November

November

தமிழீழ விடுதலைப் போராட்ட கால ஊடகவியலாளர் எஸ் சிவநாயகம் காலமானார்.

Sivanayagam_S_Journalistஊடக வியலாளர் எஸ் சிவநாயகம் தனது 80வது வயதில் நேற்று (நவம்பர் 29) கொழும்பில் காலமானார். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மிக முக்கிய காலகட்டத்தில் ஊடகவியலாளராகச் செயற்பட்ட இவர் 1982ல்  யாழ்ப்பாணத்தில் வெளியாகிய சற்றடே ரிவியூ பத்திரிகையின் ஆசிரியராக கடமையாற்றியவர். இவர் தமிழீழ விடுதலைப் போராட்டத்துடன் நேரடியாகத் தொடர்புபட்டு அதனுடன் வாழ்ந்தவர். அதன் பின்னர் சென்னையில் தமிழர் தகவல் நடுவத்திற்கு பொறுப்பாகச் செயற்பட்டவர்.

யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் தனது இறுதிக்காலப் பகுதியில் புற்றுநோயால் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்தார். இவர் கொக்குவில் இந்துக் கல்லூரி, யாழ்ப்பாணக் கல்லூரி ஆகியவற்றில் தனது கல்வியை மேற்கொண்டவர்.

ராஜீவ் காந்தியின் படுகொலையை அடுத்த எஸ் சிவநாயகம் இந்தியாவில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டார். பின்னர் 1993ல் பிரான்ஸில் அரசியல் தஞ்சம் கோரிய இவர் லண்டனிலும் நீண்டகாலம் வாழ்ந்தவர். சில ஆண்டுகளுக்கு முன் கொழும்பு சென்ற இவர் இறுதி யுத்தத்தின் போதும் அங்கேயே வாழ்ந்தவர்.

the_Pen_and_the_Gunஇவர் சில ஆண்டுகளுக்கு முன் தனது அனுபவத் தொகுப்பான ‘தி பென் அன் தி கன்’ என்ற நூலை வெளியிட்டு இருந்தார். மேலும் அதற்கு முன்பாக ‘ஸ்ரீலங்கா: விற்னஸ் ரு ஹிஸ்ரி’ என்ற நூலையும் எழுதி இருந்தார்.

இவருடைய இறுதி நிகழ்வு டிசம்பர் 02 கொழும்பில் நடைபெற உள்ளது.

தமிழ் கட்சிகளின் அரங்கம் இந்திய வெளியுறவமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணாவிடம் மகஜர் கையளிப்பு

இந்திய வெளியுறவமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணாவிடம் கையளிக்கவென தமிழ் கட்சிகள் அரங்கத்தினால் தயாரிக்கப்பட்ட தமிழ் மக்களின் பிரச்சினைகள் அடங்கிய மகஜர் இன்றுகாலை கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் கையளிக்கப்பட்டுள்ளது. தமிழ்க் கட்சிகளின் அரங்கம் சார்பாக தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் த.சித்தார்த்தன், ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகத்தின் தலைவர் செ.சந்திரகாசன், பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் பொதுச்செயலாளர் ரி.சிறிதரன் ஆகியோரினால் குறித்த மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த மகஜரில் தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள், இனப்பிரச்சினைத் தீர்வு, இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகள், நிவாரணங்கள், மக்களின் மீள்குடியேற்றம் போன்ற விடயங்கள்  உள்ளடக்கப்பட்டுள்ளன.

Shri. S.M.Krishna M.P.,
Honorable Minister for External Affairs,
Government of India.

Dear Sir,

We wish to thank you for the opportunity afforded to us to meet with you today.

We, the Tamil political parties have come to an understanding and constituted a common forum to strive for a permanent political solution to the ethnic problem and also to work towards solving the immediate issues faced by the Tamil people.

In this context, we have initiated discussions with the other concerned political parties including the TNA with a view to forge a consensus on the question of a political solution to the national question of Sri Lanka.

We believe that the political solution should be found within the frame work of a united Sri Lanka thus enabling the Tamil people to participate fully in their own governance in the North – East. The implementation of the 13th amendment in full will be a positive beginning of the political process in this regard.

