::யுத்த நிலவரம்

::யுத்த நிலவரம்

இலங்கையில் நடைபெறும் யுத்தம் தொடர்பான செய்திகள், கட்டுரைகள், ஆய்வுகள்.

“வெறுப்பை வளர்க்காதீர்கள். முன்மாதிரியாக நடந்து கொள்ளுங்கள்.” – அக்தார், சமி ஆகிஆயாருக்கு அப்ரிடி அறிவுரை !

பாகிஸ்தான் தோல்வி அடைந்ததை தொடர்ந்து அக்தர் வெளியிட்ட டுவீட்டை சமி கிண்டல் செய்து இருந்தார். கராச்சி, மெல்போர்ன் மைதானத்தில் நேற்று உலகக் கோப்பை டி20 கிரிக்கெட்டின் இறுதிப் போட்டி நடைபெற்றது.

இதில் முதலில் பாகிஸ்தான் பேட்டிங் செய்து 137 ஓட்டங்களே அடித்தது. பின்னர், 138 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து பென் ஸ்டோக்ஸின் சிறப்பான ஆட்டத்தால் 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. பாகிஸ்தான் தோல்வியடைந்ததும், அந்நாட்டின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் இதயம் உடைந்தது போன்ற எமோஜி படத்தை டுவிட்டரில் வெளியிட்டிருந்தார். அதற்கு ரி-டுவீட் செய்திருந்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி ”மன்னிக்கவும் சகோதரரே, இது தான் கர்மா” எனப் பதில் அளித்திருந்தார்.

Read all Latest Updates on and about முகமது சமி

அரையிறுதி போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது குறித்து கருத்து தெரிவித்த இருந்த அக்தர், பாகிஸ்தானை இறுதிப் போட்டியில் எதிர்கொள்ளும் தகுதி இந்தியாவுக்கு இல்லை என்று கூறி இருந்தார். பாகிஸ்தான் இறுதி போட்டியில் வீழ்ந்ததால் அதனை கிண்டல் செய்யும் வகையில் முகமது ஷமி ஒரே வார்த்தையால் நீங்கள் செய்தது உங்களுக்கே வந்துவிட்டது என்ற பொருள்படும் வகையில் கூறி உள்ளார்.

இந்த நிலையில் சமியின் இந்த பதில் குறித்து பேசியுள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி,

இந்நாள் மட்டும் முன்னாள் வீரர்கள் இதுபோன்ற கருத்துக்களால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மக்களிடையே வெறுப்பை வளர்க்க வேண்டாம் என்று வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ” நாம் கிரிக்கெட் வீரர்கள். இந்த விளையாட்டின் முன்மாதிரிகளாகவும், தூதர்களாகவும் இருக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. அனைத்து வெறுப்பையும் முடிவுக்குக் கொண்டுவர நாம் முயற்சிக்க வேண்டும். மாறாக வெறுப்பை வளர்க்கும் செயல்களை நாம் செய்யக்கூடாது. இதுபோன்ற செயல்களை நாமே செய்ய ஆரம்பித்தால், சாமானிய மக்களிடம் நாம் என்ன எதிர்பார்க்க முடியும். விளையாட்டின் மூலம் தான் இந்தியா- பாகிஸ்தான் உறவுகள் மேம்படும். பாகிஸ்தான் அணி அவர்களுடன் விளையாடுவதை காண விரும்புகிறோம். அதே போல் இந்திய அணியும் பாகிஸ்தானில் விளையாடுவதைப் பார்க்க வேண்டும்” என்றார்.

நேரம் நெருக்குகின்றது! புலிகள் யாரிடம் சரணடைவது? : த ஜெயபாலன்

LTTE LOGOஇன்று வெளியாகி வருகின்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக யுத்தம் உச்ச கட்டத்தை அடைந்திருந்த காலப்பகுதியிலேயே தேசம்நெற் இது தொடர்பான பல கட்டுரைகளை எழுதி மனித அவலத்தை நிறுத்துமாறு யுத்தத்தில் ஈடுபட்ட இருதரப்பையும் வலியுறித்தி இருந்தது. பாரிய தோல்விகளைச் சந்தித்த தமிழீழ விடுதலைப் புலிகளை இறுதிநேரம் வரை காத்திருந்து மனித அவலத்தை ஏற்படுத்தாமல் பல மாத்ங்களுக்கு முன்னதாகவே சரணடைய வேண்டும் என்றும் கேட்கப்பட் இருந்தது. ஆனால் இன்று அனைத்தும் காலம்கடந்தவையாகி உள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகளினதும் அதன் புலம்பெயர் ஆதரவாளர்களினதும் அரசியல் எப்போதும் கண்கெட்ட பின் சூரிய நம்ஸ்காரமாகவே இருந்துள்ளது.

”ஆயுதங்களை சர்வதேச கண்காணிப்பில் வைத்துவிட்டு புலிகள் பேச்சுவார்த்தைக்கு முன்வருவதை வரவேற்கிறோம்” சிவாஜிலிங்கம் – நேர்காணல் : ரி சோதிலிங்கம் & த ஜெயபாலன்

”எமது மக்களது பாதுகாப்பின் நிமிர்த்தமே ஆயுதம் தரித்தோம், ஆகையால் அவர்கள் பேரில் அவற்றினை களையவும் தயாராக இருக்க வேண்டும்.” : ரவி சுந்தரலிங்கம்

”எல்ரிரிஈ இன் சரணடையும் கோரிக்கை மிகவும் காலம் தாழ்த்தியே வந்தது. முன்னரே சரணடைந்து இருந்தால் பல்லாயிரம் உயிர்கள் காப்பாற்றப்பட்டு இருக்கும்” எரிக் சொல்ஹைம்

சரணடைந்தவர்கள் சித்திரவதைக்கு உட்பட்டு படுகொலை செய்யப்பட்ட பல தகவல்கள் வெளிவருகின்ற நிலையில் மே 17 2009ல் பதிவிடப்பட்ட இப்பதிவை மீண்டும் மீள்பதிவிடுகிறோம்.

._._._._._.

May 17 2009

நேரம் நெருக்குகின்றது! புலிகள் யாரிடம் சரணடைவது?

புலிகளின் ‘பிளக் சற்றடே’ ஆக அமைந்த நேற்றைய தினம் (மே 16 2009) எல்ரிரிஈ இன் பிளக் சற்றடே – Black Saturday : இந்தியா தேர்தல் முடிவு : த ஜெயபாலன், முதல் பல்வேறுபட்ட ஊர்ஜிதமற்ற செய்திகள் பரவலாக வெளிவருகின்றன. புலிகளின் சர்வதேச இணைப்பாளர் செல்வராஜா பத்மநாதன் வெளியிட்ட வேண்டுகோளுக்கு அமெரிக்காவின் ஒபாமா நிர்வாகம் இதுவரை சாதகமான சமிஞைகள் எதனையும் இதுவரை வெளியிடவில்லை எனத் தெரிகிறது. புலிகளின் சர்வதேச இணைப்பாளரின் வேண்டுகோள் வன்னியில் உள்ள தலைமைத்துவத்துடன் தொடர்பு கொண்டு வெளியிடப்பட்ட வேண்டுகோள் என்றே கூறப்படுகிறது. ஏற்கனவே இவ்வாறான முயற்சிக்கு இந்திய சம்மதித்திருக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இறுதி நேரத் திருப்பங்களில் மிகுந்த நம்பிக்கையுடைய புலிகள் அவ்வாறான திருப்பத்திற்கு காத்திருப்பதாகவே நம்பப்படுகிறது.

நேற்றைய இந்தியத் தேர்தல் முடிவுகளால் மிகுந்த ஏமாற்றமடைந்த புலிகள் தங்கள் தோல்வியை ஏதோ ஒரு வகையில் தங்கள் முகத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் கடைசி முயற்சிகளில் இறங்கி உள்ளனர். அதன் இறுதி நடவடிக்கையாகவே ஒபாமா நிர்வாகத்திற்கு புலிகளின் சர்வதேச இணைப்பாளர் விடுத்த வேண்டுகோள் அமைந்து உள்ளது. இலங்கை இராணுவத்திடம் புலிகளின் தலைமை சரணடைவது அவர்களுடைய கடந்த மூன்று தசாப்த போராட்டத்தையும் அர்த்மற்றதாக்கி அவர்களது வரலாறும் களங்கப்பட்டுவிடம் என்பதை சரியாகவே உணர்ந்து உள்ளனர். அதனால் இலங்கை இராணுவத்திடம் சரணடையாமல் ஒபாமா தலைமையிலான அமெரிக்க அரசாங்கத்திடம் சரணடைவதன் மூலம் தங்கள் முகத்தை காப்பாற்றிக் கொள்ள முடியும் எனக் கருதுகிறார்கள்.

ஆனால் புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளர் தனது வேண்டுகோளை இந்தியாவை நோக்கி விடுத்து இருந்தால் இந்த யுத்தத்தைப் பின்னணியில் இருந்து நடாத்தும் இந்தியா அதற்கு சம்மதிப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருந்திருக்கும். ஆனால் பிராந்திய வல்லாதிக்கத்தை நிலைநிறுத்த முயலும் இந்தியா தனது கொல்லைப்புறத்தில் அமெரிக்க யுத்தக் கப்பல் வந்து அதனிடம் புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைவதை ஏற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது. புலிகளுக்கு இந்தியாவிடம் சரணடைவதில் உள்ள முக்கிய பிரச்சினை புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் பொட்டம்மானுக்கும் இந்தியா விதிதத்து உள்ள பிடியாணை. இவ்விருவரும் இராணுவத்தினால் சுற்றி வளைக்கப்பட்டுள்ள பகுதியினுள் இருந்தால் இந்தியாவிடம் சரணடையும் முடிவை எடுத்திருக்க இயலாது. அவ்வாறு சரணடைந்து இந்தியாவை அரசியல் சிக்கலுக்குள் மாட்டிக் கொள்ள வைக்கும் அரசியல் வல்லமை புலிகளிடம் இல்லை. அவர்களிடம் உள்ள முரட்டுத்தனமான ஈகோ அவர்களது உயிருக்கும் ஆபத்தாகி உள்ளது.

இன்று (மே 17 2009) அதிகாலை முள்ளிவாய்க்கால் களமுனையில் பாரிய தாக்குதல் ஒன்றை மேற்கொண்டு தப்பிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக உறுதிப்படுத்த முடியாத செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தப் பாரிய தாக்குதலில் நூற்றுக் கணக்கான இராணுவத்தினர் கொல்லப்பட்டு இருக்கலாம் எனவும் அச்செய்தி தெரிவிக்கின்றது. இத்தாக்குதல் புலிகளின் தலைவர் பிரபாகரனைக் காப்பாற்றுவதற்கான ஒரு முயற்சியாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஆளில்லாத விமானங்கள் தாள்வாகப் பறந்து வேவு பார்த்ததில் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் இராணுவத்தினால் சுற்றி வளைக்கப்பட்ட பகுதியினுள் இருப்பதாகவே இராணுவம் நம்புவதாக உறுதிப்படுத்த முடியாத மற்றுமொரு செய்தி தெரிவிக்கின்றது.

இன்றைய தாக்குதலைத் தொடர்ந்து இராணுவம் சுற்றுவளைக்கப்பட்ட பகுதி தொடர்பாக இறுதியான சில முடிவுகளை எடுக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது. ஏற்கனவே இராணுவம் தற்போது சுற்றி வளைக்கப்பட்ட பகுதியில் இருந்து கடந்த 72 மணித்தியாலங்களில் 50 000 மக்கள் வெளியேறி உள்ளதாகவும் அப்பகுதியில் பொது மக்கள் இல்லை எனவும் தெரிவித்து உள்ளது. பொது மக்கள் அங்கு உள்ளார்களா? அல்லது அனைவரும் வெளியேறிவிட்டார்களா? என்பதனை சுயாதீனமாக யாரும் உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி இருந்தும் பொதுமக்கள் யாவரும் வெளியேறிவிட்டார்கள் என்று இராணுவம் கூறி இருப்பது கடுமையான இராணுவ நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள இராணுவம் தயாராகலாம் என்பதையே வெளிப்படுத்துகிறது.

இராணுவம் புலிகளின் தலைமையை உயிருடன் கைது செய்வதையோ அல்லது அவர்கள் ஆயுதங்களை ஒப்படைத்து தங்களிடம் சரணடைவதையோ பெரும்பாலும் விரும்புகின்றது. வெளியேறி வருகின்ற மக்களுக்கும் இடப்பெயர்வு முகாம்களுக்குமே சர்வதேச பொது ஸ்தாபனங்களை அனுமதிக்காத இலங்கை அரசு புலிகள் ஆயுதங்களை அமெரிக்காவிடமோ அல்லது சர்வதேச அமைப்பு ஒன்றிடமோ ஒப்படைக்க அவ்வளவு இலகுவாக சம்மதித்து விடாது. அதற்கான நெருக்குதல்களே பிரித்தானிய பிரதமர் கோர்டன் பிறவுணின் ‘பின் விளைவுகளை இலங்கை சந்திக்க நேரும்’ என்பது போன்ற அச்சுறுத்தல்கள். இது சர்வதேச அமைப்புகள் மூலமும் இலங்கை அரசுக்கு எதிராக முன்வைக்கப்படலாம்.

