புலம்பெயர் வாழ்வியல்

புலம்பெயர் வாழ்வியல்

தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் அவர்களுடைய வாழ்வியல், சமூக, அரசியல் தொடர்பான செய்திகள், கட்டுரைகள், ஆய்வுகள்.

படகு அகதிகளின் தொடரும் அவலங்களும் மரணங்களும் – அவுஸ்திரேலியாவின் இந்தோனேசியத் தீர்வு – மேற்குலகு சொல்லும் மனித உரிமைகள் : த ஜெயபாலன்

Oceanic_Viking_Refugeesஅவுஸ்திரேலியாவின் வடமேற்குக் கடற்பரப்பில் இடம்பெற்ற விபத்தில் மூவர் இறந்துள்ளதாகவும் ஒன்பது பேரைக் காணவில்லை என்றும் அவுஸ்திரேலிய அரசு உறுதிப்படுத்தி உள்ளது. ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 01) இரவு அவுஸ்திரேலிய கடற்பரப்பில் இருந்து 350 கடல்மைல் தொலைவில் உள்ள கோகோஸ் தீவுக்கு அண்மையில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்து நடந்த போது 39 பேர் படகில் இருந்துள்ளனர். அகதிகளை ஏற்றி வந்த படகு மூழ்கிக் கொண்டிருக்கையில் திரவ வாயுவை ஏற்றி வந்த ‘எல்என்ஜி பைனியர்’ரும் யப்பானிய மீன்பிடிப் படகில் வந்தவர்களும் மூழ்கிக் கொண்டிருந்த படகில் இருந்து 27 பேரைக் காப்பாற்றி உள்ளனர். ஏனையவர்கள் பற்றிய அச்சம் கவலையளிப்பதாக இவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையே 39 பேர் பயணித்த படகிற்கு பின்னால் 59 பேருடன் சென்ற மற்றுமொரு படகு கோகோஸ் தீவுகளுக்கு அண்மையில் காணாமல் போயுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இவ்வாண்டு மட்டும் 30க்கும் மேற்பட்ட படகுகள் இந்தோனேசியக் கடற்படையினரால் தடுக்கப்பட்டு உள்ளனர். 2000 பேர்வரை தஞ்சம் கோரி உள்ளனர்.

அரசியல் தஞ்சம் கோருபவர்களுக்கு தங்கள் கதவுகளை அடைக்கின்ற போக்கு ஆண்டுக்கு ஆண்டு கடுமையாக்கப்பட்டு வருகின்றது. தஞ்சம் கோருபவர்களுக்கான கதவுகள் அடைக்கப்பட்டு வருவதால் தஞ்சம் கோருபவர்கள் தங்கள் உயிரையும் பணயம் வைத்து பயணத்தை மேற்கொள்ள வேண்டி உள்ளது. இந்தக் கதவடைப்பானது தமிழ் மக்களுக்கு மட்டுமான நடவடிக்கையாக இல்லாது போனாலும் இதனால் தமிழ் மக்கள் கணிசமான அளவில் பாதிக்கப்பட்டனர். தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

2002ம் ஆண்டு கணிப்பின் படி உலகம் முழுவதும் 20 மில்லியன் மக்கள் கரிசனைக்குரிய மக்களாக கணிக்கப்படுகின்றனர். இவர்களில் 12 மில்லியன் பேர் அகதிகள். ஒரு மில்லியன் வரையானவர்கள் தஞ்சம் கோருபவர்கள் என்ற கணிக்கப்படுகின்றனர். உலகம் முழுவதும் உள்ள அகதிகளில் மூன்றில் இரண்டு பங்கினரை உலகின் வறிய நாடுகளே பொறுப்பேற்றுள்ளன. உதாரணத்திற்கு 2002ல் 7 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட கினி 3 மில்லின் சியரலியோன் அகதிகளுக்கும் 150 000 லைபீரியன் அகதிகளுக்கும் இடமளித்தது. பாகிஸ்தானிலும் தன்சானியாவிலும் மாதாந்தம் அகதிகளாக வருவோரின் எண்ணிக்கை ஐரோப்பாவின் முழு ஆண்டுக்கும் வரும் அகதிகளின் எண்ணிக்கைக்கு ஒப்பிடக் கூடியது.

பிரித்தானியா உலகின் 2 வீதமான அகதிகளுக்கே அடைக்கலம் வழங்கி உள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் 300 பேருக்கு ஒருவர் என்ற அடிப்படையிலேயே அகதிகள் உள்வாங்கபட்டனர். 1000 மக்கள் தொகைக்கு பிரித்தானியா இருவரினதும், நோர்வே, சுவீடன் நால்வரினதும் சுவிஸ்லாந்து, அயர்லாந்து மூவரினதும் தஞ்ச விண்ணப்பங்களை ஏற்கின்றன. இத்தரவுகள் 2001 ம் ஆண்டுக்கு உரியவை. தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தில் தஞ்சம் கோருவோரின் எண்ணிக்கை 50 வீதம் வரை குறைந்துள்ளது. தரவுகள் இவ்வாறு அமைய இந்நாடுகளைச் சேர்ந்த பொது மக்கள் மத்தியில் உலகின் 25 வீதமான அகதிகள் தங்கள் நாடுகளுக்கே வருவதாகக் கருதுகின்றனர். வலதுசாரி ஊடகங்களும் அரசியல் வாதிகளும் இவ்வாறான தவறான கருத்துக்களை பரப்பி அகதிகள் பற்றிய தப்பபிப்பிராயங்களை ஏற்படுத்த வழிகோலினர்.

இந்தப் பின்னணியிலேயே தற்போது அவுஸ்திரேலியாவில் விபத்துக்கு உள்ளான கப்பல் அகதிகளின் நிலையையும் இந்தோனேசியாவின் கடலில் தத்தளிக்கும் 260 அகதிகளையும் மற்றுமொரு முனையில் இந்தோனேசியாவில் தத்தளிக்கும் 76 அகதிகளையும் கனடாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 78 அகதிகளின் நிலையையும் பார்க்க வேண்டும்.

2ம் உலகமகா யுத்தத்திற்குப் பின் தங்கள் பொருளாதார வளர்ச்சிக்காகவும் பனிப்போர் அரசியல் காரணங்களுக்காகவும் பின்னைய சூழலில், தங்கள் சனத்தொகை வீழச்சி அடைவதையும் தங்கள் வயதடையும் சனத்தொகையை சமப்படுத்தவும் தங்கள் எல்லைகளைத் திறந்துவிட்ட மேற்கு நாடுகள் பனிப்போர் முடிவுக்குப் பின் தங்கள் ஐரோப்பிய எல்லைகளை விஸ்தரித்துக் கொண்டன. தொண்ணூறுக்களின் பின் ஆண்டுக்கு ஆண்டு தங்கள் எல்லைகளை இறுக்கி வந்துள்ள மேற்கு நாடுகள் மெலனியத்தற்குப் பின் தங்கள் எல்லைகளை இறுக்குவதற்கு கடுமையான நடவடிக்கைகளில் இறங்கின. தங்கள் எல்லைகளை இறுக்குவதற்காக தங்களுடன் இணைந்துள்ள கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு வேண்டிய உதவிகளை வழங்கின.

இக்கடுமையான கட்டுப்பாடுகளையும் மீறி உயிரைப் பணயம் வைத்து மாண்டவர்கள் பலநூறு. அவ்வாறு மாண்ட தமிழர்களும் பலநூறு. கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் பனிக் காடுகளுக்குள் பனிக்குள் குழிதோண்டிப் புதைக்கப்பட்ட தமிழ் உயிர்கள் பல. மேற்கு ஐரோப்பா நோக்கி வந்த ஐவர் பராகுவேயில் கைவிடப்பட்டு பனிக்குளிரில் சில தினங்கள் விடப்பட்டதால் அவர்களுடைய கால்கள் அழுகி அவை நீக்கப்பட வேண்டி ஏற்பட்டது. கொன்கிறீட் கலக்கும் வாகனத்தில் ஒழிந்து வந்தவர்கள் சிலர் எல்லைக் காவலாளி இயத்திரத்தை இயக்கிய போது மரணமடைந்தனர். பிரித்தானியாவின் வாயிலில் 58 சீனர்கள் மூச்சுத் தினறி இறந்த சம்பவம் பற்றி பலரும் அறிந்திருப்பீர்கள். இவ்வாறான கொள்கலன்களில் அடைக்கப்பட்டு பிரயாணத்தை மேற்கொண்ட பல தமிழர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக உயிரிழந்துள்ளனர்.

தொண்ணுறுக்களின் நடுப்பகுதியில் இத்தாலிக் கடலில் இடம்பெற்ற விபத்து தமிழ் அகதிகளின் புலம்பெயர்வில் ஏற்பட்ட பெரும் விபத்து. இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் இவ்விபத்தில் கொல்லப்பட்டனர். அவர்களில் இலங்கையர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள். இத்தாலிக் கடலில் நின்ற கப்பலில் இருந்து படகுக்கு இறங்கும் பொழுது ஏற்பட்ட இவ்விபத்தில் படகு கவிழ்ந்து இவ்விபத்து நிகழ்ந்தது. கனடா கடல் பகுதியில் படகில் இறக்கப்பட்டவர்கள் நடுக்கடலில் சிக்கித் தவித்ததும் அதில் உயிரழந்தவருடன் படகு அகதிகள் காப்பாற்றப்பட்டதும் ‘வெல்கம் ரு கனடா’ என்று ஆவணமானது. எரித்திரியாவின் கடலில் வீழ்ந்த விமானத்தில் பயணித்தவர்களில் ஏழு பேர் இலங்கைத் தமிழ் அகதிகள். தற்போது அவுஸ்திரேலியாவில் ஒரு அவலம் நடந்துகொண்டுள்ளது. இவ்வாறு ஒரு சில சம்பவங்களை மட்டுமே நாம் அறிந்துள்ளோம். இவ்வாறு செய்தியாகாத பல சம்பவங்கள் உலகின் பல பாகங்களிலும் இடம்பெற்றுள்ளது.

இலங்கையின் நீண்ட யுத்தம் காரணமாக இலங்கையின் தமிழ் மக்களின் சனத்தொகையில் மூன்றிலொருவர் இலங்கைக்கு வெளியே புலம்பெயர்ந்துள்ளனர். இவ்வாறு புலம்பெயர்ந்தவர்கள் மேற்கு நாடுகளை நோக்கிப் புறப்பட்டு தங்கள் இலக்குகளை அடையாமல் இன்னமும் உலகின் பல்வேறு பாகங்களில் சிக்குண்டு இருண்ட எதிர்காலத்துடன் உள்ளனர். தங்கள் இலக்குகளான மேற்குலகை வந்தடைந்தவர்கள் மட்டும் ஒளிமயமான எதிர்காலத்தை எதிர்கொள்கின்றனர் எனக் கொள்ள முடியாது என்றாலும் ஒப்பீட்டளவில் பாதுகாப்பான சூழலில் உள்ளனர். இவ்வாறு தங்கள் இலக்குகளை அடைய முடியாமல் உலகின் பல்வேறு பாகங்களிலும் வாழ்பவர்கள் பெரும்பாலும் மறக்கப்பட்ட மனிதர்களாகவே வாழ்கின்றனர். இவர்கள் யார் எங்கு உள்ளனர் என்பது யாருக்கும் தெரிவதில்லை. தெரிந்த கொள்ளவும் முயற்சிக்கப்படவில்லை.

புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள அகதி அமைப்புகள் மனித உரிமை அமைப்புகள் கூட எதற்காக ஆரம்பிக்கப்பட்டனவோ அதனைக் கைவிட்டு அரச உதவிகள் எதற்குக் கிட்டுமோ அந்த நடவடிக்கைகளை மட்டும் செய்து கொண்டிருக்கின்றன. பிரித்தானியாவில் உள்ள தமிழ் அகதிகள் நடவடிக்கைக்குழு தற்போது நீரிழி நோயைத் தடுப்பது பற்றியும் யோகாசனம் பற்றியும் தான் சொல்லிக் கொடுக்கின்றது. உலகம் முழுவதும் தமிழ் மக்கள் வாழ்ந்த போதும் கைவிட்பட்ட இவர்கள் பற்றிய எவ்வித கவனமும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.

இந்தோனேசியக் கடலில் அரசியல் தஞ்சம் கோரியவர்கள் தொடர்பில் தமிழ் ஒருங்கிணைப்பு மட்டுமே அவுஸ்திரேலிய தூதரலயத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டு அவர்களுக்கு அகதி அந்தஸ்து வழக்கக் கோரியது. அவுஸ்திரேலியா தமிழ் கொங்கிரஸ்ம் அதற்காக குரல் எழுப்பி வருகின்றது.

இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்ட பொழுது அதனைத் தடுத்து மனித அழிவையும் அவலத்தையும் கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கைகள் எதனையும் எடுக்காத மேற்குலகம் தற்பொழுது இலங்கை அரசு மனித உரிமைகளை மீறிவிட்டதாக அறிக்கை மேல் அறிக்கை வெளியிட்டு வருகின்றது. அதே இலங்கை அரசினால் மனித உரிமைகள் மீறப்பட்ட அகதிகள் 260 பேர் இந்தோனேசியக் கடலில் தவிக்கின்றனர். அந்த அகதிகளுக்கு எந்தவொரு மேற்கு நாடும் தஞ்சம் அளிக்க முன்வரவில்லை. கடந்த நான்கு வாரங்களாக நடுக்கடலில் தவிக்கும் இவர்களுக்கு தஞ்சம் வழங்கும்படி இந்த நாடுகள் அவுஸ்திரேலிய அரசை வலியுறுத்தவும் இல்லை. மறுமுனையில் கனடாவில் தஞ்சம் கோரியவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த மேற்குலகின் மனித உரிமைக் கோசங்கள் அவர்களின் அரசியல் சதுரங்கத்தின் ஒரு பகுதியாகவே உள்ளது என்பதற்கு ஆய்வுகள் அவசியமற்றது.

அவுஸ்திரேலியாவின் எல்லையில் மூன்று அவலங்கள் இடம்பெற்றுக் கொண்டுள்ளது.

ஒன்று: அவுஸ்திரேலியாவின் கோகோஸ் தீவில் நவம்பர் 1ல் கப்பல் மூழ்கி பயணித்தவர்கள் மரணமுற்றிருக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது. அவுஸ்திரேலிய கடல் பாதுகாப்பு ஆணையம் – அம்சா வுக்கு ஞாயிறு காலை அவல அழைப்பு விடுக்கபட்டது. அழைப்பு விடுக்கப்பட்டு ஒன்பது மணிநேரத்திற்குப்பின்னரே ஜப்பானிய மீன்டிபிடிப் படகு சம்பவ இடத்தை அடைந்துள்ளது. அதற்குப் பின் பல மணி நேரங்களுக்குப் பின் திரவ வாயுவை ஏற்றும் எல்என்ஜி பைனியர் அவ்விடத்தை அடைந்தது. ஆனால் அவுஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் எல்என்ஜி பைனியர் மூழ்கிக் கொண்டிருந்த படகைக் காணும் தூரத்திலேயே நின்றதாக செய்தி வெளியிட்டு உள்ளது. ஆனால் அவுஸ்திரேலிய சுங்கத் திணைக்களம் இதனை உறுதிப்படுத்த முடியவில்லை எனத் தெரிவித்துள்ளது.

இரண்டு: ஒக்ரோபர் 18ல் இந்தோனேசிய அவுஸ்திரேலிய சர்வதேசக் கடலில் தவித்துக் கொண்டிருந்தவர்கள் அவுஸ்திரேலியாவின் ஓசானிக் வைக்கிங் கப்பலால் காப்பாற்றப்பட்டு இந்தோனேசியாவின் யாவா தீவுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அப்பகுதி மாகாண ஆளுநர் இந்தோனேசியா தஞ்சம் கோருவோரைக் கொட்டும் இடமல்ல என அவர்களைத் தரையிறக்க மறுத்துவிட்டார். பின்னர் காப்பாற்றப்பட்டவர்கள் பின்ரன் தீவுக்கு கொண்டுவரப்பட்டனர். தற்போது அவர்கள் இந்தோனேசியாவில் தரையிறங்க மறுத்து வருகின்றனர். அவர்கள் தங்களை அவுஸ்திரெலியாவின் கிறிஸ்மஸ் தீவுக்கு கொண்டு செல்லும்படி கோருகின்றனர். ஆனால் தஞ்சம் கோருபவர்கள் எங்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதை தீர்மானிக்க முடியாது என அவுஸ்திரேலியாவின் வெளிநாட்டமைச்சர் கருத்து வெளியிட்டுள்ளார்.

மூன்று: அவுஸ்திரேலியாவை நோக்கிப் புறப்பட்ட 260 பேர் கொண்ட கப்பல் இந்தோனேசியப் பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க சர்வதேசக் கடல் எல்லையில் வைத்து இந்தோனேசிய கடற்படையினரால் தடுக்கப்பட்டு மேர்க் துறைமுகத்தில் ஒக்ரோபர் 10 முதல் தடுத்து வைக்கப்பட்டு உள்ளது. அதில் உள்ளவர்கள் தங்களுக்கு அடைக்கலம் வழங்குமாறு அவுஸ்திரேலியாவை கோரி வருகின்றனர். அவர்கள் இந்தோனேசியாவில் தரையிறங்க மறுக்கின்றனர்.

ஆனால் அவுஸ்திரேலிய அரசியல் களம் தஞ்சம் தொடர்பில் யார் கடும்போக்கானவர்கள் என்ற போட்டியில் இறங்கி உள்ளது. அவுஸ்திரேலிய எதிர்க்கட்சியின் முன் வரிசை உறுப்பினர் ரொனி அபோர்ட் குடிவரவு தொடர்பில் அவுஸ்திரேலியப் பிரதமர் கெவின் றொட் மேற்கொண்ட மென் போக்கே இவற்றுக்குக் காரணம் என்று குற்றம்சாட்டி உள்ளார்.

ரொனி அபோட் மேலும் தெரிவிக்கையில் இந்தோனேசியாவில் உள்ள கப்பல் அகதிகளை இந்தோனேசியா ஏற்காத பட்சத்தில் அவர்கள் விரும்பியோ விரும்பாமலோ கிறிஸ்மஸ் தீவுக்கு கொண்டுவரப்பட்டு வழமையான குடிவரவு விதிகளுக்கு அமைய நடத்தப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார். குடிவரவு கொள்ளையை இறக்கமாக்குவதற்குப் பதில் தளர்த்தியதால் அவுஸ்திரேலியா நோக்கி படகு அகதிகள் கவரப்படுவதாகவும் அவர் தன் குற்றச்சாட்டில் தெரிவித்துள்ளார்.

அவர் தன் குற்றச்சாட்டை அத்துடன் நிறுத்தவில்லை அவ்வகதிகள் கிறிஸ்மஸ் தீவுகளுக்க கொண்டுவரப்பட்டால் அது அகதிகளை நாடுகடத்தலில் ஈடுபடுவோருக்குக் கிடைக்கும் வெற்றியாகும் என்றும் அது அவுஸ்திரேலியப் பிரதமர் கெவின் றொட்டின் கொள்கைகளுக்கு கிடைக்கும் தோல்வி என்றும் தெரிவித்தார்.

கடந்த நான்கு வாரத்தில் இடம்பெற்றுள்ள இந்த மூன்று சம்பவங்களும் இந்தோனேசிய – அவுஸ்திரேலிய அரசுகளின் தஞ்சம் தொடர்பான கடும்போக்குகளை அம்பலப்படுத்தி உள்ளது. அவுஸ்திரேலிய அரசு தஞ்சம் கோருபவர்களை தனது கரைகளில் இறங்கவிடாது இந்தோனேசிய கடற்படையினரைக் கொண்டு தடுத்து வைக்கின்றது. இவற்றைவிட இவ்வாண்டு இவ்வாறான 30க்கும் மேற்பட்ட படகுகள் இந்தோனேசிய கடற்படையினரால் தடுக்கப்பட்டு உள்ளனர். அவுஸ்திரேலிய இந்தோனேசிய அரசுகளுக்கு இடையேயான உடன்பாட்டின் படி தஞ்சம் கோருவோரை இந்தோனேசியாவில் வைத்துப் பராமரிப்பதன் மூலம் தனது கையைக் கழுவிக்கொள்கின்றது அவுஸ்திரேலியா. இந்தோனிசிய அதிகாரிகள் தஞ்சம் கோருவோரை அடிப்பதாகவும் அவர்களுக்கு சுத்தமான குடிநீரை மருத்துவ வசதிகளை வழங்குவதில்லை அவர்கள் மோசமான நிலையில் உள்ளனர் என்றும் அவுஸ்திரேலிய சட்டத்தரனியும் அகதிகளுக்காகக் குரல் கொடுப்பவருமான ஜெசி ரெய்லர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அகதி நிலைதொடர்பான மேலதிக பேச்சுவார்த்தைகளை அவுஸ்திரேலிய – இந்தோனேசியப் பிரதமர்கள் நவம்பரில் மேற்கொள்ள உள்ளனர். சிங்கப்பூரில் இன்னும் சில தினங்களில் நவம்பர் 8ல் சிங்கப்பூரில் இடம்பெவுள்ள ஏபெக் மாநாட்டிலும் அதன் பின் அவுஸ்திரேலியாவில் நவம்பர் 18 – 19ல் நடைபெறவுள்ள சந்திப்பிலும் இவ்வகதிகள் விடயம் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அகதிகள் தொடர்பான அவுஸ்திரேலியாவின் ‘இந்தோனேசியத் தீர்வு’ எவ்வளவுதூரம் தீர்வாக அமையும் என்ற சந்தேகங்கள் ஏற்கனவே கிளம்பி உள்ளது.

தமிழக முகாம்களில் நலிந்து வாழும் ஈழத்தமிழருக்கு என்னென்ன செய்ய வேண்டும்! : மறவன்புலவு க சச்சிதானந்தன்

Refugee_Camp_Mandapam1.0 கள நிலை

1.1 அகதிகளாக வாழும் காலப் பகுதி 26 ஆண்டுகள் (1983-2009)

1.2 முகாம்களின் எண்ணிக்கை: 26 மாவட்டங்களில் 115.

1.3 முகாம்களுள் வாழ்வோர் தொகை: 19,340 குடும்பங்களைச் சேர்ந்த 73,241 பேர். (2.11.2009)

1.4 முகாம்களுக்கு வெளியே 11,288 குடும்பங்களைச் சேர்ந்த 31,802 பேர். (2.11.2009).

1.5 காவல்துறையில் பதிவுபெற்ற ஏறத்தாழ 100,000 பேர் வாடகைக் குடியிருப்புகளில் தமிழகமெங்கும். 

1.4 யாவரும் ஈழத் தமிழர். 60 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடரும் சிங்கள இன வெறித் தாக்குதல்களால் உயிரச்சம் மேவத் தப்பி வந்தவர்கள்.

1.5 இன்றுள்ள இலங்கை அரசியல் சூழ்நிலை தொடருமானால், அடுத்த 5 ஆண்டுகளுக்குத் தாமாக இவர்கள் இலங்கைக்குத் திரும்பும் வாய்ப்பே இல்லை.

