத்தனை நாள்? எத்தனை நாளுக்கு பிறகு நீங்கள் திரும்பி வாறீங்கள்?

அசோக்: சென்ட்ரல் கமிட்டி மீட்டிங்குக்கு போனால் ஒரு பத்து ,பதினைந்து நாள் நிற்போம்.

தேசம்: அந்தப் பதினைந்து நாளில் அங்கே என்ன மாதிரியான செயற்பாடுகள்?

அசோக்: பயிற்சி முகாம்களுக்கு போவம். தோழர்களை சந்திப்போம். அந்த நேரத்தில், டெசோ மாணவர் அமைப்பு தமிழ்நாட்டில் பல இடங்களில் வேலை செய்தது. டெசோவுக்கு பொறுப்பான தோழர்களை சந்திக்க அநேகமாக நான் போய் விடுவன். சென்னையில் கேசவன், அசோகன் என்று பல தோழர்கள் வேலை செய்தாங்க. திருச்சியில் அலெக்ஸ் ரவி வர்மா பொறுப்பாக இருந்தார். இப்போது கனடாவில் இருக்கிறார். இவர்கள் எல்லாம் அப்போது, தமிழ் நாட்டில் படித்துக் கொண்டிருந்த மாணவர்கள் . டெசோவால் பொங்கும் தமிழமுது என்ற இலக்கிய சஞ்சிகை வெளியிடப்பட்டது. இது தொடர்பான வேலைகளையும் நான் பார்ப்பேன். இப்போ ஞாபகம் இருக்கு. இந்த சஞ்சிகைக்காக எழுத்தாளர் ஜெயகாந்தனை பேட்டி கண்டிருந்தன்.

தேசம்: 84 ஜனவரி நீங்கள் மத்திய குழுவுக்கு போகும் போது கொலைகள் தொடங்கி விட்டனவா?
ஒன்று ரெண்டு நடந் து விட்டன என நினைக்கிறேன்.

அசோக்: சரியா சொல்ல முடியாமல் இருக்கு எனக்கு. அதுக்குள்ள நடந்ததாக தெரியவில்லை. அதற்குப் பிற்பாடு தான் நடந்தது என நினைக்கிறேன்.

தேசம்: அப்போ சென்ட்ரல் கமிட்டியில் கதைக்க வேண்டிய நிலைமையும் வந்திருக்காது.

அசோக்: ஏனென்றால் குறுகிய காலம் தானே. செப்டம்பர் சிறை உடைப்பு, அதற்குப் பிற்பாடு ஜனவரி. அந்தக் குறுகிய காலத்தில் இந்த கொலைகளை செய்வதற்கான சந்தர்ப்பங்கள் இல்லை. எண்பத்தி நான்கில் தான் இந்த கொலைகள் நடக்குது என்று நினைக்கிறேன்.

தேசம்: இதில கட்டுப்பாட்டுக்கு குழு இருக்கிற விஷயம் உங்களுக்கு எப்ப தெரியும்?

அசோக்: முதலாவது சென்றல் கமிட்டிக்கு போனதற்குப் பிறகு கட்டுப்பாட்டு குழு இருப்பது தெரியும்.

தேசம்: அது சாதாரண உறுப்பினர்களுக்கும் தெரியுமா ?

அசோக்: சாதாரண உறுப்பினர்களுக்கு மத்திய குழுவில் யார் இருக்கிறார்கள் என்றே தெரியாது. அப்படி இருக்கும் போது, கட்டுப்பாட்டு குழுபற்றி அறிந்திருக்க வாய்பில்லை. இப்ப புளொட் தோழர்களை கேட்டுப்பாருங்கள் மத்திய குழுவில் யார் யார் இருந்தது என்று. ஏனென்றால், வெளிப்படைத்தன்மை இருக்கவில்லை. ஜனநாயக மத்தியத்துவம் வாய்ந்த வடிவமாக கீழ் இருந்து உள்வாங்கப்படவில்லை. ஈபிஆர்எல்எஃப் பொருத்தவரைக்கும் எல்லாம் வெளிப்படை. கீழிருந்து தெரிவு செய்யப்படுவார்கள். இது மேலிருந்து தானே எல்லாம் தெரிவு செய்யப்படுது. ஜனநாயக வடிவமும் இல்லை. ஜனநாயக தேர்வும் இல்லைத்தானே. கூட்டுச் செயற்பாடு, சுதந்திரமான சிந்தனை முறை என்பது புளொட்டில் இருந்ததில்லை. ஜனநாயக மத்தியத்துவம் என்பது ஒரு அமைப்பின் ஸ்தாபனக் கோட்பாடாக இருக்க வேண்டும். ஆனால் யாரும் இது பற்றி அக்கறைப்படவில்லை.

தேசம்: இதுவரைக்கும் புளொட்டின் வரலாறு எழுதுகிறவர்கள் யாரும் இல்லையே.

அசோக் : ஒரு சிலர் நடைபெற்ற சம்பவங்களை எழுதியுள்ளனர். அரசியல் சார்ந்து விமர்சன நோக்கில் எதுவும் வரவில்லை என்றே நினைக்கிறன்.

தேசம்: எத்தனை மத்திய குழுக் கூட்டம் நடந்திருக்கும் ?

அசோக்: மூன்று, நான்கு மாதத்திற்கு ஒரு தடவை நடக்கும். நாங்கள் நான்கு பேர் இங்கே இருந்து போவோம். 4 பேர் தானே தளத்திலிருந்த ஆட்கள்.

தேசம்: யார்? யார்?

அசோக்: நான், ஈஸ்வரன், முரளி, தளப் பொறுப்பாளராக யார் இருக்கிறார்களோ அவங்கள். முதல் தளப்பொறுப்பாளராக இருந்தது கேசவன் பிறகு தளப்பொறுப்பாளராக இருந்தது குமரன்.

தேசம்: இந்த நாலு பேரும் தான் கமிட்டி

அசோக்: தள மத்திய குழு

தேசம்: இங்க நடக்கிற பிரச்சினைகள் தொடர்பாக முடிவெடுக்கக் கூடியவர்கள் இவர்கள்…

அசோக்: என்ன நடந்தாலும், நாங்கள் தான் பொறுப்பு.

தேசம்: கிட்டத்தட்ட நீங்கள் சொல்வதன் படி பார்த்தால், இந்த நாலு பேருமே ஜனநாயக மத்தியத்துவம், புரட்சிகர சிந்தனை உடைய ஆட்களாக தானே இருக்கினம்.

அசோக்: எங்களுக்குள்ள மிக ஒற்றுமை இருந்தது. மனம் திறந்த உரையாடல் இருந்தது. கூட்டு செயற்பாடு இருந்தது . கேசவன் இருந்த போது இது இருக்கவில்லை. தோழர் குமரன் தளப் பொறுப்பாளராக பொறுப்பெடுத்த போது நிறைய மாற்றங்கள் முன்னேற்றங்கள் தளத்தில் நடந்தன. பின் தளத்தை நம்பி இருக்கும் போக்கை இக் காலங்களில் நாங்க கைவிட தொடங்கிவிட்டோம்.

தேசம்: நாலு பேரும் தானே தளத்தில் நடக்கிற எல்லாத்துக்கும் பொறுப்பு?

அசோக்: ஆனால் யாழ்ப்பாணத்தில் எங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. அதுதான் நடந்த பிரச்சனை.

யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் வேலை செய்த தோழர்கள் அரசியல் வளர்ச்சி கொண்ட தோழர்களாக இருந்தார்கள். அவர்களோடு உரையாடவும் இணைந்து செயற்படவும் முடிந்தது. நிறைய வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த முடிந்தது. நான் அனேகமாக யாழ்ப்பாணத்தில் இருந்தது குறைவு. யாழ்ப்பாணத்தில் தொழிற் சங்கங்களில், மாணவர் அமைப்புக்களில், பெண்கள் அமைப்புக்களில் நிறைய வேலைத்திட்டங்கள் நடைபெற்றன. மிகத்திறமை வாய்ந்த தோழர்கள் இருந்தார்கள். அவர்கள் அரசியல் சார்ந்து செயற்படவும், சுயமாக செயற்படவும் ஆளுமை கொண்ட தோழர்களாக இருந்தார்கள். இதன் பின்னான காலங்களில் ஏனைய மாவட்டங்களில் தொழிற்சங்கங்கள் மாணவர், அமைப்புக்களை தீவிரமாக அமைக்கும் பணியையும் செயற் திட்டங்களையும் தொடங்கி விட்டோம். மட்டக்களப்பில், அம்பாறை மாவட்டங்களில் பாதுகாப்பு நெருக்கடிகள் இருந்தபோதிலும், தோழர்கள் வரதனும், ராதா கிருஸ்ணனும் அங்கு அமைப்பு வேலைகளை தீவிரமாக செய்தாங்க. அரசியல் வகுப்புக்கள் எடுக்க தோழர்கள் முத்துவும், பிரசாத்தும், பெண்கள் அமைப்பு தோழர்களும் போனாங்க. நானும், தோழர் கௌரி காந்தனும் ஏனைய மாவட்டங்களுக்கு போனேம்.

யாழ்பாணத்தில் நாங்கள் நின்றது மிகக் குறைவு. இக் காலங்களில் கிளிநொச்சி மாவட்டத்தில் தவநாதன், செல்வம், தெய்வேந்திரம் மாஸ்டர், மனோ மாஸ்டர், ரஜனி, பாபு, முல்லைத்தீவு மாவட்டத்தில் சத்தியன், பிரசாத், நந்தன், கோன், வவுனியாவில் பெரியண்ணன், செந்தில் என மிகவும் நல்ல தோழர்கள் வேலை செய்தார்கள். இவர்களோடு உரையாடவும் இணைந்து செயற்படவும் எங்களால் முடிந்தது.

ஆனால், யாழ்ப்பாண நிலமை அப்படி இல்லை. யாழ்ப்பாணத்துக்குள்ள எந்த அதிகாரமும் எங்களுக்கு இருக்கல்ல. ஆரோக்கியமான உறவு நிலையும் இருக்கல்ல.

தேசம்: அதுக்கு யார் பொறுப்பு…

அசோக்: அது ஒரு சிக்கல் தான். யாழ்ப்பாண பொறுப்பு நேரடியாக முகுந்தனிடம் தான் இருந்தது. இங்கு நேசன், கண்ணாடிச் சந்திரன் காலப்போக்கில் சின்ன மெண்டி என இப்படியே போய் விட்டது.

தேசம்: நேசன் மாவட்ட பொறுப்பாளராக இருந்தாலும் அவருக்கு ஊடாக த்தான் எல்லாம்..

அசோக்: நேசன் மாவட்ட பொறுப்பாளர், நாங்கள் மத்திய குழுவில் இருக்கிறோம். நாங்கள் எதுவுமே அங்க செய்ய இயலாது. நேசனை கட்டுப்படுத்த இயலாது. ஏனைய மாவட்ட பொறுப்பாளர்களை நாங்கள் கட்டுப்படுத்தலாம். உரையாடலாம். அவர்களிடம் அவர்களின் தவறுகளை சுட்டிக் காட்டலாம். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். யாழ்ப்பாண உறவுநிலை முழுக்க முழுக்க பின் தளத்தோடு இருந்த உறவு தானே. எங்கள விட அங்க ஒரு சக்தி இருக்கு தானே. அவங்களைப் பொறுத்த வரைக்கும் நாங்க எல்லாம் சாதாரண ஆட்கள். என்ன பிரச்சினை என்றால் பெரியய்யா ஆட்கள் நாங்கள் என்ற போக்கு. கிளிநொச்சி, முல்லைத் தீவில், ஏனைய மாவட்டங்களில் ஒரு பிரச்சனை என்றால் நாங்கள் அங்க போவோம் . பிரச்சினையை தீர்ப்போம். யாழ்ப்பாணத்தில் எங்களால் எதுவுமே செய்ய இயலாது. நாங்க நாலு பேரும் டம்மி தான். நேசனின் காலத்தில்தான் காரை நகரில் இயங்கிய சீநோர் படகு கட்டும் தொழிற்சாலை கொள்ளையிடப்பட்டது. யாருக்கும் தெரியாது. இந்த கொள்ளையால், இயங்கி வந்ததொழிற்சாலை மூடப்பட்டது. எங்களால் எந்த நடவடிக்கையும் எடுக்கு முடியவில்லை. இப்படி பல சம்பவங்கள்.

தேசம்: யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை

அசோக்: யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை தளப் பொறுப்பாளர், தள மத்திய குழு உறுப்பினர்கள் எல்லாம் வெறும் டம்மி தான்.

யாழ்ப்பாணத்திலிருந்து தானே பின் தளத்துக்கு கம்யூனிகேஷன். அப்ப இலேசு அவங்களுக்கு. கேட்டா சொல்லுவார்கள் பெரியய்யா ஓடர்அ துக்கு யார் பொறுப்பு… , பெரியய்யாட்ட நாங்கள் சொல்லிக் கொள்ளுவோம். நாம் ஒரு பிரச்சினையை கேட்டால் அதை பெரியய்யாட்ட கதைத்துக் கொள்ளுங்கோ என்பார்கள்.

தேசம்: இது முதலாவது மத்திய குழுக் கூட்டம் இரண்டாவது மத்திய குழுக் கூட்டம் நீங்கள் போய் இருக்கிறீர்கள் அதற்குப் பிறகு நீங்கள் ஒவ்வொரு மத்திய குழு கூட்டத்திலும் கலந்து கொண்டு இருக்கிறீர்களா?

அசோக்: கலந்து கொண்டிருக்கிறோம். அனேகமாக நிர்வாக சிக்கல்கள் தான் கதைக்கபடுவது. இந்தக் கொலைகள் கொள்ளைகள் பற்றி எல்லாம் பெருசாக வெளியில தெரியாது தானே. சந்ததியார் முகுந்தன் முரண்பாட்டுக்கு பிறகுதான் அது வெளிக்கிழம்புது.

தேசம்: அப்போ எப்ப இந்த சந்ததியார் முகுந்தன் முரண்பாடு பெரிய பிரச்சினையாக வருது

அசோக்: அது 85 ஆரம்பத்தில்தான்.

பாகம் 14: மட்டு கச்சேரி துப்பாக்கி கொள்ளையும் – தராக்கி சிவராமின் அரசியல் நுழைவும் – இன்று ஜனநாயகம் பேசுவோரின் கொலைமுகங்களும்

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! : தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 14 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 09.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

பாகம் 14

தேசம்: தோழர் மட்டக்களப்பு சிறை உடைப்பை பற்றி கதைத்தோம். அதுக்குப்பிறகு அதாவது எண்பத்தி மூன்று செப்டம்பருக்கு பிறகு, மட்டக்களப்பில் செயற்பாடுகள் எப்படி இருந்தது? குறிப்பா உங்கட செயற்பாடுகள்… ?

அசோக்: புளொட் தீவிரமாக இயங்க முடியாமல் போய் விட்டது. நாங்க அதற்குப் பிறகு மிகக் கடுமையாக தேடப்பட்டோம். வாசுதேவா மற்ற முக்கிய தோழர்கள் எல்லாம் சிறை உடைப்பு சம்பந்தப்பட்ட ஆட்களோட அப்படியே யாழ்ப்பாணம் போயிட்டாங்க. கொஞ்சம் பேர் இந்தியாவுக்கு போய்விட்டார்கள். மிக மிக மோசமான கெடுபிடி அந்த காலகட்டத்தில். ஏனைய தமிழ் பிரதேசங்களிலும் மிகக் கடுமையாகதான் இருந்தது. யாழ்ப்பாணம் தவிர்ந்த, ஏனைய மாவட்டங்களில் புளொட்டினுடைய நடவடிக்கை மட்டுப்படுத்தப்பட்டு தான் இருந்தது. அதான் முழுப்பேரும் யாழ்ப்பாணம் போக வேண்டி வந்தது.