ஆனால் மீண்டும் இந்தியாவின் பாத்திரம் இதில் மிகவும் முக்கியமானது. இந்தியா புலிகளை தன்னை நோக்கி மண்டியிட முயற்சிக்கும் என்றே நம்பலாம். அதனால் இலங்கை அமெரிக்காவினதும் சர்வதேசத்தினதும் அழுத்தங்களுக்கு பணியாமல் இருப்பதற்கு இலங்கைக்கு பக்க பலமாக இருப்பதற்கான வாய்ப்புகளே அதிகமாக உள்ளது.

2002ல் நடந்த பத்திரிகையாளர் மாநாட்டில் இந்தியா உங்களுக்கு பிடியாணை பிறப்பித்து உள்ளது பற்றி புலிகளின் தலைவர் வே பிரபாகரனை நோக்கி கேட்கப்பட்ட கேள்விக்கு பிரபாகரன் அப்போது மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கத்துக்கூடாகக் கூறியது, ‘அண்ணை நடக்கிறதை கதைக்கச் சொல்லுங்கோ’ என்ற வகையில் பதிலளித்திருந்தார்.

ஆனால் புலிகள் அடுக்கடுக்காக விட்ட அரசியல் தவறுகள் இன்று அவர்களது மரணம் வரை அவர்களைத் துரத்துகின்றது. ‘அரசன் அன்று கொல்வான். இந்தியா நின்று கொல்லும்.’ என்பது பொருத்தமாகிவிட்டது.

இலங்கை அரசாங்கம் சரணடையும் தருவாயில் உள்ள புலிகள் மீது இராணுவ நடவடிக்கையை மேற்கொள்வதோ அல்லது அப்பகுதி மீது விமானத் தாக்குதல் நடத்துவதோ மற்றுமொரு மனித அவலத்தை உருவாக்கும். மேலும் அது சர்வதேச யுத்த விதிகளை மீறுவதாக அமையும். ஆகவே இந்த யுத்தத்தை மனிதாபிமான நோக்கில் சர்வதேச யுத்த விதிகளுக்கு அமைவாக முடிவுக்கு கொண்டுவருவதே பொருத்தமானது. இராணுவத்தரப்பில் மக்கள் அங்கில்லை என்று கூறப்பட்டாலும் அது சுயாதீனமாக ஒறுதிப்பட்ட ஒன்றல்ல. அப்பகுதி மீது தாக்குதல் நடத்துவது மற்றுமொரு மனித அவலத்தை ஏற்படுத்தும்.

இன்று புலிகள் முற்றாக முடக்கப்பட்ட நிலையில் வெறும் தற்காப்பு நடவடிக்கைகளையே அவர்கள் மேற்கொண்டு உள்ளனர். அதனால் அரசு வலிந்து தாக்குதல் நடத்தி மனித அவலத்தை ஏற்படுத்துவது அவர்கள் புலிகளாக இருந்தாலுமே பாரிய மனிதவிரோதச் செயலாகும். சுற்றி வளைக்கப்பட்டு உள்ள புலிகள் மனிதாபிமான முறையில் கௌரவமாக சரணடைவதற்கான வழிகளுக்கு இலங்கை அரசு ஒத்துழைப்பதே நீண்டகால நோக்கில் தமிழ் மக்களை அரசியல் ரீதியாக வென்றெடுப்பதற்கு வழியை ஏற்படுத்தும்.

அவர்கள் புலிகளாக இருந்தாலும் அவர்கள் போராடுவதற்கான சூழலை இலங்கையில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த இனவாத அரசுகளே ஏற்படுத்தின. அவர்களது போராட்டமுறை பயங்கரமானதாக இருந்துள்ளது. இன்று அவர்கள் இராணுவ பலம் கொண்டு அடக்கப்பட்டு உள்ளனர். அதற்கு மேல் அவர்களைக் கொன்றொழிப்பதை எந்தத் தமிழனும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். ஒவ்வொரு புலியும் ஒவ்வொரு தமிழ் தாயுடைய பிள்ளைகள் சகோதரர்கள். அவர்கள் பிரதான சமூகத்துடன் இணைந்து வாழ்வதற்கான வழியை ஏற்படுத்திக் கொடுப்பது சட்ட பூர்வமான அரசினுடைய முதற்கடமை.

தமிழ் மக்களை அரசின் மீது நம்பிக்கைகொள்ள வைப்பதற்கான மிக முக்கிய காலகட்டம் இது. சுமுகமான அரசியல் தீர்வை ஏற்படுத்தி அனைவரும் இலங்கையர் என்ற உணர்வை ஏற்படுத்துவதற்கும் நாட்டை அபிவிருத்தியை நோக்கி இட்டுச் செல்லவும் உள்ள முதல் நிபந்தனை இன்று சுற்றிவளைக்கப்பட்டு உள்ள புலிகளை கௌரவமான முறையில் சரணடைய ஏற்பாடு செய்து அவர்களையும் வன்னி முகாம்களில் உள்ள மக்களையும் கௌரவமாக வாழ்வதற்கான வழியை ஏற்படுத்துவது.

இதனைவிடுத்து அவசர அவசரமாக இராணுவ நடவடிக்கைகளை முடுக்கிவிட்டு அவர்களை அழிப்பது தமிழ் மக்கள் மத்தியில் பலத்த வன்மத்தை ஏற்படுத்தும்.  மேலும் ஏற்கனவே எல்லைப்புறக் கிராமங்களில் பதுங்கி உள்ள புலிகள் சிங்களக் கிராமங்கள் மீதும் தாக்குதளை மேற்கொள்ளும் அபாயம் உள்ளது. இது 1983யை மீண்டும் நிகழ்த்த வழிககுக்கலாம்.

என்னதான் புலிகள் மக்களைக் கேடயங்களாக பயன்படுத்தி இருந்தாலும் பயங்கரவாதத்தில் ஈடுபட்டு இருந்தாலும் அவர்களை அழிக்க முற்படுவது அரச பயங்கரவாதமாகவே அமையும். ஏற்கனவே ஏற்பட்ட மனித அவலங்களுக்கு அரச படைகளும் சம பொறுப்புடையவர்கள். இன்று அரசு இராணுவ நகர்வில் முழுமையான கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளதால் மற்றுமொரு மனித அவலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் பொறுப்பு அரசினுடையது.

இறுதி யுத்தத்தில் வன்னியில் பணிபுரிந்த மருத்துவர் ஒருவர் கொழும்பில் கைது!

வன்னியில் இறுதி யுத்தத்தின் போது முல்லைத்தீவில் பணியாற்றிய மருத்துவர் கைலைநாதன் சுதர்சன் என்பவர் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் (TID) இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இறுதி யுத்தத்தின் போது மக்களோடு மக்களாக முள்ளிவாய்க்காலில் இருந்து வெளியேறிய அவர் நீண்ட நாட்களாக  தன்னை ஒரு மருத்தவர் என வெளிக்காட்டாது நிவாரண முகாமிலிருந்து வெளியேறி தனது குடும்பத்துடன் சிங்கப்பூர் சென்று, அங்கிருந்து இந்தியா சென்றிருந்தார்.

அங்கு தனது மேற்படிப்பு தொடர்பான விடயங்களை கவனித்திருந்த வேளை, ‘கியூ’ பிரிவினருக்கு இவர் ஒரு மருத்துவர் என்றும், இறுதி யுத்தம் வரை மருத்துவராக பணியாற்றியவர் எனவும் தகவல் கிடைத்தது.  இதனையடுத்து இவரிடம் சென்று பல தடவைகள் விசாரணை நடத்திய ‘கியூ’பிரிவுப் பொலிஸார் நாட்டை விட்டு வெளியேறுமாறு கடுமையான அழுத்தங்களைக் கொடுத்தனர். 

இந்நிலையில் ஏற்கனவே இரண்டு தடவைகள் சிங்கப்பூர் சென்றிருந்த அவர் மீண்டும் தமிழகத்திலிருந்து குடும்பத்துடன்  சிங்கப்பூர் சென்றார். எனினும், ‘கியூ’ பிரிவு பொலிஸார் சிங்கப்பூர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து விமான நிலையத்தில் வைத்தே அவரையும் அவரது குடும்பத்தினரையும் சிங்கப்பூர் பொலிஸார் இலங்கைக்கு நாடு கடத்தினர். பின்னர் இலங்கைப் புலனாய்வுப் பிரிவினருக்கு சிங்கப்பூர் புலனாய்வுப்பிரிவினர் வழங்கிய தகவலையடுத்து  கட்டுநாயக்கா விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு பயங்கரவாதத் தடுப்புப்பிரிவின் இரண்டாம் மாடியில் விசாரணகளுக்குள்ளாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

புலம்பெயர் புனைகதைக்குள் புகுந்துவந்த பயணம். : வவுனியன்

IDP_Child_Carrying_Bucket_of_Waterமே 16ம் திகதிவரை வெள்ளான் முள்ளிவாய்க்காலிலிருந்து பின் இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசம் வந்துள்ள என் ஊராரையும், உறவினரையும் பார்ப்பதற்காக அண்மையில் வவுனியா சென்றேன். புறப்படுமுன் லண்டனிலிருந்து வெளிவந்த செய்திகள் எம்மை சற்று சிந்திக்க வைத்தாலும் இவையெல்லாம் உண்மைதானா என்பதை நேரே சென்று அறியவேண்டும் என்ற ஆவல் எம் பயணத்தை தொடரும்படி தூண்டியது.

விமானத்திலிருந்து வெளியேறும்போது எனக்குள்ளே சற்று தயக்கம். காரணம் பிரித்தானிய கடவுச்சீட்டு கொழும்பு விமானநிலையத்தில் விரும்பப்படாத ஒன்றென்றும், பலர் இம்சைப்படுத்தப்பட்டு வருவதாகவும் புலம்பெயர் ஊடகங்களின் விடாது தொடர்ச்சியான செய்திகளாக இருந்தன.

விமானநிலையத்தின் உள்ளே சென்றதும் swine flu வை அறியும் camera முன்னே வரிசையாக செல்லும்படியான அறிவித்தல் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் செய்யப்பட்டது. அதிகாரிகள் monitor முன் இருந்து எமது உடல் வெப்பத்தை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

பிரமாண்டமான புத்தர் சிலை ஒன்று எம்மை வரவேற்பதுபோல் குடிவரவு அதிகாரிகளின் இருக்கைக்குப் பின்னால் வைக்கப்பட்டிருந்தது. கடவுச்சீட்டை கையளித்தபோது எந்த விதமான முகமாற்றமும் இல்லாது தனது கடமையை செய்துவிட்டு கடவுச்சீட்டை கையளித்தார் அந்த அதிகாரி.

விமான நிலையத்திலிருந்து hotel சென்றபோது இரவு 11 மணி இடையிடையே இராணுவமும் பொலிசும் எம்மை நிறுத்தி சோதனை செய்தார்கள். எந்த இடையுறுமில்லாது நடந்து கொண்டார்கள்.

மறுநாள் காலை வவுனியா செல்வதற்காக கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு சென்றோம். காலை 5.45 மணிக்கு யாழ்தேவி புகையிரதம் கோட்டையிலிருந்து புறப்பட்டது. புறப்படுமுன் அத்தனை அறிவிப்புகளும் சிங்கள மொழியிலேயே செய்தார்கள் எனக்கு எதுவுமே புரியவில்லை. புகையிரதம் மதவாச்சியை அடைந்தபோது அனைவரையும் அவரவர் பொதிகளுடன் வெளியே வருமாறு கேட்கப்பட்டோம். அத்தனை பொதிகளையும் சோதனை செய்தபின் என்னை அந்த அதிகாரி ‘வவுனியா போகமுடியாது’ என்று கூறிவிட்டார். ‘வெளிநாட்டு கடவுச்சீட்டுக்கு MOD (ministry of Defence) அனுமதி வேண்டும்’ என்றார். அந்த அதிகாரியின் கடமை உணர்வை புரிந்துகொண்டு கடவுச்சீட்டுக்குள்ளே வைத்துக் கொடுத்தேன் என்னை வவுனியா செல்வதற்கு அனுமதித்தார்.

1985 ம் ஆண்டு லண்டன் செல்வதற்காக வவுனியா புகையிரத நிலையத்தில் நின்றபோது என் நண்பர் கொக்காவில் இராணுவமுகாம் தாக்குதலில் கொல்லப்பட்ட செய்தி கிடைத்தது. புகைவண்டி வவுனியாவை அடைந்தபோது அந்த ஆண்டு என் கண்முன்னே வந்து போனது. 25 ஆண்டுகால நகர்வு ஓர் சினிமாவை பார்த்தது போன்ற உணர்வை கொடுத்தது.

புகையிரத நிலையத்திலிருந்து வீடுசென்ற போது இது வவுனியாவோ இல்லை யாழ்ப்பாணமோ என்ற குழப்பம் எனக்குள்ளே. பார்க்குமிடமெல்லாம் பசுமையான வயல்களும் குளங்களுமாக வேலிகளேயில்லாமல் இருந்த வவுனியா நகர்ப்புறம் இன்று வயல்களும் குளங்களும் மண்ணால் நிரப்பப்பட்டு மேட்டு நிலங்களாகவும் நான்கு பக்கமும் கிடுகுகளால் மூடி அடைக்கப்பட்ட வேலிகளாலும், ஒலிபெருக்கி மூலம் இரவுபகலாக ஓலமிடும் இந்துக் கோயில்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதை உணர்ந்தேன்.

