::இனப்பிரச்சினைத் தீர்வு

::இனப்பிரச்சினைத் தீர்வு

இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வுகள் பற்றிய செய்திகள், கட்டுரைகள், ஆய்வுகள்.

National Security, National Interest and 13th Amendment : Dayan Jayatilleka

Rajeev_J R_Indo_lanka_AccordThere is nothing that our enemy, the Tiger international network and the pro-Tiger, pro-Tamil Eelam Tamil Diaspora would like better, than to see a gap open up in the partnership between Sri Lanka and India; a gap that they will seek to manipulate in consonance with their Western patrons and friends. The non-implementation of the 13th amendment will open up such a gap. The implementation of the 13th amendment is not a give away or dilution of our military gains. It is the necessary political accompaniment of them and the guarantee of the consolidation of our military victory. It is in our national interests and a guarantee of our national security.

One of the silliest arguments against the implementation of the 13th amendment is that it is a stepping stone to or somehow related to the Tamil separatist cause. If that were the case, Prabhakaran would have accepted it, not rejected it and gone to war against the Indian Peace-keeping Force, damaging his relations with India and culminating in the assassination of Rajiv Gandhi, an atrocious crime for which he paid this May. At the very least he would have abandoned or suspended the war against the IPKF that he began in October 1987 and negotiated for privileged entry into the provincial council. Prabhakaran took a grave risk and waged this war, his second war, precisely because he knew that provincial autonomy as envisaged in the Indo-Lanka Accord and contained in the 13th amendment a year later, was a death trap for Tamil secessionism. This is because authentic moderate reform is a death trap for extremism anywhere, anytime.

Why compromise on the basis of the 13th amendment, ask the extremists on both sides of the ethnic divide. The answer is that anything else would be too risky. Open up the issue again and the Sinhalese may offer less, the Tamils may ask for more and the world may see an even more divided island.

There are two types of people who assert that President Mahinda Rajapakse is against the 13th amendment or does not intend to or will not implement it. These are the Tamil ultranationalists, the Tamil hawks and their fellow-traveling Sinhala doves, who say that no devolution will emanate from the Rajapakse administration, and the Sinhala hardliners who oppose any kind of devolution and attempt to use President Rajapakse’s patriotic profile behind which to hide their extremism. Some even invoke Mahinda Chinthana, oblivious to the irony that Mahinda Rajapakse can be safely trusted to know the letter and spirit of Mahinda Chinthana better than anyone else.

The position of the President and Government of Sri Lanka on the 13th amendment is clearly set out in two contemporary documents, namely the joint statements of May 21st and 23rd issued at the conclusion of the visits of the high level Indian delegation and that of the UN Secretary General respectively. Both statements reiterated the Government’s commitment – indeed one referred to the President’s “firm resolve”— to implement the 13th amendment. Both statements also indicated a political dialogue which would explore further possibilities. I quote:

“Both sides also emphasized the urgent necessity of arriving at a lasting political settlement in Sri Lanka. Towards this end, the Government of Sri Lanka indicated that it will proceed with implementation of the 13th Amendment. …Further, the Government of Sri Lanka also intends to begin a broader dialogue with all parties including, the Tamil parties in the new circumstances, for further enhancement of political arrangements to bring about lasting peace and reconciliation in Sri Lanka.” (May 21, 2009)

“President Rajapaksa expressed his firm resolve to proceed with the implementation of the 13th Amendment, as well as to begin a broader dialogue with all parties, including the Tamil parties in the new circumstances, to further enhance this process and to bring about lasting peace and development in Sri Lanka”. (May 23, 2009) 

The statements carried in the Indian media following the reciprocal recent visit of a top level Sri Lankan delegation to New Delhi shed light on what GOSL means by going beyond the 13th amendment. Mention had been made of a second chamber which would contain and represent the provinces. The somewhat less authoritative APRC has also been the source of some newspaper reports of another possibility of movement beyond the 13th amendment by means of a restructuring of the concurrent list of powers held conjointly by the centre and the provinces. Since this is speculative at the moment, it need not detain us further.

The confusion arises over three qualifying terms: “full” or “fully”, “minus” and “plus”, as in full implementation of the 13th amendment or not; 13th amendment minus or 13th amendment plus. What is forgotten is that we are already at 13th amendment minus and is likely to remain minus in that specific respect, namely the de-merger of the North and East. So even if we upgrade the 13th amendment in certain respects (second chamber, reduced concurrent list), it will never be an unambiguous plus. It will be plus something, minus merger.

This leaves the issue of the full implementation of the 13th amendment. Here too, the question does not arise in one sense because the de-merger has taken place and what would be implemented is not the 13th amendment in full. The discussion, to be frank, is about two other matters: police powers and land. Here too the fuss is less than warranted. Even Minister Muralidharan has said that the devolution of police powers is not a matter of urgency and Minister Devananda has made matters even simpler by saying that all he wants as an immediate step is for the Northern Province to enjoy the exact same powers as have been devolved to the other Provincial Councils in the island.

Therefore we do not have to agitate our society with the issue of Police powers at this moment.
 
However the issue will not go away, and should be addressed in the interests of national security. It is one thing for an almost totally mono-ethnic military to defeat an equally mono-ethnic enemy militia in mid to high intensity warfare. It is another for a mono-ethnic military to maintain a necessary long term large scale presence in a territory almost totally inhabited by a different and disaffected ethnic community, without the benefit of a local, or should I say “home grown” intermediary. Unless and until it becomes ethnically integrated and representative of the island’s demographics as a whole, the Sri Lankan military must not be drawn into and bogged down in policing functions which bring them into possible relations of contradiction with the local inhabitants. Some commentators have upheld as example India’s military cantonments, forgetting that India’s is a highly multiethnic military at all levels. It is therefore in the interests of the Sri Lankan military to have a local intermediary or auxiliary force and it is equally necessary that this force work with accountability and discipline, within a regulatory framework.

The next issue is that of land, which is at the heart of most ethnic and civic conflicts. The land provisions of the 13th amendment were carefully worked out by India and Sri Lanka, as Dr Sarath Amunugama for one will testify – and it may be less than prudent to seek to unilaterally roll back that understanding.

Historically this is the best time to effect a political reconciliation between the Sinhala and Tamil communities in Sri Lanka. If we do not do so internally, space opens for external interference. If a minority anywhere in the world remains disaffected and domestic reconciliation is not forthcoming it is natural that it would look to co-ethnics elsewhere and to outside powers for support. Today is the best time to draw or re-draw our political contract in a way that brings us together. The Sri Lankan armed forces have reunited the entire territory of the island. The Tamil extremists are weakened to an unprecedented extent by the destruction of their vanguard the LTTE. They can no longer sustain hard-line positions. President Rajapakse has the trust of the Sinhalese to a degree that none of his predecessors had, thanks to his leadership of the liberation war against terrorism and separatism. He can therefore carry the Sinhalese with him into a settlement of the underlying and pre-existing issues. Thus this is the best time for a moderate compromise.

 (These are the strictly personal views of the writer).

(Courtesy The Island July 02 2009)

Related Articles:

இலங்கை – இந்திய ஒப்பந்தம்: முத்தரப்புத் தோல்வி : த ஜெயபாலன்

வடக்கு – கிழக்கும் 13வது திருத்தமும் அரசியல் கலந்துரையாடல் : த ஜெயபாலன்

‘வடக்கு கிழக்கும் 13வது திருத்தச்சட்டமும்’ பன்முகப் பார்வை – தொகுப்பு : த ஜெயபாலன்

13வது திருத்தத்தைக் காட்டிலும் இடைக்கால தன்னாட்சி அதிகார சபை ஏன் பொருத்தமற்றது : வி. சிவலிங்கம்

அரசியற் பொருளாதாரமும் 13ம் சட்ட சீர்திருத்தமும் : ரவி சுந்தரலிங்கம், Academic Secretary, ASATiC

…….. தங்கிய ஜனாதிபதி அவர்களே! : துரை நரையன்

President_and_the_Peopleஇலங்கைத் தமிழினத்தை இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக திணறடித்துக் கொண்டிருந்த கொடிய மிருகங்களான புலிகளை முற்றாக அடித்து நொருக்கியதற்காக நானும் ஒரு தமிழன் என்ற அடிப்படையில் தங்களுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். இந்த நன்றி தெரிவிப்பானது தாங்கள் தமிழினத்தை காப்பதற்காக தாங்கள் உள்ளத்தளவில் உணர்ந்து செயற்பட்டீர்கள் என்ற உணர்விலே என்னுள் எழவில்லை என்பதுதான் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டிய விடயமாகும்.

மாறாக இலங்கைத் தீவிலே வடக்கு – கிழக்கு வாழ் தமிழினத்தை இனச்செறிவின் அடிப்படையிலே அடித்து நொருக்குவதற்காகவே நீங்கள் முதற் கட்டமாக புலிகளை ஒடுக்கியிருக்கிறீர்கள் என்பதுதான் எனதுணர்வின் சிந்தனையும் உண்மையுமாகும்.

நிற்க! ‘புலிகள் வேறு தமிழினம் வேறு. புலிகளின் விருப்பும் தேவையும் வேறு! தமிழினத்தின் விருப்பும் தேவையும் வேறு!’ – இதுதான் புலிகளை அழிப்பதற்கு முன்பு உங்களின் வாதம். இப்போது உங்களுடையவாதம் என்ன என்பது எனக்கு தெரியாது தேவையும் இல்லை!

ராஜபக்ச அவர்களே! இலங்கையில் தமிழினம் நீண்ட காலமாக வெவ்வேறு வழிகளில் போராடியது ஏன்? மனநோயினாலா? அவ்வப்போது வேறுபட்ட வடிவிலான தீர்வுகள் சிங்களத் தலைமைகளுக்கும் தமிழ் தலைமைகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டு இருக்கின்றன ஏன்? இரு சாராருக்கும் இடையிலான மனநோயினாலா? 1987 ல் இலங்கை – இந்தியாவிற்கிடையில் கையொப்பம் இடப்பட்ட ஒப்பந்தம் ஏன் ஏற்பட்டது? வெறும் பொழுது போக்கு விடயமா? ஆனால் பொழுது போக்காகவே முடிந்து விட்ட வரலாற்றைத் தான் தமிழினம் கண்டது.

புலிகள் வேறு தமிழினம் வேறு என கூறிய சிங்களத் தலைமைகள் தமிழினத்திற்கான தீர்வை ஏன் முன்வைக்கிறார்கள் இல்லை? ஏன் முன்வைத்திருக்கவில்லை?  ‘புலிகள் வேறு தமிழினம் வேறு’ என கூறிய நீங்கள் தீர்வை வைப்பதற்கு ஏன் காலதாமதமாக்கினீர்கள்? ‘புலிகள் வேறு தமிழினம் வேறு’ என்றான போது தீர்வுக்கும் புலிகளுக்கும் சம்மந்தம் இல்லைத்தானே? எனவே ஏன் இன்னமும் தமிழர்களுக்கு எந்தத் தீர்வும் இன்னமும் கிடைக்கவில்லை. தமிழினத்திற்கான தீர்வு கிடைக்காதமைக்கு புலிகள் மட்டும் காரணமல்ல. அவர்களையே ஒத்த சிங்களமும் தான் அதாவது நீங்களும் தான் காரணம் என்பதே உண்மையானது.

உண்மையில் புலிகள் என்பவர்கள் கொடியவர்கள்தான் – அவர்களின் முழுதான பாசிச தவறுகள் தான் தமிழினம் விடுதலை அடைந்து விட முடியாததற்கான பிரதான காரணமாகும். ஆனால் புலிகள் ஏன் உருவானார்கள்? – எப்படி உருவாக்கப்பட்டார்கள்? – மேலும் புலிகளை தமிழ் மக்கள் ஓரளவுக்கு அவர்கள் செய்த கொடுமைகளையும் தாண்டி ஆதரித்து வந்தார்கள் என்ற உண்மை உலகறிந்தது. – நீங்களும் அறிவீர்கள். – இது ஏன் நடந்தது? – புரியவில்லையா? சிங்களப் பேரினம் அவ்வப்போது பெரிதாகவும் தொடர்ச்சியாக குறித்த இலக்குடனும் இலங்கையில் தமிழினத்தை அழித்தே தீருவது என்ற நிறுத்தப்படாத வேலைத் திட்டங்களுடன் செயற்படுவதுதான் தமிழினம் புலிகளையே ஆதரிக்க வேண்டியதற்கான பிரதான காரணமாயிருந்தது. சிங்களம் மீதும் சிங்களத் தலைமை மீதும் தமிழினத்திற்கு எவ்வாறான நம்பிக்கை ஏற்படவுமில்லை. சிங்களம் நம்பிக்கையுடன் நடந்து கொள்ளவுமில்லை என்பதே வெளிப்படையான உண்மை. இதற்கான ஆதாரங்கள் கடந்த அறுபது ஆண்டுகளாக இலங்கை வரலாற்றில் கொட்டிக்கிடக்கின்றன.

இதனால் இலங்கைத் தமிழினம் ஒப்பீட்டளவில் புலிகளை ஆதரிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டார்கள். அதாவது புலிகளை காட்டிலும் கொடியவர்களாக சிங்களத்தையும் சிங்களத் தலைமைகளையும் இலங்கைத் தமிழினம் கருதுமளவிற்கு நீங்கள் கொடியவர்களாக மனிதாபிமானம் அற்றவர்களாக இனவெறியர்களாக சூழ்ச்சி புரிபவர்களாக இனஅழிப்பின் மீது தீராத தாகம் கொண்டவர்களாக இருந்தீர்கள் என்பதற்கான வெளிப்படையான சாட்சியமே தமிழ் மக்கள் புலிகளை ஆதரித்தமையாகும். கடைந்தெடுத்த, ரௌடித்தனமான, தெருசண்டியன் போன்ற, பாசிச மிலேச்சதிகார, இன – ஜாதி –  மத வெறியையும்; தன்னுள் தீவிரமாக  கடைப்பிடித்த கேவலமான அமைப்பையே ஒரு மனிதக் கூட்டம் ஆதரித்ததற்கான காரணமாக நீங்கள் இருந்திருக்கிறீர்கள் என்றால் நீங்கள் எவ்வளவு கேடு கெட்டவர்கள் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்!! – அவற்றை விவரணம் செய்வதற்கு எனக்கு வார்த்தைகள் போதாது.

இன்று பத்துலட்சத்திற்கும் மேலான தமிழ் மக்கள் இலங்கையை விட்டு வெளியேறி வாழ்கிறார்கள். இவ்வளவு மக்கள் நாட்டை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கும் போதும் தவறினை உணர்ந்து நிலைமையை சீர் செய்ய முடியாத சிங்களத்தையும் சிங்களத் தலைமைகளையும் தமிழினம் எப்படி நம்புவது?!!

இனக்கலவரங்களை தடுக்காத சிங்களம் அதை உருவாக்கும் சிங்களம் அதனால் உருவாகும் அகதிகளை கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கப்பலேற்றினார்களே!

ஜனாதிபதி அவர்களே!

இன்றைக்கு முப்பது வருடங்களுக்கு முன்னம் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்த நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். – சிங்கள இனத்தின் நெருக்கடியினாலேயே தவிர மன நோயினால் அல்ல. என்ன காரணங்களுக்காக தமிழ் இளைஞர்கள் தமது இனிய இள வயதுகளை இழந்து தமது அரிய உயிர்களையே முதலீடாக வைத்து போராட்டத்தை கையிலெடுத்தார்களோ அதன் காரணங்கள் – இன நெருக்கடிகள் – ஏமாற்றங்கள் அவமதிப்புக்கள் எல்லாம் தெளிவாக எதுவும் குறைவின்றி அப்படியே இருகின்றன. அதாவது தமிழினம் தனது ஆயுதப் போராட்டத்தை கைவிட வேண்டிய சூழிநிலையை ஏற்படுத்துகின்ற  நம்பிக்கையை, அதற்கான சமிக்ஞையை இதுவரைகாலும் சிங்களம் தோற்றப்படுத்தவில்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். மாறாக ஆயுதப் போராட்டத்தையே தனது தொழிலாக தாதாவிசமாக சுவீகரித்துக் கொண்ட பிரபாகனுடைய உலகின் உச்ச நிலைக்குரிய அடாவடித்தனங்களே, எஞ்சிய தமிழர்களை ஆயுதப் போராட்டத்தையே விட்டு ஓட்டமெடுக்கச் செய்தது – பெரும்பாலோர் புலிகளினாலேயே அழிக்கப்பட்ட பின்பு இன்று புலிகள் இல்லாத நிலையில், அன்று ஆயுதம் ஏந்திய இளைஞர்கள் அதனையே செய்வதற்கான சூழ்நிலைகள் மீண்டும் அப்படியே இருக்கின்றன எனும் போது என்ன நிகழப் போகின்றது என்பதை உங்ககளால் புரிந்து கொள்ள முடியாவிடில் யாராவது சாமானிய மக்களிடம் கேட்டால் புரிந்து கொள்ளலாம்.

பிரபாகரன் எவ்வாறான மிலேச்சதிகார பயமுறுத்தலை வைத்து தமிழினத்தையே அடிபணிய வைத்தாரோ அதே வழிமுறைகளையே நீங்களும் கடைப்பிடிப்பது போன்ற உணர்வே அதிகமாக தெரிகிறது. இந்த அதிகார வெறித் தோற்றப்பாடு நீண்ட காலத் தாக்குப் பிடித்தலுக்கு ஒரு போதும்; உதவப்  போவதில்லை. தமிழினத்திடம் இருந்து மட்டுமல்ல சிங்கள மக்களிடம் இருந்தே உங்கள் வெறியதிகாரத்திற்கெதிரான எழுச்சி எழுவதற்கான வாய்ப்புக்களும் மறுப்பதற்கில்லை. அதிகார வெறி உச்சத்தில் இருந்த போது பிரபாகரன் எப்படி கும்மாழமடித்தாரோ அவ்வாறே நீங்களும் கும்மாழமடிப்பது போல் தெரிகிறது – பிரபாகரனுக்கு நடந்தது உங்களுக்கு நடக்காது என ஏதாவது உத்தரவாதம் இருக்கிறதா என்ன?

ஜனத்தின் அதிபதி அவர்களே!

புலிகள் மீதான இறுதித் தாக்குதலின் போது அகதிகளாக்கப்பட்ட சில லட்சம மக்களை  நீங்கள் நிர்வகிக்க முடியாமல் திண்டாடியதும், நிர்வாகக் கேடுகள் நிலைத்திருப்பதும் உங்களுக்கு வெட்கமாக இல்லையா?

இந்த மக்களை ஏன் வவுனியாவிலும் யாழ்ப்பாணத்திலும மட்டும்; குடியேற்ற வேண்டும்? ஏன் சிங்கள பகுதிகளில் வைத்து அவர்களுக்கு நிவாரணம் வழங்கும் எண்ணம் ஏற்படவில்லை? முடியாது. ஜனாதிபதி அவர்களே!! இதுதான் இலங்கையின் நிலவரம்!! இலங்கை தமிழ் அகதி மக்கள் இலங்கைச் சிங்களப் பகுதிகளில் பாதுகாப்பு பெற முடியும் என்பது சாத்தியமற்ற நிலையிலேயே இலங்கை நிலவரம் இருக்கிறது. சிங்களச் சிறைச் சாலைகளில் குட்டிமணி தங்கத்துரை எப்படி கொல்லப்பட்டார்களோ 58, 83 கலவர அகதிகள் எப்படி யாழ்ப்பாணம் அனுப்பபட்டார்களோ அதே நிலவரம் தான் நீறு பூத்த நெருப்பாக இன்றும் உள்ளது. இவ்வாறான இன வேறுபாடுகளே இலங்கையில் அன்றும் இன்றும் இருந்தது. இனி என்றும் இருக்கும். இந்த உதாரணமே உங்களுக்கு புரியவைத்து விடும் இரண்டு இனங்களும் ஒன்றாக வாழ்தல் கடினம் என்பது. இந்த அடிப்படைதான் தமிழினம் தனது பாதுகாப்பை தானே நிலை நிறுத்த வேண்டும் என்பதும் தன்னைக் சூழ பாதுகாப்பு வேலி (எல்லை) இடவேண்டும் என்பதுமாகும். இவை நிதர்சனமானவை. கண் கூடானவை. காலத்தால் அழிக்கப்பட முடியாத காரணிகள். இவைதான் ஒவ்வொரு தமிழனின் உள்ளக்கிடக்கைகளிலும் ஓங்கி அடித்துக் கொண்டிருக்கின்றன – தமது தாயகம் தாயகமாகவே காப்பாற்றப்பட வேண்டுமென்பது.