தேசம்: யாழ்ப்பாணத்தில ஏன் அவ்வளவு தூரம் தேடுதல்கள் ஒன்றும் நடக்கேல? யாழ்ப்பாணம் முழுமையாக தமிழ் பிரதேசமாக இருந்தபடியாலா அல்லது ஏற்கனவே போலீஸ் நிலையங்கள் மூடப்பட்டுவிட்டதா அந்த காலகட்டத்தில்?

அசோக்: நான் நினைக்கிறேன் அந்த காலகட்டத்தில் ஏனைய பிரதேசங்களை விட யாழ்ப்பாணத்தில் பொலிஸ் நிலையங்கள் குறைவாகத்தான் இருந்திருக்கும் என்று. முழுக்க முழுக்க தமிழ் பிரதேசங்களாக இருந்தபடியால், எங்களுக்கு ஒழிந்து கொள்வதற்கான சாத்தியங்கள் இருந்தது. ஆனா மட்டக்களப்பில் இவ்வாறான பாதுகாப்பு சூழல் இல்லை. ஒரு பக்கம் கடல் மறு பக்கம் ஆறு. மட்டக்கிளப்பின் புவியியல் அமைப்பை பார்த்தீங்க என்றால், கடலோரக் கிராமங்கள் எங்க பகுதிகளில் கூட. இவற்றல் மறைந்து வாழ்வது கஷ்டம். அப்படி இல்லாவிட்டால் காட்டுக்குப் போக வேண்டும். அல்லது படுவான்கரைக்குப் போக வேண்டும். கொஞ்ச தோழர்கள் படுவான்கரையில் ஒழிந்து வாழும் சூழல் இருந்தது. மற்ற ஆட்கள் யாழ்ப்பாணம் போயிட்டாங்க.

தேசம்: அந்தக் காலகட்டத்தில் தான் நான் நினைக்கிறேன் கச்சேரியில் ஒரு துப்பாக்கி பறிமுதல் நடந்தது என்று. அது எதற்காக மேற்கொள்ளப்பட்டது? எப்படி மேற்கொள்ளப்பட்டது?

அசோக்: மட்டக்களப்பு சிறை உடைப்புக்கு பிற்பாடு, அதை புளொட் தான் செய்வதென்று என்று இருந்தது. அதற்கான வரைபடங்கள், ரெக்கி எல்லாம் ஒரு தோழர் பார்த்து தந்தவர். எங்களுக்கு நம்பிக்கையான தோழர் அவர். அவர்தான் எல்லா ஆயத்தங்களும் செய்தவர்.

மட்டக்களப்பு சிறை உடைப்பு சம்பவம் நடந்தவுடனே மிக கெடுபிடி இருந்ததால, முக்கியமான தோழர்கள் எல்லாருமே வெளியில போயிட்டாங்க. நானும் ஈஸ்வரனும்தான் தான் மிஞ்சினது. அப்ப எங்களால் எதுவும் செய்ய முடியாமல் போய்விட்டது. அந்த நேரத்தில் எனக்கு தனிப்பட்ட வகையிலான நண்பர்கள் சிலர் இதனை செய்ய முடிவு செய்தாங்க. இவர்கள் புளொட்டோட கொஞ்சம் உறவே ஒழிய, புளொட்டில வேலை செய்யவில்லை. அவர்கள் சுயமாக இயங்க வேண்டும் என்று நீண்ட காலமாக எண்ணி இருந்தார்கள். அவங்கள் தாங்கள் இந்த கச்சேரியை செய்யப்போகிறோம் என்று சொல்லி அதைச் செய்தார்கள்.

தேசம்: வேறு அமைப்புகளோடு சேர்ந்தா அல்லது …

அசோக்: இல்லை. அவர்கள் என்னுடைய நண்பர்கள். சின்ன சின்ன அதிருப்திகள் இருந்தது புளொட் தொடர்பாக. எங்களிட்ட ஆட்க்ஷன் இல்லை என்று சொல்லி அதிருப்தி இருந்தது அவங்களிடம். நான் முன்னர் கதைத்த நாக படை வேறு, இவங்க வேறு.

உண்மையில் இந்த நடவடிக்கைக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. அவங்கள் மிகக் கடுமையான நெருக்கடிக்குள்ள அதை செய்தாங்க. அந்த ஆயுதங்கள் என்னுடைய களுதாவளை கிராமத்தில்தான் புதைக்கப்பட்டது.

அடுத்த நாள் போய் பார்த்தபோது புதைத்த இடத்தில் ஒன்றுமில்லை. அப்போ இவங்களுக்கு பெரிய அதிர்ச்சி.

அது என்ன நடந்தது என்று கேட்டால், எங்களுடைய ஊரில் அதிகாலையில் கரையோரமாக கடலில் மீன்பிடித்துக் கொண்டிருப்பது வழமை.

கடற்கரையை அண்டிய பகுதி ஒன்றில் ஆயுதங்களை மறைவாக புதைக்கும் போது, கடற்கரையில் கரைவலையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்கள், இவங்கள் புதைத்ததைக் கண்டுட்டாங்க. அவங்களுக்கு என்ன சாமான் என்று தெரியாது, பிறகு தோண்டி பார்த்திருக்கிறாங்கள் துப்பாக்கி. எங்கட கிராமத்து ஆக்கள் அவங்க. எல்லாரும் ஒன்டு ரெண்டு என எடுத்து தங்கள் வீடுகளுக்கு கொண்டு போய்விட்டார்கள். மொத்தம் 67 துப்பாக்கிகள் என நினைக்கிறேன்.

பிறகுதான் கேள்விப்பட்டிருக்கிறார்கள் இப்படி கடற்கரையிலிருந்த ஆட்கள் கொண்டு போய்விட்டார்கள் என்று. என்னிடம் வந்து சொன்னாங்க. அப்போ நான் தேடப்பட்டு கொண்டிருக்கிற நேரம். நானும் நேரடியாக போகேலாது. போனாப் பிரச்சனை வந்திடும். நான் நண்பர்களிடம் சொன்னேன், நீங்க போய் கேளுங்க என்று. இவங்க போய் எடுத்தவங்களிடம் கேட்ட போது, அவர்கள் கொடுக்க மறுத்து விட்டார்கள். அவங்களுக்கு இதன்ற பிண்ணனி அபாயம் எதுவும் தெரியாது.

பிறகு நானும், தோழர்கள் பணிக்ஸ்சும், கராட்டி அரசனும் போய் வாங்கி, இன்னொரு இடத்திற்கு மாத்தினோம். நான் போனதால் நாங்கள் தான் இதைச் செய்தோம் என நினைத்து, பொலிஸ் என்னை கடுமையாக தேடத் தொடங்கி விட்டார்கள். அதற்குப் பிறகு, நான் தோழர் ஈஸ்வனிடம் இந்த துப்பாக்கி சம்பந்தப்பட்ட விடயங்களை பொறுப்புக் கொடுத்துவிட்டு, என்னுடைய கிராம சூழலை விட்டு மட்டக்களப்புக்கு டவுனுக்கு வந்துட்டேன்.

அங்க ஒழித்துக் கொண்டிருக்கும் போது, இந்த நண்பர்களுக்கும், ஈஸ்வரனுக்கும், எனக்குமான கம்யூனிகேஷன் இல்லாம போயிட்டுது. அப்போ இந்த கம்யூனிகேஷன் ஏற்படுத்துவதற்கான நம்பிக்கையான ஒருவர் எனக்கு கட்டாயம் தேவை. அப்போது எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் சொன்னார் சிவராமை பயன்படுத்தலாம் என்று. சிவராமை எனக்கு முதலே தெரியும். என் நண்பர் கவிஞர் வீ. ஆனந்தனின் நண்பன் சிவராம். அத்தோடு, மட்டக்களப்பில் வாசகர் வட்டம் ஒன்று இருந்தது. அதற்கூடாகவும், சிவராமை எனக்கு தெரியும். அடிக்கடி சந்தித்து கொள்ளுவோம். ஆனால் பெரிய நெருக்கம் இல்லை எங்களுக்குள்ள. அப்போ சிவராமை கூப்பிட்டு, சிவராமுக்கு ஊடாகத்தான் அந்த நண்பர்களோடும், ஈஸ்வரனோடும் தொடர்களை ஏற்படுத்திக் கொண்டேன்.

தேசம்: பிற்காலத்தில் தராக்கி என்று அழைக்கப்பட்ட சிவராமும் இவரும் ஒருவர்தானே..

அசோக்: ஆம். ஒருவர்தான். ஏனென்றால் சிவராமின் பேக்ரவுண்ட் ரோயல் பெமிலி. அப்போ பொலிசாருக்கு சந்தேகம் வராது. அப்போ சிவராமை வைத்துக்கொண்டுதான் கம்யூனிகேஷன் செய்கிறோம். அந்த பிரச்சினை தீர்ந்ததற்குப் பிறகு நான் யாழ்ப்பாணம் வந்துட்டேன். ஈஸ்வரன் வவுனியா போட்டார்.

தேசம்: துப்பாக்கிகளுக்கு பிறகு என்ன நடந்தது?

அசோக்: துப்பாக்கிகளுக்கு பிறகு என்ன நடந்தது என்று கேட்டால், துப்பாக்கிகள் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒரு பத்து, பதினைந்து துப்பாக்கிகள் இடங்கள் மாறும் மாறும்போது பல்வேறு பிரச்சினையால் விடுபட்டு போய் விட்டது. அது அவங்களுக்கு கிடைக்கல. ஒரு ஐந்து ஆறு தோழர்கள். அந்நேரம் அவங்களுக்கு வேற அமைப்புகளும் இல்லை. அவங்களுடைய சிந்தனைக்கும், செயற்பாட்டிற்கும் ஏற்றது புலிகளாகத்தான் இருந்தது. புலிகளோடு சேர்ந்து விட்டார்கள். அதுல முக்கியமா என்னுடைய நண்பன் மாறன் சின்னத்தம்பியும் ஒருவர். பிறகு அவர் புலியை விட்டு விலகி இருந்ததாகவும், இந்திய இராணுவ காலத்தில் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் பிற்காலங்களில் அறிந்தேன்.

கொஞ்ச காலத்திற்கு பிறகு, யாழ்ப்பாணத்தில் நான் இருந்த போது, என்னுடைய நண்பர் வந்து சொன்னார் மட்டக்களப்பில் இருந்து, என்னை பார்ப்பதற்கு ஒருவர் வந்திருக்கிறார் என்று. அங்க போனா, நாலைந்து பேரோட எல்.ரீ.ரீ.ஈ மாத்தையா நிக்கிறார்.

தேசம்: உங்களை வரச்சொன்னது மட்டக்களப்பைச் சேர்ந்த மாறனா?

அசோக்: இல்லை. என்னிடம் வந்து சொன்னவர் யுனிவர்சிட்டி யில் படிக்கும் நண்பர். என்னை தேடி வந்தவர் யார், என்ன பெயர் என்று அவரிடம் நான் கேட்ட போது, தனக்கு தெரியாது என்றும், தன்னிடம் என்னை விசாரித்தபடியால் வந்து சொன்னதாக கூறினார். ஆனால், அவர் புலிக்கு வேலை செய்தவர் என்று பிறகுதான் தெரியும். காலப்போக்குல புலிக்கு உளவாளியா வேலை செய்தார் என்று கேள்விப்பட்டேன்.

துப்பாக்கி சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தங்கட இயக்கத்திற்கு வந்துவிட்டார்கள் என்றும், குறிப்பிட்ட துப்பாக்கிகளை நாங்கள் தரவில்லை என்று சொல்லி அவற்றை தர வேண்டும் என்றும் மாத்தையா சொல்கின்றார்.

அந்த துப்பாக்கிகளால் பெரிய பிரயோசனம் இல்லை. எல்லாம் சொட் கண். அத்தோட, மாத்தையாவோடு நிற்கிற ஆட்களில், துப்பாக்கி சம்பவத்தில் ஈடுபட்ட யாரும் இல்லை. ஆனால் இவர் கேட்கிறார். அப்ப நான் நடந்த சம்பவங்களை விளங்கப்படுத்தினேன், இதுதான் நடந்தது என்று சொல்லி.

தேசம்: அதுல மாத்தையாவும் வேறு யாரும் வந்தது புலிகளிலிருந்து?

அசோக்: மாத்தையாவை மட்டும் தான் எனக்கு தெரியும். மற்றவர்களைக் காட்டி, இவங்களும் துப்பாக்கி சம்பவத்தில் சம்பந்தப்பட்டவங்க என்று மாத்தையா என்னிடம் சொல்கிறார். ஆனா யாருமே சம்பந்தப்பட்ட ஆக்களா எனக்கு தெரியல.

அப்போ நான் சொன்னேன், உங்களுக்கு நன்மை செய்ய போய்த்தான் நாங்களும் தேடப்பட்டு இவ்வளவு சிக்கல் பட்டது. உங்களுக்கு கடைசியா ஒரு பத்து, பதினைந்து துப்பாக்கி தான் இல்லாமல் போனது. அதை பாதுகாத்து உங்களுக்கு தருவதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டோம் என தெரியுமா என கேட்டேன். இல்ல நீங்கள் ஏமாத்தி போட்டீங்கள். உங்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என்று சொல்லி, பிறகு அதுல முரண்பட்டு போயிட்டாங்க. பிறகு காலப்போக்கில் அதில் ஒருவரை நான், இந்தியாவில் தற்செயலாக சந்திக்க நேர்ந்தது.

தேசம்: யாரை..

அசோக்: மாத்தையாவோடு வந்த அந்த நாலு ஐந்து பேரில் ஒருத்தரை. அப்போ அவர் சொன்னார் உங்களுக்கு எல்லாம் வெடி இருக்கு என்று.

தேசம்: மட்டக்களப்பிலிருந்து நீங்கள் யாழ்ப்பாணம் போவதற்கு முதலில் மட்டக்களப்பு சிறை உடைப்பில் பயன்படுத்தபட்ட ஆயுதங்கள் தொடர்பா ஒரு சுவாரசியமான கதை இருப்பதாக சொல்லிட்டு அதை நிப்பாட்டிட்டீங்க.

அசோக்: நான் முன்னர் சொல்லி இருப்பேன் என்று நினைக்கிறேன் எறிகுண்டு செய்ததது பற்றி. பால் டின்னில ஜெலட்டின் வைத்து, திரி வைத்து, நெருப்பு கொளுத்தி எறிய வேண்டும் என்ற அடிப்படையில் செய்யப்பட்டது அது… அவற்றில் எதுவுமே பயன்படுத்தப்படவில்லை. எங்கட வீடு ஒரு தென்னந்தோப்பு. அங்க தேங்காய் உரித்த பிறகு, தேங்காய் மட்டை எல்லாம் பெருசா குமிச்சு வைத்திருப்பார்கள். மிஞ்சின கைக்குண்டுகள் எல்லாவற்றையும், அதுக்குள்ள நான் ஒழித்து வைத்துவிட்டேன். ஒரு நாள் அம்மா தேங்காய் மட்டை குவியலுக்கு நெருப்பு வைத்து எரித்து இருக்கிறா. இவற்றிக்கு என்ன நடந்தது என்று தெரியல. பார்த்தா எல்லாம் எரிஞ்சி போய்விட்டது.

தேசம்: ஒண்டும் வெடிக்கேல?

