::தேர்தல்கள்

::தேர்தல்கள்

இலங்கைத் தேர்தல்கள் பற்றிய செய்திகள், கட்டுரைகள், ஆய்வுகள்.

பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனுக்கு முள்ளந்தண்டு மாற்றுச் சத்திர சிகிச்சை தேவை!!!

மழை வரும் வராமலும் இருக்கும்!
சம்பந்தன் அண்ணை ஜனநாயமாக நடப்பார் அப்படி இல்லாமலும் இருப்பார்!!
கோத்தபாயா அபிவிருத்தியயை முன்னெடுப்பார் முன்னெடுக்காமலும் இருப்பார்!!!

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலருக்கு முள்ளந்தண்டு சிக்கல்கள் நிறைய உள்ளது. அதில் பா உ சித்தார்தனுக்கே கூடிய சிக்கல் உள்ளது. தேர்தல் முடிவிற்குப் பிறகு பா உ சித்தார்த்தன் டான் தொலைக்காட்சியின் ஸ்பொட் லைட் வழங்கிய நேர்காணலில் என்ன சொல்ல வருகின்றார் எனபது சித்தார்த்தனுக்கும் புரியவில்லை இவரை நேர்காணல் செய்த ஊடகவியலாளர்களுக்கும் புரிந்ததாகத் தெரியவில்லை.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத் தேர்தலில் வரலாற்று ரீதியான தோல்வியயைக் கண்டுள்ள நிலையில் பத்து ஆண்டுகள் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் சேர்ந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதனும் தர்மலிங்கம் சித்தார்த்தனும் அரசியல் முதுகெலும்பு இல்லாததால் அல்லது அது இத்துப் போனதால் தான் குப்பை கொட்டினர் என்பது உலகெங்கும் வாழும் இலங்கைத் தமிழர் அறிந்த இரகசியம். சிவசக்தி ஆனந்தன் அருந்தவபாலன் ஆகியோருக்கு ஏற்பட்ட நிலை தங்களுக்கு ஏற்படும் என்று அறிந்த புத்திசாலிகள். இப்படியான முதுகெலும்பற்ற புத்திசாலிகள் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குத் தேவை. தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைவதற்கு அழைக்கப்பட்ட கூட்டமொன்றில் கூட த சித்தார்தனுக்கு இருப்பதற்கு ஆசனமே வழங்கப்படமால் அவமானப்படுத்தப்பட்டார். அப்படி இருந்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் நின்றால் ஒரு ஆசனம் கிடைக்கும் என்பதால் தான் இணைந்தார். அதற்கான பலனை அனுபவிக்கின்றார்.

த சித்தார்த்தன் புளொட் இயக்கமாக இருக்கும் போதும் சரி அரசியலுக்கு வந்த போதும் சரி முதுகெலும்பற்ற ஒருவராகவே செயற்பட்டார். புளொட் அமைப்பில் அவர் தலைமையேற்ற போது நடந்த எந்தக் கொடூரச் செயலையும் அவர் தட்டிக்கேட்கவோ தடுத்து நிறுத்தவோ முற்படவில்லை. இவர் பிறகெப்படி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஜனநாயகமின்மையைத் தட்டிக் கேட்பார். நாட்டில் நடக்கும் ஜனநாயக மறுப்பைத் தட்டிக் கேட்பார். தன்னைச் சுற்றி என்ன அநியாயம் நடைபெற்றாலும் அது பற்றி அறச்சீற்றம் கொள்ளாத அல்லது கொள்ளத் தெரியாத ஒரு அரசியல் வில(லா)ங்கு சித்தார்த்தன்.

த சித்தார்த்தன் யாழ் சமூகத்தை பிரதிபலிக்கின்ற சராசரி மனிதன். யாழ் சமூகத்தில் வாழ்பவர்கள் பெரும்பாலும் ஏதோ தாங்கள் உண்டுஇ தங்கள் வேலையுண்டு மற்றையவர்களிடம் கெட்டபெயரைச் சம்பாதித்துவிடக் கூடாது என்ற விழிப்புணர்வுடன் வாழ்பவர்கள். தங்களைச் சுற்றி என்ன அநீதிகள் நடைபெற்றாலும் கண்டுகொள்ளாமல் இருந்துவிடுவார்கள். அதனைத்தான் கடந்த கால ஆயுதப் போராட்டமும் மக்களுக்கு கற்றுக்கொடுத்தது. தட்டிக் கேட்பவர்களை கேள்வி கேட்பவர்களை ஆயுதம் தாங்கியவர்களுக்கும் அரசியல் வாதிகளுக்கும் மட்டுமல்ல அரச ஊழியர்களுக்கும் கூட பிடிப்பதில்லை. அதனால் தான் யாழ் சமூகத்தில் என்ன விலைகொடுத்தும் மாற்றத்தை தடுத்துவிடவே முயற்சிப்பர். அந்தப் பின்னணியில் வந்தவர் தான் தர்மலிங்கம் சித்தார்த்தன்.

இவர் பொதுவெளிக்கு வந்திராவிட்டால் நானும் இந்த விமர்சனத்தை வைத்திருக்க வேண்டி வந்திராது. சராசரியாக உள்ள தமிழ் அரசியல் வாதிகளுக்குள் த சித்தார்த்தன் ஒப்பீட்டளவில் நேர்மையானவர் தான். அதனால் தான் ஒரு வாக்கு வங்கியயைத் தொடர்ந்தும் வைத்திருக்கின்றார். ஆனால் இவருடைய நேர்மை கடந்த பத்துவருடத்தில் தமிழ் மக்களுக்கு பெரிதாக எதனையும் பெற்றுக் கொடுக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால் தமிழ் மக்கள் பெற்றெடுத்திருக்க வேண்டிய அபிவிருத்தி விடயங்களை பெறுவதற்கு இவரைப் போன்றவர்கள் தடையாக இருந்துள்ளனர். கடந்த பத்து ஆண்டுகளாக இவருடைய ஆசனத்தில் ஒரு செயற்திறன் மிக்கவர் சிவசக்தி ஆனந்தன் போல் ஒருவர் இருந்திருந்தால் இன்னும் பலதை மக்களுக்கு செய்திருக்க முடியும்.

அணமையில் டான் தொலைக்காட்சியின் ஸ்பொட் லைட் நிகழ்ச்சியில் கூட அவர் ஸ்பொட்டாக எதனையும் சொல்லவில்லை. மேலே குறிப்பிட்டதுபோல் ஒன்றுக்குப் பின் ஒன்று முரணாகவே கருத்துத் தெரிவித்து உள்ளார். தன்னுடைய பாராளுமன்ற ஆசனத்தைப் பயன்படுத்தி தமிழ் தேசியக் கூட்டமைப்பைப் பயன்படுத்தி எதையாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் வெளிப்படவில்லை. மக்களால் தோற்கடிக்கப்பட்ட மாவை சேனாதிராஜாவுக்கு தேசியப்பட்டியலில் இடம்கொடுக்கவில்லை என்பது தான் அவருடைய ஆதங்கம். தமிழரசுக் கட்சி ஜனநாயகப்படி முடிவெடுக்கவில்லை என்பது உண்மைதான். சரி ஜனநாயகப்படி முடிவெடுத்தால் நீங்கள் ஏன் மக்கள் தங்கள் ஜனநாயகத்தின் மூலம் தோற்கடித்தவரை பின் கதவால் கொண்டுவர முற்படுகிறீர்கள். இதில் என்ன ஜனநாயம் இருக்கின்றது. தேசியப் பட்டியல் ஆசனத்தை அம்பாறைத் தொகுதிக்கான பிரநிநிதித்துவமாக வழங்கியது உண்மையில் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி தன்னுடைய தேசியப் பட்டியல் ஆசனத்தை யாழ் குடாவில் உள்ள ‘குதிரை கழுதை’ களுக்கு வழங்கியது போல் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள நீங்களும் இன்னும் ஆனையிறவு தாண்டாத மனநிலையில் இருப்பது ஏன். உங்களைப் போல் இன்னுமொரு முதுகெலும்பற்றவர் கட்சிக்குள் இருந்தால் நீங்கள் இன்னும் கூடியகாலம் குப்பை கொட்டலாம் என்பதற்காகவா?

மேலும் நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளைக் கூட சித்தார்த்தனால் விளங்கிக்கொண்டிருக்க முடியவில்லை. ஓரிடத்தில் குறிப்பிடும் போது மக்கள் அரசுசார்பானவர்களுக்கு வாக்குகள் அளித்ததால் மக்கள் தேசியத்தை விட்டு விலகிச் சென்று கொண்டிருக்கின்றார்கள் என்று குறிப்பிடுகின்றார். இன்னுமொரு இடத்தில் குறிப்பிடும் போது மக்கள் தேசியத்துடன் தான் இருக்கிறார்கள் என்கிறார். நீங்கள் அங்கம் வகித்த தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக மக்கள் வாக்களிக்கக் காரணம் நீங்களும் உங்களைப் போன்ற தமிழ் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்களும் எதனையும் சாதிக்கவில்லை என்பதனாலேயே. ஏன் அதனை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஒரு சமயத்தில் மக்கள் தவறாக தங்கள் வாக்குகளை அளித்துவிட்டார்கள் என்று கூறும் சித்தார்த்தன் மக்களுடைய வாழ்நிலை கடந்த பத்து ஆண்டுகளாக மேம்படாததற்கு தானும் ஒரு காரணம் என்பதை ஏற்றுக்கொள்ளவில்லை. அப்படி ஏற்றுக்கொள்ளாதவர் குறைந்தபட்சம் தன்னுடைய பாராளுமன்ற ஆசனத்தைப் பயன்படுத்தி எதனைச் சாதித்தேன் என்பதைக் கூறிப்பிட்டிருக்க வேண்டும்.

விருப்பு வாக்கு விடயம் பற்றிக் கேட்டபோது கூட ஒரு முதுகெலும்பற்ற பதிலையே சித்தார்த்தன் முன்வைக்கிறார். ஒரிடத்தில் விருப்பு வாக்கில் மோசடிகள் இடம்பெறுவதாக நம்பகரமாக தெரிய வருவதாகத் தெரிவிக்கின்றார். இன்னுமொரு சந்தர்ப்பத்தில் அவ்வாறு நடந்ததற்கான ஆதாரங்கள் இல்லை என்றும் ஆனால் நடந்திருக்கலாம் என்றும் சொல்கின்றார். அவருடைய நம்பகமான தகவல் எதுவென்றால் தன்னுடைய மிக நெருங்கிய நண்பருக்கு அவருடைய நண்பர் சொன்னதாகச் சொல்கிறார். இதெல்லாம் ஒரு நம்பகரமான தகவல் என்று ஒரு பாராளுமன்ற உறுப்பினர் ஒரு பொது ஊடகத்தில் சொல்லுகின்றார் அதனைக் கேட்டு இரண்டு ஊடகவியலாளர்கள் ஆமாம் கொட்டுகின்றனர். விருப்பு வாக்கு மோசடிக்கு அவர் கொடுத்த உதாரணம் 2004இல் தமிழீழ விடுதலைப் புலிகள் தொலைபேசியூடாகவே விருப்பு வாக்குகளை மாற்றியதாக குறிப்பிடுகின்றார். 2004இல் புலியின்றி ஓரணுவும் அசையாது இருந்த போது விருப்பு வாக்குகள் மாற்றப்பட்டதையும் 2010ற்குப் பின் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் முன் வாக்குகள் எண்ணப்பட்டதற்கும் வித்தியாசம் தெரியாத ஒருவர் இந்த அரசியலில் எதைத்தான் சாதிக்கப் போகின்றார்.

பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அரசியலில் இருந்தும் இல்லாத ஒருவராகவே அடுத்த ஐந்து ஆண்டுகளை வீணடிக்கப் போகின்றார். முடிந்தால் எனது கூற்றை அவர் பொய்யாக்கி விடட்டும்.

வட – கிழக்கில் கூட்டமைப்பின் சரிவும், 2020 தேர்தல் முடிவுகள் தந்த படிப்பினைகளும்! – அருண்மொழி