ஆனால் ஜனாதிபதி அவர்களே!

உங்கள் எண்ணமோ தமிழர் தாயகத்தை சிதைத்து தமிழன் செறிவை தகர்த்து, தமிழினத்தையே நாதியற்ற இனமாக்கி இல்லாதொழிக்கச் செய்யும் முயற்சியே உங்கள் செயற்பாடுகளால் உணரப்பட முடிகிறது. இதனை எந்த தமிழனும் மட்டுமல்ல எந்த நியாயமுள்ள மனிதனும் ஏற்றுக் கொள்ள மாட்டான். மூன்று தசாப்தங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட ஆயுதப் போராட்டம் தேவைகளின் காரணமாகவே எழுந்தது. சிங்களக் கொடுமை ஏற்படுத்திய சூழ்நிலையின் இயல்பு வளர்ச்சியே அது. அதிதீவிர அதிகார உச்ச வெறியின் காரணமாக பிரபாகரனால் தமிழின ஆயுத விடுதலைப் போராட்டம் சீரழிக்கப்பட்டதே தவிர – மேலும் சில சந்தர்ப்பங்களில் வெற்றி நிலையை அடைந்து விட்ட சூழ்நிலைகள் கூட பிரபாகரனால் உடைக்கப்பட்டு தமிழினம் தொடர்ந்து சீரழிய வேண்டிய நிலை ஏற்பட்டதே தவிர மாறாக சிங்கள இனத்தினதோ அன்றி சிங்களத் தலைமைகளோ எந்த நல்ல காரியங்களையும் செய்து விட்டதனால் அல்ல. இந்த நீண்ட நெடிய போராட்ட காலத்தில் பிரச்சனைக்கான காரணிகளை அப்புறப்படுத்தாத சிங்கள நிர்வாகங்களே புலிகளிலும் கொடியவர்கள் என்பது தான் உண்மை. இந்த சிங்களக் கொடுமை தான் புலி போன்ற பாசிச கும்பலும் ஆதரிக்கப்படக் கூடிய (தமிழ் மக்களாலேயே) அளவுக்கு காரணியாக இருந்தனர் என்பதிலிருந்து நிலைமையை புரிந்து கொள்ளுங்கள்.

எனவே சிங்களமே! நீங்கள் தான் பிரதான தவறாக இருந்தீர்கள் – இன்றும் இருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இதனையே ராஜபக்ச அவர்களும் வீறாக செய்வதற்கு முயற்சிக்கிறீர்கள். இந்த நிலை தொடர்ந்தால் ஒரு அடக்கப்பட்ட இனம் – அடக்கப்படுகிற இனம் என்ன செய்ததோ என்ன செய்ய வேண்டுமோ அதனையே செய்யும் என்பது இயல்பானது. நிதர்சனமானது. அதனை எந்த நிர்ப்பந்தங்களாலும் தடுத்து விட முடியாது. புலி முடிந்தவுடன் எல்லாம் முடிந்து விட்டதென்ற இறுமாப்பு உங்களிடம் இருந்தால் அது உங்கள் அறிவீனமாகவே இருக்க முடியும். அதாவது வடக்கு – கிழக்கு தமிழர் தாயகம் என்ற அடிப்படையில் பிரச்சனை தீர்க்கப்படவில்லை என்றால் இலங்கையில் தமிழினம் மட்டுமல்ல சிங்கள இனமும் நிம்மதியாய் இருந்து விட முடியாது என்பதை சிங்களம் மட்டுமல்ல பின்னால் திரியும் தமிழர்களும் மறந்து விட வேண்டாம்.

மேலும் ஜனாதிபதி அவர்களே!

வெற்றிடமாக்கப்பட்ட தமிழர் பிரதேசமாகிய முல்லைத் தீவில் பொலிஸ் பயிற்சி நிலையம் தொடங்குவதாக அறிய முடிகின்றது – கிளிநொச்சியில் சுதந்திர வர்த்தக வலயம் அமைய இருப்பதாக அறிய முடிகின்றது. வன்னியின் சில பகுதிகள் விவசாய ஆராச்சிகளின் பரிசோதனைக் கூடமாக மாற இருப்பதாக தெரிய வருகிறது.

தமிழர் பிரதேசங்களில் உண்மையிலேயே உங்களுக்கு அன்பு இருந்தால் நன்றி! ஆனால் அவை ஒன்றும் இப்போது எமக்கு தேவையில்லை. தமிழர்களுக்கு தீர்வும் அதனூடான தமிழர் பிரதேசங்களில் தமிழர் நிர்வாகமும் தான் முதலில் தேவை.

தமிழர் பிரதேசங்களில் என்னத்தை தொடங்குவதென்பது அந்த தமிழர் நிர்வாகத்தினரின் அனுமதியுடன் தான் ஆரம்பிக்கப்பட வேண்டுமென்ற புரிந்துணர்வு உங்களுக்கு இல்லை என்றால் இலங்கையில் தமிழரும் சிங்களவரும் புரிந்துணர்வுடன் வாழலாம் என்பது வெறும் கற்பனையாகவே இருக்க முடியும். மாறாக தமிழினம் பிரிந்து செல்வதைத் தவிர வேறு வழியின்றி போய் விடும் என்பது தவிர்க்க முடியாததாகி விடும்.

ஜனாதிபதி அவர்களே!

நீங்கள் புலிகளுடனான யுத்தத்தில் வெற்றியடைந்திருக்கிறீர்கள்.  நல்லது! புலிகள் அடித்து அழிக்கப்பட்டதில் முழு உடன்பாடு உள்ளவன் நான். புலிகள் தமிழர்களின் வெற்றிகளையே தோல்விகளாக்கியவர்கள். அடித்து அழிக்கப்படத் தான் வேண்டும். இனி இருந்தாலும் தமிழினத்தை முன்னேற விடப் போவதில்லை. இந்தியாவின் முன்னாள் பிரதமரை கொலை செய்த காரணத்தினால் தமிழினத்தையே அனாதைகள் ஆக்கியவர்கள். அடித்து அழிக்கப்படத்தான் வேண்டும்.

ஆனால்…

அவர்களை அடிப்பதற்கு நீங்கள் யார்? அவர்கள் உருவாவதற்கே நீங்கள் தான் காரண கர்த்தாக்கள். அவர்கள் தமிழர்களாலேயே ஆதரிக்கப்படுவதற்கும் உங்கள் கொடுமைகள் தான் காரணம். புலிகள் தமிழர் போராட்டத்தின் ஒரு பகுதியினர்தான். மறு பகுதியினர் புலிகளாலேயே விரட்டப்பட்டுத் தான் ஆயுதப் போராட்டத்தை கைவிட்டார்களே தவிர சிங்களவர்களின் சீர்திருத்தங்களினால் அல்ல. புலிகள் சிங்கள நிர்வாகத்தினரால் அழிக்கப்பட வேண்டியவர்கள் என்றால் புலிகளின் நெருக்கடிகளாலேயே ஆயுதங்களை கைவிட்டவர்களும் அடிக்கப்பட வேண்டியவர்களே. ஆனால் நீங்களோ அவர்களை மட்டும் நண்பர்களாக வைத்திருக்கிறீர்கள். ஆயுதப் போராட்டம் எழுந்ததற்கான காரணிகள் அப்படியே இருக்கின்றன. அதனடிப்படையில் நியாயமான ஆயுதப் போராட்டத்தை அந்தக் காரணிகளை அகற்ற முயற்சிக்காமல் அடித்து அழிப்பது எப்படி நியாயமாகும்.

மேலும் புலிகள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு சிறப்புச் சிறைகளில் மறைத்து வைத்திருக்கிறீர்கள். தமிழன் போராட வேண்டிய சூழ்நிலைகளை வைத்துக் கொண்டு அதனைத் தீர்க்காமல் அதற்கெதிராக போராடியவர்களை தொடர்ந்து தண்டனை கொடுப்பது எப்படி நியாயமானது. மேலும் புலிகளின் நெருக்கடிகளால் மட்டும் போராட்டத்தைக் கைவிட்டவர்கள் சகஜமாய் வாழ முடிகிறது – ஏன் மந்திரியாகவும் இருக்க முடிகி;றது – மேலும் புலிகளிலேயே  சில வருடங்களுக்கு முன்பு வரை இருந்தவர்கள் மந்திரிகளாகவும் கட்சியின் உப தலைமையாகவும் இருக்க முடியுமென்றால் சில வருடங்கள் மேலும் போராடியவர்கள் ஏன் சிறைகளில் வாட வேண்டும்.

எனவே சிங்களமே! மற்றும் அதன் ஜனாதிபதி அவர்களே! முதலில் பிரச்சனைக்கான தீர்வை இலங்கை – இந்திய ஒப்பந்தம் அல்லது அதற்கும் மேல் போய் தீர்வை செயற்படுத்துங்கள். அனைத்து போராட்டக் கைதிகளையும் விடுதலை செய்யுங்கள்.

இல்லையென்றால் இன்னொரு போராட்டம் தவிர்க்க முடியாததாகி விடும். அதை உருவாக்கியவர்களாக நீங்களே மறுபடி இருப்பீர்கள். நிம்மதியாய் இருந்து விடலாம் என்று மட்டும் நினைத்து விடாதீர்கள்.

இலங்கைத் தமிழர்கள் தமது எதிர்கால வாழ்க்கை மீது நம்பிக்கை ஏற்படுத்தப்பபடாத சூழ்நிலை தொடருமாயின் பல சிவகுமாரன்கள்; தோன்றுவது இயற்கையானதும் தவிர்க்க முடியாததுமாகும்! ஒடுக்கு முறைக்கெதிராக கிளர்ந்தெழுவது என்பது எந்த விதமான அடக்கு முறையாலும் அடக்கப்பட்டு விட முடியாது.

அடக்கப்படும்; இனம் அமைதி காப்பதில்லை.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகம்!!

பிற்சேர்க்கை – மேலும் இக்கருத்துக்களை எழுதும் நான் தமிழர்களுக்காக அடிமைத்தனமின்றி, அடங்கிப் போகும் குணமின்றி, நேர்மையாக தமிழருக்காகவே அரசியலில் ஈடுபட்டுள்ள அனைத்து தமிழ் அரசியல் தலைமைகளையும் ஏற்றுக் கொள்கிறேன். தமிழின விடுதலை என்பது பலவழிகளினூடு வந்து சேர்கின்ற இலக்குத் தான். எனவே அனைத்து ஜனநாயக இயக்கங்களையும் ஏற்றுக் கொள்கிறேன். என்னிடம் தலைமை நோக்கமும் கட்சியும் இல்லாத காரணத்தால் இதை இலகுவாக என்னால் சொல்ல முடிகிறது.

மாறாக சமாதானம் – சுபீட்சம் – சகவாழ்வு என சொல்லிக் கொண்டும் தமது சொந்த சுபீட்சத்திற்காக கிளம்பியுள்ளவர்கள் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியவர்களல்லர்.

தமிழ் தலைவர்கள் ஒரே தலைமையில் வருவதற்கு அவர்களது வர்க்க நலன் இடந்தராது என்பது ஒழுங்காக புரிந்து கொள்ளப்படும் காரணத்தினால் தமிழருக்கு சாதகமாக செயற்படுகிற அடிப்படையிலான அனைத்து தலைமைகளையும் ஏற்றுக் கொள்கிறேன்.

எதற்காக எப்படி ஏன் சிறிரெலோ உருவாக்கப்பட்டது? : முன்னாள் ரெலோ போராளி

TELO_SrisabaratnamSelvam AdaikalanathanUthayarajah_Sri_TELO(கட்டுரையாளர் தேசம்நெற்றுக்கு தன்னை வெளிப்படுத்திக் கொண்டுள்ளார். ஆயினும் தன்னை இனம் காட்டுவது இன்றைய சூழலில் அவருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று கருதுவதால் அவர் தனது பெயரைக் குறிப்பிடவில்லை. கட்டுரையாளர் மட்டு அம்பாறையைச் சேர்ந்த முன்னாள் ரெலோ போராளி.)

தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) 1986 இல் விடுதலைப் புலிகளால் அழிக்கப்பட்டு அதன் அப்பாவி உறுப்பினர்கள் புலிகளால் வேட்டையாடப்பட்டனர். இதைத் தொடர்ந்து ரெலோ உறுப்பினர்கள் பலர் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடினர். சிலர் புலிகளிடம் தாங்கள் அரசியலில் ஈடுபடப் போவதில்லை என எழுதிக் கொடுத்து விட்டு சாதாரண வாழ்க்கையை புலிகளின் சந்தேகங்களுக்கு முகம் கொடுத்த வண்ணம் இலங்கையில் வாழ மிகச்சிலர் அரச பாதுகாப்பு படையுடன் சேர்ந்து புலி எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர் என்பது எல்லோருக்கும் நினைவிருக்கலாம்.

இதனைத் தொடர்ந்து தமிழ் தேசிய  கூட்டமைப்பில் சங்கமமான அரச ஆதரவு ரெலோவினர் தங்களது ஆதரவை புலிகளுக்கு நல்கி பல எம். பி பதவிகளை பெற்றுக் கொண்டனர். இதில் உண்மையை கூற வேண்டும் எனில் செல்வம் அடைக்கலநாதன் போன்றோருக்கு மன்னாரில் அவரது சாதி வாக்குகள் மிகத் தாராளமாக விழுந்ததை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனால் இவர்களின் கண்மூடித்தனமான புலி ஆதரவு நாட்டிலும் வெளிநாடுகளிலும் ரெலோவினர் மத்தியில் எரிச்சலை உண்டு பண்ணியது. வெளிநாடுகளில் நடந்த ரெலோ கூட்டங்களில் சிறிகாந்தா சிவாஜிலிங்கம் போன்றோர் நேரடியாக விமர்சிக்கப்பட்டனர்.

இதன் தொடர்ச்சியாக லண்டனில் 20 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வரும் ஜனநாயக முகமூடியணிந்த ( இவர் புலிகளின் ஜனநாயக மனித உரிமை மீறல்களை மாத்திரம் விமர்சிப்பாராம்.) தலித் அரசியல் செய்யும் (பெரும்பான்மை) வெள்ளாளரான நெற்றிக் கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே என பெயரில் மாத்திரம் கொண்டுள்ள முன்னாள் ரெலோ உறுப்பினரான ஒரு நபர் தனது அரச தொடர்புகளைக் கொண்டு, சிறி ரெலோவையும் அதன் வெப்சைட்டையும் நடத்தி வருகின்றார்.  முன்னாள் ரெலோ உறுப்பினர்களான எங்கள் முன் ஏராளம் கேள்விகள் உள்ளன.

ஜனநாயகம் பேசும் சிறிரெலோ புலிகள் அழிக்கப்படுவதற்கு முன் தான் செய்த ஜனநாயக மீறல்கள் பற்றி எங்காவது சுயவிமர்சனம் செய்ததா? சுதன், ரமேஸ் பிரச்சனையில் எத்தனை போராளிகளின் உயிர் பறிக்கப்பட்டது? எத்தனை போராளிகள் அடித்து முறிக்கப்பட்டது? சேலம் கொல்லி மலையில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர்? த.வி.கூட்டணி எம்.பிக்கள் ஆலாலசுந்தரம், தருமலிங்கத்தை ஏன் கொன்றீர்கள்? சமாதானம் பேச வருமாறு கூறி தாஸ், பீற்றர், காளி மற்றும் பலரை யாழ் போதனாசாலையில் வைத்துக் கொன்றொழித்தது பற்றி ஏதாவது கூறியுள்ளதா? இதை கண்டித்து ஊர்வலமாக வந்த மக்கள் மேல் துப்பாக்கி சூடு நடத்தியதை என்னவென்று கூறுவது?

பின்பு தாஸ் குழுவை நாடு கடத்தியது (நன்றி : தமிழ் மக்கள் பாதுகாப்பு பேரவை) ஏன்? ஒரு தோழர் கூறுகிறார் சிறி சபா மிகவும் நல்லவராம் – அவர் தாஸ் குழுவை கொல்லாமல் (புலிகள் போல்) அனுப்பினவராம்! அந்த ஒரு விடயத்தில் மாத்திரம் சிறிசபா ஒழுங்காக கணக்குப் போட்டுள்ளார். ஏனெனில் அவருக்கு தனது அணியின் பலம் தெரிந்துதான் தாஸ் குழுவுடன் மோதவில்லை. விமல், நேரு போன்ற N.L.F.T அனுதாபிகளில் ஒருவரை செட்டி அவர்களைக் கொண்டே கிடங்கு வெட்டச் சொல்லி கொலை செய்தது, பல ரெலோ உறுப்பினர்களின் மக்கள் விரோத அராஜக நடவடிக்கைகள் இவையெல்லாம் சிறிசபாவின் தலைமையில் கீழ் தான் நடந்தது. அவர் இதை ஒருபோதும் கண்டித்ததில்லை – தண்டித்ததில்லை. ஆனால் இங்கு ஒரு கும்பல் சிறி சபாவின் பெயரில் ஒரு இயக்கம் அதுவும் ஜனநாயகம், மனித உரிமை போன்றவற்றின் பெயரால்…..! சரி – அதை விடுவோம்!

ஜனநாயகம், சுபீட்சம், புனர்வாழ்வு என்ற பெயரால் ஏன் புதிதாக ஒரு கட்சி (சிறி ரெலோ) இயங்க வேண்டும்? பேசாமல் மகிந்தவின் கட்சியிலோ அல்லது டக்கிளசின் கட்சியிலோ சேர்ந்து மக்கள் சேவையை புரியலாம்தானே? பெடரல் பார்டியை எப்படி தமிழரசுக் கட்சி என செல்வா, அமிர் கூறினார்கள் என கேள்வி கேட்ட அதே நபர்கள் ஐக்கிய இலங்கைக்குள் சிறி ரெலோ விடுதலை இயக்கம் என்ற பெயரில் கட்சி நடத்தி தமிழ் மக்களை ஏமாற்றுகிறார்கள்? ரெலோவை புலி மாத்திரம் அழிக்கவில்லை. சிறிசபா தாஸ் குழுவை அழித்த போதே ரெலோவின் அழிவு தொடங்கி விட்டது! தாஸ் குழு இருந்திருந்தால் புலிகள் இலேசில் ரெலோவின் மேல் கைவைத்திருக்க மாட்டார்கள். இதன் மறுதலை தாஸ் புகழ் பாடுவது அல்ல. ரெலோ பலமாக உள்ளது என புலிகள் நினைத்திருப்பார்கள்.

ரெலோ புலிகளால் அழிக்கப்பட்ட பின்பு, இலங்கை அரசபடைகளுடன் சேர்ந்து இயங்கக் கூடாது என சொன்னவர்கள் பின்பு ரி.என்.ஏ இல் ரெலோ இயங்கிய போதும் புலிகளுடன் உறவு வைக்கக் கூடாது என சொன்னவர்கள் நாம். எனவே யாரோ சிலரின் பிழைப்பிற்காக ஒரு கட்சியை நடத்தி பாவப்பட்ட மக்கள் மேல் மேலும் தொல்லைகள் கொடுக்காதீர்கள் என தயவு செய்து நாம் மன்றாடி கேட்டுக் கொள்கிறோம்.

