ஹிசாலினி மரணம்

ஹிசாலினி மரணம்

ஈஸ்டர் தாக்குதல் , ஹிசாலினி மரணம் தொடர்பான வழக்குகளில் இருந்து ரிஷாட் பதியுதீனுக்கு பிணை !

ஈஸ்டர் தாக்குதல்களை நடத்திய பயங்கரவாதிக்கு உதவிய குற்றச்சாட்டு மற்றும் ஹிசாலினி மரணம் தொடர்பான வழக்குகளில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல்களை நடத்திய பயங்கரவாதிக்கு உதவியதாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கு இன்று (வியாழக்கிழமை) கொழும்பு கோட்டை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, தலா இரண்டு 50 இலட்சம் ரூபாய் பிணைகளில் அவரை விடுவிக்கக் கொழும்பு கோட்டை நீதவான் பிரியந்த லியனகே உத்தரவிட்டார்.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றி வந்த சிறுமி ஹிஷாலினி மரணித்தமை தொடர்பிலும் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகளுக்காக கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றிலும் அவர் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போது, அவ்வழக்கிலும் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.