இராசமாணிக்கம் சாணக்கியன்

இராசமாணிக்கம் சாணக்கியன்

“மேய்ச்சல் தரை பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி வழங்கிய பணிப்புரையை பொலிஸார் மட்டக்களப்பில் செயற்படுத்தவில்லை.” – சாணக்கியன் குற்றச்சாட்டு !

மட்டக்களப்பு மயிலத்தமடு  மாதவனை மேய்ச்சல் தரை விவகாரம் தொடர்பில்  ஜனாதிபதி வழங்கிய பணிப்புரைகளை பொலிஸார் செயற்படுத்தவில்லை. நாட்டில் பொலிஸ்மா அதிபர் இல்லாத நிலையில் எவரிடம் இது  தொடர்பில்  முறையிடுவது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் கேள்வியெழுப்பினார்.

பாராளுமன்றத்தில்  இன்று (18) புதன்கிழமை ஒழுங்குப் பிரச்சினையொன்றை முன்வைத்து உரையாற்றுகையில்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்

அவர் மேலும் உரையாற்றியதாவது,

ஜனாதிபதி தற்போது நாட்டில் இல்லை.  பொலிஸுக்கு பொறுப்பான அமைச்சரும் நாட்டில் இல்லை. அத்துடன் பொலிஸ்மா அதிபருக்கு வழங்கப்பட்டுள்ள  சேவைகால நீடிப்பும் சட்டவிரோதமானது. பொலிஸ்மா அதிபருக்கு வழங்கப்பட்ட  பதவி நீடிப்புக்கு அரசியலமைப்பு பேரவை அனுமதி வழங்கவில்லை என குறிப்பிடப்படுகிறது.

இதேவேளை ஜனாதிபதி வெளிநாடு செல்லும் போது நியமிக்கப்படுபவர்களை அரசியலமைப்பு பேரவையால் நீக்க முடியாது என்று இன்னொரு தரப்பு கூறுகிறது. கடந்த  ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி  தலைமையில் விசேட கூட்டமொன்று  இடம்பெற்றது. மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி வழங்கிய பணிப்புரையை  பொலிஸார்  இன்று வரையில் பொலிஸாரால் மட்டக்களப்பில் செயற்படுத்தவில்லை.

பொலிஸ்மா அதிபர் பதவிக்கு மூவரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இவர்கள் மூவர் தொடர்பிலும் பிரச்சினை இருந்தால் பாராளுமன்றத்தின் ஊடாக கலந்துரையாடி அதற்கு தீர்வு காண வேண்டும். பொலிஸ்மா அதிபர் இல்லாத நேரத்தில் நாங்கள் பிரச்சினைகளை யாரிடம் கூறுவது.

மட்டக்களப்பில் செயற்படுத்துமாறு ஜனாதிபதி கூறியதை யார் செயற்படுத்தப் போகின்றார். அது தொடர்பில் யாரை கேட்பது. நாட்டில் சட்டத்தை செயற்படுத்துவதற்கு யார் பொலிஸ்மா அதிபராக இருக்கின்றார். என்பதை குறிப்பிட  வேண்டும்.

நாட்டில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் போன்ற சம்பவம்  மீண்டும் நடந்தால் அதற்கு யார் பொறுப்பு கூறுவது.இது தொடர்பில் ஆளும் கட்சியில் பொறுப்புடன்  ஒருவர்  பதிலளிக்க வேண்டும் என்று  கேட்கின்றேன் என்றார்.

இதன்போது  எழுந்து பதிலளித்த பிரதமர் தினேஷ் குணவர்தன எதனை கேட்பதென்பதனை குழப்பிக்கொண்டே  அவர் கேட்கிறார். ஜனாதிபதியின் பெயரை குறிப்பிட்டு அண்மையில் பாராளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினார். அந்தப் பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி இவர்களையும், அதிகாரிகளையும் அழைத்து சில விடயங்கள் தொடர்பில் இணக்கப்பாடு ஏற்படுத்தப்பட்டதுடன்,  அது தொடர்பில் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ஆலோசனைகளை வழங்கியுள்ளார். அது தொடர்பில் சீனா செல்ல முன்னர் என்னிடமும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

ஆகவே  அந்தப் பிரச்சினையை அத்துடன் நீக்கிக்கொள்ளுங்கள். ஜனாதிபதியே பாதுகாப்பு அமைச்சர், அவர் எங்கு இருந்தாலும் தேவையான ஆலோசனைகளை வழங்குவார் என்றார்.