தமிழ் பேசும் சிறுபான்மை மக்களின் பிரச்சனைகளை எந்தளவிலும் இலங்கை அரசு தீர்க்கவில்லை அல்லது தீர்க்கப் போவதில்லை என்பதே எமது நிலையாகும். ஆனால் சிறி ரெலோவை இயக்கும் இந்த நபர்கள் தமிழ்பேசும் சிறுபான்மை  மக்களின் அடிப்படை அரசியலின் நலன்களுக்கு எதிராக இனவாரியான தரப்படுத்தல், சிங்கள குடியேற்றங்கள் சரியென்றும், இலங்கைத் தீவில் தமிழர்களுக்கு எந்தவித பிரச்சனைகளும் இல்லையென்றும் பேசித்திரிகின்றார்கள். இவர்களது கருத்துப்படி பார்த்தால், பிரச்சனைகளற்ற தமிழ்பேசும் தமிழீழ மக்களுக்காக தமிழீழ விடுதலை இயக்கம் என்ற பெயரில் கட்சி நடத்தி தம் கருத்துக்களுடனேயே முரண்பட்டு கொள்கின்றனர்.

இந்திய சுதந்திரத்தின் பின்னர் காந்தியடிகள் காங்கிரஸை கலைத்து விடும்படி கூறினார்கள். அது போல் நாமும் இவர்களிடம் கோருகின்றோம் – ரெலோவைக் கலைத்து விடுங்கள் என்று! உங்கள் கருத்துப்படி பிரச்சினைகளற்ற தமிழ் மக்களுக்கு அது தேவையும் இல்லை!!

முன்னாள் ரெலோ உறுப்பினர்.

(பிற்குறிப்பு – இப்போதுள்ள செல்வம் ரெலோ ரெலோவை மூடிவிடுமாறு நாம் கோரிக்கை விடுத்து நீண்ட நாட்களாகின்றன.)

TRANS-NATIONAL GOVERNMENT OF TAMIL EALAM : Mohamed Nisthar

Jan JananayagamSelvarasa_PathmanathanUruthrakumaran_VYou’re fired! This exclamation may be familiar with the viewers of Sir Alan Sugar’s “Apprentice”  on the BBC. However its speciality can’t be fully comprehended  by readers and  non viewers alike , because the exclamation itself doesn’t  reveal anything other than its literal meaning. But the way Sir Alan Sugar says  it definitely carries many clear messages to the person it’s said to.  No matter one’s social standing, academic achievements, physical appearance, their field of expertise or the nature of their indefatigability. If Sir Sugar says “you’re fired” he means it for a particular reason. So what relevance does the above have  with the “Trans – national government of Tamil Ealam ” a spontaneous question may emerge in the readers’ mind. Wait a minute, I’ll take you through and you may spot the relevance.

I recently happened to read an article on You Tube  that a group of Tamil Tigers and/or pro tiger Tamils urge the Tamil populous worldwide to support creating a trans-national government of Tamil Ealam.  And  before people asked them back “did you mean Tamil Ealam government in exile”, the group explained it is not as such, but it’s an unprecedented experiment to create  a body which may take the Tamils towards having the Tamil Ealam government in exile. In a nutshell, my understanding is Ithuthaan athu aahawe athuthaan ithu (this is that thus that  is this). Whether the experiment will produce a desired outcome or not, they mean that it will ultimately be a Tamil Ealam government in exile (TEGiE). (  புலம்பெயர் தேசத்தில் தமிழீழ அரசாங்கம் அமைக்க சட்ட அறிஞர் உருத்திரகுமார் தலைமையில் செயற்குழு : தவிபு அனைத்துலக இணைப்பாளர் பத்மநாதன் )

Therefore we assess straightaway the necessity and viability of the government in exile. One of the designers of the mass engagement with the Tamils Tigers, Basil Rajapaksa, publicly announced that he will curtail the idea of the TEGiE to the limit of a day dream. By this statement it appears that the first and foremost obstacle has already been laid before the inception of the exile government. My concern is not what Basil Rajapaksa said or may do, but what made the group come up with the idea without a need for it. What did  they learn from the experiments they did for the last quarter of a century. Why they think it is the right time to set up such a political organ, whereas a solid political platform  is already in existence  in Sri Lanka and crucially will it make any difference  and did they think of its eventualities.

They may come up with their usual  answers that they can’t reveal all those for some precautionary reasons. We put aside the reasons the group may give us and see what the  International Law says about a government in exile, in brief “Government in exile normally claims to be legitimate government of  a  territory, which was taken from them by subjugation. And the intended government in exile  may operate in foreign soils, maintain diplomatic sort of relationship with states and other political and non political entities, if the counterpart  is willing to engage with such an exile government”

After all the creation and functioning of an exile government is purely a political consideration with some legal consequences. Precise examples are Ache special territory (Indonesia), autonomous  Republic of Abkhazia (Georgia), Transnitria (Moldova), Nagorno Karabah ( Azerbaijan), Somaliland (Somalia),  Tibet (Tibet/China) and State of Palestine ( occupied  territory, including current state of Israel,  by Zionist Jews) . In almost all cases it is a pompous idea except the State of Palestine according to the international community.  
 
In a Sri Lankan political context no reasonable person would  take issues with a political experiment as long as it does not keep the IDPs behind the barbed wire camps forever, claim deaths in scores, make people lose their limps in Tamils’ native places. We hope the working committee for the so called TEGiE dare not make the situation worsen and don’t do their experiment at the expense of the IDPs. They also should not forget the sufferings the IDPs face are partly attributable to the Tamils Tigers’ 30 years long experiments. 

Therefore my  questions to this group are , can the “would be” Tamil Ealam government in exile establish that their territory has  been taken by military conquest, putting an end to their functioning government in their territory at the time of the conquest in the  first place? If they had a fully functioning government, had that been recognised at least by a member state of the United Nation? Had the country maintained a bilateral or multilateral relationship with the international community? Had that government complied with international law as it invokes the same for its existence. The list of questions is non exhaustive, but the answer is simply a big no.

Let’s see what one of the key members of the TEGiE, an attorney-at – law( solicitor) Mr. V.Uruthrakumaran  puts in his statement.  ( நாடு கடந்த தமிழீழ அரசு அமைப்பதற்கான முன்னேற்பாட்டுச் செயற்குழு: வி. உருத்திரகுமாரன் )According to him the  constitution of the TEGiE will be based on the “Vattukkotai Declaration” and the draft put forward for the formation of the “Interim Self Governing Authority” (ISGA). The former did not address the multiethnic nature of Sri Lanka and deliberately reduced it to a dual ethnic state status and their one time dream land of Tamil Ealam therefore is a mono -ethnic state. 

The latter went a step ahead and denied any one’s participation other than the tiger Tamils, perhaps the tiger Tamils think the  “Tamilness” of other Tamils to be tested before they are considered in the political process. The advisory committee, full of pro tiger professors and doctors, underpins the question of possible “Tamilness” of  other Tamils. Therefore the above two pieces of near legislative precedents are fundamentally flawed.  Any future political set up derives from these concealed vitriolic documents are dangerous to the harmony among the Tamils and between the minority Tamils and the minority Moors (religiously Muslim), who are also indigenous inhabitants of the east, north and north-west of Sri Lanka. The inclusiveness, Mr. V.Uruthrakumaran  emphasized in his statement is simply a window dressing and nothing else. If the working committee is serious enough to work on the principle  of “inclusiveness” then they ought to amend the above documents, even for the hypothetical functions of the TEGiE.

It is also pertinent  to state two more interesting things I saw in the nine points statement made by Mr. Uruthrakumaran. The first one is  “working with partnership with the Tamils National Alliance (TNA)”. The TNA have been in the Sri Lankan parliament as the representatives of the Tamils, in fact they were the proxies of the Tamil Tigers. The TNA made Tamil voters boycott the presidential election saying it was for the Singhalese parliament and nothing to do with the Tamils, whilst warming up Singhalese parliament’s seats. How can sound minded Tamil voters accept that the TNA is their representatives in the Sri Lankan parliament. TNA’s claim to be democratically elected Tamils’ representatives can be confirmed only if they step down with immediate effect and stand again in by election and prove to the wider world the voters’ unambiguous  position. Until such thing happens the choice of the TNA for a partnership program is a grievous mistake in any future political proposals.

The second point, more interesting than the previous one, is “building a political program with the participation of Muslim representatives”. It goes against the very norm of the Tamil Tigers’ political advisor, late Mr. Anton Balasingam, who rejected the demand to accommodating the Moors as a party to the peace process at the outset. This very fact reflected in the draft for the ISGA, for which Mr. V.Uruthrakumaran was the master mind.  As far as the Tamil Tigers are concerned the Moors are a “cultural group” or “Tamil speaking Muslims” (a status co-ownership for the language barred and reduced  from full ethnicity) How would Mr. Uruthrakumaran expect the Moors to participate in any thing with the tiger Tamils, whilst the purge of mistrust between these two distinct ethnics, part and parcel of the demography in the north, east and north-west,  has not been done fully.

Though the groaning tiger faced, crossed guns behind the tiger head and with the bulleted circumference Maroon coloured flag, the items, which Emperor  Cholan had no knowledge of whatsoever, is under scrutiny; the geographical map of the Tamil Ealam also attracts comments. 

The territory line starts from the south east of Sri Lanka, goes up all the way to Jaffna peninsula and takes a turn towards north west beyond Mannar and goes futher down through Horse Mountain (Kuthiraimalai) up to Kochchikade Bridge (northern  boundary of Negombo). Is it  the flag hoisted in front of the office of the TEGiE and is it the map hung behind the big table of the executive committee. Will the people of the east be ready to merge themselves with dictatorship type of tiger Tamil people of the north, and how the TEGiE will prove with evidence that the area south to Mannar and to the north of the Negombo suburb had been the legitimate territory of the Tamils or at least Tamil Kings had control of it. The task seems be very difficult and complex.

By and large the TEGiE will be added in the list of Old Boys Associations and  British Tamils Sports Associations if they totally ingnore the people in the land we talk about. It’s important that any interested politician comes forward with clean hands, free from perceived political opinion of the tiger, with a sense of commitment, without hidden agenda and from the midst of the people who had been experiencing the political calamity. The group has to go back to the very basics. Even though the upcoming elections in the war affected region are premature, it will be a definite scene that the Tamils will enthustically line up to cast their vote. If it happens then it’ll be a clear sign of  choice they have in their minds. It’ll also be an indicator that they prefer any home grown solution (as it’s said by the president) rather than an exported one by their umbilical cord relatives from overseas.

Tamil voters’ position was confirmed in the recent European Parliamentary  election especially in England. The so called human rights campaigner and possible executive committee member of TEGiE,  Ms. Jan Jananayagam openly said in an interview on a Tamil radio that she had no other things in her election manifesto other than the “Tamils genocide issue”, however two weeks later she came up with a list of environmental, economic and political issues as her concerns for the EP election.  The fine opportunism. ( எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி!? ‘வணங்கா மண்’ வரிசையில் ஜனனி ஜனநாயகத்தின் அரசியல் கப்பலும் கவிழ்ந்தது!!! : ரி கொன்ஸ்ரன்ரைன் )

She then went on, at an interview at Riz Khan show in the Aljazeera TV, as a response to a question  “what do you say about the killing of innocent people by the Tamil tigers”, saying,  go and ask tigers, an appalling answer.  The president Rajapaksa gave a  political answer (a lie) “maybe a 100 people died in the crossfire” to a similar question put to him  at a different  occasion. But Ms. Jananayagam could have given  at least a diplomatic answer (a polished lie- which I’m not encouraging) such as “it is very hard to get first hand evidence due to the intensified fight in the region therefore  it’s not right to comment on the allegation of tigers’ killing of innocent people”.   The Tamil and non Tamil  voters rightly identified that her human rights perceptions  are very different from what they see as human rights and she lost the election when she equated the humans rights to Tamils’ only human rights and the Tamils’ only human rights to the tigers’ only human rights.

So in Sir Alan Suger’s view anybody to be entrusted with a specific task that person should be identified without any mistake. In “ Apprentice” Sir Alan Suger’s task is to see a person’s suitability in the business sense; that the person should strictly observe business ethics without any trick or crook  while working hard to maximise the profit margin. If the job is done to his satisfaction without any doubt then that person is entrusted for the task otherwise he mercilessly says you’re fired and viewers no doubt agree with his decision.

The Tamils have been cheated by one after the other experiments, sugar coated venomous promises, unchecked reliances and money motivated tasks. Until the Tamils stand up and say you’re fired to the untested actors they can’t eradicate the political sufferings so easily. As the TEGiE have not come up with any plausible answers to the many questions posed, the only thing which remains to be said is ‘You’re Fired!’

இனங்களுக்கிடையிலான ஜக்கியம் – இனியாவது சாத்தியமா? : எஸ். தவராசா

SL_Flag(முன்னைநாள் பாராளுமன்ற உறுப்பினரும் சகலகட்சி மகாநாட்டின் அங்கத்துவருமான எஸ். தவராசா அவர்கள் லண்டன் ‘Oxford Union’ இல்  05.06.09 அன்று ஆற்றிய உரையின் தமிழாக்கம்.)

தலைவர் என்னை அறிமுகம் செய்துவைக்கும்போது நான் சார்ந்திருக்கும் கட்சி (ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – ஈபிடிபி) இலைங்கை இந்திய ஒப்பந்தத்தை தொடர்ந்து ஆயுதப் போராட்டத்தை கைவிட்டு ஜனநாயக நீரோட்டத்தை தளுவிய ஒன்று என்று குறிப்பிட்டிருந்தார். அந்த அறிமுகத்தில் அவர் முக்கியமான ஓர் விடயத்தை கூற தவறிவிட்டார். அவ்வாறாக ஜனநாயக நீரோட்டத்தை தளுவியமைக்காக நாம் கொடுத்த விலையோ மிக அதிகம். எழுவதுக்கும் மேற்பட்ட கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் புலிகளினால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஒரு சந்தர்ப்பத்தில் கட்சியின் முக்கிய உறுப்பினர் ஒருவர் தனது ஜந்து வயது மகளுடன் புத்தளத்தில் சென்று கொண்டிருந்தபோது அவரை சுட்டுவிட்டு அவ் ஜந்துவயது சிறுமியிடம் அம்மாவிடம் போய் அப்பா சுடப்பட்டு இறந்துவிட்டார் எனக் கூறவும் என்று சொல்லி அனுப்பினர். அவ்வாறாக மனிதாபிமானமற்ற கொடூரமான முறையில் எமது உறுப்பினர்கள புலிப் பயங்கரவாதத்தினால் தாக்கப்பட்டனர். இவையாவும் நாம் ஆயுதப் போராட்டத்தை கைவிட்டு ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து கொண்டமைக்காக.

எமது கட்சியின் தலைவர் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா அவர்கள் பல தடவைகள் புலிகளின் தாக்குதலில் இருந்து உயிர் தப்பியுள்ளார். ஒரு சந்தர்ப்பத்தில் கொழும்பின் தெற்கு புறத்தில் அமைந்திருக்கும் களுத்துறை மறியற் சாலைக்கு பிரதி சட்டமா அதிபர் சகிதம்  அங்கு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கைதிகளின் பிரச்சனைகள் தொடர்பாக பேசித்தீர்ப்பதற்காக சென்றிருந்த வேளை அங்கிருந்த புலிக்கைதிகளினால் தாக்கப்பட்டார். அத்தாக்குதலின் போது  அவர் பலத்தகாயங்களுக்கு உட்பட்டதுடன் ஒற்றைக்கண்ணின் பார்வையையும் இழந்துள்ளார். அவர் உயிருடன் வாழ்வது ஒரு மறு பிறப்பே என்று கூறவேண்டும். இன்னொரு தாக்குதலின் போது கொழும்பில் அவரின் வாசஸ்தலம்  ‘கொமாண்டோ’ முறையிலான தாக்குதலுக்கு உள்ளானது. அத்தாக்குதலின் போது அவரின் நான்கு மெய்க்காட்பாளர்கள் உயிரிழந்தனர். தனது வதிவிடத்தின் பின்பக்க சுவரினால் பாய்ந்து கொண்டதன் மூலம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தப்பித்துக்கொள்ள முடிந்தது. இன்னொரு முயற்சியாக அவரின் அமைச்சுக் காரியாலயத்திற்கு ஒரு பெண் தற்கொலைக் குண்டுதாரி அனுப்பப்பட்டிருந்தார். அமைச்சரின் காரியாலய அறையின் முன்பு பாதுகாப்பு பிரிவினர் சோதனையிட முயன்றபோது அவர் ஒத்துழைக்காமையினால் அண்மையில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு தன் அங்கியில் இருந்த குண்டை வெடிக்கச் செய்ததன் மூலம் நான்கு பொலீஸ் அதிகாரிகள் உயிரை இழந்ததுடன் அத்  தற்கொலைக் குண்டுதாரியும் இறந்து கொண்டார். நான் குறிப்பிட் கடைசி இரு சந்தர்ப்பங்களிலும் நானும் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் உடனிருந்தமையினால் மயிரிளையில் உயிர் தப்பித்துக்கொண்டேன். நாம் சந்தித்த புலிப் பயங்கரவாதத்தின் பலவடிவங்கள் இவையாகும். 

இப்புலிப் பயங்கரவாதம்  இன்று ஏறத்தாள 380 000 மக்களை அகதி முகாம்களில் வாழும் நிலைக்கு தள்ளியுள்ளது. இம்மக்களின் துயரங்களோ சொல்லிலடங்கா. போராளிகள், பொதமக்கள் உள்ளடங்கலாக 25 000க்கும் மேற்பட்டோர் அங்கவீனர்களாக்கப்பட்டு உள்ளனர். அண்மையில் இடம்பெயர்ந்தவர்களை விட, முன்னைய காலங்களில் இடம்பெயர்ந்த ஏறத்தாள 25 000 குடும்பங்கள் இன்னும் யாழ்ப்பாணத்தில் அகதிகளாக உள்ளனர். 75 000 பேர்வரை இந்தியாவில் 113 அகதி முகாம்களில் உள்ளதாக இந்திய அரச அறிக்கைகள் கூறுகின்றன. யாழ்ப்பாணத்திலும் மன்னாரிலும் இருந்து புலிகளினால் இரு தசாப்தங்களின் முன் விரட்டியடிக்கப்பட்ட 75 000க்கும மேற்பட்ட (முஸ்லீம்) மக்கள் இன்றும் புத்தளத்தில் அகதி முகாம்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களின் இன்றைய ஜனத்தொகை இன்னும் அதிகமாக இருக்கும்.
 
இன்றைய இக்கூட்டத்தின் கருப்பொருளாகிய ‘பயங்கரவாதத்திற்கு பிந்திய காலப்பகுதியில்’ அகதி முகாம்களில் வாழும் மக்களின் உடனடித்தேவைக்கு மேலாக அம்மக்களை மீளக்குடியமர்த்தல்,  உள்ளகக் கட்டமைப்புகளை மீள்நிர்மாணித்தல்; யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை அபிவிருத்திசெய்தல்; மீளக்குடியமர்த்தப்படும் மக்கள் தங்கள் இயல்பு வாழ்பினை மேற்கொள்வதற்கான தொழில்களை ஆரம்பிற்பதற்கு வேண்டிய  உபகரணங்களை வழங்கல் போன்ற பல்வேறு செயற்பாடுகளை செய்யவேண்டி உள்ளது. இவை யாவற்றுக்கும் மேலாக ஓர் முக்கியமான விடயத்தை செய்வதற்கான முனைப்புகளில் ஈடுபட வேண்டி உள்ளது. அதுதான் இனங்களிற்கு இடையில் ஒருமைப்பாட்டை; ஜக்கியத்தை ஏற்படுத்துவதற்கான ஏற்பாடு. ‘இனங்களிற்கு இடையிலான ஜக்கியம்’  ஏன்பதே இன்றைய என்னுடைய பேச்சின் தொனியாக அமையப்போகிறது. ஏனென்றால் அவ்வாறான ஜக்கியத்தை ஏற்படுத்தாமல் ‘பயங்கரவாதத்திற்கு பிந்திய காலப்பகுதியில்’ நாம் மேற்கொள்ளும் எந்த வேலைத்திட்டங்களும் வீணானவையாகப் போய்விடும்.