அசோக்: ஒன்றுமே வெடிக்கேல. அப்ப யோசித்துப் பார்த்தன் நாங்கள் இதுகளை வைத்துக்கொண்டுதான் சிறையை உடைக்க வெளிக்கிட்டு இருக்கிறோம். அம்மா நெருப்பு வைக்கும் போது வெடித்திருந்தால் பெரிய பிரச்சனை ஆகியிருக்கும். ஆனால் ஒன்றும் வெடிக்காமல், அப்படியே எரிந்து போயிட்டுது. கொஞ்ச காலத்துக்குள்ள தான். நீண்ட காலமும் இல்லை.

தேசம்: அந்த நேர சம்பவங்கள், திட்டமிடல்கள் எல்லாம் ஒரு சிறுபிள்ளைத்தனமாகவும் இருந்திருக்கிற மாதிரி தெரியுது…?

அசோக்: சிறுபிள்ளைத்தனம் என்பதைவிட அதீத நம்பிக்கை இருந்தது எங்களிடம். அந்த நம்பிக்கையும், நல்ல திட்டமிடலும்தான் அந்த வெற்றிக்கு காரணம்.

தேசம்: உங்களுடைய பேனா நட்பு என்பதும் அதனூடாக நீங்கள் எடுத்துக்கொண்ட தொடர்புகளும் தான் கூடுதலாக அரசியலுக்கும், அதற்குப் பிறகு இயக்கத்துக்கும், இயக்கங்களுக்கு இடையேயான உறவுகளுக்கும் உதவியாக இருந்திருக்கும் என நினைக்கிறேன்?

அசோக்: ஒரு பன்முக பார்வை கொண்ட தன்மையையும், ஜனநாயக பண்புகளையும் பேனா நட்பு தந்தது. உரையாடல் தானே வாழ்வை எம் பயணத்தை தீர்மானிப்பவை. எவ்வளவு முரண்பாடுகள் இருந்தாலும் உரையாடுவோம். அது எங்களுக்கு நிறைய பண்புகளை வளர்த்தது. பேனா நண்பர்கள் புளொட்டுக்குள்ள வந்தது குறைவு. ஆனால் தொடர்புகள் இருந்தது. அந்தக் காலம் யூத் கவுன்ஸில் இருந்தது, விளையாட்டு முகாம் எல்லாம் நடந்தது. அதுக்குள்ள நிறைய நண்பர்கள் கிடைத்து, அவங்க நிறைய பேர் புளொட்டுக்குள்ள வந்திருக்கிறார்கள். பெரிய ஒரு நெட்வொர்க் இருந்தது. பென் பிரண்ட், யூத் கவுன்ஸில் என்றெல்லாம் எங்களை நம்பி ஒரு கிரவுட். அதற்கான நம்பிக்கையை நாங்கள் கொடுத்தோம். வேறு இயக்கங்களுக்குள்ளும் என் பேனா நண்பர்கள் ஒருசிலர் இருந்துள்ளனர்.

மட்டக்களப்பில் இருக்கும் போது, எல்லா அமைப்புகளோடும் எங்களுக்கு தொடர்பும் உறவும் இருந்தது. முக்கியமாக அங்க வேலை செய்த ஈபிஆர்எல்எஃப், ஈரோஸ், புலிகளுக்கு வேலை செய்த முழுப் பேரோடையும் எங்களுக்கு உறவு இருந்தது.

உமைகுமாரன், இறைகுமாரன் கொல்லப்பட்ட பின்பும், எங்களுக்குள்ள ஒரு உறவு இருந்தது தானே நாங்க பேசினம் கதைத்தோம்…

தேசம்: யாழ்ப்பாணத்தில வேலை செய்யேக்கை உங்களுக்கு எப்படியான சூழல் இருந்தது ?

அசோக்: குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு நாங்க மட்டகளப்பில் நிற்கமுடியாமல் போய்விட்டது. ரகுமான் ஜான், கேசவன், பார்த்தன், சலீம், செல்வன், ஜென்னி முழுப்பேரும் திருணோமலையிலிருந்து யாழ்ப்பாணம் வந்துட்டார்கள்.

வவுனியா தான் எங்கட பிரதான முக்கிய தளமாக இருந்தது. வவுனியாவில் தங்கராஜா தோழர் எல்லாரும் இருந்தவங்கள். யாழ்ப்பாணத்தில் அமைப்பை மிகத் தீவிரமாக கட்டமைக்க வேண்டும் என்று முடிவு செய்யப்படுகிறது. அது வரைக்கும் யாழ்ப்பாணத்தில் யுனிவர்சிட்டியில் இரண்டு தோழர்கள் வேலை செய்தவர்கள் சத்தியமூர்த்தியும், கேதீஸ்வரனும். கேதீஸ்வரன் திருகோணமலை, சத்தியமூர்த்தி யாழ்ப்பாணம். குமரன் தோழர் யாழ்ப்பாண மாவட்ட பொறுப்பாளராக இருந்தார். பெரிதாக மக்கள் அமைப்பு வேலைகள் எதுவும் நடக்கல்ல.

தேசம்: இப்பவும் அவர்கள் இருக்கிறார்களா?

அசோக்: தோழர் குமரன் இங்க பிரான்சில் இருந்தவர். இறந்து விட்டார். சத்தியமூர்த்தி இலங்கையில் இருக்கிறார். கேதீஸ்வரன் காந்திய வாகனத்தில் போய், யாழ்ப்பாண பௌத்த விகாரையடியில் இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டவர்.

அந்த காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தில மற்ற இயக்கங்கள் தீவிரமாக வேலை செய்து கொண்டிருந்தது. அப்போ நாங்களும் வேலை செய்ய வேண்டும் என்று நானும், தங்கராஜா தோழரும் யாழ்ப்பாணம் போறோம். ஏனென்றால் அரசியல் வகுப்பு எடுக்க வேண்டியிருந்தது. அமைப்பு வடிவங்களை உருவாக்க வேண்டி இருந்தது.

தேசம்: தங்கராஜா தோழர் எந்த பகுதியை சேர்ந்தவர்…

அசோக்: அவர் மலையகத்தை சேர்ந்தவர். இப்போது, இந்தியாவில் தான் இருக்கிறார். அவர் ஜே.வி.பி இல் இருந்து வந்தவர்.

தேசம்: மலையகத்தை சேர்ந்த தோழர்களும் கணிசமான அளவில் இருந்தார்களா?

அசோக்: நிறைய முக்கியமான தோழர்கள் ஆதவன், மாணிக்கம் என்று ஒரு தோழர் முக்கியமானவர். மாணிக்கம்பிள்ளை என்ற ஒரு தோழர் இருந்தவர். பெரியண்ணன் என்று சொல்லி வவுனியா அவர். நிறைய தோழர்கள் இருந்தார்கள்.

நாங்க யாழ்பாணம் போகும்போது, அங்கு பெரிதாக அமைப்பு வடிவம் இருக்கவில்லை. நாங்க போய்த்தான் அவற்றை ஒழுங்கமைக்கின்றோம். யாழ்ப்பாண மாவட்டத்திற்கு பொறுப்பாக இருந்த தோழர் குமரன், நெருக்கடிகளால் எதுவும் செய்ய முடியல்ல. குமரன் பின்தளம் போய், கரையோரப் பொறுப்புக்களை, கடல் போக்குவரத்துக்களை பார்க்க வேண்டி இருந்ததால், மாவட்ட பொறுப்பாளராக நேசன் என்று சொல்லி, இப்போது கனடாவில் இருக்கிறார். அவரை நியமிக்கிறார். தளப் பொறுப்பாளாராக தோழர் சலீம் பொறுக்பெடுக்கிறார். அவர் பொறுப்பெடுத்து மூன்று மாதத்திலேயே திருநெல்வேலியில் வைத்து இராணுவத்தால் கைது செய்யப்பட்டு விட்டார். அதற்குப் பிறகு தோழர் கேசவன் தளப்பொறுப்பாளராக வருகின்றார்.

இக் காலங்களில் நாங்கள் அமைப்பை கட்டுவதற்கான தீவிர முயற்சியில் ஈடுபடுகிறோம். தொழிற்சங்கங்கள், மாணவர் இயக்கங்கள், பெண்கள் அமைப்பு என உருவாக்குகின்றோம். இவ் அமைப்புக்களை சேர்ந்த தோழர்களுக்கு பாசறைகள் வைத்து அரசியல் வகுப்புக்கள் நடாத்துகிறோம்.

தேசம்: தளத்தில் வந்து மத்திய குழுவைச் சேர்ந்த தோழர்களில் நீங்கள் ஒருவர், மற்ற தோழர்கள் யார் யார்…?

அசோக்: மத்திய குழு உருவாக்கப்படவில்லை. இந்த நேரத்தில் தற்காலிக மத்திய குழு இருக்கிறது . இது பற்றி முன்னமே கதைத்துள்ளோம்.

தொழிற்சங்கங்களுக்கு முக்கியமாக ஐபி, ஜீவன், ராஜன், பிரசாத், முத்து, ரகு, கௌரிகாந்தன், இளவாலை பத்தர், கிருபா அவங்க எல்லாம் இருக்கிறாங்கள். பிறகு மாணவர் அமைப்புகள் டெசோ உருவாக்கப்பட்டு, தீபநேசன், குருபரன், ஜபார், மகிழ்ச்சி, அர்ச்சுனா, தமிழ், தம்பா, தனஞ்சயன், சிவகுமார், விமலேஸ்வரன், லவன், சுகந்தன், திரிலிங்கம் ஞானம், போல், பாபு, இப்படி நிறைய தோழர்கள். பெண்கள் அமைப்பில் நிறைய தோழர்கள் வேலை செய்தவங்க. மாணவர் அமைப்பிலும் நிறைய பெண் தோழர்கள் வேலை செய்தவர்கள் பெயர்கள் வேண்டாம்.

மக்கள் அமைப்பில் உரும்பிராய் குமார், சீலன், விபுல், இளங்கோ, பரணீதரன், கதீர், இப்படி நிறைய. கொக்குவில் தோழர்கள் நிறையப்பேர். நாதன், சிவானந்தன், செல்வன், ஆனந்தன், தோழர்கள் பெயர்களை ஞாபகப்படுத்த முடியாமல் உள்ளது.

தேசம்: நான் நினைக்கிறேன் அந்த காலகட்டத்தில் புளொட்டில் தான் ஆகக்கூடுதலான தோழர்கள் இருந்தார்கள் என்று.

அசோக்: ஓம். ஒப்பிட்டளவில் புளாட் அமைப்பில்தான் கூடுதலான தோழர்கள் இருந்திருப்பார்கள் என நினைக்கிறன். மாணவர் அமைப்பு டெசோவின் இருந்த தோழர்கள் பாசறைகளில் கலந்து கொண்டார்கள். உண்மையில் டெசோவும், தொழிற்சங்கமும், பெண்கள் அமைப்பும் அரசியல்ரீதியாக வளர்ச்சி கொண்ட தோழர்களை கொண்டிருந்தது. யாழ்ப்பாணத்தில் என்ன நடந்தது என்று கேட்டால், யாழ்ப்பாண நிர்வாக அமைப்பு குறிப்பாக மக்கள் அமைப்பு பொறுப்பாளர்களை, மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்ட நேசனும், கண்ணாடிச் சந்திரனும்தான் தீர்மானிச்சாங்க. எங்களுக்கு அங்கு பெரிதாக யாரையும் தெரியாது. பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட இந்த தோழர்களுக்கு அரசியல் சார்ந்த வரலாற்று புரிதலும், கோட்பாட்டு ரீதியான புரிதலும் இல்லை. அவர்கள் வெறும் நிர்வாகிகளாகத்தான் இருந்தாங்க.

அவர்களுக்கு கீழ வேலை செய்ற தோழர்கள் அரசியல் வகுப்புக்கு வந்தாங்க. கீழ் மட்டங்களில் வேலை செய்த தோழர்கள், மற்றும் மாணவர் அமைப்புகள் தொழிற்சங்கங்களில் வேலை செய்தவர்கள் அரசியல் ரீதியாகவும், சிந்தனை ரீதியாகவும், ஒரு மாக்சிச ஐடியோலொஜி உள்ளவர்களாகவும், முற்போக்கான எண்ணம் கொண்டவர்களாகவும் இருந்தார்கள். அப்ப எங்களுக்கு அவங்களோட வேலை செய்றது லேசாக இருந்தது.

தேசம்: நான் திருப்பியும் பேனா நண்பர்கள் என்ற விடயத்திற்கு வாரன். உங்கள் பேனா நண்பர்களில் சிலர் பிற்காலத்தில் விடுதலைப்புலிகளில் இயங்கியதாக ஒரு தடவை சொன்னது ஞாபகம் உள்ளது. அதைப்பற்றி சொல்லமுடியுமா?

அசோக்: யாழ்ப்பாணத்தில ஒரு பேனா சிநேகிதி இருந்தவ. யாழ்ப்பான யூனிவர்சிட்டியில் எம் ஏ செய்தவா. பல்கலைக்கழக மறுமலர்ச்சிக் கழகத்தில் வேலை செய்து, அப்படியே புலிக்கு போயிற்றாங்க. பிறகு புலிகளிலிருந்து வெறியேறிட்டாங்க. அவங்களால்தான் திலீபன் உறவு எனக்கு வந்தது.

தேசம்: உண்ணாவிரதம் இருந்து இறந்த திலீபன்

அசோக்: ஓம். ஒரளவு எங்களுக்கு யாழ்ப்பாணத்தில, பேசக் கூடிய உறவுகள், எல்லா அமைப்புகளிடமும் இருந்தது.

தேசம்: இது ஒன்றும் யாழ்ப்பாணத்திலிருந்த தோழர்களுக்கு இடையில் இருக்கேல. ஏன் ?

அசோக்: அப்படி முழுமையாக சொல்லமுடியாது. அரசியல் வளர்ச்சி கொண்ட, ஜனநாயகப் பண்பு கொண்ட தோழர்கள் மத்தியில் உரையாடல்கள் இருந்தன. இது எல்லா இயக்கங்களுக்கும் பொருந்தும். ஆனால் பெரும்பான்மை கொண்டதாக, ஆதிக்கம் கொண்டதாக ஏனைய சக்திகள்தான் இருந்தன. அதுதான் பிரச்சனை. இயக்கங்களோடு பல்வேறு முரண்பாடுகள் வரேக்க நான்தான் அனேகமா பேச்சுவார்த்தைக்கு போறது. சுழிபுரம் படுகொலை தொடர்பாக கூட நான்தான் பேச்சுவார்த்தைக்கு போனான். அதைப் பிறகு கதைக்கலாம் என்று நினைக்கிறேன்

ஈபிஆர்எல்எஃப் க்கு இன்டலெக்சுவல் வட்டம் ஒன்று இருந்தது. நிறைய இடதுசாரி தோழர்களுடன் எல்லாம் உறவை வளர்த்து இருந்தாங்க. புளொட்டுக்கு அந்த நேரத்தில் இவ்வாறான தொடர்புகளும், உறவுகளும் இருக்கவில்லை.

நாங்க போனதற்குப் பிறகுதான், ஓரளவு இடதுசாரித் தோழர்கள், இலக்கிய துறை சார்ந்த நண்பர்களோடு உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளமுடிந்தது. உரையாடலுக்கான உறவை அவர்களுடைய கருத்தை உள்வாங்குவதற்கான உறவை நாங்கதான் ஏற்படுத்தி கொண்டோம். இதில சந்திச்ச தோழர்களில்
நாகராஜா, கௌரிகாந்தன், முத்து, ஜெயபாலன் போன்றவங்க அரசியல் வகுப்புக்கள் எங்களுக்கு எடுத்தவங்க. அந்த நேரத்தில்தான் நாங்கள் சுவர் என்ற பத்திரிகையும் வெளியிட்டோம்.