வவுனியாவை யாழ்ப்பாண இந்து மயமாக்கும் திட்டமிட்ட செயல்பாடோ இதுவென்று என்மனம் என்னையே கேட்டது. அடங்காத் தமிழன் சுந்தரலிங்கம் வாழ்ந்த காலப்பகுதிக்கு வவுனியா தள்ளப்பட்டு விட்டதென்று முணுமுணுத்தார் என்னை கூட்டிச்சென்ற நண்பர்.

சில நாட்களே வவுனியாவில் தங்கிநிற்கக் கூடிய நிலையிருந்ததால் கிடைக்கின்ற பொழுதெல்லாம் அவர்களிடமிருந்து தகவல்களைப்பெறும் நோக்கில் அவர்களோடு பேசிக்கொண்டேன்.

“எம்மை யாருமே காப்பாற்றவில்லை கடவுள்தான் காப்பாற்றினார்” என்று  ஆரம்பித்தார்கள். நடந்தவற்றை அறியும் ஆவலில் கடந்த ஒரு வருடமாக தொடர்ச்சியாக நடந்த சம்பவங்களை மிகவும் ஆவலுடன் கேட்டுக்கொண்டேன்.

மன்னாரில் நடந்த போரில் பல போராளிகள் கொல்லப்பட்டதாகவும், ”கிளிநொச்சியை இராணுவம் அண்மித்ததும் பொதுமக்கள் மீது விடுதலைப் புலிகள்  பலாத்காரத்தை பிரயோகிக்கத் தொடங்கிவிட்டார்கள்” என்று கூறினார்கள்.

”எதற்காக பொதுமக்கள் மீது பலாத்காரத்தை செலுத்தினார்கள்” என்று கேட்டபோது ”இழந்த பிரதேசங்கள் இராணுவத்திடம் பறிபோகுமென்று அவர்கள் என்றுமே எண்ணியதில்லை, பறிபோனதால் அவர்கள் மனஉளைச்சலுக்கு தள்ளப்பட்டு விட்டார்கள்” என்றனர். தளபதி திலீபனிடம் ”எதற்காக மக்கள்மீது இப்படி பலாத்காரம் செய்கிறீர்கள்” என்று கேட்க ”இது மேலிடத்து உத்தரவு” என்றாராம்.

பலாத்காரமாக பிள்ளைகளைப் பிடிக்க வரும்போது பெற்றோர் அவர்களை எதிர்த்தால் அவர்களை அவ்விடத்திலேயே சுட்டுவிட்டு பிள்ளையை பிடித்துச்சென்ற சம்பவங்களை சிலர் கூறினார்கள். பிள்ளை மறுத்தால் பெற்றோருக்கு முன் பிள்ளையை சுட்டுவிட்டு இப்போ என்ன செய்வீர்கள் என்று கேட்டுவிட்டுப் போவார்களாம் போராளிகள்.

”பலாத்காரமாக இயக்கத்தில் இணைத்துக் கொண்ட போராளிகளே தோல்வியின் முதல்காரணி” என்றார்கள். ஒருவாரகால  ஆயதப் பயிற்சியோடு களம் இறக்கி விடுவார்களாம். அவர்கள் எப்போதும் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துள் தப்பிச் செல்லவே விருப்பம் கொண்டிருந்தார்களாம்.

தளபதி தீபன் இறப்பதற்கு முன்னதாக மிகப்பாரிய இராணுவ ஊடறுப்பொன்றை செய்வதற்காக சொர்ணம் தலைமையில் சென்றதாகவும், சென்ற வழியில் இராணுவத்தினர் முன்கூட்டியே நிலையெடுத்திருந்ததால் அதில் 450 க்கும் மேற்பட்ட போராளிகளையும், சொர்ணம் தனது காலையும் இழந்ததாக குறிப்பிட்டார்கள்.

நெஞ்சின் தோள்பகுதியில் குண்டுபட்ட தீபன் இரண்டு நாட்களாக களத்தில் நின்று போராடி மூன்றாம் நாள் எறிகணை பட்டு இறந்ததாகவும், பங்கர் வாசலிலே படுத்திருந்த விடுதலைப் புலிகளின் நிதிப்பொறுப்பாளர் தமிழேந்தி மீது செல் விழுந்து வெடித்து அவர் மரணித்துள்ளார்.

இறந்த உடல்கள் ஆங்காங்கே நாட்கணக்கில் துர்நாற்றம் வீசியபடி கிடந்த காட்சியையும், காயப்பட்டவர்கள் மருத்துவ வசதியின்றி ஆங்காங்கே கிடந்ததாகவும்; துர்நாற்றமெடுத்து ஈ மொய்க்கின்ற காட்சி சர்வசாதாரணமாக இருந்தது என்றார்கள்.

இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் தப்பிவர முனைந்த பலர் புலிகளினால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவங்களை சிலர் விபரித்தனர்.

இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான மோட்டார் சைக்கிளை கொடுத்து இரண்டு தேங்காய் வாங்கிய கதையை கூறிய அதேவேளை ஓரு இலட்சம் வரையான நெல் மூட்டைகளை விடுதலைப் புலிகள் அப்படியே இராணுவத்திடம் கைவிட்டு வந்ததாக கூறியபோது உணர்ச்சிவசப்பட்டார்கள்.

ஓவ்வொரு இடப்பெயர்வின் போதும் கைவிட்டுச்சென்ற தமது உடைமைகளையும் இழந்த உறவுகளையும் எண்ணி கண்ணீர் வடித்தார்கள்.  பார்க்குமிடமெல்லாம் பிணங்களும், கேட்பதெல்லாம் மரணஓலங்களுமாக பல வாரங்கள் கழிந்தன என்று தேம்பித் தேம்பி அழுதார்கள்.

பங்கருக்குள் இருந்தபோது விடுதலைப் புலிகளின் ஆலோசகர் திருநாவுக்கரசு கடந்த இரு வருடங்களாக பிரபாகரனுக்கு சித்த சுவாதீனம் பிடித்து விட்டதென்று கூற அங்கிருந்த மற்றய விடுதலைப் புலிகளின் விசிறிகள் அவரோடு கைகலப்பிற்கு சென்று விட்டார்களென்று ஒருவர் தெரிவித்தார்.

இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வந்தபோது எப்படி இராணுவம் நடந்து கொண்டது என்று விடுதலைப் புலிகளின் மிகவும் நெருக்கமானவரிடம் கேட்க ”என் மனச்சாட்சியை தொட்டுச் சொல்கிறேன் மனிதர்களைப்போல் நடந்துகொண்டார்கள்” என்றார்.

அடுத்தநாள் வவுனியா நகரைப் பார்ப்பதற்காக சென்றோம். 25 ஆண்டுகால போரின் அழிவுகளை மக்கள் முகங்கள் மட்டுமல்ல வவுனியா நகரும் காட்டிக் கொடுத்தது.

நகருக்கு அண்மையில் உள்ள சிங்களப் பாடசாலையான காமினி மகாவித்தியாலயத்தில் போராளிகளை மட்டும் வைத்து பராமரிக்கிறார்கள். வெறும் முட்கம்பிகளால் அடைக்கப்பட்ட வேலிக்குள் அவர்கள் மிகவும் லாவகமாக நடமாடுகிறார்கள்.

உறவினர்கள் முட்கம்பிக்கு வெளியே நின்று பேசிக்கொண்டிருந்தார்கள். கிடுகுகளால் வேயப்பட்ட கொட்டகைகளுக்குள் ஏதோ வகுப்புகள் நடந்துகொண்டிருந்தன.

முகாமிலிருந்து சில நாட்களுக்கு முன் வெளியேறிய சிலருடன் பேசியபோது முகாமுக்குள் பல குழந்தைகள் திடீர் திடீரென இறந்து போவதாகவும், இந்த இறப்புக்கு அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பொலித்தீன் கூரைகளே காரணம் என்று வைத்தியர்கள் சந்தேகப்படுவதாக கூறினர்.

மேலும் சில நாட்கள் தங்கியிருந்துவிட்டு யாழ்தேவி மூலம் கொழும்பை வந்தடைந்தோம். மறுநாள் லண்டன் பயணிப்பதற்காக விமான நிலையம் சென்றபோது உள்ளேயும் வெளியேயும் விமானப்படை அதிகாரிகள் மிகவும் கண்ணியமாக நடந்துகொண்ட முறை என்னை 2005 ம் ஆண்டு புலிகளின் புளியங்குள விசா காரியாலயத்தோடு ஒப்பிட வைத்தது.

2005ம் ஆண்டு யாழ் செல்வதற்காக தரைவழியாக புளியங்குளம் சென்றோம். வாகனத்தை விட்டு இறங்கியதும் “அ” க்கு போங்கள் “இ” க்கு போங்கள் “பு” க்கு போங்கள் என்று பயணிகளையும் வாகன உரிமையாளர்களையும் மந்தைகள் போல் நடாத்திய காட்சி என் கண்முன்னே வந்துபோனது.

கிளிநொச்சியிலுள்ள விசா காரியாலயத்துக்கு சென்றபோது அந்த இளம் அதிகாரி ”லண்டனிலே விடுதலைப் புலிகளிற்கு பணம்கொடுத்த ரசீது இருக்கிறதா?” என்றார். ”இல்லை” என்றேன். ”அப்படியென்றால் விசா கிடைக்காது” என்றார். ”விசா எடுக்க வேண்டும் என்ற நோக்கில் எவரும் பணம் கொடுப்பதில்லை” என்றேன்.

”அப்படி அறிவதாயின் உங்கள் area  பொறுப்பாளருடன் தொடர்புகொண்டு அறியுங்கள்” என்றேன். என்னை கூட்டிச் சென்றவரின் முகமாற்றம் என்னை தொடர்ந்து பேசவிடாது தடுத்தது.  அப்போது எம் நீண்ட இருக்கையின் மூலையில் ஒருவர் காத்திருந்தார், அவரைக் காட்டிய அந்த அதிகாரி ”அதோ பாருங்கள் அந்த நபர் லண்டனிலிருந்து வந்தவர். இரு வாரங்களாக இங்கே வந்து போகிறார். இவர் லண்டனில்  விடுதலைப் புலிகளிற்கு எதிராக பிரச்சாரம் செய்தவர். அதனால் அவருக்கு தண்டனை இது” என்று சொன்னார்.

”சுனாமி அடித்தபோது புலம்பெயர் தமிழ் மக்களிடம்தானே பணம் பெற்றீர்கள். இப்போது ஏன் அவர்களை இப்படி நடாத்துகிறீர்கள்?” என்று கேட்டேன். ”தமிழீழத்துக்கு உல்லாசப் பயணியாக எந்தத் தமிழனும் வரத்தேவையில்லை” என்றார் இறுமாப்போடு. ”அப்படி உல்லாசப் பயணிகள் தேவையென்றால் நாம் ஐரோப்பியரை அழைப்போம் இங்கே” என்றார்.

நடந்தவற்றை  அன்று பல விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுக்கு தெரியப்படுத்தினேன். அதை அன்று அவர்கள் விடுதலைப் புலிகளின் வளர்சியாகவே பார்த்தார்கள். மே18 வரை அதே நம்பிக்கையோடு வாழ்ந்தார்கள்.

அதனால்தான் அவர்களால் இன்றுள்ள உண்மை நிலையை ஏற்றுக்கொள்ள முடியாமல் தொடர்ந்தும் புனை கதைகளை கட்டவிழ்த்து விட்ட வண்ணம் உள்ளனர்.

இந்தக் கலையை கற்றுக் கொடுத்தவர்கள் நம்முடைய TULF என்பது அனைவரும் அறிந்ததே. 1977 ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில் ‘கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து முன்தோன்றிய மூத்தகுடி’ என்றார்கள். ‘ஆண்ட பரம்பரை மீண்டுமொருமுறை ஆளநினைப்பதில் என்னதடை’ என்றார்கள். இவ்வாறே என் மனம் அங்குமிங்கும் போய்வர விமானம் லண்டனை வந்தடைந்தது.

”300 000 பேரை முகாம்களில் தடுத்து வைத்திருப்பது மனிதத்துவமற்ற செயல்” பிரித்தானிய தொழிற்கட்சி மாநாட்டில் தீர்மானம் : த ஜெயபாலன்

David_Milliband_LP_Conferenceஆண்கள் பெண்கள் குழந்தைகள் என 300 000 பேரை முகாம்களில் தடுத்து வைத்திருப்பது மனிதத்துவமற்ற செயல்” பிரித்தானிய தொழிற்கட்சி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. ஒக்ரோபர் 1ல் நிறைவுபெற்ற தொழிற்கட்சியின் வருடாந்த மாநாட்டில் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியாவில் உள்ள பிரதான கட்சிகளின் வருடாந்த மாநாடு நடைபெற்று வருகின்றது. அடுத்த தேர்தலை எதிர்கொள்ளும் நிலையில் இம்மாநாடுகள் மிகவும் முக்கியத்துவமானவையாக உள்ளது. குறிப்பாக தொழிற்கட்சி கடந்த மூன்று தேர்தல்களிலும் ஆட்சியைத் தக்க வைத்துள்ள நிலையில் இத்தேர்தலில் கடுமையான போட்டியைச் சந்திக்க வேண்டியுள்ளது. பிரித்தானிய பொருளாதாரம் மட்டுமல்ல சர்வதேசப் பொருளாதாரமே வீழ்ச்சி கண்டுள்ளதுடன் ஏற்கனவே 12 ஆண்டுகள் தொடர்ச்சியான ஆட்சியினால் மக்களுக்கு ஏற்பட்ட சலிப்பும் மாற்றம் அவசியம் என்ற சிந்தனையை பிரித்தானிய மக்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.

