September

September

ஐ.சி.சி. சம்பியன் கிண்ணம்- India won by 7 wickets

sep-14-2009-india.jpgஇன்று ஐ.சி.சி. சம்பியன் கிண்ணத்துக்கான ஏ பிரிவு ஆட்டத்தில் இந்தியா அணி மேற்கிந்தியத் தீவுகள் அணியுடன் மோதுகிறது. பகல் இரவு ஆட்டமாக இப்போட்டி தற்போது நடைபெற்றுக்கொண்டுள்ளது.

India won the toss and elected to field

 West Indies innings (50 overs maximum)
 ADS Fletcher†  c Dravid b Kumar  0 
 KOA Powell  c †Dhoni b Nehra  5 
 DS Smith  c †Dhoni b Nehra  21 
 TM Dowlin  b Dhoni  14
 FL Reifer*  c Karthik b Kumar  1 
 DE Bernard  c Dravid b Mishra  22 
 DJG Sammy  c Mishra b Nehra  23
 RT Crandon  b Harbhajan Singh  5
 NO Miller  not out  17  
 KAJ Roach  c Gambhir b Harbhajan Singh  4 
 GC Tonge  c & b Kumar  5 
 Extras (lb 4, w 7, nb 1) 12     
      
 Total (all out; 36 overs) 129 (3.58 runs per over)
Fall of wickets1-0 (Fletcher, 0.6 ov), 2-26 (Powell, 7.4 ov), 3-27 (Smith, 7.6 ov), 4-31 (Reifer, 10.2 ov), 5-57 (Dowlin, 16.4 ov), 6-89 (Bernard, 26.6 ov), 7-99 (Sammy, 29.1 ov), 8-102 (Crandon, 30.6 ov), 9-122 (Roach, 34.3 ov), 10-129 (Tonge, 35.6 ov) 
        
 Bowling
 P Kumar 9 3 22 3
 A Nehra 8 1 31 3 
 AM Nayar 3 0 17 0  
 MS Dhoni 2 0 14 1
 Harbhajan Singh 8 2 14 2
 A Mishra 6 0 27 1

 India innings (target: 130 runs from 50 overs)
 KD Karthik  c Dowlin b Tonge  34 
 G Gambhir  b Roach  6 
 R Dravid  run out (Bernard)  4 
 V Kohli  not out  79  
 AM Nayar  not out  0  
 Extras (w 3, nb 4) 7     
      
 Total (3 wickets; 32.1 overs) 130 (4.04 runs per over)
Did not bat SK Raina, MS Dhoni*†, A Mishra, Harbhajan Singh, A Nehra, P Kumar 
Fall of wickets1-7 (Gambhir, 2.5 ov), 2-12 (Dravid, 3.2 ov), 3-104 (Karthik, 27.4 ov) 
        
 Bowling O M R W Econ  
 KAJ Roach 6 1 27 1
 GC Tonge 10 0 36 1
 DJG Sammy 10 1 25 0
 DE Bernard 3 0 22 0
 NO Miller 3.1 0 20 0
 
Match details
Player of the match V Kohli (India)
 

தேக்கடி படகு விபத்து: பலி 30 – 13 பேர் மீட்பு – 35 பேரைக் காணவில்லை

30-thekkady.jpgகேரள மாநிலம் தேக்கடியில் படகு கவிழ்ந்து விழுந்ததில் 30 பேர் பலியானார்கள். இவர்களில் சிலர் வெளிநாட்டினர். 13 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். 35 பேரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் தேக்கடியில் படகு குழாம் உள்ளது. இங்கு படகு சவாரி மிகவும் பிரபலம்.

இன்று மாலை ஒரு இரண்டு அடுக்குப் படகில் 70க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி சென்றனர். அப்போது யானைக் கூட்டத்தைப் பார்த்த சுற்றுலாப் பயணிகள் யானைகளை நன்றாகப் பார்க்க வேண்டும் என்பதற்காக படகின் ஒரே பகுதியில் திரண்டனர். இதனால் பாரம் தாங்காமல் படகு ஏரியில் மூழ்கியது. இதில் படகில் இருந்த அனைவரும் ஏரியில் மூழ்கினர். நீரில் மூழ்கி பலர் பலியானார்கள். இதுவரை 30 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 13 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். 35 பேரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படகில் இருந்த அனைவருமே நீரில் மூழ்கியுள்ளதால் பலி  எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. ஏரியில் மூழ்கியவர்களை மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. மீட்புப் பணிக்கு உதவுமாறு கடற்படைக்கு கேரள அரசு  கோரிக்கை விடுத்துள்ளது. சம்பவம் நடந்த பகுதிக்கு மீட்புப் படைகள் விரைந்துள்ளன. தற்போது இருள் சூழ்ந்து விட்டதால் மீட்புப் பணியில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஐ.சி.சி. சம்பியன் கிண்ணம் – Australia won by 2 wickets