தேசம்: அது டெசோ மாணவர் அமைப்பு சார்ந்ததா?

அசோக்: இல்லை இல்லை. அப்ப யாழ்ப்பாணத்தில் புதுசு என்ற சஞ்சிகை வெளி வந்திருந்தது. நல்ல காத்திரமான இலக்கிய சஞ்சிகை அது. சபேசன், ரவி அருணாசலம், இளவாலை விஜயேந்திரன் போன்றவங்க சேர்ந்து வெளியிட்டார்கள். சபேசன், ரவி அருணாசலம் அவங்களோட எனக்கு ஒரு நட்பு ஒன்று இருந்தது. தோழர் கேதீஸ்வரனும் இவங்களோடு நட்பாக இருந்தார். நாங்களும் ஒரு இலக்கிய பின்புலத்திலிருந்து வந்த ஆட்கள் தானே. அப்ப இலக்கிய சஞ்சிகை வெளியிடலாம் என்ற ஒரு ஐடியா இருந்தது. எங்க நோக்கம் என்னவென்றால் புளொட்டினுடைய அரசியல் சாராமல், ஆரோக்கியமான உரையாடலுக்கான ஒரு சுதந்திர தளமாக அந்த இலக்கிய சஞ்சிகையை கொண்டு வர வேண்டும் என்ற ஒரு ஐடியா இருந்தது. அப்போது வழி செல்லத்துரை என்றொரு தோழர் இருந்தவர். இப்ப கனடாவில் இருக்கிறார். அவரோட கதைத்த போது, நல்ல முயற்சி செய்யலாம் என்றார். அதன் பின்பு தோழர்கள் கேசவன், ரகுமான் ஜான், கேதிஸ்வரனோடு கதைத்து கொண்டு வரலாம் என முடிவு செய்கிறோம்.

தேசம்: வலி செல்லத்துரை என்பது அவர் வலிகாமம் என்பதாலா ?

அசோக்: இல்லை இல்லை. அவர் புன்னாலைக் கட்டுவனைச் சேர்ந்தவர். வழி என்று ஒரு பத்திரிகை வெளியிட்டவர். பிறகு சபேசனோடு இது பற்றி கதைக்கிறம். அதற்கு பிறகு நாங்கள் ஒரு சுவர் என்ற பெயரில் சஞ்சிகை ஒன்று கொண்டு வாறதுக்கு கமிட்டி ஒன்று உருவாக்கி, அந்தக் கமிட்டியில் சபேசன், ரவி அருணாச்சலம், நான், ஜீவன், வழி செல்லத்துரை, கேதீஸ்வரன் முதலாவது சஞ்சிகையை கொண்டு வந்தம். சஞ்சிகை ஒரு ஆரோக்கியமான உரையாடல் தளமாக இருந்தது. பல பேரின் படைப்புக்கள் அதில் வெளிவந்தன. இரண்டாவது சஞ்சிகை கொண்டு வரேக்க இயல்பாகவே இயக்கவாதம் தெரியும்தானே, அந்தக் கவிதை பிழை, கட்டுரை பிழை என்று சொல்லி. அதுல பெரும் பிரச்சனை எடுத்தது கண்ணாடி சந்திரன்.

தேசம்: அவர் உங்கட குழுவில் இருக்கிறாரா?

அசோக்: குழுவில் இல்லை. ஆனால் அவர் ஒரு அதிகார மையமாக மாறிவிட்டார் அந்த நேரம்.

தேசம்: இந்த சஞ்சிகை வெளியிடுவதற்கான ஆதரவைப் புளொட் தான் தந்தது.

அசோக்: இது சம்பந்தமாக தோழர்கள் ரகுமான் ஜான், கேசவன் ஆட்களோட எல்லாம் கதைத்து ஓகே பண்ணிட்டாங்க. பிறகு ரகுமான் ஜான் இந்தியாவுக்கு போயிட்டார். இங்கே இருந்தது கேசவன் தோழர்தான். முதலாவது நிதி புளொட் தந்தது. பிறகு கண்ணாடிச் சந்திரன் பிரச்சனை கொடுக்க தொடங்கிவிட்டார். கேசவன் தோழரும் கண்ணாடிச் சந்திரனின் அதிகார மையத்தோடு அக்காலங்களில் ஐக்கியமாகிக் கொண்டிருந்தார். நேசன், கண்ணாடிச் சந்திரன் போன்றவர்களின் அதிகார தன்னிச்சையான போக்குகளை கண்டிக்காமல், அவர்களோடு தாராளவாதம் கொண்டவராக இருந்தார். இரண்டாவது பத்திரிகையை வெளியிடுவதற்கு எங்களிடம் பணம் இல்லை. அந்த நேரம் யாரிடமும் இப்படி பிரச்சினை என்று சொல்லவில்லை.பிறகு நாங்கள் ஸ்டாப் பண்ணிட்டோம்.

தேசம்: இதுல ரகுமான் ஜான், நேசன், கண்ணாடிச் சந்திரன் மூன்று பேரும் பிறகு தீப்பொறி உருவாக்கினம். இவர்கள்தான் அதிகார மையங்களை உருவாக்குகின்றார்கள்…

அசோக்: இதை நீங்கள் வரலாற்று ரீதியாக பார்த்தீர்களென்றால், இப்படி இந்த அதிகார மையம் உருவாகுவதற்கான அடிப்படைக்காரணங்களும், அதன் சூழலும், அது பற்றிய அரசியல் பார்வையும் எங்களுக்கு அவசியம். ஏனென்றால், இப்ப நாங்கள் எடுத்த உடனேயே எல்லாரும் தலைமை மீது தானே குற்றச்சாட்டு வைக்கிறம். தலைமையில் ஒரு அதிகார மையம் உருவாகிய அதே நேரம், தளத்திலும் ஒரு அதிகார மையம் உருவாகுது. கண்ணாடிச் சந்திரன், நேசன் போன்றவர்கள் அந்த அதிகார மையத்தை உருவாக்குகின்றனர்.

அதற்கு தோழர் கேசவனும் துணை போகின்றார். உதாரணமாக பார்த்தீர்கள் என்றால், பார்த்தன் தான் இராணுவப் பொறுப்பாளராக இருந்தவர் தளத்துக்கு. அந்த காலகட்டத்தில் கொலைகளும், கொள்ளை நடக்கவில்லை. நாங்கள் அரசியல் மயப்படுத்தும் வேலைகளில் ஈடுபட்டு கொண்டிருந்தோம்.

தேசம்: அந்தக் காலகட்டத்தில் நல்ல ஒரு உறவு ஒன்று இருந்தது.

அசோக்: ஓம் நிச்சயமாக. புளொட் அமைப்பின் வேலைத்திட்டங்கள் யாழ்ப்பாணத்தில் சுமூகமாகப் போய்க் கொண்டிருந்தது. வேறு அமைப்புகள் சில நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும் கூட, புளொட் எந்த விதமான தவறான நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை. பார்த்தன் மட்டக்களப்புக்கு போய் போலீசில் பிடிபட்டு கொலை செய்யப்பட்டபோது, ராணுவ பொறுப்பாளர் இல்லாத ஒரு காலம் வருது.

தேசம்: பார்த்தன் என்பது ஜெயச்சந்திரன். ஜென்னியின் துணைவர்…

அசோக்: ஓம். அந்த இடைவெளியில் ஒரு ராணுவ பொறுப்பாளர் அவசியம் என்ற வகையில் கண்ணாடிச் சந்திரன் நியமிக்கப்படுகிறார். பார்த்தனுக்கும் எங்களுக்கும் இடையில் ஒரு ஆரோக்கியமான உரையாடல் இருந்தது, தோழமை இருந்தது. கண்ணாடிச் சந்திரனிடம் அது இல்லாமல் போய் விட்டது. இவர் மற்றவர்களை தோழமையோடு எப்பவும் அணுகுவதில்லை. எப்போதும் அதிகாரத்தனம்தான்.

நேசனைப் பொறுத்தவரை, அரசியல் ரீதியில் எந்த வளர்ச்சியும் அற்றவர். வெறும் நிர்வாகி. சொல்லப் போனால், கண்ணாடிச் சந்திரனின் அடிமையாகவே இருந்தார். குமரன் தோழரிடம் நான் பகிடியாக கேட்பதுண்டு. எப்படி நேசனை கண்டுபிடிச்சீங்க என்று.

தேசம்: பார்த்தன், நீங்கள், மற்றது வாசுதேவா எல்லாரும் காந்தியத்திலிருந்து அரசியல் மயப்படுத்தப்பட்டு வாறீர்கள். கண்ணாடிச் சந்திரனின் பின்னணி என்ன?

அசோக்: அவர் மொரட்டுவை யூனிவர்சிட்டியில் ஆர்க்கிட்டெக் படித்துக் கொண்டிருந்தவர். படிக்க முடியாத சூழல் வருதுதானே. அப்போது புளொட்டிக்கு வருகின்றார்.

தேசம்: இவரைப் போன்றவர்களுக்கு அரசியல் வளர்ச்சியும், இராணுவப் பயிற்சியும் இருக்கேல

அசோக்: எதுவும் இல்லை..

தேசம்: அப்போ என்ன என்று அந்த பொறுப்பான பதவிக்கு வாறினம்?

அசோக்: இவர் ரகுமான் ஜானின் நெருங்கின நண்பர். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இவங்க இருவரும் படித்தவர்கள். இவர் வந்த பிண்ணனி பற்றி முன்னர் கதைத்திருக்கிறோம்.

தேசம்: அதற்காக, இவ்வாறு பொறுப்பு கொடுக்க முடியுமா?

அசோக்: இவ்வாறுதான் அதிகார துஷ்பிரயோகங்கள் தளத்தில் உருவாகியது. பிற்காலத்தில் ரகுமான் ஜான் தோழருடன், கண்ணாடிச் சந்திரன் பற்றி கதைக்கும் போது, கண்ணாடிச் சந்திரன் பிற்போக்கான ஆள் என்றும், தன் ஊரில் நடந்த சாதிய கலவரம் ஒன்றில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக செயற்பட்டவர் என்று சொன்னார். அப்ப கேட்டேன், இப்படிப்பட்டவரை எந்த எந்த அடிப்படையில் கொண்டு வந்தீர்கள் என்று. தனக்கு அப்போது தெரியாது என்றும், பின்னர்தான் தான் அறிந்ததாகவும் சொன்னார். நான் இன்றைக்கும் மதிக்கும் தோழர்களில், ரகுமான் ஜான் தோழர் முக்கியமானவர். ஆனால் அவரின் பலவீனம், தனிப்பட்ட நட்புக்களுக்கு இயக்கத்தினுள் முக்கியத்துவம் கொடுத்தது.

தேசம்: பொருளாதார ரீதியில் கண்ணாடிச் சந்திரன் எப்படியான பின்னணியை கொண்டிருந்தார்.

அசோக்: நான் பகிடியா சொல்லுறது, கண்ணாடி சந்திரனை அவருடைய காருக்காகத்தான், புளொட்டில் சேர்த்தது என்று சொல்லி. அவரின் சொந்த காரிலதான் வருவார்.

தேசம்: செல்வந்த குடும்பத்தை சேர்ந்தவர்.

அசோக்: ஓம். அதிகார வர்க்கமாக யாழ்ப்பாணத்தில் ஒரு குரூப் அப்போதே உருவாகிவிட்டது. அந்த நேரத்தில் எனக்கும் இவர்களுக்கும் முரண்பாடு தொடங்கி விட்டது.

தேசம்: யாழ்ப்பாணத்தின் இயல்பா இது… ?

அசோக்: மத்தியதர வர்க்கத்தின் இயல்பு இது. மத்திய தர வர்க்கம் அதிகாரத்துக்கான அபிலாசை கொண்டது. அதற்காக எந்த சமரசமும், எந்த தவறுகளையும் செய்யத் துணியும்.

தேசம்: மத்திய தர வர்க்கம் என்றால், கிழக்கு மாகாணத்தில் மத்தியதர வர்க்கம் இருக்குத்தானே

அசோக்: மத்தியதர வர்க்கத்தில் அபிலாசைகள், எதிர்பார்ப்புக்கள் நடத்தைகள் எல்லாம் எங்கும் ஒன்றாகத்தான் இருக்கும். இயல்பாக எம் எல்லோரிடமும் இந்த குணாம்சம் இருக்கும். அது அதிகாரத்திற்கு ஆசைப்படும். தன்னைச் சற்றி விம்பங்களை ஏற்படுத்தும். அனைத்து சொகுசுகளையும் அனுபவிக்க விரும்பும். இவற்றில் இருந்து விடுபடவேண்டுமென்றால் மார்க்சிய கல்வி அவசியம். இடதுசாரிய பண்பாட்டு வாழ்வு அவசியம். பன்முகத்தன்மை பார்வை, சமூக அக்கறை இருக்க வேண்டும். இல்லாட்டி அதிகாரமும் தன்னிச்சையான போக்குகளும்தான் அதிகரிக்கும். இவைகள் இயக்கத்தை அழித்துவிடும்.

கண்ணாடிச் சந்திரன், நேசன் இவங்க இரண்டு பேரிடமும் இந்த அதிகாரமும், தன்னிச்சையான போக்குகளும் நிறைய இருந்தது. இரண்டு பேரும் சேர்ந்து செய்த விடயங்கள் பலருக்கும் தெரியாது.

உதாரணமாக, கிளிநொச்சி மாவட்டத்தில் வட்டக்கச்சி என்ற ஒரு கிராமம் இருக்கு. அங்க டெசோ மாணவர் அமைப்பு தொடர்பாக அமைப்பு கட்டுவதற்கு வட்டக்கச்சி மகா வித்தியாலயத்திற்கு போயிருந்தேன். மாணவர்களோடு கதைத்த பின், அதிபர் வந்து சொன்னார், டீச்சர் ஒருத்தர் உங்களோட கதைக்க வேண்டுமாம் என்று சொல்லி. அந்த ரீச்சருக்கு நான் புளொட் என்று தெரியும். போனவுடனே சொன்னா, அவங்களின்ர உறவினரை புளொட் சுட்டு கொலை செய்து போட்டுது என்று. எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஒரே குழப்பம். அவங்க ஆதாரமா சொல்லுறா புளொட் தான் கொலை செய்து போட்டுது என்று. நீங்க எல்லாம் எந்த அடிப்படையில் மாணவர் அமைப்பை கட்ட வாறீங்கள்? கொலைகார இயக்கம் அது இது என்று கடுமையாக பேசினாங்க. எனக்கு ஒன்றுமே தெரியாது. வட்டக்கச்சியில் புளொட் கொலை செய்த மாதிரி நான் அறியல அப்போ.

அதுக்கு பிறகு, அங்க அமைப்பு கட்ட முடியாமல் போய்விட்டது. நான் யாழ்ப்பாணத்துக்கு திரும்பி வாறேன். அப்ப பொறுப்பாளராக இருந்தவர் தோழர் கேசவன். அவரிடம் நான் சொன்னேன் இப்படி ஒரு படுகொலை நடந்தது என்று. தோழர் கேசவன் மறுத்திட்டார். கிளிநொச்சி தோழர்கள் பலருக்கும் இது தெரியாது. ரகசியமாக செய்யப்பட்டிருக்கு. எப்படியோ அந்த டிச்சருக்கு தெரிந்து விட்டது.