”இலங்கை போன்ற ஜனநாயக நாடுகளில் சிவில் யுத்தம் உயிர்களையும் உரிமைகளையும் பறித்துள்ளது” எனத் தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட் ”அரசாங்கங்கள் பிரஜைகளின் சிவில் சமூக அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்” எனத் தெரிவித்தார்.

பிறைற்றனில் இடம்பெற்ற இம்மாநாட்டில் குரொய்டன் மிச்சம் பகுதி பா உ சியொபெய்ன் மக்டொனா பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட சட்டத்திற்குப் புறம்பான கொலைகளைச் சுட்டிக்காட்டி இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களை வன்மையாகக் கண்டித்து இருந்தார்.

இந்த விவாதங்களின் இறுதியில் இலங்கை அரசுக்கு எதிரான கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கை அரசு வழங்கிய 180 நாள் காலக்கெடுவிற்கு இன்னும் இரு மாதங்களுக்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில் இக்கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளமை இலங்கை அரசு முகாம்களில் உள்ள மக்களை விடுவிப்பதற்கான அழுத்தத்தை மேலும் வலியுறுத்தி உள்ளதாகவே கணிக்கப்படுகிறது.

இலங்கை அரசு முட்கம்பி வேலிக்குள் வன்னி மக்களை அடைத்து வைத்து மீண்டும் மீண்டும் தன் முகத்திரையைக் கிழித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே ஐ நா பாதுகாப்பு கவுன்சிலில் உரையாற்றிய அமெரிக்க உள்துறை அமைச்சுச் செயலர் கிலரி கிளின்டன் இலங்கை பர்மா பல்கன் நாடுகள் பாலியல் பலாத்காரத்தை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தி வருவதாகக் குற்றம்சாட்டி உள்ளார். சர்வதேச அரங்கில் இலங்கை தனது மனிதவுரிமை விடயங்கள் தொடர்பில் பெரும் நெருக்கடிக்கு முகம்கொடுத்து வருகின்றது. கிலரி கிளின்டனின் குற்றச்சாட்டு தொழிற்கட்சியின் தீர்மானம் என்பன சர்வதேச அரங்கில் இலங்கையை மதிப்பிழக்கச் செய்து வருகின்றது.

தொழிற்கட்சியின் மாநாட்டுக்கு முன்னதாக லிபிரல் கட்சியின் வருடாந்த மாநாடு நடைபெற்றது. அங்கு இலங்கை தொடர்பான குறிப்பான கருத்துக்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. ஆனால் இன்னும் சில தினங்களில் ஆரம்பமாக உள்ள பிரித்தானியாவின் பிரதான எதிர்க்கட்சியான கன்சவேடிவ்கட்சியின் மாநாட்டில் இலங்கை தொடர்பான குறிப்பான விவாதங்கள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழிற்கட்சியுடன் ஒப்பிடுகையில் கொன்சவேடிவ் கட்சி அரசு சார்பான நிலைப்பாட்டைடேயே எடுத்து வருகின்றது. தமிழ் மக்கள் செறிவாக உள்ள பகுதிகளில் உள்ள ஒருசில பாராளுமன்ற உறுப்பினர்கள் தவிர கொன்சவேடிவ் கட்சி அரசு சார்பான போக்கையே கொண்டுள்ளது.

குறிப்பாக தலைநகர் லண்டனில் தமிழர்களின் வாக்குகள் வெற்றியை நிர்ணயிக்கும் வல்லமையைக் கொண்டிருந்த போதும் அவ்வாக்குகள் முழுமையாக ஒரு குறிப்பிட்ட கட்சியை நோக்கிச் செல்லும் நிலையில்லை. இத்தேர்தலில் தொழிற்கட்சியின் கோர்டன் பிரவுணா? கொன்சவேடிவ் கட்சியின் டேவிட் கமரூனா? “நந்திக் கடலில்” கரையொதுங்குவார்கள் என்பதனை பிரித்தானிய மக்கள் இன்னும் சில மாதங்களில் தீர்மானிப்பார்கள்.

தடுப்பு முகாம் தமிழர்கள் இலங்கை பிரஜைகளா? : வாசு

Wanni IDPsகடந்த 30 வருடங்களுக்கு மேலாக தமிழீழ தனித்தேசம் அமைக்க நடைபெற்ற ஆயுதப் போராட்டம் இன்று முடிவுக்கு வந்துள்ளது. ஆனால் கடந்த நான்கு மாதங்களாக இலங்கை அரசின் தடுப்பு முகாம்களுக்குள் இருக்கும் மக்களின் அவல வாழ்விற்கு முற்றுப்புள்ளி வந்தபாடில்லை. இந்த மக்கள் இன்னுமொரு நாட்டின் போர்க் கைதிகள் போலவே தற்போதும் நடாத்தப்பட்டு வருகிறார்கள். விடுதலைப் புலிகளை களையெடுப்பதாகவும் அதனால் தான் மக்களை தடுத்து வைத்திருப்பதாகவும் அரசு கூறுகிறது.

ஆனால் விடுதலைப் புலிகளின் மிக முக்கியமான புள்ளிகளான தயா மாஸ்டரையும் ஜோர்ஜ் மாஸ்ரையும் பிணையில் விடுவித்துள்ளது.  புலிகளின் இந்த இரு மாஸ்டர்களும் புலிகள் இயக்கத்தில் மிக முக்கிய பதவி வகித்தவர்கள். புலிகளின் தலைவருடன் நேரடி தொடர்பில் இருந்தவர்கள். ஆனால் இவர்களை சுதந்திரமாக வெளியில் செல்ல அனுமதித்த அரசு புலிகள் இயக்கத்தால்  வலிந்து கடத்திச் செல்லப்பட்ட இளைஞர்களையும் யுவதிகளையும் மக்களையும் இன்னமும் தடுப்பு முகாம்களில் வைத்திருப்பது மிகவும் வேடிக்கையாக உள்ளது. புலிகளை பிரித்தெடுக்கிறோம் வடித்தெடுக்கிறோம் என்று புனைகதை பேசும் அரசு நூற்றுக்கணக்கான விடுதலைப் புலி உறுப்பினர்கள் இந்த முகாம்களில் இருந்து படையினருக்கும் உயர் அதிகாரிகளுக்கும் லஞ்சம் கொடுத்து வெளியேறியதை அறியவில்லையா? புலிகள் அமைப்பின் நிதர்சனம்  தொலைக்காட்சியில் அடிக்கடி வந்து போன திருநாவுக்கரசு கொழும்பு விமான நிலையத்தின் ஊடாக தப்பி சென்றபோது இலங்கை அரசு கண்களை இறுக மூடிக்கொண்டிருந்ததா?

இன்று வன்னி பிராந்தியத்தில் முழு அமைதி நிலவுகிறது. புலிகள் அமைப்பின் முக்கிய பிரமுகர்கள் அனைவரும் கொல்லப்பட்டு விட்டனர். அல்லது கைது செய்யப்பட்டுள்ளனர். புலிகள் அமைப்பின் அதிகாரங்களை முழுவதுமாக தம்வசம் வைத்திருந்த புலிகளின் மேல்கட்டுமானம் முற்றிலுமாக சிதைக்கப்பட்டுள்ளது. அதன் தலைவர்கள் கொல்லப்பட்டும் கைது செய்யப்பட்டும் உள்ளனர். அது மட்டுமல்லாது மே 17ம் திகதி  முள்ளிவாய்க்கால் முற்றுகையை உடைத்து சென்ற புலிகளின் ஒரே ஒரு தளபதியான கெங்காவும் (கருணாவின் அந்தஸ்தை ஒட்டிய ஒரு கிழக்கு மாகண தளபதி) கடந்த ஜுலை 26ம் திகதி வெள்ளை கொடியுடன் விசுவமடுவில் இராணுவத்தினரிடம் சரணடைந்துள்ளார். உண்ண உணவும் இன்றி வெளியுலகில் எந்த தொடர்புமற்ற நிலையில் ஜெயந்தன் படையணியின் முக்கிய தளபதி இவ்வாறு சரணடைந்தது வன்னியில் புலிகளின் இருப்பை நன்கே வெளிப்படுத்துகிறது. உதிரிகளாக காடுகளுக்குள் அனாதரவாக திரியும் ஏனைய புலிகள் தலைமையின் தொடர்புகள் அற்று பட்டினியையும் தனிமையையும் எதிர்கொள்ள முடியாது காடுகளில் இருந்து கிராமங்களை நோக்கி வருகின்றனர். இவர்களில் பலர் தற்போது கைது செய்யப்பட்டும் உள்ளனர். இந்த நிலையில் இன்னமும்  புலிகள் போரட இருக்கிறார்கள் என்ற பயப்பிராந்தியை அரசு தோற்றுவிப்பதுதான் வேடிக்கையாக உள்ளது.

இரண்டரை லட்சம் மக்களை தொடர்ந்து முகாம்களில் வைத்திருப்பதுடன் வன்னியில் மக்களின் சுதந்திர நடமாட்டங்களை தடுப்பதே அரசின் தற்போதைய நோக்கமாக தெரிகிறது. கடந்த வாரங்களில் ஒரு தொகை மக்கள் மீளக் குடியமர்த்த கிழக்கிற்கும் யாழ் நாகரிற்கும் எடுத்துச் செல்லப்பட்டனர். இவர்களில் பலர் இன்னமும் இடைத்தாங்கல் முகாம்களில் தடுத்து வைத்திருப்பது அரசு மேலான சந்தேககங்களை மேலும் வலுப்படுத்துகிறது. இருப்பினும் கிட்டதட்ட 5000 பேர் கிழக்கில் மீள குடியமர்த்தப்பட்டு உள்ளதாக தெரியவருகின்றது. இந்த மக்கள் அண்மையில் தாம் முகாம்களில் பட்ட அவலங்களை வெளிப்படையாக கூறியதுடன் அரசின் அசமந்தை போக்கை வெளிப்படையாகவே விமர்சித்தார்கள்.

இன்று அரசு இவ்வளவு தாமதமாக பாதிக்கப்பட்ட மக்களை மீளக்குடியமர்த்த முயல்வது தமிழ் பேசம் மக்களின் பாரம்பரிய வாழ் நிலங்களின் வரைபடத்தை மாற்றவே. கிழக்கு மாகாணத்தில் உள்ள ஒரு நிலையை வன்னி பிராந்தியத்தில் கொண்டுவரவே இலங்கை அரசு முயல்கிறது. கிழக்கில் ஏற்கனவே சிங்கள மக்களின் குடியேற்றங்கள் அவர்களின் நிரந்தர வாழ்விடமாகவும் மாறியுள்ளது. இன்று கிழக்கில் ஏறக்குறைய தமிழ் மக்களின் பெரும்பான்மைக்கு சமமான சனத்தொகையில் சிங்களவர்கள் குடியிருக்கிறார்கள். அதே போல் வன்னியிலும் சிங்கள மக்களை குடியேற்றுவதன் மூலம் வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையக  இல்லாதொழிக்க முனைவதாக பலத்த சந்தேகம் எழுகிறது.

அண்மையில் கிளிநொச்சியூடாக பயணம் செய்த ஒரு பயணியின் தகவல் அடிப்படையில் கிளிநொச்சியில் முன்பு இருந்த அனைத்து கட்டிடங்களும் புல்டோசர்களால் தரைமட்டமாக்கப்பட்டு உள்ளது. கிளிநொச்சி கைப்பற்றப்பட்ட போது முதல் தடவையாக சென்ற போது அரைகுறையாக இருந்த கட்டிடங்கள் கூட தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. ஆனால் இராணுவத்தினர் நிலை கொண்டுள்ள கட்டிடங்கள் மட்டும் சிறப்பாக மறுசீரமைக்கப்பட்டுள்ளது. மக்களை இந்த பகுதியில் குடியமர்த்த வேண்டுமாயின் வீடுகள் மீளக்கட்டப்பட வேண்டும். இந்த நிலையில் வன்னி மக்கள் தொடர்ந்தும்  தடுப்பு முகாம்களில் நீண்ட காலம் தங்கி இருக்க வேண்டிய கட்டாயம் தொடரப் போகிறது. மக்கள் மீள குடியமர்வில் கண்ணி வெடிகளின் அபாயம் என்ற அடுத்த காரணத்தை கூறும் அரசு  மக்களை தம் வாழிடங்களுக்கு செல்ல தடுப்பது ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒரு விடயம். அண்மையில் அரியாலையில் வெடித்த கண்ணி வெடியில் மக்கள் பாதிக்கப்பட்டது தெரிந்த விடயமே. அரியாலை பகுதி 1995இல் விடுவிக்கப்பட்ட ஒரு பிரசேதம். இருப்பினும் கண்ணிவெடிகளை 100 வீதம் அகற்ற முடியாது என்பதற்கு இது ஒரு சான்று. 

