நரேந்திரமோடி

நரேந்திரமோடி

“இந்தியா வளர்ந்தால் உலகம் வளரும், இந்தியா சீர்திருத்தம் அடையும்போது உலகமும் மாறும்.” – ஐ.நா.வில் மோடி !

இந்தியா வளர்ந்தால் உலகம் வளரும், இந்தியா சீர்திருத்தம் அடையும்போது உலகமும் மாறும் என ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் இந்தியாவின் பிரதமர் நரேந்திரமோடி உரையாற்றியுள்ளார்.

ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் இன்று உரையாற்றிய நரேந்திரமோடிமேலும் பேசிய போது ,

கடந்த ஒன்றரை ஆண்டாக உலகம் முழுவதும் கொரோனாவால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. 100 ஆண்டுகளில் இல்லாத பேரிடரை ஒன்றரை ஆண்டில் உலகம் சந்தித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன். உலகின் முதல் டிஎன்ஏ தடுப்பூசியை இந்தியா உருவாக்கியுள்ளது என்பதை நான் இந்த ஐ.நா. பொது சபைக்கு தெரிவிக்க விரும்புகிறேன். இதை 12 வயதிற்கு மேற்பட்ட எவருக்கும் செலுத்தலாம். ஒரு எம்ஆர்என்ஏ தடுப்பூசி தயாரிப்பு இறுதிக் கட்டத்தில் உள்ளது. மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பூசியை இந்திய விஞ்ஞானிகளும் உருவாக்கி வருகின்றனர்.