பிறகு எனக்கு கிளிநொச்சி தோழர்களுக்கு ஊடாக தெரியவந்தது புளொட் தான் செய்தது என்று சொல்லி. பிறகு கேசவன் ஒத்துக்கொண்டார். அப்போது நான் கேட்டேன் எந்த அடிப்படையில் முடிவு எடுத்தீர்கள் என்று. பிறகு சொன்னார், கிளிநொச்சி மாவட்ட பொறுப்பாளராக அப்ப கிளிமாஸ்டர் என்று ஒரு ஆள் இருந்தவர். அவருடைய அறிக்கையின் அடிப்படையில்தான், இந்த படுகொலை நடந்தது என்று. அப்போ நான் சொன் னேன், அவர் கொலை செய்யப்பட்டது சரியென்றால், புளொட் வெளிப்படையாக உரிமை கோர வேண்டும். பிழை என்றால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று. அப்போ ஓம் ஓம் என்று சொல்லிப்போட்டு, உரிமை கோரவில்லை. நான் கேள்விப் பட்டேன் , உண்மையில் அந்த கொலை, கிளி மாஸ்டருக்கும், கொலை செய்யப்பட்டவருக்கும் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சனையில், கண்ணாடிச் சந்திரனும், நேசனும் முடிவு பண்ணி, செய்த கொலை என்று.

மல்லாவிச் சந்திரன் என்று ஒருவர் இருந்தவர். அவர் மல்லாவியில் சிறுசிறு களவுகளில் ஈடுபட்டிருந்தவர். இவங்கள் அவரை விசாரணைக்காக, யாழ்ப்பாணம் கொண்டு வந்திருக்கிறார்கள். கொண்டு வந்த பிற்பாடு, அவர் கொஞ்சம் துணிவான ஆள். அவரை இந்த விஷயங்களுக்கு பயன்படுத்த தொடங்கிட்டாங்க. அவர்தான் அந்தக் கொலைக்கு அங்க பயன்படுத்தப் பட்டிருக்கிறார். கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்லி எனக்கும், தோழர் கேசவனுக்கும் பிரச்சனை வந்துவிட்டது. கேசவனிடம் நான் இந்த குற்றச்சாட்டை வைத்தது, நேசனுக்கும் கண்ணாடி சந்திரனுக்கும் தெரியவந்தது. அந்த காலகட்டத்திலேயே எங்களுக்குள்ள பெரிய முரண்பாடு தோன்றி விட்டது. அந்த நேரத்தில் உமா மகேஸ்வரனின் பெரிய ஒரு விசுவாசியாக இவர்கள் மாறி விட்டார்கள். இந்த தன்னிச்சையான போக்குகளுக்கு பின் தளத்தில் இருந்தும் பெரிய ஆசீர்வாதம் கிடைத்தது. உமா மகேஸ்வரனை முதல் முதல் தளத்தில், பெரிய ஐயா என அழைத்தவர்கள் இவர்கள்தான். அவ்வளவு விசுவாசம்.

அந்த நேரம் ஒட்டிசுட்டானில் ஒரு சம்பவம் நடந்தது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? சுப்ரமணியம் அல்லது சண்முகநாதன் என்று சொல்லி ஒரு இன்ஸ்பெக்டர். மிக அருமையான ஆள். விடுதலை இயக்கங்களுக்கு எல்லாம் பெரும் ஆதரவு கொடுத்தவர்.

தேசம்: அவர் போலீஸ் அதிகாரியா. ?

அசோக்: ஓம். போலீஸ் பொறுப்பதிகாரி. ஆனால் அவரை இவங்கள் படுகொலை செய்திட்டாங்கள். அதுவும் தனிப்பட்ட பிரச்சனைகளுக்காக. புளொட் என்று தெரியாது.

பாகம் 13: மட்டக்களப்பு சிறை உடைப்பா? சிறைத் திறப்பா?

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! : தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 12 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 07.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

பாகம் 13

தேசம்: மட்டக்களப்பு சிறை உடைப்பு பற்றி பேசிக்கொண்டிருக்கிறம். நீங்கள் ஆயுதங்கள் எல்லாம் எடுத்து சேகரித்திருந்தா லும் கூட, ஆயுதங்கள் எதுவும் பெரிசா பயன்படுத்தப்படவில்லை என்று நினைக்கிறேன். சிறைக்குள் என்ன நடந்தது?

அசோக்: ஆயுதங்கள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை. உள்ளுக்குள்ள ரிவால்வர் தான் அனுப்பப்பட்டது. ஈபிஆர்எல்எஃப் தோழர்கள் தங்களுக்கு தேவையானதை அனுப்பி இருப்பார்கள் என்று நினைக்கிறேன். புளொட்டில் இரண்டு ரிவால்வர் அனுப்பப்பட்டது. வெளியில கூடுதலா சொட் கண்கள்தான். அடுத்தது பால் ரின்னில் கிரானைட் மாதிரி ஜலற்றின் வைத்து செய்யப்பட்ட திரிவைத்த எறி குண்டு. திரியில் நெருப்பு பற்ற வைத்து எறியவேண்டும். ஆனால் இவை எதையும் பயன்படுத்த வேண்டிய அவசியம் வரவில்லை.

சிறைக்குள் இருந்தஎல்லோரும் கூட்டாக இணைந்துதான் முயற்சி எடுத்தாங்க ராஜன் டக்ளஸ் தேவானந்தா, பனாகொடை மகேஸ்வரன் போன்றவங்க முக்கியமானவங்க. பலருக்கும் பொறுப்புக்கள் பிரித்துப் பிரித்து கொடுகப்பட்டன. உதாரணமாக டேவிட் ஐயாவிடமும் , டொக்டர் ஜெயகுலரா ஜாவிடம் மும் கட்டிப்போடப்படும் ஜெலர்களுக்கு வாயில் பிளாஸ்டர் ஒட்டும்வேலை பொறுப்பு கொடுகப்பட்டது. இப்படித்தான் எல்லோருடைய ஒத்துழைப்பும் இருந்தது.

தேசம்: ராணுவ பாதுகாவலர்கள் மாறுகிற நேரத்தில்தான் சிறை உடைப்பு நடந்தது..

அசோக்: ஓம், . குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு தடவைதான் சிறையை சுற்றியுள்ள வீதிகளில் பொலிஸ் அல்லது இராணுவம் ரோந்து வரும் . அந்த இடைவெளிக்குள் சிறை உடைப்பு செய்யவேண்டும்.

அந்த குறிப்பிட்ட நேரத்திற்குள்ள நடந் ததால எந்தவொரு சிக்கலும் ஏற்படவில்ல. சிறைக்குள்ள பிரச்சனையில்லை. தெரிந்த ஜெயிலர்ஸ் தானே அதனால் பெரிய பிரச்சனைகள் ஏற்படவில்லை.

தேசம்: அப்போ சிறைப் பாதுகாவலர்கள் சிறைக் கதவுகளின் சாவிகளை உங்களுக்குத் தந்து…..

அசோக்: இல்லை இல்லை உள்ளுக்க ரெண்டு மூன்று ஜெயிலர்ஸ் தான் சப்போர்ட் பண்ணினார்கள். மற்ற ஜெயிலலர்களை பிடித்து கட்டிப்போட்டு அவர்களிடமிருந்த சாவிகளை பறித்து ஒவ்வோரு செல்களும் திறக்கப்பட்டன. அதனோட நாங்க செய்த சாவிகளும் பயன்படுத்தப்பட்டன முழு ஜெயிலர்சையும் சப்போர்ட் பண்ணுவாங்க என்று எதிர்பார்க்க இயலாதுதானே.

தேசம்: எல்லாருமே தமிழ் காவலர்களா

அசோக்: சிங்கள காவலர்களும் இருந்தவங்க. சிறை உடைக்கப்பட்டு எல்லாரும் வெளியேறியவுடன், அங்கு சிறை வைக்கப்படடிருந்த சாதாரண கைதிகள் அவங்களும் வெளியேறி தப்பிட்டார்கள். அரசியல் கைதி அல்லாத, வேறு குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட கைதிகள் முழுப்பேரும் வெளியேறி போய்விட்டார்கள். தமிழ்க் கைதிகளுக்கு சிறை இருந்த இடம் பற்றி, அந்த சுற்றாடல் பற்றி ஓரளவு தெரியும். அவங்க தப்பி போயிற்றாங்க. சிங்களக் கைதிகளுக்கு இடம் தெரியாது. மட்டக்களப்பு ஒரு தீவு. மேலிருந்து பார்த்தீர்களென்றால் மட்டக்களப்பு என்பது வாவிகளால் சூழப்பட்ட ஒரு பிரதேசம். மட்டக்களப்பை புளியந்தீவு என்றும் சொல்வதுண்டு. மட்டக்களப்பை ஏனைய பிரதேசங்களோடு இணைப்பது பாலங்கள்தான்.

தேசம்: தமிழ் கைதிகள் எல்லோரும்…

அசோக்: தமிழ் கைதிகள் பாலம் எல்லாம் தாண்டி தப்பி போயிட்டாங்க. தோணிகள் பயன்படுத்தி ஆற்றைக் கடந்தும் தப்பிவிட்டாங்க. சிங்கள சிறைக் கைதிகளுக்கு ஒன்றும் செய்ய இயலாமல் போய் விட்டது. போலீஸ் அவங்க முழுப் பேரையும் அரெஸ்ட் பண்ணி விட்டது.

தேசம்: வெளியேறின அரசியல் கைதிகளை எப்படி வெளில கொண்டு போறீங்க

அசோக்: அரசியல் கைதிகளை வெளியில கொண்டு போறதுக்கு ஈபிஆர்எல்எஃப் தோழர் குன்சி தங்களுக்குரிய ஏற்பாட்டை செய்திருந்தார். தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் தங்களுக்குரிய ஆட்களை ஏற்பாடு செய்திருந்தார். புளொட்டுக்கான ஏற்பாட்டை பார்த்தன் செய்தது. பனிச்சம் கேணியிலிருந்து, இந்தியா கொண்டு போற வரைக்கும் எல்லா பாது காப்பையும் தோழர் பார்த்தன்தான் செய்தார்.

தேசம்: அதாவது சிறை உடைத்த பிறகு வெளியில வந்தவர்களைக் கொண்டு போற வேலைகளைப் பார்த்தன் செய்தது.

அசோக்: பனிச்சம்கேனியிலிருந்து இருந்து திருகோணமலைக்கு கொண்டு போய், அங்க இருந்து இந்தியாவுக்கு அனுப்புற வேலைகளை பார்த்தன், ராதாகிருஷ்ணன், ஜெயகாந்தன், செல்வன் இவங்கதான் செய்தாங்க. நேரடியாக இந்தியா போகவில்லை. பல இடங்களில் தங்க வைக்கப்பட்டு, கொஞ்ச கொஞ்ச பேராக பின் தளத்திற்கு அனுப்பப்பட்டாங்க. மாதகல் ஊடாகத்தான் அனுப்பப்பட்டாங்க. இதற்கான போக்குவரத்து பொறுப்புக்களை தோழர் குமரன் செய்தார். குமாரதுரை என்று ஒருத்தர் இருந்தவர். கிளிவெட்டியை சேர்ந்தவர். அவருடைய உதவியும் இருந்தது.

டேவிட் ஐயா சிறைக்குள்ளிருந்து எல்லாரும் போகேக்க அவரால வெளியேற முடியவில்லை. சிறையில் இருந்து வாகனத்தில் இவங்க எல்லாரும் ஏறும்போது, அவரைக் கவனிக்கவில்லை. இவர் ரோட்டில நின்றுட்டார். இவங்க எல்லாரும் போனதற்குப் பிறகு தனிமைப்பட்டுட்டார். பிறகு ஜெயிலில் இருந்து தப்பிய சாதாரண கைதிகள் இரண்டு பேர் , டேவிட் ஐயாவை தற்செயலா கண்டிருக்கிறார்கள். அவர்கள் தான் டேவிட் ஐயாவை கொண்டு பாதுகாப்பா வச்சு, ஒரு பாதரிட்ட ஒப்படைத்து பாதர் தான் அனுப்பி வைத்தவர்

தேசம்: இந்தியாவுக்கு அனுப்பி வைத்தவரோ?

அசோக்: இல்ல எங்கட தோழர்களிடம் ஒப்படைத்து நாங்க பொறுப்பெடுத்தம்.

தேசம்: இந்த சிறை உடைப்புக்கு பிறகு உங்களுக்கு உதவி செய்த தமிழ் சிறைக்காவலர்கள் இருக்கினம் தானே அதுக்கு ஏதாவது பிரச்சனை வந்ததா

அசோக்: ஒரே ஒருத்தருக்கு பிரச்சனை வந்தது, கிருஷ்ணமூர்த்தியை ஐடிடென்டி பண்ணிட்டாங்க. அவர் பிறகு புளொட்டுக்கு வந்துட்டார். பிறகு வெளியிலிருந்து உதவி செய்த மாசிலாமணி அவருக்கும் பிரச்சினை வந்து, அவரும் திரும்ப புளொட்டுக்கு வந்துட்டார். இவர்கள் பற்றி முன்னர் கதைத்திருக்கிறன்.

அதுல என்னை விசாரித்த டிஎஸ்பி மகேந்திரன் அவரோட உதவியும் கொஞ்சம் இருந்தது. இல்லாட்டி காந்திய வாகனம் எல்லாம் உடனே பிடிபட்டிருக்கும். பிறகு சிங்கள பொலிசாருக்கு தெரிய வந்து, காந்தீயமும் தடை செய்யப்பட்டு, வாகனங்கள் எல்லாம் பறிமுதல் செய்யப்பட்டு விட்டன.

தேசம்: சிறை உடைப்பில் காந்திய வாகனங்கள் பயன்படுத்தப்பட்டது

அசோக்: காந்திய வாகனங்கள்தான் பயன்படுத்தப்பட்டது. வாகனங்களை பயன்படுத்திட்டு, அந்தந்த இடத்தில் விட்டுட்டு போயிட்டாங்க. அவற்ற திருப்பி கொண்டு வரவில்லை. அடுத்த நாள் போலீஸ் போகும்போது, டிஎஸ்பி மகேந்திரனுக்கு தெரியும் இது காந்திய வாகனங்கள் என்று. அவர் காந்தியதுக்கு அறிவித்து உடனடியாக வாகனங்களை எடுக்க சொல்லி, பிறகு வாகனங்களை அந்த இடத்திலிருந்து எடுத்தார்கள்.

தேசம்: வேற அமைப்புகளில் இருந்த முக்கியமான ஆட்கள் உங்களுக்கு ஞாபகம் இருக்கா? குறிப்பாக விடுதலை புலிகள் இருந்த முக்கியமான ஆட்கள்

அசோக்: சென்ற அத்தியாயத்தில இதுபற்றி கதைத்திருக்கிறம். விடுதலைப்புலிகள் என்று அதன் ஆதரவாளர்கள் என்று நித்தியானந்தன், நிர்மலா , டாக்டர் ஜெயகுலரா ஜா பாதர் சிங்கராயர் பாதர் சின்னராஜா, பாதர் ஜெயதிலகராஜா இவங்க இருந்தாங்க. வேறு ஆட்கள் என்று கோவை மகேசன் டாக்டர் .தர்மலிங்கம் பெயர்கள் ஞாபகம் இல்லை இருந்தாங்க. இவங்க முன்று பேரும் சிறை உடைப்புக்கு முன்னரே பிணையில் வெளியில் வந்துட்டாங்க. நான் நினைக்கிறேன் பாதர் சிங்கராஜரும் பிணையில் வெளியில் வந்துவிட்டார் என விடுதலைப் புலிகளுக்கு தாங்கள் தனித்துவமாக சிறை உடைக்க வேண்டும் என்ற நோக்கம் இருந்தது என்று நினைக்கிறேன். சிறை உடைப்பில் அவங்கள் சப்போர்ட் பண்ணல.

தேசம்: இவர்களெல்லாம் எப்படி புலிகளின் ஆதரவாளர்களாக இருந்தார்கள் ? . இவர்கள் சிறை உடைப்பில் வெளியில் வரவில்லையா?