ஆனால் இந்த காரணங்களை காட்டி மக்களை தொடர்ந்தும் முகாம்களில் வைத்திருப்பது அவசியமான ஒன்றாக இருப்பதை நாம் ஒப்புக்கொண்டாலும் மக்களின் சுதந்திர நடமாட்டத்தை ஏன் அரசு தடுக்கிறது என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது. கண்ணி வெடியுள்ள பிரதேசங்களை குறீயீடு செய்து அந்த பகுதிகளுக்கு மக்கள் செல்வதை தடுப்பது நியாயாமே. ஆனால் தடுப்பு முகாமில் உள்ள மக்களை தொடர்ந்தும் துப்பாக்கி முனையில் காவலில் வைத்திருப்பது என்ன நியாயம்? காவல்கள் அகற்றப்பட்டு மக்களின் சுதந்திர நடமாட்டம் அனுமதிக்கப்பட்டால் மக்கள் தாம் விரும்பியதை செய்வார்கள். புலிகளால் வலிந்து அழைத்து செல்லப்பட்ட இந்த மக்களிற்கு இன்று முக்கிய தேவையாக இருப்பது சுதந்திர நடமாட்டமே. புலிகளின் மிகமோசமான அடக்குமுறைக்குள் சிக்கி தவித்த இந்த மக்களின் இன்றைய தேவை சுதந்திரமான வாழ்வு. தொடர்ந்தும் துப்பாக்கி முனையில் திறந்தவெளிச் சிறைக்கைதிகளாக இருக்க இவர்கள் செய்த பாவம்தான் என்ன? தமிழர்களாக பிறந்த ஒரு குற்றமும் புலிகளின் அடக்கு முறைக்குள் சிக்கி தவித்ததுமே இந்த மக்கள் செய்த குற்றங்களா?

அண்மையில் மெனிக்பார்ம் முகாமில் கடமை புரியும் ஒரு உதவியாளர் தெரிவிக்கையில் முகாம் மக்கள் மிக விரைவில் மீள குடியேற்ற தவறும் பட்சத்தில் பல்வேறு சிக்கல்களை அரசு எதிர்நோக்க வேண்டியிருக்கும் என தெரிவித்தார். பருவகால மழை இந்த மாத இறுதியில் ஆரம்பித்தால் முகாம்கள் வெள்ளத்தில் மூழ்குவதுடன் தொற்று நோய்கள் மூலம் மக்கள் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள் என அச்சம் தெரிவித்துள்ளார். மூன்று நான்கு நாட்கள் மட்டுமே பெய்த மழையில் இடம்பெற்ற அவலங்களை நாம் முன்னர் கண்டோம். ஆனால் பருவகால மழை தினமும் பெய்யும் பட்சத்தில் நிலைமைகள் மிகவும் மோசமாக இருக்கும் என அச்சம் தெரிவித்ததார். அவர் மேலும் தெரிவிக்கையில் இளைஞர்கள் மிகவும் விரக்தியான நிலையில் இருப்பதாகவும் தமக்கு பேசுவதற்கோ சுதந்திரமாக நடமாடுவதற்கோ எந்த அனுமதியும் இல்லை என்று அங்கலாய்ப்பதாகவும் பாதுகாப்பின்மை, கல்வியின்மை, எந்தவித தொழில்சார் பயிற்சிகளும் அற்ற நிலையில் தாம் விரக்தியின் உச்சத்தில் இருப்பதாகவும் இவர் தெரிவிக்கின்றார். பல இளைஞர்கள் தாமாகவே படித்து க.பொ.தா உயர்தர பரீட்சையில் பல்கலைக்கழக அனுமதிக்கான சித்தியும் பெற்றுள்ளார்கள். ஆனால் இவர்கள் இந்த முகாம்களை விட்டு வெளியேறி பல்கலைக்கழகம் போக முடியாத நிலையில் உள்ளனர். தாம் ஏன் வாழ வேண்டும் என்ற கேள்வியுடன் வாழும்  இந்த இளைஞர்கள் மீண்டும் ஆயுதம் ஏந்துவதைதான் அரசு விரும்புகிறதா?

கடந்த மே மாதம் புலிகளை வெற்றி கொண்ட  விழாவில் பேசிய ஜனாதிபதி இலங்கையின் அனைத்து பகுதிகளும் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக கூறியவர் அனைத்து மக்களும் நாட்டின் அனைத்து பிரதேசங்களுக்கும் சுதந்திரமாக செல்ல முடியும் என்று கூறினார். ஆனால் யுத்தம் முடிவுக்கு வந்து மாதங்கள் 4 கடந்தும் யாழ் குடாவில் உயர்பாதுகாப்பு வலயங்கள் இன்னும் அசையாது அப்படியே இருக்கிறது. இந்த பகுதியில் வாழ்ந்த மக்கள் இன்னமும் அகதிகளாகவே வாழ்கிறார்கள். கிட்டத்தட்ட 14 வருடங்களிற்கு மேலாக யாழ் குடாநாடு அசர கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகிறது. புலிகள் அழிக்கப்பட்ட நிலையில் இந்த உயர்பாதுகாப்பு வலயங்களை அகற்ற ஜனாதிபதி மறுப்பது மிகவும் அபத்தமானது. இது தமிழர்களின் பிரதேசம் என்பதால்தான் இந்தநிலை என்ற குற்றச்சாட்டிற்கு அரசின் பதில் என்ன? வன்னியிலும் தற்போது இவ்வாறான உயர்பாதுகாப்பு வலயங்கள் தோன்றி வருகிறது. இனி வன்னி மக்களும் தாங்கள் தமது வாழ் நிலங்களுக்கு மீளவே செல்ல முடியாத ஒரு நிலை வரலாம் என்று அச்சம் தெரிவிக்கின்றனர்.

தற்போது இந்தியாவும் அமெரிக்காவும் இந்த மக்களை முகாம்களை விட்டு வெளியேறி சுயாதீனமாக வாழ விடுமாறு இலங்கைக்கு பல்வேறு விதமான அழுத்தங்களை பிரயோகித்து வருகிறது. மக்களை மீள குடியமர்த்தும் பணிக்கு உதவியாக அமெரிக்கா கடந்த ஜுலை மாதம் மேலும் 8 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்க முன்வந்துள்ளது. இது போல் ஏனைய நாடுகளும் பெருந்தொகை பணத்தை மீள் கூடியேற்றத்திற்காக கொடுத்துள்ளனர். அண்மையில் அமெரிக்க மற்றும் ஐநாவின் முக்கிய பிரமுகர்களின் வன்னி விஜயம் அத்துடன் இலங்கைக்கான இந்திய தூதுவரின் மெனிக் பார்ம் விஜயமும் இலங்கை அரசிற்கு அழுத்தம் கொடுக்கும் ஒரு செயற்பாடக இருந்தபோதும் இலங்கை அரசு அகதிகளை விடுவிப்பதில் எந்தவித அவசரத்தையும் காட்டுவதாக தென்படவில்லை. மந்தகதியல் மீளக்குடியேற்றம் செய்யும் அரசு, மீள் குடியேற்றம் தாமதமாகும் பட்சத்தில்  குறைந்த பட்சம் இந்த முகாம்களின் பாதுகாப்பை தளர்த்தி மக்களின் சுதந்திர நடமாட்டத்திற்கு உத்தரவாதம் வழங்க வேண்டும். மரணத்தின் பிடியில் சிக்கி தப்பிவந்து விரக்தியுடன் வாழும் மக்களின் பொறுமை ஒரு எல்லைவரை தான் போகும். அண்மையில் இந்த முகாம்களில் மக்கள் கொந்தளித்து காவல் புரிவோருக்கு எதிரான வன்முறையில் இறங்கியதை வெறும் சம்பவமாக பாராது அதை ஒரு எச்சரிக்கையாக அரசு எடுக்க வேண்டும். இந்த முகாம்களில் இருப்பவர்களும் இலங்கை நாட்டின் பிரசைகள் என்பதை அரசு உணர மறுக்கும் பட்சத்தில் அரசின் இராணுவ வெற்றி தமிழ் பேசும் மக்களை ஓடுக்க பெற்ற வெற்றியாகவே கருதப்படும்.

‘பிரபாகரன் ஆயுதங்களை மட்டுமே நம்பி அரசியலைத் தவறவிட்டதாலேயே வன்னிப் பேரவலம் இடம்பெற்றது’ புலி ஆதரவு அரங்கில் தமிழருவி மணியன் தொகுப்பு : த ஜெயபாலன்

Maniyan_thamilaruvi‘தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் ஆயுதங்களை மட்டுமே நம்பி அரசியலைத் தவவவிட்டதாலேயே வன்னிப் பேரவலம் இடம்பெற்றது’ என தமிழருவி மணியன் செப்ரம்பர் 24 மாலை லண்டன் ஈஸ்ற்ஹாமில் நடைபெற்ற கலந்துரையாடலில் தெரிவித்தார். இலங்கைப் பிரச்சினை தொடர்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இக்கலந்துரையாடலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களால் நிறைந்திருந்த அரங்கில் ‘இலங்கைத் தமிழ் மக்கள் எதிர்காலத்தில் ஆயுதப் போராட்டத்தால் எதனையும் சாதிக்க முடியும் என்று தான் நம்பவில்லை’ எனத் தெரிவித்தார் தமிழருவி மணியன். ‘தமிழீழ விடுதலைப் புலிகளினதும் அதன் தலைவரினதும் தியாகத்தை தான் மதிப்பதாகத் தெரிவித்த தமிழருவி மணியன் அவர் (வே பிரபாகரன்) ஆயுதங்களை மட்டும் நம்பியது மிகப்பெரிய தவறு என்றும் அது இவ்வளவு அழிவை ஏற்படுத்தி விட்டது’ என்றும் தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்ட வடிவத்தை எதிர்த்த போதும் இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையேயான யுத்தம் உச்ச கட்டத்தில் இருந்தபோது பெரும்தொகையான தமிழ் மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கையில் இலங்கை அரசை யுத்தத்தை நிறுத்தமாறு வற்புறுத்தி வந்தவர் தமிழருவி மணியன். ஆளும் காங்கிரஸ் கட்சியின் நீண்டகால உறுப்பினரான அவர் இலங்கை அரசை யுத்தத்தை நிறுத்துமாறு இந்தியா வற்புறுத்தாததையிட்டு தனது கட்சிப் பதிவியையும் உறுப்புரிமையையும் துறந்தவர். சாத்வீகப் போராட்டமே இன்றைய காலத்திற்குப் பொருத்தமானது என்று நம்புபவர்.

‘தமிழக அரசியல் வாதிகள் உணர்ச்சி பொங்களிக்க மேடைகளில் பேசிவிட்டு போய்த் தூங்கிவிடுவார்கள். அவர்களை நம்பி அரசியல் மோசம் போய்விடாதீர்கள்’ என்று எச்சரித்த தமிழருவி மணியன் அவ்வாறு ‘என்னாலும் பேச முடியும்’ ஆனால் ‘என் தமிழினம் அழிக்கப்படுவதை என்னால் தாங்க முடியாது’ என்றார். நெடுமாறன், வைக்கோ, திருமாவளவன் போன்றவர்களின் வாக்கு வங்கிகள் ஒரு சில வீதமே எனச் சுட்டிக்காட்டிய தமிழருவி மணியன் ‘பரந்து பட்ட தமிழக மக்களின் ஆதரவைப் பெறாமல் இந்திய அரசின் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது’ என்றார். ‘இவர்களது அரசியல் பேச்சுக்கள் உணர்ச்சிபூர்வமாய் இருக்கும் கைதட்டுவார்கள், விசிலடிச்சான் குஞ்சுகள் விசிலும் அடிப்பார்கள் அவ்வளவுதான் அதற்கு மேல் என்ன?’ என்று கேள்வியும் எழுப்பினார்.

தமிழருவி மணியத்தின் சிறிய பேச்சைத் தொடர்ந்து அரங்கில் இருந்தவர்கள் தமது கருத்துக்களை வழங்கவும் கேள்வி எழுப்பவும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. புலி ஆதரவு அரங்கு ஒன்றில் மாறுபட்ட கருத்துடைய ஒருவர் பிரதான பேச்சாளராக வரவழைக்கப்பட்டது இதுவே முதற்தடவையாக இருந்தது. செல்வவிநாயகர் ஆலயத் தலைவர் செல்வராஜா ‘கலைஞர் கருணாநிதியைப் பலப்படுத்தி அவரைக் கொண்டு நீங்கள் எதையாவது சாதித்திருக்க முடியாதா?’ எனக் கேள்வி எழுப்பினார். ‘என்னதான் கூறினாலும் வைக்கோ, திருமாவளவன், ராமதாஸ் போன்றவர்கள் இலங்கைத் தமிழர்களுக்காக குரல் கொடுத்தவர்கள்’ என்றார் செல்வராஜா. ‘மகிந்த ராஜபக்ச நினைக்கின்ற மாதிரி அல்ல. தலைவர் பெரும் திட்டத்தோடு வருவார்’ என்றும் ‘போராட்டம் தொடரும்’ என்றும் ஒருவர் கருத்துத் தெரிவித்தார்.

‘ஆயுதப் போராட்டமே ஒரே வழி’ என்ற கூக்குரல் ஒலிக்கத் தவறவில்லை. அதற்கு ஒருபடி மேலேசென்று ‘சுறாவளி’ போல் சுழட்டி கருத்து வெளியிட்ட சிவபாதம் என்ற முன்னால் கூட்டணி (தமிழரசுக் கட்சி) உறுப்பினர் ‘நானும் எனது மகனும் புலி. இந்தியாவுக்கு ஒரு பாடம் படிப்பிக்கிறோம்’ என்றார். கூட்டத்தின் இடையிடையே இவரது ‘குளறி’ வித்தைகள் அரங்கைக் குழப்பியது. இன்னும் ஓரிருவரும் மதுபோதையில் நின்று குளறி வித்தை காட்டியதைத் தவிர கூட்டம் சுமூகமாகவே நடந்தது.