2.0 வாழ் தகுதி

2.1 இவர்களுட் பலரிடம் முகாம் பதிவு அட்டை உண்டு. பிறப்புச் சான்றிதழ், கல்விச் சான்றிதழ், இலங்கையில் வாழ்ந்ததற்கான சான்றிதழ் என எதுவும் இல்லை. ஆதாரச் சான்றிதழ் கோரும் விதிகளைப் புறந்தள்ளி, கட்டணம் எதுவும் கேட்காமல், முகாம் பதிவு அட்டையைச் சான்றாகக் கொண்டு இவர்களுக்கு உடனடியாக 5 அல்லது 10 ஆண்டுகள் செல்லுபடியாகும். அனைத்துலகப் பயண இலங்கைக் கடவுச் சீட்டை (Sri Lankan passport valid for 10 years for all countries) சென்னையிலுள்ள இலங்கைத் துணைத் தூதரகம் வழங்க வேண்டும். இந்திய நடுவண் அரசு இதை இலங்கை அரசிடம் வலியுறுத்த வேண்டும்.

2.2 முகாம் வழங்கிய அட்டையைச் சான்றாகக் கொண்டு, அகதியாக வந்து சேர்ந்த நாள், பிறந்த நாள், பிறப்பிட முகவரி ஆகிய விவரங்களுடன் 10 ஆண்டுகள் செல்லுபடியாகும் நிலையான வதிவுரிமை அட்டையை (Permanent Resident Card), இந்திய நடுவண் அரசு வழங்கவேண்டும். வாக்குரிமை, பெருந்தோட்ட நிலங்களையும் வேளாண் நிலங்களையும் மட்டும் விலைக்கு வாங்கும் சொத்துரிமை ஆகிய உரிமைகள் தவிர்ந்த அனைத்து உரிமைகளையும் கொண்ட தகுதியை இந்த அட்டை வழங்கும். இப்பொழுதுள்ள இந்தியச் சட்டங்களுள் இந்த அட்டையை வழங்கலாம். ஏற்கனவே இந்திய அரசு இத்தகைய அட்டைகளை (PIO), இதே உரிமைகளுடன் வெளிநாடு வாழ் இந்தியருக்கு வழங்கி வருகிறது.

2.3 முகாம்களிலுள்ள ஈழத் தமிழர், இலங்கைக் கடவுச் சீட்டுடன் இலங்கை தவிர்ந்த பிறநாடுகளுக்குப் பயணம் செய்தபின், நிலையான வதிவுரிமை அட்டை இருப்பதால் இந்தியாவுக்கு மீளலாம். புகலிடம் கொடுக்கும் பல நாடுகள் தம்மிடம் வரும் அகதிகளுக்கு இந்த வசதியைக் கொடுத்து வருகின்றன.

2.4 காவல்துறைப் பதிவுமுறையில் மாற்றம் கொணர்ந்து, புகைப்படம் ஒட்டிய காவல்துறைப் பதிவு அட்டையை வழங்க வேண்டும். பதிவுக்கு விண்ணப்பித்த ஒரு வாரத்துள் தகுதியெனில் காவல்துறைப் பதிவட்டை வழங்கும் நடைமுறை வேண்டும்.

3.0 வாழ்விடம் (கூழும் கூறையும் கூரையும்)

3.1 இந்த 30,000 குடும்பங்களுட் பலர், கடந்த 26 ஆண்டுகளாக முகாம்களுக்குள் வாழ்கின்றார்கள். இவர்களுக்கு அரச நிலங்களில் (சமத்துவபுரங்கள் போலக்) குடியிருப்புகள் அமைத்து, கழிவறை, குழாய் நீர், மின்சாரம், சமையல் வாயு இணைப்பு உள்ள 35,000 இரண்டு அறைக் கல்வீடுகளைக் கட்டிக் கொடுத்துக் குடியமர்த்தவேண்டும். இதற்காக ஐநாஅகதி ஆணையரிடம் (UNHCR) கேட்டாலோ, புலம்பெயர் ஈழத் தமிழரிடம் கேட்டாலோ நிதி கிடைக்கும். இத்தகைய வாழ்விட வசதிகள் அமையும் கால எல்லையாக 2010 ஆனி அமைய வேண்டும்.

3.2 அடைக்கலம் கேட்டுப் புதிதாக வருவோரும் 6 மாதங்களுக்கு மேல் முகாம்களுள் வாழாது இத்தகைய குடியிருப்புகளுக்கு மாறிவிடவேண்டும்.

3.3 நிலையான வதிவுரிமை அட்டையுள்ளோருக்குக் குடும்பப் பங்கீட்டு அட்டைகள் (Family ration card) வழங்க வேண்டும். அணித்தாக உள்ள பொதுவிநியோகக் கூடத்தில் (PDS Shop) பங்கீட்டு உணவுப் பொருள்களைக் குடியிருப்பாளர்களே காசு கொடுத்து வாங்குவர்.

3.4 குடியிருப்புகளுக்குப் போனபின்பு அடுத்த ஓராண்டு காலத்து, அரசு இப்பொழுது வழங்கி வரும் மானியத் தொகை (2.11.2009இல் குடும்பத் தலைவருக்கு ரூ. 400, குடும்பத்திலுள்ள மற்றவர்களுக்கு ஏற்ற தொகை) அக்கால விலைவாசிக்கு ஏற்பத் தொடர்ந்து வழங்க வேண்டும்.

3.4 பங்கீட்டு அட்டைகள் வைத்திருப் போருக்கான நலத்திட்ட வழங்கல்கள், (இலவசத் தொலைக்காட்சிப் பெட்டி போன்றவை) இவர்களுக்கும் கிடைக்க வேண்டும்

4.0 தொழில்

4.1 நிலையான வதிவுரிமை அட்டை உள்ளோர் தத்தம் தகுதிக்கேற்ப வேலைவாய்ப்புப் பெறும் சுதந்திரம் வேண்டும். இந்த வசதியை அனைத்து வெளிநாட்டவருக்கு இந்திய அரசு இப்பொழுது வழங்கியுள்ளது. இதற்கெனப் புதிய விதிகள் தேவையில்லை.

4.2 தத்தம் திறமை, அநுபவம், முதலீட்டு வலிமை கொண்டோர், தொழில் தொடங்கவும், குறுகிய கால முதலீட்டு மற்றும் செலவாக்க வங்கிக் கடன் பெறவும் சுதந்திரம் வேண்டும். இதற்கெனவும் புதிய விதிகள் தேவையில்லை.

4.3 தனி ஆற்றலருக்கு வாகன ஓட்டுநர் உரிமம் போன்ற ஆற்றலுரிமங்கள் வழங்கி ஊக்குவிக்க வேண்டும். இருக்கும் விதிகளுள் வழங்கலாம்.

4.4 தொழில் தொடங்குவோருக்கு அரச நிலங்களைக் குத்தகைக்கு வழங்கி ஊக்குவிக்க வேண்டும்.

4.5 தொழில் முனைவோர் பயிலரங்குகள், சிறுதொழில் தொடங்க ஊக்குவிப்புகள், மகளிர் சுய உதவிக்குழுக்களாதல் போன்ற சுய முன்னேற்ற வழிகாட்டல்கள் வேண்டும்.

5.0 கல்வி

5.1 மழலையர் வகுப்புத் தொடக்கம் உயர்நிலைப் பள்ளிக் கல்வி வரையும், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டம், மற்றும் முதுநிலைப் பட்டம் வரையும் இதுவரை காலமும் இருந்த சிறந்த அணுகுமுறை தொடரவேண்டும்.

5.2 பலதொழினுட்பப் பயில் நிலையங்களுக்கும் (polytechnic) இந்த அணுகுமுறையை நீட்டவேண்டும்.

5.3 1983இல் தொடங்கிய தொழிற்கல்வி (professional courses) அனுமதிக்கான இட ஒதுக்கீடுஇ 1991இல் தடையாகிப் பின்னர் 1996இல் மீளமைந்து, 2000களில் நீதிமன்றத் தீர்ப்பால் முடங்கியது. இந்திய நடுவண் அரசு ஒதுக்கீடாக அமைய வேண்டும் என்றதால் தேங்கி நிற்கிறது. இந்திய நடுவண் அரசின் அயலுறவுத் துறையின் மாணவர் பகுதியே (Students cell of the Minstry of External Affairs located at Shahstri Bavan, New Delhi) வெளிநாட்டு மாணவருக்கு இட ஒதுக்கீடு செயுமிடமாகும். அப்பகுதியினரே, வெளிநாட்டுவாழ் இந்தியருக்கான (NRI) ஒதுக்கீடுகளைச் செய்வோர்கள். மருத்துவக் கல்விக்கு 30, பொறியியல் கல்விக்கு 60, வேளாண் கல்விக்கு 40, விலங்கு மருத்துவக் கல்விக்கு 20, மீன்வளக் கல்விக்கு 10, சட்டக் கல்விக்கு 20 என இட ஒதுக்கீடுகளை அப்பகுதியினர் வழங்குமாறும் 2010 கல்வியாண்டில் நடைமுறைக்கு வருமாறும் இப்பொழுதிருந்தே முயலவேண்டும். புதிய விதிகள் எதுவும் இயற்றத் தேவை இல்லை.

5.4 உயிரச்சத்தால் தப்பி வருவோர் புகலிடம் தேடுகையில் பிறப்பு, பள்ளிமாற்ற, கல்வித் தராதரச் சான்றிதழ்களுடன் பயணிக்கார். இத்தகையோரிடம் சான்றிதழ் கோருவது மனித நேயமல்ல. முடிந்தவரை சான்றிதழ் பெறக் கோரலாம். முடியாதவிடத்து உறுதிச் சான்றிதழ் (Affidavit) பெற்றுக் கல்விநிலையங்களில் அனுமதிக்கலாம். இதற்கான அரச ஆணை தேவை.

5.5 ஈழத்தமிழர் அகதி மாணவர் புலமைப் பரிசில் நிதியத்தைத் (முதலமைச்சர் நிவாரண நிதியம் போன்றாதாக) தமிழக அரசு தொடங்கி. அரசு நிதி ஒதுக்கியும். புரவலர்களிடம் நிதிபெற்றும், வசதி குறைந்த மாணவருக்குக் கல்விக் கட்டணம், விடுதிக்கட்டணம் போன்ற செலவுகளுக்கு வழங்க வேண்டும்.

5.6 பட்ட மற்றும் பட்டமேற்படிப்பு மாணவருக்கு வங்கிக்கடன் வழங்கலாம் என்ற திட்டத்தையும் எடுத்து நோக்க வேண்டும்.

6.0 மருத்துவம்

6.1 கலைஞர் காப்பீட்டுத் திட்டத்துள் இந்த 31,000 குடும்பங்களுக்கும் மருத்துவ வசதிகிடைக்க வேண்டும்.

ஓசியில் ஒரு இந்திய எதிர்ப்பு ஓலம்! : வாசு

Pirabakaran V & Mahathaya‘மறை களண்ட கோமளிகள்!’, ‘வெள்ளி பார்க்க வந்த வெங்காயங்கள்!’, ‘இந்தியா ஒரு வாந்தி!’, ‘சோனியா ஒரு சோந்தி!’, ‘வடக்கன் வம்பிலை பிறந்தவன்’ இது நான் சொல்வது அல்ல. இந்தியா பற்றி அண்மையில் புலம்பெயர் தமிழ் தேசிய ஊடகங்கள் வெளிக்கொணர்ந்த பதங்கள்! 1980களில் இந்தியாவையும் இந்திய அரசை மட்டும் நம்பி படையெடுத்த தேசிய விடுதலைப் போராட்டம் இன்று இந்தியாவை வாந்தி பேந்தி என்று திட்டுமளவிற்கு வந்த காரணங்கள் வெள்ளிடைமலை!. சுருங்ககூறின் புலிகளின் இருப்பை இந்தியா கேள்விக்கு உள்ளாக்கியமையும் புலிகளை அழிக்க சிறீலங்கா அரசிற்கு உதவியமையுமே இந்த இந்திய எதிர்பின் இன்றைய உச்சக் கட்டம். ‘ஆகாசவாணி’யின் செய்திகளை மெய்மறந்து  கேட்ட யாழ்பாண மக்கள் இன்று அதே ஆகாசவாணியை அழிக்க வேண்டும் என்ற பார்வையில் கட்டுரைகள் பல  எழுதப்பட்டு வருகிறது. அதாவது இந்தியா என்ற தேசம் இருக்கும் வரை தமிழீழம் கிடைக்காதாம். இதை எழுதியவர் ஒரு அரசியல் ஆய்வாளராம். இவர் பெயர் சபேசனாம்!. நாம் அனைவரும் இந்தியாவை அழிக்க சீனாவுடன் கூட்டுப் புணர்ச்சி செய்ய வேண்டும் என்று நாசூக்காக வேறு சொல்லுகிறார். அட முட்டாள் பயலுகளே இந்தியாவில் இப்ப பிரபலமாக விற்கப்படும் பிள்ளையார் சிலைகள் செய்யப்படுவதே சீனாவில்தான்.

இந்த ஆய்வாளர் திலகம் இப்படியே உசுப்பேத்தி உசுப்பேத்தி போற போக்கில இந்தியாவுக்கு விசா எடுப்பற்கு நாங்கள் ‘இந்தியாவின் இறைமைக்கு ஆதரவாக இருப்போம்’ என்று கற்பூரத்தில் அடித்து சத்தியப் பிரமாணம் எடுக்க  வேண்டி வந்தாலும் வரும்!. இதுதான் இந்த ஆய்வாளரின் இந்திய எதிர்ப்பின் பலாபலனாக இருக்குமே ஒழிய வேறு எதுவும் நடந்துவிடப் போவதில்லை.  1980களில் இருந்த நிலையில்தான் சர்வதேச அரசியல் இருப்பதாக  இந்த பத்திரிகையாளர் நினைப்பதுதான் ‘மறை களன்ட கோமாளி’யின் சிந்தனை. இதை லண்டன் வாழ் தமிழ்மக்கள் ஓசியில் படிப்பது….. ???

இந்திய எதிர்ப்பை இன்று மிக மோசமாக நடாத்திவரும் இந்த பத்திரிகைகளும் வானொலிகளும் யதார்த்தத்தை மறந்து கற்பனை உலகில் இருக்கிறார்கள்.  1986இல் சிறிலங்கா இந்திய ஒப்பந்தம் இடம்பெற்றபோது நான் புலிகள் இயக்கத்தை விட்டு வெளியேறி கல்வி கற்றுக்கொண்டிருந்த சமயம். புலிகளுக்கும் இந்திய இராணுவத்திற்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்ட சமயம், நான் புலிகளின் முக்கிய தளபதியாக இருந்த செங்கமலத்தை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்து. அப்போது அவர்களின் மனநிலை மிகவும் குழம்பியதாக இருந்தது. ”இந்தியாவின் உதவியுடன் நாம் மிகவும் நல்லவிதமாக நமது போராட்டத்தை வென்றெடுக்க முடியும். ஆனால் தலைமை பிழை விடுகிறது. என்ன செய்வது தலைமையின் சொல்லை கேட்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்” என அவர் மன வேதனையுடன் கூறியது இன்றும் எனக்கு நினைவிருக்கிறது.

இந்தியா தனது நலனை தவிர வேறு எந்த நலனுக்காகவும் இலங்கைக்கு வரவில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை! ஆனால் இந்திய இராணுவம் தமிழ் மக்களின் காவலாளிகளாகவே அன்று தமிழ் மக்களால் பார்க்கப்பட்டார்கள். கிழக்கில் சிறீலங்கா அரசின் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை இல்லாது செய்ய இந்தியா சில திட்டங்களை புலிகளுடன் தீட்டியது பலருக்கு தெரிய நியாயமில்லை. அது மட்டுமல்ல புலிகளின் தலைமைக்கு பல வாக்குறுதிகளை கொடுத்ததுடன் ”மாகாணசபையை முதலில் ஏற்றுக்கொள்ளுங்கள். சிங்கள இனவாத அரசு அதை நிச்சயம் மறுக்கும். அந்த நேரத்தில் நமது இராணுவம் வடக்கு கிழக்கில் உங்களிற்கு பயிற்சி அழித்து ஒரு தமிழ் தேசிய இராணுவத்தை ஏற்படுத்த அனைத்தும் செய்வோம்” என்று உறுதிமொழியும் வழங்கப்பட்டது.

ஆனால் ”வடக்கு கிழக்கில் புலிகள் மட்டுமல்ல மற்றைய குழுக்களும் இயங்க புலிகள் வழி சமைக்க வேண்டும்” என்றும் கோரப்பட்டது. இதுதான் புலிகளை உசுப்பேத்திய ஓரே ஒரு பிரச்சனை. இந்த நிபந்தனை இல்லாதிருந்திரதால் புலிகள் இந்திய இராணுவத்திற்கு நிச்சயம் சலாம் போட்டிருப்பார்கள்.  புலிகள் தம்மை தவிர எந்த ஒரு இயக்கமும் இருக்க கூடாது என்பதில் முனைப்பாக இருந்த ஒரே காரணம்தான் அவர்களை இந்தியாவுடன் மோத வைத்தது என்பதை புலிகளின் பல முன்னைநாள் போராளிகள் அன்றே ஒப்புக் கொண்டார்கள். மக்களின் நலனில் எந்தவித அக்றையும் கொள்ளாத புலிகள் தமது இருப்பை மட்டும் முன்நிறுத்தியது என்ன நியாயாம்? காலா காலமாக சிங்கள இனவாதிகளால் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்குள்ளான கிழக்குவாழ் தமிழ் மக்கள் இந்திய இராணுவ பிரசன்னத்தில் பாதுகாப்பாக இருப்பதை உணர்ந்தார்கள். புலிகள் மெதுவாக மக்களிடமிருந்து ஒதுக்குப்பட்டார்கள். இதைக் கண்ணுற்ற புலிகள் இனியும் இந்த நிலை நீடித்தால் தாம் முழுவதுமாக மக்களிடமிருந்து ஒதுக்குப்பட்டு விடுவோம் என்ற நிலையில் இந்திய இராணுத்துடன் மோதுவதே தம்மை காக்கும் என பிரபாகரன் உணர்ந்தார். புலிகளின் தலைவர் பிரபகாரனின் இந்த தனிப்பட்ட முடிவு தமிழ் மக்களின் தலைவிதியை மாற்றியதுடன் இந்தியா தமிழர்களுக்கு எதிரான ஒரு நாடாக மாற்றப்பட்டது.

வடக்கு கிழக்கு மக்களிடம்  எந்தவித அபிப்பிராயமும் கேட்காது தான்தோன்றி தனமாக யுத்த நிறுத்தத்தை மீறியது புலிகளே. இந்த முடிவை பல புலிப் போராளிகள் எதிர்த்தபோதும் தலைமைக்கு கட்டுப்பட்டு இந்திய இராணுவத்தை எதிர்த்துப் போராடினார்கள். இதே போராளிகள் பின்னர் இந்தியாவுடன் சேர்ந்து பிரபாகரனை அழிக்க சதி செய்ததாக கூறி போட்டுத் தள்ளப்பட்டார்கள். மாத்தையா, சுசீந்திரன், செங்கமலம் உட்பட 700 புலிப் போரளிகள் பிரபாகரனினாலும் பொட்டம்மானாலும் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்டார்கள். இதன் பின்னர் இந்தியாவில் ஆட்சியில் இருந்து தூக்கியெறியப்பட்ட இந்திய முன்னைநாள் பிரதமரை எந்தவித அரசியல் காரணங்களும் இன்றி பிரபாகரனின் தனிப்பட்ட குரோத வெறிக்கு பலியாக்கியது தமிழ் மக்களை இந்தியாவின் நிரந்தர எதிரியாக்கியது. மிகவும் முட்டாள்தனமான இந்திய எதிர்ப்பு முடிவுகளை எடுத்தது புலிகள் அமைப்பும் அதன் தலைமையுமே!

ஒரு காலத்தில் சிறீலங்காவில் இருந்து இராணுவத்தால் துரத்துப்பட்டு இந்தியாவில் தஞ்சமடைந்தபோது இந்த புலித் தலைமைக்கு பாதுகாப்பும் பயிற்சியும் கொடுத்தது இந்தியாவே.! இந்தியா தனது நலனுக்காக தான் இலங்கைக்கு வந்தது என்பது அனைவரும் அறிந்த விடயம். ஆனால் அதை நமது அரசியல் இலாபத்திற்கு பாவிக்க தெரியாத முட்டாள்களாக இருந்த புலிகளின் தலைமை படு முட்டாள்கள் தான் என்பதை 22 வருடங்களின் பின் மீண்டும் நிரூபித்துள்ளார்கள். அன்று சமயோசிதமாக முடிவெடுத்திருந்தால் நாம் இன்று இந்த இழப்புகளை சந்தித்திருக்க தேவையில்லை. புலிகளின் பொய்யான பிரச்சாரங்கள் இன்று புலம்பெயர் மக்களை இந்தியாவிற்கு எதிராக திருப்பியதை ஏன் இந்த பத்திரிகையாளர்கள் உணர மறுக்கிறார்கள். அனைத்து தவறுகளையும் துரோகங்களையும் நாமே செய்துவிட்டு இன்று இந்தியா துரோகி அதை அழிக்க வேண்டும் என்பது என்ன நியாயாம்? வரலாறு தெரியாதவர்கள் ஓசியில் பத்திரிகை நடாத்தினால் இதைவிட வேறு எதைதான் எழுதுவார்கள்?

ஓசியில் பேப்பர் விடுவது இலகுவான விடயம் அல்ல. அதற்கு வர்த்தகப் பெருமக்களின் ஆதரவு வேண்டும்! அவர்களுக்கென்ன, என்ன விடயம் பத்திரிகையில் இருக்கிறது என்பது அவர்கள் கவலையில்லை. எத்தனை பேர் ஓசியில் படிக்கிறார்கள் என்பதே அவர்களின் கவலை! அண்மையில் அமெரிக்க ராஜாங்க திணைக்களம் சிறீலங்காவின் போர்கால நிலவரம் தொடர்பாக வெளியிட்ட 72 பக்க அறிக்கையில் உள்ள பல தகவல்கள் நமக்கு தெரிந்தவையே! குறிப்பாக சிறீலங்கா அரசு செய்த அத்தனை மனிதஉரிமை மீறல் விடயம் முதல் மக்களை கும்பல் கும்பலாக ஷெல்லடித்து கொன்றது வரை, இந்த ஓசி பேப்பர்கள் இதை வரிக்குவரி எழுதியதோடு அதை ஊதிப் பெரிப்பித்து  இலங்கையில் ஒரு இனப்படுகொலை நடக்கிறது என்று ஓலமிட்டு அழுதன.

ஆனால் அமெரிக்க ராஜாங்க திணைக்கள அறிக்கையில் வரிக்குவரி புலிகள் செய்த அக்கிரமங்கள் பற்றி இந்த ஊடகங்கள் ஒரு மூச்சுக்கூட விடவில்லை. மாறாக அங்கு  நடப்பவை எல்லாம் சரியெனவும் மக்கள் ஒரு சில தியாகங்களை செய்தால்தான் விடுதலை பெறமுடியும் என்றும் இந்த  சேயோன்களும் சபேசன்களும், கட்டுரைகளையும் கவிதைகளையும் எழுதிக் குவித்தார்கள். ஆனால் தப்பிச் செல்ல முனைந்த தமிழ்மக்களை புலிகள் சுட்டுக் கொன்றதையோ பத்து வயதுப் பாலகன்களை கடத்தி சென்றதை பற்றியோ எந்த மூச்சும் விடவில்லை. அது மட்டுமல்ல ஒரு சில முதுகெலும்புள்ள ஊடகங்கள் அந்த செய்திகளை வெளியிட அவர்களை புலியெதிர்ப்பு ஊடகங்கள் என்று முத்திரை குத்தி அவர்களையும் துரோகிகளாக்கினர்.