நடந்து முடிந்த இலங்கையினுடைய ஒன்பதாவது பாராளுமன்றத்தேர்தல் இலங்கையின் அரசியல் பொருட்டு எதிர்பார்க்காத பல திருப்பங்களை வழங்கியுள்ளது. குறிப்பாக இலங்கையை அடுத்த 05 ஆண்டுகள் ஆள்வதற்கான ஆணையை பொதுஜன பெரமுன  கட்சிக்கு வழங்கியுள்ள மக்களுடைய தீர்ப்பானது பழம்பெரும் கட்சிகளைஅரசியல் அரியாசனத்திலிருத்தே தூரத்தூக்கி வீசிவிட்ட சோகமும் இந்த தேர்தலில் இடம்பெற்றுள்ளது. இலங்கையின் மத்திய ஆட்சி நிலை மாற்றங்கள் இவ்வாறு இருக்க  தமிழர் அரசியல் சார்ந்து இருக்கக்கூடிய அபத்தங்களையும் ஒரு விதமான அரசியல் வெற்றிடத்தையும் இந்தத்தேர்தல் தோலுரித்துக்காட்டியுள்ளதுடன் எதிர்கால நகர்வுகள் எத்தன்மையனவாக அமையும் வேண்டும் என்பதையும் சிந்திக்கச்செய்திருக்கின்றன இந்தத்தேர்தல் முடிவுகள். இந்த கட்டுரையின் நோக்கமும் 2020 தேர்தல் முடிவுகள் கற்றுந்தந்த பாடங்கள் என்ன என்பதை தமிழர் தாயகமான வட-கிழக்கை மையப்படுத்தி நோக்குவதாக அமைந்து கொள்கின்றது.
தமிழர்களின் உரிமைகளை வேண்டிய தமிழ்தேசிய கோரிக்கைகளுடனான ஆயுதப்போராட்டமானது மௌனித்துப்போய் கிட்டத்தட்ட  10 வருடங்கள் கடந்து போயுள்ள நிலையில் அரசியல் ரீதியான வழிமுறைகளே இறுதியானது என்ற முடிவுக்குள் வந்துள்ள தமிழினமானது 2009 இன் பின்னர் இரண்டு பாராளுமன்றத்தேர்தல்களை சந்தித்துள்ள போதிலும் கூட தமிழர்களுடைய பிரச்சினைகளுக்கான எந்த தீர்வுககளும் இது வரையில் கிடைத்திருக்கவில்லை. அதன் தொடர்ச்சியான மூன்றாவதும் தீர்க்கமானதுமான தேர்தல் முடிவுகளில் கடந்த காலங்களுடன் ஒப்பிடும் போது கணிசமான மாற்றங்களை காணக்கூடியதாக உள்ளது. அதாவது 2010 தொடங்கியது முதல் தேசியம்/ தமிழர் தாயகம் என்ற விடயத்துக்கு அதீத முக்கியத்துவம் கொடுத்து வந்த தமிழ்மக்களுடைய முடிவுகளில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதை காண முடிகின்றது. அதிலும் குறிப்பாக தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு இதுவரை காணப்பட்ட வாக்கு வங்கி சரி அரைவாசிக்கு குறைவடைந்துள்ளதுடன் வடக்கு – கிழக்கு இலங்கையில் இதுவரை இல்லாத அளவிற்கு வாக்கு சிதறல் அதிகரித்துள்ளதுடன் மக்களில் கணிசமான தொகையினர்  பொருளாதார அபிவிருத்தி, வேலைவாய்ப்பு என்பவற்றை  மையப்படுத்திய அரசாங்கத்துடன் சார்ந்த  அரசியல் கட்சிகளின் பக்கம் கவனம் செலுத்தியுள்ளமையும் துலாம்பரமாக வெளிப்படக் காணலாம். தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு எதிராக வடக்கு – கிழக்கு பகுதிகளில் ஏற்பட்டுள்ள இந்த எதிர்ப்பு மனோநிலை,  தமிழர் அரசியல் தொடர்பாக காணப்படும் வெறுமை , மக்களுடைய மனநிலை போன்ற விடயங்கள் நன்கு ஆராயப்பட வேண்டியனவாகும்.
2009 ஆம் ஆண்டு தமிழர்களின் ஆயுதப்போராட்டமானது மௌனிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழ் மக்களுடைய அரசியல் சார் அபிலாசைகளை காவிச்சென்ற அல்லது செல்லக்கூடிய ஒரு அமைப்பாக மக்களின் ஒரே தெரிவாக காணப்பட்டது இலங்கை தமிழரசுக்கட்சி தலைமையிலான தமிழ்தேசிய கூட்டமைப்பு மட்டுமேயாகும். இந்த நிலையில் யுத்தத்தின் பின்னர் தமிழ் மக்கள் எதிர்கொண்ட பாராளுமன்ற தேர்தல்களாகட்டும், ஜனாதிபதி தேர்தலாகட்டும், மாகாண மற்றும் உள்ளூராட்சி தேர்தல்களிலும் கூட தமிழ் மக்கள் 2009 முதல் தமிழ்தேசிய கூட்டமைப்பின் முடிவுகளுக்கே பெரும்பாலும் கட்டுப்பட்டோராக காணப்பட்டனர். எனினும் 2020 தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பினுடைய வாக்குவங்கியில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு தொய்வு ஏற்பட்டுள்ளது. இந்த ஆகப்பெரிய பின்னடைவுக்கான காரணங்களை முதலில் அறிந்து கொள்ளுதல் தலையாயது. கடந்து முடிந்த ஒரு தசாப்பத காலத்தில் தமிழ்  மக்கள் அதிகம் விரும்பிய நம்பியிருந்த தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைவர்களினால் தமிழ்மக்களுடைய அரசியல் பிரச்சினைகளுக்கு எது விதமான ஆரோக்கியமான முடிவுகளையும் எட்ட முடியவில்லை என்ற விரக்தியான மனநிலைக்கு தமிழ் மக்கள் தள்ளப்பட்டு விட்டனர் என்பதே ஆகப்பெரிய அபத்தமாகும். இந்த நிலையிலேயே தமிழ்தேசிய கூட்டமைப்பு மீதான வெறுப்புணர்வும் தமிழர்களிடையே அதிகரிக்க ஆரம்பித்தது. குறிப்பாக நல்லாட்சி அரசினை பாதுகாக்க தமிழ்தேசிய கூட்டமைப்பினர் அதிக பிரயத்தனம் மேற்கொண்ட அளவிற்கு கூட தமிழர் பிரச்சினைகளில் கூட்டமைப்பு கவனம் செலுத்தவில்லை. இராணுவமயப்படுத்தலிலுள்ள தமிழர் காணிகளை விடுவிப்பதிலோ அல்லது சிங்கள மயப்படுத்தப்பட்ட / சிங்கள மயப்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கும் தமிழர் பகுதிகளை மீட்பதிலோ பெரியளவிலான அக்கறை காட்டமை, தமிழ்தேசிய நீக்க அரசியலை கையிலெடுத்தமை, சுமந்திரனை மையப்படுத்திய அரசியல் போக்கை கடைப்பிடித்தமை , அபிவிருத்தி சார்ந்து முன்னேற்றகரமான திட்டங்களை வடக்கு – கிழக்கில் முன்னெடுக்காமை,  வேலையில்லா பிரச்சினைகளுக்கான தீர்வுத்திட்டங்களை செயற்படுத்தாமை, வலிந்து காணாமலாக்கப்பட்ட அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக அலட்டிக்கொள்ளாமை என பல காரணங்களிடைப்படையில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் மீதான வெறுப்புணர்வு இன்னும் தீவிரமாகியதே தவிர குறைந்தபாடில்லை.
இந்த அடிப்படையிலாக கூட்டமைப்பின் மீதான ஒரு வெறுப்பான மனோநிலை மக்களை அதற்கு மாற்றீடான புதிய கட்சிகளின் பக்கம் சாரவும்,  அபிவிருத்தியை நோக்கி மக்கள் சிந்தனை நகரவும் காரணமானது. இந்த ஒரு புள்ளியிலிருந்தே 2020 பாராளுமன்றத்தேர்தலுக்கான பிரச்சாரங்கள் ஆரம்பித்திருந்தன.  தமிழ்தேசிய கூட்டமைபின் மீது தமிழ்மக்களுக்கு ஏற்பட்டிருந்த வெறுப்பு மனோநிலை தமிழ்தேசியம் பேசிய அகில இலங்கை தமிழ்காங்கிரஸ் கட்சி மீதும் புதிதாக உருவாக்கப்பட்டிருந்த தமிழ் மக்கள் தேசிய கூட்டணி மீதும் ஒரு தொகுதி மக்களுடைய பார்வை திரும்ப காரணமானது. அது மட்டுமன்றி அபிவிருத்தி நோக்கிய மக்களுடைய பார்வை அரசுடன் இணைந்து பயணிக்க கூடிய தலைவர்கள் மூலமாகவே அது கிடைக்கும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டதுடன் வடக்கு – கிழக்கில் அரசுடன் இணையவுள்ள கட்சிகளின் வேட்பாளர்களுக்கு அவர்களுடைய வாக்குகள் ஒருங்கு சேர காரணமானது. இந்த வகை கட்சிகளான ஈ.பி.டி.பி,  அங்கஜனை முதன்மை வேட்பாளாராக கொண்டு களமிறங்கிய ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி போன்ற கட்சிகள் பெற்ற  முழுமையான வாக்கு எண்ணிக்கை கிட்டத்தட்ட ஒரு லட்சத்துக்கு கிட்டியதாக உள்ளது யாழ் தேர்தல் தொகுதியில் மட்டும். அதுபோல வடக்கு கிழக்கில் பொதுஜன  பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி,  தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கடசி, ஈ.பி.டீ.பி,ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி என்பனவற்றுக்கு  கிடைத்துள்ள ஆசனங்கள் என எல்லாமுமாக சேர்த்து கிட்டத்தட்ட 17 ஆசனங்களாகும். இது  வடகிழக்கில் கூட்டமைப்பின் ஆசனங்களை விட   அதிகமாகும். சுருக்கமாக சொல்லப்போனால் இந்த சிதறுண்ட ஆசனங்கள் யாவுமே முழுமையாக தமிழ்மக்கள் தங்களுடைய தலைமைக்கட்சியாக எண்ணிய  தமிழ்தேசிய கூட்டமைப்பினுடைய கடந்தகால  தூரநோக்கற்ற அரசியல் நகர்வுகளாலும் தமிழர் தலைமைகளிடையே காணப்பட்ட  ஒற்றுமையீனத்தாலும் அரசியல்தீர்வு , பொருளாதார அபிவிருத்தி என்ற இரண்டு தளங்களிலும் 2009ன் பின்னரான அடைவுமட்டங்களில் மாற்றங்களின்மையாலும்    மக்களுக்கு ஏற்பட்ட விரக்தி நிலையினுடைய வெளிப்பாடே  என்பதை தமிழ்தேசியம் பேசும் தலைமைகள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
கடந்த கால நல்லாட்சி அரசில் பெற முடியாத எதனையும் இன்றைய பொதுஜன பெரமுனபாராளுமன்றில் அல்லது ஆட்சியில் நினைத்தும் பார்க்க முடியாது. ஏனெனில் பொதுஜன பெரமுன எனும் ராஜபக்சக்களின் கட்டமைப்பில் தீவிர சிங்கள மக்களின் வாக்குகளே அதிகம் குவிந்துள்ளமையால் இந்த அரசில் தமிழர்களின் அரசியல் தீர்வு தொடர்பான விடயங்களை நினைத்துப்பார்ப்பதென்பது குதிரைக்கொம்பு போன்றதே. இது ஒரு புறமிருக்க ஜனாதிபதி தேர்தல் வெற்றியை தொடர்ந்து இந்திய விஜயத்தினை மேற்கொண்டிருந்த கோட்டபாய ராஜபக்ஷ அவர்களிடம் இந்தியப்பிரதமர் மோடி தமிழ் மக்களுடைய அரசியல் பிரச்சினை பற்றி பேசிய போது தமிழ்மக்களுக்கு அரசியல் பிரச்சினைகள் எவையுமேயில்லை. தீர்க்கப்பட வேண்டிய பொருளாதார அபிவிருத்தி சார் நடவடிக்கைகளே உள்ளன எனக்குறிப்பிட்டிருப்பதும் நோக்கத்தக்கது.  இவ்வாறான ஒரு அரசிடம் இருந்து தமிழரின் அரசியல் சார் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்காக முழுமுயற்சியுடன் செயற்பட வேண்டிய தேவை தமிழ்தேசியம் பேசிய பாராளுமன்ற தலைவர்களிடம் காணப்படுவதுடன் சர்வதேசத்திற்கும் எங்களுடைய பிரச்சினைகளை இடித்துரைக்க வேண்டிய தமிழ்மக்களின் பிரதிநிதிகள் இவர்கள் என்பதையும் புரிந்து செயலாற்ற வேண்டியவர்களாக உள்ளனர். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு மறுநாள் காலை கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான எம்.ஏ சுமந்திரன் அவர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ,  சி.வி விக்னேஸ்வரன் போன்றோரை இணைந்து செயற்பட அழைப்பு விடுத்திருந்தார். இது எந்தளவு தூரம் அகவயமானது என்பது கேள்விக்குட்படுத்தப்பட வேண்டியது.
வடக்கை பொறுத்த வரை அங்கஜனுக்கு கிடைத்த ஒரு ஆசனம் ஈ.பி.டி.பிக்கு கிடைத்த இரு ஆசனங்கள், பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்திக்கு வன்னியில் கிடைத்த தலா ஒரு ஆசனங்கள் அபிவிருத்திக்காக கிடத்த ஆசனம் என ஒரு விதமாக கூறப்பட்டாலும் கூட யாழில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் , சீ.வி.விக்னேஸ்வரன் போன்றோருக்கு கிடைத்த  ஆசனங்கள் தமிழ்தேசியகொள்கைக்கு கிடைத்த ஆசனங்களேயாகும் . இதே நேரத்தில் தமிழ்தேசியம் பேசிய கட்சிகள் பொருளாதார மேம்பாடு பற்றி  பேசாமையை காரணம் காட்டியே அங்கஜன் அவர்களுடைய வாக்கு வங்கி நிரப்பப்பட்டது. அது போல வன்னி தேர்தல் தொகுதியை பொருத்த மட்டில் தமிழ்தேசிய தலைவர்களிடம் காணப்பட்ட ஒற்றுமையில்லாத நிலையே வன்னி வாக்குச்சிதைவுக்கு காரணமானது.  அது மட்டுமன்றி தமிழ் மக்கள்  தேசிய கூட்டணிக்கு வன்னி தேர்தல் தொகுதியில் பெரிய பரீட்சையமின்மையால் சிவசக்தி ஆனந்தனுக்கு சென்ற தேர்தலில் கிடைத்த ஆசனம் இந்த தடவை இல்லாது போனது. இந்த அடிப்படையிலே ஈ.பி.டி.பி கட்சிக்கான ஒரு ஆசனம் வன்னியில் பங்கிடப்பட்டது. இந்த இடத்தில் தமிழ்தேசியம் பேசும் பாராளுமன்ற  தலைமைகளிடம் பெரிய பொறுப்பு ஒன்று காணப்படுவதை விளங்கிக்கொள்ள வேண்டும். அரசியல் தீர்வுகளை மையப்படுத்தி நகர்வது தமிழர்கள் பொருட்டு எவ்வளவு முக்கியமோ அதை விட முக்கியமானது பொருளாதார அபிவிருத்தி நோக்கிய பயணங்கள். அதற்காகவும் சேர்த்து இனிமேல் செயற்ப்பட வேண்டும்.
அடுத்ததாக கிழக்கின் நிலை பற்றியும் அதீத கவனம் செலுத்த வேண்டிள்ளது.கடந்த கால நல்லாட்சி அரசிலும் சரி அதற்கு முற்பட்ட காலம் 2010இல் இருந்தே நாம் படிப்படியாக இழக்க தொடங்கி விட்ட ஒரு பகுதியாக கிழக்கு உள்ளது. குறிப்பாக இந்த தேர்தல் முடிவுகளின் படி மட்டக்களப்பில் இரண்டு ஆசனங்களும் திருகோணமலையில் ஒரு ஆசனமுமே கூட்டமைப்புக்கு கிடைத்துள்ளது. அதே நேரத்தில் கடந்த காலத்தில் அம்பாறையில் காணப்பட்ட நிலையை விடஇந்த தடவை மிக மோசமானதாகவே உள்ளது.  அம்பாறையில் பொதுஜன பெரமுன கட்சி பெற்ற மொத்தமான வாக்குககள் 1,29,012 ஆக காணப்பட கூட்டமைப்பு வெறுமனே 25,255 வாக்குகளையே பெற்றது. மேலும் அம்பாறையில் இருந்த ஒரு நேரடி தமிழ்கட்சியின் கடந்த கால ஆசனமும் பறிபோயுள்ளது என்பதே கசப்பான உண்மை. இது ஒருபுறமிருக்க திருகோணமலை தேர்தல் மாவட்டத்தில் ஒரு ஆசனத்தையே கூட்டமைப்பால் தக்கவைத்துக்கொள்ள முடிந்தமை கிழக்கில் தமிழர்தாயகம் என்ற நிலைக்கு விழுந்த மிகப்பெரிய சறுக்கலேயாகும். இதுதவிர மட்டக்களப்பில் நான்கு ஆசனங்கள் தமிழருடைய ஆசனங்கள் எனக்குறிப்பிட்டு மார்தட்டிக்கொள்ளும் போதிலும் கூட சாணக்யாராஹுல் கடந்த காலங்களில் அரசுதரப்பு கட்சிகளுடன் பயணித்து இந்த தேர்தலில் கூட்டமைப்பில் நின்று வெற்றிபெற்றுள்ளார். பிள்ளையான் மற்றும்  வியாழேந்திரன் ஆகியோருடைய ஆசனங்கள்  அரசினுடைய கொள்கைகளுக்கு ஆதரவான ஒரு போக்கிலேயே அமைந்து கொள்ளும் என்பதில் எந்த ஒரு கேள்விக்குமிடமில்லை. இந்த நிலையிலேயே நாம் கிழக்கினுடைய நிலை பற்றி ஆழ்ந்து சிந்திக்க வேண்டியவர்களாகவுள்ளோம்.
ஏற்கனவே கன்னியா உள்ளிட்ட பிரதேசங்களில் பௌத்தமயப்படுத்தல் வேகமாக உருவெடுத்து கடந்த காலங்களில் பல இடர்பாடுகளை தோற்றுவித்துள்ளது. அதே நேரம் வேகமாக கிழக்கு தாயகத்தில் சிங்கள குடியேற்றங்கள் அதிகரித்து வருவதையும் காணக்கூடியதாகவுள்ளது. அண்மையில் கூட தொல்லியல் செயலணி ஒன்று உருவாக்கப்பட்டு தமிழர் வரலாற்று பகுதிகள் யாவுமே சிங்கள மயப்படுத்தும் நடவடிக்கைககள் முனைப்பாக மேற்கொள்ளப்பட்டவண்ணமுள்ளன. இந்த பின்னணியில் கிழக்கில் தமிழ்பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது மட்டுமே கையில் கிடைத்திருந்த ஒரே வாய்ப்பாக இருந்தது. எனினும் அதனை முழுமையாக  தவறவிட்டிருக்கிறோம் என்பதே நிஜமும் கூட.
இந்த நிலையிலேயே தமிழர் தாயகம் என்ற நிலையில் நாம் கூறிக்கொண்டிருக்கும் வடக்கு – கிழக்கின் எதிர்கால நிலை பற்றி ஆழமாகவும் அகலமாகவும் சிந்திக்கவேண்டியவர்களாக நாம் உள்ளோம். உண்மையில் வடக்கில் குறிப்பாக யாழ் தேர்தல் மாவட்டத்தை பொறுத்தவரை தமிழ்தேசிய கூட்டமைப்புக்கான ஐந்து ஆசனங்கள்  என்ற நிலை மாற்றமடைந்து தமிழ்தேசியம் பேசிய கட்சிகள் மூன்றிற்கான ஆசனங்கள் ஐந்து என்ற நிலையே தோற்றம் பெற்றுள்ளது. இதே நேரத்தில் கூட்டமைப்பினுடைய நகர்வுகளில் இனிவரும் நாட்களில் பெரியளவிற்கான மாற்றங்கள் அல்லது சிறப்பான அரசியலை முன்னெடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாகவே உள்ளது. கட்டுரையாளர் இந்தக்கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் போது  பல்வேறுபட்ட அரசியல் அவதானிப்பாளர்களும் கூட்டமைப்பினுடைய  தேசியப்பட்டியலினை பயன்படுத்தி அம்பாறை மாவட்டத்தில் தமிழ்தேசிய இருப்புக்கான ஒருவரை தெரிவு செய்ய முனைய வேண்டும் என கேட்கப்பட்ட போதிலும் கூட அந்த  தமிழ்தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் தொடர்பான ஒரு விதமான இழுபறி நிலையே தொடரந்து வருகின்றது. இந்த அடிப்படையில் ஒரு தூரநோக்கற்ற நகர்வுகளே இனியும் தொடருமாயின் தமிழ்தேசிய கூட்டமைப்பு எனும் அமைப்பு காலவோட்டத்தில் இல்லாமலேயே போய்விடும் என்பது கண்கூடு. அதுபோல அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினுடைய நகர்வுகள் தனித்து யாழ்ப்பாணத்திற்குள் மட்டுமே முடங்கி காணப்படுவதால் அது தன்னுடைய கட்சிக்கான மக்கள் அபிப்பிராயத்தை பெறவும் கிழக்கில் குறிப்பாக அம்பாறையில் இழந்துபோயுள்ள ஒரு ஆசனத்தை தக்கவைத்துக்கொள்ள அம்பாறையை சேர்ந்த ஒருவருக்கு அது வழங்கப்பட வேண்டும் என பல அரசியல் ஆர்வலர்களாலும்  வலியுறுத்தப்பட்ட போதிலும் கூட அதுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
உண்மையிலேயே தமிழ்தேசியம் தமிழர் தாயகம் போன்ற விடயங்களை வெளிப்படையாக பேசிக்கொண்டேயிருந்தாலும் கூட நம்மிடையே ஆளுக்கொரு கட்சி கொள்கைக்கொரு கூட்டம்   என்ற ரீதியிலான ஒரு நிலைப்பாடே இந்த பாராளுமன்ற தேர்தலின் முழுமையான பின்னடைவுக்கான காரணமாகும். இந்த தேர்தலில் தமிழர் தலைமைகள் நிலையை உணர்ந்து ஒரு மித்த குரலாக இந்த தேர்தலில் போட்டியிட்டிருக்க வேண்டும். ஆனால் நிலை மாறியதே வடக்கு கிழக்கில் புதிய சக்தியான பெரமுனவும்,  ஐக்கியமக்கள் சக்தியும் கனிசமான ஆசனங்களை பெற காரணமாயமைந்ததது. இது தவிர பொதுஜன பெரமுன கட்சி பெரும்பான்மை சிங்கள மக்களினுடைய முழுமையான ஆதரவுகளுடன் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை அமைக்கும் என்பது ஏற்கனவே எதிர்வுகூறப்பட்ட நிலையில் தமிழ்தேசிய அரசியல் பரப்பின் முக்கியமான ஆளுமைகள் அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து இந்த தேர்தலை எதிர்கொண்டிருக்க வேண்டும். அதுவே பெரமுன போன்ற பெருங்கட்சிகளை எதிர்த்து நிற்க போதுமான வீரியத்தை எமக்கு வழங்கியிருக்கும். ஆனால் தமிழ்த்தலைவர்கள் மூன்றுகட்சிகளாக பிரிந்து மேலும் பெரிய வரலாற்று தவறை செய்துவிட்டனர் என்பதே உண்மை.
கடந்த காலத்தவறுகளை சுட்டிக்காட்டுவது எவ்வளவு முக்கியமோ அதை விட முக்கியமானது எதிர்காலத்துக்கான நகர்வுகள் பற்றிய முன்னாயத்தங்களாகும். தற்போதைய பாராளுமன்றில் வடக்கு – கிழக்கு தமிழர் தாயகம் என்ற கொள்கையோடு பயணிக்க கூடிய கட்சிகளின்  13 அங்கத்தவர்களே பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடைய ஒவ்வொரு அசைவும் தீர்க்கமானதாகவும் தமிழருடைய எதிர்கால அரசியல் இருப்பு,  பொருளாதார , அபிவிருத்தி நலன்களையும்  மையப்படுத்தியதாக காணப்படுவதுடன் கடந்த காலத்தில் விடப்பட்டதான தவறுகளை திருத்திக்கொள்வதாகவும் அமைந்து கொள்ள வேண்டும். அவ்வாறு செயற்படுகின்ற போது மட்டுமே இழந்து போன வடக்கு – கிழக்கு மக்களுடைய அபிப்பிராயத்தை மீள கட்டியெழுப்ப முடியும் என்பதுடன் தமிழ்தேசியம் என்ற கொள்கையை உயிர்ப்புநிலையிலும் வைத்திருக்க முடியும்.  வடக்கு – கிழக்கு பகுதிகள் இணைந்ததமிழர் தாயகம் என்ற நிலையே நம்முடைய வரலாற்று இருப்பை தொடர்ந்தும் பேண அவசியமானது என்பதை இந்த தமிழர் தலைமைகள் உணர்ந்து செயற்டவேண்டியவர்களாகவுள்ளனர். இந்தத்தேர்தல் முடிவுகளில் இருந்து எவ்வளவு பாடங்களை நம்முடைய அரசியல் தலைமைகள் கற்றுக்கொள்கின்றனரோ..? அவ்வளவுக்கு தமிழர் அரசியல் சார்ந்து ஆரோக்கியமான நகர்வுகளை மேற்கொள்ளமுடியும். மேலும் இந்த தமிழர்தலைமைகள் ஒற்றுமையுடன் பயணிக்கும் போது மட்டுமே பெரும்பான்மை அங்கத்தவர்களை கொண்டுள்ள பொதுஜன பெரபமுன பாராளுமன்றில் அவர்களுக்கு ஈடுகொடுத்து ஓரளவாவது ஓரளவாவது புதிய மாற்றங்களை ஏற்படுத்த முடியும். அல்லாது விடின் வழமை போல ஒவ்வொருவரும் தங்கள் தங்களுடைய கொள்கைகளை மட்டுமே இறுகப் பிடித்து வழமை போல பிரிவினை பாராட்டி வருவார்களாயின் எஞ்சியுள்ள மக்கள் ஆதரவையும் இழந்து , வருகின்ற காலங்களில் பெரும்பான்மை வாதத்துக்குள் அல்லது ராஜபக்சக்களின் இலங்கைக்குள் நம்முடைய அடையாளத்தை இழந்து வரலாற்றை தொலைத்து பயணிக்கப்போகின்ற அவலமான ஒரு நிலையே ஏற்படும் என்பதை மறந்துவிடக்கூடாது.
 பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள நமது தமிழர் தலைமைகள் ஒருபுறத்தில் சர்வதேசத்திற்கு தமிழர் பிரச்சினைகளை கொண்டு செல்ல வேண்டியவர்களாகவும், மறுபுறத்தில் பெரும்பான்மை சிங்கள மக்களின் பெரும்பான்மை ஆதரவோடு ஆட்சியேறிய பொதுஜனபெரமுன பாராளுமன்றில் தமிழர்களின் தனிக்குரலாக ஒலிக்க வேண்டியவர்களாகவும் , பொருளாதார அபிவிருத்திகளை முன்னெடுக்க வேண்டியோராகவும் காணப்படுகின்றனர்.மிகப்பிரதானமாக மேற்குறிப்பிட்ட மூன்று விதங்களில் கடமையாற்ற வேண்டிய நமது தலைமைகள் அடுத்த 05 வருடங்களுக்கு  என்ன செய்யப்போகின்றனர்..? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

