இந்தியா

இந்தியா

இந்தியாவை மீள அச்சுறுத்தும் கொரோனா !

இந்தியா  முழுவதும்  கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று ஒரே நாளில் புதிதாக 841 பேருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாமுழுவதும் 4309 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கேரளா கர்நாடகா பிஹார் மாநிலங்களில் தலா ஒருவர் கொரானாவால் உயிரிழந்துள்ளனர்.

இதேபோல் தமிழ்நாட்டிலும் கொரோனா பாதிப்பு மீண்டும் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. அந்தவகையில் ஒரே நாளில் 831 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது வரை தமிழகம் முழுவதும் 175 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 29 பேர் குணமடைந்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 44 வயது பெண்மணி ஒருவர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தார்.

“பாரத்” எனப்பெயர் மாற்றிக்கொள்ளும் இந்தியா.? – ஐ.நாவின் நிலைப்பாடு என்ன..?

இந்தியா தனது நாட்டின் பெயரை “இந்தியா” என்பதை “பாரத்” என மாற்ற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை உறுதி செய்யும் வகையில் ஜனாதிபதி, பிரதமர் மோடி ஆகியோரின் பங்கேற்கும் நிகழ்ச்சி நிரல் அழைப்பிதழில் இந்தியா என்பதற்கு பதிலாக “பாரத்” என அச்சிடப்பட்டுள்ளது.

 

எதிர்க்கட்சிகள் மிகப்பெரிய அளவில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. என்றாலும், உலகளவில் “இந்தியா” என்பது “பாரத்” என மாற்றப்பட்டால் ஏற்படும் விளைவுகள் குறித்து விவாதம் தொடங்கியுள்ளது. பாஸ்போர்ட், தூதரகம், மின்அஞ்சல் போன்றவற்றில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஐ.நா. இந்த விவகாரத்தை எவ்வாறு எடுத்துக் கொள்கிறது என்று பார்ப்போம் என்றால், ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸின் துணை செய்தி தொடர்பாளர் பர்ஹான் ஹக் கூறுகையில் ”துருக்கி (Turkey) துருகியே (Turkiye) என கடந்த வருடம் மாற்றப்பட்டது. இதற்கு அந்த அரசிடம் இருந்து முறையாக கோரிக்கை எங்களுக்கு வந்தது.

அதனடிப்படையில் மாற்றப்பட்டது. அதேபோல், எங்களுக்கு கோரிக்கை வந்தால், நாங்கள் அவர்களிடம் இருந்து கோரிக்கை வந்ததாக கருதுவோம்” என்றார்.

இந்திய அரசு சார்பில் முறைப்படியான கோரிக்கை விடுக்கப்பட்டால் ஐ.நா.வில் இந்தியா என்பதற்கு பதில் பாரத் என அழைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

அணுகுண்டால் கூட துளைக்க முடியாது – பிரதமர் மோடி பயணிக்கும் புத்தம்புது மேபெக் கார்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, விசேஷ பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புத்தம்புதிய மெர்சிடிஸ் மேபேக் எஸ் 650 காரில் பயணம் செய்து வருகிறார்.

சமீபத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியா வந்திருந்த போது ஹைதராபாத் இல்லத்தில் அவரை வரவேற்க பிரதமர் மோடி முதன்முறையாக இந்த காரில் வந்திருந்தார். அவருக்கான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் SPG எனப்படும் சிறப்பு பாதுகாப்பு குழுவினர் பரிந்துரையின் பேரில் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த இந்த கார் பிரதமருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்தக் காரில் VR10 என்ற உயர் ரக பாதுகாப்பு அம்சம் உள்ளது. இக்காரின் விண்டோ கண்ணாடிகள் துப்பாக்கி புல்லட்களாலும், அணுகுண்டுகளாலும் துளைக்கமுடியாத வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. வெடி குண்டு தாக்குதலில் இருந்தும் பாதுகாப்பு கிடைக்கிறது. இதுபோன்று மேலும் பல பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த இந்த காரில்தான் பிரதமர் இப்போது பயணிக்கிறார் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் உணவில் போதை மருந்து கொடுத்து 17 மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த பாடசாலை முகாமையாளர்கள் !

இந்தியாவின், உத்தரபிரதேச மாநிலத்தில் முசாபர்நகர் பகுதியில் 17 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் பாடசாலைகளின் முகாமையாளர்கள் இருவரை கைதுசெய்ய காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கடந்த நவம்பர் 18 ஆம் திகதியன்று இரவு, செயன்முறை பரீட்சையென கூறி மேற்படி 17 மாணவிகளை, சந்தேகநபர்களான பாடசாலை முகாமையாளர்கள் அழைத்துச் சென்றுள்ளனர்.

