2020 நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள்

2020 நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள்

2020 பாராளுமன்றத்தேர்தலில் தமிழ் மக்களால் ஆதரிக்கப்பட்டோரும் நிராகரிக்கப்பட்டோரும் !

இலங்கையில்  நடந்து முடிந்த 2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட்ட அரசியல் கட்சிகள் சார்பில் 25 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களால் நேரடியாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை தமிழரசு கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளின் சார்பில் இவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்திலிருந்து ,

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி – அங்கஜன் ராமநாதன்

இலங்கை தமிழரசு கட்சி – சிவஞானம் சிறிதரன்,எம்.ஏ. சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன்

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

ஈழமக்கள் ஜனநாயக கட்சி – டக்ளஸ் தேவானந்தா

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – சீ.வி. விக்னேஸ்வரன்.

திருகோணமலை.

இலங்கை தமிழரசு கட்சி – இரா.சம்பந்தன்.

வன்னி

இலங்கை தமிழரசு கட்சி – சார்ள்ஸ் நிர்மலநாதன், செல்வம் அடைக்கலநாதன், எஸ். ஜெயராஜலிங்கம்

ஈழமக்கள் ஜனநாயக கட்சி –  குலசிங்கம் திலீபன்

மட்டக்களப்பு.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் – சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்)

இலங்கை தமிழரசு கட்சி – சாணாக்கிய ராகுல், கோவிந்தன் கருணாகரன்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – எஸ். வியாழேந்திரன்,

கொழும்பு

ஐக்கிய மக்கள் சக்தி – மனோ கணேசன்.

கண்டி

ஐக்கிய மக்கள் சக்தி – வேலு குமார்

நுவரெலியா

ஐக்கிய மக்கள் சக்தி – பழனி திகம்பரம், வேலுச்சாமி ராதாகிருஷ்ணன், எம். உதயகுமார்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – ஜீவன் தொண்டமான், மருதபாண்டி ராமேஸ்வரன்.

பதுளை

ஐக்கிய மக்கள் சக்தி – வடிவேல் சுரேஷ், அரவிந்தகுமார்

ஆகியோர் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் மக்களால் நேரடியாக நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களாவர்.

இதே நேரத்தில் முன்னைய நாடாளுமன்றங்களில் இருந்த அதே நேரம் புதிய நாடாளுமன்றங்களில்  ஆசனங்களை இழந்த தமிழ் வேட்பாளர்களுடைய பெயர் விபரங்கள் வருமாறு …

01. யாழ். தேர்தல் மாவட்டம்

இலங்கை தமிழரசுக் கட்சி

  • தலைவர் – மாவை சேனாதிராசா
  • ஈஸ்வரபாதம் சரவணபவன்

ஐக்கிய தேசியக் கட்சி

  • விஜயகலா மகேஷ்வரன்

02. வன்னி மாவட்டம்

இலங்கை தமிழரசுக் கட்சி

  • சாந்தி ஶ்ரீஸ்கந்தராசா
  • எஸ். சிவமோகன்

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி

  • சிவசக்தி ஆனந்தன்

03. திகாமடுல்ல மாவட்டம்

இலங்கை தமிழரசுக் கட்சி

  • கவிந்தன் கோடீஸ்வரன்

ஐக்கிய மக்கள் சக்தி (ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்)

  • மொஹமட் நசீர்
  • எம்.ஐ.எம்.மன்சூர்

தேசிய காங்கிரஸ்

  • எம்.மொஹமட் இஸ்மாயில்

அகில இலங்கை தமிழர் மகா சபை

  • விநாயகமூர்த்தி முரளிதரன்

04. மட்டக்களப்பு மாவட்டம்

இலங்கை தமிழரசுக் கட்சி

  • ஞானமுத்து ஶ்ரீநேசன்
  • சீனித்தம்பி யோகோஸ்வரன்

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

  • அலி ஸாஹிர் மௌலானா

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்

  • அப்துல்லாஹ் மஹ்ரூப்

இவர்களே தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட வடக்கு – கிழக்கு தமிழர் பகுதிகளின் உறுப்பினர்களாகவுள்ளனர்.

