2020தேர்தல்

2020தேர்தல்

முதல் தேர்தல் முடிவு 2.30 க்கு பின்னரே..! – மஹிந்த தேசப்பிரிய 

பாராளுமன்றத்தேர்தலுக்கான வாக்டிகெடுப்புக்கள் நேற்றையதினம் முடிவடைந்த நிலலயில் இன்று  வாக்கு எண்ணும் பணிகளை ஆரம்பிக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய  தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணிகள் 2,773 நிலையங்களில் இடம்பெறவுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலின் முதலாவது தேர்தல் முடிவை இன்று பிற்பகல் 2.30க்கும் 3.30க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் பெற்றுக் கொடுக்க எதிர்ப்பார்த்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

இதேவேளை, மாவட்ட ரீதியில் வாக்கு எண்ணும் பணிகளை ஆரம்பிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அரசியல் கட்சிகளின பிரதிநிதிகளின் கண்காணிப்பின் கீழ் அனைத்து வாக்குப் பெட்டிகளும் திறக்கப்படும் என மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

யாழ்.தேர்தல் மாவட்டத்தில் கள்ளவாக்கு பதிவு !

யாழ்.தேர்தல் மாவட்டத்தில் உள்ள சாவகச்சேரி தொகுதியில் கள்ளவாக்கு பதிவு செய்யப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனால் குறித்த தொகுதியில் வாக்களிக்க வந்தவர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டள்ளது.

சம்பவம் குறித்து தெரியவருகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினரான சாவகச்சேரி நகரசபை தவிசாளர் சிவமங்கை இராமநாதனின் கணவர் இராமநாதன் சாவகச்சேரி இந்து ஆரம்பப் பாடசாலைக்கு வாக்களிக்கச் சென்றிருக்கின்றார். அங்கு அவர் ஏற்கனவே வாக்களித்தாக பதிவாகியிருப்பதாக அங்கிருந்த அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இதனால் சம்பவம் தேர்தல்கள் திணைக்கள அதிகாரிகள், பொலிஸார் மற்றும் கட்சிப் பிரமுகர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதால் விசாரணைகளை மேற்கொள்வதற்கு  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.