கொடுத்த வாக்குறுதியை ரணில் மீறிவிட்டார்- ரணில் மனோ உறவு முறிந்தது

ranil-mano.bmpஇலங்கையின் பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் அமைந்துள்ள கூட்டணியிலிருந்து விலகுவதாக மனோ கணேசனின் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி அறிவித்துள்ளது. மனோ கணேசனுக்கு ஐக்கிய தேசிய முன்னணி வாக்களித்தபடி தேசியப் பட்டியலில் நியமனம் வழங்கப்படாததை எதிர்த்தே இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மனோ கணேசனுக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்குமிடையிலான ஒன்பது வருடகால உறவில் விரிசல் ஏற்பட்டுவிட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியினர் தம்முடன் எழுத்துபூர்வகச் செய்து கொண்ட உடன்படிக்கையின்படி நடந்து கொள்ளவில்லை என ஜனநாயக மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன்  தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சிக்குளேயே இருக்கும் சில பேரினவாத நபர்களாலேயே தமது கட்சிக்கு தேசியப் பட்டியலில் இடம் கிடைக்காமல் போனது என்றும் பிரபா கணேசன் கருத்து வெளியிடுகிறார்.

நாடாளுமன்றத் தேர்தலின் போது தமது கட்சிக்கு கொழும்பு தேர்தல் மாவட்டத்தில் ஒரு இடத்தை விட்டுக் கொடுப்பதற்கு ஈடாக தேசியப் பட்டியலில் ஜனநாயக மக்கள் முன்னணிக்கு ஒரு இடம் வழங்கப்படும் என்று ரணில் விக்ரமசிங்க உறுதியளித்ததாகவும் மனோ கணேசன் கூறுகிறார்.

இது தொடர்பில் ஜனநாயக மக்கள் முன்னணியின் சிரேஷ்ட உப தலைவர் வேலணை வேணியன் விடுத்துள்ள அறிக்கையில் :- கடந்த ஒன்பது வருடங்களுக்கு மேலாக எமது தலைவரும் நாங்களும் நேற்றுவரை ஐ. தே. கட்சியின் தலைவரை நம்பியிருந்தோம். எமது தலைவருக்கு ஐ. தே. கட்சி மனிதாபிமான அடிப்படையில் தேசியப் பட்டியலில் ஒரு கூட்டுக் கட்சியின் தலைவர் என்ற வகையில் பாராளுமன்றத்தில் ஓர் இடம் கொடுத்திருக்க வேண்டும்.

இன்று அக்கட்சி தமிழ் மக்களின் காலையே வாரி விட்டது போலவே கருதுகிறோம். இன்று முதல் ஐ. தே. கட்சிக்கும் எமக்கும் இடையே இருந்த கூட்டணி முறிவடைந்துவிட்டது. ஐக்கிய தேசியக் கட்சி ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரை மட்டுமல்ல எமது கட்சி சார்ந்த பல இலட்சக் கணக்கான வாக்காளர்களான தமிழ் மக்களுக்கே துரோகம் செய்து விட்டதாகவே கருதுகிறோம்.

புதிய நாடாளுமன்றத்துக்கான தேசிய பட்டியல் உறுப்பினர்கள்

parliament.jpgஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, 17 தேசிய பட்டியல் உறுப்பினர்கள்

01 .ரட்ணசிறி விக்கிரமநாயக்க,
02. டி.எம்.ஜெயரத்ன,
03. டளஸ் அழகபெரும,
04. ஜீ.எல்.பீரிஸ்,
05. டியூ குணசேகர,
06. திஸ்ஸ விதாரண,
07. கீதாஞ்சன குணவர்த்தன,
08. வண.எல்லாவள மேதானந்ததேரர்,
09. முத்து சிவலிங்கம்,
10. அச்சல ஜாகொட,
11. விநாயகமூர்த்தி முரளீதரன்,
12. ஜே.ஆர்.பி.சூரியபெரும,
13. ஜனக பண்டார,
14. பேராசிரியர்.ராஜிவ் விஜயசிங்க,
15. ஏ.எச்.எம்.அஸ்வர்,
16. மாலினி பொன்சேகா,
17. கமல் ரணதுங்க

ஐக்கிய தேசியக் கட்சி, தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் 9 பேர்

01. திஸ்ஸ அத்தநாயக்க,
02. ஜோசப் மைக்கல் பெரேரா,
03. ஹர்ஷ டி சில்வா,
04. ஏர்ன் விக்கிரமரத்ன,
05. டி.எம்.சுவாமிநாதன்,
06. ஆர்.யோகராஜன்,
07. அனோமா கமகே,
08. ஹசன் அலி,
09. சலீம் மொஹமட்

ஜனநாயக தேசிய முன்னணி தேசிய பட்டியல் உறுப்பினர்கள் 02

01. அநுர குமார திஸாநாயக்க ,
02. டிரான் அலஸ்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேசிய பட்டியல் உறுப்பினர்கள் 01

01. எம்.சுமந்திரன்

இலங்கைச் சிறுபான்மையினரின் எதிர்காலம்? – புன்னியாமீன்.

pr.jpgவிகிதாசார முறையில் ஆளும் ஐ.ம.சு.மு. வரலாற்று வெற்றியைக் கண்டுள்ளது.  இனி இலங்கைச் சிறுபான்மையினரின் எதிர்காலம் குறித்து தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகின்றார்கள்?

