இந்தியா முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று ஒரே நாளில் புதிதாக 841 பேருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாமுழுவதும் 4309 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கேரளா கர்நாடகா பிஹார் மாநிலங்களில் தலா ஒருவர் கொரானாவால் உயிரிழந்துள்ளனர்.
இதேபோல் தமிழ்நாட்டிலும் கொரோனா பாதிப்பு மீண்டும் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. அந்தவகையில் ஒரே நாளில் 831 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது வரை தமிழகம் முழுவதும் 175 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 29 பேர் குணமடைந்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 44 வயது பெண்மணி ஒருவர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தார்.