Fully conscious of the historical, cultural, religious and linguistic ties the Tamil people of Sri Lanka have been having with the people of your great country since times immemorial and recognizing the efforts  taken and endeavours made by your great country with the noble objective of ensuring equality and justice to the Tamil people during the last several decades, it is our fond hope and fervent appeal that these efforts and endeavours should be taken forward in order to culminate soon in the evolution of a viable political solution to the national question of Sri Lanka that shall redress the long – felt political grievances of our people and satisfy their legitimate political aspirations within the frame work of a united Sri Lanka. 

It is against this background we seek your kind indulgence to submit for your kind and urgent attention some important issues that concern the interests and well being of our people. 
           
1. Meaningful Resettlement 

Although majority of the Internally Displaced Persons have been sent back to their former places of habitation, they have not been settled with adequate basic facilities.
a)   They are living in temporary shelters and tents.
b)   Some of the IDP’s have not been allowed to access their houses and properties on different grounds including the objection that they do not possess documents in proof of their claim.
c)   The return and resettlement of the people who still remain in the welfare camps needs to be given priority.
           
2. Providing adequate compensation for the people who lost their limbs, bread winners, family members and properties

While expressing our appreciation and gratitude for the various forms of assistance committed and provided by the government of India for the affected people in the North – East towards their resettlement and rehabilitation, we request that the Government of India be pleased to consider granting of more support and assistance to these people including:
(a)  Livelihood assistance to widows and their dependant children, and orphaned children who have lost both their parents,
(b) Artificial limbs and other help to those who have lost their limbs.
(c) Support and assistance to repair / rebuild / improve their damaged or destroyed houses.
(d) Assistance to resettled farmers to restart / improve the cultivation of their lands.
(e) Support to improve animal husbandry and livestock.
(f) Support for fishing activities. 
           
3. Steps taken to disturb the demographic composition  and thereby disrupt national reconciliation

One of the main reasons for the discontent between the communities was the state sponsored colonization by successive governments in the past with the motive of altering the demographic composition in the North East. Even today attempts are being made to do the same that obstructs the reconciliation between the communities.
                  
We are concerned that the proposal to establish settlements of the members of the security forces and their families numbering many thousands will drastically alter the demographic composition in the Northern and Eastern provinces that had been recognized as the areas of historical habitation in the Indo-Sri Lanka accord of 1987. We are of the firm view that nothing should be done to disturb the demographic composition of the Northern and Eastern provinces and cause disruption of the process of national reconciliation.
        
4. Civil Administration

We are of the considered view that the establishment of a full and complete civil administration without any involvement of the Security Forces in the Northern and Eastern provinces is the need of the hour to facilitate and ensure normalcy and the rule of law in this region.

We assure our cooperation in and support to every effort that the Government of India may take to achieve national reconciliation in Sri Lanka.

Thanking You,
Yours Sincerely,

V. Anandasangaree – TULF
A. Rajamanickam – EPDP
S.C. Chandrahasan – TPF
S. Chandrakanthan – TMVP
D. Sithadthan – PLOTE
M.K. Shivajilingam – TNLA
T. Sritharan – P-EPRLF
P. Uthayarajah – Sri-TELO
N. Kumaraguruparan – DPF

வன்னியில் இடம்பெற்ற அவலமும் புலி ஆதரவு அமைப்புகளின் மகிந்த எதிர்ப்புப் போராட்டமும் : த ஜெயபாலன்

MR_Protest_Heathrowதமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பிரிவுகளாக இயங்கிய அமைப்புகள் இலங்கையின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் வருகையைக் கண்டித்து எதிர்ப்பு அணிவகுப்பொன்றை ஹீத்ரோ விமான நிலையத்தில் நடத்தினர். நடந்து முடிந்த யுத்தத்தில் ஜனாதிபதி ராஜபக்சவைக் குற்றவாளி என்று சொல்லி அவரது வருகையைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக இலங்கை மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்துகொள்வதற்காக லண்டன் வந்துள்ள ஜனாதிபதி ராஜபக்சவை பொலிஸார் வழமையான முக்கியஸ்தர்களின் பாதுகாப்பு வழியால் அழைத்துச் சென்றுள்ளனர். அதனால் ஜனாதிபதி ஆர்ப்பாட்டக்காரர்களை நேருக்குநேர் சந்திக்கவில்லை.