விகிதாசார முறையின் கீழ் 7ஆவது பாராளுமன்றத்துக்காக நடைபெற்ற தேர்தல் முடிவுகள் அனைத்தும் உத்தியோகபூர்வமாக வெளியான நிலையில் ஆளும் ஐ.ம.சு.முன்னணிக்கு 144 ஆசனங்களும், ஐ.தே. முன்னணிக்கு 60 ஆசனங்களும், இலங்கை தமிழரசுக் கட்சிக்கு 14 ஆசனங்களும், ஜனநாயக தேசிய முன்னணிக்கு 07 ஆசனங்களும் கிடைத்துள்ளன. விகிதாசார முறையின் கீழ் நடைபெற்ற பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் அரசியல் கட்சியொன்று 144 ஆசனங்களைப் பெற்றிருப்பது இதுவே முதற்தடவை.

பாராளுமன்றப் பொதுத் தேர்தல் பிரச்சாரங்களின்போது ஐ.ம.சு.மு. தலைவரும் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஸ நாட்டின் அபிவிருத்தியை மேற்கொள்வதற்காக வேண்டியும்,  அரசியலமைப்பை மாற்றியமைப்பது மற்றும் இலங்கையின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வைப் பெறுவது ஆகிய நோக்கங்களுக்காகவும்     மூன்றில் இரண்டு பாராளுமன்றப் பெரும்பான்மைப் பலத்தை மக்களிடம் வேண்டிநின்றார். விகிதாசார தேர்தல் முறையின் கீழ் மூன்றில் இரண்டு பாராளுமன்றப் பலத்தைப் பெறுவதென்பது இலகுவான காரியமல்ல. இலங்கையில் பல கட்சிகள் காணப்பட்டபோதிலும்கூட,  கடந்த கால தேர்தல் முறைகளை ஒப்புநோக்கும்போது இரு கட்சி முறைக்குரிய பண்புகளே இலங்கையில் பெருமளவிற்கு வெளிப்படுவதினால் மூன்றில் இரண்டு பலத்தைப் பெறுவதென்பது மிகவும் கடினமான ஒரு விடயமே. இருப்பினும், 144 ஆசனங்களை ஆளும் கட்சிக் கிடைத்திருப்பதென்பது ஒரு விசேடத்துவமான வெற்றி என்றே கருத வேண்டும். பாராளுமன்றத்தின் மொத்த ஆசன எண்ணிக்கை 225 ஆகும். இதில் மூன்றில் இரண்டு என்று கூறும்போது குறைந்தது 150 ஆசனங்களையாவது பெற்றாக வேண்டும்.

தற்போது ஆளும் கட்சி 144 ஆசனங்களைப் பெற்றுள்ள நிலையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்காக வேண்டி மேலும் 06 ஆசனங்கள் தேவைப்படுகின்றன. எதிர்க்கட்சியிடமிருந்து இந்த 06 ஆசனங்களையும் பெற்றுக் கொள்வது ஆளும் கட்சிக்கு பெரிய சவாலாக அமையாது என்று அரசியல் அவதானிகள் கருத்து தெரிவிக்கின்றனர். தற்போது எதிர்க்கட்சியில் குறிப்பிட்ட சில உறுப்பினர்கள் தமது கட்சி தலைமைத்துவத்திற்கு விரோதமாக இருப்பதுடன்,  இவர்கள் சிலநேரங்களில் ஆளும் கட்சிக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதரவு வழங்குவார்களெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. எவ்வாறாயினும், மஹிந்த ராஜபக்ஸவால் மூன்றில் இரண்டு பாராளுமன்றப் பலத்தை பெற்றுக் கொள்ள கணிசமான வாய்ப்புக்கள் உண்டு. இந்நிலையில் சிறுபான்மையினரை பிரதிநிதித்துவப்படுத்தி எதிர்க்கட்சியில் தெரிவாகியிருக்கும் இலங்கை தமிழரசுக் கட்சி,  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவற்றின் நிலைப்பாடுகள் எவ்வாறிருக்கும் என்பதையும் இலங்கையில் வாழக்கூடிய சிறுபான்மையினர் எதிர்பார்த்துள்ளனர்.

இலங்கையில் தமிழ் மக்கள் சொல்லொண்ணாத் துயரங்களை அனுபவித்தவர்கள். தமது இனத்தின் உரிமைக்காக ஆயிரக்கணக்கான உயிர்களை பழிகொடுத்தவர்கள். தற்போதைய நிலையை யதார்த்தபூர்வமாக சிந்திக்கும்போது வெளிநாட்டு நிகழ்ச்சித்திட்டங்களால் அல்லது கற்பனை திட்டங்களாலும் தமிழ் மக்களின் உரிமைகளையும், அபிலாஸைகளையும் வென்றெடுப்பதென்பது மிகவும் ஒரு கடினமான  நிலையே. இத்தகைய நிலையில் ஆளும் கட்சியுடன் இணக்கப்பாட்டிற்கு வந்து வடக்கு கிழக்கில் அபிவிருத்தியை மற்றும் வடக்கு கிழக்கு மக்களின் உரிமைகளை வென்றெடுத்துக் கொள்வதே காலத்தின் தேவையென ஆய்வாளர்கள் கருத்து வெளியிடுகின்றனர். கடந்தகால அனுபவங்களை எடுத்துநோக்கும்போது ஐரோப்பிய நாடுகள் எத்தகைய அழுத்தங்களை கொடுத்தபோதும்கூட இலங்கை அரசு அதற்கு உட்பட்டு சென்றதை காணமுடியவில்லை.

இந்தக் காலகட்டத்தில் ஆசியா சர்வதேச அரங்கில் பலமட்டங்களிலும் உயர்வடைந்தே வந்துள்ளது. எதிர்காலத்தில் ஐ.நா.சபைக்கு கட்டுப்பட்டு ஆசிய நாடுகள் அனைத்தும் நடந்து கொள்ளும் எனவும் எதிர்பார்க்க முடியாது. கடந்த சில ஆண்டுகளாக ஆசிய நாடுகளின் போக்குகளையும் ஆசிய நாடுகளில் ஏற்பட்டு வரக்கூடிய துரிதமான வளர்ச்சிகளையும் அவதானிக்கும்போது தமது வளையத்தின் பாதுகாப்பை மையமாகக் கொண்டு ஐக்கிய நாடுகள் சபையையொத்த ஒரு அமைப்பை ஏற்படுத்திக் கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஐக்கிய நாடுகள் சபையின் வீடோ அதிகாரமுள்ள சீனாää ரஸ்யா போன்ற நாடுகளுடனும் அதேநேரம்ää ஆசியாவில் துரிதமாக வளர்ச்சியடைந்துவரும் இந்தியாவுடனும் நெருக்கமான உறவுகளை வைத்துள்ளதை யாராலும் மறுப்பதற்கு முடியாது. இத்தகைய பின்னணியில் ஐரோப்பிய நாடுகளோ அல்லது ஐக்கிய நாடுகளின் தீர்மானங்களோ அன்றேல் சர்வதேச நிகழ்ச்சித்திட்டங்களோ இலங்கையில் காணப்படக்கூடிய தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வினைப் பெற்றுக் கொடுக்கும் என்று எதிர்பார்ப்பது பகற் கனவாகவே இருக்கும்.

இத்தகைய நிலையில் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் தெரிவாகியுள்ள அங்கத்தவர்களுக்கு விசாலமான பணியொன்று காத்திருக்கின்றது. சுயநல நோக்கங்களைக் கருத்திற் கொள்ளாது இணக்கப்பாட்டுடன் செயற்பட்டு தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க இவர்கள் யதார்த்தபூர்வமாக சிந்திக்க வேண்டியதும்ää செயல்பட வேண்டியதும் மிகவும் அவசியமானதொன்றே. அரசியல் ரீதியான உரிமைகளைப் பெற்றுக் கொள்ளும் அதேநேரத்தில் கடந்தகாலங்களில் யுத்தத்தால் அழிவுற்ற வடக்கு கிழக்கை அபிவிருத்தி செய்யும் பணியும் இவர்களின் பொறுப்புக்களில் ஒன்று என்பதை மறந்துவிடக்கூடாது.

மறுபுறமாக இலங்கையில் வாழக்கூடிய மற்றுமொரு சிறுபான்மையினமான முஸ்லிம்களின் உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்வதில் முஸ்லிம்களின் பிரதான அரசியல் கட்சியாகக் காணப்படக்கூடிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு பாரிய பொறுப்புண்டு.

எவ்வாறாயினும் கடந்தகால அரசியல் அனுபவங்கள் தற்போது இலங்கை அரசியலில் காணப்படக்கூடிய பெரும்பான்மை சார்பு கட்சிகளின் போக்குகள் ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு இலங்கை தமிழரசுக் கட்சி,  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவற்றை சேர்ந்த தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் மாத்திரமல்லாமல் பாராளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ள அனைத்து சிறுபான்மை பிரதிநிதிகளும் தூரதிருஸ்டி நோக்குடன் சிந்தித்து தமது இனங்களைப் பற்றியும்ää தமது இனங்களின் எதிர்காலம் பற்றியும்ää தமது சமூகத்தின் எதிர்காலம் பற்றியும் சிந்தித்து முடிவெடுக்க வேண்டியது காலத்தின் தேவையாகும். எத்தகைய நெருக்கடிகள் வந்தாலும் இன்னும் ஆறாண்டுகளுக்கு ஆளும் ஐ.ம.சு.மு. பதிவியிலிருக்கப் போகின்றது. இதனைக் கருத்திற் கொண்டு அரசியல் மாற்றங்கள் மேற்கொள்ளப்படுமிடத்திலும் சரி ஏனைய அபிவிருத்தி நடவடிக்கைகளின் போதிலும் சரி தத்தமது சமூக நல உரிமைகளைப் பேணிக் கொள்ள வேண்டியது தெரிவுசெய்யப்பட்ட அனைத்து சிறுபான்மை சமூகப் பிரதிநிதிகளுக்கும் உள்ள விசாலமான பொறுப்பும், பணியுமாகும்.

 Parliamentary Election 2010
All Island Composition of Parliament
 

Name of Party           Party District Basis Seats           National Basis Seats          Total Seats
    
UPFA                                        127                                              17                                      144
 
UNP                                            51                                                 9                                       60
 
ITAK                                           13                                                 1                                       14

DNA                                              5                                                 2                                         7

Parliamentary Election 2010
All Island Final Result

 

