COVID-19
COVID-19
பிரிட்டனின் ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ராசெனிகா நிறுவனம் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசியின் பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளது.
தடுப்பூசி பரிசோதனை செய்யப்பட்ட ஒருவருக்கு அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தியதே இதற்கு காரணம்.
“விவரிக்க முடியாத அளவிற்கான உடல்நலக் குறைவு” ஏற்பட்டதால் பரிசோதனை நிறுத்திவைக்கப்பட்டதாக ஆஸ்ட்ராசெனகா நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி பரிசோதனை முன்னேற்றங்களை உலகம் கூர்ந்து கவனித்துவரும் நிலையில், ஆஸ்ட்ராசெனிகா மற்றும் ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் இணைந்து தயாரித்த இந்த தடுப்பூசி மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.
முதல் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனைகள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், சந்தைக்கு வரக்கூடிய முதல் கொரோனா தடுப்பூசி இதுவாக இருக்கலாம் என கருதப்பட்டது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு மூன்றாம் கட்ட பரிசோதனை தொடங்கப்பட்டதில், அமெரிக்காவில் சுமார் 30,000 பேர், அதோடு பிரிட்டன், பிரேசில், மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் இருந்தும் மக்கள் பலர் இதில் கலந்துகொண்டனர்.
தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனை என்பது பொதுவாக பல ஆண்டு காலம் ஆயிரக்கணக்கான பேர் மீது செய்யப்படும்.
சர்வதேச அளவில் இந்த தடுப்பூசி பரிசோதனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனை மீண்டும் தொடங்கலாமா வேண்டாமா என்பது குறித்து முடிவெடுப்பதற்கு முன்னால், தனிப்பட்ட விசாரணை மூலம் இது தொடர்பான பாதுகாப்பு தரவுகள் ஆய்வு செய்யப்படும்.
“பெரிய அளவில் பரிசோதனை நடத்தப்படும்போது, தற்செயலாக இவ்வாறு உடல்நலக்குறைவு ஏற்படலாம். ஆனால், அதனை கவனமாக தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்ய வேண்டும்” என்று ஒக்ஸ்ஃபர்ட் பல்கலைக்கழக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக தடுப்பூசி பரிசோதனை நிறுத்தப்படுவது இது இரண்டாவது முறையாகும்.
பெரிய அளவில் பரிசோதனை செய்யப்படும் போது இது நடக்கக்கூடிய ஒன்றுதான் என்றும், பரிசோதனை செய்யப்படும் நபருக்கு உடனடியாக எந்த உடல்நலக்குறைவு ஏற்படாமல் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது எந்நேரத்திலும் நடக்கலாம்.
எனினும் இன்னும் சில நாட்களில் பரிசோதனை மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த செய்தியை முதல்முறையாக வெளியிட்ட ஸ்டாட் நியூஸ் என்ற சுகாதார வலைதளம் கூறுகையில், தடுப்பூசி செலுத்தப்பட்ட பிரிட்டன் நபர் ஒருவருக்கு பாதகமான விளைவு எப்படி ஏற்பட்டது என்று உடனடியாக தெரியவரவில்லை என்றும், ஆனால் அவர் அதில் இருந்து மீண்டு வருவார் என்று தகவல்கள் தெரிவிப்பதாகவும் குறிப்பிடப்பட்டது.
நவம்பர் மூன்றாம் திகதி அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்பு தடுப்பூசி கிடைக்க வேண்டும் என்று டொனால்டு டிரம்ப் கூறுகிறார். ஆனால், அரசியலுக்காக அவசர அவசரமாக தடுப்பூசி கண்டுபிடிப்பது என்ற விஷயம் பல தரப்பினருக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனாவுக்கான தடுப்பூசி தயாரிப்பதில் அறிவியல்பூர்வமான தரநிலை மற்றும் நெறிமுறைகள் கடைபிடிப்போம் என “வரலாற்று உறுதிமொழி” ஒன்றை ஒன்பது தடுப்பூசி தயாரிப்பாளர்கள் குழுவினர் செவ்வாய்கிழமை அன்று எடுத்துள்ளனர்.