ஆனால் இந்த ஆர்பாட்டம் காரணமாக சிறிலங்கா எயர்லைனில் வந்த பயணிகள் அனைவரும் இரவு 12:00 மணிவரை விமான நிலையத்திற்கு உள்ளேயே இருக்க வைக்கப்பட்டனர்.

ஒக்ரோபர் பிற்பகுதியில் அமைச்சர் ஜீல் பீரிஸ் ற்கு எதிராகவும் ஒரு கண்டன நிகழ்வு லண்டனில் இடம்பெற்றது. கண்டன நிகழ்வுக்கு முன்னதாகவே ஜீஎல் பீரிஸ் தனது உரையை முடித்துக் கொண்டு மண்டபத்தை விட்டுச் சென்றிருந்தார்.

MR_Protest_Heathrowநடந்து முடிந்த யுத்தத்தில் இலங்கை அரசும் தமிழீழ விடுதலைப் புலிகளும் மிக மோசமான முறையில் மனித உரிமைகளை மீறியிருந்தனர். யுத்தத்தின் முன்பகுதியில் 2009 பெப்ரவரி வரை 1200 பேர்வரையே கொல்லப்பட்டு இருந்தனர். ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்தப் பகுதியில் தமிழ் மக்களை மனிதக் கேடயங்களாக்கி யுத்தத்தை முடுக்கிவிட்ட போது மக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர். சர்வதேச நாடுகளில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவு அமைப்புகள் பொது மக்களைப் புலிகள் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியதை தொடர்ந்தும் ஆதரித்தே வந்தனர்.

2008ல் யுத்தம் உச்சகட்டத்தில் இருந்தபோது லண்டனில் இடம்பெற்ற கொமன்வெல்த் மாநாட்டிலும் ஜனாதிபதி ராஜபக்ச கலந்துகொண்டிருந்தார். அப்போதும் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இம்முறை ஜனாதிபதி ஒக்ஸ்போர் மாணவர்களின் நிகழ்வில் உரையாற்ற இருப்பது இரண்டாவது தடவையாகும். அதையொட்டியும் புலி ஆதரவு அமைப்புகள் தங்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவிக்க ஒக்ஸ்போர்ட் நோக்கி செல்ல உள்ளனர்.

தற்போதைய விஜயத்திற்கு முன்பாக ஜனாதிபதியின் விஜயம் ஒத்திவைக்கப்பட்டது. தாங்கள் யுத்தக் குற்றத்திற்கு எதிராக வழக்கு தாங்கல் செய்ய உள்ளதாலேயே இலங்கை அரசு அந்த விஜயத்தை கைவிட வேண்டி ஏற்பட்டதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச அமைப்புகள் அறிவித்தன. ஆனால் இப்போது ஜனாதிபதி லண்டனிலேயே தங்கி உள்ளார்.

மேலும் தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் விநாயகமூர்த்தி முரளீதரன் போலிக் கடவுச்சீட்டில் ஆயுதத்துடன் வந்து பிரித்தானியாவில் பிடிபட்ட போதும் அவருக்கு எதிராக எவ்வித மனித உரிமை மீறல் நடவடிக்கைகளையும் யாரும் பதிவு செய்யவில்லை. சர்வதேச உரிமை அரைமப்புகள் நூற்றுக்கணக்கான மனித உரிமை மீறல் குற்றங்களை விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு எதிராகச் சுமத்திய போதும் அவர்களால் முரளிதரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியவில்லை.