     United People’s Freedom Alliance UPFA              4,846,388                  60.33% 
     United National Party UNP                                    2,357,057                   29.34%
     Democratic National Alliance DNA                        441,251                      5.49% 
     Ilankai Tamil Arasu Kadchi ITAK                          233,190                      2.90% 
     Up-Country People’s Front UCPF       24,670      0.31% 
     Thamil Makkal Viduthalai Pulikal TMVP       20,284      0.25% 
     Sinhalaye Mahasammatha Boomiputra Pakshaya SMBP       12,170       0.15% 
     Tamil United Liberation Front TULF       9,223      0.11% 
     Akila Ilankai Thamil Congress AITC       7,544      0.09% 
     Democratic People’s Liberation Front DPLF       6,036      0.08% 
     Sri Lanka National Front SLNF       5,313      0.07% 
     Independent Group 4 IND04_D19      4,646      0.06%
     Eelavar Democratic Front EDF       3,709      0.05% 
     Jathika Sangwardhena Peramuna JSP       3,358     0.04% 
     Eelam People’s Democratic Party EPDP       2,867      0.04%
     Our National Front ONF       2,647      0.03% 
     Independent Group 11  IND11_D10      2,562      0.03% 
     United National Alternative Front UNAF       2,454      0.03% 
     Eksath Lanka Podujana Pakshaya ELPP       2,387      0.03% 
     Left Liberation Front LLF       2,386      0.03% 
     United Socialist Party USP       2,192      0.03% 
     Independent Group 4 IND04_D10      2,151      0.03% 
     Pathmanabha Eelam Revolutionary Liberation Front PERLF        2,100      0.03% 
     Independent Group 1 IND01_D11      1,973      0.02% 
     Jana Setha Peramuna JSEP       1,501      0.02% 
     United Democratic Front UDF       1,497      0.02% 
     Independent Group 2  IND02_D02      1,469      0.02% 
     Independent Group 6 IND06_D12      1,362      0.02% 
     Independent Group 8 IND08_D12      1,355      0.02% 
     Independent Group 1 IND01_D06      1,280      0.02% 
     Democratic Unity Alliance DUA       1,270      0.02% 
     Independent Group 3  IND03_D10      1,161      0.01% 
     Independent Group 6 IND06_D10      1,038      0.01% 
     Eksath Lanka Maha Sabha ELMS       673      0.01%
     Independent Group 10 IND10_D12      596      0.01%
     Patriotic National Front PNF       558      0.01%
     Okkoma Wasiyo Okkoma Rajawaru Sanvidanaya OWORS       476      0.01% 
     Independent Group 5 IND05_D10      437      0.01%
     Independent Group 4 IND04_D12      430      0.01%
     Independent Group 6 IND06_D07      427      0.01%
     Independent Group 10 IND10_D10      399      0.00% 
     Socialist Equality Party SEP       371      0.00% 
     Sri Lanka Labour Party SLLP       338      0.00% 
     Independent Group 17 IND17_D12      326      0.00% 
     Independent Group 27 IND27_D12      312      0.00% 
     Independent Group 9  IND09_D02      279      0.00%
     Independent Group 5 IND05_D08      278      0.00% 
     Independent Group 16  IND16_D12      266      0.00% 
     Independent Group 9  IND09_D11      262      0.00% 
     Independent Group 7 IND07_D10      261      0.00% 
     Independent Group 18 IND18_D12      250      0.00% 
     Independent Group 5 IND05_D19      244      0.00% 
     Independent Group 11  IND11_D12      237      0.00% 
     Independent Group 5 IND05_D06      235      0.00% 
     Independent Group 22 IND22_D03      232      0.00% 
     Independent Group 7 IND07_D07      227      0.00%
     Independent Group 19 IND19_D03      213      0.00% 
     Independent Group 10 IND10_D01      212      0.00% 
     Independent Group 13 IND13_D02      207      0.00% 
     Independent Group 33 IND33_D13      184      0.00% 
     Independent Group 15  IND15_D15      184      0.00% 
     Independent Group 1 IND01_D10       183      0.00%
     Independent Group 2  IND02_D10      179      0.00%
     Independent Group 26 IND26_D12      174     0.00% 
     Independent Group 11  IND11_D21       173       0.00% 
     Independent Group 9  IND09_D10        171        0.00% 
     National Peoples Party NPP        164        0.00%
     Independent Group 30 IND30_D13         160        0.00%
     Independent Group 1 IND01_D16         156        0.00%
     Independent Group 1 IND01_D17         156         0.00%
     Independent Group 9  IND09_D03       148         0.00% 
     Muslim National Alliance MNA           147          0.00% 
     Independent Group 10 IND10_D11          147           0.00% 
     Independent Group 16  IND16_D01          142             0.00% 
     Independent Group 6 IND06_D13         139             0.00%
     Independent Group 8 IND08_D22          135          0.00%
     Independent Group 8 IND08_D15          134             0.00% 
     Independent Group 1 IND01_D22          132            0.00% 
     The Liberal Party LP                131             0.00% 
     Muslim Liberation Front MLF            130          0.00% 
     Independent Group 19 IND19_D13           122          0.00% 
     Independent Group 15  IND15_D02         120           0.00% 
     Independent Group 31 IND31_D13            120          0.00% 
     Independent Group 11  IND11_D01           119           0.00%
     Independent Group 19 IND19_D12              119         0.00% 
     Independent Group 16  IND16_D15           119           0.00%
     Independent Group 14 IND14_D06           117           0.00% 
     Independent Group 15  IND15_D01           115          0.00% 
     Independent Group 4 IND04_D09             113          0.00% 
     Independent Group 5 IND05_D03             112              0.00% 
     Independent Group 14 IND14_D15            111          0.00% 
     Ruhunu Janatha Party RJP                          109          0.00% 
     Independent Group 5 IND05_D07             109          0.00%
     Independent Group 12 IND12_D10             109          0.00% 
     Independent Group 11  IND11_D02           108           0.00% 
     Independent Group 17 IND17_D04            108           0.00% 
     Independent Group 12 IND12_D01             107          0.00%
     Independent Group 8 IND08_D13               107          0.00% 
     Independent Group 40 IND40_D13            104          0.00% 
     Independent Group 20 IND20_D03           102           0.00%
     Independent Group 11  IND11_D14            101           0.00% 
     Independent Group 7 IND07_D14                98            0.00%
     Independent Group 22 IND22_D12              97           0.00% 
     Independent Group 6 IND06_D17                97           0.00% 
     Independent Group 1 IND01_D05                96            0.00% 
     Independent Group 3  IND03_D03              95            0.00% 
     Independent Group 11  IND11_D04             95            0.00% 
     Independent Group 8 IND08_D10                93           0.00% 
     Independent Group 7 IND07_D05                92           0.00% 
     Independent Group 1 IND01_D19                 91           0.00%
     Independent Group 11  IND11_D05              90           0.00% 
     Independent Group 32 IND32_D13               90           0.00% 
     Independent Group 4 IND04_D03                 88           0.00% 
     Independent Group 9  IND09_D05                86           0.00%
     Independent Group 11  IND11_D15                86          0.00% 
     Independent Group 7 IND07_D17                  86           0.00% 
     Akila Ilankai Tamil United Front AITUF       85            0.00%
     Independent Group 13 IND13_D01               84            0.00%
     Independent Group 28 IND28_D12              84             0.00%
     Independent Group 22 IND22_D13              78             0.00% 
     Independent Group 28 IND28_D13              78             0.00% 
     Independent Group 8 IND08_D02                76             0.00% 
     Independent Group 9  IND09_D13               76              0.00% 
     Independent Group 1 IND01_D15                 76              0.00% 
     Ceylon Democratic Unity Alliance CDUA      75              0.00%
     Independent Group 7 IND07_D01                 75             0.00%
     Independent Group 2  IND02_D05               75               0.00% 
     Independent Group 4 IND04_D04                 72              0.00% 
     Independent Group 27 IND27_D13                  72           0.00% 
     Independent Group 21 IND21_D03                  70          0.00%
     Independent Group 9  IND09_D12                 68           0.00% 
     Independent Group 4 IND04_D20                 68           0.00% 
     Independent Group 47 IND47_D13                66           0.00% 
     Independent Group 5 IND05_D02                  65          0.00% 
     Independent Group 5 IND05_D17                   65          0.00% 
     Independent Group 14 IND14_D01                 64           0.00% 
     Independent Group 2  IND02_D20                 64           0.00% 
     Independent Group 8 IND08_D01                  63            0.00% 
     Independent Group 14 IND14_D02                63              0.00% 
     Independent Group 10 IND10_D06                62                0.00%
     Independent Group 7 IND07_D11                   62              0.00% 
     Independent Group 14 IND14_D14                 62             0.00% 
     Independent Group 8 IND08_D21                  60             0.00% 
     Independent Group 5 IND05_D04                 58             0.00% 
     Independent Group 1 IND01_D09                 58               0.00% 
     Independent Group 2  IND02_D17                  58              0.00% 
     Independent Group 15  IND15_D12               57                0.00% 
     Independent Group 10 IND10_D21                57              0.00% 
     Independent Group 8 IND08_D04                 55                0.00% 
     Independent Group 2  IND02_D07                55               0.00% 
     Independent Group 3  IND03_D14                 55               0.00%
     Independent Group 3  IND03_D02                54               0.00% 
     Independent Group 13 IND13_D04                54                0.00% 
     Independent Group 2  IND02_D04                 53                0.00% 
     Independent Group 3  IND03_D17                  53                0.00% 
     Independent Group 2  IND02_D21                 53                0.00% 
     Independent Group 13 IND13_D03                52               0.00% 
     Independent Group 10 IND10_D15                52                 0.00% 
     Independent Group 10 IND10_D02                51                  0.00% 
     Independent Group 6 IND06_D05                 51                   0.00%
     Independent Group 9  IND09_D06                51                  0.00% 
     Independent Group 3  IND03_D09                51                  0.00% 
     Independent Group 1 IND01_D02                 50                   0.00% 
     Independent Group 5 IND05_D16                  50               0.00% 
     Independent Group 1 IND01_D01                 48                 0.00% 
     Independent Group 1 IND01_D04                48                  0.00% 
     Independent Group 11  IND11_D06              48                 0.00% 
     Independent Group 2  IND02_D19                48                0.00% 
     Independent Group 7 IND07_D03                 47                 0.00% 
     Independent Group 7 IND07_D21                 47                 0.00% 
     Independent Group 5 IND05_D12                46                0.00% 
     Independent Group 9  IND09_D21              46                   0.00% 
     Independent Group 4 IND04_D01                45                0.00% 
     Independent Group 7 IND07_D02                 45                0.00% 
     Independent Group 15  IND15_D03              45                 0.00% 
     Independent Group 5 IND05_D05                45                0.00% 
     Independent Group 13 IND13_D06               45                0.00% 
     Independent Group 25 IND25_D13               45                 0.00% 
     Independent Group 9  IND09_D04               44                 0.00% 
     Independent Group 12 IND12_D04                44              0.00% 
     Independent Group 3  IND03_D19                44                 0.00% 
     Independent Group 9  IND09_D01                43                  0.00% 
     Independent Group 4 IND04_D15                   43                0.00% 
     Independent Group 3  IND03_D21                 43                 0.00% 
     Independent Group 6 IND06_D02                 42                 0.00% 
     Independent Group 4 IND04_D08                 42                 0.00% 
     Independent Group 43 IND43_D13                 41                0.00% 
     Independent Group 6 IND06_D14                  41                0.00% 
     Independent Group 11  IND11_D13                40                 0.00% 
     Independent Group 48 IND48_D13                 40                0.00% 
     Independent Group 3  IND03_D20                 40                0.00%
     Independent Group 4 IND04_D02                  39                 0.00% 
     Independent Group 10 IND10_D03                 39                0.00%
     Independent Group 14 IND14_D04                  39                0.00%
     Independent Group 8 IND08_D05                    39                0.00%
     Independent Group 13 IND13_D14                   39                   0.00%
     Independent Group 13 IND13_D15                   39                   0.00% 
     Independent Group 12 IND12_D16                    39                 0.00% 
     Independent Group 1 IND01_D21                       39                  0.00%
     Independent Group 2  IND02_D01                       38               0.00% 
     Independent Group 16  IND16_D04                     38                0.00% 
     Independent Group 10 IND10_D05                      38                0.00% 
     Independent Group 12 IND12_D14                          38             0.00% 
     Independent Group 8 IND08_D11                           37                  0.00% 
     Independent Group 2  IND02_D13                    37                  0.00% 
     Independent Group 46 IND46_D13                      37                 0.00% 
     Independent Group 2  IND02_D11                      36                  0.00% 
     Independent Group 3  IND03_D12                      36                  0.00% 
     Independent Group 15  IND15_D04                       35            0.00% 
     Independent Group 6 IND06_D06                      35                  0.00% 
     Independent Group 1 IND01_D08                       35                   0.00%
     Independent Group 7 IND07_D12                      35                           0.00% 
     Independent Group 5 IND05_D14                      35                     0.00%
     Independent Group 9  IND09_D16                         35                 0.00% 
     Independent Group 6 IND06_D04                         34               0.00%
     Independent Group 2  IND02_D15                         34                  0.00% 
     Independent Group 3  IND03_D22                          34                 0.00% 
     Independent Group 3  IND03_D06                         33                   0.00% 
     Independent Group 1 IND01_D14                           33                  0.00% 
     Independent Group 10 IND10_D14                         33                 0.00% 
     Independent Group 9  IND09_D15                           33                   0.00% 
     Independent Group 8 IND08_D03                            32                0.00%
     Independent Group 4 IND04_D05                           32                 0.00% 
     Independent Group 5 IND05_D11                            32                   0.00%
     Independent Group 44 IND44_D13                            32                0.00%
     Independent Group 8 IND08_D16                             32                  0.00%
     Independent Group 1 IND01_D20                              32                  0.00%
     Independent Group 3  IND03_D01                            31                     0.00%
     Independent Group 6 IND06_D03                             31                   0.00%
     Independent Group 12 IND12_D03                            31                  0.00%
     Independent Group 6 IND06_D11                              31                   0.00%
     Independent Group 42 IND42_D13                           31                      0.00%
     Independent Group 14 IND14_D03                          30                    0.00%
     Independent Group 3  IND03_D08                            30                  0.00%
     Independent Group 2  IND02_D09                           30                  0.00%
     Independent Group 7 IND07_D15                             30                  0.00%
     Independent Group 6 IND06_D16                             30                 0.00%
     Independent Group 7 IND07_D22                            30                     0.00%
     Independent Group 12 IND12_D02                          29                    0.00%
     Independent Group 11  IND11_D03                             29                 0.00%
     Independent Group 2  IND02_D06                             29                 0.00%
     Independent Group 12 IND12_D12                             29                   0.00%
     Independent Group 45 IND45_D13                            29                     0.00%
     Independent Group 4 IND04_D16                                 29              0.00%
     Independent Group 4 IND04_D07                             28                  0.00%
     Independent Group 5 IND05_D22                                28                 0.00%
     Independent Group 37 IND37_D13                               27                0.00%
     Independent Group 4 IND04_D22                                 27               0.00%
     Independent Group 1 IND01_D12                                  26               0.00%
     Independent Group 25 IND25_D12                               26                0.00%
     Independent Group 4 IND04_D13                                26                0.00%
     Independent Group 15  IND15_D13                             26                0.00%
     Independent Group 5 IND05_D15                               26                  0.00%
     Independent Group 2  IND02_D22                              26                  0.00%
     Independent Group 6 IND06_D22                               26                  0.00%
     Independent Group 3  IND03_D07                              25                  0.00%
     Independent Group 2  IND02_D08                              25                  0.00%
     Independent Group 12 IND12_D15                              25                  0.00%
     Independent Group 7 IND07_D16                                25                  0.00%
     Independent Group 1 IND01_D07                                24                  0.00%
     Independent Group 5 IND05_D13                                24                  0.00%
     Independent Group 2  IND02_D16                               23                  0.00%
     Independent Group 4 IND04_D21                                23                  0.00%
     Independent Group 1 IND01_D03                                22                  0.00%
     Independent Group 3  IND03_D04                               22                  0.00%
     Independent Group 2  IND02_D12                                21                  0.00%
     Independent Group 20 IND20_D12                               21                  0.00%
     Independent Group 6 IND06_D15                                  21                  0.00%
     Independent Group 5 IND05_D21                                  21                  0.00%
     Independent Group 6 IND06_D01                                  20                 0.00%
     Independent Group 10 IND10_D04                                20                 0.00%
     Independent Group 38 IND38_D13                                 20                 0.00%
     Independent Group 1 IND01_D18                                    20                 0.00%
     Nawa Sihala Urumaya NSU                                                19                  0.00%
     Independent Group 2  IND02_D03                                  19                  0.00%
     Independent Group 12 IND12_D11                                  19                   0.00%
     Independent Group 14 IND14_D12                                  19                   0.00%
     Independent Group 10 IND10_D13                                  19                   0.00%
     Independent Group 4 IND04_D14                                     19                  0.00%
     Independent Group 3  IND03_D15                                    19                  0.00%
     Independent Group 3  IND03_D16                                    18                  0.00%
     Independent Group 11  IND11_D18                                   18                  0.00%
     Independent Group 13 IND13_D18                                    18                  0.00%
     Independent Group 4 IND04_D06                                     17                   0.00%
     Independent Group 7 IND07_D06                                      17                   0.00%
     Independent Group 7 IND07_D18                                       17                   0.00%
     Independent Group 5 IND05_D01                                       16                  0.00%
     Independent Group 3  IND03_D05                                     16                   0.00%
     Independent Group 4 IND04_D11                                       16                   0.00%
     Independent Group 34 IND34_D13                                     16                   0.00%
     Independent Group 9  IND09_D14                                      16                   0.00%
     Independent Group 10 IND10_D16                                     16                   0.00%
     Independent Group 2  IND02_D14                                      15                   0.00%
     Independent Group 11  IND11_D16                                     15                   0.00%
     Independent Group 16  IND16_D03                                    14                   0.00%
     Independent Group 12 IND12_D06                                     14                   0.00%
     Independent Group 21 IND21_D12                                      14                   0.00%
     Independent Group 1 IND01_D13                                        14                   0.00%
     Independent Group 18 IND18_D03                                      13                  0.00%
     Independent Group 7 IND07_D04                                        13                  0.00%
     Independent Group 3  IND03_D13                                       13                  0.00%
     Independent Group 4 IND04_D17                                         13                 0.00%
     Independent Group 10 IND10_D18                                       13                 0.00%
     Independent Group 17 IND17_D03                                        12                 0.00%
     Independent Group 8 IND08_D06                                         12                 0.00%
     Independent Group 3  IND03_D11                                         12                 0.00%
     Independent Group 21 IND21_D13                                        12                 0.00%
     Independent Group 4 IND04_D18                                          12                 0.00%
     Independent Group 5 IND05_D18                                          12                 0.00%
     Independent Group 12 IND12_D18                                         12                 0.00%
     Independent Group 24 IND24_D12                                         11                 0.00%
     Independent Group 39 IND39_D13                                         11                 0.00%
     Independent Group 6 IND06_D21                                           11                 0.00%
     Independent Group 35 IND35_D13                                         10                0.00%
     Independent Group 2  IND02_D18                                          10                0.00%
     Independent Group 8 IND08_D18                                           10                0.00%
     Independent Group 13 IND13_D12                                            9                0.00%
     Independent Group 12 IND12_D13                                             9              0.00%
     Independent Group 13 IND13_D13                                              9             0.00%
     Independent Group 29 IND29_D13                                             9              0.00%
     Independent Group 41 IND41_D13                                             9                0.00%
     Independent Group 8 IND08_D14                                              9                0.00%
     Independent Group 23 IND23_D12                                           8                     0.00%
     Independent Group 3  IND03_D18                                            8                       0.00%
     Independent Group 36 IND36_D13                                           7                        0.00% 
     Independent Group 11  IND11_D11                                            6                  0.00%
     Independent Group 16  IND16_D13                                           6                     0.00%
     Independent Group 17 IND17_D13                                             6                    0.00%
     Independent Group 6 IND06_D18                                              6                     0.00%
     Independent Group 7 IND07_D13                                               5                     0.00%
     Independent Group 18 IND18_D13                                             5                      0.00%
     Independent Group 14 IND14_D13                                             4                     0.00%
     Independent Group 20 IND20_D13                                            4                    0.00% 
     Independent Group 23 IND23_D13                                            4                 0.00%
     Independent Group 24 IND24_D13                                            3                  0.00%
     Independent Group 26 IND26_D13                                            3                  0.00%
     Independent Group 9  IND09_D18                                             2                  0.00%
 
