ஜனாதிபதி கோத்தபாய

ஜனாதிபதி கோத்தபாய

“சுதந்திரம் பலரால் தவறாக பயன்படுத்தப்படுகின்றது.” – ஜனாதிபதி கோத்தபாய

மக்களிற்கு சுதந்திரத்தை உறுதிசெய்யும் விதத்தில் அரசாங்கம் நாட்டை ஆள்கின்ற போதிலும் அந்த சுதந்திரம் பலரால் தவறாக பயன்படுத்தப்படுகின்றது என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எம்பிலிப்பிட்டியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவார்  இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

ஜனநாயகத்தை உறுதிசெய்ய நானும் எனது அரசாங்கமும் ஆட்சி செய்கிறது அவர் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு நாணயநெருக்கடிக்கு நானோ எனது அரசாங்கமோ காரணமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் மின்சாரம் இல்லை எரிபொருள் இல்லை என பல முறைப்பாடுகள் காணப்பட்டபோதிலும் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் நுரைச்சோலை மின்நிலையத்தை ஏற்படுத்திய பின்னர் அதற்கு பின்னர் ஆட்சிபுரிந்தவர்கள் ஒரு மின்நிலையத்தை கூட ஆரம்பிக்கவில்லை.

தன்னால் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடிந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பசுமை விவசாயத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தான் கொள்கை உறுதிமொழியை வழங்கியதாகவும் எனினும் துரதிஸ்டவசமாக அதனை தான்னால் உரிய விதத்தில் விவசாயிகளிற்கு தெரியப்படு;த்த முடியவில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதனை பயன்படு;த்தி எதிர்கட்சிகள் பல ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துள்ளன என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

“நூறுவீதம் அரசபல்கலைகழகங்களை மாத்திரம் வைத்துக்கொண்டு செயற்படமுடியாது.” – ஜனாதிபதி கோத்தபாய

கல்விச்சீர்திருத்த நடவடிக்கைகளை எதிர்ப்பவர்கள் தங்கள் அரசியல் நோக்கங்களை முன்னெடுப்பதற்கு பதில் நவீன கல்விமுறைக்கான யோசனைகளை முன்வைக்கவேண்டும் என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நூறுவீதம் அரசபல்கலைகழகங்களை மாத்திரம் வைத்துக்கொண்டு செயற்படமுடியாது என தெரிவித்துள்ள ஜனாதிபதி அதேவேளை தனியார் பல்கலைகழகங்களை வர்த்தகமாக முன்னெடுப்பதை எதிர்ப்பதாக தெரிவித்துள்ளார்.


தனியார் பல்கலைகழகங்கள் மூலம் கிடைக்கும்வருமானத்தை கல்வி அபிவிருத்திக்கு ஒதுக்கவேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். பல பல்கலைகழக பட்டதாரிகள் அரசாங்க தொழில்வாய்ப்பினை எதிர்பார்க்கின்றனர் என தெரிவித்துள்ள ஜனாதிபதி வேலைவாய்ப்பை வழங்குவது மாத்திரம் அரசாங்கத்தின் பணியில்லை வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கான முழுமையான பொருளாதார சூழ்நிலையை உருவாக்குவதும் அரசாங்கத்தின் பொறுப்பு என குறிப்பிட்டுள்ளார்.