நடந்து முடிந்த இறுதி யுத்தத்தை மேற்கு நாடுகள் சிசிரிவி இல் பார்ப்பது போன்று செய்மதிகளினூடாகப் பார்த்து ஆதாரங்களையும் கைவசம் வைத்துள்ளனர். ஆனால் மனித உரிமைகளை அவர்கள் அரசியல் பலப் பரீட்சைக்காக மட்டுமே பயன்படுத்துகின்றனர். மனித உரிமைகளுக்காக யுத்தக் குற்றம் என்று வந்தால் இலங்கை ஜனாதிபதி மட்டுமல்ல அமெரிக்க அதிபர் பிரித்தானியப் பிரதமர் என்று பட்டியல் நீளும் என்பது மேற்கு நாடுகள் நன்கு அறியும்.

தமிழீழ விடுதலைப் புலிகள் பொது மக்களைக் கேடயங்களாகப் பயன்படுத்துகிறார்கள் என்பதை நன்று அறிந்து கொண்ட இலங்கை அரசும் அவர்களை விடுவிப்பதற்கான காத்திரமான முயற்சிகளை எடுக்காமல் புலிகளுக்கு எதிரான பதில் தாக்குதலை மூன்று லட்சம் மக்கள் மத்தியில் நடாத்தியது.

மேலும் யுத்தத்தின் இறுதிப் பகுதிகளில் இந்த யுத்த வலயத்திற்குள் இருந்து தப்பிச் செல்ல முற்பட்டவர்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் கண்மூடித்தனமான தாக்குதல்களை நடாத்தி உள்ளனர். பொது மக்கள் மீது செல் தாக்குதல்களையும் புலிகள் நடத்தி உள்ளனர்.

MR_Protest_Heathrowதற்போது யுத்தத்தில் தோல்வியடைந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அரசினைப் பழிவாங்குவதற்கான மாற்று வழியாக மனித உரிமை மீறல்களைப் பயன்படுத்த முற்பட்டு உள்ளனர். நடந்து முடிந்த யுத்தத்தில் அரசு மனித உரிமைகளை அப்பட்டமாக மீறியுள்ளது. ஆனால் அரசுக்கு எதிராக மனித உரிமைகளைத் தூக்கிப்பிடிக்கின்ற தமிழீழ விடுதலைப் புலி சர்வதேச அமைப்புகளும் வன்னியில் ஆயிரக் கணக்காண மக்கள் கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்துள்ளனர். அங்கு வகைதொகையின்றி மனித அவலம் நடந்தால் சர்வதேச சமூகம் தமிழீழத்தைப் பெற்றுத் தரும் என்று பிரச்சாரம் செய்து மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தி மிகமோசமான மனித அவலத்துக்கு காரணமாக இருந்தனர்.

யுத்தக் குற்றவாளி இலங்கை அரசு மட்டுமல்ல தமிழீழ விடுதலைப் புலிகளும் அதன் சர்வதேச அமைப்புகளும் தான். அதனால் எதிரியாகக் கருதிய இலங்கை அரசிடம் நியாயம் கேட்கும் அதேவேளை தம்மைக்காக்க வேண்டிய தமிழீழ விடுதலைப் புலிகளும் அதன் சர்வதேச கட்டமைப்புகளும் தாங்கள் அம்மக்களுக்கு இழைத்த துரோகத்திற்கு நியாயம் கிடைக்க வழி செய்து கொண்டு எதிரியிடம் நியாயம் கேட்பதே முறையானது.

”அரச எதிர்ப்பு அணுகுமுறையை கைவிட முடிவு செய்துள்ளோம்” வரவுசெலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களிப்பதை கூட்டமைப்பு கைவிட்டது.

TNAநேற்று திங்கள் (நவம்பர் 29) மாலை நாடாளுமன்றில் இடம்பெற்ற வரவுசெலவுத் திட்டம் மீதான இரண்டாவது வாசிப்பில்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்த்து வாக்களிப்பதைத் தவிர்த்து வாக்களிப்பில் கலந்து கொள்ளமல் விட்டது. பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, அபிவிருத்தி ஆகிய விடயங்களில் அரசாங்கத்துடன் ஆக்கபூர்வமாக கலந்துரையாடி அதற்காக அரசுடன் இணைந்து செயற்பட கூட்டமைப்பு விரும்புவதால், அரச எதிர்ப்பு அணுகுமுறையை கைவிட முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் வெளிப்பாடாகவே நேற்று வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாவது வாசிப்பில் கலந்து கொண்டு அதனை எதிர்ப்பதை தவிர்த்துக் கொண்டதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கூட்டமைப்பு அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளது.