நேற்றைய தினம் (04.06.09) நான் லண்டனில் உள்ள இலங்கைக்கான தூதுவராலயத்தில் வெளிநாட்டலுவர்கள் அமைச்சர் றோகித போகொல்லகம தலைமையிலான ஆலொசனைக் கூட்டமொன்றிற்கு சென்றிருந்தேன். அங்கு சழூகமளித்தவர்களில் ஏறத்தாள அரைவாசியினர் சிங்களவர்கள் அரைவாசியினர் தமிழர்கள். பேச்சாளர் ‘இராணுவத்தின் வெற்றி’ தொடர்பாக குறிப்பிடும்போது அங்கு பிரசன்னமாயிருந்த சிங்களவர்கள் அனைவரும் கைகளை தட்டி ஆரவாரம் செய்ததையும்; அங்கு சழூகமளித்திருந்த தமிழர்களில் ஒருவரேனும் அவ்வாறு  கைகளை தட்டாததையும் காணக்கூடியதாக இருந்தது. இங்கு முக்கியமாகக் கவனிக்க வேண்டியது அங்கு சழூகமளித்திருந்த தமிழர்கள் பலரை நான் அறிவேன். அவர்கள் புலிகளிற்கு சார்பானவர்கள் இல்லை. நாங்கள் உண்மையில் இலைங்கையில் வாழும் இனங்களிற்கிடையில் ஜக்கியத்தை ஏற்படுத்துவதில் நாட்டமுடையவர்களாயின் நான் கூறிய இவ்விடயத்தை புறந்தள்ள முடியாது. சிங்களவர்கள தமிழர்களிற்கிடையிலான இந்தப் பிரிவானது தினம் தினம் விரிசலடைவதுடன் இரு துருவங்களை நோக்கி மையப்படுத்தப்படுகிறது. இந்த இன விரிசலானது இலங்கையில் மட்டுமல்ல இலங்கையர்கள் கணிசமாக வாளும் நாடுகளில் எல்லாம் பரவலாகக் காணப்படுகிறது. இவ்வாறான இன விரிசலை ஒற்றுமையாக்க வேண்டுமாயின் இதற்கான காரணியை நாம் முதலில் புரிந்து கொள்ளல் வேண்டும்.

சிலரின் கூற்றுப்படீ தெற்கிலங்கையில், குறிப்பாக கொழும்பிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் பெரும்பான்மையான தமிழர்கள், சிங்களவர்கள் வாழ்வதைப்போல் வாழ்கிறார்கள். அவர்களுக்கு எவ்வித பிரச்சனையும் இல்லை;  ஏனைய சிங்களவர்களிற்கு சமானமாகவே அவர்கள் வாழ்கிறார்கள. இவ்வாறான கூற்றிற்கு எனது பதில் அவ்வாறாக வாழம் தமிழர்களின் உள்ளங்களிற்கும் மனதிற்குள்ளும் புகுந்து நீங்கள் சிங்களவர்களிற்கு சமானமானவர்களாக வாழ்வதாக உணர்கிறீர்களா? நீங்கள் பாரபட்சமாக நடத்தப்படவில்லை என நினைக்கிறீர்களா? ஏன்ற கேள்விகளை எழுப்பினால் நிச்சயமாக அவர்களின் பதில் இல்லை என்றே இருக்கும்.

இன்னுமொரு கருத்து உலாவுகின்றது. அதாவது புலிகள்தான் சகல பிரைச்சனைகளிற்கும் காரணம், தற்போது  புலிகள் இலங்கையில் இருந்து முற்றாக அழிக்கப்பட்ட நிலையில் பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்துவிட்டது என்பதாகும். பயங்கரவாதம் என்பது அண்மைக் காலங்களில் உருவான ஒன்று. 1970களில் ஆயதப் போராட்டமே முதலில் ஆரம்பமானது. புலிகள் அவ்வாயுதப் போராட்டத்திற்கு பயங்கரவாதத்திற்குரிய செயற்பாடுகளை இணைத்துக் கொண்டதன் மூலம் அதனை ஓர் பயங்கரவாத அமைப்பாக மாற்றிக்கொண்டனர்.

1970க்கு முற்பட்ட காலப்பகுதியில் தமிழர் தரப்பிலிருந்து அரசியல் காரணங்களிற்காக ஒரு துப்பாக்கி வேட்டுவேனும் தீர்க்கப்பட்டது கிடையாது. ஆனால் இலைங்கை சுதந்திரமடைந்த நாள்முதல் தமிழர்களிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பாரபட்சமான ஏற்பாடுகள் மற்றும்; அவர்கள் சிங்களவர்களிற்கு சமானவற்றவர்களாக நடத்தப்பட்டமை தொடர்பாக தமிழ்த் தலைவர்கள் பல எதிர்ப்பு நடைவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். அவர்கள் அவ்வாறான எதிர்ப்பு நடைவடிக்கைகளை பாராளுமன்றத்திற்குள்ளும் அதற்கு வெளியிலும் சாத்வீக வளிமுறைகளினால் மேற்கொண்டிருந்தனர்.

இங்கு பிரசன்னமாயிருப்பவர்களில் யாராவது தமிழ் மக்களின் பிரச்சனைகள் என்ன என்பதை அறிய விரும்பினால் பண்டாரநாயகா – செல்வநாயகம் ஒப்பந்தம் டட்லி சேனநாயகா – செல்வநாயகம் ஒப்பந்தம் என்பவற்றை படியுங்கள் மின்வலைப்பின்னல் தளங்களில அவை உண்டு, எனது நேரத்தை அவற்றை விபரிப்பதில் செலவிட நான் விரும்பவில்லை. பண்டாரநாயகா (பேச்சாளர் ‘Oxford Union’; கேட்போர் கூடத்தில் தொங்கிக்கொண்டிருந்த பிரமாண்டமான பண்டாரநாயகாவின் படத்தை தன் சுட்டி விரலால் காட்டியவாறு) செல்வநாயகத்துடன் ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டிருக்கிறார் என்பதே தமிழ் மக்களிற்கு பிரச்சனைகள் உண்டு என்பதற்கு அடையாளமாகும். அவ்வொப்பந்தம் நடைமுறைப்படத்தப்படவில்லை எனினும் அதிலிருந்து  இருந்து நாம் கற்றுக்கொள்ளக் கூடியது என்னவெனில்  தமிழ்மக்களின் பிரச்சனைகள் இவ்வொப்பந்தத்தின் மூலம் அடையாளம் காணப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டமையாகும். இதேபோன்றே  டட்லி சேனநாயகா – செல்வநாயகம் ஒப்பந்தமும் அமைகிறது.

இவை 1970ஆம் ஆண்டிற்கு முன் அடையாளம் காணப்பட்ட தமிழ்மக்களின் பிரச்சனைகளாகும். 1970ஆம் ஆண்டின்பின் இன்னும் பல இனரீதியான பாகுபாடுகள் மேற்கொள்ளப்பட்டன. உதாரணத்திற்கு 1970ஆம் ஆண்டு ,அறிமுகப்படுத்தப்பட்ட இன விகிதாசார அடிப்படையிலான பல்கலைக்கழக அனுமதிமுறை. இந்த முறைமையினால் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஓருவன். இந்த இன விகிதாசார அடிப்படையிலான பல்கலைக்கழக அனுமதிமுறையே இளைஞர்களை வன்முறையில் ஈடுபடுவதற்கு வித்திட்டது; அதுவே காலப்போக்கில் ஆயுதப்போராட்டமாகப் பருணமித்தது.
 
ஆயுதப்போராட்டம் பயனையும் ஈற்றுத்தந்தது. இந்திய – இலங்கை ஒப்பந்தமும் அதனைத்தொடர்ந்து கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பு மாற்றங்களும் இவ்வடையாளம் காணப்பட்ட பிரச்சனைகளிற்கு, முழுமையாக இல்லையெனினும், ஓரளவிற்கு தீர்வினை ஏற்படுத்தும் வகையில் கொண்டு வரப்பட்டவையாகும். பண்டா – செல்வா ஒப்பந்தத்தை எடுத்துக்கொண்டால் அதில் சில விடயங்களிற்கு பிராந்திய ரீதியில் அதிகாரப்பரவல் செய்யப்படும் என ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றது. 13ஆவது திருத்தச் சட்டத்தின் மாகாண நிரலை எடுத்துக்கொண்டால் அதில் வரிசைப்படுத்தப்பட்டுள்ள விடயங்கள்  பண்டா – செல்வா ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்களை விட பன்மடங்காகும். மொழி உரிமை விடயத்தை எடுத்துக்கொண்டால் பண்டா – செல்வா ஒப்பந்தத்தில் இணங்கிய வகையில் 13வது திருத்தச்சட்டத்திலும், அதனைத்தொடர்ந்து ஒரு வருட இடைவேளையின்பின் கொண்டுவரப்பட்ட 16வது திருத்தச்சட்டத்திலும் முழுமையாகக் கையாளப்பட்டிருக்கிறது. குறிப்பாக 16வது திருத்தச்சட்டம் நிர்வாக மற்றும் பதிவேட்டு  மொழி தொடர்பாக கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பு திருத்தமாகும். இத்திருத்தத்தின்படி வடக்கு கிழக்கு தவிர்ந்த இலங்கையின் எல்லா மாவட்டங்களிலும் நிர்வாக மற்றும் பதிவேட்டு மொழியாக சிங்களமும் வடக்கு கிழக்கில் நிர்வாக மற்றும் பதிவேட்டு மொழியாக தமிழும் அமையும். அவ்வாறாயின் தமிழ் மக்களின் பிரச்சனைகள் யாவும் தீர்க்கப்பட்டு விட்டதே, இதற்குமேலும் என்ன? என்ற கேள்வியை நீங்கள் எழுப்பலாம்.

துரதிஸ்டவசமாக இவையாவும் அரசியலமைப்பு சரத்துக்களே. இவ்வரசியலமைப்பு சரத்துக்கள் முழுமையாக இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. உதாரணத்திற்கு நான் ஏற்கனவே குறிப்பிட்ட 16வது திருத்தச்சட்டம் எவ்வாறு பாரபட்சமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதைக் காட்ட வினைகின்றேன். இந்த 16வது திருத்தச்சட்டத்தின் உப பிரிவொன்றில் ஐனாதிபதி எந்தவோரு உதவி அரசாங்க அதிபர் பிரிவில் கணிசமான மாற்று மொழி பேசுபவர்கள் வாழ்வார்களேயாயின், அந்த உதவி அரசாங்க அதிபர் பிரிவை இரு மொழிப்பிரிவாக பிரகடணப்படுத்தலாம் என கூறப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கில் வாழும் சிங்களவர்கள் தாங்கள் வாழும் உதவி அரசாங்க அதிபர் பிரிவிற்குள் அடங்கும் அரச காரியாலயங்களில் சிங்களத்தில் கருமமாற்றுவதற்கும் அதேபோன்று தெற்கில் வாழும் தமிழர்கள் தாங்கள் வாழும் பிரதேசங்களில் உள்ள  அரச காரியாலயங்களில் தமிழில் கருமமாற்றுவதற்கும் வகைவகுக்கும்  விதத்திலேயே இச்சரத்து அமைந்துள்ளது.

இதன் அடிப்படையில் இதுவரை 29 உதவி அரசாங்க அதிபர் பிரிவுகள் இரு மொழிப்பிரிவுகளாகப் பிரகடணப்படுத்தப்பட்டு உள்ளது. அவற்றினுள் சில பிரிவுகள் வடக்கு கிழக்கிலும் குறிப்பாக கிழக்கிலும், 20க்கும் மேற்பட்டவை தெற்கில் அமைந்துள்ள உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளுமாகும். இப்பிரகடணங்களை நடைமுறைப்படுத்தல் தொடர்பாக பார்ப்போமாயின் வடக்கு கிழக்கில் இரு மொழிப்பிரிவுகளாகப் பிரகடணப்படுத்தப்பட்டுள்ள அத்தனை உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளிலும் சிங்களத்தில் இலகுவாகக் கருமமாற்ற முடியும். ஆனால் தெற்கில் பிரகடணப்படுத்தப்பட்டுள்ள ஒரு உதவி அரசாங்க அதிபர் பிரிவிலேனும் தமிழில் கருமமாற்ற முடியாது. இவவுதாரணத்திலிருந்து அரசியலமைப்பின் ஒரே சரத்து எவ்வாறு பாரபட்சமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதை காணக்கூடியதாக இருக்கிறது. இங்கு பாரபட்சமென்பது சட்டவாக்கத்தில் இல்லை அதனை நடைமுறைப் படுத்தலிலேயே உள்ளது.

இதை ஓர் உதாரணத்திற்கே எடுத்துக்காட்டியுள்ளேன். இதைப்போல அரசியல் சாசனத்தில் முறையாக நடைமுறைப்படுத்தப்படாத எத்தனையோ விடயங்களை, அதிலும் குறிப்பாக 13வது திருத்தச்சட்டத்தில் உள்ள விடயங்கள் தொடர்பாக, என்னால் விளக்கிக்கொண்டே போக முடியும். எனக்கு ஒதுக்கப்பட்ட நேரம் காரணமாக என்னால் அவை யாவற்றையும் விபரித்து கூறமுடியாமல் உள்ளது. இங்கு முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவெனில் நாம் அரசியல் தீர்வுகளை பற்றி அல்லது அரசியலமைப்பு மாற்றங்களைப்பற்றி எல்லாம் பேசிக்கொள்ளலாம், ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு வேண்டிய மனப்பாங்கு இல்லையெனில் நாம் இப்பிரச்சனைகளிற்கு தீர்வுகண்டு இன ஜக்கியத்தை எற்படுத்த முடியாது. நாம் இப்பிரச்சனைகளை திடசங்கர்ப்பத்துடன்   அணுகினாலேயே உண்மையான இன ஜக்கியத்தை எற்படுத்த முடியும். இன்றைய காலத்தின தேவையானது அரசியலமைப்பின் 13வது மற்றும் 16வது திருத்தங்களில் கொண்டு வரப்பட்ட விடயங்களை முழுமையாக நடைமுறைப்படுத்தி அதன்பின்னும் தீர்க்கப்படாத பிரச்சனைகள் இருப்பின் அவற்றை அடையாளம் கண்டு அதற்குரிய முறையில் அரசியலமைப்பு மாற்றங்களைக் கொண்டு வருதல்.

புலம்பெயர் தேசத்தில் தமிழீழ அரசாங்கம் அமைக்க சட்ட அறிஞர் உருத்திரகுமார் தலைமையில் செயற்குழு : தவிபு அனைத்துலக இணைப்பாளர் பத்மநாதன்

தமிழீழ மக்களின் தன்னாட்சி உரிமைக்கான விடுதலைப் போராட்டம் இன்று புதியதோர் கட்டத்தை எட்டியுள்ளது.

தாயகத்தின் யதார்த்த நிலையினைப் புரிந்து கொண்டு, நமது விடுதலை இலட்சியத்தினை முன்னோக்கி நகர்த்துவதற்குத் தேவையான அரசியல் வேலைத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டிய காலகட்டம் இது.

இதற்காக பொதுக்கொள்கையின் அடிப்படையிலான ஒரு சீரிய வேலைத் திட்டத்தின் முக்கியத்துவத்தினை உய்த்துணர்ந்து, அதற்குரிய ஆலோசனைகளையும் நமது மக்களிடமிருந்து கோரியிருந்தோம்.

நமது மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற கருத்துக்களையும், புலமைசார் அறிஞர்களது ஆலோசனைகளையும் கவனத்திற் கொண்டு, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒன்றினை அமைப்பது (Provisional Transnational Government of Tamil Eelam) எமது அடுத்த கட்டப் போராட்டத்தை முன்னோக்கி நகர்த்துவதற்கு அவசியமானது என உணர்கிறோம்.

இத்தகைய அரசாங்கம் ஒன்றினை அமைப்பதற்கான சகல முன்னேற்பாடுகளையும் மேற்கொண்டு உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்காக ஒரு செயற்குழு, சட்ட அறிஞர் விசுவநாதன் உருத்திரகுமார் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த செயற்குழுவிற்கு முழுமையான ஆதரவினையும் ஒத்துழைப்பினயும் வழங்குமாறு அனைத்துத் தமிழ் மக்களையும் தமிழர் அமைப்புக்களையும் வேண்டிக் கொள்கிறோம்.

தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசைகள் தமிழர் தேசியம், தாயகம், தன்னாட்சி உரிமை என்ற அடிப்படைக் கோட்பாடுகளிலிருந்து கட்டப்பட்டவை.

1976 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானம், 1985 ஆம் ஆண்டு திம்புப் பேச்சுவார்த்தை, 2003 ஆம் ஆண்டு இடைக்கால நிர்வாக அதிகாரசபைத் திட்டம் ஆகியன ஊடாக வெளிப்படுத்தப்பட்டவை.

இந்த அரசியல் அபிலாசைகள் உயிர்ப்பாகப் பேணப்பட்டு பலப்படுத்தப்பட வேண்டியவை.

இதேவேளையில் இன்றைய தாயகச் சூழலில் சிறிலங்காவின் இராணுவ ஆதிக்கப்பிடிக்குள் சிக்கியுள்ள நமது மக்களால் இந்த அரசியல் அபிலாசைகளை ஓங்கி ஒலிப்பது நடைமுறைச் சாத்தியமாகாது.

இந்த யதார்த்த நிலையைப் புரிந்து கொண்டு செயற்படுவது மிகவும் அவசியமானது.

இந்நிலையில் பொதுநோக்குடன் பொது உடன்பாட்டின் அடிப்படையில் தாயகத்திலும் புலத்திலும் இரு சமாந்திரமான செயற்திட்டங்களை தமிழர் தேசம் நடைமுறைப்படுத்த வேண்டும்.

ஜனநாயக முறையில் புலத்தில் அமைக்கப்படவிருக்கும் தமிழீழ அரசாங்கம் தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசைகளையும் உரிமைக்குரலையும் பிரதிநிதித்துவப்படுத்தி அனைத்துலக அரங்கில் இயங்க வேண்டும்.

அதேவேளையில் தமிழீழ மக்களின் அரசியல் அபிலாஷைகளை தமது அரசியல் அடிப்படைகளாகக் கொண்டிருக்கக்கூடிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையில் தாயக நிலைமைகளை பவித்திரமாகப் புரிந்து கொண்டு இயங்கும் வகையிலான தாயகச் செயற்திட்டம் அமைய வேண்டும்.

இந்த இரு செயற்திட்டங்களுக்கிடையில் ஓர் இணைவு இருக்க வேண்டும்.

இப்போது அமைக்கப்பட்டிருக்கும் செயற்குழு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் அதேவேளையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் தமிழர் தேசியம், தாயகம், தன்னாட்சி உரிமை ஆகிய அரசியல் கோட்பாடுளை அடிப்படையாகக் கொண்டிருக்கக்கூடிய ஏனைய அரசியல் அமைப்புக்களுடனும் பேச்சுக்கள் நடத்தி ஒரு பொது உடன்பாட்டை எட்டுவதற்கான முயற்சிகளையும் மேற் கொள்ளும்.

தனது செயற்பாடுகளை ஜனநாயக விழுமியங்களுக்கு உட்பட்டு சுயாதீனமாக முன்னெடுக்கவிருக்கும் இந்த செயற்குழு தனது செயற்பாட்டுத்திட்ட விபரங்களை மக்களுக்கு அறியத்தந்து மக்களுடன் தொடர்ச்சியாகத் தொடர்புகளைப் பேணிக் கொள்ளும்.

இந்த செயற்குழு தனது முயற்சியில் முழுமையான வெற்றி பெற நாம் அனைவரும் இன ஒற்றுமையுடன் ஒன்றிணைந்து செயற்படுவோம்.