இந்த பத்திரிகை ஒருகாலத்தில் பயோடேட்டா என்ற பெயரில் புலம்பெயர் வாழ் பெண் ஜனநாயகவாதிகளை புலியெதிர்ப்பாளர்கள் என்ற போர்வை சுமத்தி அவமானப்படுத்தினார்கள். ஆனால் புலிகள் மக்களை கொடுமைப்படுத்தியதை இன்று வன்னி தடுப்பு முகாம் மக்கள் கூறுவதைக் கூட தமது பத்திரிகையில் போட திரணியற்று நிற்கின்றனர். ஆனால் இந்த சேயான்களுக்கு ராஜேஸ் பாலாவையும் நிர்மலாவையும் உச்சரித்தால் மட்டும் கிக் வந்துவிடும். இவர்களுடைய அந்த எழுத்துக்களுக்கு இவர்கள் ஓசியில் பத்திரிகை அடிப்பதை விடுத்து காசுக்கு விற்பனை செய்யும் மஞ்சள் பத்திரிகையே நடாத்தி இருக்கலாம்.

அதற்குள் தாங்கள் சிவப்புச் சட்டைகாரராம் என்று சிலருக்கு தற்பெருமை. மம்மி ஜெயலலிதா தம்பிக்கு தமிழீழம் வாங்கித் தருவார் என்று அரசியல் ஆய்வு செய்தவர்கள், ஓபாமாவும் ஹிலரியும் கப்பல் அனுப்புவார்கள் என்று தலைவரை நந்திக்கடல் ஓரத்தில் வெள்ளி பார்க்கவிட்ட பெருமை ஒரு பேப்பர் உட்பட தேசிய ஊடகங்களையே சாரும். தலைவரை உசுப்பேத்தி உசுப்பேத்தி முருங்கை மரத்தில் ஏத்தி முள்ளிவாய்காலில் தள்ளிவிட்ட இந்த ஜம்பாவான்களுக்கு மாவீரர் தினத்தன்று தேசிய ஆய்வாளர் விருதுகைள வழங்கி கௌரவிக்க வேண்டும். அப்போது தான் தலைவரின் ஆத்மசாந்தி அடையும்.

அமெரிக்க இராஜாங்க அமைச்சின் அறிக்கையை காலாவதியாக்கும், முகாம் மக்களை வெளியேற்றும் இலங்கை அரசின் அறிவிப்பும், தொடரும் மௌனமான அடையாள அரசியல் அழிப்பும் : த ஜெயபாலன்

US_State_Department_Report_on_Sri_Lankaஅமெரிக்க அரசு இலங்கை அரசின் நடந்து முடிந்த யுத்தம் பற்றிய அறிக்கையை இன்று (ஒக்ரோபர் 22) வெளியிட்டுள்ள அதே நேரம் வன்னி முகாம்களில் உள்ள மக்களில் 40 000 பேரை மீள்குடியேற்றுவதற்கான அறிவிப்பை இலங்கை அரசு இன்று (ஒக்ரோபர் 22)ல் வெளியிட்டுள்ளது. நடந்த முடிந்த யுத்தத்தில் பாதுகாப்பு வலயங்களை அறிவித்துவிட்டு அந்த பாதுகாப்பு வலயங்களை நோக்கி இலங்கைப் படைகள் செல் தாக்குதல்களை நடத்தி உள்ளனர், தற்காலிக யுத்த நிறுத்தங்களை அறிவித்துவிட்டு யுத்த நிறுத்தம் முடிவடைவதற்கு முன்னரே அரச படைகள் தாக்குதலை நடத்தி உள்ளனர், சரணடைந்த விடுதலைப் புலிகளை இலங்கை அரசு சட்டவிரோதமாகக் கொலை செய்துள்ளது, வன்னி மக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள தடுப்பு முகாம்கள் மிக மோசமான நிலையில் இருக்கின்றது போன்ற குற்றச்சாட்டுக்களை அமெரிக்க ராஜாங்க அமைச்சின் அறிக்கை கொண்டுள்ளது. இந்த அறிக்கையை சர்வதேச அரங்கில் பலவீனப்படுத்தி அதனை பெரிது பண்ண விடாமல் செய்யும் வகையில் இலங்கை அரசு ஏற்கனவே திட்டமிட்டபடி வன்னி முகாம்களில் இருந்து ஒரே தடவையில் 40 000 பேரை விடுவிக்கும் அறிவிப்பை வெளியிட்டதுடன் இன்று 5700 பேரை விடுவித்தும் உள்ளது. 

இவ்வாண்டு முடிவிற்குள் இலங்கை அரசு வன்னி முகாம்களில் உள்ள 80 வீதமான அவர்களது சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்துவதில் உறுதியாக இருப்பதாக அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த சர்வதேச அபிவிருத்திச் செயலகத்தின் செயலாளர் மைக்கல் போஸ்ர் நேற்று (ஒக்ரோபர் 21)ல் பிரித்தானிய பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தின் போது தெரிவித்தார். வன்னி முகாம்களில் சுகாதாரம், மனிதத்துவ உதவிகளுக்கான அனுமதி இன்னமும் மட்டுமப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் குடும்ப உறுப்பினர்கள் பிரிக்கப்பட்டு இருப்பதாகவும் அதீத இராணுவ கட்டுப்பாடு பற்றி தாங்கள் கரிசனை கொண்டிருப்பதாகவும் மைக்கல் போஸ்ரர் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் தெரிவித்தார். தான் ஏப்ரலில் விஜயம் செய்த போது இருந்த நிலைமைகளிலும் தற்போதுள்ள நிலை முன்னேற்றகரமாக இருப்பதாகத் தெரிவித்துள்ள அவர் அடிப்படைத் தேவைகளான உணவும் உறைவிடமும் அனைவருக்கும் வழங்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவ்வாண்டு முடிவிற்குள் 80 வீதமானவர்களை மீளக் குடியேற்றுவதற்கான கண்ணி வெடிகளை அகற்றுவது போன்ற பணிகளுக்கு 500 000 பவுண்களை வழங்க உள்ளதாகவும் அவர் அறிவித்தார்.

இலங்கைகயின் ஏற்றுமதிப் பொருட்களுக்கு வழங்கப்பட்ட வரி நீக்கச் சலுகையை – ஜிஎஸ்பி பிளஸ் யை நீக்குவது பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த மைக்கல் போஸ்ரர்அது தொடர்பாக வெளிவந்துள்ள அறிக்கை சுட்டிக்காட்டுகின்ற விடயங்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவதாகத் தெரிவித்தார். தொழிற்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் சினோபிம் மக்டோனா ஜிஎஸ்பி பிளஸ் சலுகையை நீக்க வேண்டும் என்று குறிப்பிடுகையில் கொன்சவேடிவ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜெப்ரி கிளிப்ரன்-பிறவுன் ’80 வீதமான மக்களை கிறிஸ்மஸ்ஸிற்கு முன்னதாக மீளக்குடியமர்த்தவும் மீளவும் உறவுகளை வலுப்படுத்தவும் இலங்கை அரசாங்கத்தை சம்மதிக்க வைப்பதற்கு ஜீஎஸ்பி பிளசை நீக்குவதா ஆரோக்கியமான நடவடிக்கை? இதனையா வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களும் பிரித்தானியாவில் உள்ள இலங்கையர்களும் தீவிரமாக எதிர்பார்க்கிறார்கள்’ என்று கேள்வி எழுப்பினார்.

அங்கு மைக்கல் போஸ்ரர் மேலும் தெரிவிக்கையில் செப்ரம்பரில் 32 000 பேர் வன்னி முகாம்களில் இருந்து வெளியேறி உள்ளனர் என்றும் மேலும் 41 000 பேரை மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சியில் மீள்குடியேற்ற ஐஓஎம் இன் உதவியை நாடி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பிரித்தானிய பாராளுமன்ற விவாதமும் இலங்கை அரசின் 40 000 பேரை விடுவிக்கின்ற அறிவிப்பும் இலங்கை அரசு தான் இழந்த சர்வதேச அங்கிகாரத்தை மீளவும் தக்க வைப்பதற்கான நடவடிக்கையில் இறங்கி இருப்பதை வெளிப்படுத்துகின்றது. தமிழகத்தில் இருந்து சட்டசபை உறுப்பினர்களை வரவழைத்து அவர்களது வேண்டுகோள்களை ஏற்றுக்கொள்வது போன்ற ஒரு நடவடிக்கையையும் எடுத்து வன்னி முகாம்களில் உள்ளவர்கள் தற்போது ஆயிரக்கணக்கில் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். முகாம் மக்களை குறிப்பிட்ட காலத்திற்குள் விடுவிப்பது என்ற திட்டம் இலங்கை அரசிடம் ஏற்கனவே இருந்தது என்பதும் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் மட்டுப்படுத்தப்பட்ட அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது என்பதும் பற்றி தேசம்நெற்றில் பரவலாக செய்திகள் வெளிவந்திருந்தது. மேலும் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள படையினர் பலரும் இப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இந்நடவடிக்கைகள் விரும்பியோ விரும்பாமலோ சர்வதேச சமூசத்தை மீண்டும் வென்றெடுத்து தங்கள் மீதுள்ள அவப்பெயரை நீக்குவதற்கான முயற்சியாகவே இருந்தது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களும் புலித் தமிழ் தேசியவாதிகளும் புலி மார்க்ஸிஸ்ட்டுக்களும் பிரச்சாரம் செய்வது போன்ற ஒரு முரட்டுத்தனமான முட்டாள்தனமான இன ஒடுக்குமுறையை இலங்கை அரசு மே 18ன் பின் மேற்கொள்ளவில்லை. தற்போது தமிழ் அரசியல் அடையாளத்தை நீண்ட காலப்போக்கில் இல்லாதொழிக்கின்ற நாசுக்கான மௌனமான அடையாள அரசியல் அழிப்பையே இலங்கை அரசு மேற்கொள்கிறது. அதில் தமிழ் அரசியல் தலைமைகளால் பணயம் வைக்கப்பட்டு முள்ளிவாய்க்காலில் கைவிடப்பட்ட மக்களுக்கு இலங்கை அரசினால் மட்டுமே தலைமை கொடுக்கும் ஆளுமை உள்ளது என்பதை இலங்கை அரசு தனது ஒவ்வொரு நடவடிக்கையின் மூலமும் உறுதிப்படுத்தி வருகின்றது.

தமிழக சட்டசபைக் குழுவையும் பிபிசி ஊடகவியலாளர்களையும் வன்னி முகாம்களுக்குச் செல்ல அனுமதித்த அரசு தமிழீழ விடுதலைப் புலிகளின் பினாமிகளான தமிழ் தேசியக் கூட்டமைப்பை வன்னி முகாம்களுக்கு அனுமதிக்கவே இல்லை. அரசு அனுமதிக்காவிட்டாலும் அந்த மக்களைப் பார்க்க தங்களை அனுமதிக்கும்படி இவர்கள் போராடவும் இல்லை. ஏதாவது வகையில் முகாம்களில் உள்ள மக்களுக்கு தங்கள் உதவிகளை நல்கவும் இல்லை. அதே போன்று சமாதான காலத்தில் பொங்கு தமிழ் கொண்டாடி போர் முழக்கம் செய்த புலம்பெயர் தமிழர்கள் மிக முட்டாள்தனமாக புலிகளின் முல்லைத்தீவு கடற்கரைக்கு வணங்கா மண் அனுப்ப பல மில்லியன் பவுண்களைச் செலவழித்தனர். இன்று அவ்வளவு மில்லியன் பவுண்களும் அவத்தில் அழிந்தது. ‘300 000 மக்களுக்கு நாங்கள் எதற்காக உதவ வேண்டும்’ ‘அது அரசின் கடமை’ என்று சொல்லி தங்கள் குறைந்தபட்ச பொறுப்புகளையும் தட்டிக் கழித்தது புலம்பெயர் சமூகம். (தனிப்பட்ட முறையில் சில உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்பது மறுப்பதற்கில்லை.) அம்முகாம்களில் உள்ள மக்களுக்கு உதவுவது தவறு, அம்மக்கள் வலியுடன் இருந்தால் தான் போராடுவார்கள் என்று இலங்கை அரசின் கைகளிலேயே அம்மக்களைத் தள்ளிவிட்டுள்ளனர். இவர்கள் தலைவரை விட்டுவிட்ட வெளியேறியதற்காக அம்மக்களை துரோகிகள் என்றும் பட்டம் கொடுத்தனர். இன்று அம்மக்களுக்குள்ள ஒரே நம்பிக்கை இலங்கை அரசு மட்டுமே என்ற நிலையை ஏற்படுத்தியதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளினதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினதும் வங்குரோத்து அரசியல் மட்டுமல்ல புலத்தில் உள்ள புலி ஆதரவு அறிவுகளின் புலி மார்க்ஸிஸ்டுக்களின் சிந்தனையும் தான் காரணம். ஆயிரக் கணக்கில் மக்கள் கொல்லப்பட்டால் தான் போராட்டம் உக்கிரமடையும் சர்வதேசம் தலையிடும் என்ற ஆலோசனை ஆங்கிலம் பேசுகின்ற நாடுகளில் உள்ள கோட்சூட் அணிந்த புலிக் கனவான்களின் ஆலாசணை.

சமையற் குறிப்பெடுத்து சமையல் செய்பவர்கள் போல் சிவப்புப் புத்தகம் வாசித்து புரட்சி செய்ய புறப்பட்ட பேப்பர் மார்க்ஸிட்டுக்கள் இப்பொது இணையம் வசதியாக உள்ளதால் கூகிள் மார்க்ஸிட்டுக்கள். உண்மையில் இவர்கள் குணாம்சத்தில் மார்க்ஸிசத் தோல் போர்த்தியிருக்கும் புலிகள். தலைவர் வே பிரபாகரன் நத்திக் கடலில் விட்ட ‘போராட்ட’ குத்தகையை தாங்கள் பொறுப்பெடுத்த விட்ட கனவில் நிதர்சனம் நடத்துகின்றனர். மார்க்ஸிய கருத்துக்களை முன்னெடுப்பதாகக் கூறுபவர்கள் நடைமுறையில் மக்களையே கோட்டைவிட்டு விடுகின்றனர். அது மார்க்ஸிய தத்துவத்தின் தவறு அல்ல. அதனை முன்னெடுப்பவர்களின் பலவீனமும் அர்ப்பணிப்பின்மையும். இது புலம்பெயர் தமிழ் சூழலுக்கு மிகவும் பொருந்தும். ஏனெனில் இங்கு சொகுசு மார்க்ஸிட்டுக்கள் மலிந்துவிட்டனர்.

அதற்காக அனைவரையும் ஒருங்குசேர ‘சொகுசு மார்க்ஸிஸ்ட்டுகள்’ என்ற வரையறைக்குள் அடைக்க முடியாது. நம்பிக்கையான சில போராட்டங்களும் முயற்சிகளும் இடம்பெறவே செய்கின்றன. இலங்கையில் உள்ள அனைத்து ஒடுக்கப்பட்ட சமூகங்கள் சார்பாகவும் குரலெழுப்பப்ட வேண்டியதன் அவசியத்தை குயின்ஸ்மேரி பல்கலைக் கழக கண்டனக் கூட்டத்தில் இளம்தலைமுறை மாணவர்கள் முன்வைத்தனர். வரலாற்றை சரியாகக் கற்றுக்கொள்ளத் தவறினால் அது மீளவும் நடைபெறுவதைத் தடுக்க முடியாது என்றும் ஐ நா போன்ற அமைப்புகளிடம் எமது கோரிக்கைகளை முன் வைப்பதும் அவர்களிடம் எதிர்பார்ப்பதும் அர்த்தமற்றது என்றும் மாணவர்கள் தங்கள் கருத்துக்களை வெளியிட்டனர். அண்மைக்காலத்தில் இடம்பெற்ற ஒரு இடதுசாரி அமைப்பின் கூட்டத்தில் மாணவர்கள் கலந்துகொண்டு முன்னின்று செயற்பட்டதை முதற்தடவையாக அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

ஒக்ரோபர் 17ல் ‘தமிழர் ஒருங்கிணைப்பு’ஆல் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கூட்டத்தில் பல்கலைக் கழக தமிழ் மாணவர்கள் நூறுபேர் வரை கலந்துகொண்டனர். அவர்கள் அவர்களில் பல்வேறு அரசியல் பின்னணிகளைக் கொண்டவர்கள் இருந்த போதும் விவாதத்திற்கும் மீளாய்விற்கும் தாங்கள் தயார் என்பதை தங்கள் கருத்துக்கள் மூலம் வெளிப்படுத்திக் கொண்டனர். ‘தமிழர் ஒருங்கமைப்பு’ கடந்த சில மாதங்களாக உலகின் பல்வேறு பாகங்களிலும் சிறிய அளவிலாயினும் தனது போராட்டங்களை முன்னெடுத்து வந்துள்ளது. ஆனால் இப்போராட்டங்களில் கலந்துகொண்டவர்களில் பெரும்பான்மையினர் இளைஞர்களும் யுவதிகளும் என்பது குறிப்பிடத்தக்கது. அலையென அடித்துச் செல்லும் குறும் தமிழ்த் தேசிய அலையை எதிர்த்து தமிழ், சிங்கள, முஸ்லீம் மக்கள் என்று ஒடுக்கப்பட்ட மக்களது குரல்களும் ‘கீபோட்டுக்கு’ அப்பால் அங்கு மட்டுமே தற்போது ஒலித்து வருகின்றது.

இன்று இலங்கை அரசு மிக நாசுக்காக தனது மௌனமான தமிழ் அரசியல் அடையாள அழிப்பு முயற்சிகளை மேற்கொள்கின்றது. இலங்கை அரசு இனவாத அரசாக இருந்த போதும் அதனிடமுள்ள விவேகத்தையும் திட்டமிடல்களையும் அதனை நடைமுறைப்படுத்துகின்ற வேகத்தையும் எதிர்கொள்கின்ற ஆற்றல் இலங்கையிலும் சரி புலம்பெயர் தேசங்களிலும் சரி தமிழ் அரசியல் சக்திகளிடையே மிகக் குறைந்த அளவிலும் இல்லை என்பதே வேதனையான உண்மை. கட்சி அரசியல், குழுவாத அரசியல், புலி அரசியல் எனத் தங்கள் அடையாள அரசியலை நிறுவுவதிலேயே அவர்கள் வலு அவதானமாக இருக்கின்றனர். குறிப்பாக புலம்பெயர் தேசத்தின் குழுவாத அரசியலுக்கும் இலங்கையில் உள்ள தமிழ் கட்சிகளின் அரசியலுக்கும் பாரிய வேற்றுமைகள் கிடையாது. தங்கள் இருப்பை அடையாளப்படுத்துவதற்கு இலங்கையில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகள் அறிக்கை விடுவார்கள். கடிதம் எழுதுவார்கள். புலத்து குழுவாதிகள் தங்கள் இணையங்களில் அல்லது சார்பு இணையங்களில் கட்டுரை எழுதுவார்கள். தேவைப்பட்டால் கடிதமும் எழுதுவார்கள். ஆனால் பாதிக்கப்பட்ட மக்கள் இலங்கை அரசின் முடிவுகளுக்காக காத்திருப்பதைத் தவிர அவர்களுக்கு வேறுவழியில்லை.

இலங்கை அரசின் மிக நிதானமான திட்டமிடல் காலவரையறை வைத்து புலிகளை அழித்தொழிக்க வழிகோலியது. இன்று அதே நிதானத்துடன் தமிழ் மக்களது அரசியலைப் பலவீனப்படுத்துவதை நோக்கி அரசு நகர்கின்றது. அதில் குறிப்பிடத்தக்க வெற்றியும் கண்டு வருகின்றது. ஜனாதிபதி மகிஹிந்த ராஜபக்ச ஒரு ஸ்ரண்ட் மாஸ்ரர். புலிகளை தான் குறிப்பிட்ட கால வரையறைக்குள் முடிவுக்குக் கொண்டு வந்ததாக சிங்கள மக்களிடம் பெயரெடுத்தவர். தான் குறிப்பிட்ட 180 நாள் காலக்கெடுவினுள் வன்னி முகாம்களையும் மூடிவிடுவேன் என்று மீண்டும் மீண்டும் கூறி வந்தவர். அதனை தற்போது ஒரு ஸ்ரண்ட் ஆகவே அறிவித்தும் உள்ளார். இலங்கை அரசு இவ்வாறான ஒரு ஸ்ரண்டைச் செய்யும் என்பதனை பலர் ஏற்றுக்கொள்ள மறுத்தனர். நம்பகமற்ற செய்திகளைப் பரப்பி, செய்திகளை தங்கள் அரசியலுக்கேற்ப திரிபுபடுத்தி உண்மையான விடயங்களும் மூடிமறைக்கப்படுவதற்கு வழிசெய்யப்பட்டது. இலங்கை அரசு நாசுக்காக செய்து வருகின்ற மௌனமான அடையாள அழிப்பை (தமிழ் மக்களை சுட்டுக் கொல்லாமல் இளம்பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தாமல்) அம்பலப்படுத்த இவர்களுக்கு முடியவில்லை.

ஸ்ரண்ட் மாஸ்ரர் வன்னி முகாம்களை அடுத்த ஆண்டு முற்பகுதிக்குள் மூடிவிட்டால் இங்குள்ள பலருக்கு போராடவும், குரலெழுப்பவும் விடயமே இருக்காது. ஏனெனில் இவர்களிடம் இருப்பது வெறும் உணர்ச்சியும் வேகமும் மட்டுமே. புலம்பெயர்ந்து வாழும் புலிகளின் சில முக்கிய உறுப்பினர்களுக்கு வன்னி முகாம்கள் மூடுப்படுவதில் உள்ளுக்குள் மிகுந்த புழுக்கம். ஏனென்றால் முகாம்களை மூடினால் போராட முடியாது என்ற கவலை. இதே கவலை மே 18க்குப் பின் சரணடைந்த போரளிகள் வகைதொகையின்றிக் கொல்லப்படவில்லை என்பதிலும் பெண்கள் வகைதொகையின்றி பாலியல் வல்லுறவுக்கு உட்படவில்லை என்பதிலும் இருந்தது. தங்களது எதிர்மறை அரசியலை முன்னெடுக்வே இவர்கள் களம் தேடுகின்றனர். அந்த அரசியலை மட்டுமே இவர்கள் அறிந்து வைத்துள்ளனர். அதனால் இலங்கை அரசு மேற்கொள்கின்ற மெனனமான அடையாள அழிப்பிற்கு முகம்கொடுக்க இவர்களால் முடியவில்லை.

தற்போது அரசு மேற்கொண்டு வருகின்ற நடவடிக்கைகள் தான் இழந்த கௌரவத்தை மீள்விப்பதை நோக்கிப் படிப்படியாக நகர்கின்றது. இந்திய அரசை தனக்கு ஆதரவாகக் கொண்டிருந்த நிலையில் இருந்து தற்போது புலிகளின் முக்கிய ஆதரவுத்தளமான தமிழகத்தை அரசு தன்பக்கம் வளைத்துப் போட்டுள்ளது. தனது 180 நாள் உறுதிப்படி வன்னி மக்களை மீள்குடியேற்றுகிறேன் என்றும் அரசு அறிவிக்க ஆரம்பித்துவிட்டது. அந்த ஆரம்பத்திலேயே தனக்கு எதிராக வரவிருந்த அமெரிக்க இராஜாங்க அமைச்சின் அறிக்கையை காலாவதியான அறிக்கையாக்கும் வகையில் தனது காயை இலங்கை அரசு நகர்த்தி உள்ளது.

