இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன்

இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன்

“தமிழ் தேசியம் தடம்புரளக் கூடாது.” – இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் !

கடந்த வரலாற்றில் தமிழ் தேசியம் தடம்மாறி சென்றிருந்தாலும் எதிர்வரும் காலங்களில் தடம்புரளக் கூடாது என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

கிழக்கில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி பணியை ஆரம்பித்து வைத்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

கிழக்கு மாகாணத்தில் ஒரு வலிமையான அரசியல் கட்டமைப்பை ஏற்படுத்தி கிழக்கு தமிழ் மக்களின் இருப்பை உறுதிப்படுத்துகின்ற அரசியல் பயணத்தை முன்னெடுக்க போவதாகவும் அவர் கூறினார்.

அத்தோடு தமிழ் மக்களுக்கு இருக்கின்ற உரிமை சார்ந்த விடயங்களை இராஜதந்திர ரீதியில் நகர்த்தி அபிவிருத்தி சார்ந்த விடயங்களையும் தொடர்ந்தும் முன்னெடுப்போம் என்றும் வியாழேந்திரன் தெரிவித்தார்.