260909-aus.jpgஇன்று ஐ.சி.சி. சம்பியன் கிண்ணத்துக்கான ஏ பிரிவு ஆட்டத்தில் அவுஸ்திரேலியா அணி பாக்கிஸ்தான் அணியுடன் மோதுகிறது. பகல்நேர ஆட்டமாக இப்போட்டி தற்போது நடைபெற்றுக்கொண்டுள்ளது. ஏற்கனவே  பாக்கிஸ்தான் அணி 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகள் பெற்று ஏ  பிரிவில்  அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

Australia won the toss and elected to field
ICC Champions Trophy – 11th Match, Group A
ODI no. 2903 | 2009/10 season
Played at SuperSport Park, Centurion (neutral venue)
30 September 2009 (50-over match)
       
 Pakistan innings (50 overs maximum)
 Kamran Akmal†  b Watson  44
 Shahid Afridi  c Hopes b Johnson  15 
 Younis Khan*  c Johnson b Hopes  18
 Shoaib Malik  c Ponting b Johnson  27 
 Mohammad Yousuf  c White b Lee  45
 Misbah-ul-Haq  hit wicket b Watson  41
 Umar Akmal  not out  2  
 Naved-ul-Hasan  not out  7 
 Extras (w 6) 6     
      
 Total (6 wickets; 50 overs) 205 (4.10 runs per over)
Did not bat Umar Gul, Mohammad Asif, Saeed Ajmal 
Fall of wickets1-30 (Shahid Afridi, 7.1 ov), 2-75 (Kamran Akmal, 18.3 ov), 3-89 (Younis Khan, 23.4 ov), 4-123 (Shoaib Malik, 31.5 ov), 5-186 (Mohammad Yousuf, 46.2 ov), 6-198 (Misbah-ul-Haq, 49.3 ov) 
        
 Bowling  
 B Lee 10 0 30 1
 PM Siddle 5 0 24 0  
 MG Johnson 10 0 45 2 
 SR Watson 8 0 32 2
 JR Hopes 10 0 50 1
 NM Hauritz 7 1 24 0

 Australia innings (target: 206 runs from 50 overs)
 SR Watson  c †Kamran Akmal b Umar Gul  24 
 TD Paine†  lbw b Shahid Afridi  29
 RT Ponting*  c Umar Gul b Shoaib Malik  32 
 MEK Hussey  b Naved-ul-Hasan  64 
 CJ Ferguson  b Saeed Ajmal  7 
 CL White  b Mohammad Asif  5 
 JR Hopes  c Younis Khan b Mohammad Asif  1
MG Johnson b Saeed Ajmal 9
 B Lee not out 12
 NM Hauritz not out 9
 Extras (b 1, w 12, nb 1) 14

Total (8 wickets; 50 overs) 206 (4.12 runs per over)
Did not bat PM Siddle
Fall of wickets1-44 (Watson, 8.4 ov), 2-59 (Paine, 11.3 ov), 3-140 (Ponting, 31.2 ov), 4-157 (Ferguson, 36.4 ov), 5-174 (Hussey, 40.5 ov), 6-175 (Hopes, 41.2 ov), 7-176 (White, 41.5 ov), 8-187 (Johnson, 45.5 ov)

Bowling
 Umar Gul 9 1 38 1
 Mohammad Asif 8 0 34 2
 Shahid Afridi 10 0 47 1
 Naved-ul-Hasan 9 2 39 1
 Saeed Ajmal 10 1 31 2
Shoaib Malik 4 0 16 1

ஏர் இந்தியா விமான சேவை சீரானது

26-air-india.jpgஏர் இந்தியா விமானிகள் போராட்டம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, அனைத்து விமானிகளும் இன்று பணிக்குத் திரும்பியதால், விமான சேவை சீரடைந்துள்ளது.