அதுமட்டுமல்ல அடுத்த ஆறு மாத காலத்திற்குள் ஜிஎஸ்பி பிளஸ் சலுகை தொடர்பான முடிவெடுக்கப்படும் போது இலங்கை அரசு ஐரோப்பிய ஒன்றியத்தில் தனக்குச் சாதகமான நிலையை ஏற்படுத்தினால் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனாலும் அரசின் மௌனமான தமிழ் அரசியல் அடையாள அழிப்புத் தொடரும். அதனை எதிர்கொள்ளுமா எமது அரசியல் சக்திகள்?

ஒக்ரோபர் 21ல் பிரித்தானிய பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதம்:

House of Commons : Wednesday 21 October 2009 : Oral Answers to Questions

International Development : Sri Lanka

Mr. Jim Cunningham (Coventry, South) (Lab): What his most recent assessment is of the humanitarian situation of refugees in Sri Lanka; and if he will make a statement.

The Parliamentary Under-Secretary of State for International Development (Mr. Michael Foster): Two weeks ago, I visited Sri Lanka to see for myself the situation of the 250,000 internally displaced people detained in camps. Conditions have improved there compared with my previous visit in April, with basic needs such as food and shelter being met. However, health care and humanitarian access remain inadequate and we are concerned about military oversight of the camps and family separations. We also believe that conditions will deteriorate during the monsoon season, which is about to start. While I was in Sri Lanka, I repeated the United Kingdom’s call for freedom of movement for all the IDPs so that they can go back to host families, relatives or their places of origin.

Mr. Cunningham: May I ask my hon. Friend whether he has been able to get a time scale for the Tamils to go back to their homes in Sri Lanka? Also, how has the aid been distributed?

Mr. Foster: The Government of Sri Lanka were committed to having 80 per cent. of those detained in camps going back to their places of origin by the end of the year. To facilitate that process, I am pleased to announce today an allocation of £500,000 to the HALO Trust for mine surveillance and de-mining in the Mullaitivu area. That work has started and will make the area safe for homes and for land use for the people who were put in the camps.

Mr. Lee Scott (Ilford, North) (Con): Will the Minister look into whether further pressure can be put on Sri Lanka by the Commonwealth? If Sri Lanka continues not to let people return or go home from the camps, perhaps it should be suspended from the Commonwealth.

Mr. Foster: It is important that the international community makes clear its position with regard to the number of people still in the camps and the importance of freedom of movement. We believe that that is happening, but, as far as the Commonwealth’s position is concerned, I know that the Government of Sri Lanka are keen to host the Commonwealth Heads of Government meeting in a couple of years’ time. That might have some bearing on their response to the developments for people who are in the camps.

Siobhain McDonagh (Mitcham and Morden) (Lab): May I thank the Minister for his statements and for his visit to Sri Lanka on behalf of my Tamil constituents? May I also ask his Department to support the EU Trade Commissioner’s GSP—or generalised system of preferences—plus report, which was issued on Monday, to ensure that preferred status will be withdrawn from Sri Lanka should things continue as they are?

Mr. Foster: My hon. Friend has long been an advocate for her Tamil constituents and I applaud her for her commitment. As regards the GSP plus and the announcement made this week by the European Commission, there is a process that should be followed to maintain the integrity of the GSP plus system. We believe that in the meantime the Government of Sri Lanka should look at the findings and act on them swiftly.

Malcolm Bruce (Gordon) (LD): As someone who visited the camps earlier this year, along with you,

Mr. Speaker, I welcome the Minister’s report on the basic conditions in the camps. Does he agree with me, however, that the Sri Lankan Government would better serve their interests if they gave full unrestricted access to the camp to the media and all the agencies and fulfilled their promise to allow people to return home before Christmas? What are the chances of that happening?

Mr. Foster: The right hon. Gentleman knows the situation well from his own experience and from his experience as Chairman of the Select Committee. I agree entirely with his assessment that it is in the Government of Sri Lanka’s interest to allow open access to the media. During the visit that I undertook two weeks ago, I had people from the BBC with me. It had full access to camps and individuals within those camps to do whatever reporting it felt necessary. Let me give the right hon. Gentleman an indication of the scale of the transfer that is needed. We have had a request from the International Organisation for Migration for transport assistance to help 41,000 people from the camps go back to Mannar, Mullaitivu and Kilinochchi, in addition to the 32,000 whom we know left the camps in September.

Mr. Eddie McGrady (South Down) (SDLP): I had the very distressing experience with the all-party group of visiting the camps at Menik farms zones 2 and 3 at Vavuniya. In spite of that distressing aspect, there was an uplifting side to the visit because of the attitude of the people and their hope for the future. Will the Minister ensure that any aid that is forthcoming from the Government is directed primarily at the welfare of the people in the camps and their displacement back to their own homes, which have been out of reach, to be joined with their families? Secondly—

Mr. Speaker: Order. I do not wish to be discourteous to the hon. Gentleman, but I think that one question will do.

Mr. Foster: When I was in Sri Lanka, I made it clear to the Government that from the end of this year, when the monsoon season was brought to a conclusion, we would no longer be funding aid for closed camps and that our aid would be directed towards facilitating movement from the camps. That includes the de-mining to which I have referred and means that I can announce £250,000 for predictable, safe and dignified transport for people from the camps back to host communities, as well as a further £220,000 to the Food and Agriculture Organisation to provide bushels of rice seeds to enable people to have a decent livelihood when they get back to their homes.

Mr. Geoffrey Clifton-Brown (Cotswold) (Con): The Minister has confirmed this morning that a package of rehabilitation measures is being put in place by the Department. That is welcome, but he has also confirmed that emergency aid will be redirected away from the camps. The Government also voted against the $2.5 billion International Monetary Fund package in July and are now considering ending the EU’s special trade privileges that the hon. Member for Mitcham and Morden (Siobhain McDonagh) mentioned. Is that really the most constructive way to persuade the Sri Lankan Government to promote a long-term reconciliation process, and to meet their stated pledge that 80 per cent. of displaced people should be returned by Christmas? That is what members of the Sri Lankan diaspora, and all Sri Lankan people in the UK, desperately want.

Mr. Foster: We were speaking up for all the people I saw in the camps two weeks ago. It was clear that they wanted to be returned to their homes as quickly as possible, but the nature of the closed camps, with their restrictions and military oversight, is wholly wrong. That is why our assistance will be geared to the de-mining, transport and livelihood programmes, as they will enable people to move safely and securely from the camps back to their homes, where they will be able to get on with their lives. I think that that is what the diaspora community here in the UK wants to hear.

ஒக்ரோபர் 22ல் அமெரிக்க இராஜாங்க அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையின் முக்கிய சாரம்:

III. Executive Summary

This report is submitted pursuant to the Joint Explanatory Statement accompanying the Supplemental Appropriations Act, 2009 (P.L. 111-32), which directed the Secretary of State to submit a report ―detailing incidents during the recent conflict in Sri Lanka that may constitute violations of international humanitarian law or crimes against humanity, and, to the extent practicable, identifying the parties responsible.‖ The alleged incidents set forth herein occurred in the context of the final months of an armed conflict between the Government of Sri Lanka (GSL) and the Liberation Tigers of Tamil Eelam (LTTE), which has been listed as a terrorist organization by the United States since 1997. While the conflict lasted intermittently for 25 years, this report focuses on incidents that occurred from January 2009, when fighting intensified, through the end of May 2009, when Sri Lankan government forces defeated the LTTE. It does not provide, nor is it intended to be, a comprehensive portrayal of the conflict.

The United States recognizes a state’s inherent right to defend itself from armed attacks, including those by non-state actors such as terrorist groups. The United States also expects states and non-state actors to comply with their international legal obligations. This report compiles alleged incidents that transpired in the final stages of the war, which may constitute violations of international humanitarian law (IHL) or crimes against humanity and related harms. The report does not reach legal conclusions as to whether the incidents described herein actually constitute violations of IHL, crimes against humanity or other violations of international law. Nor does it reach conclusions concerning whether the alleged incidents detailed herein actually occurred.

The report addresses the following categories of incidents:

Children in armed conflict—According to reports, on numerous occasions during the January to May 2009 reporting period the LTTE took both male and female children, some as young as 12, to join LTTE cadres.

Harm to civilians and civilian objects—The State Department has not received casualty estimates covering the entire reporting period; sources alleged that a significant number of deaths and injuries incurred at the time of attack were likely never recorded. Senior Sri Lankan officials made repeated public statements denying that the GSL was shelling the NFZ or targeting hospitals and was not responsible for any civilian casualties. However, sources alleged that the majority of shelling in the NFZ was from GSL forces. The GSL announced that it would observe a 48-hour ceasefire on two occasions. The stated aim of these was to allow civilians to move into areas in which they would not be subject to shelling. Incident reports suggest, however, that the GSL may have begun shelling before the end of the second 48-hour ceasefire. Reports also indicated that the LTTE forcibly prevented the escape of IDPs and used them as ―human shields‖.

Killing of captives or combatants seeking to surrender—A number of sources alleged that the GSL committed unlawful killings. Multiple reports alleged that in the final few days of fighting, senior LTTE leaders contacted international representatives in an effort to broker a surrender but were killed after they allegedly reached a surrender agreement with the GSL.

Disappearances—According to reports, GSL forces or GSL-supported paramilitaries abducted and in some instances then killed Tamil civilians, particularly children and young men. Sources reported that these individuals were taken to undisclosed locations without any further information being provided to relatives. IDP checkpoints and camps were alleged to be particularly vulnerable areas, with a heavy military presence hindering the ability of international organizations to conduct protection monitoring and confidential IDP interviews.

Humanitarian conditions—Reports include instances of severe food shortages; malnutrition, particularly among the very young and old; as well as surgeries being performed with little or no anesthetic. The GSL pledged to provide sufficient food and medical supplies to people in IDP camps and to those trapped in the NFZ. However, most reports point to significant gaps between food, medicine, and clean water needs and the available supplies in the NFZ and IDP camps.

அறிக்கையை முழுமையாக வாசிக்க:

லண்டனில் அமைச்சர் திஸ்ஸ விதாரனவுக்கு காரசாரமான விருந்து : த ஜெயபாலன்

Tissa_Vitharana_Profஒக்டோபர் 18ல் அமைச்சர் திஸ்ஸ விதாரனவுடனான கேள்வி நேரம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கேள்வி நேரத்திற்கு முன்னர் மதிய உணவு பரிமாறப்பட்டது. மதிய உணவு காரமாக இல்லாவிட்டாலும் உணவிற்குப் பின்னர் இடம்பெற்ற கேள்வி நேரம் ‘யாழ்ப்பாண மிளகாய்த்தூள்’ போட்டது போன்ற காரத்துடன் அமைந்தது. மதிய உணவின் போதிருந்தே அமைச்சர் கேள்விகளுக்கும் கருத்துகளுக்கும் முகம் கொடுக்க வேண்டி இருந்தது. ‘இடதுசாரிப் பாரம்பரியத்தில் வந்த நீங்கள் எப்படி இனவாத சக்திகளின் கை ஓங்கியுள்ள அரசின் அங்கமாக இருக்கின்றீர்கள்?’ என்றது முதல் ‘ஏபிஆச்சி தீர்வுத் திட்டம் குப்பைக் கூடையினுள் செல்லப் போகின்றது’ என்பதுவரை பல கேள்விகள் எழுப்பப்பட்டது.

ஏபிஆர்சி குழுவில் முன்னர் அங்கம் வகித்த எஸ் தவராஜா இக்கேள்வி நேரத்திற்குத் தலைமை தாங்கினார். ராஜேஸ் பாலாவின் குறுகிய அறிமுகத்துடன் நிகழ்வு ஆரம்பமாகியது. கேள்விகளை அரசியல் தீர்வு என்ற வரையறைக்குள் வைத்திருக்க வேண்டும் என அவர் வரையறை செய்திருந்த போதும் கேள்விகள் பல அம்சங்களிலும் எழுப்பப்பட்டது. ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு, ஏபிஆர்சி தீர்வுச் செயன்முறையில் நம்பிக்கை கொள்ள வேண்டும், அரசு வன்னி முகாம் மக்களை விரைவில் மீள்குடியமர்த்துவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது, 30 ஆண்டுகால யுத்தம் அண்மையிலேயே முடிந்துள்ளதால் அரசு சமாதானச் சூழ்நிலையை ஏற்படுத்துவதற்கும் இன்னமும் காலம் அவசியப்படுகின்றது போன்ற கருத்துக்களே அமைச்சரின் பேச்சிலும் பதில்களிலும் தொனித்தது.

புலம்பெயர்ந்த தமிழர்கள் புலிகளுடைய யுத்தத்திற்கு ஆதரவு வழங்கினர், புலம்பெயர்ந்த தமிழர்கள் வன்னி முகாம்களில் உள்ள மக்களுக்கு உதவத் தவறிவிட்டனர் போன்ற குற்றச்சாட்டுகளையும் அமைச்சர் திஸ்ஸ விதாரன அங்கு தெரிவித்தார். மற்றுமொரு சமயத்தில் வெறும் விமர்சனங்களாக அல்லாமல் விமர்சனங்களை ஆரோக்கியமாக முன்வைத்து காத்திரமான முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

அமைச்சரின் கருத்துக்களில் வந்திருந்த பெரும்பான்மையினர் உடன்படாத நிலையில் ஒருவர் மாறி ஒருவராக இலங்கை அரசின் இனவாத செயன்முறைகள் பற்றியும் அரசியல் தீர்வை அரசு தட்டிக்கழிப்பதைப் பற்றியும் கேள்வி எழுப்பினர். (இங்கு தேசம்நெற் வாசகர்களால் முவைக்கப்பட்ட கேள்விகளும் அமைச்சரிடம் கேட்கப்பட்டது. கேள்வி பதில்கள் முழுமையாக விரைவில் தரப்படும்.)

மதிய உணவு முதல் ஐந்து மணிநேரம் இடம்பெற்ற இச்சந்திப்பில் அமைச்சரின் கருத்துடன் உடன்பட்டு ஒரே ஒருவரே தனது கருத்தினை முன்வைத்தார். இவர் இலங்கையில் இன சமத்துவம் என்பது கடைப்பிடிக்கவில்லை எனவும் குறிப்பாக தமிழ் தலைமைகளும் இனவாதக் கருத்துக்களை வெளியிடுவதாக அவர் குற்றம்சாட்டினார்.

வன்னி முகாம் மக்களின் நிலைதொடர்பாக அங்கு எழுப்பப்பட்ட கேள்விகள் சிலவற்றுக்கு சபையில் இருந்த துணைத் தூதுவர் ஹம்சா பதிலளித்தார். வன்னி முகாம்களில் உலக உணவுத்திட்டம், ஹரித்தாஸ் போன்ற சர்வதேச என்ஜிஓ க்கள் உட்பட 53 என்ஜிஓக்கள் இலங்கையில் செயற்படுவதாகவும் மே 18க்குப் பின் பிபிசி போன்றவற்றின் ஊடகவியலாளர்கள் உட்பட 300 ஊடகவியலாளர்கள் வன்னி முகாம்களுக்கு சென்று வந்தள்ளாதாகக் கூறினார். ஆனால் இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர்களை அரசு வன்னி முகாம்களுக்குச் செல்ல அனுமதிக்கவில்லை. துணைத்தூதுவர் ஹம்சா மேலும் குறிப்பிடுகையில் 70 000 வன்னி முகாம்களில் உள்ள மக்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் இவ்வாண்டு முடிவிற்குள் பெரும்பாலானவர்கள் குடியமர்த்தப்பட்டு விடுவார்கள் என்றும் அடுத்த ஆண்டின் முற்பகுதிக்குள் வன்னி முகாம்கள் மூடப்பட்டுவிடும் என்றும் தெரிவித்தார்.

நிகழ்ச்சிகளின் இறுதியாக சிங்கள ஊடகவியலாளர் ஒருவர் ஊடகவியலாளர் திஸ்ஸநாயகத்திற்கு வழங்கப்பட்ட தண்டனை பற்றிக் குறிப்பிட்டு அமைச்சர் வெளியிட்ட கருத்துக்களுடன் முரண்பட்டதுடன் ‘திஸ்ஸநாயகத்தின் மீது தொடரப்பட்ட வழக்கு முற்றிலும் சோடிக்கப்பட்ட வழக்கு’ எனக் குற்றம்சாட்டினார். மேலும் ‘திஸ்ஸநாயகம் புலிகளிடம் நிதிபெற்றதாகக் குற்றம்சாட்டப்பட்ட காலப்பகுதியில் புலிகள் இலங்கையில் தடை செய்யப்பட்டு இருக்கவில்லை’ என்றும் அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் தொடர்கையில் ‘ஜேவிபி தலைவர் ரோகன விஜயவீர கொல்லப்பட்ட போது அவருடைய மனைவி கொல்லப்படவில்லை. ஆனால் வே பிரபாகரன் சரணடைந்த பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவருடைய முத்த பிள்ளைகள் கொல்லப்பட்டதற்கு நியாயம் கற்பிக்கலாம். ஆனால் மனைவி மதிவதனி கொல்லப்பட்டார். 11 வயது மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டார். இது எந்தவகையில் நியாயம்’ என அவர் கேள்வி எழுப்பியதுடன் ‘இவர்கள் தமிழர்கள் என்பதற்காகவே அவர்கள் கொல்லப்பட்டனர்’ எனவும் அவ்வூடகவியலாளர் குற்றம்சாட்டினார்.

கூட்டத்தின் இடையே இவ்வூடகவியலாளர் தனது கேள்வியை எழுப்பிய போது அவர் கூட்டவிதிமுறைகளை மீறியதாக அவர் தொடர்ந்து கேள்வியை எழுப்ப அனுமதிக்கப்படவில்லை. அதனால் பின்னர் அவருடைய கேள்வி இறுதிக் கேள்வியாக அமைந்தது. அமைச்சருடைய பதில்கள் தன்னை ஆத்திரமூட்டுவதாக அமைந்ததால் தான் இடையே குறிப்பிட்டதாகக் கூறிய அவ்வூடகவியலாளர் மேலுள்ள கேள்வியை எழுப்பினார். ஆனால் நிகழ்வுக்கு தலைமையேற்ற எஸ் தவராஜா இக்கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளிக்க வேண்டியதில்லை எனத் தெரிவித்தார்.

இதனை தேசம்நெற் ஆசிரியர் த ஜெயபாலன் உடனடியாகக் கண்டித்ததுடன் அவருடைய கேள்விக்கு பதிலளிக்க வேண்டியது அவசியம் என்ற கோரிக்கையையும் வைத்தார். அதற்குள்ளாக மண்டபம் கையளிக்கப்பட வேண்டிய நிலையில் கூட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. பலரும் இக்கேள்விக்கு பதிலளிக்காமல் தட்டிக்கழிக்கப்பட்டதைக் கண்டித்தனர். எஸ் தவராஜாவின் அந்த முடிவு விமர்சனத்திற்குள்ளானது.

மதிய உணவில் 25 வரையானோரும் கேள்வி நேரத்தில் 70 வரையானோரும் கலந்துகொண்டனர். பொதுவாக விடுக்கப்பட்ட அழைப்பிற்கு தங்கள் வரவை உறுதிப்படுத்தியவர்கள் மட்டும் நிகழ்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர். அமைச்சருக்கான பாதுகாப்பு ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டு இருந்தது. இந்நிகழ்வு ரி கொன்ஸ்ரன்ரைன் ராஜேஸ் பாலா எஸ் தவராஜா ஆகியோரால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் நிகழ்வின் ஆரம்பத்தில் லிற்றில் எய்ட் ஏற்பாடு செய்ததாக அறிவிக்கப்பட்டது தன்னுடைய தவறு என்றும் அதற்கு வருந்துவதாகவும் ரி கொன்ஸ்ரன்ரைன் தெரிவித்தார்.

வழமையாக கேள்விகளுக்கு முகம்கொடுக்காத கேள்வி கேட்கப்படுவதை அசௌகரியமாகக் காண்கின்ற ஒரு சூழலே தமிழ் மக்கள் மத்தியில் காணப்பட்டு வந்தது. குறிப்பாக தமிழ் அரசியல் தலைமைகள் எப்போதும் தங்களை கேள்விக்கு உட்படுத்துவதைத் தவிர்த்தே வந்திருந்தன. தாங்கள் பதிலளிக்க விரும்பாத கேள்விகள் கேட்கப்படுவதை அவர்கள் விரும்புவதில்லை. ஆனால் அமைச்சர் திஸ்ஸ விதாரனவை லண்டன் தமிழர்கள் கேள்விக்கு உட்படுத்தியதுடன் அரசு பற்றிய தங்கள் அச்சத்தையும் நம்பகத் தன்மையின்மையையும் உறுதிபடத் தெரிவித்தனர். இலங்கை அரச பிரதிநிதிகள் தமிழ் மக்களது கேள்விக்கு நேரடியாக முகம்கொடுக்க வைப்பது அவசியமாகின்றது. ஊடகவியலாளர்கள் தங்கள் தொழில்சார்ந்து அரசைக் கேள்விக்கு உட்படுத்தும் அதே சமயம் சாதாரண பொதுமகனும் தனது உணர்வு சார்ந்து அவர்களைக் கேள்விக்கு உள்ளாக்கும் வாய்ப்புகள் இதன் மூலம் ஏற்படுத்தப்படுகின்றது.

பேராசிரியர் திஸ்ஸ விதாரனவுடன் கேள்வி நேரம் : ரி கொன்ஸ்ரன்ரைன்

Tissa_Vitharanaஒக்ரோபர் 18ல் பேராசிரியர் திஸ்ஸ விதாரணவுடனான கேள்வி நேரம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மே 18 நிகழ்வுகளுக்குப் பின் இலங்கை அமைச்சர் ஒருவர் புலம்பெயர்ந்து வாழும் சாராதண தமிழர்களைச் ஒரு பொது இடத்தில் சந்திக்கின்ற ஒரு சந்திப்பாக இது அமைய உள்ளது.

இச்சந்திப்பு அமைச்சர் திஸ்ஸ விதாரண தனது கருத்துக்களைத் தெரிவித்துவிட்டுச் செல்லும் சந்திப்பாக அல்லாமல் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அரசியல் நடவடிக்கைகள் தொடர்பாக புலம்பெயர்ந்த தமிழர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் முகம் கொடுக்கின்ற வகையிலேயே  ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்றது. மூடிய கதவுகளுக்குள் அரசியல் நடத்துவதும் சிலர் தங்களை அரசியல் முகவர்களாக புரட்சியின் முகவர்களாக காட்டி மேதாவித்தனம் செய்வதற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். பத்திரிகையாளர்களும் தங்களை அரசியல் மேதாவிகளாகக் காட்டிக்கொள்வோரும் தான் அரசியல் பேசுகின்ற நிலையைக் கடந்து சாதாரண ஒரு புலம்பெயர்ந்த தமிழனும் இலங்கை அரசை நோக்கி கேள்விகளை எழுப்புவதற்கு இச்சந்திப்பு இடமளிக்கும்.