இதனை  தொடர்ந்து ஒழுங்கு பிரச்சினையை எழுப்பி எழுந்த சுயாதீன உறுப்பினர்  நிமல் லான்சா, இந்த சபையில் ஜனாதிபதி இல்லாத நேரத்திலேயே இவ்வாறு பேசுகின்றார். இவ்வாறு கருத்து முன்வைக்க முடியாது என்றார்.

இவ்வேளையில் சாணக்கியன்  குறுக்கிட்டு கருத்து தெரிவிக்க முயன்ற போது, இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன்போது கருத்து தெரிவித்த சாணக்கியன்  இவரை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரை கோருகின்றேன் என்றார்.

தொடர்ந்து மீண்டும் உரையாற்றிய  பாராளுமன்ற உறுப்பினர்  நிமல் லான்சா ,

நான் சபாநாயகரிடமே பேச சந்தர்ப்பம் கேட்டேன். நான் சுமந்திரனிடம் கேட்கவில்லை, சாணக்கியனிடம் கேட்கவில்லை. தமிழ், ஆங்கிலம், சிங்களம் எதுவும் உங்களுக்கு தெரியாதா ? சபையில் இல்லாத ஒருவர் பற்றி இங்கே கூறுவது தவறே. இதனால் அந்த கருத்துக்களை ஹன்சாட்டில் இருந்து நீக்குங்கள்.

ஜனாதிபதி பிரச்சினையொன்று தொடர்பில் பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இல்லையென்றால் அவர் வந்த பின்னர் சந்தித்து கதையுங்கள்.

இப்போது ஜனாதிபதி சீனாவுக்கு முக்கிய விடயமாகவே சீனாவுக்கு சென்றுள்ளார். அவர் இந்த சபையில் இல்லாத நேரத்தில் அவர் பற்றி கூறியவற்றை நீக்கிவிடுங்கள் என்றார்.

பிள்ளையான் தொடர்பில் பேஸ்புக்கில் பதிவிட்டவர்களை 4ம் மாடிக்கு அழைத்து விசாரணை – சாணக்கியன்

இராஜாங்க அமைச்சர் சி சந்திரகாந்தன் (பிள்ளையான்) தொடர்பாக இரண்டு தினங்களுக்கு முன்னதாக ”ஒரு கொலைகாரன்” என முகநூலில் பதிவுகளையிட்ட சிலர் நான்காம் மாடிக்கு அழைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் நேற்று (24) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சாணக்கியனையும் பிள்ளையானையும் காணவில்லை!! - Transnational Government of Tamil Eelam

“மக்களை அடக்குவதற்கும் மக்களை கட்டுப்படுத்துவதற்குமாகவே அரசாங்கம் தற்போது புதிய சட்டமூலங்களை கொண்டு வர முயல்கின்றது. தற்போது கொண்டு வர உள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் மூலமாக நாட்டின் ஜனநாயகத்தையும் கருத்து சுதந்திரத்தையும் இல்லாதொழிக்கும் செயற்பாடாகவே நான் பார்க்கின்றேன்.

சனல் 4இன் காணொளியில் இலங்கையில் இடம்பெற்ற கொலைக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக சி. சந்திரகாந்தனுக்கு தொடர்பு இருக்கின்றது என்பதை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், சனல் 4இன் கருத்தை தங்களது முகநூல்களில் பதிவேற்றம் செய்தவர்களுக்கு 4ஆம் மாடியில்  விசாரணைகள் இடம் பெற்று வருகின்றது.

சனல் 4இல் வெளிவந்த காணொளியை போட்டவர்களுக்கே நான்காம் மாடி விசாரணை என்றால் எதிர்வரும் காலங்களில் இலங்கையில் கொண்டு வரப்போகின்ற புதிய சட்டமூலங்கள் மக்களது பிரச்சினைகளை ஆதங்கங்களை வெளிப்படுத்த முயல்கின்றபோது அவர்களும் விசாரணைக்கு உட்படுத்தப்படலாம் என்ற அச்சம் உருவாகியுள்ளது.

தற்போது ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கமானது இந்த சட்டங்களை வைத்து அரசாங்கத்துக்கு எதிராக குரல் கொடுப்பவர்களையோ போராடுபவர்களையோ அடக்க முயல்கின்றார்கள் என்றுதான் நான் நினைக்கின்றேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றமத்தின் தடை உத்தரவை மீறி திருகோணமலையில் விகாரை அமைப்புக்கு எதிராக போராட்டம் !