இதனால் ஏர் இந்தியா விமானத்தில் பயணத்திற்காக முன்பதிவு செய்திருந்த உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகள் நிம்மதிப் பெருமூச்சுடன் விமானப் பயணம் மேற்கொண்டதாக ஏர் இந்தியா வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்திகள் தெரிவிக்கின்றன. என்றாலும் ஏர் இந்தியா விமான சேவைகள் இன்றிரவுக்குள் முழு அளவில் சீரடைந்து விடும் என்றும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமானிகளின் வேலைநிறுத்தம் செய்த போது, நிறுத்தப்பட்டிருந்த முன்பதிவு விரைவில் தொடங்கும் என்று விமான நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் தெரிவித்தார்.

விமானிகள் அனைத்தும் பணிக்குத் திரும்பியுள்ள போதிலும், உரிய விமானங்கள் ஒதுக்கீடு தாமதமாவதால், ஒரு சில விமான சேவைகள் இன்று ரத்து செய்யப்பட்டன.

முக்கிய விமான நிலையங்களில் கூடுதல் பணியாளர்களை நியமித்து ஏர் இந்தியா பயணிகளின் குறைகளை நிவர்த்தி செய்து வருவதாகவும் அவர் கூறினார்.

விமானிகளின் வேலைநிறுத்தத்தால் ஏற்பட்ட அசவுகரியங்களுக்கு தங்கள் நிறுவனம் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும், ஏர் இந்தியா கவுன்டர்களுக்கு பயணிகள் சென்று தங்களின் கோரிக்கைகளை தெரிவித்து தகவல்களை அறிந்து கொள்ளலாம் என்றும் அந்த அதிகாரி கூறினார்.

சுமத்ராவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் – இலங்கைக்கு பாதிப்பில்லை என அறிவிப்பு

இந்தோனேஷிய,  சுமத்ராவில் சற்று முன்னர் சக்தி வாய்ந்த நில நடுக்கம் உணரப்பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ரிச்டர் அளவில் இது 7.9 ஆகப் பதியப்பட்டுள்ளது. எனினும் இதன் விளைவாக இலங்கைக்கு எதுவித பாதிப்பும் இல்லையென வளி மண்டல திணைக்களம்  தெரிவித்துள்ளது.

மலேஷியா,  சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் இந்த நில நடுக்கம் உணரப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து இந்நாடுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நில நடுக்கத்தை அடுத்து கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. சேத விவரங்கள் எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

அமெரிக்க சமாவோ தீவில் இன்று காலை ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தில் 100 பேர் பலியானது தெரிந்ததே. 

மத வழிபாட்டுத் தலங்களுக்கு குறைந்த விலையில் சீமெந்து – அமைச்சர் பந்துல தகவல்

300909cement.pngமத வழிபாட்டுத் தலங்களில் மேற்கொள்ளப்படும் நிர்மாணப் பணிகளுக்கு குறைந்த விலையில் சீமெந்தை விநியோகிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். மதத்தலங்களுக்கு குறைந்த விலையில் சீமெந்தை வழங்கும் திட்டம் அரசாங்க கட்டடப் பொருள் கூட்டுத்தாபனத்தில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

இந்த திட்டத்தின் கீழ்; வணக்கஸ்தலங்களுக்குத் தேவையான 50 கிலோ கிராம் சீமெந்துப் பொதி ஒன்றை சந்தை விலையினை விட 120 ரூபா குறைவாகப் பெற்றுக்கொள்ள முடியும். குறைந்தது 50 பொதிகளைக் கொள்வனவு செய்தாலே இச்சலுகை வழங்கப்படும். இந்தச் சலுகையைப் பெற விரும்பும் வணக்கஸ்தலங்களின் நிர்வாகிகள் தமது விண்ணப்பங்களை கட்டடப் பொருள் கூட்டுத்தாபனத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அமைச்சர் அங்கு மேலும் குறிப்பிட்டார்.

சமோவோ தீவுகளில் சுனாமி – 100 பேர் பலி

300909samova_tsunamy.pngபசிபிக் பெருங்கடலில் உள்ள  சமோவோ மற்றும் அமெரிக்கன் சமோவோ ஆகிய தீவுகளில் ஏற்பட்ட சுனாமியால் 100 பேர் பலியானார்கள். பசிபிக் பெருங்கடலில் உள்ள சமோவா தீவுக் கூட்டமே இந்தத் தாக்கத்துக்கு உள்ளாகியிருக்கின்றன. இதில் சமோவா என்ற நாடும் அமெரிக்காவுக்குச் சொந்தமான அமெரிக்கன் சமோவா என்ற தீவும் அடங்குகின்றன்

இவற்றின் சில பகுதிகளில் நேற்று 8 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து கடல் கொந்தளித்து சுனாமி வந்ததால்,  நிலப்பரப்புக்குள் கடல் நீர் புகுந்தது. கடற்கரையோர விடுதிகளில் நீர் புகுந்ததில் 100 பேர் பலியானதாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு மீட்புப் பணிகளுக்கு உதவ அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முன்வந்திருக்கின்றன.