Valid                      8,033,717                            93.08%
Rejected                   596,972                              6.92%
Polled                    8,630,689                           61.26%
Electors              14,088,500
 

Parliamentary Election 2010- Final District Result – Trincomalee District

   sandanaya.png 

    United People’s Freedom Alliance UPFA         59,784         42.78%         2 
     United National Party UNP  39,691          28.40%          1
     Ilankai Tamil Arasu Kadchi ITAK  33,268          23.81%         1 
     Democratic National Alliance DNA  2,519 1.80% 0 
     Thamil Makkal Viduthalai Pulikal TMVP  1,712 1.23% 0 
     Akila Ilankai Thamil Congress AITC  1,182 0.85% 0 
     Pathmanabha Eelam Revolutionary Liberation Front PERLF  279 0.20% 0 
     Sri Lanka National Front SLNF  170 0.12% 0
     United Socialist Party USP  150 0.11% 0 
     Jathika Sangwardhena Peramuna JSP  109 0.08% 0 
     Independent Group 11  IND11_D14 101 0.07% 0
     Independent Group 7 IND07_D14 98 0.07% 0 
     Akila Ilankai Tamil United Front AITUF  85 0.06% 0 
     United National Alternative Front UNAF  76 0.05% 0
     Independent Group 14 IND14_D14 62 0.04% 0 
     Independent Group 3  IND03_D14 55 0.04% 0 
     Independent Group 6 IND06_D14 41 0.03% 0 
     Independent Group 13 IND13_D14 39 0.03% 0
     Independent Group 12 IND12_D14 38 0.03% 0 
     Independent Group 5 IND05_D14 35 0.03% 0 
     Independent Group 1 IND01_D14 33 0.02% 0 
     Independent Group 10 IND10_D14 33 0.02% 0 
     Left Liberation Front LLF  31 0.02% 0 
     Muslim Liberation Front MLF  28 0.02% 0
     United Democratic Front UDF  27 0.02% 0
     Jana Setha Peramuna JSEP  23 0.02% 0 
     Independent Group 4 IND04_D14 19 0.01% 0
     Independent Group 9  IND09_D14 16 0.01% 0 
     Independent Group 2  IND02_D14 15 0.01% 0 
     Sinhalaye Mahasammatha Boomiputra Pakshaya SMBP  14 0.01% 0 
     Independent Group 8 IND08_D14 9 0.01% 0
 
Valid 139,742                  93.17%
Rejected 10,240               6.83%
Polled 149,982                62.20%
Electors 241,133
 

தூய பௌத்த சிங்களவன் இனவாதத்துக்கு அப்பாற்பட்டவன். தமிழரசுக் கட்சி சார்பில் தெரிவான சிங்கள பிரதிநிதி பியசேன: – புன்னியாமீன்

jj.jpgநடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் திகாமடுலை தேர்தல் மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட சிங்கள வேட்பாளரான பி.எச்.பி. பியசேன 11,130 வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்துக்குத் தெரிவானார். இம்முறை பாராளுமன்றத்துக்குத் தெரிவான தமிழரசுக் கட்சி உறுப்பினர்களுள் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம், தமிழரசுக் கட்சி வரலாற்றில் முதற்தடவையாக சிங்களவர் ஒருவர் தெரிவாகியிருப்பதும் இதுவே முதற்தடவையாகும்.

தென்மாகாணத்தின் மாத்தறை மாவட்டத்தைச் சேர்ந்த தெவிநுவர எனுமிடத்தை பிறப்பிடமாகக் கொண்ட பியசேன 1948ஆம் ஆண்டில் கிழக்கு மாகாணத்தில் அக்கறைப் பற்று பிரதேசத்துக்கு இடம்பெயர்ந்து அக்கறைப்பற்று பிரதேசத்தின் சின்னம்மாள் எனும் யுவதியை திருமணம் செய்துகொண்டு இப்பிரதேசத்திலே வாழ்ந்து வந்தார். இவர் 7 பிள்ளைகளின் தந்தையாவார். ஸ்ரீலங்கா பொலிஸில் சமயல் செய்பவராக தனது தொழிலை ஆரம்பித்தார். அக்கறைப்பற்று சிங்கள வித்தியாலயத்தில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்ற இவர் பின்பு அக்கறைப்பற்று ஆர்.கே. மகாவித்தியாலயத்தில் தமிழ்மொழியில் தனது தாயின் விருப்பத்திற்கிணங்க கல்வி பயின்றார். தமிழரின் கலாசாரத்திற்கிணங்க வாழ வேண்டும் என்றால் தமிழ்மொழியைக் கற்க வேண்டும் என்று பியசேனவின் பெற்றோர் விரும்பியதனாலேயே இவர் தமிழ்மொழியில் கல்வி பயின்றார்.

jjj.jpg1984ஆம் ஆண்டில் அக்கறைப்பற்று நகரில் பியசேனவின் சகோதரரான சோமசிரி ஈரோஸ் அமைப்பினால் சுடப்பட்டு கொல்லப்பட்டார். இராணுவத்திற்கு தகவல் கொடுத்தார் என்ற அடிப்படையிலேயே இவர் கொலை செய்யப்பட்டார். இப்பிரதேசத்தில் இடம்பெற்ற முதல் கொலையும் இதுவேயாகும். இது தொடர்பில் பியசேன தற்போது வேதனைப்படுபவராகவே காணப்படுகின்றார்.

அக்கறைப்பற்று சிரிதம்மரத்ன சிங்கள வித்தியாலய அதிபர் பி.எச்.பி. பியதாஸ பியசேனவின் சகோதரர்களுள் ஒருவராவார். “எனது சகோதர,  சகோதரிகள் தனது பிள்ளைகளுக்கு பெயர் வைத்திருப்பது சிங்களப் பெயர்களாகும். இருப்பினும்,  எனது பிள்ளைகளுக்கு நான் தமிழ் பெயர்களையே வைத்துள்ளேன். “நான் சிறு வயதில் தமிழ் பாடசாலையில் கல்வி கற்கும்போது சிங்களவன்,  சிங்களவன் என்றே என் சக மாணவர்கள் என்னைக் கேலி செய்வார்கள். அதனால் எனது பிள்ளைகளுக்கு தமிழ் பெயரை நான் வைத்தேன்.  நாங்கள் சிங்களவர்களாக இருந்ததினால் அக்காலகட்டத்தில் அக்கறைப்பற்று பிரதேசத்தில் எமக்கு அச்சுறுத்தல்கள் காணப்பட்டன. எனது சகோதரன் கொல்லப்பட்ட காலத்தில் புலிகளின் அச்சுறுத்தல்களுக்கும் உட்பட வேண்டியேற்பட்டது.  இந்நிலையில் எனது சொந்தக் கிராமத்திற்கு மீள முடியவில்லை.  ஏனெனில், அக்காலகட்டங்களில் எனது சொந்தக் கிராமத்திலும் ஜே.வி.பி. அச்சுறுத்தல்கள் காணப்பட்டன. மிகவும் சிரமத்துடனும் பிரச்சினைகளுக்கு மத்தியிலுமே அக்காலத்தில் வாழ வேண்டிய நிலை காணப்பட்டது” என பியசேன குறிப்பிடுகின்றார்.

சிறு வயது முதலே பொலிஸில் ஏ.எஸ்.பி. ஆக வேண்டுமென்று தனக்கு கனவு இருந்ததாகவும் பிரச்சினைக் காலங்களில் பொலிஸாரின் கண் எதிரிலே கொலைகள் இடம்பெற்ற போது தனக்கு பொலிஸ் பதவி பற்றிய ஆசை விட்டுப் போய்விட்டதாகவும் கூறும் இவர் தனது சகோதர சகோதரிகளுடன் இணைந்து வியாபாரமொன்றை ஆரம்பிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

தனது தந்தை இறக்கும்வரை தனது பிறப்பிடத்தில் வாழ்ந்த எந்த உறவுகள் பற்றியும் இவர் அறிந்திருக்கவில்லை. இவரின் தந்தையாரின் சகோதரர் பீரிஸ்அப்பு என்றொருவர் இருந்துள்ளார். தந்தையார் இறந்த பின்பு இவரையும் இவரது உறவுகளையும் சந்திக்க வேண்டுமென பியசேன தெவிநுவரைக்கு சென்றுள்ளார். இருப்பினும்,  பியசேனவால் தனது தந்தையின் எந்தவொரு உறவினரையும் தேடிக் கொள்ள முடியவில்லை. இந்நிலையில் ஒருநாள் மாத்தறையிலிருந்து சிமெந்து ஏற்றிவந்த ஒரு லொறியில் பி.எச்.பி. பீரிஸ்அப்பு மற்றும் பொடியப்பு சகோதரர்கள் என எழுதப்பட்டிருந்ததைக் கண்டு ஒரு நப்பாசையில் அந்த லொறி சாரதியுடன் உரையாடியதன் ஊடாக தனது தந்தையின் சகோதரரின் இருப்பை இவர் தேடிக் கண்டறிந்துள்ளார். அதன் பின்பு தனது தாயின் மரணத்தின்போதே தனது தந்தையின் உறவினர்கள் வந்ததாக இவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது மாத்தறையிலுள்ள தனது தந்தையின் உறவினர்களுடன் தொடர்புகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ள இவர், 1995ஆம் ஆண்டு ஆழியடிவேம்பு பிரதேச சபை உறுப்பினராக தெரிவாவதற்காக ஈ.பி.டி.பி. அமைப்பின் ஊடாக போட்டியிட முற்பட்டார். அம்முயற்சி வெற்றிகூடாமையால் சுயேட்சையாகப் போட்டியிட்ட இவர், 5800 விருப்பு வாக்குகளைப் பெற்று தெரிவானார். இருப்பினும் பிரதேச சபையின் தலைவர் பதவி இவருக்குக் கிடைக்கவில்லை. மாறாக உப தலைவர் பதவியே கிடைத்தது. விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல்கள் மத்தியிலும் போட்டியிட்டு வெற்றியீட்டிய இவர், தொடர்ந்த உயிர் அச்சுறுத்தல் காரணமாக பிரதேச சபை உறுப்பினர் பதவியிலிருந்து கேட்டு விலகிக் கொண்டார்.

2000ஆம் ஆண்டில் நடைபெற்ற பிரதேசசபை தேர்தலில் அவருக்கு கட்சி பிரதிநிதித்துவமொன்று கிடைக்கவில்லை. 2006 பிரதேசசபை தேர்தலின்போது சிக்கல்மிகு சூழ்நிலையொன்று பிரதேசத்தில் உருவாகியிருந்தது. இச்சந்தர்ப்பத்தில் தமிழ் கூட்டணி சார்பாக இவருக்குப் போட்டியிடும் வாய்ப்புக் கிட்டியது. இத்தேர்தலில் 6800 வாக்குகளைப் பெற்ற பியசேன ஆழியடிவேம்பு பிரதேசசபைத் தலைவராக தெரிவாக்கப்பட்டார். இருப்பினும், அந்தப் பதவி ஆறு மாதங்களுக்கு மட்டுமே நீடித்தது. சிங்களவர் ஒருவரான பியசேனவுக்கு தலைவர் பதவியைக் கொடுக்க வேண்டாமென்ற பல அமைப்புகளின் நெருக்கடி காரணமாக பியசேனவின் தலைவர் பதவி பறிக்கப்பட்டது. இதற்கு விடுதலைப் புலிகளின் நெருக்கடிகள் பிரதான காரணமாயிற்று.

தலைவர் பதவியைத் துறந்தாலும் சாதாரண உறுப்பினராக இருந்து இவர் மக்களுக்கு சேவையாற்றினார். இச்சந்தர்ப்பத்தில் இடைக்கிடையே பிரதேச சபையில் தலைவர் பதவியை இவர் கோரி வேண்டுகோள் விடுத்தபோதும்கூட ஜனாதிபதித் தேர்தலையடுத்து அது பற்றி சிந்திக்கலாம் என கூட்டணித் தலைமைத்துவம் இவரிடம் கூறியுள்ளது.  இந்நிலையில் 2010 ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேக்காவின் வெற்றிக்காக கடுமையாக உழைத்ததினால் இவரின் வர்த்தக நிலையம் தீ வைத்துக் கொளுத்தப்பட்டுள்ளது.

பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் நியமனப் பத்திரம் கோரப்பட்ட நேரத்தில் பியசேனவின் பெயர் திகாமடுலை தேர்தல் மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டது. இருப்பினும்,  அச்சந்தர்ப்பத்தில் அவருக்குத் தேவைப்பட்டது பாராளுமன்றத்துக்குச் செல்வதற்காகவல்ல. மீண்டும் பிரதேசசபை தலைவராகுவதே.  மார்ச் 1ம் திகதி பிரதேச சபைத் தலைமைப் பதவியைப் பெற்றுத் தருவதாக தமிழ் கூட்டணியின் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தபோதிலும்கூட அது அவருக்குக் கிடைக்கவில்லை. தேர்தலின்போது சுவரொட்டிகள், பெனர்கள், நோட்டிஸ்கள் போன்றவற்றை தனது சொந்த செலவில் அச்சிட்டுத் தருவதாகவும்,  தனக்கு பிரதேசசபை தலைமைப்பதவியை தரும்படியும் மீண்டும் மீண்டும் இவர் கோரியுள்ளார். அதற்கு கூட்டணியினர் எந்தவித உறுதிமொழிகளையும் வழங்கவில்லை. இந்நிலையில்தான் தனது கட்சிக்கு மாத்திரமல்ல, தனது விருப்பு வாக்குகளைப் பெறுவதற்காக இவர் தீவிரமாக செயற்பட்டார்.