போராட்ட வரலாற்றை நீங்கள் அவதானித்தால் புலிகள் மோசமான கருத்தியல் கொண்டவர்கள். வலது சாரிய நிலவுடமைச்சிந்தனைகளின் எல்லா எச்சங்களையும் கொண்டவர்கள்.முற்போக்கான சிந்தனைகள் எவையும் அவர்களிடம் இருந்ததில்ல. ஆனா இந்த பாதர்களும், நிர்மலா , நித்தியானந்தன் சேர் போன்றவர்கள் புலிகளைத்தான் அதரிச்சாங்க. எல்லாம் வர்க்க கூட்டு. இதைப்பற்றி முன்னர் சொல்லியிருக்கிறன்.

நிர்மலா தவிர்ந்த மற்ற இவங்க எல்லோரும் சிறை உடைப்பில் வெளியில் வந்துட்டாங்க. நிர்மலா வரவில்லை. . புலிகள் சம்பந்தப்பட்ட ஆட்களை கொண்டு செல்லும் பொறுப்பை பரமதேவா, புளோட் வாசுதேவாவின்ற தம்பி, இவர் புலிகளில் இருந்தார். மட்டக்களப்பு சிறையில் இருந்து சிறை உடைப்புக்கு முன்னர் பிணையில் வெளியில் வந்திருந்தார். இவர்தான் பொறுப்பெடுத்தவர். இவர்களை பாதுகாத்து இந்தியாவுக்கு அனுப்பியதில் தம்பிரா ஜா அண்ணரும் முக்கியம் என நினைக்கிறன். இப்போது லண்டனில் இருக்கிறார்.சிறைக்குள் நிர்மலாவை காப்பாற்றி வெளியில் கொண்டு வரும் பொறுப்பை எடுத்தவர் புளொட் வாமதேவன். அவர் விட்ட தவறினால் , அவங்க வெளியேற முடியல்ல.
பிறகுதான் புலிகள் தனியாக அவரை மீட்டாங்க.

தேசம்: அதற்குப் பிறகுதான் உங்கட மத்தியகுழு உருவாக்கப்பட்டது.

பாகம் 12: சிறைக்குள் நடந்த படுகொலைகளும் சிறைக்கு வெளியே நடந்த படுகொலைகளும் – படுகொலை அரசியலை தேர்ந்தெடுத்த இன்றைய மார்க்ஸியர்கள்!

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! : தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 12 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 07.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

பாகம் 12

தேசம்: 83 ஜூலைக் கலவரம். இது இலங்கையில் தமிழர்களின் வரலாற்றில் மிக முக்கியமான காலப்பகுதி. விடுதலை அமைப்புகள் சாதாரண தாக்குதல்களை ஒரு ராணுவத்தையும் போலீசையும் அடித்து துவக்கு பறித்த நிலைமை போய், மிகத் திட்டமிட்ட ஒரு தாக்குதல் 83 ஜூலை 23 இரவு நடக்குது. அந்தத் தாக்குதலில் தான் 13 ராணுவ வீரர்கள் கொல்லப்படுகிறார்கள். அவர்களுடைய உடல் மறுநாள் மாலை கொழும்புக்கு கொண்டு வரப்படுகிறது. அதைத்தொடர்ந்து கலவரம் ஆரம்பிக்குது. அந்த காலகட்டத்தில் இந்த விடயங்களை நீங்கள் எப்படி அறிகிறீர்கள்? என்ன மாதிரி அந்த காலகட்டத்தில் உங்கள் உணர்வுகள் இருந்தது? எப்படி நீங்கள் அதை உள்வாங்கிக் கொண்டீர்கள்? எங்கே இருந்தீர்கள் நீங்க எந்த செய்திகளைக் கேள்விப்படும்போது?

அசோக்: ஜூலை இனக்கலவரம் ,படுகொலைகள் நடக்கும்போது எனது கிராமமான களுதாவளையில்தான் நான் இருந்தேன். அது ஒரு உணர்ச்சி கொந்தளிப்பான கவலையான மனநிலையை எங்களுக்கு தந்தது. சிங்கள அரசு மீது கடும் கோபத்தை ஏற்படுத்தியது. அன்றைக்கு பிலிப்பைன்ஸில் இருந்து வந்த வெரித்தாஸ் வானொலியில் தான் இந்த செய்திகளை அதிகமாகக் கேட்கக்கூடிய தரக்கூடியதாக இருந்தது. வேற வானொலிகளும் இல்ல. ஊடகங்களும் பெருசா இல்லைதானே கிழக்கு மாகாணத்தில். ஒன்றேயொன்று வெரித்தாஸ் வானொலி தான்.

தேசம்: அந்த நேரம் முக்கியமாக இருந்தது வெரித்தாஸ் வானொலி, பிபிசி தமிழோசை, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் செய்திகள்…

அசோக்: அன்றைக்கு இனக்கலவரம் பற்றிய ஒரளவு உண்மையான செய்திகளை கேட்கிறதென்றால் வெரித்தாஸ் வானொலியில் தான் கேட்க வேண்டும். அடுத்தது டாக்டர் ராஜசுந்தரம் படுகொலை என்பது எங்களுக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. நாங்கள் காந்தியத்தில் இருந்தவர்கள். அவரோடு பழகியவர்கள். அந்த வெலிக்கடை படுகொலை என்பது உணர்வுபூர்வமான கவலையை அளித்தது. எங்களுக்கு மனக் கொந்தளிப்பை கொடுத்தது. 53 பேர் கொல்லப்பட்டு, பெயர்களெல்லாம் அறிவித்தார்கள். வெரித்தாஸ் வானொலியில் அதை விவரமாக சொன்னார்கள். ஒரு ஊடகத்தால் எத்தகைய தாக்கத்தை கொடுக்கமுடியும் என்பதை அக்காலங்களில உணர்ந்து கொள்ளமுடிந்தது. உண்மையிலேயே அந்த இரவுதான், நிறைய பேரை இயக்கங்களுக்கு போக வேண்டும் என்ற உணர்வை கொடுத்ததும், சிங்கள பேரினவாத அரசுக்கு எதிராக போராட வேண்டும் சிந்தனையை கொடுத்ததும் அதுதான். இந்த படுகொலைகள் எங்க கிராமத்தில் இளைஞர்கள் மக்கள் மத்தியில் பெரிய சோகத்தை கோபத்தை, கொடுத்தது. மற்றக் கிராமங்களைப் பற்றி தெரியல. எங்க கிராமத்தில் அரசியல், இலக்கியம், சமூக அக்கறை கொண்ட குருப் ஒன்று இருந்தது ஆரம்பத்திலிருந்து. அவங்களுக்கு இயக்கங்களுக்கு போவதற்கான தூண்டுதலாக இது இருந்தது. பிறகு எங்கட கிராமத்தில் இருந்து நிறைய தோழர்கள் புளொட்க்கு வந்தார்கள்.

தேசம்: அந்த சம்பவத்துக்குப் பிறகு..

அசோக்: எங்கட கிராமத்து பையன்கள் இனவாத தாக்கத்தையோ, இனவாத ஓடுக்குமுறைகளையோ நேரடியாக அனுபவிக்காதவர்கள். கருத்தியல் சார்ந்து பல்வேறு ஒடுக்குமுறைகள் பற்றி அறிந்திருந்தார்களேயொழிய ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படாத ஆட்கள். அவர்களை சிந்திக்க வைத்தது இப்படியான சம்பவங்கள் தான்.

தேசம்: தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தில் நீங்கள் முக்கியமான உறுப்பினராக இருக்கிறீர்கள். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் பாரிய தாக்குதல்கள் எதையும் பெரிய அளவில் செய்யவில்லை. நான் நினைக்கிறேன் விமானப்படை தாக்குதல் ஒன்றுதான் தமிழிழ மக்கள் விடுதலைக் கழகம் செய்தது. அதுவும் திட்டமிடப்படாத தாக்குதல் என்று நினைக்கிறேன்.

அசோக்: யாழ்ப்பாணத்தில் ஆனைக்கோட்டை பொலிஸ் நிலையம், குறிகட்டுவான் கடல்படையினர் மீதான தாக்குதல் ஆரம்பத்தில் நடந்தது. இந்த தாக்குதல்கள் விமர்சனங்களுக்கு உரியவை.

தேசம்: அப்படியான சூழலில விடுதலைப் புலிகள் இப்படி ஒரு பாரிய தாக்குதலை செய்தது சம்பந்தமா கழகத்தில் எப்படி உணரப்பட்டது. கழகமும் இப்படியான தாக்குதல்களை செய்ய வேண்டும் என்ற நிலைப்பாடுகள் முன்தள்ளப்பட்டதா?

அசோக்: தனிநபர் பயங்கரவாதம், தனிநபர் நடவடிக்கைகள், ராணுவத்தின் மீதான தாக்குதல் தொடர்பாக தெளிவான பார்வை, சுத்த ராணுவக்கண்ணோட்டத்திக்கு எதிரான கருத்தியல் சார்ந்த அரசியல் பார்வை எங்கள் பலரிடம் இருந்தது. இந்தத் தாக்குதல் வெறுமனே அரசாங்கத்தை பலமடையச் செய்யும் என்பதும், எங்களின் போராட்டத்தை பலவீனமடையச் செய்யும் என்பதும், சிங்கள மக்கள் மத்தியில் இனவாதத்தை வளர்ப்பதற்கு பயன்படுத் தப்படும் என்பதும் தெரியும். எங்கட போராட்டம் மக்களை அனுசரிப்பதனூடாக, அரசியல் மயப்படுத்தப்பட்ட மக்கள் போராட்டத்துக்கூடாகத்தான் கொண்டு வரவேண்டுமென்று நாங்க விரும்பினம். எங்களுக்கு சீனா, வியட்நாம், கியூபா போராட்டங்களும் படிப்பினைகளும் முன்மாதிரியாக இருந்தது தானே.

தேசம்: அந்த நேரம் இவைகள் பற்றி எல்லாம் நீங்கள் வாசித்திருக்கிறீர்களா…

அசோக்: ஓம். அனேகமாக கழகத்தில் நிறைய தோழர்களிடம் அரசியல் வாசிப்பு இருந்தது. மக்கள் இராணுவம், முண்ணனிப்படை பற்றியெல்லாம் அரசியல் அறிவு ஒரளவு கொண்டவர்களாக நாங்க இருந்தோம். எங்களுக்கு தெரியும் இப்படியான தாக்குதல்கள் அரசாங்கத்தை பலமடைய வைக்கும். எங்களை பலவீனமடைய வைக்கும் என்று. அதுல தெளிவா இருந்தனாங்கள். புலிகள் செய்றதால நாங்களும் செய்ய வேண்டும் என்ற அபிப்ராயம் எங்களிடம் இல்லை. ஆனா புளொட்டில் பல தோழர்களிடம் புலிகளைப்போல் தாக்குதல் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அடுத்தது மக்கள் போராட்டம் என்பதில் நாங்கள் தெளிவாக இருந்தனாங்கள். காந்தியமும் அதுதானே. மக்கள் மயப்படுத்தல்… காந்தியத்தை புளொட் பயன்படுத்தியதற்கான காரணமும் அதுதானே. காந்தியத்துக்கூடாக துரிதமாக மக்களை அரசியல் மயப்படுத்தலாம், அதை அடிப்படையாக பயன்படுத்தலாம் என்ற போக்குத்தான் எங்களிடம் இருந்தது. இது தவறான போக்கு என்பது வேறு.

இதுபற்றி முன்னமே கதைத்திருக்கிறம். யாழ்ப்பாணம் தாண்டிய ஏனைய பிரதேசங்களில் அரசியல் பாசறைகள் நிறைய நடத்தியிருக்கிறோம். அரசியல் வாசிப்புகள் நிறைய இருந்தது. அப்போ ஓரளவு எங்களுக்கு தெரிந்தது இவ்வாறான தாக்குதல்கள் எந்தவிதமான விடுதலையையும் பெற்றுத் தராது என்று. இயக்கங்கள் எல்லாத்தையும் வென்று தரும் என்ற எண்ணப்பாட்டை மக்களிடம் உருவாக்கி, மக்களை வெறும், பார்வையாளர்ளாகவும் ஆக்கிவிடும் என்று நினைத்தோம். மக்கள் மயப்படுத்தப்பட்ட முழுமையான போராட்டம் அவசியம் என்பதில் மிகக் கவனம் இருந்தது.

அடுத்தது விடுதலைப்புலிகள் தொடர்பான விமர்சனப் பார்வை எங்களிடம் இருந்தது. இவ்வாறான தாக்குதல்களைத்தான் அவர்கள் செய்வார்கள் என்று. அவர்களிடம் மக்களை அரசியல் மயப்படுத்துவது என்ற சிந்தனை இருக்கவில்லை தானே. அவங்கள் சுத்த இராணுவாதம் கொண்ட ஒரு மரபு ரீதியான ராணுவமாகத்தான் வளர்ந்து வந்தார்கள்.

தேசம்: அதை நீங்கள் அந்தக் காலகட்டத்தில் உணர்ந்திருந்தீர்களா?

அசோக்: அந்தக் காலகட்டத்திலேயே நாங்கள் தெளிவாக உணர்ந்து இருந்தம். புலிகள் தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் இருந்தது. புலிகளோடு இருந்த ஆட்கள் தானே, புளொட்டுக்குள்ள இங்கே வந்தவர்கள். அவர்கள் புலிகள் பற்றிய பல விமர்சனங்ளை சம்பவங்களை சொல்வாங்க.

தேசம்: புலிகளுக்கு உள்ளேயே நடந்த கொலைகள் தொடர்பாய் அது சம்பந்தமாக என்ன அறிந்திருந்தீர்கள்?

அசோக்: கூடுதலாக புலிகளுக்குள் இருந்து வந்தவர்களுடைய அபிப்பிராயம்… அங்க நடந்த தனிநபர் படுகொலைகள் தொடர்பாக கடும் விமர்சனம் இருந்தது. கணேசய்யர், நாகராஜ் வாத்தி, உமாமகேஸ்வரன், சந்ததியார், சுந்தரம், கண்ணன் நிறைய பேரிட்ட கொலைகள் தொடர்பாக மிக அதிருப்தி இருந்தது. புலிகளுடைய தனிப்பட்ட தாக்குதல்கள், தனிநபர் பயங்கரவாதம். பிரபாகரனின் தன்னிச்சையான போக்குகள்… கொலை செய்யப்பட்ட முறைகள்…

தேசம்: சில கொலைகளை சொல்லுங்கள்

அசோக்: பற்குணம், மட்டக்களப்பு மைல்கல், கண்ணாடி பத்மநாதன்… அது ஒரு நீண்ட கொலை பட்டியல். எல்லாம் சந்தேகத்தின் அடிப்படையிலும், இந்த தனிநபர் தாக்குதலுக்கு ஊடாக, படு கொலைகளுக்கு ஊடாக இயக்கத்தை முன்னெடுத்துச் செல்லலாம் என்ற ஒரு நம்பிக்கையும் தான். அது கடைசி வரைக்கும் நீடிக்குது.

தேசம்: இந்தக் கொலைச் சம்பவங்கள் நடந்துகொண்டு இருக்கேக்கையும் நீங்கள் முதலில் குறிப்பிட்ட மாதிரி ராகவன், நித்தியானந்தன், நிர்மலா எல்லாரும் அப்பவும் விடுதலைப் புலிகளோடு தான் இருக்கினமா?