”நாடாளுமன்றில் ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டம் இடம்பெயர்ந்து பாதிக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்களுக்கு எவ்விதமான நிவாரணத்தையும் வழங்கவில்லை. இடம்பெயர்ந்துள்ள மக்களின் மீள்குடியமர்வு முன்னுரிமை வழங்கப்பட வேண்டிய ஒன்று எனக் கூறிவரும் ஜனாதிபதியின் வரவு செலவுத்திட்டத்தின் ஒதுக்கீடுகளில் இது எவ்விதத்திலும் பிரதிபலிக்கவில்லை. இதற்கு மேலாகப் போர் முடிவுற்ற நிலையிலும் பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீடு வருடாவருடம் அதிகரித்துக் கொண்டே போகின்றது. இந்நிலையில் தமிழ் மக்களின் மீள்குடியமர்வு. புனர்வாழ்வு. அபிவிருத்தி போன்ற விடயங்களில் அரசாங்கம் கூட்டமைப்புடன் அக்கபூர்வமான பேச்சுக்களை ஆரம்பிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக கூட்டமைப்பின் நல்லெண்ணத்தைத் தெரிவிக்கும் முகமாகவே வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெகெடுப்பில் எதிர்த்து வாக்களிப்பதிலிருந்து கூட்டமைப்பு விலகியிருந்தது.”  இவ்வாறு கூட்டமைப்பின் விளக்க அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்று மாலை இடம்பெற்ற வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பின் மீதான வாக்களிப்பில் 150 வாக்குகள் ஆதரவாகவும், 46 வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டன. 104 மேலதிக வாக்குகளால் இது நிறைவேறியது.

ஏதிர்க்கட்சிகளான ஐக்கிய தேசியக்கட்சி, ஜே.வி.பி ஆகியன எதிராக வாக்களித்தன. அரசுடன் தற்போது இணைந்துள்ள சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, ஆகியன ஆதரவாக வாக்களித்தன.

கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

rsambanthan.jpgதமிழ் தேசியக் கூட்டமைப்பின் மலைவர் இரா. சமப்நதன் சுகவீமுற்று கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வரம்நிலையில். நேற்று செவ்வாய் கிழமை இந்தியத்தூதுவர் அசோக் கே. குhந்தா வைத்திய சாலைக்குச் சென்று சம்பந்தினன் உடலநலம் குறித்து விசாரத்துள்ளார்.

கூட்டமைப்பின் தலைவர் இருதயக் கோளாறு காரணமாக தமிழ் நாட்டில் சிகிச்சை பெற்று வந்தார். மீண்டும் அவர்சிகிச்சைக்காக தமிழ் நாட்டுக்கு செல்லவேண்டிய வேளையில் திடீரென அவர் சுகவீனமற்ற நிலையில்  கொழும்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஆர் சம்பந்தன் மாதத்திற்கு பாராளுமன்றம் செல்லாதிருப்பதற்கான பிரேரனை செப்ரம்பர் 23ல் பாராளுமன்றத்தில் அங்கிகரிக்கப்பட்டு இருந்தது. வயதடைந்துள்ள இவர் அண்மையில் இந்தியாவில் சிகிச்சை பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

சம்பந்தருடைய உடல்நிலை வலுஇழந்து செல்ல தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வலுவும் இழந்து செல்கின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த தலைமை மாவை சேனாதிராஜாவா சுரேஸ் பிரேமச்சந்திரனா என்ற போட்டி தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் நெருக்கடியை உண்டு பண்ணியுள்ளது.

அம்பாந்தோட்டையில் இந்திய துணைத் தூதரகம்

hambantota.jpgஅம்பாந் தோட்டை புது வீதியில் நேற்று இந்திய துணைத் தூதரக அலுவலகம் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணாவினால் திறந்து வைக்கப்பட்டது.