 

திருகோணமலை மாவட்ட விருப்பு வாக்குகளின் விபரங்கள்.

2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான திருகோணமலை மாவட்டத்திற்கான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

இதன் அடிப்படையில் திருகோணமலை மாவட்டத்திற்கான அதிக விருப்பு வாக்குகளை பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவானோர் விபரம் பின்வருமாறு,

ஐக்கிய மக்கள் சக்தி

எஸ்.எம் தௌபீக் – 43, 759

இம்ரான் மஹ்ரூப் – 39,029

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன

கபில நுவன் அத்துகோரல – 30, 056

இலங்கை தமிழரசு கட்சி

ஆர்.சம்பந்தன் – 21, 422

மட்டக்களப்பின் விருப்புவாக்கு விபரங்கள் – பிள்ளையான் முதலிடத்தில் !

2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான மட்டக்களப்பு மாவட்டத்திற்கான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. விருப்பு வாக்கு விபரங்களினடிப்படையில் சிறையிலிருந்தவாறே பிள்ளையான் எனப்படும் சிவனேசதுறை சந்திரகாந்தன் முதலிடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதன் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான அதிக விருப்பு வாக்குகளை பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவானோர் விபரம் பின்வருமாறு,

தமிழ் மக்கள் விடுதலை புலிகள்

சிவனேசதுறை சந்திரகாந்தன் – 54,198

இலங்கை தமிழரசு கட்சி

சாணக்யா ராஹுல் – 33,332

கோவிந்தன் கருணாகரன் – 26, 382

ஶ்ரீங்கா பொதுஜன பெரமுன

சதாசிவம் வியாழேந்திரன் – 22,218

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

அஹமட் செய்னுலாப்தீன் நசீர் – 17,599

யாழ் மாவட்டத்திற்கான விருப்பு வாக்கு விபரங்கள் – அங்கஜன் ராமநாதன் முதலிடம் !

2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான யாழ் மாவட்டத்திற்கான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. வழமையான முடிவுகளை போலல்லாது பல மாற்றங்ளை யாழ் மாவட்டத்திற்கான விருப்பு வாக்குகளில் காணக்கூடியதாகவுள்ளது.

அதன் அடிப்படையில் இலங்கை தமிழரசு கட்சிக்கு 3 ஆசனங்களும், ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஆகியவற்றிற்கு தலா 1 ஆசனம் வீதம் கிடைக்கப் பெற்றுள்ளது.

இதன் அடிப்படையில் யாழ் மாவட்டத்திற்கான அதிக விருப்பு வாக்குகளை பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவானோர் விபரம் பின்வருமாறு,

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி

அங்கஜன் ராமநாதன் – 36,365 வாக்குகள்

இலங்கை தமிழரசு கட்சி

சிவஞானம் ஶ்ரீதரன் – 35,884 வாக்குகள்

எம்.ஏ சுமந்திரன் – 27,834 வாக்குகள்

தர்மலிங்கம் சித்தார்த்தன் – 23,840 வாக்குகள்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி

டக்லஸ் தேவனந்தா – 32,146 வாக்குகள்

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்

கஜேந்திர குமார் பொன்னம்பலம் – 31,658 வாக்குகள்

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி

சி.வி விக்னேஸ்வரன் – 21,554 வாக்குகள்

டுவிட்டர் தளத்தில் தமிழ் மொழியில் வாழ்த்து செய்தியை வெளியிட்ட ஜனாதிபதி !

நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 145 ஆசனங்களைப் பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு மாபெரும் வெற்றியை தந்த உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜக்க்ஷ தனது டுவிட்டர் தளத்தில் தமிழ் மொழியில் பதிவு செய்துள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் என்னால் முன்வைக்கப்பட்ட “சுபீட்சத்தின் நோக்கு” எனும் கொள்கையை மீண்டும் ஒரு முறை உங்கள் சக்தியின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளீர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

வன்னியின் விருப்பு வாக்குகள் வெளியாகின!