வருட இறுதிக்குள்; தாண்டிக்குளம் முதல் முகமாலை வரையான ரயில் சேவைகள் – போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை

train0000.jpgஇவ்வருட இறுதிக்குள்; தாண்டிக்குளத்தில் இருந்து முகமாலை வரையான ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்தது.  யாழ்தேவி ரயில் சேவையை காங்கேசன்துறை வரை விஸ்தரிக்கும் திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

தாண்டிக்குளத்தில் இருந்து காங்கேசன்துறை வரையுள்ள 27 ரயில் நிலையங்களையும் நிர்மாணிக்கும் பொறுப்புகளை 27 உள்நாட்டு வெளிநாட்டு அனுசரணையாளர்கள் ஏற்றுள்ளனர். அதன்படி காங்கேசன்துறை வரையான ரயில் நிலையங்களை மீளமைக்கும் பணிகள் 27 உள்நாட்டு வெளி நாட்டு நிறுவனங்களுக்கு இன்று உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படுகின்றது.

போக்குவரத்து அமைச்சர் டளஸ் அழகப்பெருமா இன்று உத்தியோகபூர்வமாக இதனைக் கையளிக்கின்றார்

முகாம் மக்கள் கௌரவமாக நடத்தப்பட வேண்டும் : வோல்டர் கெலின்

210909walter-kalin.jpg“மிகுந்த கஷ்டத்துடனும் ஆபத்துடனும் நெருக்கடி மிகுந்த முகாம்களுக்குள் வாழ்ந்துவரும் மக்களுக்கான சகல வசதிகளையும் உடனடியாக பூர்த்தி செய்வது இயலாத செயல்தான். என்றாலும் அவர்களை முகாம்களிலிருந்து சுதந்திரமாகவும் பாதுகாப்புடனும் கௌரவத்துடனும் வெளியேறுவதற்கும் இஷ்டம் போல சொந்த வீடுகளுக்குச் செல்வதற்கும் அனுமதிக்க வேண்டும் “என்று இடம்பெயர் மக்களுக்கான ஐ.நா. செயலாளர் நாயகத்தின் பிரதிநிதி வோல்டர் கெலின் தெரிவித்துள்ளார். இந்த மக்களை விடுவிக்கும் நடவடிக்கைகள் மிகவும் மந்தகதியில் இடம்பெறுவது குறித்து தான் கவலையடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட வோல்டர் கெலின் தனது விஜயம் குறித்து விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

“அரசியல் விவகாரங்களுக்கான ஐக்கியநாடுகள் உதவிச் செயலாளர் நாயகம் லின் பாஸ்கோ இங்கு வந்த போது இடம்பெயர்ந்தவர்களின் மனித உரிமைகளின் பாதுகாப்பை எவ்வாறு பலப்படுத்தலாம் என்பது பற்றியும் மீள குடியமர்த்துவதில் இடம்பெறும் தாமதங்களை நீக்குவது பற்றியும் அரசாங்கத்துடன் நடத்திய பேச்சுவார்த்தைகளை அடிப்படையாக வைத்து நான் அவதானம் செலுத்தினேன். இடம்பெயர்ந்தவர்களில் 70, 80 சதவீதத்தினரை இந்த வருட முடிவில் மீள குடியமர்த்துவது என்ற அரசாங்கத்தின் வாக்குறுதி வரவேற்கத்தக்கது. மன்னாரில் அரசாங்கம் கண்ணிவெடிகளை அகற்றவதிலும் புனர்நிர்மாணப் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளமை வரவேற்கத்தக்கது.

மிகுந்த கஷ்டத்துடனும் ஆபத்துடனும் நெருக்கடி மிகுந்த முகாம்களுக்குள் வாழ்ந்துவரும் மக்களுக்கான சகல வசதிகளையும் உடனடியாக பூர்த்தி செய்வது இயலாத செயலாக இருந்த போதிலும், அவர்களை முகாம்களிலிருந்து சுதந்திரமாகவும் பாதுகாப்புடனும் கௌரவத்துடனும் வெளியேறுவதற்கும் இஷ்டம் போல சொந்த வீடுகளுக்கு செல்வதற்கும் அனுமதிக்க வேண்டும்.