தேசம்நெற் வாசகர்கள் தங்கள் கேள்விகளைப் பதிவு செய்யும் பட்சத்தில் அக்கேள்விகளுக்கான பதிலைப் பெற்று தேசம்நெற்றில் பிரசுரிக்கவும் ஏற்பாடு செய்யப்படும். ஆகையால் தேசம்நெற் வாசகர்கள் தங்கள் கேள்விகளைப் பதிவிடவும்.

ஒக்ரோபர் 18ல் நடைபெறவுள்ள சந்திப்பில் கேள்வி நேரத்தில் பங்கேற்க விரும்புபவர்கள் என்னுடன் தொடர்பு கொண்டு உங்கள் வரவை உறுதிப்படுத்தவும். மட்டுப்படுத்தப்பட்ட இருக்கைகளே இருப்பதால் தங்கள் வரவை உறுதிப்படுத்தாதவர்களை அனுமதிக்க முடியாது என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

என்னுடைய தொடர்புகளுக்கு :
ரி கொன்ஸ்ரன்ரைன்
tarrin@desilugroup.com

இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் மீது புலம்பெயர்ந்த தமிழர்கள் செலுத்தும் ஆதிக்கம் : த ஜெயபாலன்

Sturattguard_Conference‘தமிழ் மக்களின் அரசியலை நாங்களே நிர்ணயிக்கின்றோம்’ என்ற வகையில் ஏட்டிக்குப் போட்டியான அரசியல் போக்கு எண்பதுகளில் விடுதலை இயக்கங்களின் உருவாக்கத்துடன் ஆரம்பமாகியது. இப்போக்கு இன்று சர்வதேசம் முழுவதும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களால் காவிச்செல்லப்பட்டு புலம்பெயர்ந்த தமிழர்களே தமிழ் மக்களின் அரசியலை நிர்ணயிக்கின்றனர் என்ற நிலையில் கொண்டுவந்து நிறுத்தி உள்ளது. இந்த ஏட்டிக்குப் போட்டியான அரசியல் போக்கு தமிழ் மக்களை புள்ளிவிபரப்படியும் புவியியல் ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் மிக மோசமான பலவீனமான நிலைக்குத் தள்ளியுள்ளது. இத்துடன் புலம்பெயர்ந்த தமிழர்களின் எழுந்தமானமான, மேலெழுந்தவாரியான அரசியல் முன்னெடுப்புகளும் தமிழ் மக்களை அரசியல் ரீதியாக பலவீனப்படுத்துவதற்கே வழிவகுக்கின்றது. இந்தப் பின்னணிகளில் கொழும்பு 21 குழு ஒக்ரோபர் 10ல் சுவிஸில் ஒரு கூட்டத்தை ஒழுங்கு செய்துள்ளது.

இக்கட்டுரை இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் மீது புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் செலுத்தும் தாக்கம் பற்றிய முதற்படிநிலை பதிவு மட்டுமே. இது பற்றிய விரிவான ஆய்வுகளும் மீளாய்வுகளும் எதிர்காலத்தில் அவசியமாகின்றது.

புலம்பெயர்ந்த தமிழர்களின் அரசியல் செயற்பாடுகளை நான்கு கால கட்டங்களாக வகுக்க முடியும்.
1. 1970க்களின் இறுதிப்பகுதி முதல் 1980க்களின் இறுதிப்பகுதி வரை. – தமிழீழ விடுதலை இயக்கங்களின் உருவாக்கமும் அவற்றிடையே ஏற்பட்ட முரண்பாடுகளும்.
2. 1990க்களின் ஆம்பம் முதல் 2004 முற்பகுதிவரை. – தமிழீழ விடுதலைப் புலிகள் ஏனைய அரசியல் சக்திகளை அழித்து தங்களை ஏகபிரதிநிதிகளாக அறிவித்தது முதல் ஒஸ்லோ உடன்பாட்டால் ஏற்பட்ட ‘சமாதானம்’ நிலவிய காலம்.
3. 2004 இரண்டாவது காலாண்டு முதல் 2009 இரண்டாவது காலாண்டு வரை. – கேர்ணல் கருணா தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்து பிரிந்தது முதல் தமிழீழ விடுதலைப் புலிகள் முள்ளிவாய்காலில் தங்கள் முடிவைச் சந்தித்தது.
4. 2009 நடுப்பகுதி முதல் தற்போது வரை. – மே 18 2009ல் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனின் மறைவுக்குப் பின்.

1. 1970க்களின் இறுதிப்பகுதி முதல் 1980க்களின் இறுதிப்பகுதி வரை. – தமிழீழ விடுதலை இயக்கங்களின் உருவாக்கமும் அவற்றிடையே ஏற்பட்ட முரண்பாடுகளும்.

1970க்களிலேயே தமிழ் மக்கள் மேற்கு நோக்கிய புலம்பெயர்வுகளை ஆரம்பித்தனர். இக்கட்டத்தில் புலம்பெயர்ந்தவர்கள் பெரும்பாலும் தமிழ் சமூகத்தின் மேல்தட்டுப் பிரிவினரே. இவ்வாறு புலம்பெயர்ந்தவர்கள் தமிழ் மக்களின் விடுதலை நோக்கிய செயற்பாடுகளிலும் தங்களை இணைத்துக் கொண்டனர். தமிழ் விடுதலை இயக்கங்களில் இவர்களின் செல்வாக்கு குறிப்பிடத்தக்கது. விடுதலைப் புலிகளின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம், ஈரோஸ் அமைப்பின் ஸ்தாபகர் ரட்ணசபாபதி, ஆரம்பத்தில் புளொட் அமைப்புடன் இணைந்து செயற்பட்டு பிற்காலங்களில் புளொட்டில் இருந்து வெளியேறிய தீப்பொறிக்குழுவுடன் செயற்பட்ட மகாஉத்தமன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். (இவர்கள் மூவரும் 2006 பிற்பகுதியில் நோய் காரணமாக மரணமடைந்தனர்.)

தற்போதைய புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன், ஈரோஸ் அமைப்பின் முக்கிய உறுப்பினர்கள், இளைஞர் பேரவை, மாணவர் பேரவையில் முன்னணி வகித்தவர்கள் மேற்கு நாடுகளுக்கு ஆரம்ப காலங்களிலேயே புலம்பெயர்ந்தனர். இவர்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் கணிசமான ஆளுமையைக் கொண்டிருந்தனர். பாலஸ்தீன விடுதலை அமைப்புடன் தொடர்புகளை வலுப்படுத்தி தமிழ் இயக்கங்களின் உறுப்பினர்களை பயிற்சிக்கு அனுப்பியவர் ஈரோஸ் அமைப்பின் ஸ்தாபகர் ரட்ணசபாபதி. இராணுவ வழிகளில் மட்டமல்ல தமிழ் இயக்கங்களின் அரசியல் நடவடிக்கைகளுக்கும் புலம்பெயர்ந்த தமிழர்கள் பங்களித்திருந்தனர்.

ENF Leadersஇருந்தாலும் தொடர்ச்சியாக இளைஞர் இயக்கங்களுக்கு இடையே ஏற்பட்ட முரண்பாடுகள் புலம்பெயர்ந்து வாழ்ந்த தமிழ் அரசியல் ஆர்வலர்கள் மத்தியிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதனால் பலர் தங்கள் அரசியல் செயற்பாடுகளில் இருந்து தங்களை அன்னியப்படுத்திக் கொண்டனர். தொடர்ந்தும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் அணி பிரிகின்ற போக்கு புலம்பெயர்ந்த தளத்திலும் ஏற்பட்டது.

குறிப்பாக உமா – பிரபா பிரிவும் அதனைத் தொடர்ந்த சுந்தரம் படுகொலையும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பாண்டிபஜார் துப்பாக்கிச் சூட்டையும் வரலாறு இயக்க மோதலின் குறியீடாகப் பதிவாக்கிக் கொண்டது. உமா – பிரபாவை ஒன்றினைக்கிறோம் என்று புலத்தில் இருந்து இந்தியா சென்ற அன்ரன் பாலசிங்கம், உகா உத்தமன் போன்றோர் பின்னர் முறையே தமிழீழ விடுதலைப் புலிகளிலும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்திலும் தங்களை இணைத்துக் கொண்டனர். களத்தில் ஏற்பட்ட முரண்பாடுகளைத் தீர்க்கச் சென்றவர்கள் பிற்காலங்களில் அந்த முரண்பாடுகளின் அங்கமாகினர். அந்த முரண்பாடுகள் களையப்படுவதற்கு முயற்சித்த இன்னும் சிலர் பலவீனமான தளத்திலேயே நின்றனர்.

ஆரம்ப காலங்களில் பல்வேறு அமைப்புக்கள் வேற்றுமையில் ஒற்றுமை கொண்டு லண்டனில் பல போராட்ட முன்னெடுப்புகளை மேற்கொண்டனர். இம்முயற்சிகள் இயக்க மோதலால் ஏற்பட்ட பிளவுகளால் பிற்காலங்களில் பிசுபிசுத்துப் போனது. பலர் அரசியல் செயற்பாடுகளில் இருந்து அஞ்ஞாதவாசம் சென்றனர்.

2. 1990க்களின் ஆம்பம் முதல் 2004 முற்பகுதிவரை. – தமிழீழ விடுதலைப் புலிகள் ஏனைய அரசியல் சக்திகளை அழித்து தங்களை ஏகபிரதிநிதிகளாக அறிவித்தது முதல் ஒஸ்லோ உடன்பாட்டால் ஏற்பட்ட ‘சமாதானம்’ நிலவிய காலப் பகுதி.

1990க்களைத் தொடர்ந்தே பெருமளவிலான தமிழர்கள் மேற்கு நாடுகளை நோக்கிப் புலம்பெயர்ந்தனர். வடக்கு கிழக்கின் குறிப்பாக யாழ் மத்தியதர வர்க்கத்தினர் மேற்கு நாடுகள் எங்கும் பரவி தங்களை ஸ்தீரப்படுத்திக் கொண்டனர். குறிப்பாக வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய வடமாகாணத்தின் யாழ்மாவட்டம் நீங்கலான சனத்தொகைக்கு ஒப்பானவர்கள் ரொறன்ரோவின் ஸ்காபுறோ பகுதியில் வாழ்கின்றனர். இலங்கையில் இருந்து மேற்கு நாடுகளுக்கு புலம்பெயர்ந்த தமிழர்களது சனத்தொகையும் இலங்கையின் வடக்கு கிழக்கில் வாழ்கின்ற தமிழர்களது சனத்தொகையும் அண்ணளவாக ஒரே அளவினதே.

1980க்களின் பிற்பாடு பிறந்த இளம்சமூகத்தினர் தமிழீழ விடுதலைப் புலிகள் தவிர்ந்த ஏனைய அமைப்புகள் பற்றி பெரிதளவில் அறிந்திருக்கவில்லை. அறிவதற்கும் பெரிதாக எதுவும் இருக்கவும் இல்லை. தமிழீழ விடுதலைப் புலிகள் தாங்களே கேள்விகளுக்கு அப்பாற்பட்ட ஏகதலைமை என்பதை தாயகத்தில் மட்டுமல்ல புலம்பெயர்ந்த தேசங்களிலும் நிறுவிக் கொண்டனர். புலிகளிடம் இருந்த அராஜகமும் வன்முறையும் புலம்பெயர்ந்த தேசங்களிலும் பரவி இருந்தது. சபாலிங்கம், ஈழமுரசு ஆசிரியர் உட்பட மூவர் தமிழீழ விடுதலைப் புலிகளால் பாரிஸில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இக்கொலைகளை விடவும் வன்முறை நடவடிக்கைகளிலும் இவர்கள் ஈடுபட்டிருந்தனர். கனடாவில் நூலக எரிப்பு, ஊடகவியலாளரைத் தாக்கியது என இந்த வன்முறைப் போக்கு பரவலாகக் காணப்பட்டது.

Protest_Londonஇருந்தும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தாயகத்தில் இருந்த ஆதரவிலும் பார்க்க புலம்பெயர்ந்த தேசங்களில் இருந்த ஆதரவு மிக மிக அதிகம் என்று கூறினால் அது மிகையாகாது. இந்த ஆதரவு அலையில் தமிழீழ விடுதலைப் புலிகளால் பாதிக்கப்பட்ட இயக்க உறுப்பினர்கள் பலரும் கூட அள்ளுண்டனர். அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளை ஏகதலைமையாகவும் வே பிரபாகரனை தேசியத் தலைவராகவும் ஏற்றுக்கொண்டனர். வன்முறைப் போக்கும் அராஜகமும் ஏற்றுக் கொள்ளப்பட்ட பண்புகளாயின.

மேற்கு நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியலை முன்னெடுத்தவர்கள் பெரும்பாலும் மாற்று இயக்கங்களில் இருந்து வந்தவர்கள். அல்லது புலிகள் மீது கடுமையான விமர்சனங்களைக் கொண்டிருந்தவர்களே. கவிஞர் சேரன், கவிஞர் கி பி அரவிந்தன், சிவரஞ்சித், எஸ் கே ராஜன், சிவா சின்னப்பொடி என இந்தப் பட்டியல் நீண்டது. புலம்பெயர்ந்த மண்ணில் புலிகளின் பிரச்சாராப் பீரங்கிகளாக இவர்களே நின்றனர்.

தாயக மக்களுடன் எவ்வித அரசியல் உரையாடலையும் கொண்டிராத தமிழீழ விடுதலைப் புலிகள் விரும்பியோ விரும்பாமலோ புலம்பெயர்ந்த தமிழர்களுடன் உரையாட நிர்ப்பந்திக்கப்பட்டனர். புலம்பெயர்ந்த தமிழர்களைப் பற்றி கேவலப்படுத்தி வசைபாடிய புலிகளின் கவிஞர் புதுவை இரத்தினதுரை தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டார். ஏனைய விடுதலை அமைப்புப் போராளிகளைக் கொலை செய்ததற்கும், முஸ்லீம் மக்களை வடக்கில் இருந்து விரட்டியதற்கும் கிழக்கில் படுகொலைகள் செய்ததற்கும் எப்போதும் மன்னிப்புக் கேட்காத தமிழீழ விடுதலைப் புலிகள் டொலர்களுக்கும், பவுண்ஸ்க்கும், பிராங்கிற்கும், மார்க்கிற்கும், ….. பணிந்தனர். மாவீரர் தின உரைகளில் புலம்பெயர்ந்த மக்களுக்கு ‘தேசியத் தலைவனே’ வாழ்த்துப்பா பாடினார். மக்களைக் காணாத தலைவர் வே பிரபாகரன் மேற்குநாடுகளில் இருந்து செல்லும் வர்த்தகப் புள்ளிகளுடன் படம் எடுத்துக்கொண்டார். மேற்கு நாடுகளில் பணம்படைத்த பலருக்கு இருந்த ஒரே தகுதி தலைவருடன் படம் எடுத்துக் கொண்டது தான்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையை அவர்களது நடவடிக்கைகளை ஒரு போதும் கேள்விக்கு உட்படுத்தாத புலம்பெயர்ந்த புலி ஆதரவுத் தமிழர்கள், தங்களை புலிகளின் ஆதரவாளர்களாகவும் தமிழர்களின் மீட்பர்களாகவும் ஒரு மாயையைக் கட்டி அமைத்தனர். இங்கு புலிகளின் மாயைக்கு புலம்பெயர்ந்த தமிழர்களும் புலம்பெயர்ந்த தமிழர்களின் மாயைக்கு புலிகளும் ஒருவருக்கு ஒருவர் துணையாகி தமிழ் மக்கள் மத்தியில் இரு அரை ஒட்டுண்ணிகளாக இருந்தனர். இவ்விரு அரை ஒட்டுண்ணித் தன்மையின் மிகமோசமான செயற்பாடுகள் இவர்களுக்கு ஆதாரமாக இருந்த தமிழ் மக்கள் என்ற விருட்சத்தை வேரறுப்பதற்கே இட்டுச்சென்றது. இந்த ஆபத்தான நிலையின் குணங்குறிகள் வெளியே தென்பட்ட போதும் தமிழீழ விடுதலைப் புலிகளையும் புலம்பெயர்ந்த புலி ஆதரவுத் தமிழர்களையும் சுற்றிப் புனையப்பட்டு இருந்த மாயைகள் வரவிருந்த ஆபத்தை காணவிடாது தடுத்தது.

புலம்பெயர்ந்த புலி ஆதரவுத் தளம் என்பது சிந்திக்கத் தெரியாத அல்லது சிந்திக்க மறுத்த ஒரு கூட்டமாகவே இயங்கியது. இன்னமும் இயங்க முற்படுகிறது. இவர்கள் தேசியத் தலைவர் மீண்டும் வந்து ‘உள்ளுக்கு விட்டு அடிப்பார்’ என்ற ஆவலுடன் இன்னுமொரு மாவீரர் தினத்திற்காகக் காத்திருக்கின்றனர். அதனை ஏற்க மறுக்கும் சிந்திக்க முற்பட்டவர்களே இப்போது கடைசியாகத் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் துரோகிப்பட்டியலில் சேர்க்கப்பட்டுக் கொண்டுள்ளனர். ‘மாவீரர் தினத்தன்று தலைவரை நினைத்தபடி நன்றாக கண்ணயர்ந்து தூங்கினால் நிச்சயம் தலைவர் வருவார்?’ என்ற நம்பிக்கையைத் தவிர வேறு எதைத்தான் நாம் அவர்களுக்கு வழங்க முடியும்.

இக்காலகட்டத்தில் புலம்பெயர்ந்த நாடுகளில் பெரும்பாலும் இரு முகாம்களே காணப்பட்டது. ஒன்று புலி ஆதரவு அணி மற்றையது புலி எதிர்ப்பு அணி. புலிகளுடைய ஆதிக்கம் மிகப் பலமாக இருந்ததால் புலி எதிர்ப்பு முகாம் ஓரணியில் நிற்க வேண்டிய புறச் சூழல் அன்று இருந்தது. சில தனி நபர் முரண்பாடுகள் ஆங்காங்கே இருந்தாலும் புலிகள் புலி எதிர்ப்பு அணிக்கு ஒரு வடிவம் கொடுத்திருந்தனர். ஆனாலும் இந்த புலி எதிர்ப்பு அணி தாக்கத்தை ஏற்படுத்துகின்ற ஒரு அரசியல் சக்தியாக இருக்கவில்லை. இலக்கியச் சந்திப்பு, பெண்கள் சந்திப்பு என்ற குறுகிய வட்டங்களுக்கு உள்ளேயேயும் அதன் வெட்டுக் குத்தகளுக்கு உள்ளேயுமே உழன்றனர்.

இக்காலகட்டத்தில் தங்களை இடதுசாரிகளாக அடையாளப்படுத்திய பலரும் பொது எதிரி இலங்கை அரசு என்ற நிலையிலேயே காணப்பட்டனர். இக்காலகட்டத்தில் புலி ஆதரவு புலி எதிர்ப்பு முகாம்களின் எல்லைகள் புலிகளைக் கொண்டே வரையறுக்கப்பட்டது. ஈரோஸ் தவிர்ந்த ஏனைய அமைப்புக்கள் புலி எதிர்ப்பு அணியிலேயே அடையாளம் காணப்பட்டனர். ஈரோஸ் அமைப்பினர் தொடர்ந்தும் புலிகளுடன் அடையாளம் காணப்பட்டனர்.

2002 ஒஸ்லோ உடன்பாட்டைத் தொடர்ந்து வன்னிக்கு சுற்றுலா சென்றவர்களின் எண்ணிக்கை ரொக்கற் வேகத்தில் அதிகரித்தது. முதலீடுகளும் அதிகரித்தது. அதனால் வெளிநாட்டுத் தொடர்புகளற்ற ஈழத் தமிழர்களின் கொள்வனவு சக்தி மிகவும் பாதிக்கப்பட்டது. புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் புலி ஆதரவு மேலும் வலுப்பெற்றது. புலம்பெயர் ஊடகங்கள் பெரும்பாலும் புலிகளின் பிரச்சாரப் பீரங்கிகளாக மாறின. மாற்றுக் கருத்துடையவர்கள் ஏனைய அரசியல் கட்சி உறுப்பினர்கள் படுகொலை செய்யப்பட்ட பொழுது அவையெல்லாம் புலம்பெயர்ந்த புலி ஆதரவு சக்திகளாலும் அதன் ஊடகங்களாலும் நியாயப்படுத்தப்பட்டன. சிறுவர்களை இயக்கங்களில் இணைப்பது, மோசமான வரி அறவீடு போன்ற சாதாரண மக்களைப் பாதிக்கின்ற விடயங்களைக் கூட புலம்பெயர்ந்த தமிழர்களும் ஊடகங்களும் நியாயப்படுத்தின. புலிகளிடம் எதேச்சதிகாரப் போக்கு காணப்பட்டாலும் அதனை மிக மோசமான மிலேச்சத்தனமான அமைப்பாக மாற்றியதில் புலம்பெயர்ந்த புலி ஆதரவுத் தமிழர்களுக்கும் அவர்களின் ஊடகங்களுக்கும் முக்கிய பங்கு உண்டு.

3. 2004 இரண்டாவது காலாண்டு முதல் 2009 இரண்டாவது காலாண்டு வரை. – கேர்ணல் கருணா தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்து பிரிந்தது முதல் தமிழீழ விடுதலைப் புலிகள் முள்ளிவாய்காலில் தங்கள் முடிவைச் சந்தித்தது.

Thesam_Mag_Coverதேசம் சஞ்சிகையின் 17வது இதழ் 2004 மார்ச் – ஏப்ரல் வெளிவந்தது. அதன் அட்டைப்படத் தலைப்பு ‘புலிக்குள் பூகம்பம் ஈழம் ஈடாட்டம்’. தேசம் சஞ்சிகையில் அதுவரை வெளியான தலைப்புகள் கட்டுரைகளில் மிகுந்த சர்ச்சைக்கு உள்ளான தலைப்பும் கட்டுரையும் அதுவே. தமிழீழ விடுதலைப் புலிகளின் அத்திவாரத்தை ஆட்டிய உடைவு. இந்த உடைவை தமிழீழ விடுதலைப் புலிகள் மூடிமறைத்து அதனை ஒரு சில தனிநபர்களின் பிரச்சினையாக பிரச்சாரப்படுத்தினர். தனது ஆதரவு சக்திகளுக்கு இனிப்புத் தடவிய மாத்திரைகளை வழங்கி, ‘எல்லாம் தலைவர் சரி செய்துவிடுவார்’ என்று நம்பிக்கை அளித்தனர். இந்த மாத்திரைகளை விழுங்கிய புலம்பெயர் புலி ஆதரவுத் தலைமை பொங்கு தமிழ் வைத்து, போர் முழக்கம் இட்டு, யுத்த மமதையில் திளைத்தனர். ஏற்கனவே வன்னி சென்று, புலித் தலைமையை வழிபட்டு ஆசிபெற்று வந்த பலர் மேற்குநாட்டுத் தலைநகர்களில் உருஆடினர் என்றால் மிகையல்ல.