இதன்போது, அந்த மாணவிகளுக்கு உணவில் போதை மருந்து கலந்துகொடுத்து, மயக்கமடையசெய்த சந்தேக நபர்கள், அவர்களை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவ தினத்திற்கு மறுநாள் குறித்த மாணவிகள் பாடசாலைக்குச் செல்ல மறுத்ததால் சந்தேகமடைந்த பெற்றோர்கள் விசாரித்த போது, இச்சம்பவம் தொடர்பில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து குறித்த மாணவிகளின் பெற்றோர்கள் இது தொடர்பில் காவல் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர். காவல்துறையினர் முன்னெடுத்த விசாரணையை அடுத்து சந்தேக நபர்களான பாடசாலை முகாமையாளர்கள் கைதுசெய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

எனினும், சந்தேகநபர்கள் தலைமறைவாகியுள்ளதால் காவல்துறையினர் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

விவசாயிகளின் ஒரு வருட போராட்டத்தின் முன்பு அடிபணிந்தது இந்திய அரசு – மீளப்பெறப்பட்ட வேளாண்சட்டங்கள் !

சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களை மீளப் பெறுவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

குறித்த சட்டங்களை மீளப்பெறுமாறு வலியுறுத்தி டெல்லி உட்பட இந்தியாவின் பல பகுதிகளில் விவசாயிகள் சுமார் ஓராண்டு காலமாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தின்போது சிலர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், நாட்டு மக்களுக்கு இன்று(19) விசேட உரையாற்றிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, விவசாயிகளின் நலனுக்காகவே 3 வேளாண் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன.

வேளாண் சட்டங்களின் நலனை ஒரு தரப்பு விவசாயிகளுக்கு எங்களால் விளங்கப்படுத்த முடியவில்லை. எனவே, மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களையும் மீளப்பெற முடிவு செய்துள்ளோம்.

இந்த மாதம் ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில், 3 வேளாண் சட்டங்களையும் மீளப் பெறுவதற்கான நடைமுறையை ஆரம்பிப்போம். எனவே, விவசாயிகள் தங்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும்.

டெல்லி எல்லைகளில் போராட்டம் நடத்துவதற்காக கூடியுள்ள விவசாயிகள் வீடுகளுக்குத் திரும்ப வேண்டும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

“இந்தியா வளர்ந்தால் உலகம் வளரும், இந்தியா சீர்திருத்தம் அடையும்போது உலகமும் மாறும்.” – ஐ.நா.வில் மோடி !

இந்தியா வளர்ந்தால் உலகம் வளரும், இந்தியா சீர்திருத்தம் அடையும்போது உலகமும் மாறும் என ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் இந்தியாவின் பிரதமர் நரேந்திரமோடி உரையாற்றியுள்ளார்.

ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் இன்று உரையாற்றிய நரேந்திரமோடிமேலும் பேசிய போது ,

கடந்த ஒன்றரை ஆண்டாக உலகம் முழுவதும் கொரோனாவால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. 100 ஆண்டுகளில் இல்லாத பேரிடரை ஒன்றரை ஆண்டில் உலகம் சந்தித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன். உலகின் முதல் டிஎன்ஏ தடுப்பூசியை இந்தியா உருவாக்கியுள்ளது என்பதை நான் இந்த ஐ.நா. பொது சபைக்கு தெரிவிக்க விரும்புகிறேன். இதை 12 வயதிற்கு மேற்பட்ட எவருக்கும் செலுத்தலாம். ஒரு எம்ஆர்என்ஏ தடுப்பூசி தயாரிப்பு இறுதிக் கட்டத்தில் உள்ளது. மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பூசியை இந்திய விஞ்ஞானிகளும் உருவாக்கி வருகின்றனர்.

13ஆவதி திருத்தத்தில் எங்கள் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை – இந்தியா உறுதி

இலங்கையில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் நிலைநாட்டல் மற்றும் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தல் ஆகிய விடயங்கள் தொடர்பில் ஏற்கனவே கொண்டிருந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக இந்தியா தெரிவித்திருக்கிறது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (21.08) இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயை கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர்.

இச்சந்திப்பின் போது தமிழ்மக்களின் கரிசனைகள், குறிப்பாக நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலின் பின்னரான தமிழ்மக்களின் பிரச்சினைகள் பற்றி ஆராயப்பட்டது. கூட்டமைப்புடனான சந்திப்புக் குறித்து இலங்கையிலுள்ள இந்தியத்தூதரகம் கூறியிருப்பதாவது:

இந்திய உயர்ஸ்தானிகரைக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சந்தித்திருந்ததுடன், இதன்போது அண்மையில்  நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் கூட்டமைப்பு பெற்றுக்கொண்ட வெற்றிக்கு உயர்ஸ்தானிகர் தனது வாழ்த்தைத் தெரிவித்தார்.

அதேவேளை இலங்கையில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் நிலைநாட்டல் மற்றும் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தல் ஆகிய விடயங்கள் தொடர்பில்ஸ இந்தியாவின் நிலைப்பாட்டை இதன்போது உயர்ஸ்தானிகர் மீண்டும் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.