2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான வன்னி மாவட்டத்திற்கான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டவண்ணமுள்ளன.

அதன் அடிப்படையில் வன்னி தேர்தல் மாவட்டத்தினுடைய விருப்பு வாக்கு நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை தமிழரசு கட்சிக்கு 3 ஆசனங்களும், ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவற்றிற்கு தலா 1 ஆசனம் வீதம் கிடைக்கப் பெற்றுள்ளது.

இதன் அடிப்படையில் வன்னி மாவட்டத்திற்கான அதிக விருப்பு வாக்குகளை பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவானோர் விபரம் பின்வருமாறு,

ஐக்கிய மக்கள் சக்தி

ரிஷாட் பதியுதீன் – 28,203 வாக்குகள்

இலங்கை தமிழரசு கட்சி

சார்ல்ஸ் நிர்மலநாதன் – 25,668 வாக்குகள்

செல்வம் அடைகலநாதன் – 18,563 வாக்குகள்

யோகராஜலிங்கம் – 15,190 வாக்குகள்

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி

காதர் மஸ்தான் – 13,454 வாக்குகள்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி

குலசிங்கம் திலீபன் – 3,203 வாக்குகள்

 

அச்சமின்றி வாக்களித்த அனைத்து இலங்கையர்களுக்கும் நன்றி – சஜித்

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கான முடிவுகள் முழுமையாக வெளியாகி இருக்கின்றன.

அந்த வகையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னிலையில் உள்ளது.

அதேபோல் ரணிலை பின்னுக்குத்தள்ளி சஜித் தனது வெற்றியை பதிவுசெய்துள்ளார்.

இந்த நிலையில் தமது கருத்தை சஜித் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதில்

ஜனநாயக மற்றும் வளமான நாட்டிற்காக சமகி ஜன பாலவேகாவுக்கு (ஐக்கிய மக்கள் சக்தி) அச்சமின்றி வாக்களித்த அனைத்து இலங்கையர்களுக்கும் நன்றி. என்று உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார்.

2020ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்தலில் பொதுஜன பொரமுன அமோக வெற்றி ! – ஐ. தே.கட்சி வரலாற்றுச் சரிவு. முழுமையான முடிவுகள் இதோ..!

2020ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்தல் முடிவுகள் முழுமைவெளியாகி உள்ள நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பொரமுன கட்சி அமோக வெற்றியை பதிவு செய்துள்ளதுடன் இரண்டாவது இடத்தினை  ஐக்கிய மக்கள் சக்தி பெற்றுள்ளது. 

அதற்கமைய நாடாளவிய ரீதியில் கட்சிகள் பெற்று மொத்த வாக்குகளின் எண்ணிக்கையும், ஆசனங்களின் விபரங்களும் வெளியாகி உள்ளன.

  • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – SLPP – 6,853,693 (59.09%) 145 ஆசனங்கள்
  • ஐக்கிய மக்கள் சக்தி – SJB – 2,771,984 (23.90%) 54 ஆசனங்கள்
  • தேசிய மக்கள் சக்தி – NPP / JJB – 4,45,958 (3.84%) 3 ஆசனங்கள்
  • இலங்கை தமிழரசு கட்சி – ITAK – 3,27,168 (2.82%) 10 ஆசனங்கள்
  • ஐக்கிய தேசிய கட்சி – UNP – 249,435 (2.15%) 1 ஆசனம்
  • அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – AITC – 67,766 (0.58%) – 2 ஆசனங்கள்
  • OPPP – 67,758 (0.58%) – 1 ஆசனம்
  • தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் – TMVP – 67,692 (0.58%) 1 ஆசனம்
  • இலங்கை சுதந்திர கட்சி – SLFP 66,579 (0.57%) 1 ஆசனம்
  • ஈழமக்கள் ஜனநாயக கட்சி – EPDP – 61,464 (0.53%) 2 ஆசனங்கள்
  • MNA – 55,981 (0.48%) 1 ஆசனம்
  • தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி – TMTK – (0.44) 1 ஆசனம்
  • அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ACMC (0.37%) 1 ஆசனம்
  • தேசிய காங்கிரஸ் – NC – 39,272 (0.34%) 1 ஆசனம்
  • ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – SLMC – 34,428 (0.3%) 1 ஆசனம்

