இந்த வருடம் தொடங்கி முடிவடைந்துள்ள ஏழு மாத காலத்தில் சுமார் 20,000க்கும் அதிகமானோர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வருடத்தின் கடந்த ஏழு மாதங்களில் கொழும்பு மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையான நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.இம் மாவட்டத்தில் இது வரையில் 3,380 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
கொழும்புக்கு அடுத்ததாக மட்டக்களப்பில் 2,262 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். திருகோணமலை மாவட்டத்தில் 2, 260 பேரும் கண்டியில் 2181 பேரும் ,கம்பஹாவில் 2, 029 பேரும் டெங்கு நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை யாழில் 1,959 பேரும் இரத்தினபுரியில் 1,456 பேரும் களுத்துறையில் 1, 430 பேரும் காலியில் 1,111 பேரும் டெங்கு நோய்க்குள்ளாகியுள்ளனர். இவற்றை தவிர ஏனைய மாவட்டங்களில் 1000க்கும் குறைவான நோயாளர்களே இனங்காணப்பட்டுள்ளனர். அதற்கமைய கல்முனையில் 861 , குருணாகலில் 772 , கேகாலை 600, மாத்தளை 499, பதுளை 419, புத்தளம் 411பேர் என்ற அடிப்படையில் டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
400க்கும் குறைவான நோயாளர்கள் மேலும் சில மாவட்டங்களில் இனங்காணப்பட்டுள்ளனர். அதற்கமைய அநுராதபுரத்தில் 365 நோயாளர்களும் மாத்தறையில் 352 நோயாளர்களும் ஹம்பாந்தோட்டையில் 308 நோயாளர்களும் அம்பாறையில் 303 நோயாளர்களும் வவுனியாவில் 241 நோயாளர்களும் பொலன்னறுவையில் 217 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.
இதுவரையில் ஒன்பது மாகாணங்களிலும் 23,885 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். எனினும் கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இந்த எண்ணிக்கை சுமார் 10 ஆயிரத்தால் குறைவடைந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.