அச்சந்தர்ப்பத்தில் தமிழ் கூட்டணி சார்பில் ரோமியோகுமாரி, கிருஸ்ணமூர்த்தி ஆகிய வேட்பாளர்கள் இருவரும் பியசேனவுக்கு விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொடுப்பதில் அதிக அக்கறைக் காட்டியுள்ளனர். அதேநேரம், சிங்களவரான பியசேனவுக்கு வாக்குகளை வழங்க வேண்டாமெனவும் அவர் வெற்றிகண்டால் அரசாங்கத்துடன் இணைந்து கொள்வாரெனவும் கடுமையான பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இப்படிப்பட்ட பின்னணியிலேயே பியசேனவின் பாராளுமன்ற தேர்தலுக்கான போட்டி அமைந்திருந்தது. தேர்தல் முடிவுகள் வெளிவந்த பின்பு பியசேனவின் வெற்றி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அம்பாறை தேர்தல் மாவட்டத்தில் ஆளும் ஐ.ம.சு. முன்னணிக்கு 4 ஆசனங்களும், ஐ.தே.முன்னணிக்கு 2 ஆசனங்களும், தமிழரசுக் கட்சிக்கு 1 ஆசனமும் மாத்திரமே கிடைத்தது. தமிழ் கட்சியொன்றில் தமிழ் பிரதேசத்தில் போட்டியிட்டு 11,130 வாக்குகளைப் பெற்று இந்த சிங்கள பிரதிநிதியால் வெற்றியடையக்கூடிய வாய்ப்பு கிட்டியது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

“எனது தந்தை இன்று இருந்திருந்தால் அவர் மிகவும் சந்தோசப்பட்டிருப்பார். எனது தந்தை இறக்கும்போது என் தந்தையின் உறவுகளைப் பற்றி எவ்விதத்திலும் நான் அறிந்திருக்கவில்லை. தந்தையின் இறப்பின் பின்பே நான் என் உறவுகளை இனங்கண்டு கொண்டேன். இன்று நான் பாராளுமன்றத்துக்குச் செல்லப் போகின்றேன்” என்று மகிழ்ச்சியுடன் குறிப்பிடுகின்றார் பியசேன.

“ஏழை மக்கள் துயரமடைகின்றனர். மந்திரிகள் அரசர்கள் போல் நடமாடுகின்றனர். நல்ல அரசு இருக்கின்றது. நல்ல அரசாங்கம் இருக்கின்றது. இருப்பினும், மக்கள் துயரமடைகின்றனர். தூய பௌத்த சிங்களவன் இனவாதத்துக்கு அப்பாற்பட்டவன். தமிழரசுக் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கபட்ட நான் இனவாதத்துக்கப்பால் நின்று மக்களுக்கு சேவை செய்வேன்” என்றும் குறிப்பிட்டிருந்தார்.

(இக்கட்டுரை ‘ரீவிர’ பத்திரிகையைத் தழுவி பியசேனவின் உதவியாளர்களுடன் பெறப்பட்ட தகவல்களையும் மையமாகக் கொண்டு எழுதப்பட்டது.)  

நாட்டின் மூன்றாவது அரசியல் சக்தியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு : செல்வம் அடைக்கலநாதன்

ஏழாவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது அரசியல் சக்தியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவெடுத்துள்ளது. அந்த வகையில் தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் மற்றும் அரசியல் தீர்வு தொடர்பில் பேரம் பேசுவதற்கான சக்தியாகவும் மக்கள் மாற்றியமைத்து ஆணை வழங்கியுள்ளனர் என்று ரெலோவின் தலைவரும், வன்னி மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ளவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

தமிழ் மக்களுக்கான நிரந்தரமானதும் ஏற்றுக் கொள்ளக் கூடியதுமான அரசில் தீர்வு எனும் விடயத்தில் சர்வதேசத்தின் தலையீடு இன்றியமையாதது என்பதை வலியுறுத்துகின்ற அதேவேளை, இலங்கை அரசாங்கம் பொறுப்புணர்ந்து செயற்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் சொன்னார். கூட்டமைப்பின் எதிர்கால நோக்கு தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே செல்வம் அடைக்கலநாதன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரை, அதன் குரல் தமிழ் மக்களுக்காகவே ஒலித்துக் கொண்டிருக்கும் என்பதில் எந்த மாற்றமும் கிடையாது. இதனை ஏற்றுக் கொள்ளும் வகையிலேயே வடக்கு கிழக்கைச் சேர்ந்த தமிழ் மக்கள் வாக்களித்துள்ளனர்.

தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் எந்தவொரு அரசாங்கத்தினாலும் நிறைவேற்றப்படாத ஒன்றாகவே இருந்து வருகின்ற நிலையில் தொடர்ந்தும் அதே போக்கு கடைப்பிடிக்கப்படுமானால் அது நாட்டின் ஆரோக்கியமான தன்மைக்கு ஏற்றதாக அமையாது.

தற்போது வடக்கின் அடிப்படைத் தேவைகளில் முக்கியமானது இடம்பெயர்ந்த மக்களின் மறுவாழ்வுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகும். மீள்குடியேற்றம் என்பதும் அபிவிருத்தி என்பதும் உண்மைத் தன்மையானதாக அமைய வேண்டும் என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையாக இருக்கின்றது.

அடுத்ததாக போரினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் ஊனமுற்றவர்களின்பால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தல், போரினால் கணவரை இழந்து தவிக்கும் விதவைகள் மற்றும் அநாதரவாக்கப்பட்டுள்ளவர்களின் நிலைமையுணர்ந்து ஏற்ற வகையிலான தீர்வுகளை எட்டுதல் மற்றும் தற்போது சிறையிலடைக்கப்பட்டுள்ள அப்பாவி இளைஞர் யுவதிகள், அரசியல் கைதிகள் ஆகியோரின் விடுதலை உள்ளிட்ட முதற் கட்டத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதில் நாம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தீர்மானித்திருக்கின்றோம்..

இதற்காக நாம் அரசாங்கத்தை வற்புறுத்தவிருக்கின்றோம். இதற்கு அடுத்த கட்டமாக இருப்பதுதான் எமது உரிமையான அரசியல் தீர்வாகும். தமிழ் மக்களின் தேவைகள் மற்றும் அது தொடர்பிலான தமது நிலைப்பாடுகளை தேர்தல்களின் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர்.

தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான நிரந்தர அரசியல் தீர்வொன்று அவசியம் என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத்திலும் நாடாளுமன்றத்துக்கு வெளியிலும் வலியுறுத்தி வந்துள்ளது. அது மட்டுமல்லாது எமது சமூகத்தின் தேவை குறித்து சர்வதேசத்துக்கு உணர்த்தப்பட்டுள்ளது. இதனை சர்வதேசமும் உணர்ந்துள்ளது.

எனவே, தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில் சர்வதேசத்தின் பங்கு முக்கியமானதாகும். வடக்கு கிழக்கு மக்களின் தீர்ப்பின் பிரகாரம் அரசாங்கத்துடன் பேரம் பேசும் சக்தியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவெடுத்துள்ளது. அதற்காகவே மக்களும் ஆணை வழங்கியுள்ளனர். அது மட்டுமல்லாது நாட்டின் மூன்றாவது அரசியல் சக்தியாகவும் நாம் இருக்கின்றோம்.

எனவே அரசாங்கம் தமிழ் மக்கள் விடயத்தில் தமது பொறுப்பினை தட்டிக் கழிக்க முடியாது.

பிளவுகளே காரணம்

அதேவேளை, கடந்த பாராளுமன்றத்தில் 22 உறுப்பினர்களைக் கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இம்முறை ஆசனங்கள் குறைவடைந்துள்ளன. இதற்கு எம்மிடையே ஏற்பட்ட பிளவுகளே காரணமாக அமைத்துள்ளன. இது மட்டுமல்லாது மிரட்டல்கள், அச்சுறுத்தல்கள் காரணமாக தமிழ் வாக்காளர்களின் வாக்களிப்பு வீதமும் குறைவடைந்து விட்டது. எது எப்படி இருப்பினும் வடக்கு கிழக்கின் தமிழ்ப் பிரதிநிதித்துவம் குறைவடைந்தமைக்கு கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்களே காரணமாகி விட்டனர்.

இனிவரும் காலங்களில் தவறுகள் உணரப்பட்டு ஓரணியாக ஒரே தலைமைத்துவத்தின்கீழ் தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கப்பட வேண்டும் என்பது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய விடயமாகும்” என்றார்.

வீரகேசரி நாளேடு 4/12/2010

தோல்வியடைந்தவர்களுக்கு தேசிய பட்டியலில் இடமில்லை – டலஸ் அலஹப்பெரும

தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர்களோ எம்.பி.களோ எக்காரணம் கொண்டும் தேசியப் பட்டியல் மூலம் நியமிக்கப்பட மாட்டார்கள் என முன்னாள் அமைச்சர் டலஸ் அலஹப்பெரும நேற்றுத் தெரிவித்தார்.

தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் இது குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெளிவாக அறிவித்துள்ளார். தேசியப் பட்டியலில் பெயர் குறிப்பிடப்பட்டவர்களே எம்.பிக்களாக நியமிக்கப்படுவர். ஐ. ம. சு. முன்னணிக்கு எத்தனை தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் கிடைத்துள்ளனர் என்பது 21ம் திகதி தெரியவரும்.  அதன் பின்னர் ஐ. ம. சு. முன்னணி சார்பாக நியமிக்கப்படுபவர்களின் விபரம் ஆணையாளருக்கு அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

அமைச்சுப் பதவிகளையும், சுயநல நலன்களையும் மாத்திரம் கருத்திற் கொண்டு சிறுபான்மை பிரதிநிதிகள் செயற்படுவார்களாயின் எதிர்காலத்திலும் பாதிக்கப்படப் போவது சிறுபான்மை சமூகத்தினரே – புன்னியாமீன்

sandanaya.pngவிகிதாசார முறையின் கீழ் 7ஆவது பாராளுமன்றத்துக்காக நடைபெற்ற தேர்தல் முடிவுகளில் 20 தேர்தல் மாவட்ட முடிவுகள் உத்தியோகபூர்வமாக வெளியாகிவிட்டன. இம்முடிவுகளின்படி ஆளும் ஐ.ம.சு.முன்னணிக்கு 117 ஆசனங்களும், ஐ.தே. முன்னணிக்கு 46 ஆசனங்களும்,  இலங்கை தமிழரசுக் கட்சிக்கு 12 ஆசனங்களும், ஜனநாயக தேசிய முன்னணிக்கு 05 ஆசனங்களும் கிடைத்துள்ளன. மக்களால் தேர்ந்தெடுக்கப்படக்கூடிய மொத்தம் 196 பிரதிநிதிகளுள் 180 பிரதிநிதிகள் மேற்குறிப்பிட்ட அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

கண்டி, திருகோணமலை ஆகிய மாவட்டங்களின் உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் இதுவரை வெளிவரவில்லை. கண்டி மாவட்டத்தில் 12 உறுப்பினர்களும்,  திருகோணமலை மாவட்டத்தில் 04 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட வேண்டியுள்ளனர். தேர்தல்  முடிவுகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள கண்டி மாவட்டத்தின் நாவலப்பிட்டிய தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள 34 வாக்கெடுப்பு நிலையங்களிலும், திருகோணமலையில் அமைந்துள்ள 01 வாக்கெடுப்பு நிலையத்திலும் வாக்கெடுப்பு எதிர்வரும் 20ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இதையடுத்து அகில இலங்கை ரீதியான பெறுபேறுகள் மற்றும் தேசியபட்டியல் பிரதிநிதிகள் விபரங்களும் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும்.

இம்முறை தேர்தலில் ஆளும் கட்சி மூன்றில் இரண்டு பாராளுமன்றப் பலத்தினையே வாக்காளர்களிடம் எதிர்பார்த்திருந்தது. விகிதாசார தேர்தல் முறையின் கீழ் மூன்றில் இரண்டு பாராளுமன்றப் பலத்தைப் பெறுவதென்பது இலகுவான காரியமல்ல. 1977ம் ஆண்டு ஜே.ஆர். ஜயவர்தன தலைமையிலான ஐ.தே.க. ஆறில் ஐந்து பாராளுமன்றப் பலத்தைப் பெற்றது. அச்சமயம் இலங்கையில்  நடைமுறையிலிருந்த தேர்தல் முறை பெரும்பான்மை தேர்தல் முறையேயாகும். தமது அறுதிப் பெரும்பான்மை பலத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவே 1982ம் ஆண்டில் ஐ.தே.க. மக்கள் தீர்ப்பின் மூலம் பாராளுமன்றத்தின் பதவிக்காலத்தை 06 ஆண்டுகளுக்கு நீடித்துக் கொண்டது. விகிதாசார முறையின் கீழ் 1988, 1994, 2000, 2002, 2004 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களின்போது மூன்றில் இரண்டு பாராளுமன்றப் பலத்தை எந்தவொரு கட்சியினாலும் பெற முடியவில்லை. இக்கட்டத்தில் சிலசந்தர்ப்பங்களில் பாராளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையை தக்கவைத்துக் கொள்ளவும் கட்சிகள் போராடியதை அவதானிக்க முடிந்தது. இப்படிப்பட்ட பின்னணியில் ஜனாதிபதி இம்முறை தேர்தலில் மூன்றில் இரண்டு பாராளுமன்றப் பலத்தினை எதிர்பார்த்தது அபரிமிதமான எதிர்பார்ப்பு என்றாலும் பிழையாகாது.

இம்முறை தேர்தல் முடிவுகளை அவதானிக்கும்போது தற்போது வெளிவந்துள்ள உத்தியோகபூர்வ முடிவுகளின்படி ஆளும் ஐ.ம.சு.முன்னணி 117 ஆசனங்களைப் பெற்று இலகுவாக அறுதிப் பெரும்பான்மையை அடைந்துவிட்டது. 225 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் 113 உறுப்பினர்களை வென்றால் அது அறுதிப் பெரும்பான்மையாகிவிடும். இந்நிலையில் மேலும் 6 ஆண்டுகளுக்கு ஆளும் ஐ.ம.சு.முன்னணியால் நெருக்கடிகளின்றி அரசாங்க அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ள முடியும்.

தற்போது உத்தியோகபூர்வ முடிவுகள் வெளிவராத கண்டி மாவட்டத்தில் 08 பிரதிநிதிகளும்,  திருகோணமலை மாவட்டத்தில் 02 பிரதிநிதிகளும் தெரிவாவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அவ்வாறாயின் ஆளும் கட்சியின் ஆசனப் பலம் 127ஆக அதிகரிக்கலாம். தற்போதை வெளிவந்துள்ள உத்தியோகபூர்வ முடிவுகளின்படி ஆளும் கட்சிக்கு 17 தேசியப் பட்டியல் பிரதிநிதித்துவம் கிடைக்கக்கூடிய வாய்ப்புண்டு. அவ்வாறாயின் ஆளும் கட்சியின் பலம் 144ஆக அதிகரிக்கலாம். (முழுமையான முடிவுகள் வெளிவந்த பிறகு இந்த எண்ணிக்கை சற்று கூடிக் குறைய வாய்ப்புண்டு. எனவே, மூன்றில் இரண்டு பாராளுமன்றப் பலத்தைப் பெற்றுக்கொள்ள ஆளும் கட்சிக்கு 06 அல்லது 07 அங்கத்தவர்களே தேவைப்படலாம்.

கடந்த கால அனுபவங்களுடன் ஒப்புநோக்கும்போது இந்த சிறிய எண்ணிக்கையினை ஆளும் கட்சியினால் பெற்றுக் கொள்வது கடினமான செயல் என எதிர்பார்க்க முடியாது. எனவே, விரைவில் ஆளும் கட்சி மூன்றில் இரண்டு பாராளுமன்றப் பலத்தை தனதாக்கிக் கொள்ளும் என எதிர்பார்க்கலாம்.

ஆளும் கட்சியினால் மூன்றிலிரண்டு பாராளுமன்றப் பலம் எதிர்பார்க்கப்பட்டதன் பிரதான நோக்கம் அரசியலமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டேயாகும். குறிப்பாக ஆளும் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட வேண்டுமென எதிர்பார்க்கப்பட்ட இத்தகைய மாற்றங்களை மூன்று கட்டங்களின் கீழ் நோக்க முடியும்.
 