இதில் ஆஸ்ட்ராசெனிகா நிறுவனமும் ஒன்று.
மூன்று கட்ட முறையான மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே ஒழுங்காற்று ஆணையத்தின் அனுமதிக்காக விண்ணப்பிக்கப்படும் என்ற உறுதிமொழியை அந்நிறுவனம் எடுத்துள்ளது.
ஜான்சன் அண்ட் ஜான்சன், பையோ என் டெக், கிளாக்ஸோஸ்மித் க்ளைன், Pfizer, மெர்க், மாடர்னா, சனோஃபி, மற்றம் நோவாநாக்ஸ் நிறுவனங்களும் இதில் கையெழுத்திட்டுள்ளனர்.
“தடுப்பூசி பரிசோதனை செய்யப்படும் நபர்களின் பாதுகாப்புக்கே முதல் முன்னுரிமை அளிக்கப்படும்” என்று அவர்கள் உறுதிமொழி ஏற்றுள்ளனர்.
உலகளவில் சுமார் 180 தடுப்பூசி தயாரிப்பாளர்கள், தங்கள் தடுப்பூசியை பரிசோதனை செய்துவருவதாகவும், ஆனால், இதில் யாரும் இன்னும் மருத்துவ பரிசோதனை கட்டத்தை முடிக்கவில்லை என்றும் உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.
தடுப்பூசியை பாதுகாப்பாக பரிசோதிக்க அதிக காலம் எடுக்கும் என்பதால், செயல்திறன் மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல் அனைத்தையும் பூர்த்தி செய்யும் ஒரு தடுப்பூசி இந்தாண்டு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.
இந்நிலையில், சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளை செலுத்த தொடங்கிவிட்டன. ஆனால், இந்த தடுப்பூசிகள் மருத்துவ பரிசோதனை நிலையில் இருப்பதாகவே உலக சுகாதார நிறுவனம் பட்டியலிட்டுள்ளது.
மறுபக்கம், மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனை முடிக்கும் முன்பே கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கான அனுமதி வழங்கலாம் என அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு பரிந்துரைத்துள்ளது.
மேலும், நவம்பர் ஒன்றாம் தேதிக்குள் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வர வேண்டும் என்பதால், ஒரு சில நெறிமுறைகளை தளர்த்துமாறு அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு பல மாகாணங்களை வலியுறுத்தியுள்ளது.
தேர்தலுக்கு முன்னால் தடுப்பூசி கிடைத்துவிடும் என்று அதிபர் டிரம்ப் கூறிவந்தாலும், விஞ்ஞானிகளின் பேச்சை கேட்டு, வெளிப்படையான முறையில் இதுகுறித்து டிரம்ப் செயல்படுவாரா என எதிர்முனையில் இருக்கும் ஜோ பைடன் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
சீனாவும், ரஷ்யாவும் தங்களது கொரோனா தடுப்பூசியை பயன்படுத்தத் தொடங்கியிருந்தாலும், பாதுகாப்பானது என நிரூபிக்கப்படும் வரை எந்த ஒரு கொரோனா தடுப்பூசியையும், ஐ.நா. அங்கீகரிக்காது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
லண்டனில் செய்தியாளர்களை சந்தித்த உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம், தடுப்பூசிகளுக்கு எதிராக போராடுபவர்களின் கருத்துகளைக் கேட்டு மக்கள் குழப்பமடையக் கூடாது என தெரிவித்துள்ளார்.
பல ஆண்டுகளாக தடுப்பூசிகள் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், பெரியம்மை மற்றும் போலியோவை கட்டுப்படுத்தியதில், தடுப்பூசிகளுக்கு முக்கிய பங்கு உண்டு எனவும் தெரிவித்தார். முழுவதும் பாதுகாப்பானது என உறுதியாகும் வரை எந்த ஒரு தடுப்பூசியையும் அங்கீகரிக்க மாட்டோமெனவும் டெட்ரோஸ் அதனோம் உறுதியளித்தார்.