Maniyan_thamilaruvi‘நான் இங்கு உங்களை மாற்றுவதற்காக ரோவினால் அனுப்பப்ட்டவன் அல்ல. என் இன மக்கள் கொல்லப்படுவதை பார்த்துக் கொண்டிருக்க முடியாமல் யாதார்த்தமாக சில விடயங்களைப் பார்க்கும்படி சொல்கிறேன். இல்லை ஆயுதப் போராட்டம்தான் முடிவு என்று நீங்கள் நினைத்தால் அதற்கு நான் எதுவும் செய்ய முடியாது. ஆயுதம் எடுத்தால் அழிவு எதிரிக்கு மட்டுமல்ல எமக்கும் தான் என்பதனை மறந்தவிடக்கூடாது. நான் உங்களுக்கு ஏற்றமாதிரிப் பேசுவதற்காக இங்கு வரவில்லை. எனக்குச் சரியெனப்பட்டதை உங்களுக்கு சொல்கிறேன். உணர்ச்சி வசப்பட்டு முடிவுகளுக்குச் செல்லாமல் நிதானமாகச் சிந்தியுங்கள்’ எனத் தமிழருவி மணியன் அங்கிருந்தவர்களைக் கேட்டுக்கொண்டார்.

தன்னுடைய பேச்சுக்களில் இலங்கை அரசையும் அதன் இனவாதப் போக்கையும் மிகச் சரியாகவும் நேர்த்தியாவும் கண்டித்த தமிழருவி மணியன் அந்த இனவாதப் போக்கிற்கு எதிராக சாத்வீகமாகவும் ராஜதந்திர ரீதியாகவும் தொடர்ச்சியான போராட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார். ஒரு திலீபனுடன் சாத்வீகப் போராட்டத்தை நிறுத்தாமல் தொடர்ந்து இருந்திருந்தால் இந்தப் பேரவலத்திற்குச் செல்ல வேண்டி இருந்திராது என்பதையும் அவர் தனது பேச்சில் சுட்டிக்காட்டினார்.

சட்டத்தரணியும் பல்வேறு அமைப்புகளின் தலைவருமான ப சிதம்பரப்பிள்ளை தனது கருத்தைத் தெரிவிக்கையில் ‘இந்தியா இலங்கையுடன் இணைந்து தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டது. தேசியத் தலைவர் இந்தியாவை நம்பியதே அவர் விட்ட மிகப்பெரிய தவறு’ எனத் தெரிவித்தார். இதே கருத்தினை இன்னும் பலரும் வெளியிட்டனர். தமிழருவி மணியன் தான் கட்சியின் பதவியில் இருந்தும் உறுப்புரிமையில் இருந்தும் வெளியேறியவர் என்று கூறி இருந்தும் பலரும் மீண்டும் மீண்டும் அவரை ஒரு இந்தியப் பிரதிநிதியாக்கி கேள்விகளை தொடுத்தனர்.

இவற்றுக்கு பதிலளித்த தமிழருவி மணியன், ‘பிரபாகரன் ஒன்றும் இந்தியாவை நம்பி இருக்கவில்லை. அமெரிக்கா கப்பல் அனுப்பிக் காப்பாற்றும் என்று நம்பித்தான் கடைசிவரை இருந்தார். இந்தியா மட்டுமல்ல புரட்சியை வென்றெடுத்த நாடுகளே ஆயுதங்களை இலங்கைக்கு வழங்கி இருந்தன. இந்தியா இந்தியா என்று சொல்லிச் சொல்லியே நீங்கள் இந்திய மக்களை எதிரிகளாக்கி உள்ளீர்கள். இந்தியா வேறு இந்திய மக்கள் வேறு. எந்தவொரு சாதாரண இந்தியப் பிரஜையாவது எமது நாட்டு பிரதமரைக் கொலை செய்திருக்கலாம் என்று குற்றம்சாட்டும் இலங்கைத் தமிழ் மக்களுக்கு உதவக் கூடாது என்று சொல்லி இருக்கிறார்களா?’ எனக் கேள்வி எழுப்பினார். அவர் தொடர்ந்தும் கூறுகையில் ‘அமெரிக்காவில் டலஸ் பகுதியில் தமிழ் சங்கத்தில் காலை ஒரு சந்திப்பு மாலை ஒரு சந்திப்பு. ஒன்று இந்தியத் தமிழர்கள் சந்திப்பு மற்றையது புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் சந்திப்பு. பாரிஸில் புதுச்சேரித் தமிழர்களும் இலங்கைத் தமிழர்களும் சேர்ந்து எதுவும் செய்வதில்லை’ இவ்வாறு தமிழருவி சொல்லிக் கொண்டிருக்கையில் ‘லண்டனிலும் அப்படித்தான். இலங்கைத் தமிழர்கள், மலேசியத் தமிழர்கள், சிங்கப்பூர்த் தமிழர்கள், இந்தியத் தமிழர்கள் என்று தனித்துத்தான் செயற்படுகிறார்கள்’ என்று ஒரு குரல் வந்தது. ‘ஏன் நாம் ஒற்றுமையாகப் போராட முடியாதவர்களாக இருக்கிறோம்’ என்றும் தமிழருவி மணியன் கேள்வி எழுப்பினார்.

‘புலம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு எப்போதும் உண்மைகளை ஏற்றுக்கொள்வதில் ஒரு பிரச்சினை உள்ளது.’ என்று தனது கருத்தை வெளியிட்ட தேசம்நெற் த ஜெயபாலன் ‘புலம்பெயர்ந்த தமிழர்கள் இன்னமும் நிஜத்திற்கு வரவில்லை. வரவும் விரும்பவில்லை. இன்னமும் கனவுலகத்திலேயே உள்ளனர். நீங்கள் இன்று வெளியிட்ட இதே கருத்துக்களை நான்கு மாதங்களுக்கு முன் வெளியிட்டு இருந்தால் உங்களை ரோ உளவாளி என்றும், தேசியத் துரோகி என்றும் அழைத்திருப்பார்கள்’ எனத் தெரிவித்தார். கூட்டத்தின் முடிவுப் பகுதியில் வெளியிட்ட இக்கருத்து மீண்டும் சிறு சலசலப்பை ஏற்படுத்தியது.

Maniyan_thamilaruviஅதனைத் தொடர்ந்து பேசிய தமிழருவி மணியன் ‘புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் என்னால் பிளவுபட்டுக்கொள்ளத் தேவையில்லை. ஆனால் இன்று மூன்று லட்சம் மக்கள் முகாம்களில் பேரவலத்திற்கு உள்ளாகி உள்ளார்கள். அவர்களை விடுவிக்க வழிசெய்ய வேண்டும். நீங்கள் ஏதோ ஒரு வகையில் கல்வி வசதி வாய்ப்புகளைப் பயன்படுத்தி இங்குவந்து ஓரளவு வளமாக வாழ்கிறீர்கள். அப்படி வாழ்ந்துகொண்டு ஆயுதப் போராட்டம் என்றெல்லாம் பேச முடியும். ஆனால் அந்த முகாம்களில் வாழும் மக்களின் நிலையென்ன. இதுவரை ஆயுதப் போராட்டத்தில் ஒரு 10 வீதம் உரிமைகளைப் பெற்றிருந்தால் இவ்வளவு மக்களை இழந்து இந்த உரிமைகளைப் பெற்றிருக்கின்றோம் என்று சொல்லலாம். அப்படிச் சொல்வதற்கு என்ன இருக்கின்றது?’ என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

நாடுகடந்த தமிழீழ அரசு பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த தமிழருவி மணியன் ‘எமக்கு முன் உள்ள உதாரணம் தீபெத். எந்த நாடு அதனை அங்கிகரித்தது? அயர்லாந்துக்கு என்ன நடந்தது?’ என்று கேள்வி எழுப்பியதுடன் ‘தமிழ் நாட்டுக்கு இந்திய அரசமைப்பில் உள்ள உரிமைகள் போன்ற உரிமைகளைக் கோரி அதனை நோக்கிச் செல்வதே தற்போதுள்ள யதார்த்தம்’ எனத் தெரிவித்தார்.

இறுதியாக கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்த வி போஸ் கருத்துத் தெரிவிக்கையில், ‘எமது போராட்டத்தில் பல தவறுகள் நடந்துள்ளது. அதனால் போராட்டம் முடிவுக்கு வந்தள்ளது. அதனை போஸ்மோட்டம் செய்து அதன் சரி பிழைகளை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். மாற்றுக் கருத்துக்களைக் கேட்டு அதன் சரி பிழைகளை ஆராய்கின்ற பக்குவம் வரவேண்டும். எத்தனையோ ஆயிரம் மக்களை இழந்திருக்கிறோம் படிப்பினைகளை கற்றுக் கொள்ள வேண்டும். நாங்கள் ஒரு காலத்தில் துரோகிகள் என்று சொல்லியவர்களுடனெல்லாம் ஒரே மேசையில் உட்கார்ந்திருந்து கதைக்கின்றோம். சாத்வீகப் போராட்டம் தோற்றுவிட்டது. ஆயுதப் போராட்டமும் தோற்றுவிட்டது. இப்போது தமிழருவி மணியன் சொல்கின்ற அறிவு வழி சிந்திக்க வேண்டும். அவர் துரோகி. இவர் துரோகி. இந்தியா துரோகம் செய்துவிட்டது என்பதை விட்டுவிட்டு யதார்த்தமாகச் செயற்பட வேண்டும்’ எனத் தெரிவித்தார்.

மூன்று மணிநேரம் வரை நடைபெற்ற இக்கலந்துரையாடலில் பெரும்பான்மையானவர்கள் யதார்தத்தை நோக்கித் தள்ளப்படுவதைக் காணக் கூடியதாக இருந்தது. நான்கு மாதங்களுக்கு முன்பு இவ்வாறான கருத்துக்கள் புலி ஆதரவு அரங்கு ஒன்றில் நினைத்துப் பார்த்திருக்க முடியாது. அடுத்த இரு தினங்களில் செப்ரம்பர் 26ல் புங்குடுதீவு நலன்புரிச் சங்கம் தொல் திருமாவளவனையும் தமிழருவி மணியனையும் பிரதம பேச்சாளர்களாக அழைத்துள்ளது. புலி ஆதரவுத் தளத்தில் தற்போது ஒரு கருத்தியல் மாற்றத்தின் அவிசியத்திற்கான தேவை உருவாகி உள்ளதையே இது வெளிப்படுத்துகின்றது.

Who’s next ? A question to the wounded society : Mohamed Nisthar

KP_Selvarajah_PathmanathanPirabakaran 2007Aside from a sporadic sign of dissatisfaction there has been no big  hoo-ha about the arrest of KP, the self proclaimed Tamil Tigers’ new leader Selvaratnam Pathamanathn, in place of former commander in chief VP. KP’s arrest has long been merely a question of when rather than if. That was one of the reasons for Tamils not to bother too much about his arrest on 06th August 2009.

When VP’s death was confirmed, the Sri Lankan government had lots of breathing space, a mood of relief and KP was not their public enemy no 1, they did not attempt to go for him as a must do job. However KP’s  interview on Channel 4 on 22nd July 2009 seemed to be the red button being pressed.  KP’s 3.30 minutes interview out of 9.36 minutes brief documentary about the aftermath of the Tamil Tigers may be the reason for the Sri Lankan government to speed up the chase for KP.

Most people considered that the interview was a missed opportunity. He could have put his case  for Tamils across to the international  community more effectively. He should have made the international community think that it was time for them to put full scale pressure on the Sri Lankan government, if not intervening in Sri Lanka. Since he was aware of the interview he was supposed to give, he could have at least prepared to talk sensibly, but nothing happened in fulfilling the expectations of anxious Sri Lankan Tamils worldwide. Rather it alerted the Sri Lanka government to prepare for their very calculated move against him. 

On 19th May 2009 KP announced that the Tamil Tigers silenced their weapons, but on 22nd July 2009, quite contrarily or more rightly saying,  stupidly announced that there were 1500 carders waiting for his instructions. What at most could those 1500 carders do at his order? For argument’s sake  1500 suicide attacks, killing 15,000 or another zero added amount of more people. Would that bring a separate Tamil Ealam or would that kind of talk at least encourage the government, which bravely confronted the risk posed by a 24,000 or so Tiger fighters, to mend the way they had against Tamil Tigers. His appalling interview in the capacity of a leader of a society, which is totally confused for the direction for their political journey, irritated many.  And in my view made them ask one important question as to who’s next. This question cannot necessarily be who’s going to be in the government’s arrest list. But who’s the next in line for hierarchy with substance.
 
In finding a suitable head ,  one would remember the German sociologist Max Weber’s classification of leaders. He says  there are three types of them, namely, traditional, bureaucratic and charismatic. Theses are the leaders  who come and go in ruling countries, leading nations in their struggle, finding solutions to the issues which emerge all of a sudden without any warnings.

In the Tamil community and Sri Lanka as a whole we had all kind of leaders as Weber ascribes, but none of them delivered the right solution  to the very delicate issue of  ethnic strife in a country which has an ethnic mosaic.      
Traditional leaders, like anyone in the TNA, keep changing their stand according to their personal gains rather than society’s. Tamils have been having this sort of leaders since the independence. They  have been  useful for sorting out small things such as providing employment and bringing a modern building to their constituency with their own money making motive. People do not pay that much attention to their ulterior motives because of these leaders’ temporary tenure.  However they have not been capable to be entrusted for a big job like solving ethnic problems or  nation building.