மேற்கு நாடுகளில் வாழ்ந்த கிழக்கு மாகாணம் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத் தமிழர்கள் பெரும்பாலும் இது தொடர்பாக மௌனமாக்கப்பட்டனர். ஒரு பகுதியினர் மறைமுகமாக கருணாவிற்கு தங்கள் ஆதரவையும் வழங்கினார். புலம்பெயர் நாடுகளில் வாழ்ந்த புலிகள் மீது கடுமையான விமர்சனத்தை கொண்டிருந்த அணி கேர்ணல் கருணாவின் பிளவை தங்களுக்கு சாதகமாகக் கருதினர். அவர்கள் கேர்ணல் கருணாவுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கினர். கருணா பிளவடைந்த ஆரம்பகாலத்தில் வெளியான பெரும்பாலான அறிக்கைகள் லண்டனில் இருந்தே தயாரிக்கப்பட்டது. இந்த அறிக்கைகளைத் தயாரித்தவர்கள் பிற்காலங்களில் கேர்ணல் கருணாவின் கடத்தல் கொள்ளை கொலை போன்ற சம்பவங்களால் தங்களை ஓரளவு அந்நியப்படுத்திக் கொண்டாலும் கேர்ணல் கருணாவின் செயற்பாடுகளை விமர்சிக்கத் தயங்கினர். ஆனால் இன்னும் சிலரோ கருணாவுடன் அணி சேர்ந்து கொண்டனர்.

ஈஎன்டிஎல்எப், லண்டன் ரிபிசி – வி ராம்ராஜ், லண்டனில் புலிகளின் முக்கிய உறுப்பினராக செயற்பட்டு பின் எதிரணிக்குச் சென்ற ஆர் ஜெயதேவன், 1970க்களின் பிற்பகுதிகளில் லண்டனில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு பின் அரசியல் அஞ்ஞாதவாசம் சென்ற எஸ் கிருஸ்ணன், ஜனநாயகம் தலித்தியம் கிழக்கியம் என நீண்ட காலம் மாற்றுக் கருத்துத் தளத்தில் இயங்கிய பாரிஸ் எம் ஆர் ஸ்ராலின், முன்னாள் சுதந்திரக் கட்சி அமைப்பாளராக இருந்து பின்னர் வெளிநாட்டு முகவராகச் செயற்பட்டு தற்போது ஏசியன் ரிபியூனின் ஆசிரியராகச் செயற்படும் சுவிஸில் வாழும் கெ ரி ராஜசிங்கம் போன்றவர்கள் வெவ்வேறு காலகட்டங்களில் கேர்ணல் கருணாவுடன் தொடர்புகளை ஏற்படுத்தி இருந்தனர். கேணல் கருணா ஆரம்பத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடனேயே தொடர்பை ஏற்படுத்தி இருந்தார். அதன் பின் ரிபிசி வி ராம்ராஜின் தொடர்புடன் இந்தியா சென்றார். ஈஎன்டிஎல்எவ் – கேர்ணல் கருணா கூட்டு சிறிதுகாலம் ஓடியது. ஆனால் அக்கூட்டு உருவாகிய வேகத்தில் தகர்ந்தது. இலங்கை உளவுத்துறை நேரடியாக கேர்ணல் கருணாவுடன் தொடர்பை வலுப்படுத்தி கருணாவை இலங்கைக்கு அழைத்துச் சென்றது.

இக்காலகட்டத்தில் இலங்கையில் இடம்பெற்ற கடத்தல் கொள்ளை கொலைச் சம்பவங்களின் பின்னனியில் புலம்பெயர்ந்த புலி எதிர்ப்பணியில் இருந்த சிலர் நேரடியாகத் தொடர்புபட்டு இருந்தனர். பலர் அவற்றை நியாயப்படுத்தினர். அல்லது அவற்றை விமர்சிப்பதைத் தவிர்த்தனர். புலி ஆதரவு அணி மேற்கொண்ட அதே கைங்கரியங்களை கேர்ணல் கருணா மற்றும் ஆயுதக் குழுக்கள் தொடர்பாக புலி எதிர்ப்பணியின் ஒரு பகுதியினர் மேற்கொண்டனர். குறிப்பாக கேர்ணல் கருணா – பிள்ளையான் மோதலில் எஸ் கிருஸ்ணன் – கே ரி ராஜசிங்கம் போன்றவர்கள் நேரடியாகச் சம்பந்தப்பட்டும் இருந்தனர். ஏசியன் ரிபியூன் இணையத்திற்கு மகிந்த ராஜபக்ச அரசு நிதியுதவி வழங்குவது பற்றிய செய்திகள் தி ஐலண்ட் பத்திரிகையில் ஏற்கனவே வெளியாகி இருந்தது.

2004க்கும் 2009க்கும் இடையிலேயே தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவச் சமநிலையில் மாற்றம் ஏற்பட ஆரம்பிக்கின்றது. மாவிலாறு அணையை மூடி சிங்கள விவசாயக் கிராமங்களுக்கான நீர் விநியோகத்தை நிறுத்திய புலிகள் தங்கள் இராணுவ பலவீனத்தை அம்பலமாக்கினர். புலிகளுடைய பலவீனத்தை புலி எதிர்ப்பு இயக்கங்கள் தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு செயற்பட ஆரம்பித்தனர். நீண்டகாலமாக தாங்கள் முன்பு சார்ந்திருந்த இயக்கங்களை மறந்திருந்த புலம்பெயர்ந்து வாழ்ந்த ‘தோழர்கள்’ எல்லாம் தங்கள் இயக்க அடையாளங்களைத் தேட ஆரம்பித்தனர். இவர்கள் வன்னி மக்களுக்காக ஏதாவது கூட்டம் கூடியதாக எமக்கு அறியக்கிடைக்கவில்லை. ஆனால் கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலுக்கு பாரிஸில் கூட்டம் கூட்டப்பட்டது.

France_Delegation‘உயர்சாதியினர் எல்லோரும் ஊரைவிட்டு வந்துவிட்டார்கள் அங்கு தலித்துக்களே பெரும்பான்மையாக உள்ளனர்’ என ஐரோப்பாவில் மாநாடு கூட்டிய தலித் சமூக மேம்பாட்டு முன்னணியும் வன்னி மக்கள் தொடர்பாக மௌனமாகவே உள்ளது. தலித் சமூக மேம்பாட்டு முன்னணியின் முக்கியஸ்தர் (முன்னாள்) எம் ஆர் ஸ்ராலின் கிழக்கு முதலமைச்சரின் மதியுரைஞர் ஆன பிற்பாடு தலித் சமூக மேம்பாட்டு முன்னணி மகஜர் கொடுப்பதுடன் மட்டும் தனது நடவடிக்கைகளை மட்டுப்படுத்திக் கொண்டு விட்டது. ஜனநாயகம், விளிம்புநிலை மக்கள் எல்லாம் கிழக்கிசத்துடன் சமரசம் செய்து கொண்டுவிட்ட நிலையே உள்ளது.

இக்காகட்டத்திலேயே புலம்பெயர்ந்த புலி எதிர்ப்பு இயக்க அணிகள் இலங்கையில் காளான்களாக முளைவிட்டனர். ஈரோஸ் (பிரபா அணி), சிறிரெலோ போன்ற புதிய அமைப்புகள் உருவாக்கப்பட்டது. பிரபாகரன், உதயராஜா, சக்தி போன்றவர்கள் மேற்கு நாடுகளில் இருந்து இலங்கை சென்று கட்சிகளை ஆரம்பித்தனர். இவ்விரு கட்சிகளின் உருவாக்கத்தின் பின்னணியிலும் ஈபிடிபியே இருந்துள்ளது. இவ்விரு புதிய அமைப்புகளுக்கும் ஈபிடிபிக்குமான உறவும் அதனை உறுதிப்படுத்துகிறது. அவுஸ்திரேலியாவில் ரகு இலங்கை சென்று தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளுடன் செயற்பட்டார். இவர் பின்னர் பிள்ளையான் – கருணா உள்மோதலில் படுகொலை செய்யப்பட்டார். ஏற்கனவே தமிழ் கட்சிகளுக்குள் இருந்த முரண்பாடுகள் புலம்பெயர்ந்தவர்களின் தலையீட்டுடன் மேலும் மேலும் கூர்மையடைந்தது. சிறிரெலோ – புளொட் உறுப்பினர்களிடையே இருந்த முரண்பாடு படுகொலைவரை சென்றது.

வெளிநாடுகளில் உள்ள ஈபிடிபியின் பிரதான ஆதரவுத் தளம் அவ்வமைப்பின் சலுகைகளிலும் தங்கள் வியாபார நலன்களுக்குமே அதனைப் பயன்படுத்துகின்றனர் என்ற பலமான குற்றச்சாட்டு பொதுவாக ஏனைய அமைப்புகளிடம் உள்ளது. ஈபிடிபி, புளொட், ரிஎம்விபி என ஆயுதம் தரித்த இந்த அமைப்புகள் மிக மோசமான மனித உரிமை மீறல்களை மேற்கொண்டிருப்பது சர்வதேச உரிமை அமைப்புகளால் சுட்டிக்காட்டப்பட்டு இருக்கின்றது. ஆனால் இவ்வமைப்புகளை இந்நடவடிக்கைகளில் இருந்து தவிர்க்குமாறு அழுத்தம் கொடுக்கின்ற காத்திரமான முயற்சிகள் புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் அவ்வமைப்பின் பிரதிநிதிகளால் அதன் ஆதரவாளர்களால் வழங்கப்பட்டிருக்கவில்லை. வெறும் கண்டனங்களுடன் அவை மட்டுப்படுத்தப்பட்டன. அவ்வாறு அழுத்தம் கொடுப்பதற்கான பலம் இருந்த போதும் அது இங்குள்ள இயக்க மற்றும் முரண்பாடுகளால் பலவீனப்பட்டு இருந்தது.

இக்காலகட்டத்திலேயே அறுவரைக் கொண்ட புலம்பெயர்ந்த தமிழர் குழு முதல் தடவையாக இலங்கைக்கு பயணம் செய்திருந்தது. அதன் பின்னர் குழுவாகவும் தனியாகவும் பயணங்கள் இடம்பெற்றாலும் இவ்விஜயமே அவை அனைத்திற்கும் மூலமாக அமைந்தது. இந்த விஜயத்தின் மூலம் சாதிக்கப்பட்ட விடயங்கள் எதுவும் இல்லை. ஆனால் இலங்கை அரசுடன் தொடர்புபட்டே சில விடயங்களைக் கையாள வேண்டும் என்ற போக்கு உருவாக்கப்பட்டது. இப்பயணத்தை மேற்கொண்டவர்கள் தீவிர புலி எதிர்ப்பாளர்களாகவும் அரசு சார்பாக மென்போக்கு உடையவர்களாகவுமே இருந்துள்ளனர். அதனால் அரசியல் ரீதியில் இப்பயணம் காத்திரமானதாக அமையவில்லை.

இக்காலப் பகுதியில் புலிகளின் அழுத்தத்தினால் ஓரணியில் நின்ற புலி எதிர்ப்பு அணியில் பிளவுகள் வெளிப்படையாகின. புலி எதிர்பு அணியில் அரசுக்கு எதிரான போக்குடையவர்கள் தனியான அணியாக உருவாகினர்.

இவர்களுக்கு மத்தியில் இடதுசாரிக் கொள்கையில் நம்பிக்கை கொண்டவர்களாக தங்களை அடையாளப்படுத்தும் பலவீனமான பிரிவு ஒன்றல்ல பல ஆங்காங்கே உள்ளது. இவர்களிடையே ஒரே கருத்தியல் உடைய இருவரை அடையாளம் காண முடியாவிட்டாலும் புலிகளுக்கும் அரசுக்கும் எதிரான போக்கு இவர்களிடையே இருந்தது. இவர்கள் பெரும்பாலும் தமிழீழ விடுதலை இயக்கங்களுடன் இணைந்து செயற்பட்டவர்கள். தாங்கள் எந்த நோக்கத்திற்காக இணைந்தார்களோ அந்த நோக்கம் நிறைவேறவில்லை என்ற விரக்தி நிலையில் இருந்து இவர்கள் இன்னமும் வெளிவரவில்லை. சமூகம் சில பத்தாண்டுகள் நகர்ந்தவிட்ட போதும் இவர்கள் தமிழ் மக்களுடைய பிரச்சினையில் மட்டும் இன்னமும் அன்றைய நிலையிலேயே உறைநிலையில் உள்ளனர். தமது சொந்த வாழ்வியல் விடயங்களில் அவர்கள் தங்களை முன்னோக்கி நகர்த்தியே உள்ளனர்.

இவர்கள் இலங்கை அரசையும் தமிழீழ விடுதலைப் புலிகளையும் விமர்சித்து வந்தபோதும் கொள்கையடிப்படையில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே போடுவதை எதிர்த்தனர். அல்லது ஆயுதங்களை சர்வதேச சமூகத்திடம் ஒப்படைக்குமாறு கோருவதையும் தவிர்த்தனர். யுத்த நிறுத்தத்திற்கான காலம் கடந்துவிட்ட போதும் ஒப்புக்கு யுத்த நிறுத்தம் கோரி தங்கள் கடமையை முடித்துக் கொண்டனர். இதில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவுப் பிரிவு தமிழீழ விடுதலைப் புலிகள் தடுத்த வைத்துள்ள மக்களை வெளியே விட வேண்டும் என்று கூட கோரிக்கை வைக்கவில்லை. ஆனால் சரியோ தவறோ எந்த அரசியல் சூழலுக்கும் எந்த நிகழ்வுகளுக்கும் அதற்கேற்ற ‘ரெய்லர் மேட்’; விளக்கம் அவர்களிடம் இருக்கும். இவர்கள் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு மக்களுடன் மக்களாகப் போராடுபவர்கள் அல்லர் மாற்றத்துக்கு விளக்கம் கொடுப்பவர்கள். எப்படிப் போராட வேண்டும் என்று சொல்லித் தருபவர்கள். ‘கீ போட் மார்க்ஸிஸ்ட்’ . அதனால் இவர்களை ‘சொகுசு மார்க்ஸிஸ்ட்டு’க்கள் என்றும் சொல்லலாம்.

இலங்கை அரச படைகளுக்கு எவ்விதத்திலும் சளைக்காமல் தமிழ் மக்கள் மீது மிக மோசமான வன்முறையை தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்டிருந்தனர். இலங்கை அரச படைகளின் தாக்குதலில் இருந்து தப்பியோடிய மக்களை தமிழீழ விடுதலைப் புலிகள் சகட்டுமேனிக்கு சுட்டுக் கொன்றுள்ளனர். மக்களைப் பலவந்தமாக கொண்டு வந்து யுத்த முனையில் நிறுத்தி அவர்களுக்கு மத்தியில் இருந்து தாக்குதலை நடத்தி எதிர்த் தாக்குதலில் அதிகப்படியான மக்கள் கொல்லப்படுவதை தமிழீழ விடுதலைப் புலிகள் உறுதிப்படுத்தி உள்ளனர். ஆயிரக்கணக்கில் மக்கள் கொல்லப்பட்டால் சர்வதேசம் தலையீடு செய்யும் என்ற நம்பிக்கையில் புலம்பெயர்ந்த புலி ஆதரவு அமைப்புகள் செயற்பட்டன. தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கையை அவர்கள் வரவேற்றும் இருந்தனர். இன்னும் சில அமைப்புகள் குறிப்பாக அமெரிக்காவில் உள்ள பேர்ள் போன்ற அமைப்புகள் வன்னி மக்களை மீட்பதற்கு யாரும் உதவக் கூடாது என்றும் எச்சரித்தன. இவ்வாறு வன்னி மக்களை மிகப்பெரும் மனித அவலத்திற்குள் தள்ளியதில் புலம்பெயர்ந்து வாழ்ந்த புலி ஆதரவு சக்திகளுக்கு மிகப் பெரிய பொறுப்பு உண்டு.

புலம்பெயர்ந்த நாடுகளில் புலி ஆதரவு அணியினால் முன்னெடுக்கப்பட்ட அத்தனை போராட்டங்களும் அர்த்தமற்றுப் போனதற்குக் காரணம் அப்போராட்டங்கள் வன்னி மக்களுக்காக நடத்தப்படவில்லை என்பதே. ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான மக்கள் தங்கள் உறவுகளைக் காக்கவே வீதிகளில் இறங்கினர். ஆனால் புலி ஆதரவுத் தலைமையோ அவற்றை தங்கள் குறுகிய நலன்களுக்கு பயன்படுத்தினர். பிரித்தானிய தமிழர் பேரவை, மற்றும் ஒவ்வொரு நாடுகளிலும் இருந்த புலி ஆதரவு அமைப்புகள், பிரான்ஸில் உள்ள புலிகளின் மனிதவுரிமை அமைப்பு மற்றும் ஒவ்வொரு நாடுகளிலும் உள்ள தமிழ் இளையோர் அமைப்பு என்பன வன்னி மக்களின் அவலத்தை அரசியல் பேரம்பேசலுக்கே பயன்படுத்தினர். வன்னி மக்களின் நலன்களுக்கு விரோதமாகவே இவர்களின் செயற்பாடுகள் அமைந்தது.

4. 2009 நடுப்பகுதி முதல் தற்போது வரை. மே 18 2009ல் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனின் மறைவுக்குப் பின்.

ஒவ்வொரு மாவீரர் தின உரையிலும் வரலாற்றுத் திருப்புமுனையில் நிற்கின்றோம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் கூறிவந்தார். தனது முடிவு தான் தமிழ் மக்களின் வாரலாற்றுத் திருப்புமுனையாகப் போகின்றது என்பதை அவரும் அவரைச் சார்ந்திருக்கின்றவர்களும் அறிந்திருக்கவில்லை. அவர்கள் அதனை அறியும் போது காலம் கடந்துவிட்டது. ஆனால் அவர்களில் இன்னும் பலர் உண்மைகளை ஏற்றுக் கொள்ள இயலாதவர்களாகவே உள்ளனர்.

வன்னி மக்களை மந்தைக் கூட்டங்களாகச் சாய்த்து வந்து முல்லைத்தீவில் நடந்த யுத்த வேள்வியில் பலிகொடுத்த புலம்பெயர்ந்த புலி அதரவுத் தமிழர்கள் வன்னி முகாம்களின் அவலம் பற்றிப் பேசுகின்ற தகமையை இழந்துவிட்டனர். ‘ஆடு நனைகின்றது என்று ஓநாய் அழுத கதையாகி விட்டது’ புலத்து புலி ஆதரவுத் தமிழர்களின் திறப்புப் போராட்டம்.

நாடு கடந்த தமிழீழம், புலம்பெயர் பாராளுமன்றம், வட்டுக்கோட்டைப் பிரகடனம் என்று புலி ஆதரவுத் தமிழ் அமைப்புகள் படுபிசியாக இயங்கிக் கொண்டு உள்ளன. தலையற்ற கோழியைப் போல் அவர்களது ஆதரவுப் பட்டாளம் அங்கும் இங்கும் ஓடுகின்றது. இவர்கள் வன்னியில் உள்ள மக்களில் இருந்து முற்றிலும் அன்னியப்பட்டு குத்து மதிப்பாக அரசியலை நகர்த்துகின்றனர். அவர்களுக்கு தற்போது யாரைத் துரோகி என்றழைப்பது, யார் தம்மவர் என்ற தெளிவும் இல்லாமல் உள்ளனர். இதுவரை அடக்கி வைக்கப்பட்ட ரிஎன்ஏ, இலங்கை அரசோடு வன்னி மக்களுக்காகப் பேச மறுத்த ரிஎன்ஏ தற்போது அரசோடு விருந்தோம்பி பேச்சும் நடத்துகின்றது. லண்டன் வந்திருந்த ரிஎன்ஏ தலைவர் ஆர் சம்பந்தன் தங்களுடைய பொறுப்பும் கடமையும் இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கே அல்லாமல் வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு அல்ல என்று ஆணித்தரமாகத் தெரிவித்து இருந்தார்.

புலிகளின் ஆதரவுத் தளம் தளம்பிய நிலையில் உள்ளது என்றால் அதற்கு எதிரணியில் உள்ளவர்களும் தெளிவுடன் இல்லை. மாற்றுக் கருத்து, ஜனநாயகம், மறுத்தோடிகள் என்று பேசியவர்கள் இப்போது அவற்றுக்கு புதிய விளக்கம் தேடுகின்றனர். இலங்கை அரசு அடிப்படை உரிமைகளை மீறுவதுடன் சர்வதிகாரப் போக்கு நோக்கியும் நகர்ந்து கொண்டு உள்ளது. அரசின் இப்போக்கிற்கு எதிராக செயற்பட வேண்டிய ஒரு அவசர நிலையுள்ளது.

Rajini_Thiranagama_20thRememberanceஆனால் சகல ஒடுக்கமுறைகளுக்கும் எதிராகப் போராடிய ஒரு பெண், ராஜினி திரணகமவின் நினைவு தலைநகர் கொழும்பில் உள்ள பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. வன்னிப் பேரவலத்திற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டும் காரணமல்ல. இலங்கை அரசுக்கும் அதில் சம பொறுப்புண்டு. இலங்கை அரசு தனக்கு எதிரான குரல்களை நசுக்கி வருகின்ற ஒரு சூழலில் அதன் ஒடுக்குமுறைக்குப் பயந்து ஊடகவியலாளர்கள் நாட்டைவிட்டு வெளியேறிக் கொண்டிருக்கின்ற சூழலில் லண்டனில் இருந்து சென்று ராஜினி திரணகமவிற்கு கொழும்பில் நினைவு தினம் வைக்கின்றனர் லண்டன் ‘ஜனநாயகவாதிகள்’ ‘மறுத்தோடிகள்’.

ராஜினி திரணகமவுடன் இணைந்து பணியாற்றிய யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ராஜினிக்கு தெரிவித்த அஞ்சலியில் ”Today up to 300 000 IDPs are interned behind barbed wire without any sensitivity to their real needs, but rather exacerbating the terrible trauma they suffered for several months running from place to place under government bombardment, suffering injury and bereavement.” என்று தெரிவித்து இருக்கின்றது. இந்த யாழ் பல்கலைக் கழக மனிதஉரிமை சங்கத்தைச் சேர்ந்த ராஜன் கூல், கோ சிறீதரன் போன்றவர்கள் இலங்கை அரசு தொடர்பாக வெளியிட்ட அறிக்கை விபரங்களை அங்கு பேசியிருக்க முடியுமா? அல்லது ராஜினி திரணகம செயற்பட்ட புரணி பெண்கள் அமைப்பினர் தான் வந்து தங்கள் கருத்துக்களை அச்சமின்றித் தெரிவித்திருக்க முடியுமா?  வன்னிப் பேரவலம் நடைபெற்று சில மாதங்களே நிறைவடையாத நிலையில் 300 000 தமிழ் மக்கள் அவர்களது அடிப்படை வாழ்வுரிமை மறுக்கப்பட்டுள்ள நிலையில் ராஜினி திரணகமவுக்கு பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வைக்கப்பட்ட நினைவுக் கூட்டம் ராஜிணி திரணகமவையும் அவரைச் சார்ந்த ஒடுக்குமுறைக்கு எதிராகக் குரல் எழுப்புகின்றவர்களையும் அவமதிக்கின்ற ஒரு கூட்டமே. புலம்பெயர்ந்த தமிழர்களின் மேல்தட்டு ஜனநாயகம் அவர்களின் இருப்பை அடையாளப்படுத்துவதற்கே உதவும். அதற்கு பண்டாரநாயக்கா மாநாட்டு மண்டபமே உகந்த இடம்.