தமிழர்கள் ஜனநாயகத்திற்கான தகுதி பெற வேண்டும். : வ அழகலிங்கம்

TULF Leader Anandasangaree Vயாழ்பாணம் வவுனியா உள்ளூராட்சித் தேர்தல்களை  ஒத்தி வைக்கும்படி ஆனந்தசங்கரி, சித்தாத்தன், சிறிதரன் என்ற கூட்டு ஜனனாயக தமிழ் தேசியக் கூட்டணியினர் கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள் சொல்லும் காரணங்கள்:-

“தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் பெரும் இழப்புக்களைச் சந்தித்து சொல்லொணா அவலத்திற்கு முகம்கொடுத்து முகாம்களிலும் வைத்தியசாலைகளிலும் வாழ்கின்றனர். இவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டிய, ஆசுவாசப்படுத்த வேண்டிய இன பந்துக்களில் கணிசமானோர் தேர்தல் அறிவிக்கப்பட்ட மாநகரசபைப் பகுதிகளில் வாழ்கின்றார்கள். இவற்றை மனங்கொண்டு சிறிதுகாலத்திற்கேனும் தேர்தலை ஒத்திவைப்பது அவசியமானதெனக் கருதுகின்றோம். யுத்தம் முடிந்த கையோடு தேர்தல் நடைபெறுவது பொருத்தமற்றது எனக் கருதுகின்றோம். தேர்தலைச் சிறிது காலத்திற்கேனும் ஒத்தி வைக்கும்படி அரசைக் கேட்டுக் கொள்கின்றோம்.”

யாழ்ப்பாண மாநகர தேர்தலில் வாக்களிப்பதற்காக 67 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும் என்றும் புத்தளம், வவுனியா, அனுராதபுரம் கொழும்பு  ஆகிய இடங்களில் இடம்பெயர்ந்து வாழ்பவர்கள் வாக்களிக்கு முகமாகக் கொத்தணி வாக்குச் சாவடிகள் அமைத்துக் கொடுக்கப் படுமென்றும் யாழ்-வவுனியா மாவட்டங்களுக்கான உதவித் தேர்தல் ஆணையாளர் குகநாதன் தெரிவித்துள்ளார்.

இந்த ஆனந்த சங்கரியும் அவரது ஆயுதம் ஏந்தி அட்டகாசம் செய்யும் புளொட் மற்றும் ஈபிஆர்எல்.எப் சகபாடிகளும் கிழக்கிலே தேர்தல் அறிவித்த போதும் அதை ஒத்தி வைக்கும்படி கேட்டார்கள்.

தமிழரசுக் கட்சி தமிழர்விடுதலைக் கூட்டணி புளொட்  ஈபிஆர் எஈ;எப் ஈறோஸ் என்ற தமிழ் இனவாதக் கட்சிகள் இனவாதமில்லாத அரசியலைப் பேச முடியுமா? இவர்களே இலங்கை தழுவிய அரசியலைப் பேசப் பிரதான தடையாக இருப்பார்கள். கடந்த கிழக்கு மாகாணத் தேர்தலில் முன்னைநாள் ஆயுதக் குழக்களின் தோல்வியும் இலங்கை தழுவிய தேசியக் கட்சிகளின் தேர்தல் வெற்றிகளும் எதைக் காட்டுகின்றன. ஈபிடிபி கருணா பிள்ளையான் போன்றவர்கள் தமிழ் சிங்கள முஸ்லீம் தேசிய அரசியலுக்குப் போன படியாற்தான் தப்பிப் பிழைத்தார்கள். புலிப்பாசிஸ்டுகள் கள்ள வோட்டுப் போட்டு தேர்தலில் வென்றது மாதிரி இனி வெல்ல முடியாது. தமிழரசு முதல் ஆனந்த சங்கரி புளொட் ஈறாக தமிழ் மக்களை  இலங்கையின் ஏனைய மக்களுடன் சேரவிடாத தனித்தீவு அரசியலுக்கே முயற்சிக்கிறார்கள்.

தேர்தலே ஜனனாயகத்தை மீளக் கொணரும் ஒரு முக்கிய காரணியாகும். தேர்தற் காலங்களில் பேச்சுச் சுதந்திரம் எழுத்துச் சதந்திரம் கூட்டம் கூடும் சதந்திரம் நடமாடும் சுதந்திரம் என்பன  எந்தவித தடையுமின்றி சமூகநடைமுறையில் இருக்க வேண்டும் என்பதே ஜனனாயக மரபாகும். அப்படி மனித செயற்பாடுகளுக்கான சுதந்திரம் இல்லாத பொழுது நடாத்தும் தேர்தல்களை ஜனனாயகத் தேர்தலென்று ஜனனாயகத்தில் வாழ்ந்து பழகிய  மக்கள் எவரும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. இவற்றில் ஒன்றேனும் தடைப்பட்டு நடந்த தேர்தலை எவரும் ஜனனாயகத் தேர்தல்; என்று கருதமாட்டார்கள்.

ஆதலால் தேர்தலைக் காரணங்காட்டி நாம் அரசாங்கத்திடம் அவசரகாலச் சட்டத்தை எடுக்கும்படியும் பயங்கரவாதத்; தடைச் சட்டத்தை எடுக்கும்படியும்  கோரலாம்.

ஆனால் புலிப்பாசிசம் முழுமையாக அழிக்கப்படவில்லை என்றும் அகதிகளோடு அகதிகளாகப் புலிப்பாசிசவாதிகள் ஒளித்திருக்கிறார்கள் என்றும் புலியின் தலைமைக் குற்றவாழிகள் இன்னமும் தண்டிக்கப்படவில்லை என்றும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கினால் புலிப் பாசிசவாதிகள் இலகுவாகத் தப்பி விடுவார்கள் என்றும் அரசதரப்பு கூறுகிறது. புலிக்குச் சாதகமான வாரலாறு ஒரு காலத்தில் இருந்தது. இன்று புலியை வரலாறே தனது நிர்ப்பந்தத்தின் மூலம் அரசியல்வானை விட்டு அகற்றியது. அது மீண்டும் தோன்றவே மாட்டாது. அது மாத்திரமல்ல அதே போன்று மற்றய தனிமனித பயங்கரவாத  இயக்கங்களும் தோன்றாது.  மற்றய அட்டகாச இயக்கங்களும் உயிர்தப்பக்கூடிய வாரலாற்றுச் சூழல் இல்லை.

ஆனால் அவசரகாலச் சட்டம் மற்றும் பயங்கரவாதச் தடைச் சட்டம் என்ற இணர்டும் சோஷலிச இயக்க்களுக்கும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம், சோலிச இயக்கங்கள,; மக்களின் பொதுவான நாடுதழுவிய ஜனனாயக இயக்கங்கள் அனைத்துக்கும் எதிராக உள்ளன. ஏகாதிபத்தியங்களின் நேரடிக் கூலியான புலியும் புலியின் பினாமிகளும் இலங்கையின்  சகலபரப்பிலிருந்தும் துடைத்தெறியப்பட வேண்டியது முதல் நிபந்தனையாகும்.

அவசரகாலச் சட்டத்தை எடுப்பதற்கும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை எடுப்பதற்கு தொழிலாளவர்க்க ஸ்தாபனங்களிடமிருந்தும்; சிங்கள மக்களிடமிருந்தும் முழு உலக மக்களிடமிருந்தும் ஆதரவு கிடைக்கும் என்பது திண்ணம்.

தேர்தல் நடந்து சிவில் நிர்வாகமேற்பட்டால் மாநகரசபைக்கு அதிகாரங்கள் வந்து விடும். அவர்களே அவர்களது பிரதேசத்தை நிர்வகிப்பவர்கள் ஆகி விடுவர். இராணுவ அதிகாரம் முற்றாக இல்லாமற் போய்விடும். போலீஸ் சிவில் சட்டத்திற்கு உட்பட்டே இயங்கும். புலிப் functionaries  (கும்பலில் கோவிந்தாவென்று அள்ளுப்பட்டவர்கள்) சிவில் சட்டங்களின் கீழ் அரசியல் குற்றவாளிகளாவும் கிறிமினல் குற்றவாளிகள் இல்லாமலும் விசாரணை செய்யப் பட்டுப் பொது மன்னிப்பு அளிக்கப் படும் சூழல் தோன்றும்.

அடுத்து இதைக் காரணங்காட்டி அவசரகாலச் சட்டத்தை எடுப்பித்தால் இராணுவத்திற்குரிய அதிகாரங்கள் இல்லாமற்போய் இராணுவம் பாசறைகளில் சட்டப்படி ஒதுங்க வேண்டிவரும். அதனோடு பயங்கரவாதத் தடைச் சட்டத்தையும் எடுக்க வழி செய்தால் அதன் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள  சகல அரசியற் கைதிகளும் விடுவிக்கப்படுவர். மற்றும் தடுப்பு முகாங்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பழைய கும்பலிற்கோவிந்தாப் புலிகள் functionaries மற்றும் குழந்தைப் போரளிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப் படுவதும் தலைமைப் புலிப் பாசிசவாதிகளைச் சிவில் சட்டத்தின் கீழ் விசாரணை செய்யப்படும் நிலமைகளும் உண்டாகும்.

தேர்தல் நடந்து இலங்கை தழுவிய சிவில் வாழ்வாழ்க்கைக்குத் திரும்பும் முயற்சியானது இராணுவ ஒடுக்கு முறையைப் பாரிய அளவிற் குறைக்கும். தேர்தல் நடவாது விட்டால் இதைக் கோரமுடியாது.

ஆனந்தசசங்கரியும் அவரது கூட்டுக்களும் தாம் தேர்தலில் வெல்வதைமட்டும்  கருத்தாகக் கொள்கிறார்களேயொழிய  33 வருடமாக நிலவி வரும் அவசரகாலத் தடைச் சட்டத்தையும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தையும் நீக்குவதைப் பற்றி அக்கறை இல்லாமல் இருப்பதோடு அதை எடுக்கப் பாடுபடுபவர்களுக்குக் குறுக்கே நிற்கின்றனர். அதை எடுக்கம்படி அவர்கள் ஒரு நாளும் கேட்டதில்லை.

இதை அகற்றும்படி இவர்கள் கேட்காமைக்குக் காரணம் சோஷலிச சக்திகளையும் தொழிலாளர் இயக்கங்களையும் வளரவிடாது கட்டுப்பாடினுள் வைத்திருப்பதற்கும், இந்தத் தமிழ் பிரிவனைவாதக் குழுக்களை ஆதரிக்கும் இந்தியாவின் தொழிற்சாலைகள் மூலதனமிடல் போன்றவைகளைப் பாதுகாப்பதற்குமாகும்.

யாழ்ப்பாணத்திலும் வவுனியாவிலும் வன்னி அகதிகளிலே உண்மையான அக்கறையுள்ள ஒருவர் உள்ளூராட்சி சபைத் தலைவர்களாக வந்தால் அவர்களின் வழி நடத்தலின் பிரகாரமே மீள் குடியேற்றம் புதிய புனர்நிர்மாண வேலைகள் நடைபெறும். ஆனால் தமிழ்  மக்களுக்கு சீவில் வாழ்வு மீளவிடாமல் தடுக்கும்   வரலாற்றால் துரோகம் செய்த இந்தக் இவர்கள் மீண்டும் பிடி பந்தயம் துரோகம் செய்கின்றோம் என்கின்றது.

இந்த ஆனந்தசங்கரியே சந்திரிகா ஆட்சிக்கு வந்த காலத்தில் நீலன் திருச்செல்வத்தால் எழுதப்பட்ட அதிகாரப்பரவாலாக்க அரசியற் சாசனத்தை யூ.என்.பியோடு சேர்ந்து கிழித்தெறிந்து பாராளுமன்றத்திலேயே எரிக்க வழிசமைத்தார். இவர் புலியோடு ஐக்கியப்பட்டு அன்னியோன்னியம் கொண்டாடிய காலத்திலேயே புலி தமிழ் மக்களின் ஏகபிரதிநிதியாகியது. இன்று மீண்டும் ஜனனாயகம் வர விடாமற் தடுப்பதற்காக அகதிகளைக் காரணம் காட்டி முதலைக் கண்ணீர் வடிக்கின்றார். தன் கடைசிக்காலத்தில் ஆனந்தசங்கரி புலிகளைப் பலவீனப் படுத்துவதற்குச் செய்த ஜனனாயகக் கடமைகளுக்கு அப்பால்  வேறு எதையும் சாதித்துவிடவில்லை. அதைக்கூட உறுதியற்றுச் சகடபுத்தித்தனத்தோடேயே செய்தார்.

இன்று வன்னிப் பிரதேசங்களில் பொலீஸ் நிலயங்கள் அமைக்கபடவுள்ளதாகவும் அந்தப் பொலீஸ் நிலையங்களுக்கு அருகில் 50 ஏக்கர் காணிகளில் போலீஸ் அதிகாரிகளுக்கான விடுதிகளை அமைப்பதற்கும் பொலீஸ் மா அதிபர் திட்டமிட்டுள்ளார். ஏற்கனவே இராணுவத்தளபதி மேலும் 100 000 இராணுவத்தினரைச் சேர்க்கப் போவதாகக் கூறியுள்ளார். யுத்தம் முடிந்து புலிப்பாசிசம் தூசாகத் துகளாகி இருக்கும் வேளையில் ஏன் இந்த எதிர்ப் புரட்சித் தயாரிப்பு?

யுத்தம் முடிந்த கையோடு சீன இந்திய ஜப்பானிய முதலிடல்கள் இலங்கைக்கு வந்து கொண்டிருக்கின்றன. இந்தப் பொருளாதாரச்  செயற்பாடுகளைக் காப்பதற்காகவே இவை நடைபெறுகிறது. மேலும் சமுதாய மாற்றமொன்றுக்குத் தயாராகும் முழு இலங்கை மக்களையும் கட்டுப் படுத்துவது இதன் ஒரு கூறாக இருக்கும்.

இலங்கையிலே வெகு சீக்கிரத்தில் வெகுசன இயக்கங்கள் கிளர்ந்தெழுந்து றோட்டுக்கு இறங்குவது திண்ணம். இலங்கை அரசால் எப்பாடு பட்டென்றாலும் பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்க முடியாது. அதற்குரிய ஒரேகாரணம் உலக பொருளாதராம் அதலபாதளத்தில் அமிழ்ந்தி ஓர் மாபெரும்பெறிவை நோக்கி அசுர வேகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. சந்தைகள் மிகை உற்பத்தியால் திணறுகின்றன. எந்தப் பண்டத்தை உற்பத்தி செய்வதால் லாபமீட்டலாமென்று தெரியாத இந்தச் சூழலில் உள்ளுர் நுகர்வுக்கான உற்பத்தி கூட பாதுகாப்புவாதம் என்ற நச்சுச் சுழலிற் சிக்கிவிடும்.

நடப்பு 2009  ஆம் ஆண்டில் இதுவரையிலான காலத்தில் (சுமார் 5 மாதங்களில்) அமெரிக்காவில் 36 வங்கிகள்  திவால் ஆகியுள்ளன. சென்ற 2008 கலண்டர் ஆண்டில் 24 வங்கிகள் திவால் ஆகி இருந்தன.  அவை  பொருளாதாரத்தில் ஏற்பட்ட சீர்குலைவிலிருந்து அமெரிக்கா இன்றும் மீளவில்லை என்பதை இது காட்டுகிறது.

சென்ற 2008 ஆம் ஆண்டிலிருந்து இதுவரையிலான காலத்தில்  அமெரிக்காவில் மொத்தம் 50 அமெரிக்க வங்கிகள் திவாலாகி உள்ளன. போன மே மாதத்தில் மட்டும் அமெரிக்க வெஸ்ட் பாங்க், சிட்டிசன் கொம்யூனிட்டி பாங்க், சில்வஸ்ரேண் பாங்க் உட்பட்ட 6 வங்கிகள் திவாலாகி உள்ளன. நடப்பு 2009 ஆம் ஆண்டில் அமெரிக்க உற்பத்தி 6.1 வீதத்தால் சரிவடைந்துள்ளது. அமெரிக்க அரசாங்கம் கடன் வாங்கும் பழக்கத்திற்கு அடிமையாகி விட்டது என்று சீனாவே மீண்டும் எச்சரித்துள்ளது.  கடன் பாரத்தில் அமிழ்ந்தியுள்ள அமெரிக்கத் தொழில் நிறுவனங்கள் கோதாகி உற்பத்தித்திறன் அற்றுவிட்டன. அமெரிக்காவில் தற்பொழுது 65000 தொழிற்சாலைகள் வங்குறோட்டு அடைந்து விட்டன. நேற்று 100 வருடவரலாற்றையுடைய ஜெனரல் மோட்டோர் கார்க் கொம்பனி வங்குறோட்டை உத்தியோக ப+ர்வமாக அறிவித்துவிட்டது.

அமெரிக்காவே இன்று உலகத்துக்கு முதலாவது பிரச்சனை கொடுக்கும் நாடாகியுள்ளது. எங்கு பார்த்தாலும் நிதி ஊழல்கள் தாண்டவம் ஆடுகின்றது.

ஐ.நா வின் குழந்தைகள் நலன்பேண் அமைப்பான யூனிசெப் தற்பொழுது ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. “எண்ணெய் விலை உயர்வு, பொருளாதாரப் பொறிவு போன்றவற்றால் தெற்காசிய நாடுகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் விலைவாசி உயர்ந்து மக்கள் விலைக்கு வாங்கும் சக்தியை இழந்துள்ளார்கள். கல்வித்தகைமைக்கும் தொழிற்கல்வி மற்றும் தொழில் அனுபவங்களுக்கு ஏற்ற வேலை கிடைப்பதில்லை.  வீட்டிற்கு வரும் வருமானம் குறைந்துவிட்டது. 40 ஆண்டுகளுக்கு முன்பிருந்த மோசமான நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தெற்காசிய நாடுகளில் 10 கோடி பேர் பட்டினி கிடக்கின்றனர். 40 கோடி பேருக்குச் சில நேரங்களில் உணவு கிடைப்பதில்லை. பெற்றோர்கள் வருமானம் இல்லாததால் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்தி வேலைக்கு அனுப்புகிறார்கள். வருமானங்கள்  உணவுத்தேவைக்கே போதுவதில்லை. எனவே மற்றத்தேவைகளுக்கு அவர்களிடம் பணம் மிஞ்சுவதில்லை. இந்தியாவில் வேலை இழப்பால் மக்கள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளார்கள் தெற்காசிய நாடுகளில் 120 கோடி மக்களுக்கு தினம் இந்திய ரூபா100 க்கும் குறைந்த வருமானமே கிடைக்கிறது.”

இந்தியாவிலே 200000 விவசாயிகள் கடன் சுமையால் தற்கொலை செய்துள்ளார்கள். சத்தியம் கொம்பனியின் ஊழலால் கணணித்தொழில் பெரிதாகப் பாதிக்கப்பட்டுவிட்டது.

உலகமயமாதலின் தவிர்க்க முடியாத விதியாலும் இந்தியத் தொழிற்துறையானது பழைய உற்பத்தி முறையிலிருந்து விடுபடவேண்டிய நிர்ப்பந்தத்தின் விழைவாலும் இம்மாற்றங்கள் நடைபெறுகின்றன. மறுபக்கத்தில் இந்தியர்கள் வெளி நாடுகளில் வைத்திருக்கும் கறுப்புப் பணங்கள் 1150 பில்லியன் டொலர்கள் என்று அம்பலப் பட்டுள்ளது.  ஒவ்வொரு வருடமும் அது 1000 பில்லியன் டொலர்களால் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது. இன்றய சகாப்தம் பண முதலைகளதும் வங்கிகளதும் ஒட்டுண்ணித்தனத்தின் உச்சக் கட்டத்தை அடைந்துள்ளது.
   
ஜப்பானில் மட்டும் 2008 இல் மாத்திரம் 32249 பேர்  தற்கொலை செய்துள்ளனர். இதில் 6490 பேர் தாம் பொருhதார காரணங்களால் தற்கொலை செய்கின்றோம் என்று கடிதம் எழுதி விட்டுத் தற்கொலை செய்துள்ளனர். 2009 இல் முதல் 3 மாதங்களிலும் ஜப்பான் உற்பத்தியானது 15 வீதத்தால் வீழ்ந்துள்ளது.  ஜப்பானின் மொத்த ஏற்றுமதியும் 70 வீதத்தால் விழுந்துள்ளது.  மேற்குலகில் ஆரம்பமான பொருளாதார மற்றும் வங்கி நெருக்கடிகள் விளைவாக  13 ஆபிரிக்க நாடுகள் வங்குறோட்டு அடைந்து விட்டன.