திருகோணமலை நீதிவான் நீதிமன்றமத்தின் தடை உத்தரவை மீறி திருகோணமலை – பெரியகுளம் பகுதியில் இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

சட்ட விரோதமான முறையில் திருகோணமலை பகுதியில் அமைக்கப்படவிருக்கும் விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த போராட்டம முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்

இதேவேளை குறித்த போராட்டம் இன முறுகலை ஏற்படுத்தும் என்ற அடிப்படையில் 14 பேருக்கு தடை உத்தரவு பிறப்பிக்குமாறு நிலாவெளி பொலிஸார் திருகோணமலை நீதிவான் நீதிமன்றிடம் கோரிக்கை முன்வைத்தனர்.

அதன் அடிப்படையில் இரு தரப்பிலும் தலா 7 பேர் வீதம் 14 பேருக்கு திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதிவான் அண்ணாத்துரை தர்ஷினி நேற்று தடை விதித்துள்ளார்.

இவ்வாறு தடை விதிக்கப்பட்டவர்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வராசா கஜேந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் விகாரை அமைப்பதற்கு ஆதரவாக செயற்படும் பௌத்த பிக்குகள் உள்ளிட்டோரும் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளவர்களில் அடங்குவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

“மகாவலி அதிகார சபைக்கு சொந்தமான காணிகள் தேசிய இன விகிதாசார அடிப்படையில் பிரிக்கப்பட வேண்டும்.” – சாணக்கியன்

“மகாவலி அதிகார சபைக்கு சொந்தமான காணிகள் தேசிய இன விகிதாசார அடிப்படையில் பிரிக்கப்பட வேண்டும்.” என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (6) ஒழுங்குப் பிரச்சினை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் பேசிய போது,

மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரான் பிரதேச செயலக பகுதியில் மகாவலி அதிகார சபைக்கு சொந்தமான காணிகள் சுபீகரிக்கப்பட போவதாக 05 ஆம் திகதி திங்கட்கிழமை போராட்டம் இடம்பெற்றுள்ளது. இந்த விடயம் தொடர்பில் எடுத்துள்ள நடவடிக்கை என்ன?

இதன்போது எழுந்து உரையாற்றிய விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, தகுதியான தரப்பினரை தெரிவு செய்யுமாறு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலருக்கு பணிக்கப்பட்டுள்ளது. குறுகிய காலத்தில் விவசாயத்துறையை மேம்படுத்தாவிட்டால் உணவு பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

6 ஆயிரம் ஏக்கர் காணியில் அனுமதியில்லாத வகையில் விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முறையான வழிமுறையில் அனுமதி வழங்காத காரணத்தால் தான் ஒரு தரப்பினர் அனுமதியில்லாமல் விவசாய நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளார்கள். ஆகவே இவ்விடயம் தொடர்பில் உரிய மாவட்ட மக்கள் பிரதிநிகளுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு கிழக்கு மாகாணத்தில் விவசாயத்திற்காக காணிகள் வழங்கப்படும். அது சிறந்ததாக அமையும் என்றார்.

இதன்போது எழுந்த உரையாற்றிய சாணக்கியன் இராசமாணிக்கம், மகாவலி அதிகார சபைக்கு சொந்தமான காணிகள் தேசிய இன விகிதாசார அடிப்படையில் பிரிக்கப்பட வேண்டும் என மகாவலி சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட தயார். சட்டத்தின் பிரகாரம் விகிதாசார அடிப்படையில் காணிகள் பிரிக்கப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை முன்னெடுப்போம் என்றார்.

“இலங்கையில் நெல்லின் விலை அதிகரித்து பஞ்சம் ஏற்படும்.” – சாணக்கியன் எச்சரிக்கை !

நாட்டில் பஞ்சம் ஏற்பட்டு கொள்ளை சம்பவங்கள் அதிகரிக்கக்கூடிய நிலை ஏற்படும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் எச்சரித்துள்ளார்.

திருக்கோவில் காவல் நிலையத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்த கல்முனை பாண்டிருப்பு பகுதியைச் சேர்ந்த காவல்துறை உத்தியோகத்தரின் இறுதி கிரியை நேற்று (27) இடம்பெற்றது.

அதில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த அவர், தேசியப் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதாக அறிவித்த அரசாங்கம், அதனைச் செய்வதற்குத் தவறியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

நெல்லின் விலை அதிகரித்து பஞ்சம் ஏற்படுவதோடு இதன் காரணமாகக் கொள்ளை சம்பவங்களும் அதிகரிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.