இலங்கையில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகளை குறிப்பாக புலி எதிர்ப்பு அணியில் இருந்த அரசியல் கட்சிகளை ஜனநாயகப்படுத்த வேண்டும் அவர்களை பொது வேலைத்திட்டத்தில் ஒன்றிணைக்க வேண்டும் என்று சில முயற்சிகள் புலம்பெயர்ந்த நாடுகளில் நடைபெற்றது. கட்சித் தலைவர்கள் மேற்கு நாடுகளுக்கு வந்தபோது அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும் அவை குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. லண்டனில் ஒன்றாக இருந்து தேநீர் அருந்திய டக்ளஸ் தேவானந்தா – அனந்தசங்கரி கூட்டு தென்னாபிரிக்காவில் தேநீர் குடிக்கு முன்பே பிரிந்துவிட்டது. இம்முயற்சிகளில் ஈடுபட்டவர்களில் எம் நகுலேந்திரன் (கீரன்) போன்றவர்களும் அடங்கினர். மே 18க்குப்பின் எம் நகுலேந்திரன் இலங்கை சென்று சிறி ரெலோவுடன் செயற்படுகின்றார். ஒருவர் தன்னுடைய அரசியலைத் தெரிவு செய்வதற்கு அவருக்கு முழு உரிமையும் உண்டு. ஆனால் அண்மையில் வவுனியாவில் இடம்பெற்ற நகரசபைத் தேர்தலில் தங்களுக்கு வாக்களிக்கின்ற கிராம மக்களை சிறி ரெலோவினர் வாக்களிக்க விடாமல் தடுத்ததாகவும் வன்முறையில் ஈடுபட்டதாகவும் லண்டனில் உள்ள தமிழீழ மக்கள் விடுதலைக் கழக செயற்பாட்டாளர் தயா குற்றம் சுமத்துகின்றார். அங்குள்ள முரண்பாடுகளைக் கட்டுப்படுத்தி புரிந்தணர்வை ஏற்படுத்துவதற்குப் பதிலாக 30 வருடங்களுக்கு முன் நிகழ்ந்த அதே பழைய கதை மீண்டும் இங்கு அரங்கேறுகிறது. அன்ரன் பாலசிங்கம் விட்ட இடத்தில் இருந்து எம் ஆர் ஸ்ராலின், எம் நகுலேந்திரன் தொடர்கின்றனர்.

இவ்வளவு ஓட்டங்களுக்கும் மத்தியில் கொழும்பு சென்ற 21 பேர் கொண்ட புலம்பெயர்ந்த குழுவும் குறுக்கும் மறுக்குமாக ஓடுகிறது. இக்குழு இலங்கை சென்று வந்து ஆறு மாதங்களாகியும் ஜேர்மன் ஸ்ருட்காட்டில் ஒரு மாநாட்டைக் கூட்டியம் தாங்கள் யார் என்பதையோ தாங்கள் என்ன செய்கின்றோம் என்பதையோ வெளிப்படையாக வைக்கவில்லை. இந்தக் குழுவிடம் ஒரு கூட்டுப் பொறுப்பு இருப்பதாகத் தெரியவில்லை.  பயண ஏற்பாட்டாளர் நடேசன், ஆர் நரேந்திரன், ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் ஆகியோர் ஆங்காங்கே பத்திரிகைப் பேட்டிகளையும் அறிக்கைகளையும் வெளியிட்டு தங்கள் நன்றியை அரசுக்கு வெளிப்படுத்தி உள்ளனர். அதற்கு மேல் கொழும்பு சென்று வந்த எஸ் மனோரஞ்சன் புலம்பெயர் குழுவுக்கு எழுதிய கடிதம் தேசம்நெற் இல் கசிந்தது.

இந்தப் புலம்பெயர் குழுவில் கொழும்பு சென்ற இந்த 21 பேரும் யார் என்ற கேள்வியை கவுன்சிலர் போல் சத்தியநேசன் உட்பட பலரும் எழுப்பி இருந்தனர். ரி கொன்ஸ்ரன்ரைன் தேசம்நெற் சார்பில் இக்குழுவில் இடம்பெறவில்லை. அதனால் அவர் அந்தத் தகவலை தருவதற்கு மறுத்துவிட்டார்.  ஆனால் அதற்கு அக்குழு இதுவரை மௌனம் சாதித்தனர். ஆனால் அக்குழு யார் என்பதை தேசம்நெற் வாசகர்கள் ஊடாக அறிந்துகொள்ள முடிந்துள்ளது. இப்பகுதி ஒக்ரோபர் 14 2009ல் மீள்திருத்தம் செய்யப்பட்டு உள்ளது.

அமெரிக்கா (பொஸ்ரன்) : சிறீதரன் தில்லையம்பலம்
அவுஸ்திரேலியா: நடேசன், ரவீந்திரன், என் சதானந்தன், ஆர் சிவநாதன்
கனடா : மகேஸ்வர ராஜா, மித்திரன், ராஜேந்திரன், மனோரஞ்சன்
பிரித்தானியா : ராஜேஸ் பாலா, எம் சூரியசேகரம், பாலா, ரி கொன்ஸ்ரன்ரைன்
பரிஸ் : குகநாதன் DAN TV
ஜேர்மனி : ஜெகநாதன், புத்ரா
டென்மார்க் : வதனன் குமாரதுரை, மதி குமாரதுரை
சுவிஸ்லாந்து : எஸ் கலாமோகன்
நோர்வே: ராஜன்
சவுதிஅராபியா: ஆர் நரேந்திரன்

கொழும்பு சென்ற இக்குழுவின் செயற்பாடுகள் பற்றி ரி கொன்ஸ்ரன்ரைன் விரிவான ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தார். அதில் இக்குழுவின் செயற்பாடுகள் வெளியாகி இருந்தது. இக்குழு ஜேர்மன் ஸ்ருட்காட்டில் ஏற்பாடு செய்த மாநாடு இக்குழுவின் பலத்தையும் பலவீனத்தையும் வெளிப்படுத்தியது. இவர்களுடைய ஒரே பலம் இவர்கள் இலங்கை அரச பிரதிநிதிகளுடன் தொடர்புகளைக் கொண்டிருந்தனர் என்பதே. மற்றும்படி இக்குழு ஒரு ‘லூஸ்’ அமைப்பாகவே இருக்கின்றது. தனிநபர்களின் ஓட்டங்கள் அரசியல் அபிலாசைகள் இக்குழுவை ஒரு உறுதியான அமைப்பாக்க முடியாத நிலையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சிலரின் செயற்பாடுகள் அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதிலும் இலங்கை அரசைப் பிரதிநிதித்துவப்படுத்தகின்ற போக்கையே கொண்டிருந்தது.

ஒக்ரோபர் 7ல் பிபிசி இணையத்தில் வெளியான செய்தி The BBC was able to meet refugees who clamoured to talk about their situation. One woman after another said the conditions were poor – that there was no good drinking water, that the drainage system could not cope, and that people were falling ill in the hot weather. “Please send us home as soon as possible,” one said. இச்செய்தி தொடர்பாக கொழும்பு சென்ற குழுவின் உறுப்பினர் ஆர் நரேந்திரன் நியூஹாம் கவுன்சிலர் பொல் சத்தியநேசனுக்கு அனுப்பிய கடிதத்தில் ”The BBC reports such as yesterdays can only fool people who want to be fooled.” எனத் தெரிவித்துள்ளார். அது பற்றி மேலும் விளக்கம் அளித்துள்ள ஆர் நரேந்திரன் “People have to collect water in containers for their personal use and await their turn to get the water. In fact water is being wasted in these camps. We saw people having long leisurely baths, as they would at their home wells! people yet form line lines in the poorer area of Chennai to collect their water and the volumes they can get are severely limited” என வன்னி முகாம்களில் உள்ள மக்களைக் குற்றம்சாட்டி உள்ளார்.

அரசைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற போக்கு கொழும்பு சென்ற குழுவில் உள்ள பெரும்பான்மை உறுப்பினர்களிடம் காணப்படுகின்றது. இலங்கை அரசு தொடர்பில் வேண்டுகோள் (request) விடுக்கப்பட வேண்டுமே அல்லாமல் உரிமையுடன் கோர (demand) முடியாது என ஸ்ருட்காட் மாநாட்டில் கொழும்பு சென்றுவந்த குழுவினர் கருத்து வெளியிட்டனர். இதற்கு கடுமையான எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்ட போதும் கொழும்புக் குழு வேண்டுகோள் என்றே நின்று கொண்டது. வன்னி முகாம்கள் தொடர்பாக தீர்மானம் இயற்ற முற்பட்ட போதும் அதற்கு அவர்கள் சம்மதிக்கவில்லை.

180 நாட்களுக்குள் பெரும்பாலான வன்னி மக்களை முகாம்களில் இருந்து வெளியேற்றப் போவதாக அரசு கோரி வருகின்றது. ஆனால் வன்னி முகாம்களில் உள்ள மக்களை மீள்குடியேற்றக் கோருவது முட்டாள்தனமானது என்கிறார் ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கம் நிற்பதாக தன்னை அடையாளப்படுத்தும் சுகன் (பிரான்ஸ்). அண்மைக் காலமாக இவர் தேசியகீதம், புத்தம் சரணம் கச்சாமி எல்லாம் கூறித்தான் தன் கதாப் பிரசங்கத்தை ஆரம்பிக்கின்றார். ஸ்ருட்காடிலும் அவ்வாறே. தலித் சமூக மேம்பாட்டு முன்னணி அம்மாநாட்டில் சில கோரிக்கைகள் அடங்கிய அறிக்கையை வெளியிட்டது. வடக்கில் வன்னி முகாம்களுக்குள் மக்கள் முடங்கி இருக்க அவ்வறிக்கையில் ‘வடக்கில் சிங்கள மக்களும் குடியேற்றப்பட வேண்டும்’ என்று தலித் சமூக மேம்பாட்டு முன்னணி கோரிக்கை வைத்தது. இவ்வாறு அதன் கோரிக்கைகள் பல கோமாளித்தனமாகவே அமைந்தது. அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த சுதா என்ற இளைஞர் தான் சபையை விட்டு வெளியேறப் போவதாகத் தெரிவித்து வெளியேறவும் முயன்றார்.

London_Delegationஇந்தப் பின்னணியிலேயே கொழும்பு சென்ற குழுவும் அதற்கு ஆதரவானவர்களும் இணைந்து பெடரெசன் ஒப் சிறிலங்கன் டயஸ்பொரா (FOSLD – Federation of Sri lankan Diaspora) என்ற அமைப்பைத் தோற்றுவித்தனர். இதன் தலைவராக லண்டன் பாலா நியமிக்கப்பட்டும் உள்ளார்.

ஸ்ருட்காட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி ஒவ்வவொருவரும் தங்கள் நாடுகளுக்குச் சென்று அமைப்புக்களை உருவாக்க வேண்டும் என்றும் அந்த அமைப்புகளின் பிரதிநிதிகளே FOSLD இல் உறுப்பினர்களாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதாவது கீழிருந்து மேல் செல்லாமல் மேலிருந்து கீழ் வரும் செயன்முறை. டென்மார்க், சுவிஸ், அவுஸ்திரேலியாவிலேயே இவ்வாறான கூட்டங்கள் இடம்பெற்றது. வேறு எந்த நாட்டிலும் எவ்வித கூட்டங்களையும் FOSLD பிரதிநிதிகள் மேற்கொள்ளவில்லை. அல்லது மேற்கொள்ள இயலவில்லை. தாங்கள் உருவாக்கிய விதிகளுக்கு அமையவே அவர்களால் செயற்பட முடியாத நிலையிலேயே அவர்கள் உள்ளனர். ஸ்ருட்காட் மாநாடு பற்றிய குறைந்தபட்ச செய்திக்குறிப்பைக் கூட FOSLD இன் தலைமை வெளியிடவில்லை.

Swiss_Delegationசுவிஸில் ஒக்ரோபர் பத்து (நாளை) மற்றுமொரு சந்திப்பும் இடம்பெறவுள்ளது. தாம் விரும்புகின்ற அரசியலை முன்னெடுக்கின்ற உரிமை ஒவ்வொருவருக்கும் உள்ளது. அது கொழும்பு சென்ற 21 பேர் கொண்ட குழுவுக்கும் உள்ளது. ஆனால் இவர்கள் புலம்பெயர்ந்த தமிழர்களையோ தமிழ் மக்களையோ பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. அவ்வாறு செய்யவும் முடியாது. இவ்வாறான ஒரு குழு பாதிக்கப்பட்ட வன்னி மக்களின் நலன்கள் தொடர்பில் பணியாற்றி அம்மக்களின் வாழ்நிலையை மேம்படுத்த உதவலாம். அது இன்றுள்ள அவசர தேவையும் கூட. அதற்கு அப்பால் தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வு விடயத்தில் அரசுடன் பேச்சுவதற்கு இந்தக் குழுவிடம் எவ்வித அரசியல் பண்பும் கிடையாது. மேலும் இக்குழுவினருக்கு முரண்பட்ட விருப்புகள் (conflict of intrests) இருக்கின்றது என்ற சந்தேகம் பொதுவாக எழுந்தள்ளது. அதற்கான வாய்ப்புகளை இக்குழுவினரே உருவாக்கியும் உள்ளனர். இந்த முரண்பட்ட நிலையில் நின்று தமிழ் மக்களுடைய அரசியல் உரிமைகள் பற்றி இவர்கள் பேசுவது ஏற்புடையதல்ல. இவர்களில் பலர் அரச பிரதிநிதிகள் போன்றே செயற்படுவதால் வேண்டுகோள் (request) மட்டுமே விடமுடியும் உரிமையுடன் கோர (demand) முடியாது என்ற சிந்தனை வசப்பட்ட இக்குழு தமிழ் மக்களுடைய உரிமைகள் பற்றிப் பேசுவது தமிழ் மக்களுடைய அரசியல் எதிர்காலத்திற்கு ஆபத்தையே ஏற்படுத்தும். இக்குழு தங்களுடைய இயலுமை இயலாமையை இனம்கண்டு தங்களுடைய எல்லையை வரையறை செய்வது அவசியமானது.

எப்போதும் பேரழிவுகள் ஏற்படும் போது மனிதம் வேதனை கொள்வதும் புரிந்துணர்வை ஏற்படுத்தவதும் உதவ விளைவதும் இயல்பானது. சுனாமியினால் மிகப்பெரும் அவலம் நிகழ்ந்தது. மிகவும் பாதிக்கப்பட்ட முஸ்லீம் சமூகப் பிரதிநிதிகள் சுனாமி மீள்கட்டுமான கட்டமைப்பில் பங்கேற்க மறுப்புத் தெரிவிக்கப்பட்டது. இதே சுனாமியால் பாதிக்கப்பட்ட இந்தோனேசியாவின் ஆச்சே மாநிலத்தில் சுனாமிக்குப் பின் புரிந்துணர்வும் சுமூகநிலையும் தோற்றுவிக்கப்பட்டது.

ஆனால் வன்னியில் மற்றுமொரு யுத்தம் பல்லாயிரம் மக்களைப் பலிகொண்டு மிக மோசமான மனித அவலத்தை தோற்றுவித்துள்ளது. இப்போதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யார் உதவுவது? எப்படி உதவுவது? என்ற சர்ச்சை புலம்பெயர் மண்ணில் ஓயவில்லை. ஒக்ரோபர் 6ல் லிற்றில் எய்ட் 16 000 பவுண்கள் பெறுமதியான 1100கிகி எடையுள்ள பெரும்பாலும் வலி நிவாரண மருந்துகளை வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தது. டென்மார்க்கில் உள்ள ‘இனிசியேடிவ் 2009’ என்கின்ற அமைப்பு அந்நாட்டில் உள்ள மருத்துவ நிறுவனங்களைத் தொடர்புகொண்டு வலி நிவாரணப் பொருட்களைப் பெற்று லிற்றில் எய்ட் மூலம் அதனை வவுனியா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருந்தனர்.

‘மக்களின் ஒட்டுமொத்த விடுதலைக்கு – புரட்சிக்கு’ பங்கம் விளைவிக்கும் இவ்வாறான உதவிகள் நிறுத்தப்பட வேண்டும் என்று ஒருசில ‘புரட்சி’ப் புலிகள் நினைக்கின்றனர். ‘லிற்றில் எய்ட் போன்ற உதவி அமைப்புகள் அரசாங்கத்தோடு இயங்குகின்றது. அரசாங்கத்தின் சுமையை அவ்வமைப்புகள் குறைக்கின்றன. மக்களின் வலி குறைந்தால் மக்கள் போராட மாட்டார்கள்’ என்றெல்லாம் இவர்களிடம் அடுக்கடுக்கான காரணங்கள் உள்ளது. இம்மக்களின் ஒட்டுமொத்த விடுதலைக்கு இவர்கள் சொல்லும் கொள்கையில் இவர்களுக்கே முழுமையான நம்பிக்கையில்லை. இவர்கள் யாரும் தாங்கள் சொல்லும் கொள்கைக்கு தங்களை அர்ப்பணித்தவர்கள் அல்ல. அர்ப்பணிக்கப் போபவர்களும் அல்லர். ஏனெனில் இவர்கள் சொகுசு மார்க்ஸிஸ்ட்கள். இவர்களை நம்பி மக்களை வலியுடன் தவிக்க விடாமல் லிற்றில் எய்ட் போன்ற நிறுவனங்கள் தங்களால் முடிந்த உதவிகளை அம்மக்களுக்கு மேற்கொள்வது அவசியம். மேலும் அரசினையும் உதவிகளை வழங்குவதற்கும் அம்மக்களை விரைவில் மீளக் குடியமர்த்துவதற்கும் தொடர்ந்தும் நிர்ப்பந்திக்க வேண்டும். வன்னி முகாம்களுக்கு பலரும் உதவிகளை மேற்கொள்வது அரசின் சுமையைக் குறைக்க அல்ல. புலம்பெயர்ந்த தமிழர்கள் பலர் வன்னி மக்களுக்கு உதவ முன்வருவது தங்கள் குற்ற உணர்வின் காரணமாக. உதவ முன்வருபவர்களது நோக்கம் மிக முக்கியமானது. அவர்களது நோக்கம் பாதிக்கப்பட்ட மக்களின் நலன் சார்ந்ததாக இருக்கும் வரை அவர்களது உதவி அவசியமாகிறது. ஆனால் உதவ முன்வருபவர்களுக்கு முரண்பட்ட விருப்புகள் (conflict of intrests) இருக்குமானால் அது பாதிக்கப்பட்ட மக்களின் நலன்களுக்கு எதிரானதாகவே அமையும். இவர்கள் அம்பலப்படுத்தப்படுவது தவிர்க்க முடியாதது.

மேலும் புலம்பெயர்ந்த தமிழர்களில் ஒரு பிரிவனர் தங்கள் அரசியல் மற்றும் முரண்பாடுகளை தீர்த்துக் கொள்வதற்கான களமாகவும் வன்னி முகாம்களை ஆக்கி உள்ளனர். தமிழகத்திலும் ஐரோப்பாவிலும் அறியப்பட்ட சில எழுத்தாளர்கள் மத்தியில் புல்லரிக்கும் விவாதங்கள் நடைபெறுகின்றது. இந்த விவாதங்களில் மரத்தைப் பற்றியும் அதன் கீழ் தவிக்கும் மக்களுக்காகவும் எழுதுவதாகச் சொல்லிக் கொண்டு தமிழகத்திலும் ஐரோப்பாவிலும் உள்ள மாடுகளை மரத்தில் கட்டிவிட்டு அவற்றைத் திட்டித் தீர்த்து சிற்றின்பம் அடைகின்றனர். நிதர்சனம் போன்ற இணையங்களின் சொல்லாடல்களை இப்போது இவர்களே குத்தகை எடுத்துள்ளனர்.

தாயகத்தில் ஏற்படும் அழிவும் அவலமும் புலம்பெயர்ந்த நாடுகளில் வாழ்பவர்களின் புறச்சூழலில் குறிப்பிடத்தக்க எந்த மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை. எழுத்துப் படிமங்களாகவும் ஒலிப் படிமங்களாகவும் காட்சிப் படிமங்களாகவும் மட்டுமே அவற்றை உணர்ந்து கொள்கின்றனர். தாங்கள் விரும்பிய பொழுது அந்தப் படிமங்களில் இருந்து அவர்களால் விலகி இருக்கவும் முடியும். அதனால் பாதிக்கப்பட்ட மக்களின் உண்மையான உணர்வுகளையும் தேவைகளையும் புலம்பெயர்ந்த மக்களால் முழுமையாக உணர முடிவதில்லை. புலம்பெயர்ந்து வாழ்பவர்கள் தங்கள் அரசியல் நோக்கத்தின் பின்னணியில் தாங்கள் கேள்விப்படுகின்ற எழுத்து, ஒலி, காட்சிப் படிமங்களை தங்கள் அரசியல் நோக்கத்திற்கு ஏற்ப சமையல் செய்து வெளிப்படுத்துகின்றனர். இந்தப் போக்கு தாயகத்து மக்களின் அரசியல் சூழலில் எதிர்மறையான விளைவையே இதுவரை ஏற்படுத்தி உள்ளது. அதற்கான விலையைக் கூட புலம்பெயர்ந்து வாழும் மக்கள் செலுத்துவதில்லை. புலம்பெயர்ந்து வாழும் மக்களின் தவறான முன்னெடுப்புகளுக்கு தாயக மக்களே தங்கள் அதிகூடிய விலையைச் செலுத்தி உள்ளனர்.

அரசியல் மேற்கோள்களை கூகுலில் தேடுவதை விட்டுவிட்டு அரசியலையும் அரசியல் தந்திரோபாயங்களையும் தாயக மக்களிடம் கற்றுக் கொள்வதே புலம்பெயர்ந்த தமிழர்கள் செய்யக் கூடியது. ‘தத்துவமற்ற நடைமுறை’ புலிகளது அரசியல் – ‘நடைமறையற்ற தத்துவம்’ சொகுசு மார்க்ஸ்ஸிட்டுக்களின் அரசியல். முன்னையது எவ்வளவு ஆபத்தானது என்பது நிரூபிக்கப்பட்டு உள்ளது. பின்னையது பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. அதன் வாழ்தகவு கணணியுடன் முடிந்துவிடும்.