Bureaucratic leaders cannot be much different from traditional leaders apart from  their stand to stick with rules. These kind of leaders normally do not have creativeness nor are interested in finding ways of solving problems, their method of running a public office is almost a routine and  keeps an eye on the ways of retaining power.

Charismatic leaders, on the other hand, always have a magical power to make people listen and believe what they say. But it’s not yet proven that this type of leaders survive forever politically, because they tend to do things which are not right but which they believe will be accepted. Once this is confronted they cannot accept that and try to manipulate it to prove they are right.

Though the above classifications  still prevail and we are faced with these kind of leaders again and again in Sri Lankan politics,  the post modern society , however, indentifies different sort of leaders.  Bureaucratic military ones with intelligence and well informed of the trend. The other kind , the   leaders, who do not need positions or  office to lead a nation, but remain as  leaders. These are the so called people’s leaders. 

At this crucial point of political journey of the Tamils, it is natural to look for a leader, not anyone under the classification of Weber, but a different one, maybe a hybrid one.   No doubt the late Tiger leader VP would come to many people’s mind as a strong military leader, until we were informed of his suspiciously  cowardly death at the bank of Nanthi lagoon. But the question to answer is still, was he also intelligent enough to lead a nation, and well informed of the political trend of the global village? A commonly accepted point, except by diehard Tiger supporters, that he’s neither a committed military  personnel nor intelligent one nor had a matured political outlook.  For many  he was merely a hit and run guy.  However he had talent to make his followers believe that he had unprecedented leadership qualities or that he was a sort of 007, who always acts to produce ultimate triumph. 

Previously self proclaimed leader VP has left a legacy , which  what a large proportion of the Tamil community believes, to be a political vacuum.  However  I strongly argue that this is not the case. This so called  political vacuum has not been created by the demise  of VP, but at the time when he proclaimed himself as sole leader of the Tamils without their mandate or at least  at the time of the assassination of Mr. A. Amirthalingam. Therefore  a real political vacuum started to emerge  before he died. The situation since 18th May 2009, has been merely a semblance of political vacuum.  This is a reassuring period, which will soon disappear and with or without a leader the  political journey of Tamils will go ahead. As it had been from the time of assassination of Mr. Amirthalingam to the Nathikadal saga.

If the post VP situation required  a leader and KP was one of the contenders for the leadership, how pathetic was it for a foreign elite like Mr. V. Rutherakumar, an attorney,  to declare implicitly  that they under the leadership of KP were contemplating to set up a transnational government,  possibly a consortium  for money making activities, in foreign soil in the name of Tamils. Once again without their mandate. What leadership qualities, if any, of KP suggest that he would have been the right person to lead the Tamils through this miserable phase of their political journey.   Did KP fit into any of Weber’s classifications. Or was he in the inner circle of military strategists. Was he able to effectively convey a message to the world. After all he appeared to be physically a sick man without any potential, other than procuring arms.  His arrest maybe a good omen for the peace loving Tamils in Sri Lanka.

Still it is not clear whether the self proclaimed sole lessee of the Tamil community, the Tamil Tigers,  have identified any suitable person to lead them. Once it is done then that leadership has to confront with possible arrest or extradition or even an assassination attempt like the one, which caused the life of Mrs. Morgan Tsvangirai of Zimbabwe or Dr. Kelly of UK or the local example of Lasantha Wicramasinge. Once he is immunized  from the above permanently then to face the people to confirm his leadership. Nothing will happen if they behave with the mentality of a “born again Christian”, who reassure themselves that they will not go back to their past ways, but  fail to question their overall integrity.

After all why the remaining Tamil tigers or the pro tigers think that they have a moral duty to offer political leadership to the Tamils, since they killed their own people, for whom they said they fought, but treated the people like sand sacks to protect themselves, I do not think that they have to bother any longer. No governments locally or internationally will be engaged with the tigers. Tamils cannot afford to pay  a huge price again simply because the tigers  think they are the right people to protect the Tamils.   

Why can’t the remaining tiger supporters compromise with recent initiatives taken by  some neutral bodies in addressing Tamils issues with a broader outlook. One of them is the initiative, which is taking shape in the form of minimum of understanding (MoU), an idea to accommodate all Tamil speaking (Tamils and Moors)to work on a common ground. The initiative is based on the principle of  bottom to top approach. An idea which confirms  some firm minimum standards to be met before any political talks begin to see any solution with a capacity of evolving to adopt new situations.

Refusal to work with others by the tiger supporters  means that they are  not really caring for the Tamils back home. And they are afraid of  losing their grip on vulnerable Tamils. And they are scared of being marginalised or totally ignored by the wider society. Ultimately this is the unavoidable end to  them. Therefore they have to integrate into the society before it is too late for them. 

Tamil tiger supporters in the diasporas community seem firmly to believe that history did not make the man; the man (Velupillai Prabaharan) made history. In that sense they may come up with a new experiment of putting a surrogate leader like Y.Gopalasamy or one time vibrant Rev. Father Kaspar in charge of  the Tamils.  My humble advice for the pioneers of new experiments is that they should think about the English expression  “Cometh the hour, cometh the man.” Therefore desperately looking for a leader now is like quickly preparing a prey in the name of Tamils. Let time spin and nature  produce someone with the required leadership qualities to settle the due. Not only the Tamil speaking people but also the whole Sri Lanka needs a saviour.

Lessons from the Sri Lankan Conflict : Satya Sivaraman

Face_MaskThe published speech delivered in a meeting organised by Tamil solidarity in Chennai. Delivered by well known activist and journalist Satya Sivaram.

Friends and Comrades,

I would like to first thank the organisers of this meeting here today for inviting me to come and speak before this distinguished audience. I apologise for my inability to speak to you today in Tamil as being a Tamilian brought up in central India I never had opportunity to master the language but promise to make amends in future. Hope you will bear with me for the time being.

Before I get to the subject of what lessons we have to learn from the three decades of conflict in Sri Lanka let me dwell a bit on what is wrong with India. For it is the understanding of the largest and oldest country in South Asia that we can get a better grip on what this region is all about.
And before I talk of human rights and democracy I want to talk about public health again because it is a very important indicator of what are really the values and culture of the society we live in.
It is a common sight these days to see people around the country wearing masks on their faces. They are I am told worried about getting infected by the swine flu virus and trying to protect themselves.

I must confess I am very happy to see all these middle-class Indians hiding their faces.
To begin with the mask till just a few months ago was a sartorial accessory reserved exclusively for terrorists and other assorted demons. So when respectable people start wearing masks they can help counter stereotypes about what terrorists look like or are supposed to wear. Wearing a mask in broad daylight has become respectable now.

But the real reason why I think it is a good idea for middle-class Indians to keep these masks on, permanently if possible, is simply that they should be deeply ashamed of what is happening in their country. For the fact is that none of them is fit to show their face in public. Last time I checked,  a week ago, the numbers of Indians dying every year due to sudden assaults on their health by poverty, viruses, bacteria, parasites and badly driven motor vehicles were as follows:
– Under-nourishment  kills around 2.5 million children annually
– Malaria – Over 900,000
– Air pollution – 527,700 
– Tuberculosis – 400,000 
– Road Accidents – Over 100,000

Just between these avoidable causes of death the overall figure translates into roughly 12000 Indians dying every day contrasted with the 100 or so who have succumbed to swine flu in two months of the pandemic’s presence in the country. And if each one of these 12000 cases were to be individually portrayed on the front pages of our newspapers and TV news headlines every day there would be no place for anyone to hide at all!  So when I say that all privileged Indians should wear masks permanently all their life you can understand what I mean.

What I am pointing to of course is the fact that ours is a part of the world where life is really cheap and the silent genocide of millions every year due to neglect and poverty does not touch the conscience of the public. And societies that are willing to accept a silent and invisible genocide in their midst will over a period of time also accept a loud and visible genocide when it happens.
Nowhere else in the entire world will so many people be allowed to die silently of poverty, disease, sectarian conflict every day as happens in South Asia. I mean nowhere will so much suffering happen without sparking off a revolution.

Ladies and gentlemen, there is no doubt in my mind at all that the genocide of Tamils that has taken place in Sri Lanka in recent months and still continues in various ways is part of the overall lack of value for human life that the ruling classes of South Asia have.

And the first lesson that we should draw from this complete contempt shown by our elites for the life of ‘lesser beings’- be they religious and ethnic minorities, marginalised cultures or the poor- is that the people of this sub-continent need to answer back with a social and political revolution.  Nothing short of revolutionary change will really solve the problems South Asia faces, whether of poverty, of conflict or the conflict that is produced by poverty.

Failure to work for and bring about a truly revolutionary change – whatever this involves- will only mean more and more genocides in our region of the kind that we have already witnessed in Sri Lanka.

Even in India which is a democracy of some sort the truth is that it is a democracy by default- not one where the rulers genuinely believe in democratic values and principles but one where they have no other choice.

I have always thought for example that it is impossible for a Hitler to emerge in India, simply because there are too many Hitlers in our country already and no one of them is strong enough to dominate the others. The ‘world’s largest free market democracy’ is in practice a wrestling pit for Hitlers of different shapes, sizes, colors and tongues. And it is our task to fight each one of these Hitlers, whoever they may be and wherever they are and change to a system that does not produce Hitlers any more at any level. 

The second lesson from the over thirty years of conflict in Sri Lanka is simply that this is not a problem of the island of Sri Lanka alone. At the very minimum it is an issue that needs to be taken up by the entire South Asian subcontinent, if not the entire world. 

Given the involvement of so many countries from India and China to Israel and Russia in helping the Sri Lankan government fight against the Tamil Tiger rebels it cannot even be referred to as the Sri Lanka conflict any more. The Tamil diaspora, which supported the movement for a separate Eelam all these years, is also spread over four continents and nearly 10 countries.

So when the Mahinda Rajapakse regime tells international human rights groups and media to stay out of the Sri Lankan conflict one can only laugh. Successive Sri Lankan governments have always internationalised their domestic conflict by seeking help from foreign governments. Even in 1971 when the leftist JVP insurgency in the south of Sri Lanka threatened to topple the government of Sirimavo Bandaranaike it survived only with the help of the Indian Navy and the Pakistani Air Force.

It is interesting to see that in the case of Sri Lanka foreign governments, which are otherwise usually hostile to each other, have always joined hands to help put down the opponents of those in power in Colombo. Even recently the way the Indian, Pakistani, Chinese, Russian and Israeli governments came to the rescue of the Rajapakse regime is testimony to this curious phenomenon.

Indeed the third lesson we have to learn is the need for the people of all these countries involved in the Sri Lankan conflict to unite against their own governments. If the governments can unite against their people so can the people unite against their own governments.

In specific terms this means that those fighting for the rights of the Sri Lankan Tamils today have to extend solidarity to the struggles of the people of Kashmir, the Indian north-east, Tibet, Baluchistan, Chechnya and Palestine. Anyway they all have so much in common in terms of their battles for independence or autonomy from oppressive, domestic colonial regimes that such a unity should not be very difficult to forge. It is through such solidarity that the struggle of the Sri Lankan Tamils will become a truly international cause.

Such a unity will also have a very important implication for the concept of right to self-determination, which has been the basis for the independence movements of minority groups in many countries around the world.

I believe that the right to self-determination is an absolute right and the highest democratic principle possible in international politics of our times. Divorce after all is always preferable to an unhappy and violent marriage. In the case of Sri Lanka in particular historically it was not even a ‘love marriage’ between the Tamils and the Sinhalas but a forcibly arranged one, over 60 years ago by the parting British colonial power. So a referendum for Sri Lankan Tamils to decide their own fate is a fundamental right that must be given to them. Let them decide what they really want in a peaceful and democratic manner.

However, I would also say that separation from one kind of arrangement does not mean that the newly independent entity should consider becoming part of a larger, more democratic federation. In my view the struggle of ethnic, linguistic and other minorities in the South Asian sub-continent has to proceed along two lines- one is to establish their right to self-determination and the other is, at the same time, strive for a democratic, federation across South Asia. In a dialectical sort of way separation and unity should go hand in hand.

One important reason for this is that if you look at the world around all over you will find that the individual nation state is no longer the basis for future politics. Global economic realities, capital flows and operations of multinationals have made the nation state redundant. This is one area we need to learn from the multinational corporations. In fact what we need is to become a multinational sub-continent where instead of business motives the people are bound by their common goals and struggles against their own ruling classes. So while we fight for our own nation state and identity we also keep in mind the fast changing realities of the planet where new identities are being created by the tectonic forces of economy, migration and even phenomenon like global warming.

The fourth lesson from the Sri Lankan conflict is that the militancy of a struggle cannot be measured by the number of gunshots and bomb blasts it involves. For a long time not just in South Asia but also around the world there has been a debate on the use of violence versus non-violence in political and social movements.

Despite endless debate over the categories ‘violence’ and ‘non-violence’ there is little clarity on the subject anywhere. In fact these categories are not opposed to each other, as is often assumed, because there is a continuum between the two. Who really knows in the world we live in where ‘violence’ ends and ‘non-violence’ begins?

In that sense the more accurate categories to use are ‘bloody violence’ and ‘bloodless violence’ with the latter being the preferred method of action in the current South Asian social and political context.  If there is to be bloody violence at some stage because the sub-continent’s ruling class will never give up power without using brute force then we will deal with it at that time. That juncture can be understood in advance but not pre-empted artificially by insisting on a central role for the gun and the bomb in mass struggles.