விரிவான ஆய்வுகளுக்கு முன்னரே ரஷ்யா மற்றும் சீனா தங்களது தடுப்பூசியை பயன்படுத்தி வருவதாக விஞ்ஞானிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், பிரிட்டனும் கொரோனா தடுப்பூசியை முன்னரே பயன்படுத்த சட்டத்திருத்தம் கொண்டு வரவுள்ளதாக, கடந்த வாரம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 லட்சத்து 72 ஆயிரத்தை கடந்துள்ளது.
சீனாவில் ஹூபேய் மாகாணம் வுஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.
இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் இறுதிகடத்தை விஞ்ஞானிகள் எட்டியுள்ளனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 72 ஆயிரத்தை கடந்துள்ளது.
குறிப்பாக இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,043 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் 1,082 பேரும் பிரேசிலில் 830 பேரும் உயிரிழந்துள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி, 2 கோடியே 64 லட்சத்து 56 ஆயிரத்து 806 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வைரஸ் பரவியவர்களில் 69 லட்சத்து 38 ஆயிரத்து 22 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 60 ஆயிரத்து 961 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனாவில் இருந்து 1 கோடியே 85 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். ஆனாலும், உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 8 லட்சத்து 72 ஆயிரத்து 492 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-
அமெரிக்கா – 1,91,046
பிரேசில் – 1,24,729
இந்தியா – 67,376
மெக்சிகோ – 65,816
இங்கிலாந்து – 41,527
இத்தாலி – 35,507
பிரான்ஸ் – 30,706
பெரு – 29,405
ஸ்பெயின் – 29,234
ஈரான் – 21,926
கொலம்பியா – 20,618
பிரேசிலில் கொரோனாவைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 40 லட்சத்தைக் கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிரேசில் சுகாதாரத் துறை தரப்பில், “பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 48,632 பேருக்கு கொரோனாவைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து பிரேசிலில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 40,01,422 ஆக அதிகரித்துள்ளது. 1,23,899 பேர் பலியாகினர். 32,10,405 பேர் குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரேசில் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் கொரோனாவால் அதிக பாதிப்பைச் சந்தித்துள்ளன. கொரோனாவைரஸ் பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும், பிரேசில் இரண்டாம் இடத்திலும் உள்ளன.
தென் அமெரிக்க நாடுகளில் பிரேசிலும், அர்ஜென்டினாவும் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன என்றும், தென் அமெரிக்காவின் கொரோனாவைரஸ் மையமாக பிரேசில் இருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு முன்னரே தெரிவித்திருந்தது.
உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 2.5 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன.
கொரோனாவைரஸ் ஊரடங்கினால் பலநாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர்.
சீனாவின் வூஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனாவைரஸ் தொற்று பரவியது. அங்கிருந்து உலக நாடுகளுக்கு வைரஸ் பரவியது. வைரஸ் பரவுவதைத் தடுக்க சீனா தவறிவிட்டதாகவும், இதில் சீனா உண்மையை மறைக்கிறது. அதை நாங்கள் கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்போம் என்று தொடக்கம் முதலே அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்நிலையில் கொரோனாவைரஸ் தொற்றில் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். ஆனால், சீனாவில் தொற்றுக்கு உயிரிழந்தோர் 5 ஆயிரத்துக்கும் குறைவாகவே உள்ளது என்று அந்நாட்டு அரசு கூறியது. இதுகுறித்து ‘பாக்ஸ் நியூஸ்’ சேனலின் செய்தியாளர் லாரா இங்கரஹாமுக்கு, ட்ரம்ப் அளித்த பேட்டியில் கூறும்போது, ‘‘சீனாவில் கொரோனாவைரஸ்க்கு ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். உண்மையான எண்ணிக்கையை சீன அரசு மறைக்கிறது. உலக நாடுகளில் ஏற்பட்டுள்ள உயிரிழப்பை விட, சீனாவில் அதிகம்’’ என்று தெரிவித்துள்ளார்.
‘‘பேட்டியின் போது, சீனாவில் உயிரிழப்பு அதிகம் என்பது எப்படி உங்களுக்கு தெரியும்?’’ என்று செய்தியாளர் லாரா கேள்வி எழுப்பினார். அதற்கு நேரடியாக ட்ரம்ப் பதில் அளிக்கவில்லை.