தாயக மக்கள் தொடர்பான புலத்து தமிழ் மக்களுடைய அரசியல் நடவடிக்கைகள் பற்றி இரட்டிப்பு விழிப்புடன் இருப்பது மிக அவசியமாகின்றது. தாயகத் தமிழர்கள் புலத்து தமிழர்களை தங்கள் பொருளாதார தேவைகளுக்கு அப்பால் புறக்கணிப்பதற்கு அவர்களுக்கு மிகச் சரியான காரணங்கள் நிறையவே உள்ளது. புலத்து தமிழர்களுடைய அரசியல், அடையாள அபிலாசைகளுக்கு தாயகத் தமிழர்களை பணயம் வைக்க முடியாது. இனவாத அரசுக்கும் சர்வாதிகார ஆயுத அமைப்புக்கும் முகம்கொடுக்காது தப்பித்து ஓடி வந்த புலம்பெயர்ந்த தமிழர்கள் இரட்டை ஒடுக்குமுறைக்கு முகம்கொடுத்த அந்த மக்களுக்கு அரசியல் வழியை சொல்லித்தர வேண்டிய அவசியமில்லை. அதே சமயம் தாயகத்தில் மக்களுடைய தேவைகளை அறிந்து அவர்களைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு உதவுவது அவசியம். அம்மக்களே தங்கள் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளனர் என்பதை புலத்து தமிழர்கள் முதலில் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

உண்ணாவிரதி பரமேஸ்வரனின் 7.1 மில்லியன் பவுண் மக்டோனால் பேகர் : த ஜெயபாலன்

Parameswaran_Subramaniyammcdonalds_burgerscotland_yardவன்னியில் மிகப்பெரும் அவலம் நடந்து கொண்டிருக்கையில் உலகெங்கும் உள்ள தமிழர்கள் வீதியில் இறங்கிப் போராடினர். அவர்கள் தங்கள் சக உறவுகளுக்காகத் துடித்தனர். ஆனால் ஒட்டுமொத்த போராட்டத்தையும் புலம்பெயர் புலி ஆதரவு சக்திகள் புலிக்கொடி, பிரபாவின் படம் என புலிமயப்படுத்தி போராட்டத்தை பலவீனப்படுத்தினர். தற்போது ஸ்கொட்லன்ட் யாட் மற்றுமொரு விடயத்தை அம்பலப்படுத்தி உள்ளது. லண்டனில் உண்ணாவிரதம் இருந்த பரமேஸ்வரன் சுப்பிரமணியம் (28) உண்ணாவிரதம் இருந்த காலத்தில் மக்டோனால்ட் சாப்பிட்டுள்ளதை ஸ்கொட்லன்ட் யாட் பொலிஸார் தங்கள் நுணுக்கமான கமராக்கள் மூலம் பதிவாக்கி உள்ளனர்.

பரமேஸ்வரன் சுப்பிரமணியம் உண்ட மக்டோனால்ட்டின் விலை 7.1 மில்லியன் பவுண் என பொலிஸ் உள்வட்டாரங்களில் பேசப்பட்டு உள்ளது. உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெற்ற 72 நாட்களில் 30 000 பொலிஸார் கடமையில் அமர்த்தப்பட்டு இருந்தனர். அதற்கு அவர்கள் செலுத்திய மேலதிக சம்பளம் 7.1 மில்லியன். பரமேஸ்வரன் சுப்பிரமணியம் மக்டோனாலட் சாப்பிட்டுக் கொண்டிருந்ததை ஸ்கொட்லண்ட் யாட் உத்தியோகத்தர்கள் நம்ப முடியாது லைவ்வாகப் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் இப்போராட்டம் உணர்ச்சிபூர்வமாக இருந்ததால் ஸ்கொட்லண்ட் யாட் அப்போது இச்சம்பவம் பற்றி கருத்துத் தெரிவிப்பதைத் தவிர்த்து இருந்தது. மேலும் அச்சமயத்தில் கருத்து வெளியிடும் பட்சத்தில் அது வன்முறைக்கு வித்திடலாம் என்ற அச்சமும் காரணமாக இருந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். (தகவல்: டெய்லி மெயில் லண்டன்)

ஒக்ரோபர் 8 (நேற்று) இத்தகவல் ஸ்கொட்லண்யாட்டினால் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து தமிழ் மக்களால் நடத்தப்பட்ட போராட்டங்களுக்கு மிக மோசமான இழுக்கு ஏற்பட்டு உள்ளது. வன்னியில் நிகழ்ந்த பேரவலத்தில் புலிகளுக்கும் மிகுந்த பங்கு இருந்தது. புலிகள் யுத்தப் பகுதியில் மக்களை பணயம் வைத்தே தாக்குதலை நடத்தினர். அப்படி இருந்தும் வெளிநாடுகளில் புலி ஆதரவுத் தமிழர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டத்தில் புலிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை விடுவிக்க வேண்டுமென எவ்விதமான கோரிக்கையும் வைக்கப்படவில்லை. இந்தப் போராட்டங்கள் அனைத்துமே புலி ஆதரவாளர்களால் தங்கள் அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டது. வன்னியில் உள்ள மக்களை யுத்த முனைக்குள் தள்ளி மிகப்பெரும் அவலத்தை ஏற்படுத்தியதில் இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் சமபொறுப்பு உண்டு. புலம்பெயர்ந்த புலி ஆதரவு சக்திகளின் பொறுப்பற்ற போராட்டங்கள் வன்னி மக்களை மிகப்பெரும் அவலத்திற்குள் தள்ளியுள்ளது.

வடமராட்சியைச் சேர்ந்த பரமேஸ்வரன் சுப்பிரமணியம் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நெருக்கமானவர். லண்டனில் போராட்டங்களில் புலிகொகொடி பிரபாவின் படம் போன்ற விடயங்களில் இவரே தீவிரமாக இருந்ததாகத் தெரியவருகிறது. பிரித்தானிய அரசு வழங்கிய இரகசிய உறுதிமொழியை அடுத்தே தனது போராட்டத்தை கைவிட்டதாகத் தெரிவித்து இருந்தார். செப்ரம்பர் 29ல் அவரை கொன்வே ஹோலில் சந்தித்து அந்த உறுதிமொழி என்ன வென்று கேட்ட போது அது இன்னமும் இரகசியமாகவே இருப்பதாகத் தேசம்நெற்றுக்குத் தெரிவித்தார்.

ஆனால் பிரித்தானிய இளையோர் அமைப்பினர் சில உள்வீட்டு விடயங்களை வெளியிடுகையில் அவ்வாறான உறுதிமொழி எதுவும் வழங்கப்பட்டதாகத் தெரியவில்லை என்றும் உண்ணாவிரத்தை முடிப்பதற்காக கண்டுபிடிக்கப்பட்ட காரணமே அதுவென்றும் தெரிவிக்கின்றார்.

பரமேஸ்வரன் சுப்பிரமணியத்தின் உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் போராட்டங்கள் நியாயத்தன்மையைக் கொண்டிருக்காதபடியால் அவை பயனற்ற முயற்சிகள் என்பதனை தேசம்நெற்றில் பல தடவை சுட்டிக்காட்டி இருந்தோம். ஆனால் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ள பரமேஸ்வரன் சுப்பிரமணியத்தின் உண்ணாவிரத விருந்து தமிழ் மக்களது எதிர்காலப் போராட்டங்களுக்கும் ஒரு கறையாக அமையவுள்ளது. இவ்விடயம் தொடர்பாக பரமேஸ்வரன் சுப்பிரமணியத்துடன் தொடர்புகொள்ள மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.

ஆனால் பிபிசி தமிழோசைக்கு இச்செய்தி தொடர்பாக கருத்து வெளியிட்ட பரமேஸ்வரன் சுப்பிரமணியம் இது ஒரு திட்டமிட்ட சதி என்றும் இந்த செய்திகளை வெளியிட்ட இரண்டு நாளிதழ்களுக்கு எதிராக தான் வழக்குத் தொடரப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

”300 000 பேரை முகாம்களில் தடுத்து வைத்திருப்பது மனிதத்துவமற்ற செயல்” பிரித்தானிய தொழிற்கட்சி மாநாட்டில் தீர்மானம் : த ஜெயபாலன்

David_Milliband_LP_Conferenceஆண்கள் பெண்கள் குழந்தைகள் என 300 000 பேரை முகாம்களில் தடுத்து வைத்திருப்பது மனிதத்துவமற்ற செயல்” பிரித்தானிய தொழிற்கட்சி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. ஒக்ரோபர் 1ல் நிறைவுபெற்ற தொழிற்கட்சியின் வருடாந்த மாநாட்டில் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியாவில் உள்ள பிரதான கட்சிகளின் வருடாந்த மாநாடு நடைபெற்று வருகின்றது. அடுத்த தேர்தலை எதிர்கொள்ளும் நிலையில் இம்மாநாடுகள் மிகவும் முக்கியத்துவமானவையாக உள்ளது. குறிப்பாக தொழிற்கட்சி கடந்த மூன்று தேர்தல்களிலும் ஆட்சியைத் தக்க வைத்துள்ள நிலையில் இத்தேர்தலில் கடுமையான போட்டியைச் சந்திக்க வேண்டியுள்ளது. பிரித்தானிய பொருளாதாரம் மட்டுமல்ல சர்வதேசப் பொருளாதாரமே வீழ்ச்சி கண்டுள்ளதுடன் ஏற்கனவே 12 ஆண்டுகள் தொடர்ச்சியான ஆட்சியினால் மக்களுக்கு ஏற்பட்ட சலிப்பும் மாற்றம் அவசியம் என்ற சிந்தனையை பிரித்தானிய மக்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.

”இலங்கை போன்ற ஜனநாயக நாடுகளில் சிவில் யுத்தம் உயிர்களையும் உரிமைகளையும் பறித்துள்ளது” எனத் தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட் ”அரசாங்கங்கள் பிரஜைகளின் சிவில் சமூக அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்” எனத் தெரிவித்தார்.

பிறைற்றனில் இடம்பெற்ற இம்மாநாட்டில் குரொய்டன் மிச்சம் பகுதி பா உ சியொபெய்ன் மக்டொனா பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட சட்டத்திற்குப் புறம்பான கொலைகளைச் சுட்டிக்காட்டி இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களை வன்மையாகக் கண்டித்து இருந்தார்.

இந்த விவாதங்களின் இறுதியில் இலங்கை அரசுக்கு எதிரான கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கை அரசு வழங்கிய 180 நாள் காலக்கெடுவிற்கு இன்னும் இரு மாதங்களுக்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில் இக்கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளமை இலங்கை அரசு முகாம்களில் உள்ள மக்களை விடுவிப்பதற்கான அழுத்தத்தை மேலும் வலியுறுத்தி உள்ளதாகவே கணிக்கப்படுகிறது.

இலங்கை அரசு முட்கம்பி வேலிக்குள் வன்னி மக்களை அடைத்து வைத்து மீண்டும் மீண்டும் தன் முகத்திரையைக் கிழித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே ஐ நா பாதுகாப்பு கவுன்சிலில் உரையாற்றிய அமெரிக்க உள்துறை அமைச்சுச் செயலர் கிலரி கிளின்டன் இலங்கை பர்மா பல்கன் நாடுகள் பாலியல் பலாத்காரத்தை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தி வருவதாகக் குற்றம்சாட்டி உள்ளார். சர்வதேச அரங்கில் இலங்கை தனது மனிதவுரிமை விடயங்கள் தொடர்பில் பெரும் நெருக்கடிக்கு முகம்கொடுத்து வருகின்றது. கிலரி கிளின்டனின் குற்றச்சாட்டு தொழிற்கட்சியின் தீர்மானம் என்பன சர்வதேச அரங்கில் இலங்கையை மதிப்பிழக்கச் செய்து வருகின்றது.

தொழிற்கட்சியின் மாநாட்டுக்கு முன்னதாக லிபிரல் கட்சியின் வருடாந்த மாநாடு நடைபெற்றது. அங்கு இலங்கை தொடர்பான குறிப்பான கருத்துக்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. ஆனால் இன்னும் சில தினங்களில் ஆரம்பமாக உள்ள பிரித்தானியாவின் பிரதான எதிர்க்கட்சியான கன்சவேடிவ்கட்சியின் மாநாட்டில் இலங்கை தொடர்பான குறிப்பான விவாதங்கள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழிற்கட்சியுடன் ஒப்பிடுகையில் கொன்சவேடிவ் கட்சி அரசு சார்பான நிலைப்பாட்டைடேயே எடுத்து வருகின்றது. தமிழ் மக்கள் செறிவாக உள்ள பகுதிகளில் உள்ள ஒருசில பாராளுமன்ற உறுப்பினர்கள் தவிர கொன்சவேடிவ் கட்சி அரசு சார்பான போக்கையே கொண்டுள்ளது.

குறிப்பாக தலைநகர் லண்டனில் தமிழர்களின் வாக்குகள் வெற்றியை நிர்ணயிக்கும் வல்லமையைக் கொண்டிருந்த போதும் அவ்வாக்குகள் முழுமையாக ஒரு குறிப்பிட்ட கட்சியை நோக்கிச் செல்லும் நிலையில்லை. இத்தேர்தலில் தொழிற்கட்சியின் கோர்டன் பிரவுணா? கொன்சவேடிவ் கட்சியின் டேவிட் கமரூனா? “நந்திக் கடலில்” கரையொதுங்குவார்கள் என்பதனை பிரித்தானிய மக்கள் இன்னும் சில மாதங்களில் தீர்மானிப்பார்கள்.

தமிழ்மணி அரங்க முருகையன் : என் செல்வராஜா (நூலகவியலாளர்)

லண்டனில் எம்மிடையே நீண்டகாலமாக வாழ்ந்து அண்மையில் 13.09.2009 அன்று மறைந்துவிட்ட தமிழ்மணி அரங்க முருகையன் அவர்களை அறியாத தமிழ் இலக்கிய ஆர்வலர்களோ, கல்விசார் சமூக அமைப்புகளோ இருக்க முடியாது.

தமிழ்நாடு கும்பகோணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட அரங்க முருகையன் 1932ஆம் ஆண்டு ஒக்டோபர் முதலாம் திகதி பிறந்தவர். தனது உயர்நிலை மற்றும் பல்கலைக்கழகப் பட்டப்படிப்பினை தமிழகத்திலும் சிங்கப்பூரிலும் பெற்றுக்கொண்டவர். இவரது துணைவியார் சுசீலா (சுசேதா) அம்மையாரும் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட ஒரு போராளியின் மகளாவார். தன் கணவனுக்கு ஈடுகொடுக்கும் தமிழறிவு மிக்கவர். தமிழ்மணி அரங்க முருகையன் அவர்கள் தமிழகத்தில் சிலகாலம் ஆசிரியராகப் பணியாற்றிய பின்னர் சிங்கப்பூருக்கு வந்து அங்கு வெளிவந்த மலாயா நண்பன் நாளிதழில் சில காலம் துணை ஆசிரியராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றினார்.

பின்னாளில் பிரித்தானிய வான்படையின் எழுதுவினைஞராக (clerk) தேர்வுபெற்று சுமார் இருபது ஆண்டுகள் சிறப்புடன் பணியாற்றித் தரம் உயர்ந்து பின்னாளில் தலைமை எழுதுவினைஞராகவிருந்து, 1972இல் பிரித்தானிய படைக்கலைப்பின்போது தனது பணியிலிருந்து ஓய்வுபெற்றார்.

அதன் பின்னர் தமிழகத்திற்குத் திரும்பிச்சென்று சிலகாலம் வணிகத்துறையில் ஈடுபட்டுவந்தார். இக்காலப்பகுதியில் நித்திலம் என்னும் தனித்தமிழ் மாத இதழொன்றைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தினார். சிறிது காலத்தின் பின்னர் அதனை பண்ணாய்வாளர் குடந்தை ப.சுந்தரேசனாரிடம் ஒப்படைத்துவிட்டு குடும்பத்தினருடன் மீண்டும் ஐரோப்பிய மண்ணில் வந்து வாழத்தொடங்கினார்.

மீண்டும் லண்டன் வந்த அரங்க முரகையன் அங்கு விமான நிலைய பண்டகசாலைப் பொறுப்பாளராகப் (Store keeper) பணியாற்றினார். தமிழ் அபிமானம் காரணமாக லண்டனில் வெளிவந்துகொண்டிருந்த இலண்டன் முரசு, தமிழன் குரல் ஆகிய பத்திரிகைகளில் சிறப்பாசிரியராகவும் இவர் பணியாற்றித் தமிழ் வளர்த்தார்.

அரங்க முருகையன் செந்தமிழைப் பேச்சுவழக்கிலும் பாவிக்கவேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்து வந்தவர் மட்டுமல்ல அவ்வாறே வாழ்ந்தும் காட்டியவர். அவருடன் தொடர்புகொண்ட எவரும் இதனை எளிதிலேயே புரிந்துகொள்வார்கள். முடிந்தவரையில் தனது தொடர்பாடல்களில் செந்தமிழைக் கலப்பில்லாது பேசும் ஆற்றல் கொண்டவர். அவரது தமிழ் அபிமானம் தீவிரமானது.

ஆரம்பகாலத்தில் லண்டன் திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளியின் தேர்வாளராகவும் பணியாற்றிய அமரர் அரங்க முருகையன் பின்னாளில் 1978இல் லண்டன், கிறீன்போர்ட் என்னுமிடத்தில் இயங்கிவரும் மேற்கு லண்டன் தமிழ்ப்பள்ளியின் மொழித்துறைத் தலைவராகவும், மேனிலைப் பயிற்றாசிரியராகவும் நீண்டகாலம் பணியாற்றியவர். அரங்க முருகையன் அவர்கள் தமிழ் மாணவர்களுக்கென பல நூல்களை எழுதியிருக்கின்றார். இவற்றில் ஆறுமுக நாவலரின் தமிழ் இலக்கணச் சுருக்கம் விதந்து கூறப்படுகின்றது. ஆறுமுகநாவலர் எழுதிய இந்நூலை எளிய தமிழில் பலரும் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் அரங்க முருகையன் ஆக்கியுள்ளார். புகலிடச் சிறார்களின் நன்மை கருதி இலண்டன் தமிழ் வாசகம் என்ற பள்ளிப் பாடநூலை 3 பகுதிகளாக வெளியிட்டிருந்தார். பிரித்தானியப் பள்ளிகளின் ஒன்றியப் பாடநூல் வரிசையில் தமிழறிவு என்ற நூல் 1முதல் 7ஆவது தரம் வரை இவரால் எழுதப்பட்டன.

உலகத் தமிழ்க் கழகத்தின் பிரித்தானியக் கிளையின் தலைவராகவும் இவர் பணியாற்றியிருக்கிறார். இவர் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதிய பல நூறு கதை, கவிதை, கட்டுரைகள் பரவலாகத் தமிழகத்திலும் தமிழர் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் உள்ள ஊடகங்களில் பிரசுரமாகியுள்ளன. அரங்க முருகையன் எழுதிய மூன்று நாடகங்கள் சிங்கப்பூர் வானொலியிலும் ஒலிபரப்பப்பட்டுள்ளன.

இருபத்தொன்றாம் நூற்றாண்டில் கோயில்களின் பணியும், வழிபாட்டு முறையும் என்ற இவரது நூல், சைவ உலகம் என்ற காலாண்டிதழில் வெளிவந்த கட்டுரையொன்றின் நூலுருவாகும். மேலைத்தேய வாழ்வியலில் கோயில்களின் பணிகள் பற்றிய தமிழ்மணி அரங்க முருகையனின் கருத்துக்கள் இந்நூலில் சிந்தனையைத் தூண்டும் விதத்தில் பதிவாகியுள்ளன. கோயில்கள் பழங்காலத்திலே இயங்கியதைப் போன்று தான் சார்ந்த சமூக வாழ்வியலுடன் ஒன்றிணைந்து வளரவேண்டும் என்று அரங்க முருகையன் இந்நூலில் ஆணித்தரமாக வலியுறுத்தியிருக்கிறார். கோவில்கள், சமூக மக்கள் ஒன்றுகூடும் இடமாகவும், அமைதியாக வழிபாடு செய்யவும், வயிற்றுப் பசியாறும் அறச்சாலையாகவும், மக்களுக்கு எழுத்தறிவிக்கும் கல்விக் கூடமாகவும், நுண்கலைகளைப் பயிலும் கலைக்கூடமாகவும், அக்கலைகளை அரங்கேற்றும் மண்டபமாகவும் இன்றைய நவீன ஆலயங்கள் சமூகத்துடன் ஒன்றிணைந்து இயங்கவேண்டும் என்று அரங்க முருகையன் அவர்கள் இந்நூலில் குறிப்பிடுகி;ன்றார்.

அரங்க முருகையனின் நாவலான தொடர்வண்டித் தூது ஒரு தூயதமிழ் நாவலாகும். சிக்கலற்ற ஒரு காதல் கதையின் பின்னணியில் இலண்டன் வாழ்க்கையை நூலாசிரியர் அரங்க முருகையன் அவர்கள் இனிய தமிழில் இந்நாவலில் கூறியிருக்கின்றார். மேலை நாடு ஒன்றுக்குரிய இயல்பான மேற்கத்தைய கலாச்சாரத்திலே வாழ்ந்தபோதிலும் தமது பாரம்பரியங்களைப் பேணி வாழ்கின்ற இரு தமிழ்க் குடும்பங்களினால் சீரிய முறையிலே வளர்க்கப்பட்ட இரண்டு இளம் நெஞ்சங்களை ஓர் தொடர்வண்டிப் பயணம் இணைத்துவிடுகிறது. மெல்ல அரும்பும் காதல் வேட்கை வளர்ந்து இரண்டு உள்ளங்களையும் பற்றிக்கொண்டு விடுகின்றது. ஆனால் வெறியிலும் நெறி என்பது போலக் கண்ணியத்தின் வரம்புகளுக்குட்பட்டு எவ்வாறு அந்த இரண்டு நெஞ்சங்களும் காதலில் வெற்றி பெறுகின்றன என்பதோடு தத்தம் குடும்பத்தவரின் ஆசியுடன் கடிமணம் புரிந்து கொள்கின்றன என்பதுதான் இந்த நெடுங்கதையின் கருவாகும்.

இலண்டனில் உள்ள ஈழத்தமிழருடன் மிக நெருங்கிய தொடர்பினைக் கொண்டுள்ள அரங்க முருகையன் அவர்கள் லண்டன் முரசு, தமிழன் குரல் ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியர் குழுவிலும் இடம்பெற்றிருந்தார். இவர் ஈழத்தமிழர்பாற்கொண்ட பற்றின் ஆழத்தை தமிழீழம் கோரி ஐக்கிய நாடுகள் பொது மன்றத்தில் முழக்கம் என்ற தலைப்பில் இவர் 1980இல் கும்பகோணத்தில் எழுதி வெளியிட்ட முதலாவது நூலே சான்றாகும். சோழர் வெற்றி என்ற இவரது மற்றொரு நூலும் தமிழரின் வரலாற்றின் செழுமைமிகு காலகட்டத்தினைப் பதிவுக்கு உள்ளாக்கியுள்ளது.

அமரர் அரங்க முருகையன் லண்டனில் இயங்கிய திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளியின் தேர்வாளராகவும் இங்கு இயங்கியுள்ளார். 1978ம் ஆண்டு முதல் கிரீன்போர்ட்டிலுள்ள மேற்கு லண்டன் தமிழ்ப் பள்ளியில் மொழித்துறைத் தலைவர் பணியில் ஈடுபட்டுழைத்துவந்தார். உலகத் தமிழ்க் கழகத்தின் பிரித்தானியக் கிளையின் தலைவராகவும் இவர் சேவையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமரர் அரங்க முருகையன் எழுதி வெளியாகிய இறுதி நூலாக பழந்தமிழரின் வியத்தகு நிலத்திணை உயிர் நுண்ணறிவு என்ற நூல் அமைகின்றது. மரம் செடி கொடிகள் பற்றிய தமிழரின் மூலிகை அறிவினை விதந்து கூறுவதாக இந்நூல் அமைந்துள்ளது. தன் வாழ்விலும் கனவிலும் தமிழ் இனத்தையும், மொழியையும், அதன் சிறப்பையும் மட்டுமே உயிராகக்கொண்டு வாழ்ந்த அந்தப் பெருமனிதன் 13 செப்டெம்பர் 2009 அன்று தனக்கு ஏற்பட்ட முடக்குவாத நோயினால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார். அவரது மரணம் உலகத்தமிழ் அறிஞர்களுக்கு ஓர் பேரிழப்பாகும்.