விரைவில் இதனைச் செய்ய முடியாவிட்டால் இந்த மக்களை வரவேற்று அரவணைக்க விரும்பும் உறவினர், நண்பர்களுடன் சென்று வாழ்வதற்கும் திறந்த இடைத் தங்கல் முகாம்களில் வசிப்பதற்கும் அனுமதிக்க வேண்டும். பருவப்பெயர்ச்சி மழைக் காலம் நெருங்குவதால் இந்த நடைமுறையைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகிறது.

உடனடி அவசரத்தின் பேரில் அமைக்கப்பட்ட தற்போதைய முகாம்கள் பலத்த மழையைத் தாங்கும் சக்தியற்றவை. எதிர்வரும் வாரங்களில் எதிர்பார்க்கப்படும் வெள்ளப் பெருக்கினால் தாழ்ந்த பகுதிகளிலுள்ள முகாம்களில் வசிப்பவர்களின் சுகாதாரத்திற்கும் உயிருக்கும் பேராபத்து ஏற்படலாம்.

அரசாங்கத்தின் சார்பில் என்னுடன் பேசியவர்கள் மேற்கண்ட தேவைகளின் அவசியத்தை தம்முடன் பகிர்ந்து கொண்ட போதிலும் அரசாங்கம் அதன் வாக்குறுதிகளை செயல்படுத்த மேலும் தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மக்கள் மீது துப்பாக்கி பிரயோகம்

தமிழ் சமூகத்தின் நம்பிக்கையை வென்றெடுப்பதற்கும் நிரந்தர சமாதானத்தை நிலைநாட்டுவதற்கும் நடமாடும் சுதந்திரத்தை வழங்குவது அவசியமாகும். இந்த விடயம் தொடர்பாக, அண்மையில் இடம் பெற்ற ஒரு சம்பவம் பற்றி கடந்த 26ஆம் திகதி இராணுவத்தினால் அறிவிக்கப்பட்டிருந்தது.  ஒரு முகாமிலிருந்து இன்னொரு முகாமுக்கு மாறிச் செல்ல முயன்றவர்களைக் கட்டுப்படுத்துவதற்குத் துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விளைவாக இருவர் காயமடைந்தமை பாரதூரமான மனித உரிமை மீறலாகும்.

கட்டாயத் தடுப்புக் காவலில் பெருந்தொகையான மக்களை நீண்ட நாட்களுக்கு தடுத்து வைக்கும் போது, முகாம்களின் இடவசதிகள் பற்றி கவனம் செலுத்தாதிருப்பது அவர்களது பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும். மேலும் கட்டாயத் தடுப்புக்காவலில் வைக்கப்படுவது பற்றிய தீர்மானம் கூட்டாக அன்றி தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரின் வசதியையும் கருத்திற் கொண்டு எடுக்கப்பட வேண்டும். அத்துடன், எடுக்கப்பட்ட தீர்மானங்களை பாதுகாப்பு, தராதரம் ஆகியவற்றை மனதிற் கொண்டு சுயாதீன குழு ஒன்று அவ்வப்போது மதிப்பீடு செய்ய வேண்டும்.

20 வருடங்களுக்கு முன்னரே இடம் பெயர்ந்த முஸ்லிம் மக்கள் உட்பட அகதிகளாக இருப்போரையும் புனர்வாழ்வுத் திட்டங்களில் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மிருகக் காட்சிசாலையைப் பார்வையிட சிறுவர்களுக்கு இலவச அனுமதி!

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு நாளை தேசிய மிருகக் காட்சிசாலையை சிறுவர்கள் இலவசமாகப் பார்வையிடலாம் என மிருகக் காட்சிசாலை அதிகாரியொருவர் தெரிவித்தார். 12 வயதுக்குக் குறைந்த சிறுவர்களுக்கு இச்சலுகை வழங்கப்படும் என்றும் இது தவிர சிறுவர்களுக்கான விசேட நிகழ்வுகள் இங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இதேவேளை உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய வைபவம் கொழும்பு ஆனந்தா கல்லூரியில் நடைபெறவுள்ளது.

நாளை காலை 9.00 மணி முதல் பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ள இந்த வைபவத்தில் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க மற்றும் ஜனாதிபதியின் பாரியார் சிரந்தி ராஜபக்ஷ ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்துகொள்ளவுள்ளனர்.