இது வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்படவிருந்தது. சீரற்றகால நிலை காரணமாக இந்த திறப்பு விழா ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்வில், இந்திய வெளியுறவு அமைச்சர் ஸ்ரீ எஸ். எம். கிருஷ்ணாவுடன் இலங்கை வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ்,  இந்திய இலங்கைத் தூதுவர் அசோக் கே. காந்தா, இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இலங்கை – பாகிஸ்தான் தலைவர்கள் இருதரப்பு பேச்சு – நான்கு முக்கிய உடன்படிக்கைகள் கைச்சாத்து

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், பாகிஸ்தான் ஜனாதிபதி ஆஸிப் அலி சர்தாரிக்குமிடையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இரு தரப்பு பேச்சுவார்த்தை இடம்பெற்றதுடன் இரு நாடுகளுக்குமிடையிலான நான்கு முக்கிய உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்பட்டன.

ஒரு மணித்தியாலம் வரை நீடித்த மேற்படி பேச்சுவார்த்தையையடுத்து இரு நாடுகளினதும் பிரதிநிதிகள் கலந்து கொண்ட பேச்சுவார்த்தையொன்றும் இடம்பெற்றது. இரு நாடுகளுக்கிடையில் வர்த்தக நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்துவது தொடர்பில் இரு நாட்டுத் தலைவர்களும் கவனம் செலுத்தியதுடன் இலங்கையின் தேயிலை மற்றும் மாணிக்கக் கற்களை பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்வதற்குள்ள வாய்ப்புகள் சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டன.

இலங்கையின் மாணிக்கக்கல் தொழில் துறையில் உபயோகப்படுத்தப்படும் தொழில் நுட்ப நுணுக்கங்களை பாகிஸ்தானுக்குப் பெற்றுக் கொடுக்குமாறு பாகிஸ்தான் ஜனாதிபதி கேட்டுக் கொண்டதையடுத்து இலங்கை ஜனாதிபதி அதனைக் கவனத்திற் கொண்டார்.

இலங்கையின் மருத்துவத்துறை ஈட்டியுள்ள வளர்ச்சி தொடர்பில் பாகிஸ்தான் ஜனாதிபதி தமது பாராட்டுக்களைத் தெரிவித்தார்.பாகிஸ்தான் தாதியருக்கு பயிற்சிகளை வழங்கக் கூடிய தாதியர்களை இலங்கையிலிருந்து தமது நாட்டுக்கு பெற்றுக் கொடுப்பது தொடர்பிலும் அவர் இலங்கை ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவந்தார்.

அத்துடன் இலங்கையிலிருந்து ஆங்கிலம் மற்றும் கணித ஆசிரியர்களின் ஒத்துழைப்பினை பாகிஸ்தானின் கல்வித் துறைக்கு பெற்றுக்கொள்வது சம்பந்தமாக பாகிஸ்தான் ஜனாதிபதி முன்வைத்த வேண்டுகோள் தொடர்பிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கவனம் செலுத்தினார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தமது இரண்டாவது பதவி ஏற்போடு பாகிஸ்தான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் அமைந்துள்ளதால் இரு நாடுகளுக்குமிடையி லான நல்லுறவுகள் மேலும் வலுப்பட இது சிறந்த வாய்ப்பாகும் எனவும் குறிப்பிட்டார்.

அத்துடன் அமைதிச் சூழல் நிறைந்த இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்காக பாகிஸ்தான் முதலீட்டாளர்களை அனுப்புமாறு கேட்டுக்கொண்ட ஜனாதிபதி; அதற்கான வசதிகளை செய்து கொடுப்பதாகவும் தெரிவித்தார்.

பாகிஸ்தான் ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்; இலங்கையில் எதிர்கால தலைமுறையினரை போதைப் பொருளிலிருந்து பாதுகாக்க இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு விசேட பாராட்டுக்களைத் தெரிவித்த பாகிஸ்தான் ஜனாதிபதி; பிராந்திய ரீதியில் போதை உபயோகத்தை ஒழிப்பதற்கு பிராந்திய நாடுகள் இணைந்து செயற்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும் குறிப்பிட்டார். இரண்டு நாடுகளுக்குமிடையில் வங்கி நடவடிக்கைகளை மேம்படுத்துவது தொடர்பிலும் இரு நாட்டுத் தலைவர்களும் கலந்துரையாடினர்.

