who is who

who is who

‘யார் இவர்’

யார் இவர்:
இப்படிவத்தை நிரப்புவதற்கு முன் இதனைக் கவனமாக வாசித்து இதிலுள்ள வழிகாட்டலுக்கு அமைய நிரப்பவும். இதனை நிரப்புவதற்கு 30 முதல் 60 நிமிடங்கள் தேவைப்படும். சிவப்பு புள்ளியிடப்பட்ட பகுதிகள் கட்டாயமாக நிரப்பப்பட வேண்டும். அவை நிரப்பப்படாவிட்டால் நீங்கள் படிவத்தை சமர்ப்பிக்க முடியாது.

‘யார் இவர்’ அறிமுகம்: இலங்கைத் தமிழ் சமூக ஆளுமைகள் பற்றிய விபரத் திரட்டு. இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டு இலங்கையிலும் இலங்கைக்கு வெளியேயும் வாழ்கின்ற; தமிழ் சமூகத்திற்குள்ளும் அதற்கு அப்பாலும் சமூக முன்னேற்றத்திற்காக உழைத்தவர்களை, உழைக்கின்றவர்களை ஆவணப்படுத்தும் ஒரு முயற்சி. தேசம் வெளியீட்டகம் மேற்கொள்ளும் இந்த விபரத்திரட்டு காலத்திற்குக் காலம் புதுப்பிக்கப்பட்டு தொகுத்து வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

நோக்கம்: எமது ஆளுமைகளை ஆவணப்படுத்துவதும் அடுத்த தலைமுறையினருக்கு எமது ஆளுமைகளை பற்றிய குறிப்புகளைக் கையளிப்பதுமே ‘யார் இவர்’ வெளியீட்டின் நோக்கம். மேலும் துறைசார்ந்த ஆளுமைகளிடையே ஒரு வலைப்பின்னலை ஏற்படுத்தவும் தமிழ் சமூகத்தின் வாழ்நிலையை மேம்படுத்த நினைப்பவர்களிடையே ஒரு வலைப்பின்னளை ஏற்படுத்தி செயற்திறனை அதிகரிப்பதும் இதன் நோக்கமாக உள்ளது.

‘யார் இவர்’ குழு: நூலகவியலாளர் என் செல்வராஜா; ஊடகவியலாளர் த ஜெயபாலன்; ஆவணப் பதிவாளர் சி ஹம்சகௌரி; சமூக செயற்பாட்டாளர் க அரிமர்த்தனா.

தகவல் பாதுகாப்பு: நீங்கள் வழங்குகின்ற தகவல்களை ‘தேசம் பதிப்பகம்’ மட்டுமே கையாளும். வேறு எந்த நோக்கங்களுக்கும் பயன்படுத்தப்படமாட்டாது. இதில் தங்களுடைய தொலைபேசி இலக்கங்கள் நீங்கள் வாழும் நாடுகளின் சர்வதேச தொடர்புக்கான இலக்கத்துடன் பதிவு செய்யப்பட வேண்டும். நீங்கள் விரும்பாத பட்சத்தில் உங்களுடைய தொலைபேசி இலக்கங்கள், மின் அஞ்சல் மற்றும் முகவரிகள் எதுவும் வெளியிடப்படமாட்டாது. ஆனால் தேசம் வெளியீட்டகம் தொடர்புகளை மேற்கொள்ள நீங்கள் மேற்கொண்ட விபரங்களை இங்கு பதிவு செய்ய வேண்டும்.

கவனிக்க: பதிவுகளை கேட்கப்பட்ட கேள்விக்கு அமைய சரியாக பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம். சில பகுதிகளை in English / தமிழில் என்று குறிப்பாகக் கேட்டுள்ளோம். தயவு செய்து கேட்கப்பட்ட மொழியில் பதிவை மேற்கொள்ளவும். இப்படிவத்தை சமர்ப்பிற்கு முன் மீளவும் தகவலைச் சரிபார்த்து சமர்ப்பிக்கவும்.

கால ஒழுங்கு: கல்வி, தொழில், வெளியீடுகள், விருதுகள் அனைத்தும் கால ஒழுங்கில் முன்னையவை முதலிலும் பின்னையவை இறுதியிலும் வரவேண்டும். வழங்கப்பட்ட உதாரணங்களைப் பின்பற்றி உங்கள் பதிவை ஒழுங்குமுறையில் பதிவிடவும். மேலும் காற்புள்ளி , அரைப்புள்ளி ; மற்றும் முற்றுப்புள்ளி . என்பவற்றை உதாரணத்திற்கு அமைய பயன்படுத்தவும்.

‘யார் இவர்’ ஆவணப்படுத்தல் சர்வதேச ஆவணப்பதிவு விதிமுறைக்கு அமையவே மேற்கொள்ளப்படுவதால் தயவு செய்து பதிவுகளை வழங்கப்பட்ட உதாரணங்களைப் பின்பற்றி அதற்கு அமைய மேற்கொள்ளவும். ஆங்கிலத்தில் பதிவிடும் போது சின்ன எழுத்தையே (small letters) பிரதானமாகப் பயன்படுத்தவும். முதல் எழுத்து மட்டும் பெரிய எழுத்தில் (Capital Letters) அமையலாம்.

மேலுள்ள பதிவிடும் முறையயைப் பின்பற்றுவதன் மூலம் எமக்கு ஏற்படும் வேலைப்பழுவை நீங்கள் குறைக்க முடியும். உங்கள் ஒத்துழைப்பிற்கு நன்றி.

இறுதியாக, இப்படிவத்தை பூர்த்தி செய்து அதனைச் சமர்ப்பித்த பின்; உங்கள் புகைப்படம் ஒன்றை, உங்கள் முழுப்பெயருடன் whoiswhotamil@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.

உங்கள் ஒத்துழைப்பிற்கு நன்றி.

த ஜெயபாலன் (தேசம்)
‘யார் இவர்’ வெளியீட்டுக் குழு
whoiswhotamil@gmail.com

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeN0GSPSE8FyXiZ03VUzqAMQ5eNTIdkScXdX15q8LjGqojlUw/viewform

குறிப்பு: இப்படிவத்தை நிரப்புவதற்கு முன் கவனமாக வாசித்து இதிலுள்ள வழிகாட்டலுக்கு அமைய நிரப்பவும். இதனை நிரப்புவதற்கு 30 முதல் 60 நிமிடங்கள் தேவைப்படும். சிவப்பு புள்ளியிடப்பட்ட பகுதிகள் கட்டாயமாக நிரப்பப்பட வேண்டும். அவை நிரப்பப்படாவிட்டால் நீங்கள் படிவத்தை சமர்ப்பிக்க முடியாது.