01. இலங்கையில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு அரசியலமைப்பினூடாக ஒரு தீர்வினை வழங்குதல். இவ்வாறு வழங்குமிடத்து சர்வதேச நெருக்கடிகளிலிருந்து தவிர்ந்து கொள்ள இடமுண்டு. 

02. தற்போது இலங்கையில் காணப்படக்கூடிய தேர்தல் முறையில் மாற்றத்தினை ஏற்படுத்துதல். விகிதாசார தேர்தல் முறையின் கீழ் எந்தவொரு ஆளும் கட்சியாலும் கூடிய பெரும்பான்மையினை தக்கவைத்துக் கொள்ள ஏனைய கட்சிகளுடன் கூட்டிணைய வேண்டிய நிர்ப்பந்தம் காணப்பட்ட நிலையை மாற்றியமைப்பது. 

03. ஜனாதிபதி ஆட்சிமுறையினை மாற்றியமைத்தல். 1994ம் ஆண்டு முதல் தெரிவு செய்யப்படும் ஒவ்வொரு ஜனாதிபதியும் ஜனாதிபதி ஆட்சி முறையை மாற்றியமைக்க வேண்டுமென வாக்குறுதிகளை வழங்கியே வந்துள்ளனர். 2010ம் ஆண்டு தற்போதைய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டுள்ளது 2ஆவது பதவிக்காலத்துக்காகும். அரசியலமைப்பு விதிகளின்படி ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படக்கூடிய ஒருவருக்கு 06 ஆண்டுகளைக் கொண்ட 02 பதவிக்காலங்களுக்கு மட்டுமே செயற்படலாம். எனவே, இத்தடவை ஜனாதிபதி இம்முறையினை மாற்றுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்வார் என எதிர்பார்க்கலாம்.

மேற்குறிப்பிட்ட 03 விடயங்களில் இனப்பிரச்சினைக்கான அரசியல் ரீதியான தீர்வென்பது விசாலமான ஆய்வுக் கருப்பொருளாகும். இது பற்றி மற்றுமொரு கட்டுரையில் விரிவாக ஆராய்வோம். தவிர,  தேர்தல் முறையினை மாற்றியமைத்தல் என்ற விடயத்தை எடுத்துநோக்குமிடத்து 1948ம் ஆண்டு இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து பெரும்பான்மை தேர்தல் முறையின் கீழே இலங்கையில் சகல தேர்தல்களும் நடைபெற்றுவந்துள்ளன. இத்தேர்தல் முறையின் கீழ் ஒரு தேர்தல் தொகுதியில் கூடிய வாக்குகளைப் பெற்றவர் பிரதிநிதியாக செயல்படுவார். இலங்கையைப் பொறுத்தவரையில் வடக்கு கிழக்கு மாகாணங்களைத் தவிர,  ஏனைய பிரதேசங்களில் சிறுபான்மை சமூகத்தினர் வாழ்ந்தாலும்கூட,  செறிவாக வாழ்வதில்லை. தொகுதி ரீதியாக நோக்குமிடத்து அவர்கள் பெரும்பான்மை சமூகத்தினருடன் இணைந்தே வாழ்ந்து வருகின்றனர். இதனால்தான் வடக்கு கிழக்கு மாகாணங்கள் தவிர,  ஏனைய பிரதேசங்களில் சிறுபான்மை பிரதிநிதித்துவத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காக வேண்டி சோல்பரி யாப்பின் கீழ் இரட்டை அங்கத்தவர் தொகுதி அல்லது பல அங்கத்தவர் தொகுதி ஏற்படுத்தப்பட்டது. விகிதாசார முறையுடன் ஒப்புநோக்கும்பொழுது பெரும்பான்மை முறையின் கீழ் சிறுபான்மை பிரதிநிதித்துவம் குறைவடையக்கூடிய நிலை கணிசமாக உண்டு.

விகிதாசார தேர்தல் முறையில் பல குறைபாடுகள் உள்ளது என்பது உண்மை. இருப்பினும்,  விகிதாசார தேர்தல் முறையின் கீழ் சிறுபான்மைக் கட்சிகளுக்கும்,  சிறிய கட்சிகளுக்கும் தமது பிரதிநிதிகளைப் பெற்றுக் கொள்ளக்கூடிய நிகழ்த்தகவு உண்டு. எனவேää தேர்தல் முறையை மாற்றியமைத்தல் எனும் போது தற்போதைய உத்தேச ஏற்பாடாக ஜெர்மனியில் காணப்படக்கூடிய தேர்தல் முறையினை ஒத்ததாக ஒரு முறையினை அறிமுகஞ் செய்யும் ஏற்பாடே காணப்படுகின்றது. குறிப்பாக அறிமுகப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள தேர்தல் முறையில் 160 பிரதிநிதிகள் நேரடியாக தொகுதி வாரியாகவும் மீதமான பிரதிநிதிகள் மாவட்ட அல்லது தேசிய ரீதியாக வாக்குகள் பெறக்கூடிய விகிதாசாரத்துக்கமைய விகிதாசார முறையின் கீழும் தெரிவு செய்யப்படலாம் எனக் கருதப்படுகின்றது.

கடந்த தேர்தலுடன் ஒப்புநோக்கும்போது நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் சிறுபான்மை பிரதிநிதித்துவம் வெகுவாகக் குறைந்துள்ளதை அவதானிக்கலாம். நடைபெற்ற தேர்தலின்படி கொழும்பு மாவட்டத்தில் ஆளும்.ஐ.ம.சு.முன்னணி சார்பில் ஏ.எச்.எம். பவுஸியும்,  ஐ.தே.முன்னணி சார்பில் பிரபா கணேசனும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 

நுவரெலியா மாவட்டத்தில் ஐ.ம.சு.முன்னணி சார்பில் போட்டியிட்ட ஆறுமுகன் தொண்டமான், வி. ராதாகிருஸ்ணன், பி. ராஜதுறை ஆகியோரும்,  ஐ.தே.மு. சார்பில் பி. திகாம்பரம், ஜெயரத்னம் ஸ்ரீரங்கா ஆகியோர் உட்பட ஐவர் தெரிவாகினர்.  யாழ்ப்பாண மாவட்டத்தில் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த மாவை சேனாதிராஜா,  சுரேஸ் பிரேம்சந்திரன்,  அப்பாதுறை விநாயகமூர்த்தி,  பீ.சரவனபவண்,  சிவஞானம் ஸ்ரீதரன் ஆகியோரும்,  ஐ.ம.சு.மு. சார்பில் டக்ளஸ் தேவானந்தா,  சிலுவெஸ்திரி உதயன், முருகேசு சந்திரகுமார் ஆகியோரும்,  ஐ.தே.மு. சார்பில் விஜயகலா மகேஸ்வரனும் தெரிவாகியுள்ள அதேநேரத்தில்,  வன்னி மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் அ. அடைக்கலநாதன்,  எஸ். நோகராதலிங்கம்,  சிவசக்தி ஆனந்தன் ஆகியோரும் ஐ.ம.சு.மு. சார்பில் அப்துல் ரி~hத் பதியுதீன்,  ஜுனைஸ் பாரூக் ஆகியோரும் ஐ.தே.மு. சார்பில் நூர்டீன் மசூரும் தெரிவாகியுள்ளனர். கேகாலை மாவட்டத்தில் ஐ.தே.முன்னணி சார்பில் கபீர் ஹசீம் தெரிவாகியிருந்தார்.

திகாமடுலை தேர்தல் மாவட்டத்தில் ஐ.ம.சு.மு. சார்பில் ஏ.எல்.எம். அதாஉல்லாää ஐ.தே. முன்னணியில் எம்.எச்.எம். ஹரீஸ்,  பைசல்காசிம் ஆகியோர் வெற்றிபெற்றனர். இம்மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி சார்பில் வெற்றியீட்டியுள்ளவர் பீ.எச்.பி.பியசேன. இவர் ஒரு பெரும்பான்மை சமூகத்தவரே. மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி சார்பில் சீனிதம்பி யோகேஸ்வரன், பொன்னம்பலம் செல்வராசா, அரியநேத்திரன் பாக்கிய செல்வம் ஆகியோரும்,  ஐ.ம.சு.மு. சார்பில் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவும், ஐ.தே.மு. சார்பில் பசீர சேகு தாவூத் தெரிவாகியுள்ளனர்.

அதேநேரம், கம்பஹா,  களுத்துறை, மாத்தளை, காலி, மாத்தறை,  ஹம்பாந்தோட்டை குருணாகல்,  புத்தளம், பொலனறுவை, பதுளை, மொனராகலை, இரத்தினபுரி தேர்தல் மாவட்டங்களிலிருந்து சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒரு பிரதிநிதியாவது தேர்ந்தெடுக்கப்படாமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

திருகோணமலை மாவட்டத்தில் உத்தியோகபூர்வமான தேர்தல் முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. உத்தியோகபற்றற்ற தகவல்களின்படி  ஆகக்கூடிய வாக்குகளைப்பெற்ற ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு போனஸ் ஆசனத்தையும் சேர்த்து இரண்டு ஆசனங்கள் கிடைக்குமெனவும் ஐக்கிய தேசியக்கட்சிக்கு ஒரு ஆசனமும் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு ஒரு ஆசனமும் கிடைக்குமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. ஆளும் ஐக்கிய சுதந்திர முன்னணிக்கு கிடைக்கும் இரண்டு ஆசனங்களும் விருப்புவாக்குகளில் முன்னணியில் நிற்கும் அமைச்சர் புஞ்சிநிலமே, எம்.கே.ஏ.டி.எஸ். குணவர்த்தன ஆகியோருக்குக் கிடைக்கலாம் என்றும்  ஐக்கிய தேசியக்கட்சிக்குரிய ஆசனம் எம்.எஸ்.தௌபீக்குக்கு கிடைக்கும் என்றும் இலங்கைத் தமிழரசுக்கட்சிக்குரிய ஆசனம் அதன் முதன்மை வேட்பாளர் இரா.சம்பந்தனுக்கு கிடைக்குமென்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. திருகோணமலை மாவட்டத்தில் மொத்தமாக தேர்ந்தெடுக்கப்படக்கூடிய நான்கு உறுப்பினர்களுள் இரண்டு உறுப்பினர்கள் பெரும்பாhன்மை சமூகத்திலிருந்தும் மீதமான இரு உறுப்பினர்களும் சிறுபான்மை சமூகத்தினரிலிருந்தும் தெரிவாக்கப்படுகின்றனர்.

கண்டி மாவட்டத்திலும் தேர்தல் முடிவுகள் இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. கிடைக்கும் உத்தியோகபூர்வமற்ற தகவல்களின் அடிப்படையில் ஆளும் ஐ.ம.சு.முன்னணிக்கு எட்டு ஆசனங்களும் ஐக்கிய தேசிய முன்னணிக்கு நான்கு ஆசனங்களும் கிடைத்துள்ளதாக தெரியவருகின்றது. ஆளும் ஐ.சு.மு. சார்பில் பைசர் முஸ்தபாவும் ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் ரவூப் ஹக்கீம்,  அப்துல் காதர்,  எம்.எச்.ஏ. ஹலீம் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. எதிர்வரும் 20ஆம் திகதி நாவலப்பிட்டிய தேர்தல் தொகுதியில் 34 வாக்களிப்பு நிலையங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. இம்முடிவு சிலநேரங்களில் மேற்குறிப்பிட்ட முடிவினை மாற்றியமைக்கலாம். எவ்வாறாயினும் 12 அங்கத்துவர்களைக் கொண்ட கண்டி மாவட்டத்தில் 4 முஸ்லிம் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என ஊகிக்கப்படுகின்றனர்.

எவ்வாறாயினும், ஆளும். ஐ.ம.சு.முன்னணி பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பலத்தை வைத்து தேர்தல் முறையினை மாற்றியமைக்க முற்படுமிடத்து தெரிவு செய்யப்பட்டுள்ள சிறுபான்மை பிரதிநிதிகள் கட்சி,  இன வேறுபாடுகளுக்கப்பால் நின்று சிறுபான்மையினரின் நலவுரிமையினைப் பேணக் கூடிய வகையில் நடக்க வேண்டியது எதிர்கால சந்ததியினரின் நன்மை கருதிய ஒரு தூரதிருஸ்டி பயணத்தின் முதற்படியாக இருக்கலாம். குறிப்பாக தொகுதி வாரியான தெரிவு முறைக்கப்பால் விகிதாசார முறையில் கட்சிகள் பெறக்கூடிய வாக்கு வீதத்துக்கமைய தெரிவு செய்யப்படக்கூடிய பிரதிநிதித்துவத்தில் சிறுபான்மை பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதில் இவர்கள் கூடிய ஆர்வமிக்கவர்களாக இருத்தல் வேண்டும். 2010 பாராளுமன்ற பொதுத் தேர்தலில் அதிக கட்சிகள் போட்டியிட்டாலும்கூடää இரு கட்சி முறை மாதிரிக்கமையவே தேர்தல் முடிவுகள் அமைந்திருந்தன. இதனை கூடிய கரிசனையில் கொள்ளுதல் வேண்டும்.

2010 ஜனாதிபதித் தேர்தலில் வாக்கு முடிவுகளை அவதானிக்கும்போது இலங்கையில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்ள சிறுபான்மையினரின் ஒத்துழைப்பு அவசியமில்லை என்ற நிலை உருவாக்கம் பெற்றது. பாராளுமன்றப் பொதுத் தேர்தல் முடிவுகளை மிகவும் ஆழமான முறையில் மீளாய்வு செய்வோமாயின் இலங்கையில் அரசாங்க அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ளவும் சிறுபான்மையினர் அவசியமில்லை என்ற ஒரு நிலையே மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  இந்தப் போக்கு தற்போது அழுத்தமான முறையில் கவனத்திற் கொள்ளப்படாவிடின் எதிர்காலத்தில் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த பிரதான கட்சிகள் பெரும்பான்மை சமூகத்தினரின் வாக்குகளைப் பெற்றுக் கொள்ளவே திட்டமிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்பதில் எவ்வித ஐயப்பாடுமில்லை.

எனவே,  தெரிவு செய்யப்பட்டுள்ள சிறுபான்மை பிரதிநிதிகள் தத்தமது சுயநல நோக்குகளை மாத்திரம் கருத்திற் கொள்ளாது அல்லது நாட்டின் அரசியல் நிலைமைகளுக்கப்பால் சென்று வெளிநாட்டு நிகழ்ச்சித்திட்டங்களுக்கமைய செயல்படாது இருக்க வேண்டியது ஒரு கட்டாயக் கடமையாகின்றது. மாறாக தத்தமது அமைச்சுப் பதவிகளையும் அல்லது தத்தமது சுயநல நலன்களையும் மாத்திரம் கருத்திற் கொண்டு இவர்கள் நடப்பார்களாயின் எதிர்காலத்தில் பாதிக்கப்படப் போவது சிறுபான்மை சமூகத்தினர் என்பதை இவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். இந்த வரலாற்று உண்மைக்கு இவர்கள் காலத்தால் பதில் அளித்தே ஆக வேண்டும்