4 மணித்தியால பொருட்கள் சேவை தபால்

postal.jpgநான்கு மணித்தியால பொருட்கள் போக்குவரத்து சேவையொன்றை நாடளாவிய ரீதியில் அறிமுகப்படுத்த தபால் திணைக்களம் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றது. இதன் பரீட்சார்த்த நடவடிக்கைகள் தற்பொழுது குருநாகல், அநுராதபுரம், கண்டி, காலி ஆகிய இடங்களில் மிக விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதுடன், இதன் முதற்கட்ட நடவடிக்கைகள் தற்போது கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இச்சேவை மூலம் தபால் திணைக்களத்தினூடாக பரிமாற்றம் செய்யப்படும் பொருட்கள் நான்கு மணித்தியாலங்களுக்குள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கொழும்பிலிருந்து நீர்கொழும்பு, பாணந்துறை, கம்பஹா, மல்வானை, பியகம மற்றும் நிட்டம்புவ போன்ற பிரதேசங்களில் இத்திட்டம் தற்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டம் வெற்றியளித்தால் எதிர்காலத்தில் வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களுக்கும் இச்சேவை விஸ்தரிக்கப்படும். மிகவும் குறைந்த சாதாரண கட்டணத்தில் இச்சேவையை பொதுமக்கள் அனுபவிக்க முடியுமென தபால் திணைக்கள உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இளைஞர் பாராளுமன்றத்திற்கு 329 உறுப்பினர்கள் தெரிவு

இளைஞர் பா¡ளுமன்றத்தின் முதலாவது தேர்தலில் 329 உறுப்பினர்கள் நேற்று முன்தினம் 27ஆம் திகதி தெரிவாகியுள்ளனர். 332 மாவட்ட செயலாளர் பிரிவுகளை கேந்திரமயப்படுத்தி 1395 பேர் போட்டியிட்ட போதே மேற்படி 329 பேரும் தெரிவு செய்யப்பட்டனர்.

ஹொரவத்பத்தான, எஹலியகொடை ஆகிய மாவட்ட செயலக பிரிவுகளின் பெறுபேறுகள் ரத்துச் செய்யப்பட்டதாகவும் புதுக்குடியிருப்பு பிரிவில் தேர்தல் நடத்தப்படவில்லை என்றும் இளைஞர் விவகார மற்றும் தொழில் முயற்சிகள் அமைச்சின் செயலாளரும் பிரதான தெரிவத்தாட்சி அதிகாரியுமான சூளோ ஹேவாபதிரன கூறினார். இளைஞர் விவகார அமைச்சில் நேற்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டி லேயே அவர் இவ்வாறு கூறினார்.

அத்துடன் ரத்துச் செய்யப்பட்ட இரு தேர்தல் பிரிவுகளில் மீண்டும் எதிர்வரும் 4ஆம் திகதி தேர்தல் நடத்தப்படும் என்றும் அவர் மேலும் கூறினார். அதேவேளை ஆதிவாசிகளின் பிரதிநிதி ஒருவர் உட்பட மொத்தம் 335 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதாகவும் புதிய பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடர் எதிர்வரும் ஜனவரி 12ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் மஹரகம இளைஞர் சேவைகள் மன்றத்தில் நடைபெறும் என்றும் செயலாளர் மேலும் கூறினார்.

பாக். ஜனாதிபதி இன்று பாராளுமன்றம் வருகை

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசீப் அலி சர்தாரி பாராளுமன்ற சபாநாயகர் மற்றும் பாகிஸ்தான் பாராளுமன்ற நட்புறவு சங்கப் பிரதிநிதிகளை இன்று சந்திக்கவுள்ளார்.

இச்சந்திப்பு முற்பகல் 11 மணிக்கு பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெறவுள்ளது.