135 வளர்முக நாடுகளின் கடன் சுமையானது 3357 பில்லின் டொலர்கள் என்று கணக்கிடப் பட்டுள்ளது. மேற்கு நாடுகள் தாம் முன்பு தருகிறோம் என்று ஒத்துக் கொண்ட நிதியைக் கூட இந்த ஏழை நாடுகளுக்குக் கொடுக்கத் திராணி அற்று இருக்கின்றன.

உலகவங்கியும் சர்வதேச நாணய வங்கியும் சீனா மற்றும் அரபுநாடுகளிடம் நிதி தரும்படி பிச்சைபாத்திரம் ஏந்துகின்றன.

31.05.09 இங்கிலாந்து பிரான்சு நோர்வே போன்ற நாடுகள் இலங்கைக்கு நிதி வழங்குவதைத் தடைசெய்யும்படி கேட்டுள்ளன. இலங்கை மேன்மேலும் சீன இந்திய தென்கொரியா ஈரான் றைசியா போன்ற மேற்குலக எதிர்ப்பு நாடுகளின் அணிக்குள் தீவிரமாக வருகிறது.

இலங்கை அரசாங்கம் மத்திய வங்கியை மீட்பதற்கு கடன் தந்துதவும்படி வெளிநாடுகளை மன்றாடுகிறது. மத்திய வங்கி வெளிநாட்டுசெலவாணி இருப்பின்றித் தவிக்கிறது. அகதிகளைப் பராமரிக்க மட்டும் 155 மில்லியன் டொலர்  தேவை என்று கூறியுள்ளது. வவுனியா நலன்புரி முகாங்களில் தங்கியிருக்கும் இடம்பெயர்ந்த அகதிகளைப் பராமரிப்பதற்கு உணவு மற்றும் குடி நீருக்கு மாத்திரம் ஒரு நாளைக்கு 1 மில்லியன் டொலர் தேவையென்று அரசாங்கம் கூறியுள்ளது. ஏற்கனவே வழங்கப்பட்ட நிதி உதவிகள் முன்னரே திட்டமிட்ட செலவுகளுக்காகப் பயன்படுத்தப் பட்டதால் தற்போது நிவாரண உதவிகளை வழங்க முடியாத நெருக்கடி அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது. மேற்குலக ஏகாதிபத்தியங்கள் புலிப்பாசிசத்தினூடாக இலங்கைக்கு ஏற்படுத்திய பொருளாதார சமூக நெருக்கடி இது.

வடமாகாணத்திற்கு தெருக்களையும்  றெயிற் பாதைகளையும்  அமைப்பதற்கு 15 பில்லியன் டொலர்  உடனடியாகத்தேவைப் படுகிறது என்று அரச செய்திகள் கூறுகின்றன. தனி றோடுகளுக்கு மட்டும் 3.5 பில்லியன் டொலர் தேவைப் படுகிறது. இலங்கையின்  2008 க்கான வெளி நாட்டுக் கடன் 13520 மில்லியன் டொலர்களாகும்.

இலங்கயிலே  ஜனனாயகத்தை மீட்பதற்கு உரிய முதலாவது நிபந்தனை உண்மையாகப் பொருளாதார மற்றும் கடன் பழு நிலமை தெரிந்து கொள்ளப் பட்டு அதன் அடிப்படையில் விவாதங்களும் கலந்துரையாடல்களும் மேற்கொள்ளப் பட வேண்டும். பொருளாதர நெருக்கடி நிலவும் பொழுது வழக்கமான பொருளாதார விதிகளைப் பிரயோகிக்க முடியாமற் போய்விடும். இப்படியான பெரு நெருக்கடிக் காலத்தில் நற்;குணங்கள் நலியத்தொடங்கும். “பசியோடு இருக்கும் ஒரு மனிதன் குற்றம் புரியாமல் இருந்தால்தான் நான் வியப்படைவேன்” என்று தீர்க்கதரிசி முகமதுவின் தோழர் ஒருவர் கூறியிருக்கிறார்.

எதிலும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருத்தல் பகைமையைத் தோற்றுவிக்கும்.

இன்றய உலகமயமாக்கற் சகாப்தத்தில்  தமிழரசு தமிழர் விடுதலைக் கூட்டணி புளொட் ஈ.பி.ஆர்.எல்.எப் ஈரோஸ் போன்ற தமிழினவாத இயக்கங்கள் தமிழனக்கு மட்டும் உரிமை எடுத்துக் கொடுக்க நிற்கிறார்கள். இவர்கள் காலப் பொருத்த மற்றவர்களாக உலகமயமாக்கல் கோரும் அரசியலைச் செய்ய முடியாதவர்களாக உள்ளனர் என்பதை எதிர்காலம் காட்டும்.

ஆனந்த சங்கரி அடிக்கடி சொல்லும் தமிழ் நாட்டில் அமுலில் .இருக்கும் இந்தியமொடல் பற்றி சிறிது கூர்ந்து நோக்குதல் நலன்பயக்கும்.

இந்தியாவில் மாநிலசுயாட்சி அதிகார பரவலாக்கங்கள் மத்தியிலும் மாநிலங்ளிலும் தேசம் தழுவிய தேசியக் கட்சியான காங்கிரஸ் கட்சி ஆட்சி அதிகாரத்தில் இருந்ததன்விளைவாகும். அதாவது நேருவின் மூன்றுமுறை ஆட்சியிலும்  தமிழ் நாட்டில் பக்தவத்சலம் காமராயர் ஆட்சிக் காலத்திலும் தான். தமிழ் நாட்டிலும் இந்தியாவிலும் குழப்பங்ள் தொடங்கியது எப்பவெனில் அண்ணாத்துரை கருணாநிதி பிரிவினைவாதத்தைத் தொடக்கியதாற்தான். இதே காலகட்டத்தில்  இலங்கயிலும் செல்வனாயகம் அமிர்தலிங்கம் போன்ற பிற்போக்குவாதிகள் பிரிவினைவாதத்தை முடுக்கிவிட்டனர்.  இன்றும் தமிழ்  சிங்கள முஸ்லீம் மக்கள் இலங்கை தழுவிய தேசியக் கட்சியில் இணையாத வரை நாட்டில் தேசிய உரசல்கள் நிகழ்ந்து கொண்டேயிருக்கும்.  அதுவே தேசம் தழுவிய தொழிலாளர்வர்க்கக் கட்சியின் வளர்ச்சிக்கு முன்நிபந்தனையாகும்.

உலக பொருளாதார நெருக்கடியானது எவராலும் கட்டுப்படுத்த முடியாத இந்தத் தருணத்தில் யுத்தமானது நாட்டின்  பெருவாரியான வளங்களைக் களுவிக் கொண்டு சென்றுள்ளது. இலங்கைக்கு ஏற்பட்ட அழிவானது 200 பில்லியன் டொலர்களாகும். இது இலங்கையின் 10 வருடத்திற்கான மொத்த சமூக உற்பத்தியளவாகும்.

இப்படியான இக்கட்டான காலகட்டத்தில் இலங்கை நெருக்கடியோ சொல்லும் தரமன்று. ஆதலால் தமிழர் அரசியலானது  எரியும் பிரச்சனையான மீள் குடியேற்றத்தை மாத்திரம் குறிக்கோளாகக் கொள்ள வேண்டும். அதுவே தமிழர் மறுமலர்ச்சிக்கான முதற்தேவையாகும்.

In the modern world a nation´s development success is judged by its ability to improve the material living standards of its citizens on a sustained basis with equity in an atmosphere of freedom and within.

03.06.2009

STAGE SETTING : Mohamed SR. Nisthar

Mohamed S R NistharIt’s not unusual for a winning party to be euphoric.  It’s equally true for the losing party in the conflict to be dispirited, and this is a common scene in Sri Lanka and across the metropolitan  cities of Europe.  After all, it’s the Tamil people, who are to be calm and prudent in contemplating the next move. A quieter but more profound move,  that is to say, a vital and crucial part in shaping the political landscape of  Sri Lanka and of its minorities, especially the Tamils.

After nearly 61 long years the question of equality among the citizens, diversity of the multi-ethnic societies and the basis for prosperity of the tiny island of Sri Lanka has reached the next level needing a careful solution.

One party in the conflict, the LTTE, had no plan “B” for their claim for a separate state, Tamil Ealam, logically a dystopian state.  The other party, the GoSL,  quickly learnt through its failure in the armed conflict and  determined to wipe out the cry for freedom of the Tamils. Because the cry came in the form of a separate state from a military outfit, which lacked diplomacy and frequently even commonsense . The  arms rich, but  politically  poor LTTE’s  short sight of the geo-politics and contemporaneous  world order paved the way to their perish of no return.
          
The immediate past of the LTTE unequivocally showed that they heavily relied on the GoSL’s mistakes and politics of India rather than their own military and/or diplomatic ability to reach their ultimate goal. Thus their SOS signal through the diaspora to the world seemed to be the wrong signal at the wrong time at the wrong place and importantly for the wrong reason and that made the world see a brutal horror film in reality. The distasteful or even painful end to the LTTE, the very fact, which the LTTE’s sympathisers  around the world are adamant not to accept. But for the others it is an unavoidable or deserved end to the betrayers of the Tamils. For their unforgivable mistake they are no longer suitable for the title of  Liberation Tigers of Tamil Ealam. They are simply Tamil Tigers – TT). Not only  did their dream land of Tamil Ealam die with them but also thousands of innocent lives were lost in vain. 

So what is the next move for the rest of the Tamils? What has the GoSL to offer to its minorities, especially to Tamil citizens? And how would the international community interact? These are the remaining questions.   Time and again it has been reiterated by the Sri Lankan presidents that the fight against the TTs is for lasting peace. Therefore it is obvious for the Tamils to expect peace since the TTs were defeated as GoSL claims, or at least  TTs’ statement of silencing their guns through their international spokesperson.  But peace is not a commodity to be given by one and taken by the other. It’s a process, which needs a collective effort by all parities, i.e. the President, the Parliament, the Singhalese, the Tamils, the Moors(religiously Muslims) and the international community.

If so, what is the role of the president in this process, one would ask. The answer is, it’s manifold and it can be prioritised  in the following order. Re settling the IDPs as quickly as possible, disarming the gunners and underworld gangs, who are a possible threat to the innocent Tamils, Moors and Sinhalese, seeking a way of assessing and compensating the families who lost their  bread winners or lost their limbs  in the crossfire, putting forward a draft power sharing mechanism for the minorities, implementing a national curriculum which makes  the Tamil language compulsory for the Sinhalese students and Sinhala language for the Tamil speaking students from year five and a year upward  by every passing year up to  A/Ls.,  creating a system of promotion for  court staffs, including judges, police force and other vital government servants only on their tri or dual languages skills with working knowledge of the relevant area in order to make every government servant be able to serve in the language the recipients feel comfortable with.

The current Sri Lankan President is of course brave and strong among the equals of the past but certainly not a great President. If President J.R. Jeyawardene, the alleged perpetrator of the July ’83 pogrom against the Tamils across the island,  was to be blamed for his political short sight and for the TTs’ growth then no doubt the President, Mahinda Rajapaksha, will get the credit for eliminating the threat of the TTs. But to be a great president the task is very much different from just winning the war. The great President must win the hearts and minds of the country collectively.

He may  not be far away from manifestly proving his ability to restore peace in Sri Lanka by delivering what he pledged to the Tamils and other minority ethnics of Sri Lanka on 19th May 2009 on declaring the end of war in the Sri Lankan Parliament.  If the President is serious about winning and retaining his office in the next presidential election then he should see clearly that it is very much hinged on his utterance and actions in the days to come. In the Tamils’ history, former President J.R. Jeyawardane  notoriously holds a place. However President Mahinda Rajapaksa may remain  as Sri Lanka’s Bismarck in  history, if he attempts to amend the Executive Presidential set up of the constitution and takes all necessary measures to unite the country with fair and reasonable power sharing to the satisfaction of the minorities.

Similarly, the role of  the Parliament is crucial to the tasks ahead. It  cannot be a club of racially motivated people any longer.  The place should reclaim its conventional duty of  restoring democracy. The Parliament should give its two third majority to do necessary amendments to the constitution. It should help the President  create an Indian style of Presidential Office with a guaranteed selection of all ethnics of Sri Lanka as presidents in rotation depending on the individual’s  contribution to the country and his or her antecedents. Parties in the parliament should think of introducing a proportional representation voting system similar to the one which prevails in Northern Ireland to accommodate the ethnic minorities with their fair share. 

The Singhalese are allowed to express their natural emotions, but they should not go beyond the limits. The world currently understands your joy, which is derived from the constant fear you had for the TTs. The eyes of the international  community are fixed on Sri Lanka now. Any political party’s or community’s stupid behaviour will produce undesirable consequences.  What the Sinhalese mass must understand is  that the  Tamils and other minorities are not their foes and without their true participation they cannot have the island paradise they want to see. The minorities will motivate themselves to participate only when they feel there is a point to their participation. Sinhalese have a big say in the days to come. Be prepared to reject the idea of Sinhalization of  entire island. Do not go behind the politicians who promote the idea that Sri  Lanka is only for the Sinhalese and others are its second class citizens or simply a migrated crowd who live under the discretion of the Sinhalese people.  Listen to the Sinhalese leaders and intellectuals who carefully promote race relation and power sharing with the minorities to keep the country moving through the challenges of the era of  globalisation.     

We know for sure that the Tamils are divided into three, pro tigers, anti tigers and critics of both the government and tigers. It is also worth noting the innocently dangerous  pro tiger diaspora, the main financiers and the propaganda machine at this juncture. This diaspora community, in my view, has blood on their hands. Because they never insisted that the TTs give up their arms when the TTs lost control over Kilinochi, the de facto capital of TT land, and took the people with them as human shields. They never put pressure on European governments or EU or UN to save the people who were caught up in the crossfire in the first place, but simply reflected what the TTs wanted. The leaderless, sort of  makeshift Student Organization, British Tamil Forum, British Tamils Law and Advocacy Wing and Vanni Mission etc,  all wanted the ban on TTs lifted and the international community  to accept TTs as one and only representative of the Tamils  first, then to declare the north and the east as the homeland of the Tamils with the right to self determination, then to put  pressure only on Sri Lanka  government  and not on TTs to stop the war, then to give food and medicine to the IDPs.  The easiest back door attempt to make a foundation for  the dream of Tamil Ealam.

What the diaspora overlooked was that every time they asked the international community for help it was always too late.  They have not acted on their own  rather they waited for the orders from Vanni to be delivered  through pro TTs media, such as GTV, Theepam and IBC as to their actions.  The above media not only misled the pro tigers but also kept them  in dark by their military analysis on the basis of  monsoons and political one on the Tamil Nadu’s politics. They tried to portray the state of Tamil Nadu in  India’s shoes, meaninglessly diminishing India’s ability to a minimal level and Tamil Nadu’s  in a huge proportion.

It will be a great help for the Tamils back home if the diaspora community remain quiet or at least stop chanting the slogans “our leader Prabaharan” and “we want Tamil Ealam”  for a while allowing the  international  community to engage themselves fully in the making of Sri Lanka for the sake of all citizens.

The pro tiger TNA has lost credibility since it did not discharge its duty at the time when the civilians lives were at risk. Their accounts and briefing to  foreign countries and the diaspora about the terrible fighting and inside stories were utterly biased. They were afraid  of their masters, the TTs. Therefore they have no legitimate claim to be the Tamils’ representatives anymore. The sooner they resign  the better for the future of the Tamils in Sri Lanka. 

The anti tigers spend huge amounts of time analysing everything from the birth of the one time supremo of the TTs, to the mysterious final seconds of his death and the way the diaspora community dream about snatching Tamil Ealam from Sri Lanka. Educating the disapora about the non viability of Tamil Ealam and the possibility of a fair share option for the political survival of Tamils with the help of the international  community is a required task for them, if they are prepared to  positively contribute to rebuild the ruined Tamil society and their legitimate right for freedom and a fearless life.   
  
On the other hand the critics of the GoSL and TTs have great potential to act as mediators between the Tamils, the GoSL  and even the Sinhalese mass.  There are many Sinhalese and Tamil organizations all over Europe and the rest of the western world. They can identify like minded people and work together as one voice for safeguarding minorities’ rights and betterment of all Sri Lankans with  mutual respect and collective responsibility.  

The next is the Moors, religiously Muslim, the scapegoats and unwanted stock for TTs. However, they should not distance themselves from the current politics because they  wear caps and grow long beards or the women wear Hijab.  They should not feel that the current political chaos has nothing to with them because of their past experience with the TTs. They should not think that Sri Lanka is  somebody else’s country and they have no say on its bad and good times. It has been always their tradition and rights from the time of  the Kings to be in their cabinet and holding a high position in politics and in making and shaping the Sri Lanka’s political life. For Moors to be a true example of their religious ideology is to reflect themselves in performing their duties towards their country and make sure they enjoy their unalienable  rights with dignity.

It is true that the bitter experience they had at the hands of the TTs made them think differently. The so called Oluvil Declaration for “Muslim Thesam” initiated by the students of the South Eastern university was a by product of the TTs’ terrorism on Moors, the indigenous people of east, north and north west of Sri Lanka who lived in harmony with other ethnics for centuries.  

The TTs’ rise and fall  can be a case study for the defenders of the Muslim Thesam,  the  name and the concept of which do not reflect anything other than a tit for tat.  Kill those dangerous, unwanted and non viable idea of separation from its bud and bury them. Having said that, however, it does not and cannot mean that they  should willingly lose their political voice or their ethnic identity. They have a right to loudly say they are Moors like others say they are Tamils and Sinhalese and  religiously Muslim like Hindus, Christians and Buddhists. They  can also loudly say that together they are ready to rebuild our broken societies and country. 

Most of the Tamils arguably think that the international community has done nothing or kept quiet at the time of need. The international community  were in a task of a balancing exercise between what they were told by the Tamil diaspora about what has been happening and what has actually been happening according to their diplomatic missions in Sri Lanka. The second thing that the international community wanted was to stick to their own  resolution of defeating an armed group, regardless of what name we call the military outfit by, if they possess anything other than conventional firing weapons like AK 47 and sorts, any armed organization with different fighting units such as infantry, naval, air force, even in the rudimentary level, and most importantly a suicide squad  is great cause for concern. The TTs’ unnecessarily tremendous growth in this direction held back the international community from active engagement in solving the problem. As far as the international community is concerned the TTs are not the solution but part of the problem to the Tamils’ political aspiration.  Therefore  it put the Sri Lankan government as first preference in the political list.  

And almost all of the TTs’ sympathizers believed that their protest in the streets of Europe made the governments of their respective countries look into matters, but  this is not the case. Sri Lanka is not like a remote village in the Zing Zhang province of China.  Sri Lanka has been on their check list for many reasons. The European Union, American administration and UN are well informed of the conflict which prevailed for more than a quarter of century in Sri Lanka, and their solemn resolute  not to interfere  until the war come to an end regardless of the way in which it ends, (I have mentioned this very fact in my previous article “politics within politic” in Tamil on 06th April 2009 in the Global Tamil News) made them sit back.

Therefore the international community’s positive interference in Sri Lanka now is imminent. If the Sri Lanka government does anything, which is suspicious or simply a dragging exercise  in attending unsolved problems of ethnic question and their political aspiration then the international community may show their big stick and warn of the punishment awaiting. 

In this day and age of globalization and countries’ interdependency on regional and international basis on each others, the GoSL may not attempt to waste its potentials to be a promising country in south east Asia  and become one in the list of failed states. Let’s see whether the politics of Sri Lanka make someone ends up in the Hague on ICC trial or to Oslo for a noble prize.

இலங்கை இனப்பிரச்சினை : இரா. அன்பரசு – தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவர் அறிக்கை

Indiaபத்திரிக்கை அறிக்கை

இரா. அன்பரசு Ex-M.P.

(நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி முன்னாள் செயலாளர்,

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த துணைத்தலைவர்)

அண்மையில் இந்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற மறுநாளே மாண்புமிகு S.M. கிருஸ்ணா அவர்களை இலங்கைத் தமிழர்களின் துயர் துடைக்கவும் அவர்களுடைய வாழ்க்கை நிலை அச்சம் நீங்கி பழைய நிலைக்கு திரும்பி அவர்கள் புதிய வாழ்க்கையைத் துவங்கிட வேண்டுமெனவும், பயங்கரவாதம் ஒழிந்து விட்ட நிலையில் இனியாவது இலங்கை வாழ் ஒவ்வொரு தமிழ்க் குடிமகனும் சிங்கள மக்களோடு சரிநிகர் சமானமான வாழ்வுரிமையைப் பெற்றிடவும் இந்திய அரசு முன் வரவேண்டும் என்ற கருத்தினை வலியுறுத்தினேன்.

அமரர் இந்திரா காந்தி, அமரர் இராஜீவ்காந்தி வாழ்ந்த காலங்களிலிருந்து ஈழத்தமிழர்கள் வாழ்வுரிமை பெற்றிட நான் ஆற்றிய பணியையும் அவருக்கு எடுத்துரைத்தேன். 1987-ம் ஆண்டு ஏற்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் எவ்வாறு நானும் ஈடுபட்டேன் என்பதையும் தெளிவுப்படுத்தினேன். இலங்கையில் உள்ள தமிழர்களின் அரசியல் இயக்கத் தலைவர்களில் ஒரு சிலர் என்னிடத்தில் தொடர்புகொண்டுள்ளார்கள் என்பதையும் எடுத்துரைத்தேன்.

தலைமை இன்றி இலங்கை தமிழர்கள் தவித்திடும் இந்த நேரத்திலும் இந்தியாவில் உள்ள ஒரு சில தலைவர்களும், இலங்கை அரசும், இந்திய நாடு இலங்கைத் தமிழர்களுக்கு விரோதி நாடு என்ற திரிபுவாதத்தை முன்வைத்து தீவிரப் பிரசாரத்தில் இறங்கி வருகிறார்கள். இத்தகைய செயலில் ஒரு சில தமிழக அரசியல் தலைவர்களும், இலங்கை அரசும் ஒரே வித விச விதையை இணைந்தே தூவி வருகிறார்கள். இந்த நிலை நீடிக்குமானால் சொல்லொண்ணாத் துயரத்திற்கு ஆளாகி இருக்கும் இலங்கைத் தமிழர்கள் உதவிக்கு இந்தியாவிடம் நேச கரம் நீட்டமுடியாமல் போய்விடும்.

இதை முறியடிக்கும் வகையில் இந்தியப் பேரரசு பல்வேறு நல்வாழ்வு திட்டங்களை இலங்கைத் தமிழர்களுக்காக எடுத்திட இலங்கை அரசை நிர்ப்பந்தம் செய்ய வேண்டும். இலங்கையில் தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளில் சிங்களவர்களை குடியேற்றி தமிழினத்தையே இலங்கை அரசு அழித்துவிடும் என்ற அச்சம் இலங்கைத் தமிழர்களின் மத்தியில் நிலவி இருப்பதைத் தடுத்து நிறுத்தவேண்டும் என்ற கோரிக்கையையும் எடுத்துரைத்தேன். அப்போது தான் இலங்கைத் தமிழர்கள் மத்தியில் இந்தியாவின் மீது புதிய நம்பிக்கையும் நல்லெண்ணமும் பிறந்திடும் எனக் கூறினேன்.

இதையெலலாம் கவனமாகக் கேட்ட வெளியுறவுத் துறை அமைச்சர் மாண்புமிகு S.M. கிருஸ்ணா அவர்கள் உங்கள் கோரிக்கையில் நியாயம் இருப்பதை உணர்கிறேன். ஆனால் இலங்கையில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் என்னை தனித்தனியாக சந்திக்கிறார்கள். அவர்கள்

அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு குறிப்பிட்ட தீர்வோடு என்னை அணுகினால் அதை பரிசீலிக்க இந்திய அரசு தயாராக இருக்கிறது என்று உறுதி அளித்தார்கள். மேலும் நீங்கள் நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி செயலாளராக இருந்த போது இலங்கைப் பிர்சினையில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தீர்கள். எனவே நீங்களே இலங்கை அரசியல் தலைவர்களோடு தொடர்பு கொண்டு அவர்கள் அனைவரையும் ஒரே குழுவாக அழைத்து வாருங்கள் என்று என்னை பணித்தார்கள்.

தமிழகத்தில் இருக்கின்ற ஒரு சில தலைவர்கள் இலங்கைத் தமிழர்கள் போரில் கொல்லப்பட்டதற்கு காரணம் இந்தியா தான். இந்திய நாடு தான் இலங்கை அரசுக்கு போர்த் தளவாடங்களை கொடுத்து உதவியது என்ற பொய்ப் பிரச்சாரத்தை இன்னும் தொடர்ந்து பரப்பிவருகிறார்கள். இதை இந்திய அரசு மறுத்தது மட்டுமல்ல இலங்கை அரசின் விமானத் தளபதி (Chief Marshall) ரோஸன் கூனிதிலகா என்பவரும் ஜே.வி.பி. இயக்கத் தலைவர் சோமவான்சா அமரசிங்கே என்பவரும் இலங்கை இராணுவத்திற்கு சீனா, பாகிஸ்தான், ரஸ்யா போன்ற நாடுகளிலிருந்து தான் இராணுவத் தளவாடங்களை வாங்கினோம் என்று கூறியிருக்கிறார்கள். இலங்கை இராணுவத்தினுடைய செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் உதய நானாயேகாரா என்பவர் T-55 என்ற இராணுவ டாங்குகளையும் (T-55 Main Battle Tanks) செகோஸ்லோவாகியா, சீனா, ரஸ்யா போன்ற நாடுகளில் தான் வாங்கினோமே தவிர இந்தியாவில் அல்ல. இந்தியாவிடமிருந்து ஏற்கெனவே போடப்பட்ட நிரந்தர ஒப்பந்தத்தின் படி ஒரே ஒரு ராடாரையும் அதை இயக்குபவரையும் தான் இந்தியாவிடமிருந்து பெற்றோமே தவிர வேறு எந்த ஆயுதங்களையும் இந்தியாவிலிருந்து வாங்கவில்லை என்று கூறியுள்ளார். அதுவும் விடுதலைப் புலிகள் கொழும்பின் மீது விமான தாக்குதல் நடத்துவதை தடுத்து நிறுத்துவதற்காகத்தான் இந்தியா ராடாரை வழங்கியது. இலங்கைத் தமிழர்களை கொல்வதற்கு எந்த ஆயுதங்களையும் வழங்கவில்லை என்பது அப்பட்டமான உண்மை!

இந்தியா இராணுவத்தளவாடங்களை இலங்கை இராணுவத்திற்கு விற்கவோ அல்லது அனுப்பவோ மறுத்துவிட்டது என்றும் இவ்வாறு இந்தியா இராணுவத்தளவாடங்களை மறுத்த காரணத்தினால் தான் பாகிஸ்தான், ரஸ்யா, சீனா போன்ற வேறு நாடுகளை நாடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்றும் இலங்கை இராணுவப் படைத்தலைவர் சரத்பொன்சேகா என்பவரும் NDTV-க்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

இப்படி இருந்தும் தமிழகத் தலைவர்களில் ஒரு சிலர் இந்தியா தான் இந்த போரை நடத்தியது என்ற கோயபல் பிரச்சாரத்தை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். இத்தகைய புளுகு மூட்டை தமிழக அரசியல்வாதிகளின் முகத்திரையைக் கிழிப்பதோடு சொல்லொண்ணாத் துன்பத்திலும் துயரத்திலும் உள்ளாயிருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு உடனடியாக இந்திய அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு உதவிகளை விரைந்து செயல்படுத்துவது தான் உடனடித் தேவையாகும். ஏற்கனவே நான் திரு. ஞானசேகரன் (ராஜன்), திரு.சுரேஸ் பிரேமச்சந்திரன், திரு. கஜேந்திரன், திரு. செல்வம் அடைக்கலநாதன், திரு. சேனாதிராஜா, திரு. ஆனந்தசங்கரி போன்றவர்களுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு என்னை சந்திக்கும்படி அழைத்தேன். இவர்கள் என்னை சந்தித்து இனி ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து பேசினார்கள். மற்ற தலைவர்களும் என்னை தொடர்பு கொண்டால் இலங்கைத் தமிழர்கள் நல்வாழ்வுக்காகத் தொடர்ந்து பணியாற்றிட நான் தயாராக இருக்கிறேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இதுவரை இந்திய நாட்டுக்கு எதிராகவே அவதூறு பிரச்சாரம் செய்து வந்த இலங்கை தமிழ் எம்.பி. சிவாஜிலிங்கம் மாலைமுரசு நாளிதழுக்கு அளித்த பேட்டியில் இந்திய அரசு இனியாவது எங்கள் மீது இரக்கம் காட்டவேண்டும் என்று கூறியிருப்பது வரவேற்கத் தகுந்த ஒன்றே. ஆனால் இந்திய அரசின் தலைமை ஏற்படுத்திய கொள்கை மாற்றத்தால் தான் இலங்கையில் பேரழிவு ஏற்பட்டது, இந்திய பேரரசு இயக்கிவிட்ட துருப்புச் சீட்டுகளாகத்தான் சிங்கள இராணுவம் தாக்கியது என்று மீண்டும் இந்திய நாட்டை குறை கூறியிருப்பது உண்மைக்குப் புறம்பானது.

ஒருபக்கம் இந்தியாவை குறை கூறிக்கொண்டு இந்தியாவின் உதவி வேண்டும் என்று சிவாஜிலிங்கம் கூறுவதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இப்போக்கை அவர்கள் மாற்றிக்கொண்டு இந்தியாவிடம் நேசக்கரம் நீட்ட வேண்டும்.

இரண்டாவது கட்டமாக இலங்கைத் தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு ஒன்றினை ஏற்படுத்த வேண்டும். அதற்கு 1987-ல் ஏற்பட்ட ராஜீவ்காந்தி-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை மீண்டும் புதுப்பித்து நடவடிக்கை எடுப்பதோ அல்லது புதிய கொள்கைகளை வகுத்து புதிய திட்டத்தை உருவாக்குவதோ இலங்கைத் தமிழர்களின் திட்டமாக இருக்க வேண்டும். தங்களுக்கு நல்ல அரசியல் தீர்வு எது என்பதை இலங்கை வாழ் தமிழர்களும் அங்குள்ள பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் புலம் பெயர்ந்து பல வெளிநாடுகளில் குடியிருக்கும் இலங்கைத் தமிழர்களும் தான் ஒருங்கிணைந்து முடிவெடுக்க வேண்டும்.

பிரபாகரன் போரில் மரணம் அடைந்துவிட்டார் என்று இலங்கை அரசு அறிவிப்பதும், தமிழகத்தில் உள்ள ஒரு சில தலைவர்கள் அவர் உயிரோடு இருக்கிறார், ஒருநாள் எழுந்து வரத்தான் போகிறார் என்று சொல்வதுமாக பட்டிமன்றம் நடத்த தேவையில்லை. இதைப்பற்றி பட்டிமன்றம் நடத்துவதை தவிர்த்து, இனி இலங்கையில் இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழர்களின் நல்வாழ்விற்கு என்ன செய்யப்போகிறோம் என்ற தீர்க்கதரிசனத்தோடு செயல்படுவதே உடனடி தேவையாகும்.

எனவே, இனியாவது இலங்கை அரசியல் தலைவர்கள் அனைவரும் ஒன்று கூடி தங்களுக்குள் ஒரு தலைவரை தேர்ந்தெடுத்துக் கொண்டு சரியான அரசியல் தீர்வினை இந்திய அரசிடம் முன்வைக்க வேண்டும். ஒரே தலைமையின் கீழு; ஒன்றுபட்டு செயலாற்ற இயலவில்லையெனில் ஒரு கூட்டுத் தலைமையையாவது ஏற்படுத்திக் கொண்டு ஒருங்கிணைந்து செயல்பட முன் வரவேண்டுமென்று நான் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். இல்லையெனில் பிரித்தாளும் சூழ்ச்சியில் கைத்தேர்ந்த இலங்கை அரசு இலங்கையில் தமிழினமே அழிந்து போகும் நிலைமையை உருவாக்கிடும்.

அதுமட்டுமல்ல ஒரு தலைமையில்லாமல் தவித்துக்கொண்டிருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு ஒரு தலைமையை ஏற்படுத்தி செயல்படுவது காலத்தின் கட்டாயமாகும்.

இந்தியா என்றுமே இலங்கைத் தமிழர்களுக்கு பல்வேறு நிலைகளில் உதவியிருக்கிறது. இன்று உதவுவதற்கு தயாராக இருக்கிறது. இந்திய நாட்டின் உதவியால் தான் இலங்கைத் தமிழர்களுக்கு மறுவாழ்வும் மறுமலர்ச்சியும் ஏற்படும். எனவே, அருள்கூர்ந்து தனிப்பட்ட மன வேறுபாடுகளை குழி தோண்டி புதைத்துவிட்டு இலங்கைத் தமிழர்களுக்கு நல்வாழ்வு கிடைத்திட நல்ல அரசியல் தீர்வு ஏற்படுத்திட ஒன்றுபட்டு செயலாற்ற வாருங்கள் என்று இலங்கையில் உள்ள பல்வேறு அரசியல், இயக்கத் தலைவர்களையும் பல்வேறு நாடுகளில் குடியேறியுள்ள இலங்கைத் தமிழர்களின் முன்னோடித் தலைவர்களையும் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு,

(இரா. அன்பரசு)

துணைத் தலைவர்,

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி

06-06-2009

உத்தேச தீர்வுத் திட்டம் 13 ஆவது திருத்தத்திலும் பார்க்க கூடுதலானதாக அமையும் – ஜனாதிபதி ராஜபக்ஷ

mahinda-0000.jpgஉத்தேச அரசியல் தீர்வானது அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்திலும் பார்க்க கூடுதலானதாக அமையும் என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, சகலருமே அதனை அமுல்படுத்துவதற்கு அவசியம் இணங்குவதாக இந்த 13 ஆவது திருத்தத்திலும் கூடுதலான தீர்வு விளங்கும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

இந்த உத்தேச யோசனைகள் தொடர்பாக தமிழ்க் கட்சிகளுடன் ஒன்றுசேர்ந்து தீர்மானிக்க வேண்டியது அவசியமென்றும் தான் இந்த விடயத்தில் அவர்களை நிர்ப்பந்திக்கப் போவதில்லை என்றும் தீர்வுத் திட்டமானது ஒவ்வொரு மக்கள் மத்தியில் இருந்தும், தலைவர்களிடமிருந்தும் வெளிவர வேண்டியது அவசியம் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

“இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஆசிரியர் சேகர் குப்தாவிற்கு என்.டி.ரி.வி.யின், “வோக் த ரோக்’ நிகழ்ச்சியில் பேட்டியளித்திருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, பயங்கரவாதத்திலிருந்து, விடுதலைபெற்ற நிலையில் சேகர் குப்தாவுடன் தற்போது தான் உரையாடுவதாக குறிப்பிட்டிருக்கிறார்.

பேட்டியில் ஜனாதிபதி மேலும் தெரிவித்திருப்பதாவது;  விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இழைத்த பாரிய தவறு ராஜீவ் காந்தியை கொன்றதாகும். ஏனெனில், இந்தியாவின் முழு அனுதாபத்தையும் அவர்கள் பகைத்துக்கொண்டனர். அந்த நேரத்தில் அவர் செய்த பாரிய தவறு இதுவென நான் நினைக்கிறேன். இரண்டாவதாக அவர் தெற்கின் சக்தியைப் பற்றி அளவிட்டிருக்கவில்லை. அவர் இழைத்த மற்றொரு தவறாகும் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் அவர் விரும்பியிருக்கவில்லை. முழு நாட்டையுமே அவர் கைப்பற்ற விரும்பியிருந்தார். அவருடைய திட்டம் முழு நாட்டையும் கைப்பற்றுவதாகும். பயங்கரவாதத்தினாலும், துப்பாக்கியினாலும் சகலரையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்று அவர் நினைத்திருந்தார். 30 வருடங்களில் அவருடைய பாரிய தவறு ராஜீவ் காந்தியின் படுகொலையாகும். அதுவே அவரது வீழ்ச்சிக்கு இட்டுச் சென்றது என்பது உண்மையாகும்.

இந்தப் பிரச்சினையை யார் உருவாக்கியது என்பது உங்களுக்கு தெரியும். இந்த மனிதர் எப்பொழுது இதனை ஆரம்பித்தார் மற்றும் இந்தியாவில் அவர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது என்பது யாவருக்கும் தெரியும். இறுதியாக அவர்கள் இந்திய மக்களால் அன்பு செலுத்தப்பட்ட தலைவரை கொன்றனர். தமிழ் மக்களால் மட்டுமன்றி முழு இந்தியாவுமே அன்பு செலுத்தியவரை அவர்கள் கொன்றனர். தமிழ்நாட்டில் அவரைக் கொன்றனர். தமது ஜாக்கெட்டை அவர் (ராஜீவ்) கொடுத்தார் என்று நான் கேள்விப்பட்டேன். இது சரியானதா என்பது எனக்கு தெரியாது. அவர் இந்த மனிதருக்கு தமது சொந்த குண்டு துளைக்காத ஜாக்கெட்டை கொடுத்தார். எமது அரசியலமைப்பில் 13 ஆவது திருத்தத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் தீர்வொன்றை ஏற்படுத்த அவர் (ராஜீவ் காந்தி) முயற்சித்தார். அதனை நாம் இப்போது வைத்திருக்கின்றோம். இந்திய சமாதானப்படை இலங்கைக்கு வந்தபோது நாம் மகிழ்ச்சியடையவில்லை. நானும் கூட சந்தோஷப்படவில்லை. நான் எதிர்த்தரப்பில் இருந்தேன். அந்த நேரத்தில் நாம் எதிர்த்தோம். ஆனால், இப்போது அவர்கள், அல்லது நாம் இந்திய அமைதி காக்கும் படையை மேலும் ஓரிரு மாதங்களுக்கு தங்கியிருக்க அனுமதித்திருந்தால் இதனை அவர்கள் முடித்து வைத்திருப்பார்கள்.

இந்திய அமைதி காக்கும் படையுடன், போரிட பிரேமதாஸா புலிகளுக்கு ஆயுதங்களை கொடுத்ததாக லலித் அத்துலத் முதலி தமக்கு கூறியதாக சேகர் குப்தா கேள்வியெழுப்பியபோது, சரி என்று ஜனாதிபதி பதிலளித்துள்ளார். 5 ஆயிரம் ரி56 ரக துப்பாக்கிகளை புலிகளுக்கு அவர் கொடுத்ததாக கேள்வியெழுப்பப்பட்டபோது, ஆம் என்று ஜனாதிபதி பதிலளித்துள்ளார்.

விடுதலைப்புலிகள் எப்போதுமே யுத்த நிறுத்தத்தை பயன்படுத்தியோ அல்லது இந்தியாவையோ அல்லது மேற்கு சக்திகளையோ பயன்படுத்த முயன்றதாகவும், ஜனாதிபதி கூறியுள்ளார்.

புலிகள் பிரேமதாஸாவை கொன்றனர், அவர்களுக்கு உதவியவர்களை கொன்றனர், ராஜீவ் காந்தியை கொன்றனர், காமினி திசாநாயக்காவை கொன்றனர், அமிர்தலிங்கம், லக்ஷ்மன் கதிர்காமர், நீலன் திருச்செல்வன் போன்ற அவர்களின் சொந்த தலைவர்களையே கொன்றனர். சமாதானத்தை விரும்பியவர்களை கொன்றனர்.