அசோக்: நித்தியானந்தன், நிர்மலா அந்தக் காலகட்டத்தில் இல்லை. அதுல ராகவன் மாத்திரம்தான் ஆரம்பகால உறுப்பினராக மிக நெருக்கமாக பிரபாகரனோடு இருந்து வாரார். இவர்கள் பிற்காலத்தில்தான். நான் நினைக்கிறேன், 80க்கு பிற்பாடுதான் நிர்மலா, நித்தியானந்தன் எல்லாம் அவர்களுடைய ஆதரவாளர்களாக மாறியிருப்பார்கள் என. இவர்களும் ஒரு முழுநேர ஊழியர்கள் இல்லை தானே. ஆதரவு தளத்தை வழங்கியவர்கள். பிறகு புலிகளுக்கு உதவி செய்தார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறைக்குள்ளே போனார்களேயொழிய, முழு நேர உறுப்பினர்களாக இருக்கவில்லை. கருத்தியல் சார்ந்து அறிக்கைகள் எழுதுவதற்கு, கருத்தியல் சார்ந்து விளக்கம் கொடுக்கிறதுக்கு, நியாயப்படுத்துவதற்கு, ஒரு கிரவுட் தேவைதானே. அதற்கு இவங்க தேவைப்பட்டாங்க. அந்த நேரத்தில உணர்வுகள் என்ற ஒரு பத்திரிகையும் யாழ்ப்பாணத்தில புலிகள் வெளியிட்டவர்கள். அப்ப அதற்கு கட்டுரை எழுதுவதற்கான தேவையும் இருந்திருக்கும். ஆனா இவர்கள் சிறையில் இருந்து தப்பி இந்தியா சென்ற பின் எல்ரீரீஈயில் முழு நேரமாக வேலை செய்கிறாங்க.

ஒரு சந்தேகம் என்னிடம் உண்டு. அந்த நேரத்தில ஈபிஆர்எல்எப், ஈரோஸ், புளொட் என மார்ச்சியம் பேசிய இயக்கங்கள் இருக்கும் போது, வலதுசாரித்தனமும், தனிநபர் பயங்கரவாதத்தையும், படுகொலைகளையும் தங்கள் அரசியலாக் கொண்ட புலிகளுக்கு இவங்க எப்படி ஆதரவளிச்சாங்க என்று. ராகவனை விட்டுத்தள்ளுங்கள். அவர் அன்று தொடக்கம் இன்று வரை அதிகார நலன்களோடு, அந்த நபர்களோடு கூட்டுச்சேரும் ஒரு அடிமை மனநிலை கொண்டவர். அப்பவும் சரி இப்பவும் சரி நேர்மையற்ற மனிதர் அவர். நான் அவரை அறிந்த வரை சுயமான அரசியல் தேர்வு அவரிடம் இருந்ததில்லை. இதைப்பற்றி முன்னமே கதைத்திருக்கிறன். ஆனா நித்தியானந்தன் சேர் , நிர்மலா அப்படியானவர்கள் அல்ல. அரசியல் கருத்தியல் சார்ந்து சிந்திக்கக் கூடியவர்கள். அவர்கள் புலிசார்பு நிலையை எடுத்ததிற்கான காரணங்கள் இருக்கக்கூடும். இவர்கள் எல்லோருடனும் உரையாடல் செய்ய வேண்டும். புலிகள் படுகொலைகளையும், அராஜ கங்களையும் செய்த காலங்களில் இவங்க புலிகளோடு இருந்திருக்காங்க.

தேசம்: 83 ஜூலை படுகொலையில் கொல்லப்பட்ட உறுப்பினர்களில் யாரை யாரையெல்லாம் அறிந்து வைத்திருந்தீர்கள்?

அசோக்: டாக்டர் ராஜசுந்தரம் அவருடன் மாத்திரம் நெருக்கம் இருந்தது.

தேசம்: காந்தியத்துடன் இருந்தபடியால்…

அசோக்: ஆனால் நிறைய பேரை கேள்விப்பட்டிருக்கிறோம். நடேசானந்தன், குட்டிமணி, ஜெகன், கிருஷ்ணகுமார் என்று பற்றி எல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன். கொலை செய்யப்பட்டவர்கள் தொடர்பாக நேரடி உறவு இல்லையே ஒழிய, அவங்களுக்கும் எங்களுக்கும் உணர்வுபூர்வமான நெருக்கம் இருந்தது. எங்கட தோழர்கள், போராளிகள், எங்களுக்காக சிறைக்கு சென்றவர்கள் என்ற உணர்வு ஒன்று இருந்தது. மற்றது படுகொலை செய்யப்பட்ட முறைகளும் வெளிவர வெளிவர பெரிய தாக்கம் வந்தது. குட்டிமணி மீது நடத்தப்பட்ட அந்த கொடுரமான படுகொலை, அது ஒரு இனவாதத்தின் உச்சகட்டமாக தான் நாங்க பார்த்தோம். இனவாத அரசின், ஒரு அதிகார வர்க்கத்தின் துணையோடு நடந்த திட்டமிட்ட படுகொலைகள். பேரினவாத அதிகாரவர்க்கத்தின் இனவாத படுகொலையாக தான் பார்த்தோம்.

தேசம்: இந்தப் படுகொலைகளைத் தொடர்ந்து எவ்வாறான அரசியல் நடவடிக்கைகளை இயக்கங்கள் கையில் எடுத்தது?

அசோக்: எல்லா மட்டங்களிலும் இலங்கை அரசு மீது இருந்த கோபம், கொந்தளிப்பு இயக்கங்களுக்கு சாதகமாக அமைந்ததுவிட்டது. இளைஞர்கள் மத்தியில், இயக்கங்களின் அரசியல் அற்ற வெறும் உணர்ச்சியூட்டல் நடந்தது. இது இயக்கங்கள் வீங்குவதற்கும், போராளிகளின் எண்ணிக்கை கூட்டுவதற்கும் சாதகமாக போய்விட்டது. அரசியல் சார்ந்து நடக்கவில்லை. வெறும் சிங்கள மக்களுக்கு எதிரான பிரச்சாரமாக, ஒரு மனநிலையை கட்டமைக்கிற மாதிரி சில இயக்கங்கள் செய்யத் தொடங்கிற்று. அது இன்னொரு இனவாதம்தானே. இளைஞர்கள் வர வர பின்தளத்திற்கு அனுப்பபட்டடார்களே தவிர தேர்வுகள், பரிசீலனைகள் எதும் இருக்கல்ல. பிறகு இந்தியாவும் டிரெய்னிங் கொடுக்க தொடங்கிவிட்டது.

தேசம்: வெலிக்கடை சிறைச்சாலை தொடர்ந்து கொழும்பில் கலவரம் வெடிக்குது. கொழும்பிலிருந்து ஆயிரக்கணக்கானவர்கள் வடக்கு-கிழக்குக்கு வாரார்கள். அவர்களுடைய பராமரிப்பு அந்த விடயங்களில் நீங்கள் ஈடுபட்டிருக்கிறீர்களா? அல்லது இயக்கங்கள் அவர்களை பராமரிக்கிறதில் புனர்வாழ்வளித்து ஈடுபட்டிருக்கின்றனவா?

அசோக்: ஓம். வவுனியா முல்லைத் தீவுக்கு வந்த நிறையபேருக்கு நாங்கள் பொறுப்பெடுத்து செய்தம்.

தேசம்: எவ்வாறான வேலைத்திட்டங்கள்? நீங்கள் அல்லது அந்த இயக்கங்கள் காந்தியம் ஈடுபட்டு இருக்குதா?

அசோக்: அதுல பிரச்சனை என்னவென்று கேட்டால், வவுனியா முல்லைத்தீவில் காந்தியம் தடை செய்யப்பட்டு விட்டது. வவுனியாவில் நடந்த பிரச்சனைக்கு பிறகு டேவிட் ஐயா ஆட்கள் கைது செய்யப்பட்டவுடன் காந்தியம் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு எல்லாத்திலயும் தடைசெய்யப்பட்டது. மட்டக்களப்பில் இயங்கினது.

அங்க எந்த தடையும் இல்லை. அதற்கு என்ன காரணமோ தெரியல. சிலவேளை, வேறு பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்ததோ தெரியல. அங்க இயங்கியது. மட்டக்களப்பில் சகல வேலைத் திட்டங்களும் நடந்தது. குடியேற்றங்கள், சத்துணவு திட்டம், காந்தியத்தின் சகல வேலைத் திட்டங்களும் கிழக்கு மாகாணத்தில் நடந்தது. குறிப்பாக மட்டக்களப்பில்.

தேசம்: கிட்டத்தட்ட மட்டக்களப்பில் நடந்த காந்தியத்தின் செயற்பாடு என்பது, புளொட்டின் செயற்பாடு தான்…

அசோக்: ரெண்டும் இணைந்த செயற்பாடு தான். ஆனால் நாங்கள் குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு மட்டக்களப்பு காந்திய செயற்பாடுகளுக்கு நாங்கள் போகவில்லை. நாங்கள் தேடப்படுற ஆட்கள் தானே. நான் தேடப்படுறேன், ஈஸ்வரன் தேடப்படுது. வாசுதேவா மாத்திரம்தான் பிணையில் வரக்கூடியதாக இருந்தது.

தேசம்: வெலிகடை சம்பவத்தின் போது கொல்லப்பட்டவர்கள் தவிர வேற யார் யார் சிறையில் இருந்தவை…

அசோக் : நிறையப் பேர் இருந்தவங்க . எல்லா இயக்கங்களையும் சேர்ந்த போராளிகள், இயக்க ஆதரவாளர்கள், பொதுமக்கள் என கைதுசெய்யப்பட்ட பலரும் இருந்தனர். உயிர் தப்பிய அவங்களைத்தான் மட்டக்களப்பு சிறைக்கு மாத்திராங்க.

தேசம் : அதற்குப் பிறகும் கைதுகள் நடந்தனவா?

அசோக்: பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுகள் நிறைய நடந்தது. வெலிக்கடை படுகொலைகளுக்கு பின்னான காலங்களில்தான் நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்படுகிறார்கள்.

தேசம்: அதுல முக்கியமான ஆட்கள் யார் யார் கைது செய்யப்படுகினம்?

புளொட்டின் தோழர்கள் சலீம், சத்தியமுர்த்தி, ஜெயகாந்தன், ரமணன், மீரான் மாஸ்டர், லவன், மாறன், சிவா, கல்லாறு சதீஸ், சண் தவராஜா, வைத்தியலிங்கம், சக்தி வடிவேல், மாணிக்கம்பிள்ளை, துரைசிங்கம் இப்படி நிறைய தோழர்கள் கைது செய்யப்படுகிறார்கள். எங்கள் கிராமத்தில் புளொட் தோழர்கள் நிறையப் பேர் கைது செய்யப்ப டாங்க. நல்லீஸ், கராட்டி அரசன், வன்னியசிங்கம், பேரின்பம், சிவஞானம், பூபாலசிங்கம், தில்லையம்பலம் செல்லக்கிளி, கனகசூரியம் இப்படி நிறையத் தோழர்கள். ஆனா இவர்கள் வெலிக்கடை சிறையில் அடைக்கப்படவில்லை. பூசா இராணுவ சிறை முகாம்மில்தான் அடைக்கப்பட்டாங்க… தோழர் கராட்டி அரசன் கராட்டியில் பிளாக் வெலிட் எடுத்தவர். திறமையான தோழர். இவரை பூசா சிறையில் வைத்து இராணுவம் அடித்துக் கொன்றது.

இவரின்ர தம்பி அவரை நாங்க செல்லக்கிளி என்றுதான் கூப்பிடுவோம். அவரும் பூசா சிறையில் இருந்தவர். வெளியில் வந்தவுடன் புலிகள் படுகொலை செய்தாங்க.

வன்னியசிங்கமும் பூசா சிறையிலிருந்து வெளிவந்த பின் அவரையும் புலிகள் சுட்டுக் கொன்றாங்க. அவரின் தலையை வெட்டி எடுத்து, அவரின் உடலை தெருத் தெருவாக டிரக்டரில் கட்டி இழுத்தாங்க. செல்வரெத்தினம் என்றொரு தோழர் கைது செய்யப்பட்டு பொலிசாரல் சுட்டுக் கொல்லப்பட்டார். பல தோழர்கள் பயங்கரமான சித்திரவதைகளை அனுபவிச்சாங்க. ரவிராஜ் என்ற தோழர் இன்றைக்கும் இந்த சித்திரவதைகளினால பாதிக்கட்ட நிலையிலதான் வாழ்கிறார்.

யோசித்துப் பாருங்க. எவ்வளவு கொடூரம். இதையெல்லாம் நினைத்தால் எனக்கு பைத்தியம் பிடித்துவிடும். இந்த தோழர்களையெல்லாம் எங்கேயாவது பதிவு செய்யணும் என எண்ணி இருந்தன். இந்த போராட்டத்தில தங்கட வாழ்கையை இழந்தவங்க இவங்க. இவங்களெல்லாம் தோழர்கள் மாத்திரம் இல்ல, என்னுடைய இளமைக்கால நண்பர்கள் இவங்க.

தேசம்: ஏற்கனவே வெலிக்கடைச் சிறையில் இருந்தவர்களை மாத்திரம்தான் மட்டக்களப்பு சிறைக்கு கொண்டு வரார்களா?

அசோக்: ஓம். மட்டக்களப்புக்கு கொண்டு வரப்படும் போது, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட வெலிக்கடை படுகொலையில் உயிர் தப்பியவர்களைத்தான், பழைய ஆட்களைத்தான் கொண்டு வாறாங்க. வெலிக்கடை சிறையில் படுகொலை நடந்தவுடன், அவங்களுக்கு பாதுகாப்பின்மை இருக்குது. தற்காலிகமாக அவங்களை மட்டக்களப்பு சிறையில் வைத்துக் கொண்டு, இன்னுமொரு சிறைக்கு மாற்றுவதற்கு, அவகாசத்துக்காக மட்டக்களப்பு சிறைக்கு கொண்டு வரார்கள். இங்க குறிப்பிட்ட காலம் தான் வைத்திருக்க முடிவு செய்திருந்தார்கள். அதற்குப்பின் வேறு சிறைக்கு மாத்துவது அவர்களின்ர திட்டம். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட் ட புதிய போராளிகளை, நிறைய தமிழ் மக்களை பூசா சிறையில் தான் அடைத்தார்கள். எங்கட கிராமத்திலேயே நிறைய பேரை கைது செய்திருக்கிறார்கள். பூஸாவில் எங்கட நிறைய தோழர்கள் இருந்திருக்கிறார்கள்.

தேசம்: இந்த விடுதலைப் போராட்டத்தில் முக்கியமாக கருதப்பட்ட கனபேர் அந்த காலகட்டத்தில் மட்டக்களப்பு சிறையில் இருந்திருக்கிறார்கள். நிர்மலா… நித்தியானந்தன்…

அசோக்: டேவிட் ஐயா, ராஜன், டக்ளஸ் தேவானந்தா, சுகுதோழர், வரதராஜபெருமாள், நித்தியானந்தன், பாதர் ஜெயகுலராஜா, தங்க மகேந்திரன்.

தேசம்: வேற யார் யார்…

அசோக்: பனாக்கொடை மகேஸ்வரன், ஈரோஸ் அந்தோனிப்பிள்ளை, புளொட்டில் மாணிக்கதாசன், அற்புதம், வாமதேவன், சுபாஸ், மகேந்திரன் மாமா இவங்களெல்லாம் சிறைக்குள்ள இருந்தவங்க.

தேசம்: இவர்களெல்லாம் வெலிக்கடை சிறையில் இருந்து மட்டக்களப்புக்கு மாற்றப்படுகிறார்கள்…

அசோக்: ஓம்…

தேசம்: இவர்கள் இந்த வெலிகடை படுகொலையில் இருந்து தப்பிய ஆட்கள்…

அசோக்: படுகொலையில் இருந்து தப்பி ஆட்கள் அவ்வளவு பேரும் தான், மட்டக்களப்பு சிறை உடைப்புக்குள்ளால வெளியில வாறார்கள்.