Also it is important to understand that power is not just political or administrative in nature. It is also social, economic and cultural power that needs to be captured and many of these kinds of power cannot be simply conquered by brute force. To run a real country or even a community of human beings there is need for many more skills apart from purely military skills.

The last and most important lesson I want to emphasize today is that we need to build up the global movement for the rights of the Sri Lankan Tamils in such a way that it allows ordinary people to participate in simple ways, making it a truly democratic one I can give you an example of a movement that if taken up can immediately hurt the Sri Lankan regime of Mahinda Rajapakse – the boycott of tourism in Sri Lanka by Indian tourists. There are dozens of ways in which this goal can be achieved in a creative and peaceful manner and can be the beginning of a larger international effort to isolate the war criminals who are running Colombo today.

Another demand we should make is for a White Paper in the Indian Parliament on the role of Indian agencies in Sri Lanka over the past thirty years and in particular during the past year. Successive Indian governments, politicians and bureaucrats have played a very negative role in the Sri Lankan conflict and should be accountable to the Indian people for what they have done in a neighbouring country in the name of all of us. For there is no doubt in my mind that they will play similar mischief with Indian citizens if they are left unpunished for the international crimes.

In the context of Tamil Nadu itself the widespread support for the rights of Sri Lankan Tamils should be expressed in specific and tangible ways. Mere rhetoric is no longer enough. For example the thousands of Sri Lankan Tamils who have been coming to this state over the past two decades still do not have the basic rights of refugees as per international law. The Indian government has refused to sign the UNHCR treaty on refugees and treats the Sri Lankan Tamils like some unwanted relatives who have suddenly turned up home without an invitation. They are housed in unliveable shelters, their youth denied employment, their children denied proper education and their men arrested arbitrarily on any pretext in a routine manner. It is time for us to demand that they be given basic rights and that the Indian government signs the UNHCR treaty immediately.

I would like to add here that while we are fighting for the rights of Sri Lankan Tamils should we not also fight for the rights of Tamils in Tamil Nadu itself. Is there a shortage of problems in this state – whether it be of health, education, employment, of women or of Dalits? Unless we challenge our own domestic politicians and governments there is nothing very much we can really do to uphold human rights in foreign lands.

At the international level the action that is needed more than anything else today is to bring to justice those in Sri Lanka who are responsible for the mass killings of not just Tamils but also Sinhalas opposed to the regime of Mahinda Rajapakse.  The ‘Sri Lankan Model’ of dealing with opponents and dissidence is emerging as a favorite among all the governments in the South Asia region.

There needs to be both a countrywide and international campaign to make sure the perpetrators of war crimes and genocide are brought to justice, for their impunity threatens the lives of many millions more in our region. The fight of the Sri Lankan Tamils for justice therefore is no longer about Sri Lankan Tamils alone but one that involves all of us- our lives, our rights, our democracy and our future.

Thank You.

அரசபடைகளின் Extra Judicial Killings – சட்டத்திற்குப் பிறம்பான கொலைகள் : த ஜெயபாலன்

ExtraJudicialKillingsஓகஸ்ட் 25ல் இலங்கை அரசுக்கு எதிரான மற்றுமொரு மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு சர்வதேசதளத்தில் விவாதத்திற்கு வந்தள்ளது. ஓகஸ்ட் 25ல் பிரித்தானியாவைச் சேர்ந்த செனல் – 4 தொலைக்காட்சி நிலையம் ஒளிபரப்பிய வீடியோப் பதிவு ( http://link.brightcove.com/services/player/bcpid1529573111 ) இலங்கை அரசுக்கு புதிய அழுத்தங்களைக் கொடுத்தள்ளது. சிஙகளம் பேசுகின்ற சீருடையில் உள்ளவர்கள் பத்துப் பேர் வரை அவர்களின் கண்களைக் கட்டி நிர்வாணமாக்கி சுட்டுக் கொள்வது இந்த வீடியோகிளிப்பில் பதிவாகி உள்ளது. இச்சம்பவம் ஜனவரியில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இவ்வீடியோப் பதிவு Journalists for Democracy in Sri Lanka என்ற ஊடக அமைப்பினரால் சனல் 4 தொலைக்காட்சிக்கு வழங்கப்பட்டு இருந்தது. அப்பதிவு நம்பகமானது என்றும் அதில் சீருடையில் வந்தவர்கள் இலங்கை அரச படையினர் என்றும் இலங்கையைச் சேர்ந்த சிங்கள மனித உரிமைவாதி ஒருவர் உறுதிப்படுத்தியும் உள்ளதாக சனல் 4 தெரிவித்த உள்ளது.

ஆனால் இலங்கைப் படைவீரர்கள் தொடர்பான இந்த வீடியோக் காட்சி உண்மைக்குப் புறம்பானதென்றும் போலியாகத் தயாரிக்கப்பட்டது என்றும் ஜனாதிபதிச் செயலகம் அறிவித்துள்ளது. ‘சர்வதேச அரங்கில் இலங்கையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த முயற்சியை இலங்கை அரசு வன்மையாகக் கண்டிக்கின்றது’ என்றும் ஜனாதிபதிச் செயலகம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதிச் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ”வன்னியில் பயங்கரவாதிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் இடம்பெற்றபோது பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பல உண்மைக்குப் புறம்பான ஒளிநாடாக்களை தயார்செய்து ஒளிபரப்பிய பிரித்தானியாவை தலைமையாகக்கொண்ட செனல் – 4 என்னும் தொலைக்காட்சியாளர்கள் இலங்கையைவிட்டு வெளியேற்றப்பட்டார்கள். அவர்கள் இலங்கையிலிருந்து வெளியேற்றப்பட்டபோதும் இலங்கை அரசுக்கு எதிரான பொய்யான பல தகவல்களையும், செய்திகளையும் அவர்கள் தொடர்ந்தும் வெளியிடுவதனை நிறுத்தவில்லை. இதன் ஒரு அங்கமாகவே உண்மைக்குப் புறம்பான வீடியோவொன்றை செனல்-4 வெளியிட்டுள்ளது.”  என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இலங்கை அரச படைகள் சட்டத்திற்குப் பிறம்பான திட்டமிட்ட படுகொலைகளில் ஈடுபடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது இது முதற்தடவையல்ல. திருகோணமலையில் இடம்பெற்ற மாணவர்களின் படுகொலை, மூதூரில் இடம்பெற்ற பிரான்ஸ் உதவி நிறுவனப் பணியாளர்களின் படுகொலை என்பவை அண்மைய சில வருடங்களுக்குள் இடம்பெற்ற படுகொலைகள். இப்படுகொலைகள் அரச படைகளால் மேற்கொள்ளப்பட்டது என்பது பெரும்பாலும் மனித உரிமை நிறுவனங்களால் நம்பப்பட்ட சம்பவங்கள்.

1970ற்குப் பின் இரு தடவை சிங்கள இளைஞர்களின் (ஜேவிபி) கிளர்ச்சிகள், மூன்று தசாப்தங்கள் தொடர்ந்த தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் என்பன இடம்பெற்றது. இவற்றில் 200 000ற்கும் அதிகமான தமிழ் சிங்கள இளைஞர்கள் யுவதிகள் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இவ்வளவு பெரும் உயிரிழப்பிற்கு இலங்கை அரச படைகளும் முக்கிய காரணமாக இருந்தனர் என்பது சர்வதேச மனித உரிமை அமைப்புகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயம். ஆனால் 200 000 பேர்வரை கொல்லப்பட்டிருந்த போதும் அக்கொலைகளில் தொடர்புபட்டிருந்த அரச படையைச் சேர்ந்த எவரும் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படவில்லை. மாறாக அவ்வாறான சம்பவங்களுடன் தொடர்புபட்டவர்கள் உயர்நிலையைப் பெற்றனர்.

குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்த காலப்பகுதியில் 1991ல் சரணடைந்த 600க்கும் மேற்பட்ட சிங்கள பொலிஸாரை படுகொலை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட விநாயகமூர்த்தி முரளீதரன் (கருணா அம்மான்) தற்போது இலங்கை அரசில் அமைச்சராக உள்ளார். பத்திரிகையாளர் லசந்த விக்கிரமசிங்கவை படுகொலை செய்யப்படதை நியாயப்படுத்தும் இன்னுமொருவர் மேர்வின் சில்வா துப்பாக்கியுடன் ஊடகங்களுக்குள் புகுந்து ரவுடித்தனம் செய்பவர் இன்னமும் அமைச்சராக உள்ளார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் ஈபிடிபி சட்டத்தை தங்கள் கையில் எடுத்து படுகொலைகளில் ஈடுபட்டதை சர்வதேச உரிமை அமைப்புகள் சுட்டிக்காட்டி உள்ளன. ரீஆர்ஓ படுகொலைகளுடன் தொர்புபட்டவர் கிழக்கின் முதலமைச்சராக உள்ளார். இவர்களையே சட்டத்தை உருவாக்க அந்த நாட்டின் அரசியல் தலைமை தேர்தெடுக்கிறது. ஒரு நாட்டின் சட்டதிட்டங்களை உருவாக்குபவர்களின் தகமை இப்படி இருக்கும் போது இந்த நாட்டில் சட்டம் ஒழுங்கு எப்படி அமையும்?

சர்வதேச நாடுகள் என்று வர்ணிக்கின்ற அமெரிக்கா பிரித்தானியா போன்ற நாடுகளும் இரட்டைத் தன்மையான சட்ட நடைமுறையையே கைக்கொள்கின்றன. பிரித்தானியாவில் ஜேன் சார்ள்ஸ் டி மென்ஸிஸ் யூலை 22 2005ல் தவறுதலாகச் சுட்டுக்கொல்லப்பட்ட போது அதற்கான நடவடிக்கைகளை எடுக்க பிரித்தானிய அரசு நிர்ப்பந்திக்கப்பட்டது. மெனஸிஸின் கொலையை மூடிமறைக்க முயற்சித்த மெற்றோபொலிடன் பொலிஸ் தலைமை அதிகாரி சேர் இயன் பிளேயர் பின்னாளில் தனது பதவியை ராஜினாமாச் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டார். ஆனால் ஆப்கானிலும் ஈராக்கிலும் பல ஆயிரம் கொலைகளுக்கும் பல நூறு சித்திரவதைகளுக்கும் பொறுப்பாக இருந்த எத்தனை இராணுவ வீரர்கள் அதிகாரிகள் தண்டனை பெற்றனர் என்பது கேள்விக்குறியே. அரச படைகள் அல்லாத தனியார் படைகள் கூட கொலைகளிலும் சித்திரவதைகளிலும் ஈடுபட்டு இருந்தனர்.

மூன்றாம் உலக நாட்டு மக்களின் உயிர்கள் உணர்வுகள் உரிமைகள் அந்த நாடுகளின் ஆளும் அரசுகளால் மட்டுமல்ல சர்வதேசம் என்று சொல்லப்படும் அரசுகளின் ஆளும் அரசுகளாலும் இரண்டாம் தரமாகவே பார்க்கப்படுகின்றது.

இவை எல்லாவற்றையும் கடந்து இந்த அரசுகளை அம்பலப்படுத்துகின்ற சாட்சியங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக வெளிவருவது மக்களுக்கு யதார்தத்தை உணர்த்த வழிகோலும். இன்று முடியாவிட்டாலும் குற்றவாளிகள் என்றாவது ஒருநாள் தண்டனைக்கு உள்ளாக வேண்டும். அது காலம் கடந்தது என்றாலும் அது பலருக்கும் படிப்பினையாக அமையும். சிலி நாட்டின் முன்னாள் அதிபர் பீனசே தனது குற்றங்களுக்கான தண்டனையை கால்நூற்றாண்டுக்குப் பின்னர் பெற்றார். இலங்கை ஜனாதிபதி மற்றும் அமைச்சர்களுக்கும் இது பொருந்தும் என யூலை 28 2009ல் கொன்வே ஹோலில் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் தெற்காசியப் பொறுப்பாளார் பிரட் அடம்ஸ் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

மேற்படி வீடியோப் பதிவின் நம்பகத் தன்மை பற்றிய கேள்விகள் எழுப்பப்படலாம். ஆனால் நடந்து முடிந்த வன்னி யுத்தத்தில் மனித உரிமைகள் இரு தரப்பினராலும் மிக மோசமாக மீறப்பட்டுள்ளது. அதற்கான ஆதாரங்கள் சர்வதேச நாடுகளிடம் உண்டு. அதற்கான சற்லைட் புகைப்பட ஆதாரப் பதிவுகள் இரகசியமாக்கப்பட்டு உள்ளது. அவற்றை வெளியிட்டு குற்றவாளிகளைத் தண்டனைக்கு உட்படுத்த வேண்டிய தேவையிலையென சர்வதேசம் எனக் கருதும் நாடுகள் நினைக்கின்றன என்பதே யதார்த்தம்.

பொய்களை உண்மையாக்குவதம் உண்மைகளைப் பொய்யாக்குவதும் அவர்களுடைய அரசியல் தேவைகளைப் பொறுத்தது. இலங்கை அரசுக்கு எதிராக ஐநா மனித உரிமைக் கவுன்சிலில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் இலங்கை அரசுக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் தீர்மானமாக மாற்றப்பட்டது அதனாலேயே.

ஆகவே அப்பாவி மக்களின் பக்கம் நின்று ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கம் நின்று உண்மைகளை அணுகுவதே பொருத்தமானதாக இருக்கும்.