அமெரிக்காவில் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. கொரோனாவைரஸ் பிரச்சினையை ட்ரம்ப் சரியாக கையாளவில்லை என்று அமெரிக்கர்கள் அதிருப்தியில் உள்ளனர். இதனால், குடியரசுகட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடனுக்கு ஆதரவு அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதை சமாளிக்க சீனா மீது மிகத் தீவிரமாக அதிபர் ட்ரம்ப் குற்றச்சாட்டுகளை அடுக்கி வருவதாகவும் விமர்சனம் எழுந்துள்ளது.
சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளில் கட்டுப்பாடற்ற வகையில் மிக வேகமாக பரவி வருகின்றது.. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரேசில், ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட நாடுகளையும் கண்ணுக்கு தெரியாத எதிரியான கொரோனா வைரஸ் தொற்று, ஆட்டிப்படைத்து வருகிறது.
இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து இதுவரை 1,65,99,377 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 2,40,50,333 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் வைரஸ் 6தாக்குதலுக்கு இதுவரை 8,23,278 பேர் உயிரிழந்துள்ளனர்.வைரஸ் பரவியவர்களில் 66,27,678 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 61,795 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-
-
- அமெரிக்கா – பாதிப்பு -5,955,728, உயிரிழப்பு – 182,404 , குணமடைந்தோர் – 3,254,282
- பிரேசில் – பாதிப்பு – 3,674,176, உயிரிழப்பு – 116,666 , குணமடைந்தோர் – 2,848,395
- இந்தியா – பாதிப்பு – 3,231,754, உயிரிழப்பு – 59,612, குணமடைந்தோர் -2,467,252
- ரஷியா – பாதிப்பு – 966,189 , உயிரிழப்பு – 16,568 , குணமடைந்தோர் – 779,747
- தென்ஆப்பிரிக்கா – பாதிப்பு – 613,017 , உயிரிழப்பு – 13,308 , குணமடைந்தோர் – 520,381
- பெரு – பாதிப்பு – 600,438, உயிரிழப்பு – 27,813 , குணமடைந்தோர் – 407,301
- மெக்சிகோ – பாதிப்பு – 568,621, உயிரிழப்பு – 61,450, குணமடைந்தோர் – 393,101
- கொலம்பியா – பாதிப்பு – 562,128 , உயிரிழப்பு -17,889 , குணமடைந்தோர் – 395,470
இந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 24 லட்சத்தைக் கடந்துள்ளது. அதேசமயம், உயிரிழந்தோர் எண்ணிக்கை 58 ஆயிரத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 60 ஆயிரத்து 975 பேருக்குப் புதிதாகக் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்தப் பாதிப்பு 31 லட்சத்து 67 ஆயிரத்து 323 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 24 லட்சத்து 4 ஆயிரத்து 585 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து 75.92 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7 லட்சத்து 4 ஆயிரத்து 348 ஆக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தப் பாதிப்புடன் ஒப்பிடுகையில் இது 24.24 சதவீதம் மட்டுமாகும்.
கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா வைரஸால் 848 பேர் உயிரிழந்தனர். உயிரிழப்பு சதவீதம் 1.84 ஆகக் குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிபட்சமாக மகாராஷ்டிராவில் 212 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அவுஸ்திரேலியாவில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என அந்நாட்டு பிரதமர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார்.
ஒக்ஸ்போர்ட் பல்கலையுடன் இணைந்து கொரோனா தடுப்பூசி மருந்து கண்டுபிடித்துள்ள அஸ்ட்ராஜெனக்கா நிறுவனத்துடன் அவுஸ்திரேலியா அரசு ஓர் ஒப்பந்தம் செய்துள்ளது.
தடுப்பு மருந்து பரிசோதனைகள் வெற்றிகரமாக முடிந்தவுடன், அதை உள்நாட்டில் தயாரித்து நாட்டில் உள்ள 2.5 கோடி மக்களுக்கும் இலவசமாக போடப்படும் என பிரதமர் ஸ்கொட் மொரிசன் பிபிசி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் இதுவரை 23,993 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 493 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். 15,246 பேர் கொரோனாவிலிருந்து இதுவரை குணமடைந்தனர்.