வெலிக்கடை சிறையிலிருந்து மட்டக்களப்பு சிறைக்கு மாற்றும் போது எல்லா இயக்கங்களை சேர்ந்தவங்களும் அதில் இருக்காங்க. அதுல ஈபிஆர்எல்எஃப் தோழர்கள் இருந்திருக்கிறார்கள், ஈரோஸ் தோழர்கள் இருந்திருக்கிறார்கள், தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் ஆட்கள் இருந்திருக்கிறார்கள், புலிகளின் ஆட்கள் இருந்திருக்கிறார்கள்.

தேசம்: மட்டக்களப்பு சிறையை உடைக்க வேண்டும் என்ற அந்த எண்ணக்கரு எப்படி உருவாகுது?

அசோக்: நான் சொன்னேன் தானே தற்காலிகமாகத்தான் இங்க வைத்திருக்கிறார்கள் என்று.

தேசம்: இதுல முக்கியம் என்னென்றால், வெலிக்கடை சிறையில் இருந்த ஆட்கள் எல்லாரும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முக்கியமானவங்க. எஞ்சியவர்களும் மிக முக்கியமான ஆட்கள் தான்.

அசோக்: அவர்களும் வேறு சிறைக்கு மாற்றப்பட்டு படுகொலை செய்யப்பட்டு அழிக்கப்பட்டிருந்தால், போராட்டத்திற்கான முன்னெடுப்புகள் இல்லாமல் போயிருக்கும். ஏதோ ஒரு வகையில் மிக முக்கியமான ஆட்கள் இவங்க… காலப்போக்கில் பிற்காலத்தில் அவர்கள் தொடர்பான விமர்சனங்கள் இருந்தாலும் கூட, அன்றைய காலகட்டத்தில் சிறைக்குள் இருந்த அவ்வளவு பேரும் மிக மிக முக்கியமான ஆட்கள். ஈழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகள். அவர்கள் இன்னொரு சிறைக்கு மாற்றப்பட்டு இன்னொரு படுகொலை நடந்திருந்தால் ஈழப் போராட்டத்தின் வரலாறு அன்றைக்கு அழிந்து போயிருக்கும். அப்போ இன்னொரு சிறைக்கு மாற்றுவதற்கு முன்னர் இவங்களை வெளியில் எடுக்க வேண்டிய தேவை எல்லா இயக்கங்களுக்கும் இருந்தது. புளொட்டுக்கும் அந்த ஐடியா இருந்தது. ஈபிஆர்எல்எஃப் தோழர்களுக்கும் அந்த ஐடியா இருந்தது. புளொட் குறிப்பிட்ட காலத்துக்குள்ள அதை செய்யவேண்டும் என்று சொல்லி அதற்கான வேலைகளை தொடங்கினது. அதற்கான ஆயுதங்கள் எங்களிடம் இல்லாமல் போய்விட்டது.

தேசம்: மட்டக்களப்பு சிறை உடைப்பு எப்ப நடக்குது…

அசோக்: 83 செப்டம்பர். எங்களிட்ட ஆயுதங்கள் இல்லை. குறிப்பிட்ட சில ஆயுதங்கள் தான் இருந்தது. ரகுமான் ஜான் தோழர் ஆயுதங்கள் எடுத்து வருவதற்கு இந்தியாவுக்கு போறார். போயிட்டு, அவர் வெறும் கையோடுதான் வாறார். வந்து சொல்லுறார் அங்க ஆயுதங்கள் இல்லை என்று. ரகுமான்ஜான் தோழர் மன்னாரில் வந்திறங்கிய போது கடற்படையின் சுற்றிவளைப்பில் இருந்து தப்பி, நேரடியா எங்கட வீட்ட தான் வாறார் களுதாவளைக்கு. அன்றிரவு எங்கட வீடு பொலிசால் ரவுண்டப் பண்ணுப்படுது. அன்று இரவு நானும் ரகுமான்ஜானும் வீட்டில் தங்கியிருந்தா நாங்களும் மாட்டுப்பட்டு இருப்போம்.

தேசம்: ஏற்கனவே நீங்கள் தேடப்படுற ஒரு ஆளாக இருந்தபடியால்…

அசோக்: எப்படியோ பொலிசிக்கு தெரிந்து விட்டது. அன்றைக்கு வேறு ஒரு வீட்டில இருந்தபடியால் தப்பி விட்டோம். பின் தளத்திலிருந்து ஆயுதங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த எங்களுக்கு தோழர் ரகுமான் ஜான் ஆயுதங்கள் கிடைக்கவில்லை என்று சொன்னது ஏமாற்றமாக இருந்தது. குறிப்பிட்ட காலத்தினுள் சிறை உடைப்பு செய்ய வேண்டும். காலம் போனால், வேறு சிறைக்கு மாற்றி விடுவார்கள். பிறகு ஒன்றும் செய்ய இயலாது. பிறகு ஈபிஆர்எல்எஃப் தோழர்களுக்கும் இது சம்பந்தமாக ஆர்வம் இருக்கின்றபடியால் அவங்களோட தொடர்பு கொள்கிறோம். குறிப்பாக யோகராஜ் என்று எங்களுக்கு நெருங்கிய தோழராக இருந்தவர். அவரோடதான் முதலில் தொடர்பு கொள்ளுகிறேன். அவர் சொல்கிறார் எங்களிட்ட ஆயுதம் இருக்கு சேர்ந்து செய்யலாம் என்று.

அடுத்தது சிவலிங்கம் என்று ஒரு தோழர். அருமையான தோழர். தோழர் பாலா, தோழர் கணேஸ் இவர்கள் எல்லாம் ஈபிஆர்எல்எஃப் தோழர்கள். அதில் குன்சி தான் முக்கியமானவர். குன்சியோடு வாசுதேவா தொடர்பு கொள்கிறார். குன்சிக்கும் வாசுதேவாவுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடந்தது சேர்ந்து செய்யலாம் என்று சொல்லி.

தேசம்: புளொட்டில் மட்டக்களப்பு சிறை உடைப்பை மேற்கொள்வதில் யார் முன்னுக்கு நின்று செயற்பட்ட ஆட்கள்…

அசோக்: முக்கியமாக தோழர் வாசுதேவாதான். மற்றது தோழர் பார்த்தன். சிறையிலிருந்து வந்தவங்களை பாதுகாத்து, இந்தியாவுக்கு கொண்டு சென்றதில் தோழர் பார்த்தனின் பங்களிப்பு முக்கியமானது.

வாசுதேவா மட்டக்களப்பில் சிங்கள வாடி என்ற இடத்தை சேர்ந்தவர். அங்க இருக்கிற பல பேர் மட்டக்களப்பு சிறையில் ஜெயிலராக இருக்கிறார்கள். இயல்பாகவே வாசுதேவுக்கும் இந்த ஜெயிலர்களுக்கும் இடையில் உறவு ஒன்று இருந்தது. சிறையில் நடக்குற எல்லாம் இந்த தமிழ் ஜெயிலர்களுக்கூடாக தெரியவரும். அதில முக்கியமானவர் கிருஷ்ணமூர்த்தி என்றவர். அவர்
வாசுதேவாவின் நல்ல ஃப்ரெண்ட். சிறை உடைப்புக்கு பிற்பாடு இவரும் புளொட்டிக்கு வந்து, பி எல் ஒ ட்ரெயினிங் எடுத்தவர். தோழர் பிரசாத் என்று சொல்றது. புலிகள் தான் அவரை பிறகு மட்டக்களப்பில் வைத்து சுட்டுக் கொன்றார்கள். மிகத் திறமையான தோழர். உண்மையிலேயே அந்த ஜெயில் உடைப்புக்கு பெரும் உதவியாக இருந்தவர் இவர்தான்.#

இவருக்கூடாகத்தான் உள்ளே இருந்தவர்கள் தப்புவதற்கான தற்காப்பு ஆயுதங்கள், இரண்டு ரிவோல்வர்கள், வடிமைக்கப்பட்ட மெசின் கன், சாவிகள் கொடுக்கப்பட்டன.

தேசம்: கிட்டத்தட்ட ஜெயில் உடைப்பு என்பது திறந்துவிடப்பட்டது மாதிரித்தான்…

அசோக்: ஆனால், அதற்கான தயாரிப்புகள் நிறையச் செய்யப்ப ட்டது. எங்களிடம் ஆ யுதங்கள் இல்லை. ரிவோல்வர்கள் இருந்தன. இவற்றை வைத்து ஒன்றும் செய்யமுடியாது. ஈபிஆர்எல்எஃப் தோழர்கள் ஆயுதங்கள் தங்களிடம் இருப்பதாக சொன்னாங்க. பிறகுதான் தெரியும் அவர்களிடம் ஆயுதங்கள் இல்லை என்று. ஆயுதம் இல்லாதபடியால், குறைந்தபட்சம் ஆயுதம் தேடவேண்டும் என்று சொல்லி கிராமங்களிலிருந்து சோட் கண்களை எடுத்தோம். அதுல வரதன், வைத்திலிங்கம், விஜி, ஜீவா அகஸ்டின், நிறைய தோழர்கள் ஈடுபட்டார்கள்.

தேசம்: அதுல ஈஸ்வரனும்…

அசோக்: ஈஸ்வரன், கராட்டி அரசன், நான் சில இடங்களில் ஆயுதங்களை சேகரித்தோம். அதற்குப் பிறகு அரசாங்கம் மிகக் கடுமையாக சொல்லிவிட்டது விவசாயிகள் இருக்கிற ஆயுதங்களை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று.

தேசம்: நீங்கள் விவசாயிகளிடம் இருந்து ஆயுதங்களை பறிக்க முயற்சித்தீர்கள்.

அசோக்: அது ஒரு பிழையான காரியம்தான். அன்றைய நேரத்தில் அதைப்பற்றி யோசிக்கவில்லை. சிறையிலிருப்பவர்களை எடுக்க வேண்டும் என்ற நோக்கம்தான் முக்கியமாகபட்டது.

மட்டக்களப்பு ஜெயில் உடைப்பில் நான், ஈஸ்வரன் நேரடியாக பங்கு கொள்ளவில்லை… அப்போது நாங்கள் பொலிசாரால் தேடப்பட்டுக் கொண்டிருந்தோம்… முழுக்க முழுக்க ஈடுபட்டது வாசுதேவாதான். இந் நேரத்தில் தோழர் மாசிலாமணியின் பங்களிப்பை நினைவு கூறுவது மிக அவசியம். அவர்தான் சிறைச்சாலை கதவு திறப்புக்களை செய்து உதவியவர். அவரின் இந்த உதவியின்றி சிறைச்சாலை கதவுகளை திறந்திருக்க முடியாது.

அவர் லேத் மெசின் கராஜ் வைத்திருந்தார். அவர் கடைசியாக புளொட்டில வந்துட்டார். இப்ப கனடாவில இருக்கிறார் என்று நினைக்கிறேன். தப்பிச் செல்வதற்கு காந்திய வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. இது பின்னர் பொலிசிக்கு தெரியவந்து மட்டக்களப்பு காந்தியத்தை தடைசெய்துவிட்டாங்க. பொறுப்பாக இருந்த சின்னத்துரை மாஸ்ரரும், துரைசிங்கமும் கைது செய்யப்பட்டாங்க.

இந்த சிறை உடைப்பில், தோழர்கள் சக்தி வடிவேல், சங்கர், வரதன், வைத்திலிங்கம் கணன், கராட்டி அரசன், விஜீ போன்றோர் முக்கியமானவங்க. ஈபிஆர்எல்எப் தோழர்களும் மிகமுக்கியமானவங்க. குறிப்பாக தோழர் குன்சி. இவர்கள் எல்லோருடைய ஒத்துழைப்போடுதான் மட்டக்களப்பு சிறையுடைப்பு நடைபெற்றது. பிறகு தோழர்கள் சக்தி வடிவேல், வைத்தியலிங்கம், மாணிக்கம்பிள்ளை போன்றவங்ககளும் இது தொடர்பாக கைது செய்யப்பட்டாங்க…

தேசம்: அந்த நேரத்தில் புளொட் தாம் செய்ததாக உரிமை கோரி அறிக்கை விட்டதென நினைக்கிறேன்.

அசோக்: புளொட் முழுக்க உரிமை கோர இயலாது. அது உண்மையிலேயே புளொட்டும், ஈபிஆர்எல்எஃப் பும், சேர்ந்து செய்த சிறை உடைப்பு தான். யாழ்ப்பாணத்தில் புளொட் அறிக்கை விட்டு, பின்பு ஈபிஆர்எல்எஃப் ஒரு அறிக்கை விட, முரண்பாடு வந்து அறிக்கைப் போராகவே மாறிவிட்டது. இரு அமைப்புக்களும் புரிந்துணர்வு அடிப்படையில் தோழமையோடு இணைந்து கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்க முடியும்.

புளொட் தலைமையினால் அது முடியாமல் போயிற்று. இந்த அறிக்கைப் போர் தோழமையோடு இருந்த ஈபிஆர்எல்எப் தோழர்களுக்கும் எங்களுக்குமிடையில் முரண்பாட்டை ஏற்படுத்தி, பரஸ்பரம் நம்பிக்கையின்மையையும் உருவாக்கி விட்டது.

தேசம்: இவ்வாறான பல முரண்பாடுகள் உரிமை கோரல்கள் பல எழுந்திருக்கு…

அசோக்: அது எனக்கு ஒரு பெரிய மனவருத்தம். இப்படியான சம்பவங்களை வடிவா பேசித் தீர்த்துக்கலாம். ஈபிஆர்எல்எஃப் தோழர்கள் உரையாடலுக்கு தகுதியற்ற ஆட்கள் இல்லை தானே. எங்களைவிட அவங்களிட்ட ஜனநாயகப் பண்பு இருந்திருக்கு. அவங்களோட உரையாடல் செய்து இருக்கலாம். இது புளொட்டில் நடந்த பெரிய தவறு.

உதாரணமாக மட்டக்களப்புகச்சேரி துப்பாக்கி பறிமுதல் சம்பவம். அது எனக்குத் தெரிந்த நண்பர்களால் செய்யப்பட்டது. அதற்கு நான் தனிப்பட்ட வகையில் ஒத்துழைப்பு கொடுத்தனேயொழிய, அதற்கும் புளொட்டிக்கும் தொடர்பு இல்லை. பிறகு அவங்க எல்.ரீ. ரீ . ரீக்கு போயிட்டார்கள். மட்டக்களப்பு சிறை உடைப்புக்கு பிறகு, இதை நாங்கள் செய்யத்தான் இருந்தோம். செய்யுறதுக்கு அதற்கான ஆட்பலம் இல்லாமல் போய்விட்டது. நானும் ஈஸ்வரனும் தான் மட்டக்களப்பில் இருந்தோம். மிச்ச எல்லோரும் சிறை உடைப்போட அப்படியே இந்தியாவுக்கு போயிட்டார்கள். அதால செய்ய முடியாமல் போயிற்று. கச்சேரி துப்பாக்கி பறிமுதல் நடந்தது பற்றி பின் தளத்தில் கேள்விப்பட்ட புளொட் தலைமை இதனைச் செய்தது புளொட் என அறிக்கைவிட்டது. இது தவறான புரிதலின் அடிப்படையில் நடந்தது. புளொட் செய்வது பற்றிய திட்டமிருந்ததினால் புளொட்தான் செய்திருக்கும் என்ற அனுமானத்தில் இவ் அறிக்கை வெளியிட்டதாக பின்னர் சொல்லப்ட்டது.