மட்டக்களப்பு பட்டிப்பளை

மட்டக்களப்பு பட்டிப்பளை

பிரதேச செயலரின் அலுவலக அறையை முற்றுகையிட்டு கடமைகளை குழப்பிய சுமனரத்னதேரர் – பின்னணி என்ன..?

மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளரின் அறையினை முற்றுகையிட்ட போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

பட்டிப்பளை பிரதேச செயலாளரின் அறையினை முற்றுகையிட்டு அம்பிட்டிய சுமனரத்ன  தேரர் போராட்டம் (PHOTOS) - தமிழ்வின்

இதன்காரணமாக இன்று (திங்கட்கிழமை) பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் நடவடிக்கைகள் முற்றாக முடங்கியுள்ளதை காணமுடிகின்றது.

பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கெவிழியாமடு பகுதியில் வனஇலாகாவுக்குரிய காணியை விகாரை அமைப்பதற்கு கோரியதாகவும் அதனை வழங்குவதற்கு தனக்க அதிகாரம் இல்லையென பிரதேச செயலாளர் தெரிவித்ததை தொடர்ந்தே இந்த போராட்டத்தினை குறித்த  மத குரு முன்னெடுத்துவருகின்றார்.

பிரதேச செயலாளரையும் ஊழியர்களையும் அச்சுறுத்தும் வகையில் குறித்த மத குரு போராடிவருவதாகவம் பொலிஸார் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.