இந்த தேர்தல் முடிவுகளுக்கு அமைய பெரும்பான்மை பலத்துடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஆட்சி அமைக்கவுள்ளது. எதிர்வரும் 11ஆம் திகதி புதிய அமைச்சரவை நியமிக்கப்படவுள்ளதுடன், சமகால பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, புதிய பிரதமராக சத்தியப் பிரமாணம் செய்யவுள்ளார்.

 

வெளியாகியது ..வவுனியா தேர்தல் தொகுதிகளுக்கான முடிவுகள் !

இலங்கையின் ஒன்பதாவது  நாடாளுமன்ற தேர்தலுக்கான  வாக்கு பதிவுகள் நேற்றைய தினம்  (05.08.2020) இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் மதியம் 02 மணி முதல்  அறிவிக்கப்பட்டு வருகின்றன.  ஏற்கனவே பல  தேர்தல் தொகுதிகளினுடைய  முடிவுகள் வெளியாகியிருந்த  நிலையில்  தற்போது வன்னி தேர்தல் மாவட்டத்தினுடைய  வவுனியா தேர்தல் தொகுதிகளுக்கான முடிவுகள்  வெளியாகியுள்ளன.

வவுனியா தேர்தல் தொகுதியில் போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

இலங்கை தமிழரசு கட்சி – 22849
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 18696
ஐக்கிய மக்கள் சக்தி – 11170

இதனடிப்படையில் வவுனியா தேர்தல் தொகுதியில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது

தலைநகரின் தேர்தல் தொகுதிகளில் ஐக்கிய மக்கள் சக்தி அமோக வெற்றி !

இலங்கையின் ஒன்பதாவது  நாடாளுமன்ற தேர்தலுக்கான  வாக்கு பதிவுகள் நேற்றைய தினம்  (05.08.2020) இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் மதியம் 02 மணி முதல்  அறிவிக்கப்பட்டு வருகின்றன.  ஏற்கனவே பல  தேர்தல் தொகுதிகளினுடைய  முடிவுகள் வெளியாகியிருந்த  நிலையில்  தற்போது கொழும்பு தேர்தல் மாவட்டத்தினுடைய மத்திய கொழும்பு, கொழும்பு வடக்கு, மற்றும் தெஹிவளை போன்ற  தேர்தல் தொகுதிகளுக்கான முடிவுகள்  வெளியாகியுள்ளன.

மத்திய கொழும்பு தேர்தல் தொகுதியில் போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

ஐக்கிய மக்கள் சக்தி – 64692
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 16688
ஐக்கிய தேசிய கட்சி – 2978
தேசிய மக்கள் சக்தி – 1230

கொழும்பு வடக்கு தேர்தல் தொகுதியில் போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

ஐக்கிய மக்கள் சக்தி – 41059
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 16775
ஐக்கிய தேசிய கட்சி – 2676
தேசிய மக்கள் சக்தி – 1230 

தெஹிவளை தேர்தல் தொகுதியில் போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

ஐக்கிய மக்கள் சக்தி – 18,611
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன -18,244
தேசிய மக்கள் சக்தி – 2,094
ஐக்கிய தேசிய கட்சி -1706

பொரளை தேர்தல் தொகுதியில் போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

ஐக்கிய மக்கள் சக்தி – 20,450
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன -17,680
தேசிய மக்கள் சக்தி – 1,931
ஐக்கிய தேசிய கட்சி – 1,500

இதனடிப்படையில் கொழும்பு தேர்தல் மாவட்டத்தில் இலங்கையின் ஏனைய பகுதிகளை விட ஐக்கிய மக்கள் சக்திக்கு அமோக வெற்றி கிடைத்துள்ளது.