ராஜீவ் காந்தியை கொன்றதன் மூலம் அவர் ஏன் இந்த மாதிரியான பாரிய தவறினை செய்தார். அதுபற்றி நீங்கள் ஆராய்ந்துள்ளீர்களா? ஏதாவது தகவல்களை பெற்றுள்ளீர்களா? என்று ஜனாதிபதியிடம் கேட்கப்பட்டபோது, ராஜீவ் காந்தி அரசியல் தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க முயன்றார் என்றும், அதனை அவர் ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்ததால் ராஜீவ் காந்தியை அவர் வெறுத்தார் என்றும், தான் கருதுவதாக ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார். அவர் (பிரபாகரன்) எந்த தீர்வையும் விரும்பவில்லை. தான் மன்னனென கருதினார். இந்தியா தமிழ்நாட்டின் மனநிலை குறித்து அவர் கவலைப்படவில்லை. அவருடன் அனுதாபம் கொண்ட சில தலைவர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். அவர்களைப் பற்றி குறிப்பிட நான் விரும்பவில்லை. அவர்களின் பெயரை நீங்கள் அறிவீர்கள். அவர்கள் யாவரும் மக்களால் தோற்கடிக்கப்பட்டுள்ளனர். தென்னிந்திய வாக்காளர்கள் புத்திசாலிகள் என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.

இறுதி நாட்களைப் பற்றி கூறுமாறும் இறுதியாக எவ்வாறு அவரையும் ஏனைய முக்கியமான தலைவர்களையும் கண்டுபிடித்ததாகவும் சேகர் குப்தா கேள்வியெழுப்பியபோது பதிலளித்த ஜனாதிபதி, அவர்கள் தப்பிச்செல்ல முயற்சித்ததாகவும், சிறிய நிலப்பகுதியில் ஓரங்கட்டப்பட்டிருந்த அவர்கள் 3 குழுக்களாக இருந்ததாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார். அந்த 3 குழுக்களில் ஒரு சாரார் வடக்கு பக்கமாகவும், மற்றவர்கள் தெற்கு பக்கமாகவும் இடையில் ஏரிப் பக்கமாகவும் சென்றதாகவும், பிரபாகரனும் ஏனையவர்களும் முன்னோக்கி நகர்ந்ததாகவும், அச்சமயம் இராணுவத்துடன் மோதல் ஏற்பட்டதாகவும், ஜனாதிபதி கூறியுள்ளார். அப்போது அவர்கள் சுற்றிவளைக்கப் பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

கட்டாரில் ஜனாதிபதி இருந்தபோது பிரபாகரனின் மரணம் குறித்து அவருக்கு தெரிவிக்கப்பட்டதாக தாங்கள் கேள்விப்பட்டதாக சேகர் குப்தா குறிப்பிட்டபோது, இல்லை எனவும் 19 ஆம் திகதியே தாம் செய்தியை பெற்றுக்கொண்டதாகவும், ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார்.

இதேவேளை, இந்தியாவிடமிருந்து அதிகளவிலான பிரதிபலிப்புகள் வெளிப்படுத்தப்பட்டதா, உதாரணமாக ஆஸ்பத்திரி மீது குண்டுவீச்சு இடம்பெற்ற போது, என்று சேகர் குப்தா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி, அவ்வாறான ஒன்றுமே நடைபெறவில்லை என்றும் அது ஒரு பிரசாரம் என்றும் மருத்துவர்கள் தங்களுடன் இருப்பதாகவும் இந்த மாதிரியாக அறிவிக்குமாறும், தங்களுக்கு கூறப்பட்டதென அவர்கள் தெரிவித்ததாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார். ஆஸ்பத்திரி மீது குண்டுவீச்சு இடம்பெறவில்லை எனவும், இது முற்றுமுழுதான பிரசாரம் எனவும் அவர் தெரிவித்தார்.

பொதுமக்களின் இழப்புகள் குறித்து கேட்கப்பட்டபோது 100 இலும் குறைவானவர்களே இறந்திருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். எந்தவொரு பொதுமக்களுக்கு எந்தவொரு இழப்புகளும் ஏற்படக்கூடாது என தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கியிருந்ததாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் அவர்கள் செய்தது போன்று நாம் ஒருபோதும் அவ்வாறு செய்யவில்லை எனவும் ஜனாதிபதி கூறியிருக்கிறார்.

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் போது செய்மதி மூலமான பிரதிமைகளைப் பெற உதவியை பெற்றுக்கொண்டீர்களா என்று கேட்கப்பட்டபோது, எங்கிருந்தும் நாங்கள் செய்மதி புகைப்படங்கள் தொடர்பாக உதவியைப் பெற்றிருக்கவில்லை என்று தெரிவித்தார்.

இந்தியாவின் தேர்தல் வேளையில் அதாவது ஆறு கிழமைகள் தொடக்கம் பிரபாகரனின் மரணம் வரை இந்தியாவுடனான தொடர்பாடல் எவ்விதம் அமைந்திருந்தது என்று கேட்கப்பட்டபோது, நாம் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தோம். ஆரம்பத்தில் அவர்கள் பொதுமக்கள் இழப்புகள் தொடர்பாக கவலையடைந்திருந்தனர் என்று ஜனாதிபதி தெரிவித்தார். அவர்கள் ஏதாவது அழுத்தத்தைக் கொடுத்தார்களா எனக் கேட்டபோது, அவ்வாறான அழுத்தம் எதுவும் இல்லை என்று குறிப்பிட்ட அவர், நண்பர்கள் மத்தியில் அழுத்தங்கள் இருக்க முடியாது என்று கூறினார்.

நீங்கள் யுத்தத்தில் வெற்றி பெற்றுள்ளீர்கள். சமாதானத்தை எவ்வாறு இப்போது தோற்றுவிக்கப் போகிறீர்கள் என்று கேட்கப்பட்டபோது, முதலாவதாக நாங்கள் அவர்களை மீளக்குடியமர்த்த வேண்டும். முகாம்களுக்குள் இருந்தவாறு மக்களால் அரசியலைப் பற்றி சிந்திக்க முடியாது உடனடியாக நாம் மேற்கொள்ளப்படவேண்டியது அந்தப் பகுதிகளை மீளக்கட்டியெழுப்ப வேண்டும். அப்பகுதிகளில் உள்சார் கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும். அதன் பின்னர் அவர்களை மீளக்குடியமர்த்த வேண்டும்.

இதற்கு 180 நாட்கள் திட்டத்தை வைத்திருக்கின்றோம். அந்த நடவடிக்கைகளில் நாம் ஈடுபட்டுள்ளோம். அதற்கான பணத்தை கண்டுபிடிக்கவேண்டும். ஒன்றிரண்டு பில்லியன் தேவைப்படுகிறது. இந்தியா எமக்கு உதவவேண்டும். அவர்கள் அதனைச் செய்வார்கள் என நினைக்கிறேன். மீளக் கட்டியெழுப்ப அவர்கள் உதவவேண்டும்.

தமிழ் மக்களை சமனான பிரஜைகளாக நீங்கள் நடத்துவீர்களா என்றும் உங்களது முறைமையில் சமத்துவம் உள்ளதா எனவும் இப்போது தாங்கள் தோற்கடிக்கப்பட்டதாக அவர்கள் உணர்வதாகத் தென்படுகிறதெனவும் கேட்கப்பட்டபோது எனது பாராளுமன்ற உரையை நீங்கள் பார்த்தால் இனிமேல் இங்கு சிறுபான்மையினர் இல்லையென்று நான் கூறியுள்ளேன். இங்கு இரண்டு வகையான மக்களே இருப்பார்கள். ஒன்று இலங்கையை நேசிப்பவர்கள் மற்றவர்கள் இலங்கையை நேசிக்காதோர். இதுவே மக்கள் மத்தியில் உள்ள வேறுபாடாக அமையும். சகல மக்களும் எனது மக்கள். அவர்கள் தமிழரோ, சிங்களவரோ, முஸ்லிம்களோ மலாயர்களோ, யாராகவிருந்தாலும் அவர்கள் எமது மக்கள் என்று ஜனாதிபதி கூறியுள்ளார். யாவரையும் தான் சமமாகவே நடத்துவதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

1983 இல் இது தொடர்பாக வரலாறு உள்ளது என்று கேட்கப்பட்டபோது, வரலாற்றை நாம் மறந்துவிட வேண்டும். நாம் புதிய வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டும் என்று ஜனாதிபதி கூறியுள்ளார். தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்குமிடையில் நீங்கள் வேறுபாட்டைக் காண்பிப்பதில்லையா என்று கேட்டபோது, இல்லை, நான் அவ்வாறு செய்யமுடியாது. ஏனெனில், எனது உறவினர்களில் சிலர் தமிழர்கள். எனது பெறாமகள் ஒரு தமிழரைத் திருமணம் செய்துள்ளார். அவர் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கிறார் என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.

உங்களது விருப்பத்துக்குரிய கிரிக்கெட் கதாநாயகன் தமிழரான முத்தையா முரளிதரனா என்று கேட்கப்பட்டபோது, எவ்வாறு அதை நான் கூறமுடியும். எனது சொந்த வீட்டிற்குள் அதனை அவ்வாறு கூறமுடியாது என்று ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார்.

சிங்கள மேலாதிக்கவாதம் என்பது யதார்த்தமானதாக இருந்தது பற்றி கேள்வி எழுப்பப்பட்டபோது, நான் அதனைக் கூறமாட்டேன். ஏனென்றால், சகல அரசியல்வாதிகளுமே அதனைத் தொடக்கியிருந்தனர் என்று தெரிவித்தார். நீங்கள் கிராமத்துக்குச் சென்றால் தமிழர்களுடன் பேசினால் அவர்களுக்கு இந்தப் பிரச்சினை இல்லை. ஆனால் அரசியல்வாதிகள் அதிகாரத்திற்காக இதனைச் செய்கிறார்கள் என்றும் அதிகாரத்திற்கு வருவதற்கான ஒரே வழியாக அது இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமக்கு அந்தமாதிரியாக செயற்படும் நோக்கமில்லை என்று தெரிவித்திருந்த ஜனாதிபதி, முழு நாடுமே தமக்கு வாக்களிக்க விரும்புவதாக அவர் கூறியுள்ளார். துரிதமாக தேர்தல் இடம்பெறும் சாத்தியம் பற்றி குறிப்பிட்டிருக்கும் ஜனாதிபதி, நவம்பர் மாதத்தில் அது தொடர்பாக தம்மால் தீர்மானம் எடுக்க முடியுமென்று கூறியுள்ளார்.

நிரந்தரமான சமாதானத்தை ஏற்படுத்த முடியுமென்று குறிப்பிட்ட அவர், தேர்தலில் தமிழ் மக்களையும் உள்ளீர்த்துக் கொள்வதை ஏற்கனவே செய்திருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

தமிழர்களுக்கெதிரான பிரசாரத்தை மேற்கொள்வீர்களா என்று கேட்கப்பட்டபோது, இல்லை. எனக்குத் தமிழ் வாக்குத் தேவை. தமிழர்களோ முஸ்லிம்களோ சகலரது வாக்குகளும் தேவை என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.  இராணுவ ரீதியான தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்வீர்களா என்று கேட்கப்பட்டபோது, அது பயங்கரவாதத்திற்கு எதிரானதொன்றல்லவா என ஜனாதிபதி பதில் கேள்வி எழுப்பியுள்ளார்.

நகரத்தில் ஜனாதிபதி ராஜபக்ஷவுடன் ஜெனரல்கள், படைவீரர்கள் உள்ள சுவரொட்டிகள், பதாகைகள் வைக்கப்பட்டிருப்பதாகவும் இந்த வருட பிற்பகுதியில் இடம்பெறும் தேர்தலில் இவை உங்களின் தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுமென நீங்கள் கருதவில்லையா என்று கேட்கப்பட்டபோது, இல்லை. தேவையற்றது, நாட்டை மீண்டும் பிளவுபடுத்த நான் விரும்பவில்லை. நான் ஒருபோதும் அதனைச் செய்யமாட்டேன். எனது அமைச்சரவையைப் பாருங்கள் எவ்வளவு முஸ்லிம், எவ்வளவு தமிழர்கள் இருக்கின்றார்கள். மலைநாட்டுத் தமிழர்கள் உள்ளனர். அவர்களை சிலர் இந்தியத் தமிழர்கள் என்று அழைக்கின்றனர். அவர்களுக்குத் தலைவராக தொண்டமான் இருக்கிறார். வடக்கிலிருந்தும் எமது அமைச்சரவையில் அமைச்சர் இருக்கின்றார் என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.

பல ஜனநாயக நாடுகளில் இந்தப் பிரச்சினையுண்டு. அதாவது; அவர்கள் பெரிய யுத்தத்தில் ஈடுபட்டபோது இராணுவ ஜெனரல்கள் கதாநாயகர்களாகின்றனர். இராணுவம் மிகவும் சக்தி வாய்ந்ததாக உருவெடுக்கின்றது. அவர்கள் மிகவும் செல்வாக்குப் பெற்றவர்களாக உருவாகின்றனர். அவர்கள் மக்கள் தமது சொந்த வாழ்க்கையைத் தியாகம் செய்யும் போது, அரசியல்வாதிகள் ஏனைய மக்களுக்காக தங்கள் வாழ்வைத் தியாகம் செய்வதிலிருந்து தாங்கள் அனுகூலம் பெறுகின்றனர் என்று சேகர் குப்தா குறிப்பிட்டபோது ஜனாதிபதி ஆம் என்று பதிலளித்தார்.

யுத்தம் முடிவடைந்த போது இதனை கீழே கொண்டுவருவதற்கான சவால் ஜனநாயக நாடுகளிடம் காணப்படுகின்றன. இது தொடர்பான திட்டம் ஏதாவது உண்டா என்று ஜனாதிபதியிடம் கேட்கப்பட்டபோது, இல்லை. இந்த நாட்டு மக்கள் கல்வி கற்றவர்கள். என்ன நடைபெறுகிறது என்பது அவர்களுக்குத் தெரியும் என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.

ஜெனரல்கள் வல்லமை பெற்றவர்களாக உருவாகிவருவது குறித்து நீங்கள் கவலைப்படுகிறீர்களா என்று கேட்கப்பட்டபோது, இல்லை. நான் கவலைப்படவில்லை. நோக்கத்தில் அவர்கள் மிகவும் விசுவாசமானர்கள் என்பது எனக்குத் தெரியும். அவர்களுக்கு ஏதாவது அரசியல் அபிலாசைகள் இருக்குமென்று நான் நினைக்கவில்லை என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.

நூற்றுப் பத்துக் கோடி மக்களைக் கொண்ட நாடு இந்தியா. அதன் ஆயுதப் படைகளின் தொகை 13 இலட்சமாகும். 2 கோடி மக்களைக் கொண்ட உங்கள் நாட்டில் 2 இலட்சம் இராணுவத்தினர் உள்ளனர் என்று கேட்கப்பட்டபோது, இத்தொகையை நாங்கள் அதிகரிக்க வேண்டியிருந்தது என்று ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார்.

ஆள் வீத அடிப்படையில் எமது இராணுவத்தை விட உங்கள் இராணுவம் நூறு மடங்கு அதிகமாக உள்ளதே இப்போது உங்களுக்கு இது தேவைப்படாதே என்று சேகர் குப்தா கேட்டபோது அவ்வாறு கூறவேண்டாம். நிர்மாணப் பணிகளுக்கு அவர்களை நாம் பயன்படுத்த முடியும் என்றும் அவர்களை ஏனைய அபிவிருத்தி வேலைகளில் ஈடுபடுத்த விரும்புகிறோம் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

காலப்போக்கில் அவர்களின் எண்ணிக்கையை குறைப்பீர்களா என்று கேட்கப்பட்டபோது, இப்போது அதற்குரிய திட்டங்கள் இல்லையென ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார்.

200,000 இராணுவத்திற்கு சமாதானமான இலங்கை மிகவும் சிறியதொன்றாகும். பாதுகாப்பதற்கான எல்லைகள் எதுவும் இல்லை. வெளிமட்டப் பகைவர்களும் இல்லை என்று சேகர் குப்தா கூறியபோது, நாம் எமது சொந்தப் பாதுகாப்பை மேற்கொள்ள வேண்டியுள்ளது. சொந்தப் பாதுகாப்பிற்காக அவர்களை வைத்துள்ளோம். இலங்கைக்கு 2 இலட்சம் படையினர் அதிகமான தொகையல்ல. இத்தொகையே நாம் வைத்திருப்போம். மேலதிகமாகச் சேர்க்கமாட்டோம். அவர்களை ஐ.நா. சமாதானப் படைக்கு அனுப்பமுடியும் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

யுத்த வேளையில் இந்தியாவை விட வேறு ஏதாவது அழுத்தங்கள் ஏற்பட்டதா. மில்லிபான்ட் இங்கு வந்த போதும் நோர்வே காரர்களுடனும் மகிழ்ச்சியற்றதான சில விடயங்களை நாம் பார்த்தோம் என்று கேட்கப்பட்டபோது, துரதிர்ஷ்டவசமாக அவர்களில் சிலரின் மனப்போக்கு எங்களை அவர்களின் காலனியாகக் கருதியதாகும். இலங்கை எவரதும் காலனி அல்ல. அவருடைய மனப்போக்கிற்கு எங்களால் எதனைச் செய்ய முடியும் என்று பதிலளித்திருக்கிறார்.

சீனா, பாகிஸ்தானுடன் உங்கள் உறவுகள் தொடர்பாக இந்தியா தரப்பிலிருந்து கவலைகள் காணப்படுகிறதே என்று கேட்கப்பட்டபோது இலங்கையைப் பற்றி இந்தியா எந்தக் கவலையும் கொள்ளத்தேவையில்லை. நாங்கள் சிறந்த புரிந்துணர்வுடன் இருக்கின்றோம். இந்தியா எம்மீது அதிகளவு பரந்த மனதைக் கொண்டிருக்கிறது. நாங்கள் உறவு ரீதியான நண்பர்கள். ஆரம்பத்திலிருந்தே அதாவது முதல் நாளில் இருந்தே இந்தியா எமது அயல் நாடு. இராணுவ ரீதியில் சீனாவிடம் இருந்து நாங்கள் ஆயுதங்களைக் கொள்வனவு செய்தோம். இஸ்ரேல், பாகிஸ்தான், ரஷ்யா, உக்ரைனிடமிருந்தும் பெற்றுக்கொண்டிருக்கிறோம். இதேவேளை, இந்தியாவிற்கு தாம் விஜயம் மேற்கொள்ளப்போவதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

ராஜீவ் காந்தி ஜெயவர்தன ஒப்பந்தத்தில் ஒருபுறம் இந்திய சமாதானப் படை மறுபுறம் துன்பியல் என்பன இருக்கையில் 13 ஆவது திருத்தமும் அதிகாரப் பகிர்வுப் பொதியும் தமிழர்களுக்கு வழங்கப்பட்டது. அதற்கு இப்போது என்ன நடக்கும். அதனை முன்னோக்கிக் கொண்டு செல்ல விரும்புகிறீர்களா அதற்கு அப்பால் கொண்டு செல்ல விரும்புகிறீர்களா என்று சேகர் குப்தா கேள்வி எழுப்பிய போது, 13 ஆவது திருத்தத்திலும் கூடுதலானது என்று ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார்.

இப்போது யுத்தம் முடிந்து விட்டது இலங்கைத் தமிழர்களுக்கான உங்களது செய்தி என்ன என்று கேட்கப்பட்ட போது, யுத்தம் முடிவடைந்து விட்டது நாம் ஒன்று சேர்ந்து இந்த நாட்டில் இருக்க வேண்டும் சம பிரஜைகளாக இருப்பார்கள் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

ஆனால், சிங்கள அரசியலில் இப்போதும் சக்திகள் உள்ளனவே என்று கேட்கப்பட்ட போது, தமிழ் அரசியலிலும் அந்த சக்திகள் உண்டு என்று தெரிவித்திருக்கிறார். ஆனால், சிங்களவர்கள் அரசியல் ரீதியாக மேலாதிக்கம் உடையவர்களாக இருக்கிறார்களே என்று கேட்கப்பட்ட போது, இல்லை என்றார்.

 நன்றி: தினக்குரல்